Sunday, August 12, 2018

ஆக.14,16,23 தேதிகளில் சபரிமலை நடை திறப்பு

Added : ஆக 12, 2018 04:39

சபரிமலை:நிறைபுத்தரிசி, ஆவணி மற்றும் ஓண பூஜைகளுக்காக சபரிமலை நடை இந்த மாதம் மூன்று முறை திறக்கப்படுகிறது.

நிறைபுத்தரிசி பூஜைக்காக ஆக.,14- மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். 15-ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து 6:00 முதல் 6:30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு இதை நடத்துவார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி பூஜை

ஆவணி மாத பூஜைகளுக்காக 16-ம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கான தந்திரியாக கண்டரரு ராஜீவரரு பொறுப்பேற்பார். 17ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கும். 21ம் தேதி வரை எல்லா நாட்களிலும் நெய்யபிஷேகம், களபாபிஷேகம், உஷபூஜை, உச்சபூஜை, அஷ்டாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படிபூஜை போன்றவை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

ஓணபூஜை

திருவோண பூஜைகளுக்காக 23-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கும் நடை 27-ம் தேதி இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும். இந்த நாட்களிலும் வழக்கமான எல்லா பூஜைகளுடன், திருவேணத்தை ஒட்டி மூன்று நாட்கள் ஓணவிருந்து நடைபெறும்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...