- செப் 28 (ச) மகாளய அமாவாசை
- செப் 29 (ஞா) நவராத்திரி ஆரம்பம்
- அக்., 02 (பு) காந்தி ஜெயந்தி
- அக்., 02 (பு) தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 111வது பிறந்தநாள்
- அக்., 07 (தி) சரஸ்வதி பூஜை
- அக்., 08 (செ) விஜயதசமி
Saturday, September 21, 2019
உங்களுக்குத் தெரியுமா..? தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி தோற்றமும் வளர்ச்சியும்!
By DIN | Published on : 20th September 2019 03:32 PM |

தமிழர்களுக்கென்று சிறப்பான நாகரீகம் உண்டு என்பதை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுப்பதற்கில்லை. தமிழ் நாகரீகம் எந்த அளவு பரவியிருந்தது என்பதற்கும், அதன் சிறப்புக்கும் சங்ககால இலக்கியங்களே சாட்சி. நாகரீகம் வளர்ந்த சமுதாயத்தில் உடல் நலனை பாதுகாக்க பல்வேறு அம்சங்கள் இருப்பதைப் போலவே, மருத்துவ முறையும் இயற்கையாகவே இருக்க வேண்டும். எனினும், இருக்கும் ஆதாரங்கள் வைத்து பார்த்தால் தமிழகத்தில் சிறந்த மருத்துவ முறை இருந்ததை தெரிந்துகொள்ள முடியும். மனிதகுலத்தின் வரலாறு எவ்வளவு பழமையானதோ அதே அளவுக்கு மருத்துவத்தின் வரலாறும் பழமையானதாகும். தமிழ் இலக்கியத்தின் புனித நூலான திருக்குறளில் மருத்துவம் பற்றிய மனித சிந்தனைகள் பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன.
காலப்போக்கில் தமிழக மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் எனப் பெயர் வந்தது. இந்த மருத்துவத்தை சித்தர்கள் செய்ததால் அதற்கு அவ்வாறு பெயர் வந்தது. சமண மதத்தவர்கள் தமிழகம் வந்தபிறகு தமிழக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவக் கல்வியை குறிப்பாக சித்த மருத்துவக் கல்வியை பரப்புவதில் ஆர்வமாக இருந்ததால், தமிழகத்தில் மருத்துவம் பரவியது.
இந்தியா முழுவதும் சித்தர்கள் பரவியிருந்தாலும் அவர்களின் மருத்துவ நூல்கள் தமிழ் மொழியில் மட்டும்தான் எழுதப்பட்டிருந்தன. எனவே, சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்றும் அழைக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவக்கல்வி வரலாறு: கிபி 900 - 1200 ஆண்டு சோழர்கால கல்வெட்டுகளில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் குறித்த தகவல்களை அறிய முடியும். அவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் நகரில் அமைந்திருக்கும் 1067 ஆண் ஆண்டின் வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடத்தக்கவை. இந்த கல்வெட்டுகளில் மருத்துவக் கல்லூரி, விடுதிகள்ஸ மருத்துவமனை போன்றவற்றை பற்றி விவரங்கள் பெற முடிகிறது.
அந்தக்காலத்தில் திருமுக்கூடல் நகரில், வைத்திய சாலை(அதுல சாலை) என்ற பெயரில் ஏராளமான மருத்துவமனைகள் இருந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 15 படுக்கைகள், ஒரு அறுவை மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு முடி திருந்துபவர் மற்றும் இரு பணியாளர்கள் இருந்துள்ளனர். மருத்துவர்களுக்கு வைத்திய விரித்த அல்லது வைத்யகம் என்ற பெயரில் ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் சவர்னன் என்ற பெயரில் பரம்பரை மருத்துவர் ஒருவரும் இருந்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறிய கிளினிக் இருக்கும் அந்த கிளினிக்கில் இருக்கும் மருத்துவவரை வைத்தியன் என்றும், அறுவைசிகிச்சை மருத்துவரை கள்ளி யாக்கிரயாய் செய்வான் என்று அழைப்பது வழக்கம்.
தமிழகத்தில் அலோபதி என்ற புதிய மருத்துவமுறை ஐரோப்பியர்களால் குறிப்பாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் நோயுற்ற போர்வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காகத்தான் மேலைநாட்டு மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இவை வளர்ச்சியடைந்து அரசு மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவம் அளிக்கும் விரிவான மருத்துவ முறையாக மாற்றம் பெற்றது.
