Sunday, September 16, 2018

தமிழில் எழுதினால் பணத்தை வாரி வழங்கும் கூகுள்!

tamil in google adsense


தமிழ் மொழியை கூகுள் நிறுவனம் அங்கீகரித்துள்ளால் தமிழில் எழுதப்படும் பிளாக் பதிவுகளுக்கு அதிக வருமானம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் இந்தி மற்றும் வங்காளம் ஆகியவை மட்டுமே கூகுள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மொழியும் கூகுளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கூகுளின் விளம்பரப் பிரிவான Google AdSense மற்றும் Google Ads ஆகியவற்றிலும் தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழில் பிளாக் (Blog) எழுதுபவர்கள் அதனை Google AdSense ல் பதிவுசெய்ய வேண்டும். பின், அதிக வாசகர்களை ஈர்க்கும் வார்த்தைகளைக் கொண்ட படைப்புகளை எழுதி பிளாக் பதிவுகளாக வெளியாட்டால் Google AdSense பிளாகில் விளம்பரங்களை இடம்பெறச் செய்து வருவாய் ஈட்டித்தரும்.
விஜயபாஸ்கர் குட் டாக்டர் இல்லை.. குட்கா டாக்டர்.. டிடிவி தினகரன் 

பொளேர்!

 By Hemavandhana Published: Sunday, September 16, 2018, 9:30 [
\
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்று டிடிவி தினகரன் கடுமையாக சாடி உள்ளார். திருவப்பூர் அருகே அமமுக பொதுக்கூட்டம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. விஜயபாஸ்கர் மீது சாடல் விஜயபாஸ்கர் மீது சாடல் அப்போது பேசிய தினகரன், வருகிற திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் அமமுகதான் வெற்றி பெறும் என்றார். தொடர்ந்து பேசிய தினகரன், அமைச்சர் விஜயபாஸ்கரை கடுமையாக தாக்கி பேச தொடங்கினார்.

 காற்றில் பறக்கும் அப்பளம் காற்றில் பறக்கும் அப்பளம் விருந்து ஒன்றில் அண்ணா அவர்கள் 'நாலனா முட்டை அமைதியாக இருக்க, காலனா அப்பளம் காற்றில் பறக்கிறது' என்று பேசியதுதான் ஞாபகம் வருகிறது. அதுபோல,தற்பொழுது இந்த காலனா அமைச்சர்கள், ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையில் இருந்து அமைச்சராக இருக்கும் டாக்டர் ஒருவர் தொடர்ந்து ஊழல் செய்து வருகிறார். அவர் வீட்டில் சோதனை செய்யாத துறைகளே இல்லை.

குட் டாக்டர் இல்லை குட் டாக்டர் இல்லை ஆர்.கே.நகர் தேர்தலில் என்னை வெற்றிபெற வைக்கத்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் வேலை செய்கிறார் என நினைத்தேன். ஆனால் அவர் எடப்பாடி பழனிசாமியோடு இணைந்து தேர்தலை நிறுத்த தான் பணியாற்றினார் என பின்னர் தான் தெரிந்தது. புதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்றே அழைப்போம். கைவிட்ட முதல்வர் கைவிட்ட முதல்வர் நான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்னுடைய குடும்பத்தினருடன் நடைபயிற்சி சென்றபோது, புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சராக உள்ள டாக்டர் என்னை பார்த்து வணக்கம் வைத்தார். நானும் பதிலுக்கு வணக்கம் வைத்தேன். அப்போது விஜயபாஸ்கர், "என்னை முதல்-அமைச்சர் கைவிட்டு விட்டார்" என்று என்னிடம் தெரிவித்தார். இவ்வாறு டிடிவி தினகரன் பேசினார்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/pudukottai-public-meeting-ttv-dhinakaran-talks/articlecontent-pf325633-329837.html
Celebrating their tireless work on Neonatal Nurses Day 

By Bhavani Prabhakar Published on Sep 15, 2018 02:42 PM IST


Usha Rani

Chennai: While doctors are glorified and celebrated all the time, not often do we realise the importance of nurses. Neonatal nurses, in particular, are unsung heroes who are responsible for tending to newborns, including preterm infants.

