Sunday, August 12, 2018

ஒரு நாள் மழைக்கே மின் தடை சீசனை சமாளிக்குமா வாரியம்?

Added : ஆக 12, 2018 01:48


ஒரு நாள் மழைக்கே, பல இடங்களில், மின் வினியோகம் பாதித்ததால், வடகிழக்கு பருவமழை சீசனை, மின் வாரியம் சமாளிக்குமா என்ற சந்தேகம், மக்களிடம் எழுந்துள்ளது.

சென்னையில், குறிப்பிட்ட சில இடங்களில் கேபிள்; மற்ற இடங்களில், மின் கம்பம் வாயிலாக, மின் வாரியம், மின் வினியோகம் செய்கிறது. அக்டோபரில், வடகிழக்கு பருவமழைக் காலம் துவங்குகிறது. அப்போது, மின் விபத்து, மின் தடை ஏற்படாமல் இருக்க, மின் வினியோக பெட்டி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட சாதனங்களில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்படி, உதவி பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

பலர், அந்த பணிகளை துரித கதியில் மேற்கொள்ளாமல், அலட்சியமாக உள்ளனர். சென்னை, காஞ்சி, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், சில தினங்களாக, இரவில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று வரை தொடர்ந்தது. இதனால், பல இடங்களில், மின் தடை ஏற்பட்டது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி கூறியதாவது:கன மழையால், வேகமாக காற்று வீசிய இடங்களில், மரக் கிளைகள், அருகில் இருந்த மின் கம்பிகள் மேல் விழுந்தன. மழை தண்ணீர் பட்டதும், அதிக வெப்பத்துடன் இருந்த, மின் கம்பியை ஒட்டியிருந்த, 'இன்சுலேட்டர்' என்ற கருவிகளும் பழுதாகின. இதுபோன்ற காரணங்களால், மின் வினியோகம் பாதித்தது.

பழுது, உடனடியாக சரி செய்யப்பட்டு, மின் சப்ளை வழங்கப்பட்டது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில், முன்னெச்சரிக்கையாக, தற்காலிகமாக, மின் சப்ளை நிறுத்தப்பட்டது. மழை சீசனின் போது, எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.பணம் தர மறுப்பு!மழைநீரில் மூழ்குவதை தடுக்க, தரையை ஒட்டி உள்ள, பெரிய மின் வினியோக பெட்டியின் உயரத்தை அதிகரிக்க, 4,500 ரூபாய்; சிறிய பெட்டிக்கு, 2,500 ரூபாய்; மின் வினியோக பெட்டிக்கு கதவு போடுவதற்கு, 600 ரூபாய் என, பிரிவு அலுவலகங்களுக்கு வழங்க, மேற்பார்வை பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் பணம் தராததால், மின் வினியோக பெட்டியை சீரமைப்பது தாமதமாவதாக, உதவி பொறியாளர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...