சென்னை: சென்னையில் முதல் மருத்துவமனை 1664 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ கோகன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடங்கப்பட்டது. அப்போது அந்த மருத்துவமனைக் கட்டிடத்திற்கு மாத வாடகையாக அப்போதைய நாணயமான 2 பகோடாக்கள் தரப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் மருத்துவமனை தொடங்கப்பட்ட நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றது. அதன்பின்னர் இங்கிலாந்து போர் வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 1679 ஆம் ஆண்டு சென்னையில் ராணுவ மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1745 ஆம் ஆண்டு சென்னையில் கடற்படை மருத்துவமனை தொடங்கப்பட்டு 1790 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. அதுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்கள், அதன்பிறகு காரிசான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1808 ஆம் ஆண்டு புதிய கடற்படை மருத்துவமனை கட்டப்பட்டது. இது 1831 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன்பின்னர் துப்பாக்கி ஊர்தி மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
1816 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னையில் வெளியடப்பட்ட பொது அறிவிப்பின் மூலம், சென்னையில் 983 பகோடா செலவில் தொழு நோயாளிகளுக்கான தனி மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த மருத்துவமனை சென்னை அரசு தொழுநோய் மருத்துவமனை என பெயமாற்றம் செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு வெலிங்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அதற்குபதிலாக செங்கல்பட்டில் வெலிங்டன் தொழுநோய் மருத்துவமனை என்ற பெயரில் புதிய மருத்துவமனை கிற்ஸ்துவ அறக்கட்டளை மூலமாக தொடங்கப்பட்டது. 1819 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்தியாவின் மிகப்பழமையான கண்மருத்துவமனை தொடங்கப்பட்டது.
தோற்றமும் வளர்ச்சியும்: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலம் 1835 ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டில் இருந்துதான் கிழக்கிந்திய நிறுவனத்தின் சென்னை மாகாண அரசு மருத்துவக்கல்வியை முறைப்படி அங்கீகராம் அளித்து ஊக்குவிக்கத் தொடங்கியது.
இந்தியாவின் தலைச்சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை மருத்துவக்கல்லூரி 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை மருத்துவப்பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய அரசின் ஆணைப்படி, ஆளுநர் பிரடெரிக் ஆதம் திறந்துவைத்தார். இந்த மருத்துவப் பள்ளியின் முதல் வகுப்பு 1835 ஆண் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. 1838 ஆம் ஆண்டு தனியார் மாணவர்களும் இந்த மருத்துவப் பள்ளியில் சேர அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பள்ளியில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஆண்டுகள் செல்லச் செல்ல ஏராளமான மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினர். இதனால் சென்னை மருத்துவப்பள்ளியின் புகழ் வேகமாக பரவியதால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனமாக மாறியது. மும்பை மற்றும் கொல்கத்தா மருத்துவ பள்ளிகளுக்கு இணையானதாக கருதப்பட்டது. 1850 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை மருத்துவ மருத்துவப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டது.
1851 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநராக இருந்த சர் ஹென்றிபோர்ட் சென்னை பல்கலைக்கழத்தின் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி வழங்கப்பட வேண்டும் வலியுறுத்தினார். இதனிடையே அதாவது 1854 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியை மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான காலணி பள்ளிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என லண்டனில் உள்ள ராயல் காலேஜ் சர்ஜனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை 1855 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1863ல் 1857 ஆம் ஆண்டின் 27வது சட்டத்தின்படி சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப்பட்டங்கள் மற்றும் பட்டயங்ககளை வழங்கும் தனி உரிமை தரப்பட்டது. அதன்படி, மருத்துவக் கல்வியில் பட்டம் பெற விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை நடத்தும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சென்னை அரசு அறிவித்தது.
சென்னைப் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தாலும், 1863 ஆம் ஆண்டில்தான் அதற்கு தேர்வு நடத்தி பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
தேர்வு நடத்தி பட்டம் வங்கும் அதிகாரம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டது. இது மருத்துவக்கல்லூரி வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் சென்னை மருத்துவக்கல்லூரி வேகமாக வளர்ந்து, அனைத்து திசைகளிலும் திறன் பெற்று முழுமையும் தற்சார்ப்பும் பெற்றது.
