Wednesday, November 7, 2018

Medico legal reports in bad handwriting, must be typed: HC

TNN | Nov 4, 2018, 08.39 AM IST


  

LUCKNOW: After repeatedly summoning doctors to decipher unreadable medico legal reports in many cases, a Lucknow bench of Allahabad high court has directed the principal secretaries of home and medical and health services departments and the director general, medical and health services, to ensure that doctors submit computerised reports along with original handwritten ones for facilitating the courts of law, in the interest of administration of criminal justice.

The computerised report will have to be signed by the doctor as a true copy of original or by an authorized signatory after comparing it with the original. It would also form part of the police report at the time of conclusion of investigation, the court said.

Despite imposing costs on doctors, they have not been recording medico legal reports and postmortem reports in clear handwriting and hence court has to summon them for deciphering the reports for adjudication. A division bench of justice Ajai Lamba and justice D K Singh said, “Summoning a doctor simply for reading the report authored by him for bad handwriting does not make administrative sense.”

Disposing of a writ petition challenging an FIR, the court said, “We hereby take judicial notice of the fact that a doctor in a government medical facility is required to examine a large number of patients in a day. If for every hearing in revision jurisdiction, bail jurisdiction before the court of magistrate, court of sessions or the high court or in appellate jurisdiction, government medical practitioner is required to appear, the work of the doctor in the hospital shall suffer and a large number of patients would be deprived of the services of such medical specialist.”

SC Rejects Bail To Medical College Director Accused Of Cheating Students [Read Order] | Live Law

SC Rejects Bail To Medical College Director Accused Of Cheating Students [Read Order] | Live Law: The Supreme Court, on Friday, dismissed plea of a medical college director arrested on cheating charges and who was denied bail by the Madhya Pradesh High Court. Dr. Ramesh Badlani was accused by many students of collecting fees of upto Rs 5 lakh from them for admission to medical and nursing courses at the institute, and discontinuing …
300 ரூபாய்க்கு சாப்பிட்டால் கார் பரிசு - காரைக்குடியை கலக்கும் விளம்பரம்!

சாய் தர்மராஜ்.ச
பாலமுருகன். தெ

காரைக்குடியில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடையை நோக்கி பொதுமக்களின் படையெடுப்பு அதிகரித்துள்ளது.



கட்டிடக்கலைக்கு மட்டுமல்லாது அறுசுவை உணவுக்கு புகழ் பெற்றது காரைக்குடி. அசைவம் மற்றும் அறுசுவை உணவுகளுக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஏராளாமனோர் காரைக்குடிக்கு படையெடுப்பர். அந்த வகையில் காரைக்குடி சண்முகா பாரடைஸ் சைவ உணவுக்கும், நாச்சம்மை ஹோட்டல் அசைவ உணவுக்கும் பிரபலம். இந்த இரண்டு கடைகளும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி, இந்த ஹோட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் 300ருபாய்க்கு மேல் உணவருந்தினால், அவர்களுக்கு ஆல்டோ பெட்ரோல் கார் ,சைக்கிள், மிக்சி, கிரைண்டர், ஹாட்பாக்ஸ் போன்ற பொருள்களை குலுக்கல் முறையில் வழக்கப்படும் என தீபாவளி பரிசாக அறிவித்துள்ளது.

28.10 2018 முதல் 15.01.2019 வரை இந்த சலுகை உண்டு. காரை பரிசாக பெற வேண்டும் என்ற நோக்கில் உணவுப்பிரியர்கள் மட்டுமல்லாத பல்வேறு தரப்பினர் இந்த ஹோட்டலில் உண்ண குவிந்து வருகின்றனர். இதுவரையிலும் நகைகடை, மளிகைக் கடையில் மட்டுமே கொடுத்து வந்த பரிசுகள் இன்றைக்கு மதுபானக்கூடங்கள் முதல் உணவு விடுதிகள் வரைக்கும் நீண்டுள்ளன. இந்த அதிரடி அறிவிப்பு குறித்து தொழிலதிபர் சிலரிடம் பேசுகையில், "விளம்பரம் தான் இன்றைய விஞ்ஞான உலகில் வியாபாரத்தை தீர்மானிக்கும் இதய பகுதியாக உள்ளது. ஆகையால், தொழில் போட்டிகளை சமாளிக்க இதுபோன்ற பரிசுகளை அறிவிக்க வேண்டியது இருக்கிறது . பத்திரிகை விளம்பரம் தனிநபருக்கு போய் சேருகிறது. நுகர்வோர் மூலம் நாம் பெறும் லாபத்தை நுகர்வோருக்கே திரும்பவும் கொடுக்கிறோம் அது எங்களுக்கு மிக்க மிகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார்கள்.
"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு!" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்

ரமேஷ் கந்தசாமி

துரை.நாகராஜன் 
vikatan
தேன் கெட்டுப்போகாது, ஆனால் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது லாபம் தரும். இதனால்தான் தேனீ வளர்ப்பு அதிகமான லாபம் தரும் என்று சொல்கிறார்கள்.


