Showing posts with label NEET 2018. Show all posts
Showing posts with label NEET 2018. Show all posts

Friday, August 10, 2018

மருத்துவ படிப்பு நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்

Added : ஆக 10, 2018 05:38

சென்னை:மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்குகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் இன்று முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மருத்துவ தேர்வு குழு செயலர் செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், அந்தந்த கல்லுாரிகளில் சேர நேற்று வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதில் நிரம்பாத இடங்கள் மாநில ஒதுக்கீட்டுக்கு வந்து விடும்.

எனவே தமிழகத்தில் இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை முதல் 13ம் தேதி வரை நடைபெறும். கவுன்சிலிங் தொடர்பான விரிவான அட்டவணை www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வெளியிடப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, August 9, 2018

REGION DIGEST

Med counselling closing date extended
The directorate general of medical sciences has extended the last date for students allotted seats under All India Quota seats to join the medical colleges by a day to 4pm on Thursday. The New-Delhi based directorate completed second round of counselling on August 2 based on their choices. The students had to join colleges by 5pm on Wednesday. With the extension, there will be a delay in the return of seats to state–run colleges. State selection committee on Tuesday announced that the counselling for vacant AIQ seats for two days from Friday. “It was based on the schedule that we will get the number of vacant seats by Wednesday,” said selection committee secretary Dr G Selvarajan.

DGHS NOTIFICATION 2ND ROUND EXTENDED TO 9.8.2018 UPTO 4 PM


Wednesday, August 8, 2018

வரும், 10ல் 2ம் கட்ட மருத்துவ கவுன்சிலிங்

Added : ஆக 08, 2018 01:04

சென்னை: மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட், 10 முதல், 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்து, வகுப்புகள் துவக்கப் பட்டுள்ளன. இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 10 முதல், 12ம் தேதி வரை, சென்னை, ஒமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மருத்துவ தேர்வு குழு அதிகாரிகள் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் இடங்கள் பெற்று, சேராதவர்கள் பற்றிய விவரங்கள், ஓரிரு நாளில் தெரிய வரும். அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்களின் விபரம் இன்று தெரிய வரும். இதன் அடிப்படையில், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான, முழுமையான அட்டவணை வெளியிடப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, August 4, 2018

On line Reporting of Resignation DGHS Notice 2.8.2018


DGHS COUNSELLING REVISED COUNSELLING 2018-19 SESSION


மருத்துவ இடங்கள் நிரம்பின இன்று மாணவர் சேர்க்கை இல்லை

Added : ஆக 04, 2018 00:04

சென்னை:தமிழகத்தில், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பின. இதனால், இன்று நடைபெறுவதாக இருந்த மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரசு, தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மாநில ஒதுக்கீட்டில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் அனைத்தும் நிரம்பி, வகுப்புகள் நடைபெறுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில், 516 எம்.பி.பி.எஸ்., - 715 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதற்கான கவுன்சிலிங், ஜூலை, 30, 31ல் நடந்தது.
இந்த கவுன்சிலிங்கில் நிரம்பாத, 128 இடங்களுக்கான கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில், பகல், 12:30 மணிக்குள் அனைத்து இடங்களும் நிரம்பின. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவ தேர்வுக்குழு செயலர், செல்வராஜன் வெளியிட்ட அறிவிப்பு:நிர்வாக ஒதுக்கீட்டில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. இதனால், இன்று நடைபெற இருந்த கவுன்சிலிங் ரத்து செய்யப்படுகிறது. மாணவர்கள் யாரும் வர வேண்டாம். இன்றைய கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டிருந்த மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, August 3, 2018

Break year students bag 40% of med seats in govt colleges

Ram.Sundaram@timesgroup.com

Chennai 03.05.2018

: Nearly half the candidates who secured an MBBS seat in government medical colleges this year had taken a break of at least a year or more to prepare for National Eligibility cum Entrance Test (NEET), data shows.

Of the 2,500 candidates who cleared NEET and got admission at medical colleges, as many as 1,269 cleared had their Class XII board exams before 2017, according to official data. The remaining 1,263 belonged to the current batch (2017-2018).

