Monday, October 29, 2018

`தகாத உறவு மனரீதியாக துன்புறுத்திய குற்றமல்ல’ - சென்னை உயர்நீதிமன்றம்!


கலிலுல்லா.ச

தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தகாத உறவு காரணமாக மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாகச் சேலத்தைச் சேர்ந்தவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.



சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், சங்கீதா என்பவருக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ரோஷினி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், மாணிக்கத்துக்கு, சரசு என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பலமுறை கண்டித்தும் மாணிக்கம் கேட்காததால், தனது ஒன்றரை வயது மகளுடன் கிணற்றில் குதித்து சங்கீதா தற்கொலை செய்துகொண்டார். கடந்த 2003 ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வரதட்சணை கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய குற்றச்சாட்டில் மாணிக்கம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், மாணிக்கத்துக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து 2007-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ``தகாத உறவு மனரீதியாகத் துன்புறுத்திய குற்றமாகக் கருத முடியாது. தற்கொலை தூண்டிய குற்றச்சாட்டுகளைக் காவல்துறை நிரூபிக்கத் தவறிவிட்டது. எனவே, மாணிக்கத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து, அவரை விடுதலை செய்கிறேன்” எனத் தீர்ப்பளித்தார்.
Suspected robbers poison 20 dogs to death in Kanchipuram

DECCAN CHRONICLE.

PublishedOct 29, 2018, 1:28 am IST

Villagers decided on rearing those dogs to protect themselves from theft.


Carcasses of dogs lying near Madurantakam in Kanchipuram district on Sunday. (DC)

CHENNAI: In a bizarre incident, an unidentified gang of robbers may have poisoned 20 dogs to death near Madurantakam in Kanchipuram district on Saturday night. The police are on a hunt to nab the suspects.

Residents living in Karasangal, Orathi and Anaikattu near Madurantakam, about 60 kms from the city, woke up on Sunday morning to find their dogs dead.
Shocked, the residents alerted Orathi police personnel, who rushed to the spot and held enquiries with the villagers who had gathered near the ‘dead’ dogs even as tension began gripping the locality.

Residents lamented that of their 20 dogs, only three dogs had been left battling for life and they too soon succumbed while they were being taken to a nearby veterinary hospital.

Residents of Madurantakam and adjoining villages had started rearing livestock such as cows, goats and chicken for their livelihood a few years ago. They had switched to livestock business from agriculture as there had been very little rain in the area in the last few years.

“Our villages have been witnessing theft of livestock by some miscreants from a couple of years ago. Despite repeated complaints to the police station, the police officials showed reluctance in nabbing the accused, perhaps because what was stolen was just ‘livestock’ to them,” said Shankar (34), a villager.

The villagers decided in a meeting to rear dogs in all the households to protect their livestock from being stolen.

“The rearing of dogs served us well as our villages did not witness theft of livestock for the last six months and we heaved a sigh of relief as these dogs were providing security. The dogs would bark during night if someone intruded into the villages,” said Dhanalakshmi (48).

Sensing this, the thieves had hatched a plot to kill the dogs, which had been a hindrance to their business. Police suspected that such offenders had stolen livestock to make a quick buck by selling them in the markets.

“Since Deepavali festival is round the corner, the robbers may have wanted more money within a short span of time. The gang might have been keeping a watch on these villages and subsequently placed meat mixed with poison on Saturday night, which attracted the dogs and resulted in their deaths,” said a police
official. The Orathi police station registered a complaint and assured the villagers they would catch the accused.
We have decided to contest bypolls: TTV Dhinakaran

DECCAN CHRONICLE.

PublishedOct 29, 2018, 1:31 am IST

Speaking to reporters here he stated he did not wish to ensure an opportunity to the AIADMK to continue in power.


TTV Dhinakaran

KARUR: Averring that he would not give any opportunity for the AIADMK to continue in power in the State, AMMK leader TTV Dhinakaran vowed that his MLAs would rather contest the bypolls than seek legal recourse which might prolong the holding of the elections.

