Monday, August 13, 2018


ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் பட்டு

Added : ஆக 13, 2018 01:55




ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் இன்று நடக்கும் ஆடித்தேரோட்டத்தை முன்னிட்டுஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து பட்டு மற்றும் மங்கலபொருட்கள் நேற்று கொண்டு வரப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன், தினமலர் திருச்சி பதிப்பு ஆசிரியர் ஆர். ராமசுப்பு, அறங்காவலர்கள் டாக்டர் ஸ்ரீனிவாசன், ரெங்காச்சாரி, கவிதா மற்றும் சுந்தர் பட்டர் ஆகியோர் கொண்டு வந்த பட்டுவஸ்திரம் மற்றும் மங்கல பொருட்களை, ஆண்டாள் கோயில் தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் மாடவீதிகள் சுற்றி, வரபட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல் மதுரை கள்ளழகர் கோயிலிலிருந்தும் நேற்று மாலை 6:00 மணியளவில் பரிவட்டங்கள் கொண்டு வரப்பட்டு, ஆண்டாளுக்கு சாற்றப்பட்டது.

No comments:

Post a Comment

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad

Changes in visa regulations leave students in limbo, many reconsider plans to study abroad  Amisha.Rajani@timesofindia.com 22.09.2024  Hyder...