Saturday, November 24, 2018

தற்காப்புக்காக எதிரியைத் தாக்கி அது மரணத்தில் முடிந்தால் அது கொலைக் குற்றமாகாது: 27 ஆண்டுகால வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Published : 23 Nov 2018 20:13 IST

கிருஷ்ணதாஸ் ராஜகோபால்





தற்காப்புக்கான உரிமை சமூக நோக்கத்துடன் கூடிய மிக மதிப்புமிக்க உரிமை என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றின் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதாவது தன் உயிரைக் காத்துக்கொள்ள எதிரி மீது அளவுக்கதிகமாக தாக்குதல் நடத்தி அதனால் உயிரிழப்பு ஏற்பட்டால் அது தற்காப்பாளரை கொலைகாரர் ஆக்காது மாறாக மரணம் சம்பவிக்கக் காரணமான குற்றம் என்றுதான் எடுத்துக் கொள்ள முடியும் என்று 1991ம் ஆண்டு வழக்கு ஒன்றில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்
 

மேலும் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்கான உரிமை என்பது சமூக நோக்கத்துக்குரிய ஒரு மிக மதிப்புடைய உரிமை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

என்.வி.ரமணா மற்றும் மோகன் எம். சந்தானகவுடர் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு 1991 வழக்கு தொடர்பாக இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

கொலைச் சம்பவத்தில் தற்காப்பு என்பது சட்டப்பிரிவு 300-ல் விதிவிலக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிரி ஒருவரின் உடனடியான அச்சுறுத்தலுக்கு பழிவாங்கும் செயலாகச் செய்யும் போது அது குற்றமே. இங்கு தற்காப்பு என்பது எடுபடாது.

1991 வழக்கு என்ன?

பஞ்சாப் மாநிலத்தின் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த இருவர் தொடர்பான ரூ.100 கடன் பாக்கி விவகாரத்தில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜங்கீர் சிங் இவர் தன் சக ஊர்க்காவல்படையைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொண்றார். ஜஸ்வந்த் சிங்கிடம் ரூ.100 கடன் வாங்கியுள்ளார் ஜங்கீர் சிங், இதனை ஜஸ்வந்த் சிங் அனைவர் முன்னிலையிலும் தன்னிடம் திருப்பிக் கேட்டார் என்று இருவருக்கும் இடையே தகராறு நீண்டுள்ளது, தகராறின் முடிவில் ரூ.100க்காக ஜஸ்வந்த் சிங்கை ஜங்கீர் சிங் சுட்டுக் கொலை செய்துள்ளார். நேரில் பார்த்த சாட்சியங்கள் யார் முதலில் துப்பாக்கி விசையை அழுத்துவார் என்ற விவகாரம் இது என்று தெரிவித்தனர். அதாவது இருவரும் ஒருவரையொருவர் குறிவைத்துக் கொண்டிருந்தனர் என்றனர். ஆனால் ஜங்கீர் சிங் விசையை அழுத்த அது ஜஸ்வந்த் சிங் மார்பில் பாய்ந்து மரணம் சம்பவித்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பான 1993 விசாரணை நீதிமன்ற தீர்ப்பு ஜங்கீர் சிங் தற்காப்புக்காகவே ஜஸ்வந்த் சிங்கைச் சுட்டார் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் ஜங்கிர் சிங் கொலையாளி என்று தீர்ப்பளித்தது. ஆயுதங்கள் சட்டத்தைப் பயன்படுத்தி ஜங்கீர் கொலைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது, ஜங்கீர் சிங் தற்காப்புக்காகச் சுட்டதாக வகைப்படுத்தலாம், ஆனால் நண்பரை, சகக்காவலரை மார்பில் சுட்டது மூலம் அளவுக்கதிகமாக தீங்கிழைத்தார், “குற்றவாளி முக்கிய உறுப்பை நோக்கி சுட்டிருக்கக் கூடாது” என்று கூறி ஜங்கீர் சிங்கை உடனடியாக விடுதலை செய்யுமாறு தீர்ப்பளித்தனர், இந்த வழக்கில் ஜங்கீர் சிங் ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்தார். மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கான தண்டனைக்காலம் 10 ஆண்டுகளே.
மெரினா போறீங்களா? ஜாக்கிரதை!