“If we go on an appeal before the Supreme Court (challenging the Madras High Court order upholding the Speaker’s order disqualifying the 18 rebel AIADMK lawmakers), there is likelihood of the elections getting postponed. I had asked them (MLAs) to visit their constituencies and get the feedback... we have decided to contest,” Mr Dhinakaran said on Sunday.

Speaking to reporters here he stated he did not wish to ensure an opportunity to the AIADMK to continue in power.

“Sometimes, if the case goes to the court, it may become the reason for not conducting the polls. For instance, the by-election to Thirupparankundram has been deferred owing to the case filed by Saravanan,” he said and added that he had consulted legal experts on the issue. “We have decided to contest …the final decision would be announced in two or three days.”

He took pot shots at Health Minister Dr. C. Vijaya Baskar wondering why he had not approached the Supreme Court on the gutka case whereas the Chief Minister Edappadi K. Palaniswami had promptly appealed before the Supreme Court against the Madras High Court order directing CBI inquiry on him in the road contract case.

On Mr. Palaniswami’s call to his party men who have left the AIADMK to return to the parent organisation, Mr. Dhinakaran said the appeal showed that the ruling AIADMK is ‘weak.’

Barring the Ministers, he claimed that 90 per cent of the AIADMK members are with his AMMK.

“Without the government, they (AIADMK) are nonentity,” Dhinakaran said and contended “the AIADMK (leaders) is spending sleepless nights because of Dhinakaran.”
Tamil Nadu Government told to submit info on seats in medical colleges

The BoGs, either shall pass appropriate orders or come forward with a scheme or proposal within two weeks, the judge said.

Published: 28th October 2018 09:30 AM 



Image for representational purpose only.

By Express News Service

CHENNAI : The Madras High Court has directed the Tamil Nadu government to submit particulars about the vacancy position in its medical colleges and their admission capacity to the Medical Council of India (MCI)/Board of Governors (BoGs) in New Delhi, immediately.

Justice S S Sundar gave the directive, while passing further interim orders on a batch of writ petitions from SU Archana and 102 others, all second year students of defunct Ponniah Ramajayam Medical Sciences in Manamai Nallur in Kancheepuram district.

The court, on an earlier occasion, had directed the State government to address MCI and the Union government to obtain necessary permission for accommodating all the 103 students in other self-financing private medical colleges and collect the statistics regarding the number of seats and other particulars about the government medical colleges, orally. MCI/Board of Governors counsel stated that the board had received the representation from the Tamil Nadu government. However, the board has taken no decision so far.

Taking into consideration the interest of students and the submissions of advocate H Rajasekar and others, the judge directed the BoGs to come up with a draft proposal suggesting accommodation of students in government or private medical colleges, so that he will be able to pass appropriate orders on certain issues which would be addressed before him by the State government and the students.


The BoGs, either shall pass appropriate orders or come forward with a scheme or proposal within two weeks, the judge said.
Counsel for BoGs submitted that in view of the fact that a few other private institutions are also facing problems similar to that of Ponniah medical college, the BoGs would prefer to suggest that the students be accommodated only in government colleges. “Giving respect to the submission and the stand taken by the MCI/BoGs, the State government is also directed to submit the particulars about the vacancies in its colleges and their admission capacity,” the judge added and posted the matter for November 16.
'96' படம்; ஒரு காதல்... பிரிவின் துயரம்.. நிஜவாழ்க்கையைத் தாக்கும் விட்டு அகலா நினைவுகள்

Published : 27 Oct 2018 17:53 IST



|’96’ படத்தைப் பார்த்த அனைவருமே தங்களுடைய காதல் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்கள். அந்தளவுக்கு இப்படம் ஒவ்வொருவரையும் பாதித்திருந்தது. அவ்வாறு ‘96’ திரைப்படம் தன் காதல் வாழ்க்கையை எப்படி நினைவுக் கூர்ந்தது என்ற ஒரு நபரின் பகிர்வே இது|

பலருக்குமே அவர்களுடைய வாழ்க்கையில் ஏதேனும் ஒரு பெரிய அடி தாங்கி கடந்து வந்திருப்போம். அப்படி எனக்கு நடந்தது தான் காதல் தோல்வி. அவ்வப்போது ஞாபகங்கள் வரும் போகும். ஆனால், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்துவிடுவேன்.

