Showing posts with label world cup. Show all posts
Showing posts with label world cup. Show all posts

Wednesday, February 18, 2015

World cup proving a lovely distraction for students

INDORE: School students who are also fans of cricket are facing a hard time juggling studies and watching matches. Not only students but their parents are also finding it much bothersome to curb their children's enthusiasm during this world cup season. TOI spoke to a few parents and students who are being faced with the tough decision of prioritizing.

Sangeeta Sharma, 49, said, "My son is already a poor student and to make matters worse he is a cricket fan. The cricket world cup has come like a big distraction for him. It is a very critical year for him as his 12th board exams are about to start in March. He has pleaded with me to allow him to watch the world cup so I have permitted him to watch only India matches and on the condition that he will complete his studies first".

Shruti's mother Durga Thakur, 38, said, "My daughter will only be permitted to watch matches if she will perform well in the test that I will be taking before the match. I will allow her to watch the matches only if I find her performance satisfactory".

45-year-old businessman Vinod Jain said, "It is very difficult for me to stop my son from watching the world cup matches as even I am a lover of cricket. So I had instructed my son to prepare for exams well in advance so that we could sit and watch cricket together. My son Soumy is a responsible student so I was not that worried about his studies as he manages his time well".

Reshma Manohar, mother of Yash, said, "I am very worried about my son's exams. He is very excited about the world cup but I know he will waste a lot of time watching the matches. So I have allowed him to watch the match only for one hour instead of watching the whole match and wasting an entire day".

.World Cup vs boards: Parents face a googly.. .During group study , too, discussions swing easily from biology to bouncers.

CHENNAI: The India versus Pakistan match on Sunday set the right mood for this World Cup series for cricket lovers across the country, but parents and students sitting for the board exams this year are finding themselves on a tough wicket.

"My son is keen on watching at least some of the games, and they happen to be the ones before major exams," says Sundar Raman, parent of a Class 12 student. The boy insists that he cannot miss the India vs West Indies, Pakistan vs South Africa and the Australia vs Sri Lanka matches that are being held between March 6 and 8. March 9 is the physics exam for Class 12 CBSE students.

And the smartphones in children's hands haven't helped. A number of apps give updates and snippets about the matches, teams and individual players by the minute, and some are interactive to boot. The excitement gets prolonged to hours before and after the matches, rue parents. "My son has joined Twitter, along with five of his friends, just for the World Cup. So, he is watching the matches on two screens at the same time - on TV and on his phone where he is reading and sending tweets on the match. It's putting me on the edge," said George Felix, father of a Class 10 student.

During group study , too, discussions swing easily from biology to bouncers. The latest fad is commentary in the regional languages. "It's a novel experience for today's children, and they like to tune into it. My daughter tells me that it helps her de-stress after studying for a day , but I feel that it is taking focus away from the exams and flooding her mind with unwanted information," says Geetha Sethuraman, mother of 15-year-old Padma.

Other children have struck bargains with their parents to watch specific parts of interesting matches, as time to unwind. For some, it is the opening part and the slog overs, for others it is the overs played by their favourite star. Some others have a proxy to watch the matches for them and call out when there is an interesting over.

Teachers and parents agree that a blanket ban on watching such a big event would do more harm than good. B Elayaraja, counselling psychologist at 104, says, "A half hour of television viewing shouldn't take students' mind too much off studies, but could give them the required relaxation."

But the problem gets worse towards the semi-finals which come between core exams in all three board -state, CBSE and ICSE. The first semi-final comes just before the Class 12 biology exam in the ICSE board, while the second is on the day of the accounts exam.

Tuesday, February 17, 2015

உலகக் கோப்பையை வென்றா விட்டோம்...?'- இந்திய வீரர்கள் அலுப்பு!



பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், உலகக் கோப்பையை வென்றா விட்டோம்? கொண்டாட்டத்தில் திளைக்க.. என்பதே இந்திய வீரர்களின் கருத்தாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து உலகம் முழுக்க உள்ள இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பாகிஸ்தான் அணியை வீழ்த்தினாலே போதும்... இனிமேல் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லா விட்டால் கூட பரவாயில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. ஆனால் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்த இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடவில்லை என்ற வியப்பு செய்தி வந்துள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்ற அந்த தருணம் குறித்து இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் பி.டி.ஐ நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ''இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமே அடிலெய்ட் நகரில் திரண்டிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். நகரத்தில் உள்ள ஒவ்வொரு இரவு விடுதியும் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இந்திய வீரர்கள் இல்லை. வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தாங்கள் சாதிக்கவில்லை என்றும், உலகக் கோப்பையை வென்றா விட்டோம்? கொண்டாடி திளைக்க என்பதே பெரும்பாலான இந்திய வீரர்களின் கருத்தாக இருந்தது.

இந்த போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களுமே மிகுந்த சோர்வாக இருந்தனர். அதனால் போட்டி முடிவடைந்ததுமே ஹோட்டல் அறைக்கு சென்று விட்டனர். கேப்டன் தோனியும், அணி மேலாளர் ரவி சாஸ்திரி மட்டும் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்து ஏதோ பெரிய டென்ஷன் குறைந்தது போல நிம்மதியாக பேசிக் கொண்டிருந்தனர். அதிகாலையிலேயே அடிலெய்டில் இருந்து மெல்பர்ன் நகருக்கு புறப்படும் விமானத்தில் இந்திய வீரர்கள் கிளம்பிவிட்டனர். மெல்பர்ன் வந்த பின், இந்திய வீரர்கள் இரு நாட்கள் நன்றாக ஓய்வு எடுத்தனர். அதற்கு பின்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டிக்காக தயாராகி வருகின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

தோனியின் 'ஷூ'வை கழற்றி அதிகாரிகள் சோதனை!




அடிலெய்ட் விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் ஷுவை கழற்ற சொல்லி ஆஸ்திரேலிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

கடந்த 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய உலகக் கோப்பை போட்டி அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. அடுத்த நாள் காலை 10.30 மணியளவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு மெல்பர்ன் நகருக்கு திரும்பும் வகையில் விமானடிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டிருந்தது. மெல்பர்னில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி, தென்ஆப்ரிக்க அணியை சந்திக்கிறது.

இதற்காக திங்கட்கிழமையன்று காலை மெல்பர்ன் விமானத்தை பிடிப்பதற்காக ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே இந்திய வீரர்கள் அடிலெய்ட் விமானநிலையத்துக்கு வந்துவிட்டனர். பின்னர் எல்லா பயணிகளையும் போலவே இந்திய வீரர்களும் வரிசையாக நிறுத்தி பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டனர். இந்திய கேப்டன் தோனி தனது உடமைகளை,பரிசோதனை எந்திரத்துக்கு அனுப்பப்படும் டிரேயில் வைத்து விட்டு, பின்னர் மெட்டர் டிடெக்டர் வழியாக அதனை எடுக்க சென்றார்.

தோனி மெட்டல் டிடெக்டரை கடந்த போது அது சத்தம் எழுப்பியதால் அவரை ஆஸ்திரேலிய அதிகாரிகள் மீண்டும் அழைத்தனர். பின்னர் அவரது பேண்ட் பாக்கெட்டை பரிசோதித்தனர். அதில் ஒன்றுமில்லை... இதனைத் தொடர்ந்து மெட்டர் டிடெக்டர் வழியாக தோனி மீண்டும் சென்ற போது அது மீண்டும் ஒலி எழுப்பியது.

இந்த முறை அதிகாரிகள் தோனியின் ஷுவை கழற்றி அதனையும் பரிசோதிக்கும் எந்திரத்துக்குள் வைத்து சோதித்து பார்த்தனர். அப்போது காலணியில் இருந்த சிறிய அளவிலான இரும்பு பொருளே மெட்டல் டிடெக்டர் ஒலி எழுப்ப காரணமென்று அறியப்பட்டது.

இந்திய அணியின் மேலாளர் ரவி சாஸ்திரி அணிந்திருந்த கவ்பாய் தொப்பியில் மெட்டல் இருந்த காரணத்தினால், அவர் மெட்டல் டிடெக்டரை கடந்த போதும் ஒலி எழுப்பியது. இதையடுத்து ரவி சாஸ்திரியையும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் இரு முறை பரிசோதித்தனர்.

ஐஃபோனை விட கிரிக்கெட் பேல்ஸ் விலை அதிகம்!



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பயன்படுத்தப்படும் ஒரு பேல்சின் விலை, ஐ போனை விட அதிக விலை ஆகும்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின்போது பயன்படுத்தப்படும் ஒரு செட் எல்இடி ஸ்டம்புகளின் விலை 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 லட்சம். அதுபோல் ஸ்டம்புகளின் மேல் இருக்கும் இரண்டு பேல்ஸ்களின் விலை தலா ரூ.50 ஆயிரம் ஆகும். இது ஒரு ஐஃபோனை விட அதிகம்.

