Wednesday, March 30, 2016

A tragic story that made judges rethink homicide

A tragic story that made judges rethink homicide

TIMES OF INDIA

CHENNAI: Road accidents are but a mere data for government, but how a mishap could ruin people's lives and wreck families is best explained by this tragic story of A Steepen.

Born into a poor family and completed engineering course with great difficulty, Steepen landed a decent job and fell in love with Sangeetha. Fortunately, both the families supported their relationship and they got married soonafter. They were blessed with a child.

A fraction of a moment on October 22, 2008, when Steepen's car dashed against a roadside tree, changed his life upside down, forever.

Rushing back to his office in Chennai after visiting ailing father in Vellore district, Steepen's car hit a roadside tree, killing his young wife on the spot and leaving himself and his five year old son badly injured. Steepen was crippled by serious injuries and could not move around without crutches, and, consequently, lost his job as well. By the time he recovered, all the jewellery and cash kept at his home in Chennai had been cleaned out by his in-laws who demanded more 'refund' of the expenses incurred after Sangeetha's death.

With medical bills and debts mounting and family struggling to meet even basic needs of the child, depression set in. Less than a year after the accident - on July 8, 2009, to be precise - Steepen gave 'some unidentified poison' to his son and he himself attempted suicide by hanging. The child died, whereas Steepen survived, only to face murder charge. He was convicted for murder, and sentenced to undergo imprisonment for life in June 2010.

It was when the criminal appeal against his conviction was taken up for hearing by a bench of Justice M Jaichandren and Justice S Nagamuthu, that all these details tumbled out. His counsel and chairman of Bar Council of Tamil Nadu and Puducherry D Selvam narrated the tragic sequence of events, and pointed out that Steepen was under immense stress and depression and hence he did not deserve life imprisonment.

To test his claim, the bench summoned two psychiatrists - Dr Ranjani and Dr Mythili - who treated Steepen to the court and re-examined their earlier statements. Their reply was that Steepen suffered from a major depressive disorder, and said they had even warned hospital staff to keep a close vigil on the patient as there was every likelihood that he might attempt to commit suicide due to the illness.

Convinced that the circumstances were peculiar and Steepen had a grave mood disorder during commission of the crime, the judges said: "It is not every homicide which is made punishable under IPC. It is only culpable homicide which is punishable...Fundamentally what is required is that the accused should have had the intention or knowledge which are traceable to the cognitive faculty of the accused. A person, who is of unsound mind, who does not know the consequences of the act that he does, cannot be attributed with either intention or knowledge as required under Section 299 IPC."

So saying, the bench set aside Steepen's conviction and ordered his immediate release.

சோகத்தால் மனவேதனை: மகனை கொன்ற தந்தைக்கு விடுதலை

DINAMALAR

சென்னை:'அடுத்தடுத்த சோகத்தால் பாதிக்கப்பட்டு, மனவேதனைக்கு ஆளான தந்தை, தன் மகனுக்கு துாக்க மாத்திரை கொடுத்தது, கொலை குற்றம் ஆகாது' என, சென்னை உயர் நீதிமன்றம், பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்தது.சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர், ஸ்டீபன். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய இவர், சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, ஐந்து வயதில், ஒரு ஆண் குழந்தை இருந்தது.

வேலுார் அருகில், ஸ்டீபனின் பெற்றோர் வசித்து வருகின்றனர். தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தகவல் கேள்விப்பட்டு, மனைவி, மகனுடன், வேலுார் புறப்பட்டு சென்றார். அதன்பின், பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே, உடனடியாக, மனைவி, மகனுடன் சென்னை புறப்பட்டார்.காரில் வரும்போது, மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில், மனைவி சங்கீதா இறந்தார். ஸ்டீபனுக்கு, இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது.

வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், ஸ்டீபன் சேர்க்கப்பட்டார். மகனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2008, அக்டோபரில், சம்பவம் நடந்தது.

ரூ.2.5 லட்சம்:விபத்துக்கு பின், சங்கீதாவின் உடல், சென்னை கொண்டு வரப்பட்டு, கணவன் இல்லாமலே இறுதி சடங்கு நடந்தது. அப்போது, ஸ்டீபன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை செலவு, 2.5 லட்சம் ரூபாய் ஆனது.சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய ஸ்டீபனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த, 50 சவரன் நகையை காணவில்லை. விசாரித்தபோது, மாமனார் எடுத்து சென்றது தெரியவந்தது. மகளின் இறுதி சடங்குக்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், அந்த பணத்தை தரும்படி, மருமகனிடம் கேட்டார்.

வேலையும் இல்லாமல், குடும்ப செலவுக்கும், சிகிச்சைக்கும் கையில் பணமும் இல்லாமல், ஸ்டீபன் தவித்தார்; வாழ்க்கையில், விரக்தி ஏற்பட்டது. மகனுக்கு, துாக்க

மாத்திரைகளை கொடுத்தார்.


மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், மாமனார் வீட்டுக்கு, மகனுடன் சென்றார். அங்கு, மாமியார் மட்டும் இருந்தார். வீட்டுக்குள் சென்று, கதவை பூட்டி கொண்டார்; துாக்கு மாட்டினார்; எடை தாங்காமல், கம்பி அறுந்து கீழே விழுந்தார். துாக்க மாத்திரை சாப்பிட்ட, மகன் இறந்தான். இது, 2009 ஜூலையில் நடந்தது.மாமியாரின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்தனர்; கதவை உடைத்து உள்ளே சென்றனர். இருவரையும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகன், இறந்து விட்டான்; சிகிச்சையினால், ஸ்டீபன் உயிர் பிழைத்தார்.