காதல் தோல்வியடைந்தவர்கள் மறுபடியும் சந்திப்பது போன்ற படங்கள் வந்தால் பார்க்காமல் கடந்துவிடுவேன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் பிரகாஷ்ராஜிடம் ஜெயம் ரவி பேசும் காட்சியில் லேசாக கலங்கினேன். ஏனென்றால், இப்படிப் பேசினால் எங்கப்பாவும் கரைந்திருப்பாரோ என்ற எண்ணம் தான். அடுத்து ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் லேசாக வருந்தினேன். ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு நாம் திரும்பி விடுவோமோ என்று பயந்தது ‘96’ படத்திற்குப் பிறகு தான். அதற்கு நிறையக் காரணங்கள்.

என்னுடைய ஃபேஸ்புக்கில் இருக்கும் நண்பர்கள் பலரும் ‘96’ படத்தின் மூலம் என் காதலியை நினைத்தேன் என்று பார்த்தவுடன், இப்படத்தை நாம் பார்க்கக்கூடாது என முடிவு செய்தேன். ஆனால், ஒரு படத்தின் பாடல்கள் என்னை இந்தளவுக்கு படம் பார்க்க தூண்டியதில்லை. குருட்டு தைரியத்தில் என்ன தான் நடந்துவிடும் பார்ப்போம் என்று பார்த்தேன். அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறாக உணர்கிறேன். இயக்குநர் பிரேம்குமாருக்கு என் கதை எப்படித் தெரியும் என்று பல காட்சிகளில் யோசித்தேன்.

ஏன் இவன் இப்படி என்பதற்கு முன்னால் ஒரு சின்ன ப்ளாஷ்பேக்:

சென்னையில் பணிபுரிந்துக் கொண்டிருக்கும் போது, ஆகஸ்ட் 18-ம் தேதி காலையில் ஒரு போன் வந்தது. ‘நான் ...... பேசுறேன். ரொம்ப நாளாகவே சொல்லணும் சொல்லணும் என நான் நினைத்தது. ஐ லவ் யூ. உன் முடிவு என்னவென்று யோசித்து சொல்’ என்றாள். எனக்கோ என்னடா இது என்று வேலை ஓடவில்லை. இரவு நான் அழைத்தேன். ‘இது தான் உன் எண்ணா... ஏன் இப்படியொரு எண்ணம்’ என்று பேச்சு தொடர்ந்தது. ஆகஸ்ட் 19 அதிகாலை 2 மணியளவில் நானும் காதலிக்கிறேன் என்று சொன்னேன்.

அவளோ கல்லூரியில் பயிற்சி நிலையில் உள்ள பேராசிரியராக இருந்தாள். வீட்டில் ஒரே பெண் என்பதால், அவளுடைய வீட்டில் எதுவுமே சொல்லவில்லை. நேரில் பார்க்கலாம் என்று செப்டம்பரில் சென்றேன். 6 நாள் விடுமுறை என்பதால், போன முதல் நாளே அவளுடைய வீட்டிற்குச் சென்றேன். பெரிய வீட்டில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு போர்ஷனில் இருப்பார்கள். அம்மாவின் சொந்தக்காரர்கள் என்பதால் வீட்டிற்குச் சென்று மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த நாள் முதல் என் வீட்டின் வாசல் வழியாக தான் அவளது கல்லூரிக்கு செல்வாள் என்பதால் பார்ப்பேன். நான் மறுபடியும் சென்னைக்கு வரும் போது, பேருந்து நிலையம் வந்தாள். இருவரும் ஒரு பேக்கரியில் ஜூஸ் குடித்தோம். பின்பு ‘பார்த்து போடா’ என்று கிப்ட் கொடுத்தாள். அது தான் அவளை நான் கடைசியாகப் பார்த்தது.