இந்த ஸ்டம்புகளின் ஸ்பெஷல் என்னவென்றால், பந்து ஸ்டம்பில் பட்ட அடுத்த வினாடியில் விளக்கு எரிந்து விடும். இதனால் நடுவர்கள் எளிதாக அவுட்டா இல்லையா என்பதை தீர்மானித்து விடலாம்.எல்இடி ஸ்டம்புகள் முதல்முறையாக ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் போட்டியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கு பின் கடந்த 2013ஆம் ஆண்டு பங்ளாதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டன. அந்த தொடரில் எல்இடி ஸ்டம்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்தையடுத்து, இந்த உலகக் கோப்பை போட்டியிலும் எல்இடி ஸ்டம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற்ற அணி வீரர்கள், ஓடி போய் ஸ்டம்புகளை கையில் எடுத்து வெற்றியை கொண்டாடுவது வழக்கமானது.இப்போது விலைஉயர்ந்த இந்த எல்இடி ஸ்டம்புகளை தேவையில்லாமல் கையில் எடுக்க கூடாது என்று வீரர்களுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன் தோனி வழக்கமாக வெற்றி பெற்றவுடனேயே ஸ்டம்பைதான் ஓடி போய் கையில் எடுப்பார். இந்த தடை காரணமாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெற்ற போது, தோனி ஸ்டம்புகளை கையில் எடுத்து வெற்றியை கொண்டாடவில்லை. அந்த வகையில் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டு விட்டார்.

Monday, February 16, 2015

Class 12 students of Trichy in a fix over fixtures Harish Murali,TNN | Feb 16, 2015, 04.39 AM IST

TRICHY: When the cricket world cup fever is building up, students of Class 12 and their parents are a worried lot now as it may distract them from concentrating on their studies. Board examination for Class 12 begins on March 5 and ends on March 27.

India, the defending champion, will play three matches in this intervening period — against West Indies on March 6, Ireland on March 10 and Zimbabwe on March 14. Quarter-finals will be played on March 18, 19, 20 and 22, semi-finals on March 24 and 26 and the final on March 29. The world cup schedule and the board exams have put the students in a fix.

M Kesavan, a Class 12 student of a private school, was unable to focus on his preparations for the board examinations as high-flying India cruised to victory against arch-rival Pakistan in its first match.

"This is the worst time for the world cup to begin. Since it happens only once in four years I do not feel like missing it but I also have the responsibility to perform well in my examinations to get a seat in a good college. The cricket match is not allowing me to concentrate on my studies," says Kesavan.

Several students have already begun to argue with their parents to allow them to get at least a glimpse of the close encounters in the matches.

For their part, schools are making Class 12 students to sit in for extra hours and concentrate on studies and not get hooked to TV in watching matches.

M Asha, a school teacher at a government school in Manapparai, has been constantly urging her students to focus on studies and even have been making them to sit in school for extra hours than wasting time at home by watching television. Educationalists say that the education department for long has been maintaining a same schedule for examinations without any consultations.

Tamil Nadu Promoted Postgraduates Government Teachers Association founder president B Veman says that the education department has been maintaining the same time and schedule without prior consultation.

"The school education department has to look at all these factors and plan accordingly than putting the students in a difficult situation," he says.

However, many students stay focussed in their studies as they are well aware that it is the most important examination in their life, says Veman.

There are already several complaints from teachers in Srirangam that the distraction of by-election has made them to work more doubly for students who are going to take up board examinations.

Ever since the campaign began, several school activities were disrupted due to the bursting of crackers and cadres, said a school headmaster.

Sunday, February 15, 2015

கபில் தேவின் 175 ரன் இன்னிங்ஸைக் கண்டு மிரண்டு போனேன்: கிரேம் ஹிக்

1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் கேப்டன் கபில் தேவ் 175 ரன்கள் எடுத்ததை நேரில் பார்த்து மிரண்டு போனேன் என்று ஜிம்பாப்வே நாட்டுக்காரரான முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மென் கிரேம் ஹிக் கூறியுள்ளார்.

கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக்.

இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பதிலி வீரராக பவுண்டரி அருகே பீல்ட் செய்து கொண்டிருந்தேன். எப்படியும் என்னிடம் கேட்ச் கொடுப்பார் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.” என்று கபிலின் உலகப் புகழ் பெற்ற இன்னிங்சை விதந்தோதியுள்ளார்.

கிரேம் ஹிக், இங்கிலாந்துக்கு விளையாடிய ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்தவர். 65 டெஸ்ட் போட்டிகளில் 3,383 ரன்களை 31.32 என்ற சராசரியில் எடுத்தவர். இதில் 6 சதங்கள் 18 அரைசதங்களை அவர் எடுத்துள்ளார். 120 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 3,846 ரன்களை 5 சதங்கள் 27 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ரன்கள் 178, ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: 126 நாட் அவுட்.

முதல் தர கிரிக்கெட்டில் 526 போட்டிகளில் 41,112 ரன்களை 52.23 என்ற சராசரியின் கீழ் 136 சதங்கள், 158 அரைசதங்களுடன் எடுத்தவர். இதில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 405 நாட் அவுட்.

கெவின் பீட்டர்சன் போல் திறமை மிக்க பேட்ஸ்மென் கிரேம் ஹிக். ஆனால் டெஸ்ட் வாழ்க்கையில் இவர் எதிர்ப்பார்க்கப்பட்ட அளவுக்கு சோபிக்கவில்லை. வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் இவரை பாடாய்ப் படுத்தி எடுத்தனர். ஆனாலும் கடினமான பிட்ச்களில் இவரது திறமை பல சமயங்களில் வெளிப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி: ரசிகர்களின் குறையாத எதிர்பார்ப்பு



இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே ரசிகர்களின் இருதயத் துடிப்பு எப்போதும் அதிகமாக இருக்கும். அதிலும் உலகக்கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம்...

உலகக்கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான், இந்தியாவை வீழ்த்தியதேயில்லை என்ற ஒன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை வரும் ஞாயிறன்று நடைபெறும் உலகக்கோப்பை போட்டியை முன்வைத்து கடுமையாக அதிகரித்துள்ளது.

"‘உலகக்கோப்பையை வென்றால் போதும், இந்தியாவுடன் தோற்றால் கவலையில்லை." என்று பாக். முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கூறியதற்கு நேரெதிரான மன நிலையில் உலகக்கோப்பை வெல்வது முக்கியம்தான் ஆனால் பாகிஸ்தானுடன் தோற்றுவிடக்கூடாது என்பதே அதைவிட முக்கியம் என்பதாகவே ரசிகர்களின் மனநிலை இதுவரை இருந்து வந்துள்ளது இப்போதும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்காக ஐதராபாத்தில் ரசிகர்கள் சிலரைச் சந்தித்து இந்தியா-பாக் மோதல் பற்றி ரஞ்சனி ராஜேந்திரா சேகரித்த செய்திகள் வருமாறு:

ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தில் டிரெய்னராக இருக்கும் டி.ராகுல் என்பவர் கூறும்போது, “இந்தப் போட்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம், இந்தியா வெற்றி பெறும் என்று நான் பலமாக நம்புகிறேன். இந்திய பேட்ஸ்மென்களுக்கும், பாகிஸ்தான் பவுலர்களுக்கும் இடையிலான சவாலாக இந்தப் போட்டி அமையும் என்று எதிர்பார்க்கிறேன். இந்திய பேட்டிங் பலமாக உள்ளது.” என்றார்.

நரேஷ் வீரவல்லி என்ற பொறியியலாளர்: "இந்தப் போட்டியை நான் நிச்சயம் பார்க்காமல் விடப்போவதில்லை. நண்பர்களுடன் ஸ்போர்ட்ஸ் பார் அல்லது என் வீட்டில் ஒன்று சேர்ந்து ஆட்டத்தை ரசிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் செய்திருக்கிறோம்.” என்றார்.

குரிஷாப் சிங் என்ற உணவக உரிமையாளர் தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகர். இவர் கூறும்போது, “இந்தியா தோற்றுவிடும் என்று என் உளமனது கூறுகிறது. சமீபமாக நம் அணி சிறப்பாக விளையாடவில்லை. குறைந்த தரமான அணிகளிடம் கூட ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

எனவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வெற்றி சந்தேகத்திற்கிடமாக உள்ளது. ஆனாலும், எனக்கு இந்தப் போட்டி ஆர்வமூட்டுகிறது, இந்தியா எப்படியாவது வென்று விடும் என்றே நான் நினைக்கிறேன். மேலும் அன்று ஞாயிற்றுக் கிழமை வணிக ரீதியாக உணவகத்தில் அதிக கூட்டம் வரும் நாள். ஆனாலும், உணவகத்தில் உள்ள தொலைக்காட்சியில் எப்படியும் லைவ் காட்சிகளை பார்ப்பேன் என்றே கருதுகிறேன்.” என்றார்.