இதையடுத்து, ஸ்டீபன் மீது, கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த, சென்னை, விரைவு நீதிமன்றம், ஸ்டீபனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், நாகமுத்து அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஸ்டீபன் தரப்பில், வழக்கறிஞர் டி.செல்வம், அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகினர்.


குற்றமாகாது:மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

சிகிச்சை அளித்த டாக்டரின் விளக்கம் மற்றும் அவரது கருத்தில் இருந்து, 'ஸ்டீபன், சுய கட்டுப்பாட்டில் இல்லை; அவரது செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றி, அவர் அறிந்திருக்கவில்லை' என்பது தெரிகிறது.மருத்துவ சாட்சியத்தை பார்க்கும்போது, சம்பவம் நடக்கும் போது, ஸ்டீபனின் மனநிலை சரியில்லாமல் இருந்தது தெளிவாகிறது. எனவே, அவரது செயல், கொலை குற்றமாகாது. விடுதலை பெற, ஸ்டீபனுக்கு உரிமை உள்ளது. தண்டனையில் இருந்து, ஸ்டீபனை விடுதலை செய்கிறோம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 29, 2016

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி


ரயில்கள் புறப்படும் முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும். ஆனால், கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் மீண்டும் கவுன்ட்டருக்கு சென்று விண்ணப்பித்து பணத்தை திருப்பப் பெற வேண்டும். இந்த நிலைதான் தற்போது இருக்கிறது.

இந்நிலையில், கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு டிக்கெட் ரத்து செய்யும் புதிய திட்டம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள் ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறுவோர் அதை ரத்து செய்ய வசதியாக இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். உடனடியாக செல்போன் மூலம் ரத்து செய்வதால், திரும்பப் பெறும் கட்டணமும் பெரிய அளவில் இழப்பில்லாமல் கிடைக்க வாய்ப்புள்ளது. 139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி முழுவிவரங்களையும் அளித்த பின்னர், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வோர்டு) வரும். இதை உறுதி செய்த பின்னர், டிக்கெட் ரத்தாகும். பயணிகள் காலம் தாமதிக்காமல் அதே தினத்திலேயே அருகில் உள்ள கவுன்ட்டருக்கு சென்று, பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றனர்.

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..? சோம.வீரப்பன்

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..? சோம.வீரப்பன்

எனது நண்பர் ஒருவர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையின் மேலாளர். நேர்மையானவர், திறமையானவர். சமீபத்தில் அவரது தூரத்து உறவுப் பையன் குமார் (இந்தப் பெயர் பிடிச்சிருக்கா..) அவரிடம் வேலை கேட்டு வந்தார். வயது 23, படிப்பு பிளஸ்டூ. நிறையப் பேசினார். வெட்டிப் பேச்சென்பது சட்டெனப் புரிந்துவிட்டது. 4 ஆண்டுகளில் 5 வேலைகள் மாறியிருந்தார். நண்பருக்கு தர்மசங்கடம். தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். முதலில் சம்மதிப்பவர்கள் குமாரைப் பார்த்ததும் பயந்து மறுத்து விடுவார்கள். வேறு வழியின்றி தனது அலுவலகத்திலேயே எடுபிடி வேலைக்கு வைத்துக் கொண்டார். குமார் எதையும் ஒழுங்காய்ச் செய்யாவிட்டாலும் நண்பரின் பதவி காரணமாக மற்றவர்கள் சகித்துக்கொண்டனர்.
ஆறு மாதம் கழித்து டெஸ்பாட்ச் பகுதியில் ஓர் எழுத்தர் வேலை காலியாய் இருப்பது தெரிந்ததும் குமார் நம் நண்பரை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். நண்பருக்கு ‘நாம் இந்த நிறுவனத்திற்கு எவ்வளவோ உழைத்திருக்கிறோம். நமக்கு வேண்டிய ஒருவருக்கு உதவினால் தப்பில்லை' என்கிற எண்ணம் வந்து விட்டது. அலுவலகத்தில் பலரையும் சரிக்கட்டி அந்த வேலையை குமாருக்கே வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனால் குமார் குமாரராகவே இருந்தார். பின்னே என்ன? பிச்சைக்காரனை ராஜமுழி முழிக்கச் சொன்ன கதைதான்! அவ்வேலைக்கு வேண்டிய சுறுசுறுப்போ, மற்றவர்களிடம் வேலை வாங்கும் சாமர்த்தியமோ குமாரிடம் சுத்தமாக இல்லை! ஆவணங்கள் போய்ச் சேர தாமதமாயிற்று. பல புகார்கள் குவிந்தன.
ஆனால், கொடுமை என்னவென்றால், குமார் என்ன தவறு செய்தாலும் எல்லோருக்கும் உடனே நம்ம நண்பர் ஞாபகம் தான் வரும்! அவர்கள் குமாரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நம்ம நண்பரையே சாட ஆரம்பித்து விட்டனர்! அவருக்கு நிறுவனத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் போயின!
அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்புடமை காரணமாக தேர்ந்தெடுப்பது எல்லா மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்கிறது குறள். உங்கள் அனுபவத்திலும் பார்த்திருப்பீர்கள். பணியமர்த்து வதற்கான, பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்துபவர்களுக்குப் பல சிபாரிசுகள் வரும். கைதூக்கி விடுங்கள் என்பார்கள். ஐயா, இது என்ன தர்மகாரியமா? கொஞ்சமும் தகுதியற்றவனைத் தேர்ந்தெடுக்கலாமா? நிறுவனம் என்னவாகும்? கள்ளிச் செடியையா நடுவது?
தொழிலில் வெற்றி பெற்ற வளர்ச்சியடைந்த குடும்பங்களிலும் இதே கதை தான். எனக்குத் தெரிந்த ஒருவர் கோடிக்கணக்கில் வர்த்தகம் புரிந்து வந்தார். தனது மகனை பள்ளிப்படிப்பிற்கே ஸ்விட்சர்லாந்து அனுப்பி இருந்தார். மகன் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் எல்லாப் பொறுப்புக்களையும் கொடுத்தார். ஆனால் மகனுக்கோ இங்கிருந்தது ஒன்றும் பிடிபடவில்லை. அண்ணே, பிள்ளைகளை முதலாளி ஆக்குவது வேறு; நிறுவனத்தை நடத்தச்சொல்வது வேறு!
கார் ஓட்டப்பழகிக் கொண்டிருப்பவனிடம் போய் நாம் பயணிக்கும் பெரிய பஸ்ஸைக் கொடுக்கலாமா? அது அவனுக்கும் நமக்கும்கூட ஆபத்தானதாயிற்றே! அலுவலகப் பணிகள் ஆற்றலைப் பார்த்து கொடுக்கப்படவேண்டியவை. அங்கு பச்சாதாபமோ பாசமோ பார்ப்பது காலப்போக்கில் எல்லோருக்கும் தீங்காய் முடியும்!

