Tuesday, August 14, 2018

நிறை புத்தரிசி பூஜை: சபரிமலை நடை இன்று திறப்பு பக்தர்கள் வரவேண்டாம் என வேண்டுகோள்

Added : ஆக 14, 2018 06:06

சபரிமலை: நிறை புத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கிறது. பம்பை ஆறு கரைபுரண்டு ஓடுவதால் பக்தர்கள் வரவேண்டாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது.சபரிமலை நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. நாளை காலை 6:00 முதல் 6:30 மணிக்குள் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.மழை காரணமாக பம்பை கரைபுரண்டுஓடுகிறது. பக்தர்கள் பம்பையில் கடக்கும் இரண்டு பாலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பம்பையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தேவஸ்தான மண்டபங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.எனவே பக்தர்கள் தரிசனத்துக்கு வரவேண்டாம் என்றும், மீறி வருபவர்கள் நிலக்கல்லில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், சன்னிதானத்தில் நிறைபுத்தரிசி பூஜை வழக்கம் போல் நடைபெறும்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...