1857 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பொதுஆணையின்படி சென்னை மருத்துவக்கல்லூரியில் மற்றொரு புதிய வரலாறு படைக்கப்பட்டது. அந்த ஆணையின்படி பால்ஃபர் நகரில் உள்ள தலைமை அறுவை மருத்துவரின் பரிந்துரையை ஏற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் பெண்களை சேர்ப்பது பற்றி வேறு எந்த மருத்துவக் கல்லூரி நினைத்துக் கூட பார்க்காத நிலையில் சென்னைக் கல்லூரி இதை சாதித்து. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் கூட மருத்துவக் கல்லூரிகளில் கூட பெண்கள் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
By DIN | Published on : 20th September 2019 03:32 PM |

தமிழர்களுக்கென்று சிறப்பான நாகரீகம் உண்டு என்பதை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுப்பதற்கில்லை. தமிழ் நாகரீகம் எந்த அளவு பரவியிருந்தது என்பதற்கும், அதன் சிறப்புக்கும் சங்ககால இலக்கியங்களே சாட்சி. நாகரீகம் வளர்ந்த சமுதாயத்தில் உடல் நலனை பாதுகாக்க பல்வேறு அம்சங்கள் இருப்பதைப் போலவே, மருத்துவ முறையும் இயற்கையாகவே இருக்க வேண்டும். எனினும், இருக்கும் ஆதாரங்கள் வைத்து பார்த்தால் தமிழகத்தில் சிறந்த மருத்துவ முறை இருந்ததை தெரிந்துகொள்ள முடியும். மனிதகுலத்தின் வரலாறு எவ்வளவு பழமையானதோ அதே அளவுக்கு மருத்துவத்தின் வரலாறும் பழமையானதாகும். தமிழ் இலக்கியத்தின் புனித நூலான திருக்குறளில் மருத்துவம் பற்றிய மனித சிந்தனைகள் பெருமளவில் இடம் பெற்றிருக்கின்றன.
காலப்போக்கில் தமிழக மருத்துவத்திற்கு சித்த மருத்துவம் எனப் பெயர் வந்தது. இந்த மருத்துவத்தை சித்தர்கள் செய்ததால் அதற்கு அவ்வாறு பெயர் வந்தது. சமண மதத்தவர்கள் தமிழகம் வந்தபிறகு தமிழக மக்களின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவக் கல்வியை குறிப்பாக சித்த மருத்துவக் கல்வியை பரப்புவதில் ஆர்வமாக இருந்ததால், தமிழகத்தில் மருத்துவம் பரவியது.
இந்தியா முழுவதும் சித்தர்கள் பரவியிருந்தாலும் அவர்களின் மருத்துவ நூல்கள் தமிழ் மொழியில் மட்டும்தான் எழுதப்பட்டிருந்தன. எனவே, சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் என்றும் அழைக்கப்பட்டது.
தமிழகத்தில் மருத்துவக்கல்வி வரலாறு: கிபி 900 - 1200 ஆண்டு சோழர்கால கல்வெட்டுகளில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் குறித்த தகவல்களை அறிய முடியும். அவற்றில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமுக்கூடல் நகரில் அமைந்திருக்கும் 1067 ஆண் ஆண்டின் வீர ராஜேந்திர சோழனின் கல்வெட்டு குறிப்பிடத்தக்கவை. இந்த கல்வெட்டுகளில் மருத்துவக் கல்லூரி, விடுதிகள்ஸ மருத்துவமனை போன்றவற்றை பற்றி விவரங்கள் பெற முடிகிறது.
அந்தக்காலத்தில் திருமுக்கூடல் நகரில், வைத்திய சாலை(அதுல சாலை) என்ற பெயரில் ஏராளமான மருத்துவமனைகள் இருந்துள்ளன. இவை ஒவ்வொன்றிலும் 15 படுக்கைகள், ஒரு அறுவை மருத்துவர், இரு செவிலியர்கள், ஒரு முடி திருந்துபவர் மற்றும் இரு பணியாளர்கள் இருந்துள்ளனர். மருத்துவர்களுக்கு வைத்திய விரித்த அல்லது வைத்யகம் என்ற பெயரில் ஊதியம் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும் சவர்னன் என்ற பெயரில் பரம்பரை மருத்துவர் ஒருவரும் இருந்துள்ளார். நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சிறிய கிளினிக் இருக்கும் அந்த கிளினிக்கில் இருக்கும் மருத்துவவரை வைத்தியன் என்றும், அறுவைசிகிச்சை மருத்துவரை கள்ளி யாக்கிரயாய் செய்வான் என்று அழைப்பது வழக்கம்.