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

பேதமை எல்லாம் தரும் (குறள் 507)

- somaiah.veerappan@gmail.com

Bleak future for retired staff


Bleak future for retired staff

R. SRIKANTH


There has been a delay in disbursal of pension and other retirement benefits to them

Thousands of former employees of the eight transport corporations in the State no longer have the pleasure of a ‘happy’ retired life, as they are staring at an uncertain financial future. The reason is delayed payment of pension and other retirement benefits.

The delayed payment of commuted pension, dearness allowance arrears and in certain cases the pension amount itself is driving employees to take desperate measures. More than 8,000 retired employees are running from pillar to post to get their pension benefits.

M. Natarajan, who worked as a driver for Tirunelveli Transport Corporation at Kovilpatti depot, distressed at having to wait for several months to get the commuted pension amount, committed suicide.

The family members of R. Jayaraman, who worked as a driver in the Metropolitan Transport Corporation (MTC) at Basin Bridge depot, were not able to save him, because of lack of funds.

Mr. Balakrishnan said except for employees of MTC and State Express Transport Corporation (SETC) the other six transport corporations — Madurai, Villupuram, Kumbakkonam, Salem, Tirunelveli and Coimbatore — have been defaulting on various retirement benefits.

Arumugam Nainar, secretary, Tamil Nadu State Transport Employees Federation, said what was disheartening was the manner in which the commuted pension (one-third amount of the total pension amount paid in advance) entitled to an employee at the time of retirement was yet to be paid, but that ‘recovery’ was being carried out.

At present the commuted pension has been proposed to be paid in 24 monthly instalments, literally making a mockery of the commutation of pension system, he also added.

Shifting of 141 MBBS students

Shifting of 141 MBBS students



Balwant Garg

Tribune News Service

Faridkot, March 28

The Department of Medical Education and Research (DMER), Punjab, Baba Farid University of Health Sciences (BFUHS) and the administration of eight medical colleges in the state today allowed adjustment of 141 MBBS final-year students of Chintpurni Medical College and Hospital (CMCH), Pathankot, subject to certain conditions.

These students will not get stipend till the Punjab government gets Rs 10 crore from the Medical Council of India (MCI).

All 141 medical students have been shifted to three government and five private medical colleges in the state.

While every MBBS students is provided stipend by its college for one-year internship after the completion of academic course, it would not be so in case of these 141 students. These students will not get any stipend from their new college unless the MCI pays Rs 10 crore of endowment funds to the state government.

This endowment of Rs 10 crore was deposited by CMCH with MCI on the directions of the Supreme Court last year after it failed to comply with the MCI norms in providing infrastructure in the medical college.

The Secretary, DMER, has written a letter to the MCI that endowment fund of Rs 10 crore should be transferred to the Punjab government and this amount will be utilised for meeting fee and other expenses for education and training of these shifted students, said Dr Raj Bahadur, vice-chancellor, BFUHS.

As these 2011-batch students have already paid their full fee to CMCH for their four-and-a-half-year academic course, their new colleges will get the fee from the endowment fund after the state government receives the same from the MCI.

Of these 141 students, 26, 26 and 15 are being shifted from CMCH to government medical colleges at Patiala, Amritsar and Faridkot, respectively.

Ludhiana-based Christian Medical College and Dayanand Medical College each will take the responsibility of 10 shifted students.

Gian Sagar Medical College, Banur; Sri Guru Ramdas Medical College, Amritsar; and Adesh Institute at Bathinda will adjust 18 students each.

Forty-six of these 141 students have already passed their academic course and have to complete one-year compulsory internship. Other 95 students will appear in their final year Part-II examinations in May 2016.

As the eight medical colleges will not be able to provide the adjusted students with hostel facilities, they will have to stay and attend the new college at their own expenses. All students who are due for internship should follow the migration procedure as laid down by BFUHS.

