Saturday, November 2, 2019



ஒரு தீபாவளிக்கு ரெண்டு சிவாஜி படம்... ரெண்டுமே சூப்பர்டூப்பர் ஹிட்டு!



வி.ராம்ஜி  the hindu tamil

தீபாவளியன்று சிவாஜியின் இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தன.

1967ம் ஆண்டு, தமிழ்த் திரையுலகிலும் தமிழகத்திலும் மறக்கமுடியாத ஆண்டு. எம்ஜிஆர் சுடப்பட்ட பிறகு வந்த முதல் படமான ‘காவல்காரன்’ இந்த வருடம்தான் வெளியானது எனும் தகவலுடன் 67ம் ஆண்டைத் திரும்பிப் பார்ப்போம்.

67ம் ஆண்டில், எம்ஜிஆருக்கு ‘அரசகட்டளை’, ‘காவல்காரன்’, ‘தாய்க்கு தலைமகன்’, ‘விவசாயி’ என நான்கு படங்கள் வெளியாகின. இதில், ‘அரசகட்டளை’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தேவர் பிலிம்ஸின் ‘தாய்க்கு தலைமகன்’ எல்லா ஏரியாக்களிலும் நூறு நாட்களைக் கடந்து ஓடியது.

சத்யா மூவீஸின் ‘காவல்காரன்’தான் இதில் அதிரிபுதிரி ஹிட். எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடி என்பது ஒரு காரணம். அதைவிட முக்கியமாக, ‘எம்ஜிஆர் குரல்’. இதுதான் அப்போதைய டாபிக். ஆகவே இந்தப் படம் பலத்த எதிர்பார்ப்புடன் எதிர்பார்க்கப்பட்டது. ரிலீஸானதும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.

இதே வருடத்தில், மீண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ திரைப்படம் வெளியானது. தேவர் பிலிம்ஸ் - எம்ஜிஆர் கூட்டணி எப்போதும் சந்திக்கிற வெற்றியை இந்தப் படம் சந்திக்கவில்லை என்றாலும் கலெக்‌ஷனில் குறைவைக்கவில்லை.

எம்ஜிஆரின் ‘விவசாயி’ தீபாவளியன்று ரிலீசானது. 1967ம் ஆண்டு, நவம்பர் 1ம் தேதி தீபாவளி நாளில் வெளியானது.

மக்கள்திலகத்தின் பட்டியலைப் பார்த்தாகிவிட்டது. இப்போது நடிகர்திலகத்தின் பட்டியல்.

67ம் ஆண்டு, சிவாஜிக்கான ஆண்டு என்றுதான் சொல்லவேண்டும். ‘கந்தன் கருணை’, ‘தங்கை’, ‘திருவருட்செல்வர்’ , ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘பாலாடை’, ‘இருமலர்கள்’, ‘ஊட்டி வரை உறவு’ என 7 படங்கள் வெளியாகின. இந்த ஏழில் ‘பாலாடை’ தவிர எல்லாப் படங்களுமே சூப்பர் ஹிட்டடித்தன.

ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் ‘கந்தன் கருணை’யும் ‘திருவருட்செல்வர்’ திரைப்படமும் ஒரே ஆண்டில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைச் சந்தித்தன. இரண்டுமே மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட கலர் படம். இதில் ‘கந்தன் கருணை’யில் கே.ஆர்.விஜயாவும் நடித்தார். ’திருவருட்செல்வர்’ படத்தில் பத்மினி நடித்திருந்தார். இரண்டிலுமே சிவாஜி, தன் நடிப்பால் பட்டையைக் கிளப்பினார்.

கே.பாலாஜியின் தயாரிப்பு நிறுவனமான சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தில் இருந்து ‘தங்கை’ படத்தை ஏ.சி.திருலோகசந்தர் இயக்கினார். இதில் சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் நடித்திருந்தனர். கதையும் வலுவாக இருந்தது. சிவாஜியும் அசத்தியிருந்தார். பாடல்களும் அமர்க்களம்.