உணவுப் பொருட்களில் மிகுந்த இனிமையான, சத்தான பொருள்களில் முதலிடம் வகிப்பது தேன். உலகில் தேன் சந்தையில் நிகழும் பணப் பரிமாற்றம் மட்டும் பில்லியன் டாலரைத் தாண்டுகிறது. அமெரிக்காவில் மட்டும் ஓர் ஆண்டுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கனடாவில் ஓர் ஆண்டுக்கு 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. 2012-ம் ஆண்டு கணக்குப்படி, சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களை நிரப்பியிருந்தன. பில்லியன் டாலர் அளவிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொழில் தேனீ வளர்ப்பு இன்று கலப்படங்களின் வருகையால் மதிப்பிழந்து காணப்படுகிறது.



தேவை இருக்கும் பொருளுக்குத்தானே சந்தையில் மரியாதையும் அதிகம் இருக்கும். இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும், சுத்தமான தேனை உற்பத்தி செய்து, நல்ல லாபம் ஈட்டி வருகிறார்கள். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் உள்ள முதியன்வலசு கிராமத்தைச் சேர்ந்த தண்டாயுதபாணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேன் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர தேனில் மதிப்புக் கூட்டல் பொருட்கள் செய்தும் லாபம் ஈட்டி வருகிறார். பண்ணையில் தேன் எடுத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

"தேனில் அடைத்தேன், தேன் நெல்லி, சர்க்கரை நெல்லி, தேன் மெழுகுவர்த்தி எனப் பல பொருட்களை மதிப்புக் கூட்டல் செய்து வருகிறேன். தேனை மட்டும் மக்களுக்குக் கொடுத்தால் லாபம் குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் மதிப்புக் கூட்டல் முறையில் விற்பனை செய்ய ஆரம்பித்தேன். சுத்தமான ஒரு கிலோ தேன் 550 ரூபாய்க்கு விற்பனையானால், தேன் நெல்லி கிலோ 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும்.


ஒரு பொருளை மதிப்புக் கூட்டினால் நிச்சயமாக லாபம் கிடைக்கும். அதிலும் தேனை மதிப்புக் கூட்டினால் இன்னும் லாபம் அதிகமாகக் கிடைக்கும். சந்தையில் டிமாண்ட் அதிகமாக இருப்பதால் சந்தையில் கிடைக்கும் தேன்கள் அதிகமாகப் போலியானதாகத்தான் இருக்கிறது. எங்களிடம் விசாரிக்கும் வாடிக்கையாளர்களும் மற்றவர்கள் கொடுக்கும் விலைக்கு ஏன் நீங்கள் தேன் கொடுக்கக் கூடாது என்று கேட்பார்கள். அவர்கள் கேட்பதுபோலவே தேன் கொடுத்தால் அது தரமான தேனாக இருக்காது. இத்தாலிய தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேன் ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்கலாம். ஆனால், நாட்டுத் தேனீக்களில் இருந்து எடுக்கப்படும் தேனை ஒரு கிலோ 350 ரூபாய்க்குக் கொடுக்க முடியாது. தேன் விலை அதிகமாக இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்கு ஒன்றுதான். குறைந்த விலையில் தேனை எதிர்பார்க்க வேண்டாம். இப்போதுள்ள காலகட்டத்தில் ஒரு கிலோ தேன் எடுப்பதுமுதல் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்வது வரை அதிகமாகச் செலவாகிறது. மக்கள் குறைந்த விலைக்குக் கேட்கும்போதுதான் கலப்படமும் சந்தையில் அதிகமாகிறது.

எதிர்காலத்தில் சுத்தமான தேன் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். உண்மையான தேன் பண்ணைகள் என சொல்லிக் கொண்டு அதிகமான தேன் பண்ணைகள் போலியாக இயங்கி வருகின்றன. நாங்கள் கொடுக்கும் தரமான தேனால் வாடிக்கையாளர்கள் அதிகமாக எங்களிடம் வந்து வாங்கிச் செல்கிறார்கள். வெளி மார்கெட்டில் தேன் 350 ரூபாய்க்கு விலை போனாலும், மக்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்குத் தயாராக இருக்கிறார்கள். மேல் நாட்டுத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் தேன் வருடம் முழுவதும் கிடைக்குமா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நாட்டுத் தேனீக்கள் மூலம் தேன் வருடம் முழுவதும் கிடைத்துக் கொண்டிருக்கும். சீசனில் கிடைக்கும் தேனின் அளவு குறையுமே தவிர, முழுமையாக நின்று விடாது. இதுதவிர, நாட்டுத் தேனில்தான் சத்துகளும் அதிகமாக இருக்கும். சுத்தமான தேன் அதிக கெட்டித் தன்மையுடன் இருக்காது. எப்போதுமே நீர்மத் தன்மையுடன்தான் காணப்படும்.