In a meeting attended by DMER director, vice-chancellor and registrar of BFUHS and principals and heads of eight medical colleges today, it was agreed that infrastructure and staff, including faculty, was available in all medical colleges except Gian Sagar Medical College, Banur.

The faculty of this private medical college is on strike for the last over a month after the management failed to pay them salary.

- See more at: http://www.tribuneindia.com/mobi/news/punjab/shifting-of-141-mbbs-students-of-pathankot-college-allowed-with-riders/214585.html#sthash.TRnG13AQ.dpuf

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா


ஜப்பானின் டொயோடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது இனோவா. சொந்த உபயோகத்துக்கான வாகனம் மட்டுமின்றி வாடகைக்கார் நிறுவனங்களின் பெரும்பாலான தேர்வு இனோவா என்றால் அது மிகையில்லை.
எந்த ஒரு நல்ல தொடக்கமும் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் இனோவா உற்பத்தியை நிறுத்திவிட டொயோடா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய பிராண்டான கிறிஸ்டாவை சந்தைப்படுத்த உள்ளது டொயோடா. அனேகமாக இனோவாவுக்கு பிரிவுசார விழாவே பெங்களூரில் உள்ள ஆலையில் நடத்தப்பட்டுவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்ற டொயோடாவின் புதிய வரவான கிறிஸ்டா, இனி இந்தியச் சாலைகளில் வலம் வர உள்ளது.
இனோவாவுக்கு மாற்றாக வரும் கிறிஸ்டா அதைவிட பல மடங்கு மேம்பட்டது. இது இனோவாவை விட நீளமானது. அதைவிட அதிக திறன் கொண்ட இன்ஜின் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தற்போது இனோவா மாடல் காரின் விலை ரூ.17 லட்சமாகும். புதிய மாடல் கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சமாக இருக்கும் என தெரிகிறது.
இனோவாவைவிட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கொடுக்கும் தொகைக்கு மிகவும் உண்மையான உழைப்பு மற்றும் சொகுசான பயணத்தை அளிக்கக் கூடியது என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்டா 2.4 லிட்டர் இன்ஜின் 2ஜிடி எப்டிவி நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டது. இது 142 பிஹெச்பி சக்தியும் 342 நியூட்டன் மீட்டர் டார்க் அளவையும் கொண்டது. இது லிட்டருக்கு சோதனை ஓட்டத்தின்போது 14 கி.மீ முதல் 16 கி.மீ. தூரம் ஓடியதாம். 5 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் மாடலில் 6 கியர்களைக் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உள்புறம் மிகவும் உயர் ரக தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. பயணிகள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்க போதிய இடவசதி, 7 அங்குல தொடுதிரை மானிட்டர் மிகச் சிறந்த பொழுது போக்கு அம்சங்களை அளிக்கக் கூடியது. போதிய விளக்கு வசதி, சூழலுக்கேற்ப உள்புற குளிர் நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதே பிரிவில் உள்ள பிற நிறுவன தயாரிப்புகளைக் காட்டிலும் இனோவாவுக்கு அதிக கிராக்கி இருந்ததற்கு அதன் செயல்பாடு மட்டுமின்றி விலையும் ஒரு காரணமாக இருந்தது. கிறிஸ்டாவும் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்ந்து பிற நிறுவனத் தயாரிப்புகளுக்குச் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. டொயோடா நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதோடு முந்தைய மாடலை முற்றிலுமாக நிறுத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
முன்பு குவாலிஸ், தற்போது இனோவா.
புதிய வரவுகள் பழையனவற்றை அடித்துச் செல்லும். கிறிஸ்டாவின் வரவு இனோவாவை ஓரங்கட்டிவிட்டது.

பொருளாதார வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்தது சரியே: ஜேட்லி திட்டவட்டம்

பொருளாதார வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்தது சரியே: ஜேட்லி திட்டவட்டம்

THE HINDU
பிபிஎப் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்தது சரியான நடவடிக்கையே என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை ஏற்படுத்தக் கூடியது என்று கூறினார்.

இதுகுறித்து இன்று அருண் ஜேட்லி கூறியதாவது:

"சிறு சேமிப்புகளுக்கு வரி விலக்கோடு 8.7 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் அளிக்கப்படும் வட்டி 12 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது. இதனால் தொழில்துறைக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 14 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விதிக்க வேண்டியிருக்கிறது.

சிறு சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி மிகவும் அதிகமாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது.

உதாரணமாக பிபிஎப்-புக்கு அளிக்கப்படும் 8.7 சதவீத வட்டி மற்றும் அளிக்கப்படும் வரிச் சலுகையோடு கணக்கிடும்போது அது 12.5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

ஆனால் சர்வதேச அளவில் 12.5 சதவீத வட்டிக்குக் கடன் கிடைக்கிறது. 12.5 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி அதை 14 சதவீதம் முதல் 15 சதவீத வட்டிக்கு விடுவது எப்படி எளிதாக இருக்கும். இந்த அளவுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் அது தேக்க நிலை பொருளாதாரத்துக்குத்தான் வழிவகுக்கும்.

உலகின் எந்த ஒரு நாட்டிலும் சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி அதிகமாகவும், கடனுக்கு விதிக்கப்படும் வட்டி குறைவாகும் இருப்பதில்லை.

சிறுசேமிப்புக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமும், கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை" என்றார் ஜேட்லி.