இந்தப் போட்டியில் பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வர்ணனையாளராகச் சேர்க்கப்பட்டுள்ளது, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமிதாபின் குரல் நிச்சயம் அந்த ஆட்டத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை அளிக்கும் என்று பெரும்பாலான ரசிகர்கள் கூறியுள்ளனர்.

உலகக் கோப்பை: சென்னையில் 'கிரிக்கெட் காய்ச்சல்'


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ரசிகர்களிடம் ஆர்வம் மேலோங்கியுள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்கிவிட்டாலும், இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை ஞாயிறன்றுதான் உண்மையிலேயே போட்டி துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டியே பாகிஸ்தானுடனான போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சில தனியார் தொலைக்காட்சிகள், இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை அளிக்கும் ஏற்பாட்டையும் செய்துள்ளன.

காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களை விட்டுவிட்டால், ஒவ்வொரு அணியும் ஆறு ஆட்டங்களில் விளையாடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த முறை பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிகப் பலீவனமான அணியாகவே காட்சியளிக்கிறது.

ஏற்கனவே பலம்வாய்ந்த அணிகளாக இருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் சொந்த மண்ணில் இந்தப் போட்டிகள் நடப்பதால், இந்திய அணியின் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் விமர்சகர்கள்.

சென்னையில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் கேட்டால், இந்த முறை இந்தியாதான் வெற்றிபெறும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள்.

ஆனால், கிரிக்கெட் விமர்சகரான சுமந்த் சி ராமன், இந்த முறை இந்திய அணிக்கு வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் நடந்த எந்த இந்திய - பாகிஸ்தான் ஆட்டத்திலும் இந்தியா தோற்றதில்லை என்பதால், இந்திய ரசிகர்கள் இந்திய- பாகிஸ்தான் போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி மிகப் பலவீனமாக இருப்பதால், இந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிப்பது உறுதி என்கிறார் சுமந்த்.

தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதற்காக விடுதிகளில் பெரிய திரைகளுடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

உலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நினைவுகள்!



'ஏன்டா பரீட்சையை வைச்சுக்கிட்டு அழுக்கு சட்டையோட ஸ்கூலுக்குப் போற?' 'இல்லம்மா, நேத்து இந்த ட்ரெஸ்ல போனதாலதான் எக்ஸாம் ஈஸியா இருந்தது.'

'என்னடி எலுமிச்சை சாதமே கேக்கறே?' 'நேத்து காலைல அதுதான்மா சாப்டேன். இண்டர்வியூல கிளியர் பண்ணிட்டேன். இன்னைக்கு ரெண்டாவது ரவுண்ட கிளியர் பண்ணனும்.!'

நம்மில் எத்தனை பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்? சென்டிமென்ட் என்பது விளையாட்டான விஷயம் சிலருக்கு; ஆனால் விளையாட்டிலேயே சென்டிமென்ட் பார்ப்பவர் பலர். முக்கியமாக கிரிக்கெட் ரசிகர்கள்.

விளையாடும் வீரர்களுக்கு அதுதான் தொழிலே. வாழ்க்கையும் கூட. அவர்களின் சென்டிமென்ட் வேறு. ஆனால் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் புரியும் சென்டிமென்ட் அதகளத்திற்கு அளவே இல்லை. இதோ, உலகக் கோப்பைக்கான அறிவிப்பு வந்துவிட்டது. சூதாட்டம் ஒரு பக்கம்; பரபரப்பைக் கிளப்பும் சர்ச்சைகள் மற்றொரு பக்கம் என இந்த முறையும் ரணகளத்திற்குப் பஞ்சமே இருக்காது.

இதற்கிடையில் கொஞ்சம் ரிலாக்ஸாக, கிரிக்கெட் வீரர்களின் சென்டிமென்டையும், ரசிகர்களின் நம்பிக்கைகளையும் பார்க்கலாமா?

வலது காலை எடுத்து வெச்சு:

இந்தியக் கிரிக்கெட்டின் சுவரான ராகுல் திராவிட், நம் பாரம்பரியத்தை கடைபிடிக்கத் தவறியதில்லை. மைதானத்தினுள் நுழையும்போது தனது வலது காலைத்தான் முதலில் எடுத்து வைப்பாராம்.

முதலில் இடது:

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் முதலில் தன்னுடைய இடது பேடைத்தான் அணிவாராம். நம் சுனில் கவாஸ்கர் பேட் செய்வதற்குப் பொசிஷனுக்கு வருவதற்கு முன்னர் மட்டையைத் தரையில் வைத்துவிட்டுத்தான் இடது காலைச் சரியான நிலையில் வைப்பாராம்.

கைக்குட்டையும் புகைப்படமும்:

இறந்து போன தன்னுடைய தாத்தாவின் நினைவாக அவர் கொடுத்த சிவப்பு நிறக் கைக்குட்டையை ஸ்டீவ் வாஹ் எப்போதும் தனது இடது பாக்கெட்டில் வைத்திருப்பாராம். ஆஸ்திரேலியாக்காரர் ஏன் நம் சவுரவ் கங்குலி கூட விளையாடும்போது தன்னுடைய ஆசானின் நினைவாக அவரின் படத்தைப் பாக்கெட்டில் வைத்திருப்பாராம்.

அணிபவை அதிர்ஷ்டத்துக்கா?

எளிதில் உணர்ச்சிவசப்படும் யுவராஜ் சிங், தான் வைத்திருக்கும் பெரிய கைக்குட்டை, தனக்கு விளையாட்டில் அதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்புவாராம்.

மொஹமத் அசாருதீன் அரங்கில் இருக்கும்போது, கழுத்தில் ஒரு வகையான தாயத்தை அணிந்திருப்பாராம்.

முத்தத்துடன்:

மகிள ஜெயவர்த்தனே தன்னுடைய மட்டையை முத்தமிட்டுத் தன் ஆட்டத்தைத் தொடங்குவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். விக்கெட் எப்போதெல்லாம் விழ வேண்டுமென்று தென் ஆப்பிரிக்காவின் ஹியூஜ் டேஃபீல்ட் நினைக்கிறாரோ அப்போதெல்லாம் தனது தொப்பியில் இருக்கும் துள்ளியோடும் சிறு மானின் படத்தை முத்தமிடுவாராம்.

தனிமையும் இசையும்:

இங்கிலாந்து ஆட்டக்காரரான ஜெஃப்ரி பாய்காட் விளையாடுவதற்கு முன் தன்னுடைய அறையில் சிறிது நேரம் தனியாக இருக்க விரும்புவார். அன்றைய ஆட்டத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே வெளியே வருவாராம். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் பேட் செய்வதற்கு முன் சத்தமான இசையைக் கேட்டுவிட்டுத்தான் ஆடத் தொடங்குவாராம்.

சனத் ஜெயசூர்யா என்ன செய்வார் தெரியுமா? பேட் செய்யும்போது அடிக்கடி தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எதையாவது துழாவுவாராம்.

பார்க்கவே சென்டிமென்ட் :

ஸ்டார் ரசிகரான அமிதாப் பச்சன், நேரடியாக ஒளிபரப்பாகும் ஆட்டங்களைப் பார்ப்பதே அறவே தவிர்த்துவிடுவார்.

உலகமே ஆவலுடன் பார்த்து ரசித்த சச்சினின் ஆட்டத்தை, தான் பார்த்தால் விரைவில் அவுட்டாகி விடுவார் என்ற எண்ணத்தில் அவரின் அம்மா கடைசி ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களை மைதானத்திற்குச் சென்று பார்த்ததே இல்லை.

ரசிகர்களின் நம்பிக்கை

என்ன மாதிரியான விஷயங்களில் எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்மூடித்தனமாக நம்பிக்கை இருந்தது தெரியுமா?

ஆட்டம் தொடங்கும் நாளன்று கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று பிரார்த்தனை செய்தவர்கள் அனேகம் பேர். முந்தைய தடவை இந்தியா ஜெயித்த போது அணிந்திருந்த உடையையே அணிந்தது, கடைசி ஓவரிலோ, முக்கியமான ஆட்ட நேரத்திலோ உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றாமல் அப்படியே இருந்தது.

நண்பர்களில் யாராவது நின்று கொண்டிருந்த போது எதிரணியில் யாராவது அவுட்டானால் ஆட்ட முடிவு வரை அப்படியே அவரை நிற்க வைப்பது, ஒரு தடவை எல்லாரும் பேசிக் கொண்டிருந்தபோது நம் அணி வீரர் விக்கெட் விழுந்ததால் கடைசி வரை மெளன விரதத்தையே அனுஷ்டித்தது.

இந்தியா ஜெயித்தால் இவ்வளவு தேங்காய் உடைக்கிறேன் என்று பிள்ளையாரை வேண்டிக் கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் டிவி இருந்தால்தான் அணி ஜெயிக்கும் என்று அதன் இடத்தை, திசையை மாற்றாமல் இருந்தது.

'ராசி'க்காக நாற்காலியில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கக்கூடாது; கீழேதான் உட்கார வேண்டும் என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தது. வீட்டில் இத்தனையாவது டைல்ஸில்தான் உட்கார்ந்துதான் ஆட்டத்தைக் காண வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களை டார்ச்சர் செய்தது.