67ம் வருடத்தில் இன்னொரு சுவாரஸ்யம்... ஸ்ரீதரின் இயக்கத்தில், ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்திலும் ‘ஊட்டி வரை உறவு’ படத்திலும் நடித்திருந்தார் சிவாஜி. இரண்டு படங்களிலும் கே.ஆர்.விஜயாதான் நாயகி.
அதேபோல், ‘தங்கை’ படத்தை இயக்கிய ஏ.சி.திருலோகசந்தர், சிவாஜி, பத்மினி, கே.ஆர்.விஜயா நடித்த ‘இருமலர்கள்’ படத்தையும் இயக்கினார்.
ஆக, ஏ.பி.நாகராஜனுக்கு இரண்டு. ‘கந்தன் கருணை’, ‘திருவருட்செல்வர்’. இந்த இரண்டுமே கலர் படம்.

ஏ.சி.திருலோகசந்தருக்கு இரண்டு. ‘தங்கை’, ‘இருமலர்கள்’. இந்த இரண்டுமே கருப்பு வெள்ளைப் படம்.

ஸ்ரீதருக்கு இரண்டு. ‘நெஞ்சிருக்கும் வரை’, ‘ஊட்டி வரை உறவு’. இதில் கருப்பு வெள்ளை ஒன்று. கலர் படம் ஒன்று.

சிவாஜி நடித்த ‘பாலாடை’ படத்தின் இயக்குநர் யாரென்று சொல்லத்தேவையே இல்லை. ‘பா’ வரிசை... வேறு யார்... இயக்குநர் ஏ.பீம்சிங் தான்! இந்தப் படம் கருப்பு வெள்ளை.

இனிமேல்தான் ஹைலைட்... 1967ம் ஆண்டு, சிவாஜி நடித்த ‘இருமலர்கள்’ திரைப்படமும் ‘ஊட்டி வரை உறவு’ திரைப்படமும் நவம்பர் 1ம் தேதி தீபாவளியன்று ரிலீசானது. இந்த இரண்டு படங்களுமே நூறு நாட்களைக் கடந்து, தொடர் ஹவுஸ்புல்லாக ஓடியது.

‘இருமலர்கள்’ படத்தில் ‘மன்னிக்க வேண்டுகிறேன்’, ‘மகராஜா ஒரு மகராணி...’ என்பது உள்ளிட்ட பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். அதேபோல், ‘தேடினேன் வந்தது’, ‘பூமாலையில் ஓர் மல்லிகை’, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி’, ‘ராஜராஜஸ்ரீ வந்தாள்... ராஜயோகம் தரவந்தாள்’, புது நாடகத்தில் ஒரு நாயகி’... என எல்லாப் பாடல்களுமே தேன்!

67ம் ஆண்டு, சிவாஜி வருடம். அந்த வருட தீபாவளியும் சிவாஜிக்கான, சிவாஜி ரசிகர்களுக்கான தீபாவளியாயிற்று!
10 நாட்களில் 4 முக்கிய தீர்ப்புக்கள் : அதிரடிக்கு சுப்ரீம் கோர்ட் 'ரெடி'

Updated : நவ 02, 2019 09:12 | Added : நவ 02, 2019 08:34

புதுடில்லி : வரும் நவம்பர் 4 ம் தேதி முதல் 10 நாட்களில் 4 முக்கிய வழக்குகளில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புக்களை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வுகள் வழங்க உள்ளது.

அயோத்தி வழக்கு, சபரிமலையில் அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது உள்ளிட்ட 4 வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் வழங்க உள்ள தீர்ப்புக்கள் நாட்டில் சமூக, மத மற்றும் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. அயோத்தி வழக்கில், 1885 ம் ஆண்டு முதல் நடந்து வரும் மிக நீண்ட வரலாற்று சிறப்பு மிக்க வழக்கில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. இந்து-முஸ்லீம் இடையே மிகப் பெரிய பிரிவினையை ஏற்படுத்தியது அயோத்தி வழக்கு.