On the occasion of Neonatal Nurses Day today, Kanchi Kamakoti Childs Trust Hospital, nurse manager, Usha Rani, in a tête-à-tête with News Today, shares her experiences of working as a neonatal nurse for the past 13 years.

Usha Rani says, "As a neonatal nurse, our duty comprises establishing breathing and feeding of the infants. For preterm babies, the procedure is complicated as they breathe and are fed through tubes which must be carefully handled. To make the work easier, every nurse gets a baby allotted which must be cared by the specified nurse till the baby’s discharge from hospital. In case of any strange symptoms, the nurse can identify it as she would be familiar with the health condition of the baby."

The food habits of infants must be taken care properly. For instance, preterm newborns are fed with one or two ml of mother's milk.

"Quite a number of preterm babies are admitted to our hospital. Making them get accustom to food is a tough task. The mothers would not produce breast milk owing to complications in case of which the nurses encourage them by explaining the nutritional benefits. However, we have a milk bank to cater to the nutritional needs of the newborns," she explains.

Nonetheless, the role of a neonatal nurse is challenging as she has to ensure the neonate is not infected, well-fed and properly taken care of. In addition to such physical challenges, they also undergo emotional roller-coaster as there are infants who fail to respond to their care and treatment.

"Another major challenge that we face is handling parental emotions. Even if everything is handled with utmost care, the parents are concerned and we have to intervene and explain as to what is being performed," adds Usha Rani. 



Usha Rani at her work spot.

NEWBORN CARE

For about one week of admission, the neonates are checked for complications and congenital abnormalities and physical examination. It could be fatal if the nurses ignore these.

When a child is born, chances of it getting affected with hypothermia is more. It must be immediately covered with sterile towels and shifted to a warmer so that the temperature is maintained.

Most preterm neonates are diagnosed with respiratory distress and would be requiring additional support of oxygen which is given either through ventilator or tubes.

UNIQUE CASE

"We had an extremely complicated preterm baby recently. We were informed that the mother conceived after several years and they do not hail from a well-off family. The infant was extremely underweight and had respiratory illness. With the aid of Milaap, an online funding platform, we raised the money required for the treatment," explains Usha.

Talking about the treatment, she goes on to say, "The infant was on ventilator support for about two months; and from 680 grams, the baby weighed 4 kg when it was discharged. In addition, it did not require an external oxygen support. We extubated and intubated more than seven times which we have never experienced and it was a life-threatening condition."

TECH AND TRAINING

Mechanical ventilator with high frequency oscillator and supply of nitrous oxide to prevent pulmonary hypertension, continuous positive airway pressure (CPAP), resuscitating infant neopuff and a transport ventilator to meet the respiratory needs of the child during transit in the neonatal ambulances are the technological advancements in neonatal services.

"The nurses are trained through in-service education and continuous nursing education that is offered in our hospital. During the in-service exercise, classes are held weekly twice, mock drills are conducted and based on the feedback the nurses will be moved to the next level. In the continuous nursing education, the nurses will be strengthened in specific services with the help of doctors," adds Usha Rani.
Chennai police help American woman tourist return home 

By NT Bureau Published on Sep 15, 2018 04:54 PM IST


Kela Marine Nelson

Chennai: The city police found a woman tourist from the US losing her passport and made arrangements to help her get back home.

According to the police, Kela Marine Nelson (26), an American citizen allegedly married to Vimal, a local, was staying at Velacheri.

But, she was found by the Kanchipuram police with her passport missing on 12 September.

Sources said Vimal lost his job a couple of days ago, took Kela to Kanchipuram and 'abandoned' her. She was later found by the locals, who informed the police.

The police said Kela was not sure where Vimal's house was in Velacheri. She told the police that she was looking for a job and lived in a lodge in Kanchipuram.

She has been in India for the past two years and married a year ago.