நண்பனொருவன் சிறுநீர் கழிக்கப் போனபோது நம் அணி சிக்ஸர் அடித்ததால், அவனைக் கடைசி வரை பாத்ரூமே கதியென்று அங்கேயே இருக்கச் சொன்னது. இந்தியா பாகிஸ்தான் விளையாடும்போது எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொண்டே இருப்பது.

சமையலறையில் இருக்கும் அம்மாவை வெளியே ஹாலுக்கு வந்துவிடக் கூடாது என்று சொன்னது. சாமி படங்களை அருகிலேயே வைத்து அடிக்கடி தொட்டுக் கும்பிட்டுக் கொள்வது. இறுதி ஆட்டம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் என்றால் டிவிக்கு கற்பூரம் காட்டுவது. இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் நடந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊருக்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்த காலகட்டத்தில் கூட்டமாய் அமர்ந்து கிரிக்கெட்டைக் கண்டுகளித்த காலச் சித்திரங்கள் அனேகமாய் எல்லோரின் நினைவடுக்குகளில் அமிழ்த்தப்பட்டிருக்கும்.

ஆர்வத்தோடு ஆட்டத்தைப் பார்க்கும் அப்பாவை, ஆத்திரத்தோடு பார்க்கும் அம்மா, அப்பாவை நேரடியாகத் திட்டாமல், நம்மை 'பயன்படுத்தி' அவரைத் தாளித்த தருணங்களுக்கு கொஞ்சம் போய் வரலாமா?

குண்டாய் இருப்பவர்களை ரணதுங்கா, இன்சமாம் என்றும், ஒல்லியாய் முடிவெட்டாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை ஒலங்கா என்றும் கலாய்த்தோம். ஹிந்தி தெரிந்தது போல ஊருக்குள் பில்டப் கொடுத்து வர்ணனையாளர்களின் கமென்டுகளை குத்துமதிப்பாய் தமிழில் மொழிபெயர்த்தது இன்னொரு வரலாறு.

உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தில் தாண்டி தாண்டி கேட்ச் பிடிப்பவர்களை 'ஜான்டி ரோட்ஸ் மாதிரி வருவடா' என்று பாராட்டினோம். அண்ணனும் தம்பியும் ஒரே மேட்சில் ஆடினால், 'மனசுல பெரிய ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ்னு நினைப்பு' என்று எல்லையில்லாமல் 'வாஹ்'ரினோம்.

எப்பொழுதும் ஓப்பனிங் இறங்குபவரை 'சேவாக்கா நீ?' என்று கேட்டோம். சையது அன்வரின் ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் சாதனையை சச்சின் ஒருநாள் ஆட்டத்தில் முறியடித்துவிடுவார் என்று பல நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அஜய் ஜடேஜா விளையாட வரும்போது பெண்கள் ஆர்வமாய் எட்டிப் பார்த்தது, வீட்டுக்கு மேட்ச் பார்க்க வருபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு பார்க்க விட்டது, எல்லா நாட்டு வீரர்களின் தகவல்கள் இருக்கும் சீட்டுக்கட்டுகளைப் பார்த்து மனப்பாடம் செய்து வெளியில் பெருமையாக சொல்லித் திரிந்தது, இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுப்போன இரவுகளில் விடிய விடிய அழுது படுக்கையை நனைத்தது என இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள்.

பல்கிப் பெருகி விட்ட தொலைக்காட்சி சேனல்களும், மாறியவாழ்க்கை முறையும் எத்தனையோ விஷயங்களைத் தொலைத்துவிட்டாலும் இது போன்ற நினைவுக் கற்றைகள் தான் இன்னமும் நம்முள் ஒளிந்திருக்கும் கிரிக்கெட் 'பால்'யத்தை மீட்டெடுக்கும். எப்போதும் இத்தகைய நினைவுகள் - நாட் அவுட் தான்!

உலகம் ஆடும் இந்திய ஆட்டம்



கிரிக்கெட் என்பது தற்செயலாக ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விளையாட்டு - ஆஷிஷ் நந்தி

பிப்ரவரி 10-ம் தேதி காலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் அலசல்கள் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தன. முன்னணி நிலவரங்கள், வந்துகொண்டிருந்தன. என்.டி.டி.வி.யின் பிரணாய் ராய், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி நிலவரத்தைச் சொல்லப் பயன்படுத்திய உத்தி சுவாரசியமானது. நடப்பு ஸ்ட்ரைக் ரேட் 52%, பெரும்பான்மை பெற அது இன்னமும் அடிக்க வேண்டிய ஸ்ட்ரைக் ரேட் 42% என்றார். கடைசியில் அந்த ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 100-ஐ நெருங்கியது என்பது வேறு விஷயம். தேசமே எதிர்நோக்கியிருந்த ஒரு தேர்தலின் முடிவுகளைச் சுவையாக முன்வைக்க கிரிக்கெட் சார்ந்த சமன்பாடு பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கிரிக்கெட் பிறந்த நாடான இங்கிலாந்தில் தேர்தல் அலசலின்போது கிரிக்கெட் அதில் ஊடாடுமா என்பது சந்தேகம்தான்.

திரைப்படத்துக்கு இணையாகவும், பல சமயம் அதற்கு மேலும் இந்தியர்களின் சிந்தனைகளிலும் மொழியிலும் கிரிக்கெட் தாக்கம் செலுத்திவருகிறது. அதனால்தான் இந்தியர்கள் இன்றைய தினத்தை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டின் ஆகப் பெரிய அரங்கில் ஆகப் பெரிய பெருமிதத்தைத் தரக்கூடிய ஒரு கோப்பையைப் பெறுவதற்கான நீண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று அரங்கேறுகிறது.

மொத்தம் 14 அணிகள். 49 ஆட்டங்கள். முதல் சுற்றில் 42 ஆட்டங்கள். எந்த அணிகள் காலிறுதிக்கு வரும் என்பது கிட்டத்தட்ட தெரிந்த விஷயம்தான். 2007, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்ததுபோல எதிர்பாராத அதிர்ச்சிகள் அரங் கேறினாலொழிய இந்தக் கணக்கில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. எனினும் 14 அணிகளுக்கும் அந்நாடுகளின் ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. அன்றாட உரையாடலின் ஒரு பகுதியாகவும் தினசரிக் கனவின் அங்கமாகவும் அமையப் போகிறது. தொலைக்காட்சிகள், கணினிகள், கைபேசிகள் ஆகியவை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை வரும் இரண்டு மாதங்களிலும் கிரிக்கெட்டோடு பிணைத்து வைத்திருக்கும்.

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு? டெஸ்ட் போட்டிகளோடு ஒப்பிடும்போது நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் பெற்றிருக்கும் வரவேற்பு பல மடங்கு அதிகம் என்பது வெளிப்படை. கிரிக் கெட்டின் ஆன்மா டெஸ்ட் போட்டியில்தான் இருக்கிறது என்றாலும் ஒரு நாள், அரை நாள் போட்டிகளில்தான் பெரும்பாலான மக்களின் உயிர் இருக்கிறது. விறுவிறுப்பும், முடிவுகள் அறியக்கூடிய தன்மையுமே அதற்கான காரணங்கள். ஆனால், ஒரு நாள் போட்டிகள் இவ்வளவு பிரபலமானதற்குக் காரணம் உலகக் கோப்பைப் போட்டிகள் என்பது அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

ஒரு நாள் போட்டியின் வரலாறு

1975-ல் உலகக் கோப்பைப் போட்டி தொடங்கப்பட்டபோது பெரிய கனவுகளோ திட்டங்களோ இல்லை. மற்ற விளையாட்டுகளைப் போல கிரிக்கெட் ஆட்டத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் போட்டித் தொடர் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் யோசனை நடைமுறைக் காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. 1975-க்கு முன்பு ஒருநாள் போட்டிகள் 20-க்கும் குறைவாகவே நடைபெற்றன.

பெரிய கனவுகள் எதுவும் இல்லாமல் தொடங்கப் பட்ட உலகக் கோப்பை இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கிரிக்கெட் உலகின் ஆகப் பெரிய போட்டியாகவும், இதில் கோப்பையை வெல்வது ஆகப் பெரிய கவுரவமாகவும் கருதப்படுகிறது. எண்பதுகளில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வந்த பிறகு அதன் வீச்சே மாறிவிட்டது. ஒளிபரப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் தேர்ச்சிகள் ஆட்டத்தின் நுணுக்கங்களை அனைவருக்கும் துல்லியமாகக் கொண்டுசேர்த்தன. கால் காப்பில் பந்து பட்டதால் ஆட்டமிழக்கும் விதிகள் பற்றிப் பாமரர்களும் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ஒளிபரப்பின் நுட்பங்கள்தான்.