ஏறக்குறைய 500 ஆண்டுகளாக அயோத்தி பிரச்னை நடந்து வருகிறது. 1934 ம் ஆண்டு நடந்த மத கலவரத்தில் பாபர் மசூதியின் 3 மாடங்கள் இடிக்கப்பட்டது. அதனை இந்துக்களிடம் இருந்து வசூலித்த அபராத தொகையை கொண்டு ஆங்கிலேயர்கள் மீண்டும் கட்டிக் கொடுத்தனர். 1950 ம் ஆண்டு கோபால் சிங் விஷாரத் என்ற இந்து பக்தர், ராமர் சிலையை வைத்து வழிபாடு நடத்த அனுமதி வழங்கும்படி முதன் முறையாக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து 1961 ல் வஹ்பு வாரியம் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அயோத்தி வழக்கில் இதுவரை வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதி தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தவிர தலைமை நீதிபதி தலைமையிலான மேலும் 3 அமர்வுகள் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது தவறில்லை என்ற உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு, தலைமை நீதிபதி அலுவலகத்தையும் தகவல் அறியும் உரியும் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தொடர்பான மனு ஆகியவை மீதும் அடுத்த 10 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
உயிரை காப்பாற்றும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்யலாமா?

Added : நவ 01, 2019 23:34

சென்னை : 'உயிரை காப்பாற்றும் டாக்டர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா; போலீசார், துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், நாடு என்னவாகும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

நோயாளியை கவனிக்காத அரசு டாக்டர் தாக்கப் பட்டதை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டதை எதிர்த்தும், ௨௦௧௭ல் குமரன் என்பவர் வழக்கு தொடுத்தார். மனு தாக்கல்பயிற்சி டாக்டர்களின் வேலை நிறுத்தத்தை எதிர்த்து, வழக்கறிஞர் வேலன் என்பவர், வழக்கு தொடுத்திருந்தார்.தற்போது நடக்கும் டாக்டர்களின் போராட்டம் முடிவுக்கு வர, நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தன.அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அவர்களுடன் பேச்சு நடக்கிறது,'' என்றார்.இதையடுத்து, நீதிபதிகள் கூறியதாவது: போராட்டம் நடத்தக்கூடாது என, முழுமையான தடை ஏதும் இல்லை. அதேநேரத்தில், உயிரை காப்பாற்றும் பணியில், டாக்டர்கள் உள்ளனர்.

அவர்களை, கடவுளுக்கு அடுத்த நிலையில் மக்கள் பார்க்கின்றனர். அவர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா; போலீசார், துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் என்னவாகும்.அவர்களுக்கும் பிரச்னைகள், கோரிக்கைகள் உள்ளன. சேவை துறையில் அவர்கள் உள்ளனர். நீதித்துறையும், சேவைத்துறை தான். வழக்கறிஞர்களும், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். போராட்ட முறையை மாற்றலாம். ஜப்பானில் உள்ளது போல், ஏன் பின்பற்றக் கூடாது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.தள்ளிவைப்புவழக்கறிஞர் சூரியபிரகாசம், ''டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், டாக்டர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல,'' என்றார்.

அதற்கு நீதிபதிகள், 'சுகாதாரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு வர வேண்டும். சாலைகளில் குப்பை கிடக்கிறது. முதல்வர் வீட்டின் அருகே கூட, குப்பை குவிந்து கிடக்கிறது. நாங்களும், அந்தப் பகுதியில் தான் இருக்கிறோம். குப்பையை அகற்றா மல் உள்ளனர்' என்றனர்.உடனே குப்பையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். இதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு விசாரணையை, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
MBBS Admission – MCI can distinguish between Person with disabilities 

September 3, 2019



Rajasthan High Court held that MCI can distinguish Between Persons with Disabilities In MBBS Admissions

The Rajasthan High Court allowed the Medical Council of India (MCI) to distinguish between persons with disabilities for the purpose of admission in MBBS course.