என்னுடைய காதலைப் பற்றி என் வீட்டில் என்ன சொல்வார்கள் என்ற பயம் எனக்கு எப்போதுமே உண்டு. ஒரு நாள் ‘எப்படியும் என் வீட்டில் பிரச்சினை வரும்டா.. இப்பவே வீட்டில் சொல்லி பிரச்சினையை ஃபேஸ் பண்ணுவோம். அது நல்லது’ என்றேன். அது தான் நான் எடுத்த மிகத்தவறான முடிவு என்பது பின்னால் தெரியவந்தது. வீட்டில் சொன்னவுடன் பயங்கர பிரச்சினை. என்னுடன் துணை நிற்பார்கள் என்று யாரெல்லாம் எதிர்பார்த்தேனோ, அவர்கள் அனைவருமே எட்டப்பர்கள் வேலை பார்த்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

என்னுடன் பிறந்தவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தேன். அவரோ காதல் திருமணம் செய்தவர். அவர் நமக்கு பக்கபலமாக இருப்பார் என நம்பினேன். அவர் கூட ‘உனக்கு வந்திருப்பது காதல் அல்ல. இன்பேக்ஸுவேசன்’ என்றார். ஒரு காதல் மூலமாக பல பேருடைய சுயரூபங்கள் தெரியவந்தது. நமக்குத் தான் பிரச்சினை வரும், அவளுக்கென்றும் ஆகாது என்று எண்ணியதற்கு மாறாக ஒரு சம்பவம் நடந்தது. என் குடும்பத்திலிருந்தவர்கள் அவளது வீட்டிற்கு சென்று தெருவில் நின்றுக் கொண்டு ‘பணம் அதிகமாக இருப்பதால்..............................................................’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். இதை அவள் என்னிடம் சொன்ன போது அப்படியே உடைந்து போய்விட்டேன்.

தொடர்ச்சியாக பிரச்சினை, வேலையில்லாமல் போனது என அடி மேல் அடி. ஆனால், அவளும் நானும் உறுதியாக இருந்தோம். அப்போது தான் மேலும் ஒரு அடியாக என் அப்பாவுக்கு ரத்தத்தில் மஞ்சள் காமாலை வந்தது. அவரும் படுத்த படுக்கையானார். அதை வைத்து காதலைப் பிரிக்க ஒரு விளையாட்டைத் தொடங்கினார்கள். ஆனால், என் அப்பாவுக்கு என் காதல் இப்போது வரைக்கும் தெரியாது. அப்பாவிடம் சொல்லிவிடுவேன், அவர் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறார் என்றெல்லாம் பேசியவுடன், நம்மால் வேண்டாம் என்று அவளிடம் பேசினேன்.

அவளுடைய வீட்டிலும் பிரச்சினையாகி ஒரு நாள் “நாம் பிரியலாம்” என்றாள். அன்றிரவு இருவரும் பேசினோம். “இனிமேல் நாம் சந்திக்கவே கூடாது. எந்தவொரு குடும்ப விழாவில் கூட சந்திக்க வேண்டாம். அவர்கள் ஜெயித்ததாகவே இருக்கட்டும். நான் செத்துவிட்டால் என்னைப் பார்க்க வா... நீ போய்விட்டால் நான் பார்க்க வருகிறேன்... அது வரை நம் வாழ்க்கையில் இருவரும் போனில் கூட பேச வேண்டாம்” என்று அழுதுக் கொண்டே பேசினோம். அன்று முதலே அவளுடைய நம்பரை, என்னுடைய நம்பரை அவளும் ப்ளாக் செய்துவிட்டோம்.



