Tuesday, December 1, 2020

Supreme Court Weekly Round Up

Supreme Court Weekly Round Up: Week Commencing November 22, 2020 to November 29, 2020

Many Keralites Don't Display Surnames Because They Are Indicative Of Caste Status: Kerala HC Directs CBSE To Consider Representation Regarding Application Forms

Many Keralites Don't Display Surnames Because They Are Indicative Of Caste Status: Kerala HC Directs CBSE To Consider Representation Regarding Application Forms: While noting that in the state of Kerala, members of some of the communities traditionally have no surnames, the Kerala High Court on Tuesday (17th November) directed the Central Board of Secondary...

Right To Marry A Person Of Choice Irrespective Of Caste Or Religion A Fundamental Right : Karnataka High Court

Right To Marry A Person Of Choice Irrespective Of Caste Or Religion A Fundamental Right : Karnataka High Court: The Karnataka High Court has held that the right of any major individual to marry the person of his/her choice is a fundamental right enshrined in the Constitution of India. A division bench...

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து

முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர் முழு சொத்தையும் பறிமுதல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து


2020-12-01@ 00:03:17

மதுரை: ஆசிரியராக பணியாற்றுவதை மறைத்து இலவச பட்டா பெற்றது சமூகவிரோதச் செயல். முறைகேட்டில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் முழு சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா பல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசு சார்பில் எனக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா இடத்தில் இருந்து, என்னை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். மனுதாரரின் மகன் அரசு மருத்துவராக உள்ளார். இவர் மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளனர்’’ என தெரிவித்திருந்தார். இதையடுத்து நீதிமன்றம் ஆசிரியர் மற்றும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. மேலும், ராஜா தரப்பில் மனுவை திரும்பப் பெறுவதாக கூறி ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் ஒரு அரசு ஊழியர், இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை சமூகவிரோத செயலாகவே நீதிமன்றம் பார்க்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவோர் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சமூக விரோதிகள்தான். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மீது போலீசில் புகார் அளிக்க வேண்டும். முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் மட்டுமின்றி, அவர்களது முழு சொத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற செயல்களை தடுக்க முடியும். அரசு ஊழியர் ஒருவரின் குடும்பத்திற்கு மட்டும் 5 பட்டாக்கள் வழங்கிய தாசில்தார் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது கண் துடைப்பு நடவடிக்கை. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர் மீது புகார் அளித்து குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். தாசில்தாரின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் சொத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.1 லட்சம் வரை அரசிடம் சம்பளமாக பெற்றுக்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை பிச்சைக்காரர்கள் என்று அழைப்பதில் தவறு இல்லை.

அரசுப்பள்ளி ஆசிரியர், தன் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்? அரசு ஊழியர்கள் சங்கம் என்ற பெயரில் ஜாதி மற்றும் மதம் சார்ந்த சங்கங்களை வைத்துள்ளனர். இதற்கெல்லாம் யார் அனுமதி கொடுத்தது’’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர். பின்னர், ‘‘மனுதாரர் மற்றும் மனுதாரருக்கு பட்டா வழங்கிய தாசில்தார் ஆகியோரின் முழு விவரங்களையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். போலீசாரின் வழக்கு விபரங்களையும் அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவோர் அரசியல்வாதியாக இருந்தாலும் சரி; அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் சமூக விரோதிகள்தான்.

புது மருத்துவ கல்லுாரி 2021ல் சேர்க்கை


புது மருத்துவ கல்லுாரி 2021ல் சேர்க்கை

Added : நவ 30, 2020 23:20

மதுரை : 'புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகளில், அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், தமிழக அரசு தெரிவித்தது.