On February 2, 2019, MCI promulgated the Regulation on Graduate Medical Education (Amendment), 2019 (the Regulation). As per Annexure H of the Regulation, candidates with locomotive disorder of upper limb disability or upper limb deformity are not eligible to pursue MBBS course. 


Based on the Regulation, the Petitioner, Manohar Lal Swami, who had qualified NEET, 2019 Examination in the OBC (NCL) category under PWD quota, was denied admission to MBBS. The Petitioner has congenital left upper limb disability (40% benchmark disability) and does not have the left thumb.

Finding merit in the Respondent’s arguments that it was the duty of MCI to ensure that aspiring students possess minimum functional abilities/ competencies which are required to complete the training programme of MBBS satisfactorily and that the patients are also safe under the care of such medical graduates, the division bench of Justice Mohammad Rafiq and Justice Narendra Singh Dhaddha dismissed the petition. The court concluded that”…the MCI can distinguish between various persons with disabilities for the purpose of admission in MBBS course and such determination by the MCI shall not be in conflict with the provisions of the Act of 2016″.
Signed carbon copy of document is permissible evidence, says SC

02/11/2019, LEGAL CORRESPONDENT, NEW DELHI

A signed carbon copy of a document prepared in the same process as the original is admissible as primary evidence, the Supreme Court has held in a recent order.

A Bench of Justices Deepak Gupta and Aniruddha Bose clarified the law while setting aside a Punjab and Haryana High Court decision of January 15 that a carbon copy signed by the parties in a dispute cannot be treated as primary evidence under Section 62 of the Indian Evidence Act.

The Section says “primary evidence means the document itself produced for the inspection of the court.”

Second explanation

The apex court has applied the second explanation in Section 62 in this case, which states: “Where a number of documents are all made by one uniform process, as in the case of printing, lithography, or photography, each is primary evidence of the contents of the rest.”

The Evidence Act also gives an illustration: “a person is shown to have been in possession of a number of placards, all printed at one time from one original. Any one of the placards is primary evidence of the contents of any other, but no one of them is primary evidence of the contents of the original.”

The High Court had dismissed the case, saying there was no substantial question of law involved.

Allowing the appeal, the Supreme Court disposed of the case, which is a civil appeal between two private parties, and remitted it back to the HC.

“It is for the High Court to decide whether any substantial question(s) of law arises and the appellant before us is entitled to any relief or not,” the court ordered.
Air India’s Chennai-Jaffna flight service postponed by 10 days
Some paperwork and approvals need to be done: official


02/11/2019, T.K. ROHIT,CHENNAI

The -Jaffna international flight service of Air India’s Alliance Air, which was scheduled to kick off operations from November 1, has been delayed by about 10 days “due to paperwork and certain issues that are being sorted out,” according to officials.

“There is some paperwork going on at the moment and certain approvals need to be got,” an Air India official told The Hindu. “Since this is between two countries, a few issues are also being sorted out,” the official added.

“We will be finalising the date soon and we will give a couple of days for opening the booking process and make the necessary announcements soon,” the official said. A spokesperson for Alliance Air said a detailed announcement on the final plan would be made on November 4.

Air India officials, on the day of the inaugural flight on October 18, had spoken of a tax proposed by Sri Lanka on departing flights from the island to the tune of ₹3,000 per passenger. This tax, they reasoned, would make it expensive for people to travel on this route that was finalised keeping in mind the volume of traffic expected between the two destinations.

Sri Lanka’s plan is to make Jaffna airport a gateway to the rest of the world for the majority Tamil populace of the region and ease traffic at Colombo airport.
TTD releases online quota for February

02/11/2019,TIRUMALA

The TTD on Friday released the online quota of 69,512 tickets for the month of February. Of these, while 1,01,112 tickets relating to Suprabhatam, Thomala and Archana, Ashtadala Padapadmaradhana seva and Nijapada darshanam tickets can be availed by way of online dip system, the rest will be made available under the general category.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...