’96’ படத்தால் உனக்கு என்ன என்று நீங்கள் கேட்கலாம். அப்படத்தின் முதல் பாதி எனக்கு பிரச்சினையே இல்லை. இரண்டாம் பாதி பார்க்கும் போது தான் நொறுங்கிவிட்டேன். ஏனென்றால், அவளைப் பிரிந்தவுடன் நான் என்ன நிலையில் இருந்தேன் என்பது என்னுடன் இருந்த நண்பர்களுக்கு மட்டும் தெரியும். எப்போதுமே குடி தான். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தேன்.

அவளைப் பிரிந்தவுடன் மனதுக் கேட்காமல், என்ன பிரச்சினையானாலும் பரவாயில்லை என்று அவள் பணிபுரிந்த கல்லூரியில் போய் நின்றேன். அவள் கல்லூரி வாசலில் இருக்கும் போது தான் ‘எங்கப்பா இருக்க.. நாளை ஆபிஸ் வாப்பா.. ஒரு ரெஸ்யூம் எடுத்துட்டு வா’ என்று அழைத்தார். பெரிய நிறுவனத்தில் வேலை என்பதால் வந்துவிட்டேன். அவளுடைய திருமணம் நடக்கும் போது, யாருக்குமே தெரியாமல் நின்றேன். இது அனைத்துமே விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் பேசிக் கொண்டிருக்கும் போது வரும். நான் போனது எதுவுமே அவளுக்கு தெரியாது. ஆனால், சிறிதாக யோசித்திருக்க வாய்ப்பு உண்டு. இப்போது அவளுக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. எனக்கும் திருமணமாகிவிட்டது.

‘96’ படம் பார்த்த போது தான், மீண்டும் அப்படியே பழைய நிலைக்கு திரும்பினேன். அப்படம் பார்த்த அடுத்த நாள், காதல் தோல்வியின் போது என்னுடன் இருந்த நண்பனைப் பார்க்கச் சென்றேன். அவனுடைய வீட்டிலிருக்கும் கவரைப் பார்க்க வேண்டும் என்றேன். ‘ஏன் டா ‘96’ படம் பார்த்தியா’ என்று கேட்டான். அதைப் பிரித்துப் பார்த்தேன். அதிலும் ‘96’ படத்தின் ஒற்றுமையிக்கிறது. என்னவென்றால், அடுத்த முறை பார்க்க வரும் போது ‘மெட்டி’ வாங்கிக் கொடு என்றாள். ஒரு மெட்டியும், ஒரு சுடிதாரும் வாங்கினேன். நான் வாங்கிய சுடிதார் மஞ்சள் கலர். அந்த இரண்டையும் நீண்ட நேரம் பார்த்தேன். மறுபடியும் அவனிடம் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.


நான் படம் பார்த்து ஒரு வாரம் கடந்துவிட்டாலும், இன்று எழுதுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இன்று தான் நானும் அவளும் பிரிந்த நாள். கண்டிப்பாக இன்று அவள் என்னைப் பற்றி கண்டிப்பாக நினைப்பாள் என்பது தெரியும்.

அவளும், நானும் பிரிந்து நீண்ட தூரம் வந்துவிட்டாலும் நாங்கள் விட்டுவந்த காதல் மட்டும் இன்னும் அதே இடத்தில் நிற்கிறது. அதற்கு என்றைக்குமே தோல்வியில்லை.

இக்கட்டுரையைப் படித்தவர்களுக்கு இது இவர்களது காதல் என்று தெரியவரலாம். அப்படித் தெரிந்தால், அவளிடம் போய் ‘96’ படம் பார்க்கச் சொல்லுங்கள். அவளுக்கும் என் நினைப்பு வரலாம்.