Kela told the police that the duo was living in a multi-storeyed apartment at Velacheri and she did not know about his whereabouts for the past few days.

The police said she wanted to return to USA. "We shifted her to a shelter in Panayur, ECR. Subsequently, we contacted the US embassy and she travelled to Florida Friday," the police added.
Bike thief who learnt from YouTube held Google PlusGmailPinterestLinkedin Bellie Thomas Bellie Thomas, DH News Service, Bengaluru, Sep 16 2018, 00:28am ist updated: Sep 16 2018, 01:12am ist A 23-year-old PUC dropout, who st...

Read more at: https://www.deccanherald.com/city/thief-who-learnt-youtube-held-692875.html

HBA : அரசு ஊழியர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் ஆசிரியர்கள் அனைவருக்கும் கிடைக்குமா? விரிவான விளக்கம்

முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %  
50,001 முதல் 1,50,000 வரை : 7%  
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%  
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி. 
அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும். 
யாரெல்லாம் கடன் பெறலாம்?: 
சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். 
கடனின் பல்வேறு பிரிவுகள்: 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 
2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 
3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று. 
5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம். 
6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு. 
7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம். 
8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை. 
9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம். 
10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம். 
வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும். 
* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் ) 
* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு 
* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று 
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion ) 
* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று 
* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம் 
மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும். 
முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும். 
இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும். 
ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும். ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். 
ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்; பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும். 
இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும். 
வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும். காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும். கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
சிறப்பு குடும்ப நலத்திட்டம்: 
வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும். 
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும். 2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும். 3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும். 
வாழ்ந்து காட்டுவோம்: அறிவுரை வேண்டாம் அன்பே போதும்

Published : 09 Sep 2018 13:04 IST


எல். ரேணுகா தேவி




உலகத் தற்கொலை தடுப்பு நாள்: செப்டம்பர் 10

நாளிதழ்களில் தற்கொலைச் செய்திகள் இல்லாத நாட்களே இல்லை என்னும் அளவுக்குத் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கிறது. தனிமை, புறக்கணிப்பு, பயம், கவலை, வறுமை, குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, விரக்தி போன்றவையே தற்கொலை செய்துகொள்வதற்கான முக்கியக் காரணங்களாக உள்ளன.

உலகில் உள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறான். மற்ற உயிரினங்கள் அனைத்தும் தமக்கு ஏற்படும் இடர்பாடுகளைக் கடந்து, போராடி வெற்றிபெற முயல்கின்றன. இதனால்தான் தற்கொலை செய்துகொள்வது சட்டத்துக்குப் புறம்பான விஷயமாகக் கருதப்படுகிறது. தற்கொலையைத் தடுக்கும்விதமாக 2003 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10-ம் தேதி உலகத் தற்கொலைத் தடுப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

முடி உதிர்வால் உயிரிழந்த மாணவி

உலகம் முழுவதும் வருடத்துக்கு ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 2005 முதல் 2015 வரை 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2015-ல் மட்டும் 8,934 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதிலும் 14 முதல் 30 வயதுக்கு உட்பட்டோரின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. குறிப்பாக, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் முடி உதிர்தல் பிரச்சினையால் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பெண்கள் என்றாலே அழகாகவும் நீளக் கூந்தலுடனும் இருக்க வேண்டும் என்ற சமூகத்தின் நிர்ப்பந்தம்தான் அந்த மாணவியின் தற்கொலைக்குக் காரணம். தனது கூந்தலை ஸ்ட்ரெய்ட்னிங் செய்துகொண்ட பிறகு அந்த மாணவிக்கு அதிக அளவு முடி உதிரத் தொடங்கியுள்ளது. எங்கே தனக்குத் தலை வழுக்கையாகிவிடுமோ என்ற பயத்தால் கல்லூரிக்குச் செல்லாமல் அறையிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார்.

பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இளைஞர்கள் மனத்தளவில் எந்த அளவுக்குப் பலவீனமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த மாணவியின் மரணம் சாட்சியாக இருக்கிறது.

தற்கொலை தீர்வல்ல

தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற நொடிப்பொழுது மனநிலையைக் கடந்துவருவதில்தான் வாழ்க்கையின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்கிறார் மனநல ஆலோசகர் பிருந்தா ஜெயராமன்.

“இனிமேல் தன்னால் வாழவே முடியாது என நினைப்பவர்கள்தாம் தற்கொலைக்கு முயல்கிறார்கள். ஒரு சிலர் தங்களுடைய கஷ்டத்தை யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்வார்கள். வேறு சிலர் தங்களுடைய கஷ்டத்தைக் கத்திப் பேசியோ அழுதோ வெளிப்படுத்துவார்கள்.


மனதுக்குள் இருப்பதை இப்படி ஏதாவது ஒருவகையில் நெருக்கமானவர்களிடமோ நம்பிக்கைக்குரியவர்களிடமோ பகிர்ந்துகொள்ள வேண்டும். யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே அடக்கிவைத்தால் என்றாவது ஒருநாள் அது பிரஷர் குக்கர்போல் வெடித்துவிடும். இதுபோன்ற நேரத்தில்தான் தற்கொலை எண்ணம் தலைதூக்கும். நமக்குச் சாதாரணமாகத் தோன்றும் விஷயம்கூட, மனத்தளவில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெரிய விஷயமாக இருக்கலாம்.

அதைக் கண்டறிந்து அவர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல் அதிகரித்துவரும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த வேண்டும். கஷ்டங்களை உடனுக்குடன் பேசிவிட்டாலே பாதிப் பிரச்சினைகள் சரியாகிவிடும்” என்கிறார் அவர்.

காதுகொடுத்துக் கேளுங்கள்

தற்கொலை முயற்சிக்கான ஆரம்ப கட்டம் மன அழுத்தம்தான். பொதுவாக, மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமையை நாடிச் செல்வார்கள். அந்தத் தனிமையே நாளடைவில் தற்கொலை எண்ணத்துக்கான தூண்டுகோலாக அமைந்துவிடுகிறது. “மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், நெருங்கிய வட்டத்திலிருந்து விலகிச் செல்ல நினைப்பார்கள். தூக்கமின்மை, யாரிடமும் பேசாமல் இருப்பது போன்றவை அதற்கு உதாரணம்.

ஒரு சிலர் தங்களையே காயப்படுத்திக்கொள்வார்கள். இதுபோன்ற செயல்கள் தென்பட்டால் அவர்களிடம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. அதேபோல் யாராவது தங்களுடைய கஷ்டத்தைப் பகிர்ந்துகொண்டால் உடனே

அறிவுரை வழங்காமல் கொஞ்சம் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்டுப் பழக வேண்டும். ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையா, எல்லாம் சரியாகிடும், இதுவும் கடந்துபோகும்’ என்பது போன்ற வார்த்தைகளை அறிவுரை என்ற பெயரில் மன அழுத்தத்தில் இருப்பவர்களிடம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதில் அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம். ‘உனக்கு எப்ப கஷ்டமாக இருந்தாலும் என்னிடம் பேசு. உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன்’ எனப் பேசி அவர்களுக்கு நம்பிக்கை தரலாம்.

தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பில் கவுன்சலிங் வழங்கிவருகிறோம். எங்களுடைய அமைப்புக்கு 044-24640050, 044-24640060 ஆகிய எண்ணில் தொடர்புகொண்டு பேசலாம். பேசும் நபர் யார், எங்கிருந்து பேசுகிறார் போன்றவற்றை நாங்கள் கேட்கமாட்டோம். அவரது தற்கொலை எண்ணத்தை மாற்றுவதற்கான ஆலோசனையை மட்டுமே வழங்குவோம்” என்கிறார் ‘சிநேகா’ தற்கொலைத் தடுப்பு அமைப்பின் தன்னார்வலர்களில் ஒருவரான இளங்கோ. கேட்பதற்குக் காதும் சாய்ந்துகொள்ள தோளும் இருந்தாலே பல தற்கொலைகள் தடுக்கப்பட்டுவிடும்.
வானவில் பெண்கள்: இங்கே பூண்டு உரித்துத் தரப்படும்