தமிழகத்தில் அலோபதி என்ற புதிய மருத்துவமுறை ஐரோப்பியர்களால் குறிப்பாக ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் தொடக்கத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் நோயுற்ற போர்வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காகத்தான் மேலைநாட்டு மருத்துவமனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் இவை வளர்ச்சியடைந்து அரசு மற்றும் பொதுமக்களுக்கு மருத்துவம் அளிக்கும் விரிவான மருத்துவ முறையாக மாற்றம் பெற்றது.
சென்னை: சென்னையில் முதல் மருத்துவமனை 1664 ஆம் ஆண்டு ஆண்ட்ரூ கோகன் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தொடங்கப்பட்டது. அப்போது அந்த மருத்துவமனைக் கட்டிடத்திற்கு மாத வாடகையாக அப்போதைய நாணயமான 2 பகோடாக்கள் தரப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் முதல் மருத்துவமனை தொடங்கப்பட்ட நகரம் என்ற பெருமையை சென்னை பெற்றது. அதன்பின்னர் இங்கிலாந்து போர் வீரர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்காக 1679 ஆம் ஆண்டு சென்னையில் ராணுவ மருத்துவமனை தொடங்கப்பட்டது. 1745 ஆம் ஆண்டு சென்னையில் கடற்படை மருத்துவமனை தொடங்கப்பட்டு 1790 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்து வந்தது. அதுவரை அங்கு சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர்கள், அதன்பிறகு காரிசான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து 1808 ஆம் ஆண்டு புதிய கடற்படை மருத்துவமனை கட்டப்பட்டது. இது 1831 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. அதன்பின்னர் துப்பாக்கி ஊர்தி மருத்துவமனையாக மாற்றப்பட்டது.
1816 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி சென்னையில் வெளியடப்பட்ட பொது அறிவிப்பின் மூலம், சென்னையில் 983 பகோடா செலவில் தொழு நோயாளிகளுக்கான தனி மருத்துவமனை அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் இந்த மருத்துவமனை சென்னை அரசு தொழுநோய் மருத்துவமனை என பெயமாற்றம் செய்யப்பட்டது. 1921 ஆம் ஆண்டு வெலிங்டன் பிரபு ஆட்சிக் காலத்தில் அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அதற்குபதிலாக செங்கல்பட்டில் வெலிங்டன் தொழுநோய் மருத்துவமனை என்ற பெயரில் புதிய மருத்துவமனை கிற்ஸ்துவ அறக்கட்டளை மூலமாக தொடங்கப்பட்டது. 1819 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் இந்தியாவின் மிகப்பழமையான கண்மருத்துவமனை தொடங்கப்பட்டது.
தோற்றமும் வளர்ச்சியும்: தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலம் 1835 ஆம் ஆண்டுதான். அந்த ஆண்டில் இருந்துதான் கிழக்கிந்திய நிறுவனத்தின் சென்னை மாகாண அரசு மருத்துவக்கல்வியை முறைப்படி அங்கீகராம் அளித்து ஊக்குவிக்கத் தொடங்கியது.
இந்தியாவின் தலைச்சிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை மருத்துவக்கல்லூரி 1835 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை மருத்துவப்பள்ளி என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இதனை அப்போதைய அரசின் ஆணைப்படி, ஆளுநர் பிரடெரிக் ஆதம் திறந்துவைத்தார். இந்த மருத்துவப் பள்ளியின் முதல் வகுப்பு 1835 ஆண் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது. 1838 ஆம் ஆண்டு தனியார் மாணவர்களும் இந்த மருத்துவப் பள்ளியில் சேர அனுமதி அளிக்கப்பட்டது. இந்த பள்ளியில் அனைவருக்கும் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது. அதன்பின் ஆண்டுகள் செல்லச் செல்ல ஏராளமான மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படிக்கத்தொடங்கினர். இதனால் சென்னை மருத்துவப்பள்ளியின் புகழ் வேகமாக பரவியதால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்வி நிறுவனமாக மாறியது. மும்பை மற்றும் கொல்கத்தா மருத்துவ பள்ளிகளுக்கு இணையானதாக கருதப்பட்டது. 1850 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை மருத்துவ மருத்துவப் பள்ளி தரம் உயர்த்தப்பட்டு சென்னை மருத்துவ கல்லூரியாக அறிவிக்கப்பட்டது.
