Sunday, August 12, 2018

கடலூரில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : ஆக 12, 2018 01:04

கடலுார்: கடலுார் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கடலுார் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகி தேர்தல் நடந்தது. 6 பேர் கொண்ட தேர்தல் நடந்தும் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் நேற்று முன்தினம் காலை வேட்பு மனு, பரிசீலனை என வழக்கமான நடைமுறைகளை பின்பற்றினர்.அதனைத் தொடர்ந்து இறுதியில் போட்டியின்றி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.அதில் வழக்கறிஞர்கள் சங்க தலைவராக மாசிலாமணி, செயலராக சீத்தாராமன், பொருளாளராக கிருஷ்ணமூர்த்தி, இணைச் செயலர்களாக சந்தானகிருஷ்ணன், சிவகாமசுந்தரி ஆகியோரும், நுாலகராக பூபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...