வட்டிக் குறைப்பு நடவடிக்கை மூலம் மிகவும் பிரபலமில்லாத நடவடிக்கையை அரசு எடுத்துவிட்டதாகக் கருதப்படுகிறதே, என்று கேட்டதற்கு, "கடன் தொகைக்கு 15 சதவீத அளவுக்கு வட்டி விதிக்கப்படுவதுதான் பிரபலமில்லாத நடவடிக்கை. வட்டிக் குறைப்பு நடவடிக்கை அனைவருக்கும் பயனளிக்கக் கூடியது.

வீடு கட்ட ஒருவர் வங்கியில் கடனுக்கு அணுகினால் 9 சதவீத வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வாரா? அல்லது 15 சதவீத வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வாரா?

இப்போது அளிக்கப்படும் 8.1 சதவீத வட்டி விகிதமே மிக அதிகமான வட்டி விகிதம்தான். உலகில் எங்குமே இந்த அளவுக்கு சிறுசேமிப்புக்கு வட்டி அளிக்கப்படுவதில்லை. வரி விலக்குடன் 8.1 சதவீத வரி விகிதத்தை கணக்கிட்டால் அது 12.2 சதவீதமாகும். இது மிகக் குறைந்த வட்டி விகிதம் அல்ல.

பணவீக்கம் 11 சதவீதமாக இருந்தபோது 8.7 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது வட்டி விகிதமும் குறைக்கப்படுவதுதான் நியாயம்.

இபிஎப் திட்டத்தில் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்க உத்தேசித்தது அதிக அளவில் தொகையை எடுப்பதைக் குறைப்பதற்கும் அதே சமயம் வரி விலக்குடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் மிகுந்த ஆரோக்கியமான ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆனால் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது இபிஎப் திட்டங்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு வரிச் சலுகை புதிய பென்ஷன் திட்டத்துக்கும் (என்பிஎஸ்) உண்டு.

ஓராண்டுக்குப் பிறகு பாருங்கள் எத்தனை பேர் என்பிஎஸ் திட்டத்தைத் தேர்வு செய்திருப்பார்கள் என்று. அரசு அளிக்கும் அதிக வட்டி திட்டங்களில் என்பிஎஸ் மிகச் சிறந்த ஒன்று" என்கிறார் அருண் ஜேட்லி.

Monday, March 28, 2016

E-transfer claims payment to bank account, says Madras HC DECCAN CHRONICLE. | J STALIN

E-transfer claims payment to bank account, says Madras HC

DECCAN CHRONICLE. | J STALIN

Chennai: The Madras high court has directed that payment to the beneficiary in a road accident claim through e-transfer into the claimant's bank account
They said: “This, in our opinion, would be a game changer and afford a real possibility to claimants to take control over their lives, after the traumatic accident, by having full control over the award sum, with which they have to manage their lives. Once the award sum is directly transferred to their bank account, the claimants can deal with the same and pay out reasonable legal costs and expenses, as they may be obliged to”.

The ‘leakage’ that the humane judges had mentioned in their order, according to a senior lawyer, refers to the age-old and widely prevalent malady in the handling of compensation claims-particularly relating to accidents and land acquisition-wherein some advocates collaborate with the police and at times even sections of lower judiciary and unscrupulous elements in the insurance and banking industries to strike gold in bagging a hefty compensation from the courts while the beneficiary got only a pittance.

The rest of the money got shared among the ‘other stakeholders’, explained the lawyer. He requested anonymity for obvious reasons. The present order was passed by the bench while dealing with a case of an accident claim.

The judges reduced the compensation of Rs 91.72 lakh awarded by the Motor Accidents Claims Tribunal to Rs 82 lakh to the family of a 29-year-old software engineer, T. Sakthivel, who was killed by a truck at Medavakkam in Chennai on October 12, 2013. Of the final compensation awarded, the deceased's wife would get `69 lakh and mother Rs 13 lakh.

Private Colleges With High NAAC Score Can Seek Autonomy'

Private Colleges With High NAAC Score Can Seek Autonomy'

NEW INDIAN EXPRESS

BENGALURU: Affiliated private colleges can now secure autonomous status if they have secured high grades from National Assessment and Accreditation Council (NAAC). This is if the college gets permission from the university it is affiliated to, said Union Minister for Human Resource Development, Smriti Irani, here on Tuesday.

She was speaking at a national conference on “Making India a Global Hub for Quality Higher Education,” organised by the Education Promotion Society of India.

She also agreed with the recommendation made by a few private varsities to not have a government nominee on their Boards of Managements. However, she said that if the varsity had to engage with the University Grants Commission (UGC), a nominee from UGC will have to be selected.

Speaking at the venue, Prof D P Singh, Director, NAAC, Bengaluru, said that in order to be an important player in the global arena, Indian higher education needs to adopt a truly global outlook. “It involves international collaborations for teaching, research and training along with faculty-student exchange programmes. Our curriculum also needs to match global standards,” he said. A new Education Policy is being formulated and many schemes and reforms are in the pipeline in the education sector, he added.

AICTE Approval

Speaking of annual approvals for various courses from All India Council of Technical Education (AICTE), Irani said such practices will be put to an end. Approval for courses will be equated with the accreditation granted to the varsities, which is for a period of five years.

The National Achievement Survey, which is conducted once every three years by National Council of Educational Research and Training, will henceforth be conducted every year in all states, she said. Irani said the annual data collection exercise will help in improving the quality of education.

Hike in Fees

If the demands of private medical colleges are heeded by the Medical Education Department, it is likely that their fee will go up ‘substantially’. Medical Education Minister Sharan Prakash Patil said the demand is yet to be considered by the Department. He said three medical colleges will open in the next academic year in Karwar, Chamarajanagar and Madikeri, and will have a combined intake of 150 students.