60 ஓவர் போட்டிகளாகவும் டெஸ்ட் போட்டிகளைப் போலவே வெள்ளை ஆடை அணிந்து ஆடும் போட்டிகளாகவும் இருந்த இந்தப் போட்டிகள் காலப் போக்கில் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகிவிட்டன. ஆடைகளின் நிறம், பந்தின் நிறம், ஆடும் நேரம், ஓவர்களின் எண்ணிக்கை, களத்தடுப்பு வியூகம், வைட், நோபால் விதிகள் எனப் பல அம்சங்களில் மாற்றங்கள் வந்துவிட்டன. கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவும் கிரிக்கெட்டின் வீச்சைப் பரவலாக்கவும் இந்த மாற்றங்கள் உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் கிரிக்கெட்டின் ஆதாரமான சில அழகுகளையும் நளினங்களையும் இந்த மாற்றங்களும் அவற்றுக்குக் காரணமான ஒரு நாள் போட்டிகளும் குறைத்துவிட்டன என்ற விமர்சனத்திலும் நியாயம் இருக்கிறது. ரன் எடுப்பதுதான் முக்கியம் என்று வந்துவிட்டால் அழகையும் நேர்த்தியையும் ஓரளவேனும் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். பரவலாக்கம் பெறும் எல்லாக் கலைகளுக்கும் நேரும் நெருக்கடி இது.

ரன் எடுக்க வேண்டும் என்னும் ஆவேசம் அல்லது வெறி கிரிக்கெட்டின் மரபார்ந்த அழகியலைச் சிதைத்தாலும் பல புதுமைகளையும் அது புகுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ், இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னிங்ஸின் கடைசிப் பந்தை அடித்த விதம் அதற்கு ஒரு உதாரணம். ஆஃப் திசையில் வலுவான களத்தடுப்பு அமைத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஆஃப் ஸ்டெம்ப் வரிசையை விட்டு நன்கு வெளியே வந்து லெக் திசையில் அநாயாசமாகத் தூக்கி அடித்து எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பினார். அதுவரை அப்படி ஒரு ஷாட்டை யாரும் அடித்ததில்லை. பின்னாட்களில் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், கில்கிறிஸ்ட், சனத் ஜெயசூர்யா, வீரேந்திர சேவாக், ஏபி டிவிலியர்ஸ் போன்ற பலரும் பல புதுமையான ஷாட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் 50 ஓவர் அதிரடியாளர்கள் மட்டுமல்ல. டெஸ்ட் போட்டியிலும் கைதேர்ந்தவர்கள்.

ஒரு நாள் போட்டிகளும் அதன் உச்ச வடிவமான உலகக் கோப்பைப் போட்டிகளும் ஆட்டத்தின் எல்லைகளைப் பல விதங்களில் விரிவுபடுத்தி யிருக்கின்றன. கிரிக்கெட் ஆடும் நாடுகள் அதிகரித்திருக்கின்றன. பார்க்கும் மக்கள் அதிகரித்திருக்கிறார்கள். ரன் எடுக்கும் வேகம், பந்து வீச்சின் நுணுக்கம், களத்தடுப்புத் திறன்கள், ஆட்டத்தைத் திட்டமிடும் விதம் எனப் பல விதங்களிலும் இது மிகவும் சவால் மிகுந்த வடிவமாகவே இருந்துவருகிறது. 20 ஓவர் போட்டிகளின் கண்மூடித்தனமான வேகம், டெஸ்ட் போட்டிகளின் நிதானம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் நிற்கும் இந்த ஆட்டத்தில் அந்த இரு வடிவங்களின் தன்மைகளும் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. மரபார்ந்த கிரிக்கெட்டின் ரசிகர்கள் பலரும் 20 ஓவர் போட்டிகளை இளக்காரமாகப் பார்க்கிறார்கள். ஆனால், ஒரு நாள் போட்டிகளை அவர்கள் டெஸ்டுக்கு இணையாக மதிக்காவிட்டாலும் அலட்சியப்படுத்து வதில்லை. வரலாற்றின் ஆகச் சிறந்த மட்டையாளரான டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் ஆட்டத்தைப் பார்த்துத்தான் “இந்தப் பையன் ஆடுவது நான் ஆடும் விதத்தை நினைவுபடுத்துகிறது” என்று சொன்னார். பிராட்மேன் காலத்தில் ஒரு நாள் போட்டியே கிடையாது.

மட்டையாளர்களின் ஆட்டம்

விக்கெட் எடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட பந்து வீச்சாளர்கள் ரன்னைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கமும் ஒரு நாள் போட்டிகளின் பங்களிப்புதான். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக வீச வீச, ரன் குவிப்பு குறைந்து, ஆட்டங்களின் விறுவிறுப்பும் குறைவதைக் கண்ட கிரிக்கெட் நிர்வாகம் பந்து வீச்சாளர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. தடுப்பு வியூகத்தில் கட்டுப்பாடுகள், நோ பாலுக்கான புதிய விதிகள் என்று பலவாறாக அமைந்த இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நாள் போட்டிகளைக் கிட்டத்தட்ட மட்டையாளர்களின் ஆட்டமாக ஆக்கிவிட்டன. அதுவும் வேகப் பந்து வீச்சுக்குத் தோதில்லாத ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்கள் வெறுத்துப்போகிறார்கள். மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களால் மட்டுமே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள முடிகிறது. டிவிலியர்ஸ், க்லென் மேக்ஸ்வெல் போன்றவர்களின் கணிக்க முடியாத ஷாட்களால் வீச்சாளர்களுக்கான சவாலும் கூடிக்கொண்டே போகிறது.

இந்த ஆண்டு போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் நடக்கின்றன. நல்ல பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவேனும் உதவும் ஆடுகளங்கள் இந்நாடுகளில் உள்ளன என்பதால் மட்டையாளர்கள் சகட்டுமேனிக்கு வாண வேடிக்கை நடத்த முடியாது. ஆனால், 20 ஓவர் போட்டிகளால் மாறிவரும் மட்டையாட்டத்தின் புதிய பரிமாணங்கள் இங்கும் பந்து வீச்சுக்குச் சவாலாகவே விளங்கும். அதே 20 ஓவர் போட்டிகளால் மேம்பட்டிருக்கும் தடுப்பாற்றலாலும் அசாத்தியமான கேட்ச் பிடிக்கும் திறன்களாலும் மட்டையாளர்கள் அதிர்ச்சிக்குள் ளாவதும் நடக்கும்.

உலகக் கோப்பையை ஒவ்வொரு அணியும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதால்தான் ஜான்டி ரோட்ஸ் போன்ற களத் தடுப்பாளர்களும் ரிச்சர்ட்ஸ், மியாண்டாட், சச்சின், ஜெயசூர்யா கில்கிறிஸ்ட் போன்ற மட்டையாளர்களும் மெக்ரா, ஷேன் வார்ன், ஃப்ளின்டாஃப், ஸ்டெயின் போன்ற வீச்சாளர்களும் திறமைகளின் எல்லைகளைத் தொடர்ந்து மறுவரையறை செய்துகொண்டே இருக்கிறார்கள். பல்வேறு ஜாம்பவான்கள் இல்லாத இந்த ஆண்டின் உலகக் கோப்பை புத்தம் புதியதாய்ப் பல திறமைசாலிகளை அடையாளம் காட்டலாம். பல புதிய ஷாட்களையும் புதிய பந்து வீச்சு நுணுக்கங்களையும் அறிமுகப்படுத்தலாம். அசரவைக்கும் சில கேட்சுகள் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பெறலாம். ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்!

ஆடப்படும் இடங்களையும் பல்வேறு அணிகளின் திறமைசாலிகளையும் பார்க்கும்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பை திருப்தியான விருந்தாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால், இந்திய ரசிகர்களாக மட்டும் இருப்பவர்களுக்கு அது அப்படி அமையும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆஷிஷ் நந்தியின் பார்வையில் இந்திய ஆட்டமான கிரிக்கெட்டை ஒவ்வொரு அணியும் எப்படி ஆடுகிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால் இந்திய ரசிகர்களும் உலகக் கோப்பையின் ஆனந்தத்தில் திளைக்கலாம். இந்திய ரசிகர்களாகவும் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வது மகேந்திர சிங் தோனியின் இளம் படையினர் கைகளில்தான் உள்ளது.

-அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

பந்து வீச்சாளர்களைப் பதம் பார்க்கும் விதிகள் - எஸ்.சசிதரன்

ஆட்ட நுணுக்கங்களுக்காகக் கூர்ந்து கவனிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளிலிருந்து, பொழுதுபோக்கு நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டிகளுக்கு என்று முக்கியத்துவம் மாறியதோ, அன்றே பந்து வீச்சாளர்களுக்கான போதாத காலம் தொடங்கிவிட்டது. முதலில் பவுன்ஸர்களுக்குக் கட்டுப்பாடு. பின்னர், எல்லைக் கோட்டின் தூரம் குறுகியது. பின்னர், பிட்ச்சில் இருந்து 90 அடி தூரத்தில் உள்ள உள்வளையத்துக்கு அப்பால், இத்தனை தடுப்பாளர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பையிலும் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில், வளையத்துக்கு வெளியே நிறுத்தப்படும் தடுப்பாளர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமையும்.