இந்தத் தொழிலை ஆரம்பிக்கும்போது வெறும் ஆயிரம் ரூபாயில்தான் ஆரம்பித்தேன். இன்று என்னிடம் இருப்பதுபோல பண்ணை அமைக்கக் 5 கோடி ரூபாய் தேவைப்படும். ஒரு தொழிலை துவங்கிவிட்டால் அதனை விரிவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமே தவிர, இதுபோதும் என்று எப்போதுமே நின்றுவிடக்கூடாது. அதேபோல தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலை நவீனப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 10 இந்திய தேன் பெட்டிகளை வைத்தால் ஒரு விவசாயி வருடத்திற்குக் குறைந்தபட்சம் இண்டு லட்ச ரூபாய் லாபம் சம்பாதிக்கலாம். 10 பெட்டியில் இருந்து வருடத்திற்கு 100 கிலோ தேன் கிடைக்கும். ஒரு கிலோ தேன் விலை 550 ரூபாய். இதன் மூலமாக 55 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வருடத்திற்கு 10 கிலோ மகரந்தம் கிடைக்கும். ஒரு கிலோ மகரந்தத்தின் விலை 2,000 ரூபாய். அது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். 10 கிலோ தேன் மெழுகு மூலமா 5 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலே சொன்ன அனைத்துமே பொதுவாக தேனீ வளர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் வருமானம்தான். எனக்கு இந்தத் தொழிலில் செலவுபோக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது. அடைத்தேன் கிலோ 1200 ரூபாய்க்கும், சர்க்கரை நெல்லி கிலோ 350 ரூபாய்க்கும், மெழுகுவத்தி 500 ரூபாய்க்கும், தேன் நெல்லி ஒரு கிலோ 1,000 ரூபாய்க்கும், இத்தாலி தேன் கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறேன். வருமானம் சீசனைப் பொறுத்து மாறுபடும்.

கிடைக்கும் தேன் கெட்டுப்போகாது, ஆனால் நிச்சயமாகச் சுவை மாறும். அதனால் மதிப்புக் கூட்டி விற்பனை செய்துவிடுவது உடனடி லாபம் தரும். இதுதவிர, மதிப்புக் கூட்டல் தொழிலில் நம் உற்பத்தி செய்யும் பொருள் மக்களுக்கு அத்தியாவசியமான பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் சந்தையில் எப்போதுமே பொருட்கள் நமக்கு நிறைவான வருமானத்தைக் கொடுக்கும். எங்கள் பண்ணையில் தேனீப்பெட்டிகள், தேனீக்கள் விற்பனை செய்தும் வருகிறோம். ஒரு தொழிலில் முழுமையாக இறங்கினால் அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் தொழிலில் சறுக்காமல் சாதிக்க முடியும். மதிப்புக் கூட்டல் தொழிலில் முக்கியம் தரம். என் விளம்பரதாரர்கள், என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள்தான். அந்த அளவிற்கு என் தேன் பொருட்களின் தரம் இருக்கும். தொழிலில் போட்டி இருப்பது ஆரோக்கியம்தான்... உருவாக்கும் பொருட்களில் போட்டி இருப்பது நிச்சயமாக ஆரோக்கியமானது அல்ல. வெறும் தேனை விற்றுக் கொண்டிருக்கும்போது கிடைத்த வாடிக்கையாளர்களை விடத் தேன் மதிப்புக் கூட்டல் பொருட்களில் கிடைத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். இப்போது தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்திருக்கிறார்கள்" என்றார்.

தேனிலும் மதிப்புக் கூட்டல் தொழில் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு இவர் நல்ல உதாரணம்.
எம்.ஜி.ஆருக்கு 'நாடோடி மன்னன்'... ரஜினிக்கு 'முத்து'... விஜய்க்கு சர்காரா? - சர்கார் விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு 

 


`துப்பாக்கி'யில் அமைதியை குலைக்கும் தீவிரவாதம், `கத்தி'யில் விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் அரசியல் பேசிய விஜய் - முருகதாஸ் காம்போ, `சர்காரி'ல் ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கும் தேர்தல் முறைகேடுகளை பற்றி பேசியிருக்கிறது. மூன்றாவது முறையாக மெசேஜ் சொல்லும் இந்தக் கூட்டணி ஹாட்ரிக் ஹிட்டடிக்கிறதா?



கால் வைத்த இடங்களில் எல்லாம் சக போட்டியாளர்களை கபளீகரம் செய்யும் கார்ப்பரேட் முதலை விஜய்! ஐ.டி கம்பெனிகளில் இவரைப் பற்றி பாடமெடுக்கும் அளவுக்கு சூதுவாது தெரிந்தவர். ஐந்தாண்டுகள் கழித்து, தேர்தலுக்கு ஓட்டுப்போட பெரும் பரபரப்புகளுக்கு இடையில் இந்தியா வந்திறங்குகிறார்! ஆனால், அவரின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டுவிட, மீடியாவின் பசிக்கு தலைப்பு செய்தியாகிறார். ஒருபுறம், உலகமே கண்டு அரளும் கார்ப்பரேட் கிரிமினலான தன்னையே ஏமாற்றிவிட்டார்களென தலையை சூடாக்கும் ஈகோ... மற்றொருபுறம் நெஞ்சை சுடும் தமிழகத்தின் வறுமை... - இரண்டும் சேர்ந்து அணலாக கொதிக்க, அரசியல்வாதிகளோடு நீயா நானா ஆட்டம் ஆடுகிறார். அந்த அணல் எதிரிகளை சாம்பலாக்கியதா, இல்லையா என்பதே மீதிக்கதை.