Plan to overhaul medical council set in motion


Plan to overhaul medical council set in motion

TIMES OF INDIA

New Delhi: The BJP government has begun work on a major overhaul of the Medical Council of India as it looks to create more medical colleges and produce more doctors to cater to growing healthcare needs.

Sources said during a review meeting of the health sector, Prime Minister Narendra Modi and the health ministry had discussed the option of even scrapping the country's apex medical education regulator which has been shrouded in controversy in recent years.

Although sources ruled out such a drastic meas- ure, the government has set up a three-member committee to prepare a blueprint to revamp the current setup. The high-powered committee has Niti Aayog vice-chairman Arvind Panagariya, PM's additional principal secretary P K Mishra and Niti Aayog chief executive officer Amitabh Kant as members.

Sources said that at the meeting it was pointed out that the MCI is one of the major stumbling blocks towards a faster expansion, especially when it comes to ensuring quality education.

The development came after the parliamentary standing committee on health and family welfare too had called for a complete overhaul of the medical council as it has repeatedly failed in its mandate as a regulator of medical education and profession.

In its report presented in Parliament last month, the panel has recommended that the Act under which the council was established be scrapped and a new legislation be brought in Parliament "at the earliest".

Sources said that at the PM's meeting, the need for a major focus on increasing the availability of doctors and paramedical staff, es- pecially in the poor per- forming states such as Bihar, Uttar Pradesh, Jharkhand, Chhattisgarh and Odisha, was emphasised.

At the same time, the government is acutely aware that drastic action through legislative amendments may not be easy given that the changes have to be ushered in via the legislative route and the government does not enjoy majority in Rajya Sabha.
In recent years, the MCI has been involved in a series of controversies.

The parliamentary committee had also pointed to this and had said that it was shocked to find that compromised individuals have been able to make it to the medical council but the ministry of health and family welfare is not empowered to take action.

It noted that the MCI president admitted that "corruption was there when there was sanctioning of medical colleges, or increasing or decreasing seats". It was told that "private medical colleges arrange ghost faculty and patients during inspections by the MCI and no action is taken for the irregularity".

'நூறாண்டு காலம் வாழ்க...' என பாடியவர்அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் அவலம்

'நூறாண்டு காலம் வாழ்க...' என பாடியவர்அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் அவலம்
DINAMALAR
நுாறாண்டு காலம் வாழ்க... நோய் நொடி இல்லாமல் வளர்க...' என, சந்தோஷம் பொங்க பாடிய, திரைப்பட பின்னணி பாடகி சரளா, 76, ஆதரவின்றி அன்றாட வாழ்விற்கே திண்டாடி வருகிறார். 'சூறாவளியில் சிக்கிய படகு போல் தவிக்கிறேன்; முதல்வர் பார்வை பட்டால், கஷ்டம் எல்லாம் பனி போல் நீங்கிவிடும்' என, நம்பிக்கையோடு அவர் கூறுகிறார்.

இது குறித்து சரளா கூறியதாவது:கணவர் இறந்த பின், பொருளாதார ரீதியாக சங்கடங்களை சந்தித்தோம். உரிய நேரத்தில் திருமணம் செய்து வைக்க முடியாததால், இரு மகள்களும் துறவிகளாகி விட்டனர். மூவரும், சிறு வீட்டில் வாழ்கிறோம். அரசு மூலம், தலா, 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. 1,500 ரூபாய் வீட்டு வாடகை போக, 1,500 ரூபாயில் வாழ வேண்டி உள்ளது. நான், ரத்தக்கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுக்கு திண்டாடுகிறேன்.

முதல்வர் தனிப்பிரிவில், உதவி கோரி மனு கொடுத்தேன்; அது, முதல்வர் கவனத்துக்கு சென்றதா என தெரியவில்லை. நான்கு ஆண்டுகளாக அலைகிறேன். முதல்வரை பார்த்தால் நிச்சயம் உதவி கிடைக்கும். ஆண்டவனும் என்னை தவிக்க விட்டு விட்டான். என் பிள்ளைகளை தனியா தவிக்க விட்டுட்டு கண்களை மூடி விடுவேனோ என, மனம் தவிக்கிறது. சூறாவளியில் சிக்கிய படகு போல், திக்கு தெரியாமல் தவிக்கிறேன்.இவ்வாறு சரளா கூறினார்.

முதல்வரோ, திரை உலகமோ, சேவை மனம் உள்ளோரோ உதவினால், சரளாவின் இறுதி காலமாவது நிம்மதியாக அமையும். உதவிக்கரம் நீட்ட விரும்புவோர், அவரை, 98402 35867 என்ற போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இசையுலகில்...சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் சரளா. தன், 13வது வயதில், எம்.ஆர்.ராதாவின், ரத்தக்கண்ணீர், துாக்குமேடை நாடகங்களில் பின்னணி பாடத் துவங்கியவர். அதன் பின், சினிமாவிலும் பின்னணி பாடகியாக வலம் வந்தார். பேசும் தெய்வம் படத்தில், 'நுாறாண்டு காலம் வாழ்க... நோய் நொடி இல்லாமல் வளர்க...' என்பது உட்பட, இவர் பாடிய பல பாடல்கள் இன்னும் ரீங்காரமிடுகின்றன. 'தபேலா' இசைக் கலைஞர், மயிலாப்பூர், 'அம்பி' சுவாமிநாதனை காதலித்து மணந்த இவருக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர்.