இப்படிக்கு,

காதலன்
சர்கார்’ கதையை வெளியிட்ட கே.பாக்யராஜ்: படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி

Published : 28 Oct 2018 20:42 IST




‘சர்கார்’ கதை என்ன, எப்படி பயணிக்கும் என்பதை இயக்குநர் கே.பாக்யராஜ் அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். இது படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இது தொடர்பான விசாரணை அக்.30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இயக்குநர் பாக்யராஜ் பல்வேறு சமூகவலைத்தளங்களுக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்படி அளிக்கும் போது ஒரு கேள்விக்கு, ‘சர்கார்’ படத்தின் முழுக்கதையையும் சொல்லிவிட்டார் கே.பாக்யராஜ். விஜய் எதற்காக வருவார், கதை எப்படி பயணிக்கும், க்ளைமாக்ஸ் என்ன என்பதை வரை முற்றிலுமாக தெரிவித்திருக்கிறார்.

இந்தப் பேட்டி ‘சர்கார்’ படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ”பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஒரு படத்தின் கதையில் இருக்கு முக்கிய சாராம்சங்கள் அனைத்தையும் எப்படி சொல்லலாம். ஒரு முன்னணி இயக்குநர் இதுக்கூட தெரியாமல் இப்படி பேசியிருப்பது உண்மையிலே பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது” என்று ‘சர்கார்’ படக்குழுவினரைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
ஆர்வக் கோளாறு ஆபத்து!

By ஆசிரியர் | Published on : 26th October 2018 01:46 AM |

தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மனித இனத்துக்கு பயன் அளிக்கிறதோ, அதேபோல ஆபத்துகளையும் அழைத்து வருகிறது என்பதை கைப்பட (செல்ஃபி) மரணங்கள் எடுத்துரைக்கின்றன. புகைப்படம் எடுப்பதற்கு கேமராக்கள் உபயோகத்திலிருந்த காலம் மலையேறி, எல்லோரும் அவரவர் கையிலுள்ள அறிதிறன்பேசியில் படம் எடுப்பதும் கைப்படம் மூலம் தங்களைத் தாங்களே படம் எடுத்துக்கொள்வதும் வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதில் காணப்படும் ஆபத்து குறித்து கவலைப்படாத மனப்போக்கும் ஏற்பட்டிருப்பதுதான் வேதனையை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் தற்செயல் விளைவுகள் உயிருக்கே உலை வைப்பதாக இருக்கும்போது அது குறித்து கவலைப்படாமல் இருந்துவிட முடியாது. 

குடும்ப மருத்துவம் மற்றும் ஆரம்ப சுகாதாரம் குறித்த மருத்துவ இதழ் ஒன்று செய்திருக்கும் ஆய்வின்படி, கடந்த ஓராண்டில் மட்டும் உலகளாவிய அளவில் 250 உயிர்கள் கைப்படம் எடுப்பதால் பலியாகியிருப்பதாக தெரிகிறது. தில்லியிலுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம், கடந்த அக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை கைப்பட மரணங்கள் குறித்த ஆய்வொன்றை மேற்கொண்டது. அதன்படி, உலகிலேயே அதிகமான கைப்பட மரணங்கள் இந்தியாவில்தான் நடந்திருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கைப்பட மரணங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் நடத்திய அந்த ஆய்வு மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. கைப்பட மரணங்களில் சிக்கியவர்கள் பெரும்பாலும் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். மரணமடைந்தவர்களில் 72 சதவீதம் பேர் ஆண்கள். 2011 முதல் 2017 வரையில் நிகழ்ந்த கைப்பட மரணங்களில் பாதிக்கும் மேற்பட்ட உயிரிழப்பு இந்தியாவில்தான் என்கிற திடுக்கிடும் தகவலையும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. உலகிலேயே அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு என்பதால், இந்தியாவில் அதிக அளவில் 30 வயதுக்குட்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று கொண்டாலும்கூட, இவர்களில் பெரும்பாலோர் படித்த, நல்ல வேலையில் இருக்கும் இளம் வயதினர் எனும்போது, நாம் அது குறித்துக் கவலைப்படாமல் இருக்க முடியாது.
அந்த ஆய்வு இன்னொரு தகவலையும் தருகிறது. ஆண்களைவிடப் பெண்கள்தான் கைப்படம் எடுப்பதில் அதிகமாக ஈடுபடுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. ஆனால், அப்படி படம் எடுக்கும்போது பெண்கள் கவனமாக இருப்பதாகவும், ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு தங்களது ஆண்மையையும், வீரத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்கிற மனப்போக்கு ஆண்களிடம் அதிகமாகக் காணப்படுவதால் அவர்கள்தான் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். அதிக அளவிலான கைப்பட மரணங்களில் ஆண்கள் பாதிக்கப்படுவதற்கு அதுதான் காரணம்.
அதிகமான கைப்பட மரணங்களுக்கு தண்ணீரில் மூழ்குவதுதான் காரணமாகத் தெரிகிறது. கடற்கரையோரமாக நின்று கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும், படகுகளில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வதும் ஆபத்தில் முடிந்து நீரில் மூழ்கி மரணிப்பதற்கு காரணியாகிவிடுகிறது. இரண்டாவது முக்கியமான காரணம், வாகனங்கள். ஓடும் ரயிலுக்கு முன்னால் அல்லது சாலை
களில் நின்றுகொண்டு அல்லது இரு சக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு கைப்படம் எடுத்துக்கொள்வது உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. இதுபோன்ற மரணங்களில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே சிக்கிக்கொள்கிறார்கள். 