சுந்தர் ராமசாமியாக பாஸிட்டிவ் எனர்ஜி தெறிக்கும் விஜய்! படத்திற்குப் படம் அழகில் இளமையும் நடிப்பில் முதிர்ச்சியும் ஏறிக்கொண்டே செல்கிறது! `சர்கார்' முழுக்க விஜயின் சாகசம்தான்! கை நரம்பு முறுக்கேற அடிக்கும் சண்டைக்காட்சிகள், படபடவென பொரிந்து தள்ளும் சீரியஸ் உரைகள், ஒவ்வொரு ஸ்டெப்பையும் தனக்கானதாய் மாற்றி ஆடும் அந்த துள்ளல், வில்லன்களை கடுப்பேற்றும் வசனங்களில் தெறிக்கும் நக்கல், ஃப்ரேமுக்கு ஃப்ரேம்... எங்கும் எதிலும் விஜய்! `கத்தி'யில் ஒன்றிரண்டு கலங்க வைக்கும் காட்சிகள் என்றால் இதில் அப்படியான காட்சிகள் மூன்று மடங்கு அதிகம்! அத்தனை காட்சிகளிலும் குடும்பங்களின், தாய்மார்களின் ஓட்டுகளை அள்ளிவிடுவார்! அவரின் சினிமா கேரியரைவிட அரசியல் முன்னெடுப்புக்கு `சர்கார்' அதிகம் உதவும்!




கொள்ளை அழகாக கீர்த்தி சுரேஷ். அறிமுக காட்சியிலும் பாடல் காட்சிகளிலும் இதயங்களை திருடுபவர் அதன்பின் அவரே காணாமல் போய்விடுகிறார். அமைதியாய் இருந்தே அதிகமாய் மிரட்டுகிறார் வரலட்சுமி! இரண்டாம்பாதியில் அவர் வரும் காட்சிகள் எல்லாம் மெல்லிய நடுக்கத்தை படரவிடுகின்றன. சலனமே இல்லாமல் மாத்திரை கொடுக்கும் காட்சியில் கோலிவுட்டின் சூப்பர் வில்லன் சரத்குமாரின் பிள்ளையாக பதினாறடி பாய்கிறார்! வழக்கமான 'ஹேய்ய்ய்ய்' வில்லியாக அவரைக்காட்டாமல் காரியக்கார அரசியல்வாதியாக காட்டியதில் ஜெயிக்கிறார் முருகதாஸ்!

மாண்புமிகு அரசியல்வாதியாக பழ.கருப்பையா! நிஜமாகவே அரசியலில் பழம் தின்று மரம் வளர்த்தவர் என்பதால் அனாயசமாக ஸ்கோர் செய்கிறார்! ஒரு காட்சியில் வரலட்சுமியும் அவரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்! ஆனாலும், அவரை கொஞ்சமே கொஞ்சமாக ஓவர்டேக் செய்கிறார் ராதாரவி! காலம் முழுக்க இரண்டாம் இடத்திலேயே இருப்பவர் எப்படி இருப்பார்? எகத்தாளமும் சேட்டையுமாக அரைகுறை அறிவோடு அப்படியே இருக்கிறார் ராதாரவி! யோகிபாபுவின் காமெடி காட்சிகள் சிரிப்பு சரவெடி. அளவும் நூறு வாலாவாக இல்லாமால் பத்தாயிரம் வாலாவாக இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.



பாடல்கள் வந்தபோது எழுந்த முணுமுணுப்புகளை எல்லாம் பின்னணி இசையில் அடக்கி இருக்கிறது இசைப்புயலின் மந்திர விரல்கள்! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தீம் இசை என ஏரியா பிரித்து வெளுத்து வாங்கியிருக்கிறார்கள் ஏ.ஆர்.ரஹ்மானும் குதுப்-இ-க்ரிபாவும். கிட்டதட்ட, மூன்று மணிநேர படத்தின் அலுப்பை வெகுவாக குறைத்திருக்கிறது அவர்களின் பின்னணி இசை! பாடல்கள் படமாக்கப்பட்டவிதமும் சிறப்பு! பாடல்கள் இடம்பெற்ற இடம்தான் பெரும் இடைஞ்சல்.



முருகதாஸின் படங்களில் டெக்னிக்கல் டீம் எப்போதும் மிரட்டும்! `சர்காரி'லும் `செம்ம' சொல்லவைக்கின்றது அவரின் குழு! `அங்கமாலி டைரீஸி'ன் கிரிஷ் கங்காதரன்தான் ஒளிப்பதிவு. தனக்குப்பிடித்த மஞ்சள் டோனில் மொத்த பரபரப்பையும் நமக்கு கடத்துகிறார்! தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு ஸ்மார்ட்டான திறமையான ஒளிப்பதிவாளர் என்ட்ரி கொடுத்ததில் மகிழ்ச்சிசாரே! கேமராக்கண்கள் கேரளம் என்றால் சண்டையமைப்பு அக்கட தேசத்தில் அதிரடிக்கும் ராம் - லக்ஷ்மண் இணை. ஒவ்வொரு அடியும் தட் தட்டென நம் உடலே அதிர அதிர விழுகிறது! சினிமாத்தனத்தை கொஞ்சம் குறைத்திருந்தால் வெறித்தனம் இன்னும் கூடியிருக்கும். ஒரு பக்கம் ஹைடெக் கார்ப்பரேட் மான்ஸ்டரின் ஸ்டைலிஷ் உலகம் இன்னொருபக்கம் வெள்ளையும் அழுக்குமான அரசியல் உலகம். இரண்டையுமே சிறப்பாக பேலன்ஸ் செய்து கண்முன் காட்டுகிறார் கலை இயக்குநர் டி.சந்தானம்!