1851 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநராக இருந்த சர் ஹென்றிபோர்ட் சென்னை பல்கலைக்கழத்தின் மூலம் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி வழங்கப்பட வேண்டும் வலியுறுத்தினார். இதனிடையே அதாவது 1854 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியை மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவத்திற்கான காலணி பள்ளிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என லண்டனில் உள்ள ராயல் காலேஜ் சர்ஜனுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை 1855 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
1863ல் 1857 ஆம் ஆண்டின் 27வது சட்டத்தின்படி சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்திற்கு மருத்துவப்பட்டங்கள் மற்றும் பட்டயங்ககளை வழங்கும் தனி உரிமை தரப்பட்டது. அதன்படி, மருத்துவக் கல்வியில் பட்டம் பெற விரும்புபவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை நடத்தும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது அவசியம் என்று சென்னை அரசு அறிவித்தது.
சென்னைப் பல்கலைக்கழகம் 1857 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தாலும், 1863 ஆம் ஆண்டில்தான் அதற்கு தேர்வு நடத்தி பட்டம் வழங்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
தேர்வு நடத்தி பட்டம் வங்கும் அதிகாரம் சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் ஏற்படுத்தப்பட்டது. இது மருத்துவக்கல்லூரி வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் சென்னை மருத்துவக்கல்லூரி வேகமாக வளர்ந்து, அனைத்து திசைகளிலும் திறன் பெற்று முழுமையும் தற்சார்ப்பும் பெற்றது.
1857 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட பொதுஆணையின்படி சென்னை மருத்துவக்கல்லூரியில் மற்றொரு புதிய வரலாறு படைக்கப்பட்டது. அந்த ஆணையின்படி பால்ஃபர் நகரில் உள்ள தலைமை அறுவை மருத்துவரின் பரிந்துரையை ஏற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் பெண்களை சேர்ப்பது பற்றி வேறு எந்த மருத்துவக் கல்லூரி நினைத்துக் கூட பார்க்காத நிலையில் சென்னைக் கல்லூரி இதை சாதித்து. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்தில் கூட மருத்துவக் கல்லூரிகளில் கூட பெண்கள் சேர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரியாப் போச்சு! நம்ம சென்னை ஏர்போர்ட்டில் மேற்கூரை ஒழுகுகிறதாம்!!
By ENS | Published on : 20th September 2019 04:06 PM

சென்னை: புதன்கிழமை பெய்த கன மழையின் போது சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. சுமார் 10 ஆண்டுகள் பழமையான சென்னை விமான நிலையக் கட்டடத்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியது. உடனடியாக அதிகாரிகள் அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டனர். நீர் ஒழுகிய இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களை வைத்து மழை நீர் வெளியே சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து விமான நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் கூறுகையில், விமான நிலையத்தின் மேற்கூரை ஒழுகுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அதனை சரி செய்து விடுவோம். இது மிகச் சிறிய விஷயம். உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் மேற்கூரையே பிளந்து கொண்டுவிழும், தற்போது இது ஒழுக வேறுச் செய்கிறது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
By ENS | Published on : 20th September 2019 04:06 PM

சென்னை: புதன்கிழமை பெய்த கன மழையின் போது சென்னை விமான நிலையத்தின் மேற்கூரையில் இருந்து மழை நீர் ஒழுகிய சம்பவம் குறித்து ஆய்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
சென்னையில் கடந்த புதன்கிழமை இரவு கன மழை பெய்தது. சுமார் 10 ஆண்டுகள் பழமையான சென்னை விமான நிலையக் கட்டடத்தின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகியது. உடனடியாக அதிகாரிகள் அதனை சரி செய்யுமாறு உத்தரவிட்டனர். நீர் ஒழுகிய இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் டப்பாக்களை வைத்து மழை நீர் வெளியே சிந்தாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து விமான நிலையத்தின் இயக்குநர் ஸ்ரீகுமார் கூறுகையில், விமான நிலையத்தின் மேற்கூரை ஒழுகுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அதனை சரி செய்து விடுவோம். இது மிகச் சிறிய விஷயம். உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. முதலில் மேற்கூரையே பிளந்து கொண்டுவிழும், தற்போது இது ஒழுக வேறுச் செய்கிறது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் ஆள் மாறாட்டம் டாக்டர் குடும்பம் ஓட்டம்; உதவிய அதிகாரிகள் யார்?