Compared to the previous year, there has been an increase in the number of candidates taking a break after Class XII board exams. Data shows that last year, a little over 40% candidates belonged to the previous batches. Many among them had joined private coaching centres and paid a hefty fee to prepare for NEET, say experts.

Commenting on this, Educationist Prince Gajendra Babu said this figure will increase further in the coming years as parents, who are either unable to pay the fees demanded by private medical colleges or not sure about the quality of teaching in these private institutions, encourage their children to skip the counselling that particular year, prepare better next year and get a seat in government medical college the following year.

“Instead of spending ₹30 lakh to ₹35 lakh in private colleges for the MBBS course, some prefer spending ₹2 lakh to ₹3 lakh at coaching centres for two years to ensure that they get a government seat where the fees would be much less. But meritorious students from economically weaker sections of the society will be eliminated from the competition in the longer run,” Babu said.

G R Ravindranath, general secretary, Doctor’s Association for Social Equality, said the trend is unavoidable with the government relaxing rules pertaining to upper age limit to take up NEET .

However, this trend might change in the next few years given the rate of corporatisation and privitisation of the health care system in the country and the weakening of public healthcare by reducing fund allocation.

“Many small and medium size medical clinics would shut down becaue of these policies thereby bringing down the demand for doctors. Also, given the duration of the course (seven-and-a-half years including postgraduation), high cost of education and fewer job opportunities, would deter more students from pursuing medicine,” he told TOI.
மருத்துவ இடம் கைவிட நாள் அறிவிப்பு

Added : ஆக 03, 2018 02:06


சென்னை:'அகில இந்திய கவுன்சிலிங்கில் பெற்ற இடங்களை கைவிட, வரும், 6ம் தேதி கடைசி நாள்' என, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட அகில இந்திய கவுன்சிலிங், ஜூன், 20, 21ல் நடந்தது. இதற்கான முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இடங்களை பெற்ற மாணவர்கள், அந்தந்த கல்லுாரிகளில், வரும், 8ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

இந்நிலையில், முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்றவர்கள், தங்கள் பெற்ற இடங்களை கைவிட விரும்பினால், வரும், 6ம் தேதிக்குள் கைவிடலாம் என, மத்திய சுகாதார இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:முதற்கட்ட கவுன்சிலிங்கில் இடம் பெற்றவர்கள், இடத்தை கைவிட நினைத்தால், கல்லுாரி நிர்வாகத்தை அணுகி, வரும், 6ம் தேதி மாலை, 3:00க்குள் இடங்களை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, August 2, 2018


எம்.பி.பி.எஸ்., வகுப்புகள் துவங்கின : மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

Added : ஆக 01, 2018 23:42





சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. மாணவர்களை, மூத்த மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று துவங்கின. கல்லுாரிக்கு வந்த புதிய மாணவர்களுக்கு, ரோஜா மலர் கொடுத்தும், மரக்கன்றுகள் நட்டும், மூத்த மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.'ராகிங் செய்ய மாட்டோம்' என, மூத்த மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வாக்குறுதி அளித்தனர். மேலும், 'விடுதிகளில் அளிக்கப்படும் உணவுகள் தரமானதாக இருக்கும்' என, பெற்றோரிடம் விடுதி காப்பாளர்கள் தெரிவித்தனர்.சென்னை, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரியில், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், செயலர், ராதாகிருஷ்ணன் புதிய மாணவர்களை வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவக் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன், ஜெயந்தி பேசியதாவது:பள்ளிகளை போல், மருத்துவக் கல்லுாரி வகுப்பறை இருக்காது. மாணவர்கள் தாங்களாகவே படிக்க, கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்க உள்ளதால், பெற்றோர் அவர்களை கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் விடுதியில் இருக்கும் நேரங்களில் தொடர்பு கொண்டு, பெற்றோர் ஆறுதலாக பேச வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும். மாணவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும். ''பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர் சந்தித்து, அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.

ஓமந்துாரார் அரசு மருத்துவ கல்லுாரி டீன், நாராயணபாபு பேசுகையில், ''நோயாளிகள் நம்மிடம் மருத்துவ சிகிச்சை போலவே, ஆறுதலையும் எதிர்பார்க்கின்றனர். எனவே, சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, அவர்களிடம் அன்பாக பழக வேண்டும்,'' என்றார்.