பட்டி தொட்டிகளில் இவரது பாடல் ஒலித்துக் கொண்டிருந்தாலும், இவர் யார் என தெரியாத அளவிற்கு சென்னை, போரூர் அருகே, கோவூர் என்ற இடத்தில் உள்ள சிறு வீட்டில், இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார்; அன்றாட செலவுக்கே திண்டாடி வருகிறார்.

- நமது நிருபர் -

Sunday, March 27, 2016

சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உக்கிரம்: தமிழகத்தில் பாலைவனத்துக்கு நிகராக உணரப்படும் வெப்பம் - பகலில் நடமாடவும், இரவில் தூங்க முடியாமலும் மக்கள் தவிப்பு ஒய்.ஆண்டனி செல்வராஜ்


சென்னை, வேலூர், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில் உக்கிரம்: தமிழகத்தில் பாலைவனத்துக்கு நிகராக உணரப்படும் வெப்பம் - பகலில் நடமாடவும், இரவில் தூங்க முடியாமலும் மக்கள் தவிப்பு

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பாலைவனத்துக்கு நிகரான வெப்பம் தற்போது உணரப்படுகிறது. கோடையின் முக்கிய நாட்கள் வருவதற்கு முன்பே, வெப்பத்தின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் சராசரியாக 31 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருப்பதால் மதுரை, வேலூர், சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களில் வெப்பத்தின் உக்கிரத்தால் சாலைகளில் மக்கள் நடக்க முடியாமலும், இரவில் தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயிலால் கான்

கிரீட் கட்டிடங்களில் வெப்பம் அதிகரித்து, அதன் தொடர்ச்சியாக மின் பயன்பாடும் அதிகமாகி, இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்படத் தொடங்கி உள்ளது.

நீர்மட்டம் குறையும்

மதுரையில் கடந்த ஒரு மாதமாகவே கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சில நாட்களுக்கு முன் வெயிலுக்கு மயங்கி விழுந்து 2 பேர் இறந்தனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்பத்தின் அளவு மேலும் உயர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக புவி அறிவியல் மைய பேராசிரியர் பா.குருஞானம் கூறும் போது, ‘‘குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே, கடந்த ஆண்டு மழை வெள்ளம் ஏற்பட்டது. பெரும் பாலான மாவட்டங்களில் சரியான மழை பொழிவில்லை. அதனால், பூமிக்கு மேலும், கீழும் தண்ணீரின் அளவு தற்போது குறைந்துவிட்டது. வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை ஆய்வு செய்தால் குறைவாகத்தான் இருக்கும்” என்றார்.

வேளாண் பொறியாளர் செபாஸ்டின் பிரிட்டோராஜ் கூறும் போது, ‘‘கடந்த ஆண்டு, இதே நேரத்தில் (ஜனவரி முதல் தற்போது வரை) 90 முதல் 150 மி.மீ. மழை பெய்த நிலையில், இந்த ஆண்டு தற்போது வரை ஒரு மி.மீ. மழைகூட பெய்யவில்லை. காற்றின் ஈரப்பதத்தின் அளவு 86 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், காற்றின் வேகமும், ஒரு மணிக்கு 8 முதல் 16 கி.மீ. வேகத்தில், தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி வீசுகிறது. இது வளிமண்டலத்தில் உள்ள வெப்பத்தின் அதிகரிப்பையையே உணர்த்துகிறது.

விவசாயம் பாதிக்க வாய்ப்பு

புறஊதா கதிர்களின் தாக்கத்தால் விவசாயத்தில் நுனி கருகல் நோய் போன்ற வெப்பத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அனைத்து நோய்களும் உருவாக வாய்ப்புள் ளது. நகரப்புறங்களில் அருகில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வேதி நச்சுப் பொருட்கள், அடி மண்ணுடன் கலந்து கொசு பெருக்கம் அதிகமாகி தொற்று நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்றார்.

கோடை வெயிலை எப்படி சமாளிக்கலாம்?

செபாஸ்டின் பிரிட்டோராஜ் மேலும் கூறும் போது, "ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலா இரண்டு முதல் ஐந்து மழை நாட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த மழைநீரை சேகரிப்பது வறட்சியை ஈடுகொடுக்க நாம் செய்யும் முதல் செயலாகும். விவசாய நிலங்களில் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பாசனம் மேற்கொள்ள வேண்டும். சொட்டுநீர் பாசனம் மற்றும் வாய்மடை வரை பிளாஸ்டிக் குழாய்கள் அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும். வெயில் காலங்களில் வேதி உரங்களை தவிர்க்க வேண்டும். இவை எளிதாக உப்பாக மாறி, நிலத்தடியில் நீர் சொல்வதை தடுத்துவிடும். மீன் குட்டைகளில் நிழல் கூரை அமைப்பதால் மீன் உற்பத்தியை அழியாமல் பாதுகாக்கலாம், வீட்டுத் தோட்டங்கள் அமைத்திருப்போர் நிழல் கூரைகளைப் பயன்படுத்த வேண்டும்" என்றார்.

PhD Aspirants Face Guide Crunch as UGC Enforces New Norms

PhD Aspirants Face Guide Crunch as UGC Enforces New Norms

NEW INDIAN EXPRESS

BHUBANESWAR: Even as Odisha is witnessing a rise in the number of PhD enrolments across State-run universities, there are not enough research guides to supervise their work.

To make things worse, the directive by University Grants Commission (UGC) on not engaging retired faculty members as guides is all set to have an impact on PhD enrolments from 2016-17 academic year that begins in September. Although the directive was issued last year, it would be implemented for new PhD scholars from the ensuing academic year.