Updated : செப் 21, 2019 00:20 | Added : செப் 20, 2019 22:47
சென்னை,: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், ஆள்மாறாட்டம் செய்வதற்கு, உதவிய அதிகாரிகள் யார் யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட, டாக்டர் குடும்பம் தலைமறைவாகி உள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேஷன்; சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.இவரது மகன், உதித் சூர்யா, இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சியடைய வில்லை.
சந்தேகம்
இந்தாண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதி, 385 மதிப்பெண்கள் பெற்று, கவுன்சிலிங்கில், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார். மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் தேனி மருத்துவ கல்லுாரி முதல்வருக்கு, இம்மாதம், 11 மற்றும் 13ல், புகார் ஒன்று வந்தது. அதில், உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்து, கல்லுாரியில் சேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.
விசாரணையை துவங்கிய, பேராசிரியர் குழுவினர், ஆள்மாறாட்டம் செய்ததை, புகைப்பட ஆதாரங்கள் வாயிலாக கண்டுபிடித்தனர். இதையடுத்து, மாணவரிடமும், பெற்றோரிடமும், மருத்துவ கல்லுாரி நிர்வாகம் விசாரித்துள்ளது. அப்போது, படிப்பை கைவிடுவதாக, மாணவர் கடிதம் அளித்துள்ளார்.இது குறித்த செய்திகள் வெளியே கசிந்ததும், ஒரு வாரத்திற்கு பின், போலீசில் கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதனால், இந்த மோசடிக்கு, கல்லுாரி நிர்வாகம் உதவியுள்ளதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ் தான் சரிபார்க்கப் படும்; உதித் சூர்யா விவகாரத்தில், யாருடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினரும் உதவினரா என்ற, சந்தேகம் உள்ளது.
இதற்கிடையில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய, மாணவனின் குடும்பத்தினர், தலைமறைவாகி உள்ளனர்.தனிப்படை போலீசார், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், டாக்டர் வெங்கடேஷன் குறித்து விசாரித்தனர். டாக்டர் குடும்பம் பிடிபட்டால் மட்டுமே, இந்த விவகாரத்தில், உண்மை வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து, தேனி மருத்துவ கல்லுாரி முதல்வர், மருத்துவ கல்வி இயக்குனர், நாராயணபாபுவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதையடுத்து, முறைகேடு தொடர்பாக, விரிவான ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நேற்று துவங்கின. சென்னை மருத்துவ கல்லுாரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை உடன் வைத்து, அவர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில்,சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்,மருத்துவ சுற்றுலா கண்காட்சியை துவக்கி வைத்த பின், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது:நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்தின் வாயிலாக, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையும் நடக்கிறது. நீட் தேர்வை, தமிழக அரசு நடத்தவில்லை; மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. இதற்கு, தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'மனித தன்மை வேண்டும்'
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் அளித்த பேட்டி:தேனி மருத்துவ கல்லுாரியில் நடந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க, பல்கலை.,யின் இணைப்பு கல்லுாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். விபரங்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தால், 24 மணி நேரத்திற்குள் பல்கலைக்கு தெரிவிக்க வேண்டும்.
பல்கலைக்கும், மாணவர் சேர்க்கைக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம்.மருத்துவ துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில், முறைகேட்டில் ஈடுபட வேண்டாம்; எந்த துறையும் தரக்குறைவானது அல்ல. வயதில் சிறியவர்கள் முறைகேட்டில் ஈடுபட, பெரியவர்கள் உறுதுணையாக இருக்க கூடாது. அனைவரும், மனித தன்மையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Updated : செப் 21, 2019 00:20 | Added : செப் 20, 2019 22:47
சென்னை,: மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில், ஆள்மாறாட்டம் செய்வதற்கு, உதவிய அதிகாரிகள் யார் யார் என்ற, கேள்வி எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட, டாக்டர் குடும்பம் தலைமறைவாகி உள்ளதால், விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சென்னை, தண்டையார்பேட்டையை சேர்ந்தவர், வெங்கடேஷன்; சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார்.இவரது மகன், உதித் சூர்யா, இரண்டு ஆண்டுகளாக, நீட் தேர்வு எழுதியும், தேர்ச்சியடைய வில்லை.