ராகிங் தொல்லையா? புகார் தெரிவிக்கலாம் : ராகிங் குறித்து, அந்தந்த கல்லுாரிகளில் உள்ள, ராகிங் தடுப்புக்குழு மற்றும், டீன்களிடம் புகார் அளிக்கலாம். எம்.சி.ஐ., எனப்படும் இந்திய மருத்துவ கவுன்சிலில், ராகிங் தடுப்புக்கான ஒழுங்குமுறை கமிட்டிக்கு, 18001 11154 என்ற இலவச எண்ணிலும், 011 - 2536 7033, 2536 7035, 2536 7036 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும், mci@bol.net.in, contact@mciindia.org என்ற இ - மெயில் முகவரிகள் மற்றும், www.mciindia.org என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். இதுதவிர சிறப்பு அவசர உதவிக்கான, 011 - 2536 1262 என்ற எண்ணிலும், 2536 7324 பேக்ஸ் எண்ணிலும், antiragging-mci@nic.in என்ற, இ - மெயிலிலும், மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

மொபைல் போனுக்கு தடை : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது. பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணியலாம். மாணவியர் சேலை, சுரிதார் ஆகிய உடைகளை அணியலாம்; மேற்கத்திய உடைகளை தவிர்க்க வேண்டும். மாணவியர் தலை முடியை விரித்து போடக்கூடாது. மாணவர்கள் விடுதியில், மொபைல் போன் பயன்படுத்தி கொள்ளலாம்; வகுப்பறைக்குள் பயன்படுத்தக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எட்வின் ஜோ, மருத்துவ கல்வி இயக்குனர்

Wednesday, August 1, 2018

Extension of deadline for admission sought

BENGALURU, AUGUST 01, 2018 00:00 IST

Owing to the delay in the second round of counselling for medical seats under the all-India quota, the State Medical Education Department has written to the Ministry of Health and Family Welfare seeking an extension for the last date to complete the admission process.

Tuesday, July 31, 2018

NEET toppers opt for CMC as mgmt quota counselling begins

TIMES NEWS NETWORK

Chennai  31.05.2018

: After a long wait, a dozen students from the top 50 NEET rank-holders in the state picked seats in Christian Medical College, Vellore.

This is the first time the century-old college is admitting students through the single window counselling conducted by the state selection committee. As per the seat matrix released by the state government, 12 of the 100 seats in the college will be reserved for open category students, three for SC/ST students, one for MCI and 84 seats for the network of churches that run hospitals in rural areas.

On Monday, counselling for admission to MBBS management seats in self-financing colleges began with admission to students to IRT, Perundurai. The first student to pick CMC was Raj Chendur Abhishek with a NEET score of 656. The last student to get admission in CMC under open category was Nanditha Vinodh S, who had a NEET score of 595.

The selection committee called for 2,607 candidates, but only 422 of them attended. Of these,101students were allotted seats and 321 others were waitlisted. The seat matrix released by the committee showed11colleges with 247 seats under the linguistic minority category and 155 seats in the open category. However, some colleges such as Trichy SRM Medical College which has listed 53 seats in the minority category moved nearly 40 seats to the open category and Sree Mookambika Institute of Medical Sciences in Kanyakumari pushed five seats to open category.

Meanwhile, the New Delhi-based (Directorate General of Health Services) DGHS, which does counselling for the15% All India Quota (AIQ) seats has kept the second round of counselling in abeyance following court cases.

“The second round of counselling to government colleges will begin as soon as the DGHS returns vacant seats in our 22 government colleges,” said selection committee secretary G Selvarajan.

'நீட்' தேர்வு, 'ஆன்லைன்' கிடையாது மத்திய அரசு அறிவிப்பு

31.07.2018

புதுடில்லி : ''நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள், கணினி முறையில் நடத்தப்படுமே தவிர, 'ஆன்லைன்' முறையில் நடத்தப்படாது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்,பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில் நேற்று தெரிவித்தார்.




மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட், ஐ.ஐ.டி.,யில் பொறியியல்படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவுதேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.இந்த தேர்வுகளை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலைகல்வி வாரியம் நடத்தி வந்தது.
இந்நிலையில், மத்தியமனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ்செயல்படும், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு நிறுவனம் என்ற அமைப்பு, இந்த தேர்வுகளை, 'ஆன்லைன்' முறையில், நடத்தப் போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், லோக்சபாவில்

நேற்று கூறியதாவது: நீட் மற்றும் ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளை, ஆண்டுதோறும், 24 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். மாநில அரசுகள் நடத்தும் இதர தேர்வுகளை, 1.5 கோடி மாணவர்கள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும்பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள்உள்ளன. அனைத்துஇடங்களிலும், இணைய வசதி, சீராக இருக்கும்என, சொல்ல முடியாது. இதை மனதில் வைத்து, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை, ஆன்லைன் தேர்வுகளாக அல்லாமல், கணினி முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ஆன்லைன்' எனப்படும், இணைய வசதியில் தேர்வை எழுதும்போது, விடைகள், உடனுக்கு உடன், தேர்வை நடத்தும் அமைப்புக்கு சென்று விடும்.ஆனால், கணினி முறையில், தேர்வுக்கான கேள்வி தாள்கள் ஏற்கனவே, தரவிறக்கம்செய்யப்பட்டு, கணினியில் தயாராக இருக்கும்.

மாணவர்கள், 'மவுஸ்' உதவியுடன்,அந்த கேள்விகளுக்கு பதில் அளித்தால் போதும். இதற்கு இணைய வசதி தேவையில்லை.அடுத்த ஆண்டு நடக்கஉள்ள, நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகள், கணினி உதவியுடன் நடக்கஉள்ள முதல் தேர்வு என்பதால், அதில் மட்டும்,

வினாத்தாள் முறையிலும் தேர்வு எழுத மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.

'அ.தி.மு.க., வலியுறுத்தல்

அ.தி.மு.க., - எம்.பி.,யும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை நேற்று பேசியதாவது: 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களால், பிளஸ் 2பாடங்களில் கவனம் செலுத்த முடியாது. இந்த தேர்வுகள், வசதி படைத்த மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.

இதுபோன்ற நுழைவு தேர்வுகளை, மாநிலஅரசுகள் நடத்த அனுமதிக்கப்படாததால் தான், கிராமப்புறங்களில், டாக்டர்கள் குறைவாக உள்ளனர். எனவே, இந்த நுழைவு தேர்வுகளை நடத்த, மாநில அரசுகளை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Sunday, July 29, 2018

எம்.பி.பி.எஸ்., வகுப்பு 1ம் தேதி துவக்கம்

Added : ஜூலை 28, 2018 22:04

சென்னை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவங்குவதாக, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 4,699 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போது, 'நீட்' தேர்வில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங், வரும், 30, 31ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 1ம் தேதி முதல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:அரசு ஒதுக்கீட்டில், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, ஆக., 1ம் தேதி, வகுப்புகள் துவங்குகின்றன. மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை உத்தரவால், இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அந்த முடிவுகள் வெளியானதும், அதில், மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அடிப்படையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, July 28, 2018

Karnataka gets 150 more undergraduate medical seats

The state has got 150 more undergraduate medical seats for the ongoing counselling for the current academic year.

Published: 28th July 2018 05:54 AM 

By Express News Service

BENGALURU: The state has got 150 more undergraduate medical seats for the ongoing counselling for the current academic year.In a direction given by High Court of Karnataka on Friday it has been allowed to admit students for the Koppal Institute of Medical Sciences Koppal which was earlier rejected by the Medical Council of India to admit students due to lack of infrastructure facilities.