Added : நவ 24, 2018 00:17





மெரினா : மெரினா கடற்கரையோரம் முழுவதும், ஒரு விதமான ரசாயன நுரை பரவி இருந்ததால், சுற்றுலா பயணியர் பெரும்பாலானோர், கடலில் கால் நனைக்க தயங்கினர்.

சென்னை, மெரினா கடற்கரையில், நேற்று மதியம் முதல், அலையிலிருந்து ஒரு விதமான ரசாயன நுரை வெளியேறி, கடற்கரை முழுவதும் பரவி இருந்தது.இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணியர், கடலில் கால் நனைக்காமலும், நீராடாமலும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில் உள்ள பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து, ரசாயன கழிவுகளை சுத்திகரிக்காமல் கடலில் கலக்க விடுகின்றனர்.பெரும் மழை, புயல் காலங்களில், அவை கரைக்கு நுரையாக அடித்து வரப்படுகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், அலட்சியமாக செயல்பட்டு வருவதால், கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன.

இதற்கு முன், இதே போன்று, 2015ம் ஆண்டு கனமழையின் போது, கடற்கரையோரம் முழுவதும் நுரையாக காணப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, மீனவர் சங்க நிர்வாகி, நாஞ்சில் ரவி கூறியதாவது: கடல்நீர் இயல்பாகவே அடர்த்தி அதிகமானது. மழைக்காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து கழிவுகளுடன் கலந்து, மழைநீரும் கடலில் சேர்கிறது.அப்போது, ஆக்சிஜன் அளவு குறையும். இச்சமயத்தில், கடலில் ஏற்படும் வேதி மாற்றங்களால், நுரை ஏற்படுவது வழக்கம்.இது, வழக்கமான ஒன்று தான். இந்த நிலை, ஓரிரு நாட்களில் மாறிவிடும். இதுகுறித்து, மக்கள் அச்சமடைய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.

பி.எஸ்சி., நர்சிங் படிப்பு விண்ணப்பிக்க வாய்ப்பு

Added : நவ 24, 2018 00:29

சென்னை : 'தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ள, பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு, 11 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 900 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், புதியதாக விண்ணப்பிக்கலாம் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர், செல்வராஜன் வெளியிட்ட செய்தி குறிப்பு: பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு இதுவரை விண்ணப்பிக்காத, தகுதி வாய்ந்தோர், www.tnhealth.org, www.tnmedicalselection.net என்ற இணையளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன், 29ம் தேதி, சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடக்கும் கவுன்சிலிங்கில், நேரடியாக பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


நடுவானில் விமான பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய வம்சாவளிக்கு சிறை

சிங்கப்பூர்:

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பரஞ்சபி நிரஞ்சன் ஜெயந்த் (வயது 34). இவர் இந்திய வம்சாவளி ஆவார். கடந்த ஆகஸ்டு மாதம் இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 'ஸ்கூட்' நிறுவன விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பறந்து வந்துகொண்டிருந்தது.

அந்த விமானத்தில் பயணிகளை கவனிக்கும் பணியில், 25 வயதான விமான பெண் ஊழியர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அவரை ஜெயந்த் சில முறை அணுகி "நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்" என்று கூறி, அவரது செல்போன் எண்ணை தருமாறு கேட்டு தொல்லை செய்தார். ஆனால் அந்தப் பெண் ஊழியர் அதை கண்டுகொள்ளவில்லை. அந்த விமானம் சிங்கப்பூரில் தரை இறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, ஜெயந்த் அந்தப் பெண் ஊழியரை அணுகி அவரது இடதுபுற இடுப்பை வருடி சில்மிஷம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஊழியர், தனது அதிகாரியிடம் கூறி உஷார்படுத்தினார். மேலும், சிங்கப்பூர் சாங்கி விமான நிலைய முனைய போலீசில் புகார் செய்தார்.