'நறுக்' எடிட்டிங் முருகதாஸ் படங்களின் பலம்! ஆனால் சர்காரின் நீளம் ஸ்ரீகர் பிரசாத்தின் சிசர்கள் இன்னும் சிறப்பாக வெட்டியிருக்கலாமோ என நினைக்க வைக்கிறது! 'இங்கே பிரச்னைக்கு தீர்வு தேவை இல்ல, இன்னொரு பிரச்னைதான் தேவை... ', 'கடல்ல அஸ்தியை கரைப்பாங்க... நான் என் மீனவ அப்பாவை கரைச்சேன்' போன்ற வசனங்கள் செம ஷார்ப்! வசனத்தில் ஜெயிக்கும் முருகதாஸும் ஜெயமோகனும் திரைக்கதையில் லாஜிக்கிடம் தோற்றிருக்கிறார்கள்.

முதல்பாதியில் காட்சியமைப்புகளை நம்பாமல் சண்டைகளையே அதிகம் நம்பியது போல இருக்கிறது! இந்த இயக்குநர் - ஹீரோ காம்போவிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இண்டர்வெல் பிளாக்கும் அதைநோக்கிய திரைக்கதையும் வீக்காக இருக்கின்றன! இரண்டாம் பாதியில் வரலக்ஷ்மியுடன் விஜய் ஆடும் பரமபத விளையாட்டு செம சூடு! ஆனால், அதுவே வரலட்சுமியை முன்னாலேயே கதையில் கொண்டு வந்திருக்கலாமே என கேட்க வைக்கிறது! ஒரு அரசியல் படத்தை அரசியல் பாடமாக மாற்ற நினைத்ததில் அத்தனை செயற்கைத் தனங்கள் துருத்திக்கொண்டு நிற்கின்றன.



நடப்பு அரசியலோடு படத்தை வெகுவாக கனெக்ட் செய்வதில் வெற்றி பெறுகிறார் இயக்குநர். முழங்கை ஸ்லீவ் - 'பாப்பா' அடைமொழியோடு வரலஷ்மி, அரசியலில் கோலோச்சும் இரட்டையர்கள், எதிர்த்து கேள்வி கேட்டால் கலவரத்தை தூண்டிவிட்டு வேண்டாதவர்களை போட்டுத்தள்ளுவது, சாமானிய சமூக ஆர்வலர்களைக்கொண்ட மாற்று இயக்கம், அரசியல்வாதிகளின் முகங்களை எல்லா இடங்களிலும் பதிப்பதற்கு பின்னாலுள்ள பிராண்டிங் என பல விஷயங்களை பேசியிருப்பது தைரியம்தான்! தமிழக ரசிகர்களால் நிச்சயம் பொருத்திப்பார்த்துக்கொள்ள முடியும். சில இடங்களில் பிரசார நெடி அதிகமாக இருக்கிறது! இரண்டாம் பாதியின் முக்கால்வாசி காட்சிகள், விஜய் ஆரம்பிக்கப்போகும் கட்சியின் கொள்கை அறிக்கையை விஷுவலாய் பார்த்தது போன்ற ஃபீல். விஜய் ஆரம்பிக்கும் கட்சின்னு கற்பனையா சொல்றோம், கற்பனையா..!

சில இடங்களில் நமக்குள் எழும் கேள்விகளுக்கு ஹீரோ வழியாகவே பதில் சொல்லியிருப்பது புத்திசாலித்தனம்! ஆனால் அதைத்தாண்டியும் லாஜிக் இடறல்கள் இல்லாமலில்லை. சூழ்ச்சி எனத்தெரிந்த பின்னும் அவ்வளவு புத்திசாலியான வரலக்ஷ்மி ஒரு இடத்தில் தலையைக்கொடுப்பது ஏன்? மத்திய அரசைப்பற்றி ஒரு குட்டி வசனம்கூட இல்லை... மாநிலத்தையே குழப்பத்தில் தள்ளும் அரசியல் விளையாட்டில் மத்திய அரசின் பங்கு கொஞ்சம்கூட இருக்காதா என்ன? இவை எல்லாம் படம்பார்க்கும்போதே தோன்றுவதால் படத்தோடு ஒன்றிப்போவது கொஞ்சம் குறைகிறது! விஜய்யின் `கார்ப்பரேட் கிரிமினல்' எனும் அடைமொழிக்கு திரைக்கதையில் கொஞ்சம் கூட நியாயம் சேர்க்காதது பெரும் ஏமாற்றம். அந்த ஒற்றை வார்த்தையை வைத்துக்கொன்டு திரைக்கதையில் எப்படியெல்லாம் விளையாடியிருக்கலாம், மொத்தமாய் தவறவிட்டு வழக்கமான, பழக்கமான ஒரு திரைக்கதையையே தந்திருக்கிறார் முருகதாஸ்.

எம்.ஜி.ஆருக்கு அவரின் அரசியல் பயணத்தை நாடோடி மன்னன் தீர்மானித்தது; ரஜினி தன் அரசியல் நிலைப்பாட்டை சொல்லும் விதமாக முத்துவின் வசனங்கள் அமைந்தன. சர்கார் விஜயின் அரசியல் கிராஃபுக்கு எந்தளவுக்கு உதவும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

மொத்தத்தில், லாஜிக் மீறல்கள் தூக்கலாகவும் சுவாரஸ்யங்கள் குறைவாகவும் இருந்தாலும் படம் பார்க்கும் சாமானியனை பல இடங்களில் கனெக்ட் செய்யும்விதத்திலும் ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் சொன்னவிதத்திலும் `சர்கார்' மெஜாரிட்டிக்கு அருகில் வருகிறது!