Published : 16 Sep 2018 11:01 IST


அன்பு

 

வாணலியில் கடுகு பொரிந்துவிடுவதற்குள் அடுத்ததாகப் போடவேண்டிய பூண்டை அவசர அவசரமாகத் தரையில் நசுக்கி உரிக்கும்போதுதான் பூண்டு உரிப்பது என்பது எவ்வளவு சிரமமான வேலை என்று தெரியும். யாராவது பூண்டு உரித்துக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீ அன்னபூர்ணா மகளிர் சுயஉதவி குழுவினர்.

இந்தக் குழுவில் 27 பேர் உள்ளனர். இவர்கள் கேட்டரிங், மெஹந்தி, சமோசா விற்பனை, தேநீர் விற்பனை ஆகியவற்றுடன் தற்போது பூண்டு உரித்துக் கொடுக்கும் தொழிலையும் செய்துவருகின்றனர்.

“நான் டிப்ளோமா நர்சிங் முடித்ததும் கல்யாணமாகிவிட்டது. இப்போ பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துவிட்டார்கள். வீட்டுவேலை முடிந்த பிறகு கிடைக்கிற நேரத்தில் ஏதாவது ஒன்றைச் செய்யலாம் என்பதற்காகத்தான் மகளிர் குழுவைத் தொடங்கினேன். மற்ற குழுக்களைப் போல் அல்லாமல் குழுவினரின் முயற்சியால் சிறு நிறுவனங்களில் ஆர்டர் பிடித்து, குழு உறுப்பினர்களுக்குத் தெரிந்த கைத்தொழிலைத் தொடங்கலாம் என முடிவுசெய்தோம்.


தற்போது கோயில் நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன மீட்டிங், வீட்டு விசேஷங்களுக்கு மெஹந்தி போடுவது, சமையல் போன்ற சிறு ஆர்டர்கள் கிடைக்குது. அப்படித் தோன்றியதுதான் பூண்டு உரித்துக் கொடுக்கும் வேலை. இதற்காக சூப்பர் மார்க்கெட்களுக்குப் போய் ஆர்டர் பிடித்தோம். ஒவ்வொரு முறையும் கடை கடையா ஏறி இறங்க முடியாது. அப்பதான் முகநூலில் எங்கள் குழுவின் சார்பில் பூண்டு உரித்துக் கொடுக்கப்படும்னு என் தம்பி மனைவி ஃபேஸ்புக்ல எழுதினாங்க. அதைப் பலர் பார்த்ததும் இப்ப நிறைய ஆர்டர் கிடைச்சிருக்கு” என்கிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பாக்யலட்சுமி.

இவர்கள் 100 கிராம் முதல் ஒரு கிலோவுக்கும் மேல் பூண்டு உரித்துத் தருகிறார்கள். இதில் குறைவான தொகையை மட்டுமே லாபமாகப் பெறுவதால் நிறைய ஆர்டர் கிடைக்கிறது. இதில் கிடைக்கும் அந்தச் சொற்ப லாபம், சம்பந்தப்பட்ட குழு உறுப்பினர்களுக்கே கொடுக்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியன்று ஆர்டர் எடுத்து கொழுக்கட்டை செய்து கொடுத்திருக்கிறார்கள்.

“அரசு வங்கியில் லோன் கேட்டிருக்கிறோம். அது கிடைத்தவுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேப்பர் கப், தட்டு, சானிட்டரி நாப்கின் இப்படி நிறைய வேலைகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம்” என்கிறார் பாக்யா.

பாக்யலட்சுமி

தொடர்புக்கு: sriannapoorna1982@yahoo.com

NEWS TODAY 03.07.2026