சிங்கப்பூரில் விமானம் தரை இறங்கியபோது ஜெயந்த் கைது செய்யப்பட்டார். அவர் மீது சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் நீதிபதியிடம் தான் குடிபோதையில் அந்தப் பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒப்புக்கொண்டார். தவறுக்காக மனம் வருந்துவதாகவும் கூறினார். தனக்கு கருணை காட்டுமாறு வேண்டிக்கொண்டார். அதையடுத்து அவருக்கு 3 வாரம் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி லிம் சி ஹாவ் தீர்ப்பு வழங்கினார்.
Dailyhunt

Chennai: Inspector asked to pay Rs 50,000 as compensation

DECCAN CHRONICLE.

PublishedNov 24, 2018, 2:07 am IST

On February 28, 2002 Muthuraj, Inspector, Selvapuram police Station, Coimbatore attacked him and abused him for no reason.


The State Human Rights Commission directed the then inspector in Coimbatore district to pay a compensation of Rs 50,000 to an engineer for harassing and assaulting him 16 years ago.

Chennai: The State Human Rights Commission directed the then inspector in Coimbatore district to pay a compensation of Rs 50,000 to an engineer for harassing and assaulting him 16 years ago.

In the complaint, engineer T.Venkateswaran of Erode, submitted that he had pledged some pure gold ornaments belonging to his family to Rengasamy, proprietor of Lakshmi Gold Bankers, Coimbatore. After repayment of the entire loan amount and interest, he requested Rengasamy to return gold ornaments to him who failed to return them.

On February 28, 2002 Muthuraj, Inspector, Selvapuram police Station, Coimbatore attacked him and abused him for no reason. Later, he came to know that Muthuraj had attacked him based on instigation by Rengasamy and   others. On his complaint a case was registered against Muthuraj under Section 409, 420, 323 and 109 IPC. The petitioner said the Inspector violated his human rights and sought of the Commission appropriate action against him.

In his reply, Muthuraj stated that the complaint was false, frivolous and vexatious one. Venkateswaran lodged a false complaint against him in order to harass him and defame him. The complaint was liable to be dismissed.

SHRC Judge, D Jayachandran said Venkateswaran suffered humiliation at the hands of Muthuraj, which amounted to violation of his rights, personal, liberty and dignity. Hence, he is entitled to get compensation for causing him mental agony. The judge directed Muthuraj to pay him a compensation of Rs 50,000.
Why was the meat destroyed: Activist

DECCAN CHRONICLE.

PublishedNov 24, 2018, 4:44 am IST

The meatseized is pale as against pinkish red colour of goat meat.

Other characteristics of goat meat include straight, longer legs, shorter tails, heavier flesh, heavily visible fat content, heavier under belly, which are contrary to what have been seized on Friday. 

Chennai: A. Arun Prasanna of PFCI told Deccan Chronicle, “Now starts a long legal battle. We hope justice prevails.” Referring to the ambiguity in the whole episode, he pointed out,” Why has the corporation destroyed the meat when the investigation is still on? And the disposal was not done scientifically.”

“Consigner did not have any sender or receiver details. It had only one Ganesh mentioned on it. And the meat did not have the mandatory stamp of pre & post check by a Vet at a slaughterhouse, which only confirms the suspicion that it's some illegal meat - meat not certified by the FSSAI. “

Pointing to the doubts raised by the seizure, the animal enthusiast explains, “To begin with, when it is said to be goat meat, why was it writtenas fish meat? The meatseized is pale as against pinkish red colour of goat meat. Other characteristics of goat meat include straight, longer legs, shorter tails, heavier flesh, heavily visible fat content, heavier under belly, which are contrary to what have been seized on Friday. And the head and the dandelion of a goat is a delicacy in Tamil Nadu whereas the seized meat had them cut off.”

“The seizure happened on Friday. What took the RPF four days to file the FIR? There must be some vicious meat mafia behind the entire incident. Had the seizure not happened, illegal meat would have landed on the commonpeople's plate. In the first place, just one sample out of 2,100 kg of meat is just not enough to reach a conclusion, says Arun.

NEWS TODAY 14.07.2026