தடுத்து நிறுத்திய சிவாஜி!

Published : 02 Nov 2018 11:27 IST
 


பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக ஜொலிக்க முடியும் என்பதுதான் 40-களின் தமிழ் சினிமாவில் நியதியாக இருந்தது. அதை உடைத்தெறிந்து, வசன உச்சரிப்பாலும், தன்னுடைய உடல்மொழி சார்ந்த நடிப்புத் திறத்தினாலும் விதவிதமான கதாபாத்திர பரிணாமங்களாலும், மக்களைத் தன்வசம் இழுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

“தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு பிறந்தது. ஆனால் அவருடைய துரதிர்ஷ்டம் அவர் அமரிக்காவில் பிறக்காதது” என்றார் ஏவி.மெய்யப்ப செட்டியார். அப்படிப்பட்ட ஒரு கலைஞரோடு பழகும் அரிய வாய்ப்பைப் பெற்றது எனது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனைச் சந்தித்தேன். அப்போது அவர், “ நான் சிவாஜிக்காக ‘மிருதங்கச் சக்கரவர்த்தி’ படத்தில் மிருதங்கம் வாசித்தேன். அந்தப் படம் வெளியான பிறகு, ‘சில இடங்களில் சிவாஜி அளவுக்கு உங்கள் வாசிப்பு இல்லை’ என்று பலர் என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என்றார். எந்த அளவுக்குச் சிறப்பான நடிப்பைச் சிவாஜி வெளிப்படுத்தியிருந்தால், புகழ்பெற்ற தொழில்முறை வித்வானின் இயல்பான வாசிப்பைக்கூட இப்படி விமர்சிக்கத் தோன்றியிருக்கும்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி நடிகர் திலகம் சிவாஜி 1988-ம் ஆண்டு தனிக் கட்சி தொடங்கினார். ‘தமிழக முன்னேற்ற முன்னணி’ என்ற அந்தக் கட்சியின் தலைமை அலுவலகப் பொறுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அவருடைய நேரம் தவறாமை எனும் உயர்ந்த பண்பு, அரசியலிலும் தொடர்ந்தது. பொதுவாக எந்தக் கட்சிப் பொதுக் கூட்டம் என்றாலும் மாலை 6 மணி என்று அழைப்பிதழில் போட்டிருந்தால், 7.30-க்குத்தான் தொடங்கும். முக்கியத் தலைவர்கள் 8 மணிக்கு மேல்தான் வருவார்கள். சிவாஜியோ கூட்டம் மாலை 6 மணி என்று போட்டிருந்தால் துல்லியமாகக் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மேடையில் இருப்பார். “ கட்சி மீட்டிங்கை சீக்கிரம் நடத்தி முடித்தால்தானே கூட்டத்துக்கு வருபவர்கள் சீக்கிரம் வீடு போய்ச்சேர முடியும்’’ என்பார்.

படப்பிடிப்பின்போது சிவாஜியைக் கூர்ந்து கவனித்திருக்கிறேன். படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருப்பார். ஆம்... பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தெரியும். அருகில் உதவியாளர் அடுத்த காட்சிக்கான வசனங்களைப் படித்துக் காண்பித்துக் கொண்டிருப்பார்; அப்போது இயக்குநர் ‘டேக் ரெடி’ என்று கூறியவுடன், சிங்கம் போல எழுந்துவந்து, காட்சியை ஒரே டேக்கில் நடித்துக் கொடுப்பார். நான் சொல்லும் இச்சம்பவங்கள் நடைபெறும்போது சிவாஜி 60 வயதில் இருந்தார்.

கட்சி அலுவலகத்துக்குச் சில ரசிகர்கள் தினந்தோறும் வருவார்கள். அப்போது ஒன்றிரண்டு பேரைத் தினமும் கட்சி அலுவலகத்தில் பார்த்த சிவாஜி, அவர்களைக் கூப்பிட்டு, “ஏதும் வேலை பார்க்கவில்லையா?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “இன்று விடுமுறை தலைவரே, அது இது” என்று மழுப்பினார்கள்.

அவர்களிடம், “என்னுடைய ரசிகர்கள் யாரும் தங்கள் வேலையை விட்டுவிட்டு, ரசிகர் மன்றப் பணியோ கட்சிப் பணியோ செய்ய வரக் கூடாது” என்று கண்டிப்புடன் கூறினார். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள் சீருடையுடன் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், “தொழிலைக் கவனிக்காமல், இங்கு என்ன வேலை ” என்று அக்கறையுடன் துரத்துவார்.

ஒரு சமயம் சென்னை, சூளைப் பகுதியில், கட்சிப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. ‘சிவாஜி’ கிருஷ்ணமூர்த்தி என்ற பேச்சாளர் காங்கிரசையும் அதன் தலைவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசிக்கொண்டிருந்தார். இரண்டு நிமிடம்தான் பேச்சைக் கேட்டார், சிவாஜியின் முகம் வீரபாண்டிய கட்டபொம்மனைப் போலக் கோபத்தில் சிவந்தது. அவசரமாக எழுந்து சென்று அந்தப் பேச்சாளரின் சட்டையைப் பிடித்து இழுத்துத் தொடர்ந்து பேசாதபடி தடுத்து உட்கார வைத்துவிட்டார்.