தடுப்பரணில் கட்டுப்பாடுகள் விதிக்கும் ‘பவர் பிளே’யிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பு 3 ஆக இருந்த ‘பவர் பிளே’க்கள் இரண்டாக மாற்றப்பட்டுள்ளன. முதல் 10 ஓவர்களில் முதல் ‘பவர் பிளே’யின்போது இரண்டு பீல்டர்கள் மட்டுமே வளையத்துக்கு வெளியே நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவது ‘பவர் பிளே’, 5 ஓவர்கள் கொண்டது. இது எப்போது என்பதை பேட்டிங் செய்யும் அணி 40-வது ஓவருக்கு முன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்போது வளையத்துக்கு வெளியே மூன்று பேர் மட்டும் நிறுத்தப்பட வேண்டும்.

‘பவர் பிளே’ இல்லாதபோது. உள்வட்டத்துக்கு வெளியே முன்பு 5 தடுப்பாளர்கள்; இப்போது 4. ரவீந்திர ஜடேஜா போன்ற பகுதி நேரப் பந்து வீச்சாளர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற அணிகளுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.

முதல் 25 ஓவர்களுக்கு ஒரு பந்தும், அடுத்த 25 ஓவர்களுக்கு மற்றொரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இது வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். சுழல் பந்து வீச்சாளர்களின் நிலை பரிதாபம்தான். அதே சமயம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியாமல் போகும். பொதுவாக, 30 ஓவர் வீசப்பட்ட பிறகுதான் பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகத் தொடங்கும். ஆனால், 25-வது ஓவரில் புதிய பந்து எடுக்கலாம் என்பது பந்து வீச்சாளர்களுக்கு ஆறுதல் தரும்.

Chennai auto driver to offer free rides if India win World Cup

CHENNAI: Thousands in the city may be on tenterhooks ahead of Team India's clash on Sunday with arch rivals Pakistan in the ICC 2015 World Cup of cricket, but Murugesh Swaminathan is looking beyond the match. The autorickshaw driver, a diehard fan of the national squad, will offer a free ride for commuters for two days if the team manages to return with the Cup for the third time.

Murugesh, who offered the service in 2003, 2007 and 2011, said the gesture was for members of his generation who weren't born when the country first won the World Cup on June 25, 1983. In 2011, for a day after India lifted the Cup, Murugesh ferried more than 20 passengers free of cost, spending 1,500 on fuel alone. "Some didn't agree and forcefully put money in my pocket," said Murugesh.

'Speed Murugesh,' as the 27-year-old is fondly called for his ability to get things done in a jiffy, is concerned about the image of the city's auto dsrivers among the general public and hopes his gesture will help change things.

"He is the youngest but we respect him a lot seeing how he interacts with passengers and the general public," said Muthukumar, a fellow driver at the auto stand in front of Apollo Hospitals on Greams Road in Teynampet.

His 'fame' soon spread and the Tamil Nadu Cricket Association presented him with a cheque for 1 lakh in 2011. "I put in some more money and brought the vehicle in 2012,'' said the man who has been driving an auto for more than 10 years.

On the all-important clash with Pakistan, Murugesh is sure "we will come out in flying colours".

Friday, February 13, 2015

இந்தியா- பாகிஸ்தான் 'டாப்' யாரு?



உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இதோ தொடங்க இருக்கிறது. உலகே உற்று நோக்கும் இந்தப் போட்டிகளில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி மற்ற போட்டிகளை விட விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இந்த இரு அணிகள் மோதும் போட்டியை காண ஆவலாக இருக்கிறார்கள்.
உலகக்கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் 5 முறை சந்தித்து உள்ளன. இதில் 5 முறையும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள இந்தியாவும், புதிய சரித்திரம் படைக்க பாகிஸ்தானும் பலப் பரீட்சை நடத்த இருக்கிறார்கள்.

பேட்ஸ்மேன், பௌலர் மற்றும் ஆல்-ரவுண்டர் என இரு அணிகளையும் ஒரு முறை அலசிப் பார்ப்போமா..?
---------------------------------------------

 இந்தியா    
  ஷிகர் தவான்: 
              ரன் :2095   ஆவரேஜ் :42.7   ஸ்ட்ரைக்ரேட் : 89.56

  ரோகித் ஷர்மா  
             ரன் :38.90   ஆவரேஜ் : 38.90   ஸ்ட்ரைக்ரேட் :81.55
  விராட் கோலி               ரன் : 6232   ஆவரேஜ் : 51.50   ஸ்ட்ரைக்ரேட் : 90.17
  ரகானே            
           ரன் : 1376   ஆவரேஜ்  30.57    ஸ்ட்ரைக்ரேட் : 76.57
  
 ரெய்னா          
        ரன் : 5104     ஆவரேஜ் : 35.44   ஸ்ட்ரைக்ரேட் : 92.98
 டோனி    
          ரன் : 8262  ஆவரேஜ் : 52.29   ஸ்ட்ரைக்ரேட் : 88.84

  ஜடேஜா  
 
       
          ரன் : 1696   ஆவரேஜ் : 33.92    ஸ்ட்ரைக்ரேட் : 84.42    விக்கெட்: 134
 ரவிச்சந்திர அஸ்வின் 
         விக்கெட்: 120    ஆவரேஜ் :32.64
புவனேஸ்வர் குமார்                  விக்கெட்: 45  ஆவரேஜ் : 37.15
முகமது ஷமி                
            விக்கெட்: 70   ஆவரேஜ் : 26.74
 உமேஷ் யாதவ்            
        விக்கெட்: 49     ஆவரேஜ் : 36.44


பாகிஸ்தான் 

நஷீர் ஜம்ஷத்
       ரன் : 1413   ஆவரேஜ் : 33.64   ஸ்ட்ரைக்ரேட் : 76.04
அகமது ஷேஷாத்   
      ரன் : 1985   ஆவரேஜ் : 34.82  ஸ்ட்ரைக்ரேட் : 72.02
யூனிஸ் கான்
        ரன் : 7197   ஆவரேஜ்: 31.56   ஸ்ட்ரைக்ரேட் : 75.32
மிஸ்பா-உல்ஹக்       ரன்: 4772   ஆவரேஜ் : 424.99   ஸ்ட்ரைகரேட் : 73.65
ஷொகைல்
      ரன் : 309     ஆவரேஜ் :34.33   ஸ்ட்ரைக்ரேட் :79.02
உமர் அக்மல்
      ரன் : 2749   ஆவரேஜ் :35.24   ஸ்ட்ரைக்ரேட் :86.47
அப்ரிடி
      ரன் : 7948   ஆவரேஜ் : 23.58   ஸ்ட்ரைக்ரேட் : 116.79  விக்கெட்: 393
யாசிர் ஷா
     விக்கெட்: 2   ஆவரேஜ் :25.50
வகாப் ரியாஸ்      விக்கெட்: 61    ஆவரேஜ் :32.09

ஷொகைல் கான்
      விக்கெட்: 6    ஆவரேஜ் : 33.16
முகமது இர்பான்
      விக்கெட்: 57    ஆவரேஜ் : 29.92

23 வயதில் ஒரு கேப்டன்!




Posted Date : 15:14 (13/02/2015)Last updated : 15:27 (13/02/2015)


இந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆக இளம் வயது வீரர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த உஸ்மான் கானி.

ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பையில் விளையாடியுள்ள 76 போட்டிகளில் 50 ல் வெற்றி பெற்றுள்ளது.

1999 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பை போட்டியில் தோல்வியே காணமால் வெற்றி பெற்று வந்தது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில், காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் பங்ளாதேஷ் அணியில் அதிகபட்சமாக 7 இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இங்கிலாந்து அணி 1979, 1987 மற்றும் 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி மூன்று முறையும் கோப்பையை வெல்லாமல் கோட்டை விட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 338 ரன்கள் குவித்தது. சளைக்காத இங்கிலாந்து அணியும் அதிரடியாக விளையாடி 338 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவதாக பேட் செய்து அதிக ரன் எடுத்த அணி இங்கிலாந்துதான்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிகமுறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணி நியூசிலாந்துதான். இந்த அணி 6 முறை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு தகுதி பெறவில்லை.

உலகக் கோப்பையில் நியூசிலாந்து வீரர் மெக்கல்லம்தான் அதிக வேகமாக அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் கனடா அணிக்கு எதிராக 20 பந்துகளில் 50 ரன்களை அவர் கடந்தார்.

