Sunday, August 12, 2018


நிகர்நிலை மருத்துவ பல்கலை ஆக., 20ல் இறுதி கவுன்சிலிங்

Added : ஆக 12, 2018 02:03

சென்னை:நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இறுதி கட்ட கவுன்சிலிங், வரும், 20ல் நடைபெற உள்ளது.

அரசு மருத்துவ கல்லுாரிகளில், அகில இந்திய ஒதுக்கீடுக்கு சமர்ப்பிக்கப்படும், 15 சதவீத இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்துகிறது.

ஒப்படைப்பு

இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து, அரசு மருத்துவ கல்லுாரிகளில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்துக்கு, 98 எம்.பி.பி.எஸ்., மற்றும் 15 பி.டி.எஸ்., இடங்கள் ஒப்படைக்கப்பட்டன. நிகர்நிலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், இறுதிகட்ட கவுன்சிலிங், வரும், 20ல் நடைபெறும் என, மத்திய சுகாதார இயக்ககம் அறிவித்துள்ளது.

மத்திய சுகாதார இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:

நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலை, இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில் உள்ள காலிஇடங்கள் குறித்த விபரம், வரும், 14, 15ல், mcc.nic.in என்ற,இணையதளத்தில் வெளியிடப்படும்.இறுதி கட்ட கவுன்சிலிங் நடைமுறைகள், 16 முதல், 18ம் தேதி வரை நடைபெறும்.

மாணவர் சேர்க்கைபின், 20ம் தேதி கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அன்றைய தினம், முடிவுகள் வெளியிடப்படும். இடங்களை பெற்ற மாணவர்கள், வரும், 21 முதல், 26ம் தேதிக்குள் தேர்ந்தெடுத்த கல்லுாரியில் சேர வேண்டும்.சேராத இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப் பட்டு, அந்தந்த கல்லுாரி களே, 'நீட்' தேர்வு அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...