தொகுப்பு: கே. சந்திரசேகரன்,

தலைவர் - நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப் பேரவை
திரை வெளிச்சம்: கத்தி போச்சு சர்கார் வந்தது

Published : 02 Nov 2018 11:28 IST

செல்லப்பா

 

தமிழ்த் திரையுலகில் கதைக் கையாடல் என்பது தொன்றுதொட்டு இருந்துவருகிறது. ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தின் கதை தமது என்று கூறிப் பத்துப் பேர் வந்ததாகவும், ‘பத்துப் பேருக்குத் தோன்றிய கரு தனக்குத் தோன்றியிருக்காதா’ என்று இயக்குநர் ஸ்ரீதர் கூறியதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

இயக்குநர் பாரதிராஜாவின் ‘முதல் மரியாதை’ படத்தில் கி.ராஜநாராயணின் ‘கோபல்லபுரம் கிராமம்’ நாவலின் சில சம்பவங்கள் இடம்பெற்றிருந்த விவகாரம் பலரறிந்தது. கே.பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் கதை தன்னுடையது என என்.ஆர்.தாசன் என்பவர் வழக்குப் போட்டு வெற்றிபெற்றதாகத் தெரிகிறது.

பிரபல ஹாலிவுட் படமான சைக்கோவைத் தழுவியே பாலுமகேந்திரா ‘மூடுபனி’ படத்தை எடுத்தார் என்போர் உண்டு. இயக்குநர் மணிரத்னத்தின் ‘நாயகன்’ கதை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.

‘கறுப்புப்பணம்’ என்ற படமே ‘ஜென்டில் மேன்’ ஆனதும், ‘நாம் பிறந்த மண்’, ‘இந்தியன்’ ஆனதும் இயக்குநர் ஷங்கரின் திறமைக்குச் சான்றுகள். நடிகர் கமல்ஹாசனின் கதை சாமர்த்தியம் குறித்து ‘ஹே ராம்’ என்று சொல்லத்தக்க அளவில் பதிவுகள் காணக் கிடைக்கின்றன.

அட்லி, விஜய் போன்ற சமகால இயக்குநர்கள் எவ்வளவு திறமையாகக் கதைகளைத் தேடி உருவாக்குவார்கள் என்பதை விவரிக்கவே தேவையில்லை. ஆக, காலங்காலமாக நிகழ்ந்துவரும் பண்பாட்டு நிகழ்வுபோல் இந்தக் கதை விவகாரம் தொடர்ந்துவருகிறது. பெரிய நடிகர், அதிக பட்ஜெட் எனும்போது அதற்கு ஊடக வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கிறது.

செங்கோலும் சர்காரும்

அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸின் ‘சர்கார்’ படக் கதை தொடர்பாகவும் இதே போன்று பேச்சு எழுந்தது. தொடர்ந்து வெற்றிப் படங்களையே தருவதால் இயக்குநர் முருகதாஸ் படம் ஒன்றைத் தொடங்கினாலே யாருடைய கதையை அவர் படமாக்குகிறார் என்பதிலேயே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பட்ட காலிலே படும் என்பதுபோல், முருகதாஸுக்கும் நிகழ்கிறது. அவரது ‘ரமணா’ தொடங்கி ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘கத்தி’ எனத் தொடர்ந்து இப்போது ‘சர்கார்’ வரை அவரைப் போன்றே ஒத்த சிந்தனையுடன் பலரும் யோசித்துக் கதைகளை எழுதியிருக்கிறார்கள். இதில் முத்தாய்ப்பு கிறிஸ்டோபர் நோலன்தான்.

‘சர்கார்’ பட முன்னோட்டக் காட்சிகள் வெளியானதும் அதைப் பார்த்த வருண் ராஜேந்திரன் என்னும் உதவி இயக்குநர், தான் 2007-ம் ஆண்டில் பதிவுசெய்திருந்த தனது ‘செங்கோல்’ கதையைப் போலவே அதுவும் இருந்ததும் பதறிப்போயுள்ளார்.

வருண் உடனடியாகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார். அதன் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ், விசாரித்து அறிந்ததில் வருண் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்ததால், முருகதாஸை அழைத்து விசாரித்திருக்கிறார். ஆனால், முருகதாஸ் ‘சர்கார்’ தனது கதைதான் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

எந்தச் சமரசத்துக்கும் தயாரில்லை என்றும் மீதியை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து வெளியேறியிருக்கிறார். வேறுவழியற்ற சூழலில் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துபேசி எடுத்த முடிவின்படி, வருணின் கதைக்கும் முருகதாஸின் கதைக்கும் இடையே ஒத்த சாராம்சம் இருப்பதை ஒத்துக்கொண்டு அவருக்குத் தங்களால் உதவ இயலவில்லை என்பதற்காக வருத்தமும் தெரிவித்துக் கடிதம் ஒன்றை வருணிடம் கொடுத்துவிட்டார்.

அந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானவுடன் விஷயம் எல்லாத் திக்கிலும் பரவிவிட்டது. சமூக வலைத்தளங்களில் முருகதாஸ் கடுங்கேலிக்கு ஆளானார். தன் கதைதான் ‘சர்கார்’ என்பதை முருகதாஸே மறந்துவிடக்கூடிய அளவுக்கு நிலைமை முற்றியது.