உலகக் கோப்பை போட்டிக்கு மூன்றாவது முறையாக விளையாடத் தகுதி பெற்றுள்ள ஸ்காட்லாந்து அணி, இதற்கு முன் விளையாடியுள்ள 8 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது



உலகக் கோப்பைத் தொடரில், இலங்கை அணி கனடா அணியை 36 ரன்களில் ஆல்அவுட் செய்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக இலங்கை வீரர் லசித் மலிங்கா 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமை சச்சினுக்குதான் உண்டு. 1992 முதல் 2011ஆம் ஆண்டு வரை 5 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 278 ரன்களை அவர் குவித்துள்ளார்.

பெர்முடா அணிக்கு எதிராக கடந்த 2007ஆம் ஆண்டு, இந்திய அணி 413 ரன்களை குவித்தது. இதுதான் உலகக் கோப்பையில் ஒரு அணி குவித்த அதிகபட்ச ரன் ஆகும்.

உலகக் கோப்பைத் தொடரில் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 329 ரன்களை விரட்டி வெற்றி பெற்ற அணி அயர்லாந்து

உலகக் கோப்பைத் தொடரில் மிக விரைவாக சதமடித்த வீரர் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு 50 பந்துகளில் அவர் சதமடித்து அசத்தினார்.

பாகிஸ்தான் அணியின் மூத்த வீரரான சாகித் அப்ரிடி ஐந்தாவது உலகக் கோப்பையில் விளையாடுகிறார்
தற்போதைய பாகிஸ்தான் அணியின் ஒரே இடது கை பேட்ஸ்மேன் ஹாரிஸ் சொகைலிஸ்.

அண்மையில் 31 பந்துகளில் சதமடித்த டி வில்லியர்ஸ் தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன்.

தென் ஆப்ரிக்க அணி மூன்று உலகக் கோப்பை போட்டிகளில் அரையிறுதி வரை முன்னேறி மூன்று முறையும் தோல்வி கண்டுள்ளது.

யு.ஏ.இ அணியில் முகமது தாகீர், குர்ராம் கான் எனும் இரு வீரர்கள் 43 வயது நிரம்பியவர்கள்.

21 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள 23 வயது ஜேசன் ஹோல்டர்தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஆவார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சளைக்காமல் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்துள்ள அணி ஜிம்பாப்வே. தற்போது கத்துக்குட்டி அணிகள் வந்த பிறகுதான் ஜிம்பாப்வே அணி அவ்வப்போது வெற்றியை ருசிக்கிறது.

 

Colleges catch cricket fever, plan to screen matches

COIMBATORE: There's less than 24 hours for the World Cup to start and it's not just cricket lovers who are planning their schedules to take in all the matches. Colleges in the region too are making arrangements to screen the matches since most of them will be broadcast live during college hours.

Colleges are also making arrangements for extra televisions in the hostels for matches that begin early in the day.

India will be playing six league matches to qualify for the quarter finals, and the first encounter is with Pakistan on Sunday at 9am in Adelaide. So, fans in India will have to wake up at 4am to watch the match from the first ball. While Sunday is a holiday for colleges, students will be able to watch it at home. But, for the rest of the days the colleges are making arrangements to ensure that students don't skip classes.

Nehru Group of Institutions is planning to add televisions sets to the TV halls in the hostels. Krishna Kumar, secretary of Nehru Institutions said, "

We organized screenings of the soccer world cup last year. Since all matches were broadcast at night, we arranged for screenings in the hostels. When it comes to cricket, one cannot say no at all. So, we are organizing screening sessions in the hostels."

Sankara College of Science and Commerce is so excited about the world cup, it has distributed the schedule in the form of a pocket card to its students.

"Almost all the students on the campus have the World Cup schedule. Seeing the enthusiasm level, we have planned to organize screenings of important matches in the seminar halls," said Nithya Ramachandran, joint secretary of Sankara Institutions.

Of the six matches in Australia, three will begin at 9am, which is 4am IST. India will play Ireland and Zimbabwe in Hamilton and Auckland in New Zealand, and both matches are scheduled to begin at 6.30am local time. In India, one would have to rise at 1.30am to watch them.

"Besides organizing screening in the seminar halls during the college hours, we have arranged for screening in the hostels keeping in mind the telecast hours," said Ramachandran.

Kumaraguru College of Technology is also making plans to organize screening sessions. Shankar Vanavarayar, joint-correspondent, said, "Students are smarter than us. With smartphones, they are watching the telecast live on their mobile phones or getting live updates after the completion of every over." Despite this, they plan to screen the matches. "The delight of watching it on a big screen is a completely different experience," he said.

While some institutions are allowing the screening of World Cup matches, in other cricket is a strict no-no. A BCom student of an arts and science college on Avinashi Road said, "Our college does not organize such stuff. Students either track the updates on their mobile phones or bunk college." This student is planning to take the day off when India faces West Indies, which begins at 7am (IST) on a Friday. "What better way to start a long weekend of one's own making."

Tuesday, February 10, 2015

2003: சறுக்கிவிட்ட பதற்றம்

உலகக் கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியினர். படம்: வி.வி. கிருஷ்ணன்

மார்ச் 1-ம் தேதியன்று நடந்த அந்த ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் மறக்கவே முடியாது. டாஸை வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன் எடுத்தது. சயீத் அன்வர் 101 ரன் அடித்தார். யூனிஸ் கான் (32), யூசுஃப் (25) ஆகியோரின் உதவியுடன் ஸ்கோர் வலுவான நிலையை எட்டியது.

கோடிக்கணக்கான ரசிகர்கள் தொலைக்காட்சியின் முன் பதற்ற மாக அமர்ந்திருக்க, சச்சினும் சேவாகும் களமிறங்கினார்கள். வழக்கமாக சேவாக்தான் முதல் பந்தை எதிர்கொள்வார். அன்று அவரை மறுமுனைக்கு அனுப்பி விட்டு சச்சின் ஆடத் தயாரானார்.

அதிரடியாக ஆடும் எண்ணம் சச்சின் மனதில் இல்லை. முதல் பத்து ஓவர்களில் பெரிய சேதம் இல்லாமல் பார்த்துக்கொள்வ துடன் ரன் விகிதமும் ரொம்பவும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இந்தியாவின் வியூகம்.

முதல் இரண்டு பந்துகளில் ரன் வர வில்லை. மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி. அடுத்து ஒரு ரன். கடைசிப் பந்தில் சேவாக் ஒரு பவுண்டரி. முதல் ஓவரில் 9 ரன்கள். இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.

அடுத்த ஓவர்தான் போட்டியின் திருப்புமுனை. பதற்றத்துடன் வைட் பால் போட்டு ஓவரைத் தொடங்கிய ஷோயிப் அக்தரின் நான்காவது பந்து நன்கு எகிறி வந்தது. ஆனால் ஆஃப் ஸ்டெம் புக்கு வெளியே வந்தது. அதைப் பார்த்த சச்சின் வேகமாக எதிர் வினை ஆற்றினார். துல்லியமான தருணத்தில் பந்தை எதிர்கொண்டு அப்பர் கட் அடித்தார். பந்து தேர்ட் மேன் திசையில் எல்லைக் கோட்டைத் தாண்டிப் பறந்தது. அடுத்து ஒரு நான்கு. அதை அடுத்து ஒரு நான்கு.

அக்தரின் முதல் ஓவரில் 18 ரன்கள் அரங்கம் அதிர்ந் தது. அதன் பிறகு சச்சினைத் தடுக்க முடியவில்லை. வேகமாக வும் நேர்த்தியாகவும் பந்துகளைப் பதம்பார்த்தார். சேவக் விரைவில் ஆட்டமிழந்தார் (21). கங்கூலி முதல் பந்திலேயே வெளியேறி னார். கைஃப் (60 பந்துகளில் 35) நெடு நேரம் தாக்குப் பிடித்தார். மிக அருமையான சச்சினின் இன்னிங்ஸ் (75 பந்துகளில் 98) முடிவுக்கு வந்தபோது ஸ்கோர் 177-4. ஓவர்கள் 27.4. இன்னும் 22.2 ஓவர்களில் 97 ரன் அடிக்க வேண்டும்.

அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இதே பாகிஸ் தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி யில் சச்சின் 136 ரன் அடித்து ஆட்டமிழந்தபோது இன்னும் 20க்கும் குறைவான ரன்களை அடிக்க முடியாமல் மற்றவர்கள் ஆட்டமிழந்தார்கள். அதுபோலவே இப்போதும் ஆகிவிடுமா என்னும் அச்சம் சூழ்ந்தது.

ஆனால் அப்படி எதுவும் நடக்க வில்லை. நல்ல தொடக்கத்தை வெற்றியாக மாற்றும் கலை இந்தியாவுக்குக் கைவந்திருந்தது. திராவிடும் (44) யுவராஜும் (50) ஆட்டமிழக்காமல் அணியைப் பத்திரமாகக் கரைசேர்த்தார்கள். இந்திய ரசிகர்கள் கோப்பையே கைக்கு வந்ததுபோலக் குதித்தார் கள். “மற்ற போட்டிகள் எக்கேடு கெட்டுப் போனால் என்ன, பாகிஸ் தானை வென்றதே போதும்” என்று இந்திய ரசிகர் ஒருவர் சொன்னதைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஆனால் இந்தியா அப்படி விட்டு விடவில்லை. சூப்பர் சிக்ஸில் கவன மாக ஆடி மூன்று போட்டிகளை யும் வென்று அரையிறுதிக்குச் சென்றது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப் பாக ஆடியது. சச்சின் (97), சேவாக் (66), கங்கூலி (48) ஆகியோரின் ஆட்டத்தால் 292 ரன் எடுத்தது.