சந்தேகம்
இந்தாண்டு, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தேர்வு எழுதி, 385 மதிப்பெண்கள் பெற்று, கவுன்சிலிங்கில், தேனி அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றார். மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் தேனி மருத்துவ கல்லுாரி முதல்வருக்கு, இம்மாதம், 11 மற்றும் 13ல், புகார் ஒன்று வந்தது. அதில், உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்து, கல்லுாரியில் சேர்ந்ததாக கூறப்பட்டிருந்தது.
விசாரணையை துவங்கிய, பேராசிரியர் குழுவினர், ஆள்மாறாட்டம் செய்ததை, புகைப்பட ஆதாரங்கள் வாயிலாக கண்டுபிடித்தனர். இதையடுத்து, மாணவரிடமும், பெற்றோரிடமும், மருத்துவ கல்லுாரி நிர்வாகம் விசாரித்துள்ளது. அப்போது, படிப்பை கைவிடுவதாக, மாணவர் கடிதம் அளித்துள்ளார்.இது குறித்த செய்திகள் வெளியே கசிந்ததும், ஒரு வாரத்திற்கு பின், போலீசில் கல்லுாரி முதல்வர், ராஜேந்திரன் புகார் அளித்துள்ளார்.
இதனால், இந்த மோசடிக்கு, கல்லுாரி நிர்வாகம் உதவியுள்ளதா என்ற, கேள்வி எழுந்துள்ளது. அதேபோல, மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ் தான் சரிபார்க்கப் படும்; உதித் சூர்யா விவகாரத்தில், யாருடைய சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவினரும் உதவினரா என்ற, சந்தேகம் உள்ளது.
இதற்கிடையில், ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கிய, மாணவனின் குடும்பத்தினர், தலைமறைவாகி உள்ளனர்.தனிப்படை போலீசார், நேற்று ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், டாக்டர் வெங்கடேஷன் குறித்து விசாரித்தனர். டாக்டர் குடும்பம் பிடிபட்டால் மட்டுமே, இந்த விவகாரத்தில், உண்மை வெளிச்சத்துக்கு வர வாய்ப்புள்ளது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து, தேனி மருத்துவ கல்லுாரி முதல்வர், மருத்துவ கல்வி இயக்குனர், நாராயணபாபுவிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதையடுத்து, முறைகேடு தொடர்பாக, விரிவான ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, முதலாம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., -- பி.டி.எஸ்., மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், நேற்று துவங்கின. சென்னை மருத்துவ கல்லுாரி, கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர்களை உடன் வைத்து, அவர்களின் அசல் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில்,சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்,மருத்துவ சுற்றுலா கண்காட்சியை துவக்கி வைத்த பின், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறியதாவது:நீட் தேர்வில், ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக, மருத்துவ கல்வி இயக்ககத்தின் வாயிலாக, விசாரணை நடத்தப்பட்டுள்ளது. காவல் துறை விசாரணையும் நடக்கிறது. நீட் தேர்வை, தமிழக அரசு நடத்தவில்லை; மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வு. இதற்கு, தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
'மனித தன்மை வேண்டும்'
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர், சுதா சேஷய்யன் அளித்த பேட்டி:தேனி மருத்துவ கல்லுாரியில் நடந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களின் விபரங்களை சரிபார்க்க, பல்கலை.,யின் இணைப்பு கல்லுாரிகளை அறிவுறுத்தி உள்ளோம். விபரங்கள் சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்தால், 24 மணி நேரத்திற்குள் பல்கலைக்கு தெரிவிக்க வேண்டும்.