ஜெயமோகனும் சர்காரும்

ஆனாலும், விடாப்பிடியாக நின்ற முருகதாஸ் தன் கதைதான் ‘சர்கார்’ எனச் சாதித்தார். தனது முழுக்கதையை பாக்யராஜ் படித்துப் பார்க்காமல், ஒருதலைப் பட்சமாகத் தனக்குத் தண்டனை அளித்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து பாக்யராஜும் தன் தரப்பின் நியாயத்தைத் தெரிவித்து ஊடகங்களில் பேசினார். இதனிடையே ‘சர்கார்’ படத்தில் பணியாற்றும் எழுத்தாளர் ஜெயமோகனும் இது முருகதாஸின் கதைதான் என்றும் தானும் முருகதாஸும் அவருடைய உதவியாளர்களும் கடுமையாக உழைத்து உருவாக்கிய கதை இது என்றும் எதற்கும் அஞ்சாமல் தனது இணையதளத்தில் எழுதினார்.

ஆனால், புரியாத புதிராக அடுத்த நாளே நீதிமன்றத்தில் வருண், ஏ.ஆர்.முருகதாஸ் இடையே சமரசம் ஏற்பட்டது. தன்னைப் போலவே சிந்தித்த வருணின் சிந்தனைக்கு மதிப்புக் கொடுக்கத் தயாரானார் முருகதாஸ். படத்தின் டைட்டில் கார்டில் வருணை அங்கீகரித்து நன்றி தெரிவிப்பதாகக் கூறிய முருகதாஸ், ‘சர்கார்’ தனது கதை தான் என்பதை மட்டும் மீண்டும் வலியுறுத்தினார். சமரசத்துக்குப்பின் ஊடகங்களில் கருத்துத் தெரிவித்த வருண், ‘விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தனது தீபாவளிப் பரிசே சர்கார்’ என்பதையும் தெரிவித்து முடித்தார்.

‘சர்கார்’ கதை சர்ச்சையைப் பொறுத்த விஷயத்தில், எழுத்தாளர் சங்கத்தின் தலைவரான பாக்யராஜ் நியாயமாகவும் துணிச்சலாகவும் நடந்துகொண்டார் எனப் பலதரப்பிலிருந்தும் பாராட்டுக் கிடைத்தது. அதே நேரத்தில் ஜெயமோகன் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கிண்டலடிக்கப்பட்டார்.

தனது இணையதளத்தில் படத்தின் தலைப்பைக்கூட சர்க்கார் என்று பிழையாகக் குறிப்பிட்டிருந்த அவர், வருணுக்கு அங்கீகாரம் கிடைத்ததற்குப் பின்னர், அதைக் கேரளத்தின் நோக்குக்கூலிக்கு ஒப்பிட்டு எழுதிய தன்மை பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பங்கேற்ற இயக்குநர் பிரவீன் காந்தி, ஜெயமோகன் இந்தச் சொல்லை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அடுத்த நாள் தனது வாக்கியத்தைச் சற்றே மாற்றிய ஜெயமோகன் நோக்குக்கூலி என்பதையும் எடுத்துவிட்டார்.

ஜெயமோகனின் இப்படியான போக்கு பலருக்கும் பேரிடியாக இருந்தது. திரைத் துறையைப் பொறுத்தவரை ஜெயமோகன் சாதாரண மனிதர். ஒரு எழுத்தாளர் என்ற அளவில் அவருடைய எந்தச் சொல்லுக்கும் அங்கே பெரிய மதிப்பிருக்காது. அதை உணர்ந்ததால்தான் அவர் இந்த விஷயத்தில் ஏ.ஆர்.முருகதாஸின் தரப்புக்கு ஆதரவாகவே நின்று அவரை வலுப்படுத்துவதில் தன் பலத்தை வெளிப்படுத்தி இருக்கக்கூடும் என்கிறார்கள் திரைத் துறையையும் இலக்கியத்தையும் அறிந்தவர்கள்.

இனி வரும் காலத்தில் எழுத்தாளர்களுக்குக் கொடுமை நிகழாவண்ணம் தடுப்பதற்காகத் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் தனது விதிகளை மாற்றியமைக்கும் என்றும் எழுத்தாளர்களுக்கு நியாயம் கிடைக்க சங்கம் துணை நிற்கும் என்றும் பாக்யராஜ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

படமெடுக்கத் தொடங்குவதற்கு முன்பாகவே கதை தொடர்பாகத் தடையில்லாச் சான்றிதழ் பெறுவது பயன் தரும் என்றும் பலர் தெரிவித்திருக்கிறார்கள். எவ்வளவோ முதல் போட்டுப் படமெடுக்கும் திரைப்பட உலகினர், உதவி இயக்குநர்களின் கதையை அவர்களிடம் அனுமதி பெற்றுப் படமாக்கினால், இதைப் போன்ற சிக்கல்களைத் தவிர்க்கலாம் என்று ஆலோசனைகள் கூறப்படுகின்றன. சமூகத்துக்கு நல்ல கருத்துகளைச் சொல்வதில் ஆர்வம் காட்டும் திரைத்துறையினர், அதைக் கடைப்பிடிப்பதிலும் ஆர்வம் காட்டுவது நல்லது என்கிறார்கள் விஷயமறிந்தோர்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...