வேகப் பந்து வீச்சாளர்களின் அற்புதமான பந்து வீச்சால் 23 ஓவர் களில் 109 ரன்னுக்கு இலங்கை யைச் சுருட்டியது. அதன் பிறகு நடந்த போட்டியில் நியூஸிலாந்தை 45.1 ஓவரில் 146 ரன்னுக்குச் சுருட்டியது. அரை இறுதியில் கென்யாவை எளிதாக வீழ்த்தியது.

தோற்றது ஏன்?

இப்படிப் பந்து வீச்சு, மட்டை வீச்சு இரண்டிலும் பிரகாசித்து இறுதிப் போட்டிக்கு வந்த இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் இந்தியா வாய்ப்பைத் தவறவிட்டது.

அதற்கு முக்கியக் காரணம் ஆஸ்திரேலியாவின் ஆட்டம். குறிப்பாக அணித் தலைவர் ரிக்கி பாண்டிங்கின் ஆட்டம். ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 140 ரன் எடுத்தார். அடுத்த காரணம் இந்தியாவின் பதற்றம். நன்றாக வீசிக்கொண்டிருந்த இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடரிலேயே மோசமாக இறுதிப் போட்டியில் வீசினார்கள். உச்சகட்ட சவாலில் ஆக மோசமாகப் பந்து வீசினார்கள்.

கங்கூலி என்னென்னமோ செய்துபார்த்தார். மொத்தம் எட்டுப் பேர் பந்து வீசினார்கள். ஹர்பஜன் சிங் மட்டுமே 2 விக்கெட் எடுத்தார். ஆடம் கில்கிறிஸ்ட் (57), மேத்யூ ஹைடன் (37), ரிக்கி பாண்டிங் (ஆட்டமிழக்காமல் 140), டேமியன் மார்ட்டின் (ஆட்டமிழக்காமல் 88) ஆகியோர் இந்தியப் பந்து வீச்சை நார் நாராகக் கிழித்தார்கள். ஸ்கோர் 359-2.

பதற்றம் மட்டை வீச்சிலும் தொடர்ந்தது. முதல் ஓவரில் க்லென் மெக்ரா பந்தில் நேர்த்தி யான ஒரு பவுண்டரி அடித்த சச்சின் அடுத்த பந்தை ஹுக் செய்ய முயல, பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு மெக்ராவிடமே கேட்சாக மாறியது. இந்தியர்களின் நம்பிக்கை சரிந்தது.

சேவாக் (82), திராவிட் (44), கங்கூலி (24), யுவராஜ் (24) என்று மற்றவர்கள் போராடினாலும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. எடுக்க வேண்டிய ரன் விகிதம் 7க்கு மேல் இருந்தது. ஒவ்வொரு ஓவருக்கும் அது அது ஏற ஏற இந்தியாவின் வெற்றி வாய்ப்பு இறங்கிக்கொண்டேபோனது. 39.2 ஓவர்களில் 234 ரன் எடுத்து இந்தியா ஆட்டமிழந்தது. 125 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வெல்லும் கனவு சிதைந்தது.

தொடர் முழுவதும் இருந்த கட்டுக்கோப்பும் முனைப்பும் கடைசிக் கட்டத்தில் சிதறியதால் இந்தியா தோற்றது. இறுதிப் போட்டி குறித்த பதற்றம் நோபாலுடன் தொடங்கிய ஜாகீரின் முதல் ஓவரிலேயே தெரிந்தது. அந்த ஓவரில் அவர் பத்துப் பந்துகள் வீசினார்.

நல்ல பந்து வீச்சையே சிதற அடிக்கும் ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் பதற்றமும் பிழைகளும் மலிந்த பந்து வீச்சைச் சும்மா விடுவார்களா? போராடி உச்சம் தொட்ட இந்தியா பதற்றத்தில் கோப்பையைத் தவறவிட்டது.

கென்யா ஏற்படுத்திய ஆச்சரியம்

2003 போட்டிகளில் ஆச்சரியம் ஏற்படுத்திய அணி கென்யா. பலவீனமான அணிகள் தம்மை எதிர்த்து ஆடும் வலுவான அணிகளின் ரன் விகிதத்தைக் கணிசமாகக் கூட்டிக்கொள்ளவே பயன்படும் என்பதே இதுபோன்ற தொடர்களின் நிலைமை. கென்யாவும் அப்படிப்பட்ட அணிதான். ஆனால் அது வலுவான அணிகளுக்குக் கடும் அதிர்ச்சியைத் தந்தது.

தென்னாப்பிரிக்காவுடன் தோற்ற கென்யாவுக்கு கனடாவுடனான போட்டியில் வெற்றி கிடைத்தது. நியூஸிலாந்து போட்டியில் தற்செயலாக வெற்றி கிடைத்தது. நைரோபியில் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து அங்கே ஆட வர மாட்டோம் என்று நியூஸிலாந்து அறிவித்ததால் கென்யா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் இலங்கையுடனான போட்டியில் கென்யா இலங்கையை 157 ரன்னுக்குள் சுருட்டி 53 ரன் வித்தியாசத்தில் வென்றது உண்மையிலேயே ஆச்சரியமான திருப்பமாக அமைந்தது. பிறகு பங்களாதேஷை வென்று நான்கு வெற்றிகளுடன் சூப்பர் சிக்ஸுக்குள் நுழைந்தது. வலுவான தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றோடு வெளியேறின.

சூப்பர் சிக்ஸில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தாங்கள் ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்றன. ஜிம்பாப்வே மூன்றிலும் தோற்றது. தலா ஒரு வெற்றி பெற்ற இலங்கை, நியூஸிலாந்து, கென்யா அணிகளில் ரன் விகித அடிப்படையில் கென்யா அரை இறுதிக்கு முன்னேறியது. அங்கே இந்தியாவிடம் தோற்றாலும் அரை இறுதிக்கு வந்த பெருமிதத்துடன் வெளியேறியது.

Monday, February 9, 2015

WINNER LIST 1975-201

Cricket World Cup 2015 Match Schedule – World Cup 2015 POOL

இந்தியா-பாக். போட்டி: விமான நிறுவனங்கள் கட்டண கொள்ளை!



உலகக் கோப்பை போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளின் மோதலுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. விற்பனையான 50 ஆயிரம் டிக்கெட்டுகளில் 20 ஆயிரம் டிக்கெட்டுகளை இந்தியர்கள் வாங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான ரசிகர்கள் ஆஸ்திரேலியாவின் பிற நகரங்களான சிட்னி, மெல்பர்ன் மற்றும் பிரிஸ்பேன் நகரங்களை சேர்ந்தவர்கள்

இந்த போட்டியையொட்டி அடிலெய்ட் நகரத்தில் ஆயிரக்கணக்கான ஹோட்டல் அறைகள் நிறைந்து விட்டன. ஞாயிற்றுக்கிழமை வேறு இந்த ஆட்டம் நடைபெறுவதால், வார விடுமுறையை கழிப்பவர்களும் ஹோட்டல் அறைகளை புக் செய்துள்ளனர். இதனால் போட்டியை காண டிக்கெட் வாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அடிலெய்டில் நகரில் ஹோட்டல் அறைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அடிலெய்ட் அருகில் உள்ள குட்டி குட்டி நகரங்களிலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹோட்டல்கள் அதிக கட்டணங்கள் வசூலிக்கின்றன. சாதாரணமாக 100 ஆஸ்திரேலிய டாலருக்கு கிடைக்கும் அறைகள் இப்போது 250 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு புக் செய்யப்படுகிறதாம்.

அதோடு இந்த தருணத்தை பயன்படுத்தி விமான நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. சாதாரணமாக சிட்னியில் இருந்து அடிலெய்டுக்கு 300 ஆஸ்திரேலிய டாலர்களில் சென்று விடலாம். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் மோதலை முன்னிட்டு 800 ஆஸ்திரேலிய டாலர்கள் என விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் டிக்கெட் வாங்கிய போதே அறைகள் மற்றும் விமான டிக்கெட்டுகளை புக் செய்யத் தவறிய ரசிகர்கள் இப்போது தவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 4 பேர் அடங்கிய இந்திய குடும்பம் இந்த போட்டியை காண வேண்டுமென்றால், குறைந்தது 5 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்களை செலவு செய்ய வேண்டிய கட்டயாத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த எதிர்பாராத விலைஉயர்வு காரணமாக, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட்டுகளை வாங்கிய 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள், போட்டியை காண அடிலெய்டுக்கு செல்வதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...