பல்கலைக்கும், மாணவர் சேர்க்கைக்கும் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேர்வு குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம்.மருத்துவ துறையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்தில், முறைகேட்டில் ஈடுபட வேண்டாம்; எந்த துறையும் தரக்குறைவானது அல்ல. வயதில் சிறியவர்கள் முறைகேட்டில் ஈடுபட, பெரியவர்கள் உறுதுணையாக இருக்க கூடாது. அனைவரும், மனித தன்மையுடன் செயல்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு 1.85 லட்சம் பேருக்கு அனுமதி
Added : செப் 20, 2019 23:21
சென்னை, :முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு 154 தேர்வு மையங்களில் நடக்கும் என்றும் 1.85 லட்சம் பேர் எழுத உள்ளதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1க்கான தேர்வு வரும் 27 28 29ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகம் முழுவதும் 154 தேர்வு மையங்களில் காலை மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படும் தேர்வில் 1.85 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை 1.03 லட்சம் பேர் இதுவரை பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் டி.ஆர்.பி.யின் மாதிரி பயிற்சி தேர்வுக்கு இணையதளம் வழியே முயற்சித்துள்ளனர்.இந்த தேர்வில் கணினி வழியில் 150 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒவ்வொரு கேள்வியும் வரிசையாகவோ முன்னும் பின்னுமாகவோ தேர்வு செய்யப்படும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.தேர்வர்கள் இந்த பயிற்சி தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மேற்கொண்டு தேர்வு குறித்த நடைமுறைகளை தெரிந்து கொள்ள அறிவுறுத்தப் படுகிறது. இந்த பயிற்சி தேர்வின் வினாக்கள் முழுவதுமாக தேர்வர்களின் பயிற்சிக்காகவே தயாரிக்கப்பட்டவை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்'
Added : செப் 20, 2019 22:52
சென்னை, 'தமிழகத்தில், 14 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தை ஒட்டிய ஆந்திர கடற்பகுதியில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், கனமழை பெய்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழை தொடரும். அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலுார், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம், உடையாலிபட்டியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை, 'தமிழகத்தில், 14 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த மையம் கூறியுள்ளதாவது: தமிழகத்தை ஒட்டிய ஆந்திர கடற்பகுதியில், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு உள்ளது. அதனால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், கனமழை பெய்துள்ளது. மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் கனமழை தொடரும். அதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலுார், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம், 33 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவாகும். சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, புதுக்கோட்டை மாவட்டம், உடையாலிபட்டியில், 7 செ.மீ., மழை பெய்துள்ளது.இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சவுதி அரேபியாவில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு
Added : செப் 20, 2019 22:52
சென்னை, -சவுதி அரேபியாவில், முன்னணி மருத்துவமனையில் பணிபுரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சவுதி அரேபியா நாட்டில், ஜுபைல் என்ற இடத்தில் உள்ள, முன்னணி மருத்துவமனைக்கு, 35 வயதிற்கு உட்பட்ட, 'டிப்ளமா' அல்லது பி.எஸ்சி., படித்த, ஆண் செவிலியர்கள்; 40 வயதிற்கு உட்பட்ட, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள, பி.எஸ்சி., படித்த, பிசியோதெரபிஸ்ட் என்ற இயன்முறை மருத்துவர்கள், பெருமளவில் தேவைப்படுகின்றனர்.மேலும், ஆண், பெண் மருத்துவர்கள்; பெண், 'லேப் டெக்னிஷியன், எக்ஸ்ரே டெக்னிஷியன்' தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், ovemclsn@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.ஊதியம் மற்றும் பணி விபரங்களை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், www.omcmanpower.com என்ற, இணையதளத்தில் பார்க்கலாம்
Added : செப் 20, 2019 22:52
சென்னை, -சவுதி அரேபியாவில், முன்னணி மருத்துவமனையில் பணிபுரிய, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.சவுதி அரேபியா நாட்டில், ஜுபைல் என்ற இடத்தில் உள்ள, முன்னணி மருத்துவமனைக்கு, 35 வயதிற்கு உட்பட்ட, 'டிப்ளமா' அல்லது பி.எஸ்சி., படித்த, ஆண் செவிலியர்கள்; 40 வயதிற்கு உட்பட்ட, இரண்டு ஆண்டு பணி அனுபவம் உள்ள, பி.எஸ்சி., படித்த, பிசியோதெரபிஸ்ட் என்ற இயன்முறை மருத்துவர்கள், பெருமளவில் தேவைப்படுகின்றனர்.மேலும், ஆண், பெண் மருத்துவர்கள்; பெண், 'லேப் டெக்னிஷியன், எக்ஸ்ரே டெக்னிஷியன்' தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், ovemclsn@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.ஊதியம் மற்றும் பணி விபரங்களை, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின், www.omcmanpower.com என்ற, இணையதளத்தில் பார்க்கலாம்
Subscribe to:
Posts (Atom)
-
Madras varsity panel against budget cuts Ragu.Raman@timesofindia.com 22.04.2025 Chennai : The state govt's move to cut the budget for t...
-
கணவன் முதல் நாள் இரவில் தான் கண்ட கனவைப் பற்றி மறுநாள் காலையில் தன் மனைவியிடம் விளக்கிக் கொண்டிருந்தார். “அடியேய்... நானும், நீயும் அமொர...