மதுரை, வாசுதேவா தாக்கல் செய்த மனு:'நீட்' தேர்வில், 720க்கு, 521 மதிப்பெண் பெற்றுள்ளேன். 'திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நாமக்கல் உட்பட, 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரிகள், 2020 - 21ல் துவக்கப்படும்; கலந்தாய்வு பட்டியலில் இடம்பெறும்' என, தமிழக அரசு செப்., 7ல் அறிவித்தது.ஆனால், நடப்பு கலந்தாய்வு பட்டியலில், இப்புதிய கல்லுாரிகள் இடம் பெறவில்லை. காரணத்தை அரசு தெளிவுபடுத்தவில்லை. நடப்பாண்டு மருத்துப் படிப்பு கலந்தாய்வு பட்டியலில், 11 புதிய மருத்துவக் கல்லுாரிகள் இடம் பெற வேண்டும். அவற்றில் மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்புகள் துவக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு, 'புதிய, 11 மருத்துவக் கல்லுாரிகளுக்கு, மருத்துவக் கவுன்சிலிடம் இணைவிப்பு பெற வேண்டியுள்ளது. அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை துவங்கும்' என தெரிவித்தது.நீதிபதிகள், 'சென்னை அருகே உள்ள சில மாவட்டங்களில், புது மருத்துவக் கல்லுாரிகள் துவங்க அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும். பொறியியல் கல்லுாரிகள் போல், மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து விடும்' என, அறிவுறுத்தி ஒத்தி வைத்தனர்.

 11 மருத்துவ கல்லுாரிகளுக்கான அனுமதி சான்றிதழ் எப்போது?

Added : நவ 30, 2020 23:38

சென்னை : தமிழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட, 11 அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கான அடிப்படை சான்றிதழை, தேசிய மருத்துவ ஆணையத்திடம், மருத்துவக் கல்வி இயக்ககம் சமர்பித்துள்ளது.

தமிழகத்தில், 26 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. மேலும், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை, அரியலுார், கள்ளக்குறிச்சி ஆகிய, 11 மாவட்டங்களில், புதிதாக மருத்துவக் கல்லுாரி துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்த மாவட்டங்களுக்கு, தலா, ௪௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, மருத்துவ கல்லுாரிக்கான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. கல்லுாரிகளை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர, மருத்துவ கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு கூறியதாவது: தமிழகத்தில், 11 மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, 2019 -- 20ம் கல்வியாண்டில் அனுமதி கிடைத்தது. மத்திய, மாநில அரசுகள் பங்களிப்புடன், கல்லுாரிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் பெரும்பாலும் முடிந்துள்ளன.மேலும், அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் சான்றிதழ் பெறப்பட்டு உள்ளது.

மருத்துவப் உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து வித அடிப்படை மற்றும் முக்கிய சான்றிதழ்கள், தேசிய மருத்துவ ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.தேசிய மருத்துவ ஆணையக் குழுவினர், நேரில் ஆய்வு செய்த பின், அனுமதி சான்றிதழ் வழங்கப்படும். அனுமதி சான்றிதழ் கிடைத்த பின், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

எம்.பி.பி.எஸ்., படிப்பு 381 இடங்கள் நிரம்பின

Added : டிச 01, 2020 01:23

சென்னை : மருத்துவ படிப்பில், பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், 381 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, நேரு விளையாட்டரங்கில், நவ.,18ல் துவங்கியது. அரசு பள்ளி மாணவர்கள் ஒதுக்கீடு, சிறப்பு பிரிவு மாணவர்கள் ஒதுக்கீடு முடிந்து, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் துவங்கிய நிலையில், 'நிவர்' புயலால் ஒத்தி வைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, நேற்று துவங்கிய, பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கிற்கு, 390 மாணவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். அவர்களில், 382 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்றனர்;

381 பேர் விரும்பிய அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றனர். தற்போது, அரசு கல்லுாரிகளில், 2,059 எம்.பி.பி.எஸ்., - - 151 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. அதேபோல, சுயநிதி கல்லுாரிகளில், 1,060 எம்.பி.பி.எஸ்., - - 985 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இன்றைய கவுன்சிலிங்கிற்கு, 451 பேர் அழைக்கப் பட்டு உள்ளனர்.

சுரப்பா மீது விசாரணை கமிஷன் அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

சுரப்பா மீது விசாரணை கமிஷன் அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி

Added : நவ 30, 2020 23:18

மதுரை : சென்னை அண்ணா பல்கலை துணைவேந்தர் சுரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி, அதிருப்தியை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெளியிட்டது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழியைச் சேர்ந்த, மணி தணிக்கை குமார் தாக்கல் செய்த பொதுநல மனு:சென்னை அண்ணா பல்கலையில், 280 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, முதல்வரின் தனிப்பிரிவிற்கு புகார் அனுப்பப்பட்டது. இதை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், விசாரணைக் கமிஷன் அமைத்து, தமிழக உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டார்.புகாரில் முகாந்திரம் இல்லை. நேர்மையான சுரப்பா, பல்கலையின் தொழிற்கல்வியை மேம்படுத்த, சீர்திருத்த நடவடிக்கை எடுத்தார். அவருக்கு எதிரான விசாரணையில் உள்நோக்கம் உள்ளது.