Challenging the MCI decision, the state government has approached the High Court and while hearing the petition the High Court has allowed to admit students in the current academic year in the ongoing seat allotment process. Officials from the state department of medical education said that these seats will be added to the second round medical seat allotment for which the schedule has to be announced.
முதல் ஆண்டு மருத்துவம் ஆக., 1ல் வகுப்பு துவக்கம்

Added : ஜூலை 27, 2018 21:54

கோவை, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு, ஆக., 1ல் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், கவுன்சிலிங் நடைமுறைகளை விரைவுப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு ஒதுக்கீட்டில், 3,328; நிர்வாக ஒதுக்கீட்டில், 516 இடங்கள் உள்ளன. பல் மருத்துவமான, பி.டி.எஸ்.,சில், அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,198; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 715 இடங்கள் உள்ளன.மொத்தமுள்ள, 5,757 இடங்களுக்கு, 47 ஆயிரத்து, 347 பேர் விண்ணப்பித்தனர். இதற்கான கவுன்சிலிங் நிறைவடைந்துள்ளன. மாநில ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பியுள்ள நிலையில், மத்திய அரசு இடஒதுக்கீட்டு இடங்கள் இன்னும் நிரம்பவில்லை. ஆக., 1 முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளன. இதைக்கருதி, கவுன்சிலிங் நடைமுறைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:வரும், 1ம் தேதி வகுப்புகள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, மருத்துவக் கல்லுாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பல கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன. மாநில அரசிடம் அவ்விடங்கள் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், விரைந்து நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடைமுறைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை, தயார் நிலையில் வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, July 26, 2018

DGHS CAUTION


மருத்துவ படிப்பு: தரகர்களிடம் ஏமாறாதீர்'

Added : ஜூலை 25, 2018 23:22

சென்னை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலையில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை பெற்று தருவதாக, மாணவர்களை அணுகும் இடைத்தரகர்கள், இதற்காக, பெருமளவு கட்டணம் செலுத்த வேண்டும் என, பணம் பறிக்க முயல்வதாக தகவல்கள் வந்துள்ளன.மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும், மருத்துவ கவுன்சில் குழுவானது, இத்தகைய நடைமுறைகளை ஊக்குவிப்பதில்லை. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இட ஒதுக்கீடுகள், நீட் தேர்வில் பெற்ற தரவரிசையின் அடிப்படையில், இணையதள கவுன்சிலிங் வாயிலாக நடைபெறுகின்றன. இணையதளம் வாயிலாகவே, அந்தந்த கல்லுாரிகளில் நிரப்பப்படும் இடங்களின் விவரமும் வெளியிடப்படுகிறது.எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர், இது போன்ற இடைத்தரகர்கள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களின் வலையில் வீழ்ந்து பணத்தை இழந்தால், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் மற்றும் மருத்துவ கவுன்சிலிங் குழுவோ பொறுப்பாகாது.

Wednesday, July 25, 2018

நீட்' தேர்வு விபரம் 'லீக்' ஆகவில்லை

Added : ஜூலை 25, 2018 04:00

சென்னை: 'நீட்' தேர்வு குறித்த, மாணவர் விபரங்கள் பாதுகாப்பாக உள்ளதாக சி.பி.எஸ்.இ., தெரிவித்துஉள்ளது.மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது. இந்த தேர்வு தொடர்பாக, பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் மாணவர் விபரங்கள் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு விளக்கம் அளித்து, சி.பி.எஸ்.இ.,யின் நீட் தேர்வு இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாடு முழுவதும், 13.26 லட்சம் மாணவர்கள்நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெயர், அலைபேசி எண், இ - மெயில் முகவரி, அவர்களின் சுயவிபரங்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் மிகவும் பத்திரமாக, பாதுகாக்கப்பட்ட தொழில் நுட்பத்தில் வைக்கப்பட்டுள்ளன.நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களின் பதிவு எண் அடிப்படையில்மத்திய அரசின், தேசிய தகவல் மையத்தின் வழியாக வெளியிடப்பட்டன. அதன்பின், மாணவர்களின் விபரங்கள், அந்தந்த மாநில சுகாதாரத் துறைக்கு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்துவதற்காக ரகசிய குறியீட்டு எண் அடிப்படையில் வழங்கப்பட்டுஉள்ளன. எனவே சி.பி.எஸ்.இ.,யில் இருந்து, எந்த மாணவரின் தகவலும் 'லீக்' ஆகவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this

Cash Limit at Home: Income Tax Department can take action if you keep more cash at home than this By  Shyamu Maurya April 30, 2024 Cash Limi...