நெருப்பின் மூலமும், உயரமான இடங்களிலிருந்து கீழே விழுவதன் மூலமும் மரணிப்பது கைப்பட மரணங்களில் மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. சமீபத்தில் கொடிய மிருகங்களுக்கு அருகில் நின்றுகொண்டு கைப்படம் எடுத்ததன் விளைவாக வெவ்வேறு நிகழ்வுகளில் எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அமெரிக்காவில் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது போல கைப்படம் எடுத்துக்கொள்ள முற்பட்ட பலர் இறந்திருப்பதாகத் தெரிகிறது.
அந்த ஆய்வின்படி, கைப்பட மரணங்கள் குறித்த புள்ளிவிவரம் முழுமையானதல்ல. பெரும்பாலான நிகழ்வுகள் வெளியில் தெரிவதில்லை அல்லது பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால், கைப்பட மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்பது மட்டும் உண்மை. 

2011-இல் இந்தியாவில் தெளிவாக பதிவு செய்யப்பட்ட கைப்பட மரணங்கள் வெறும் மூன்று மட்டுமே. 2016-இல் அதுவே 98-ஆக அதிகரித்திருந்தது. 2010-க்குப் பிறகு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அதிகரித்ததுடன் கைப்பட மரணங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியது. இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் இதனால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். உடனுக்குடன் தங்கள் வீர சாகசங்களையும், புகைப்படப் பதிவுகளையும் முகநூலிலும் சுட்டுரையிலும் தங்களது வலைப்பூவிலும் ஏற்ற வேண்டும் என்கிற ஆர்வக் கோளாறு காரணமாக இளைஞர்கள் மத்தியில் கைப்படம் எடுத்துக்கொள்ளும் போக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக வேகமாக அதிகரித்திருக்கிறது. தங்களது புகைப்படங்கள் குறித்த விருப்பங்களையும், கருத்துகளையும் சமூக ஊடக நட்பு வட்டத்தில் பெறுவதில் காட்டப்படும் ஆர்வக் கோளாறு ஆபத்தாக முடிவதில் வியப்பொன்றும் இல்லை. 

முக்கியமான சுற்றுலாத் தளங்களிலும், மலை உச்சிகளிலும், உயரமான கட்டடங்களிலும், நீர் நிலைகளுக்கு அருகிலும் கைப்படம் எடுப்பதற்கு தடை விதித்தால் தவறில்லை என்று தோன்றுகிறது. ரஷியாவில் கடந்த 2015 முதல் பாதுகாப்பான கைப்பட பயன்பாடு குறித்து காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆர்வக் கோளாறு, உயிரிழப்பில் முடிவது தவிர்க்கப்பட வேண்டும்.

NEWS TODAY 06.12.2025