துணைவேந்தரை விசாரிக்கும் அதிகாரம், வேந்தரான கவர்னருக்கு மட்டும் உள்ளது. சுரப்பா மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். விசாரணை கமிஷன் அமைத்து, உயர்கல்வி செயலர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பு, 'அலுவலர் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், இதை பொதுநல மனுவாக விசாரிக்க முகாந்திரம் இல்லை. தீவிரமான குற்றச்சாட்டு என்பதால், பல்கலை விதிகள் அடிப்படையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது' என தெரிவித்தது.

நீதிபதிகள்: இதுபோல் முதல்வரின் தனிப்பிரிவிற்கு வந்த புகார்கள் மீதெல்லாம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்களா. இதுபோல் புகாருக்குள்ளான துணைவேந்தர்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?இவ்விவகாரத்தில், அரசு அவசரப்பட்டு முடிவெடுத்துள்ளதாகத் தோன்றுகிறது. விசாரணையில், சுரப்பா மீதான புகார் உண்மை யில்லை என தெரியவந்தால் என்ன செய்வது, துவக்க கட்ட விசாரணைகூட நடத்தாமல் விசாரணைக் கமிஷன் அமைத்தது ஏன்?

இதுபோன்ற புகாருக்கு உள்ளான துணைவேந்தர்கள் மீது, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட நேரிடும். சுரப்பா மீதான விசாரணை கமிஷனுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது.இவ்வாறு கேள்வி எழுப்பி, அதிருப்தியை வெளியிட்டனர்.பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'துணைவேந்தர் சுரப்பாவிற்கு எதிராக, எதன் அடிப்படையில் விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவெடுக்கப்பட்டது, விசாரணைக் கமிஷன் அமைக்க பிறப்பித்த அரசாணை அசல் ஆவணங்களை, நாளை தமிழக அரசுத் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்'என்றனர்.

திருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது


திருச்செந்தூா், காரைக்கால் உள்பட 4 சிறப்பு ரயில்கள் இயக்க ஒப்புதல் முன்பதிவு இன்று தொடங்குகிறது

01.12.2020

சென்னை: சென்னை-திருச்செந்தூா், சென்னை-காரைக்கால் சிறப்பு ரயில் உள்பட 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை எழும்பூா்-திருச்செந்தூா், சென்னை எழும்பூா்-காரைக்கால், மதுரை-புனலூா் மெயில், மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் ஆகிய 4 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இந்த ரயில்களை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னை-திருச்செந்தூா்: சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.05 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து தினசரி மாலை 6.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

சென்னை-காரைக்கால்: சென்னை எழும்பூரில் இருந்து தினசரி இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில் (06175) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.50 மணிக்கு காரைக்காலை சென்றடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 4-ஆம்தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, காரைக்காலில் இருந்து இரவு 9.20 மணிக்கு சிறப்பு ரயில்(06176) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.55 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.

மதுரை-புனலூா் மெயில்: மதுரையில் இருந்து தினசரி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06729) புறப்பட்டு, மறுநாள் காலை 10.20 மணிக்கு புனலூரை சென்றடையும் . இந்த ரயில் சேவை டிசம்பா் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமாா்க்கமாக, புனலூரில் இருந்து தினசரி மாலை 5.20 மணிக்கு சிறப்பு ரயில் (06730) புறப்பட்டு மதுரையை காலை 6.20 மணிக்கு அடையும். இந்த ரயிலின் சேவை டிசம்பா் 5-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இதுதவிர, மங்களூா் சென்ட்ரல்-திருவனந்தபுரம் இடையே தினசரி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. முழுவதும் முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (டிச.1) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

Dailyhunt

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by Dailyhunt. Publisher: Dinamani

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...