As per the guideline, only existing faculty members can guide PhD scholars in their thesis work. “University shall allocate the supervisor from among regular faculty members in the department and its affiliated Post Graduate colleges as well as institutes depending on the number of students per faculty member, the available specialisation among the faculty supervisors and the research interest of the student,” the UGC directive reads.

Ironically, none of the State Government-run universities has sufficient faculty members who can double up as guides. Also, the faculty recruitment process has been abysmally slow except for Utkal University. Under these circumstances, the universities mostly depend on retired faculty to meet the demands of an increasing number of PhD scholars. According to the All India Survey on Higher Education report by Ministry of Human Resources Development, in 2013-14 academic year, 886 scholars had enrolled for PhD in Odisha and the number increased to 1,539 in 2014-15 academic year.

Educationists said the new norm will increase the problems for universities as existing teachers are already overburdened with academic and administrative works. They added that barring retired faculty members from being PhD guides is not a step in the right direction as age of retirement of university teachers in the country is not uniform.

Vice-Chancellor of Utkal University Ashok Das said the intellectual capacity of a teacher does not deteriorate till the age of 70. “Hence, UGC should allow retired faculty members who are already associated with any university to work as guides for PhD scholars. We have also written to the UGC about it,” he said. Das informed that in the current academic year, there are some faculty members in the university who also serve as guides to scholars and would retire in next one year.

தண்ணீரில் காய்கறி வளர்க்கலாம்: சென்னை இளைஞரின் புதுமை வழி ப. முரளிதரன்

தண்ணீரில் காய்கறி வளர்க்கலாம்: சென்னை இளைஞரின் புதுமை வழி

ப. முரளிதரன்

மண்ணில்லாமலேயே காய்கறி, பூக்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைச் சாகுபடி செய்துவருகிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர். மாடித் தோட்டத்தில் இந்த முறையைப் பின்பற்றிக் காய்கறிகளை வளர்க்கலாம் என்கிறார் அவர்.

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராம் கோபால். மென்பொருள் பொறியாளரான இவர் மென்பொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். இந்நிலையில், விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ‘பியூச்சர் பார்ம்’ என்ற விவசாய நிறுவனத்தையும் தற்போது சேர்த்து நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் மண்ணில்லாமல் விவசாயம் செய்து காய்கறிகளை அவர் உற்பத்தி செய்து வருவதுதான் ஆச்சரியப்படுத்துகிறது. இது குறித்து ஸ்ரீராம் கோபால் பகிர்ந்துகொண்டார்:

விவசாய ஆர்வம்

எனது பூர்வீகம் சென்னைதான். எல்லோரையும் போல நானும் ஐ.டி. துறையில் வேலைக்குச் சேர வேண்டும் என ஆரம்பத்தில் விரும்பினேன். அதேபோல், ஒரு கட்டத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றின் உரிமையாளராகவும் மாறிவிட்டேன். இருந்தாலும் விவசாயத்தின் மீது இருந்த ஆர்வம் எனக்கு அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அதற்குக் காரணம் இன்றைய விவசாயம் முற்றிலும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஆட்டுவிக்கப்படுவதுதான். நாம் உண்ணும் அரிசி, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் உடலுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

மண்ணில்லா விவசாயம்

அத்துடன் அதிக அளவு பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் மண்ணின் தன்மையும், நீரின் தன்மையும் கெட்டுவிடுகிறது. இந்நிலையில், இப்பிரச்சினைக்குப் புதிதாகவும் எளிமையாகவும் தீர்வு காண வேண்டும் என விரும்பினேன். அதற்கான தேடலின் விளைவாகத் தோன்றியதுதான், இந்த மண்ணில்லா விவசாயம் என்ற புதிய முறை.

‘ஹைட்ரோபோனிக்ஸ்’ என்று அழைக்கப்படும் இப்புதிய முறை வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த அடிப்படையில் நம் வீட்டு மாடியிலேயே தோட்டம் அமைக்கலாம். சிறிய பைப்புகள், பக்கெட்டுகள் உள்ளிட்டவற்றில் வெறும் நீரை மட்டும் பயன்படுத்தி இச்செடிகளை வளர்க்கலாம்.

முதலில் விதைகளை மண் தொட்டிகளில் இட்டு வளர்க்க வேண்டும். அவை வேர் விட்டுச் செடியாக மாறியதும் அவற்றை எடுத்து, இந்தத் தண்ணீர் நிரப்பப்பட்ட பைப்புகள், பக்கெட்டுகளில் வைத்து வளர்க்க வேண்டும்.

சத்தும் சுவையும்

இந்த மண்ணில்லா விவசாய முறை மூலம் 90 சதவீத நீரைச் சேமிக்க முடியும். ஏனென்றால் மூடப்பட்ட பைப்பில் இருக்கும் துளைகள் வழியேதான் செடிகள் வளர்கின்றன. அதனால் தண்ணீர் எளிதில் ஆவியாகும் பிரச்சினையும் இல்லை.

மேலும், இதற்கு உரம் தேவையில்லை. இதனால் எவ்விதப் பூச்சி தாக்குதலும் மற்றும் மண் சார்ந்த நோய்களும் ஏற்படுவதில்லை. மேலும், பூமியில் வளர்க்கப்படும் செடிகளைவிட மிக வேகமாக இவை வளரும்.

அத்துடன் இக்காய்கறிகள் 100 சதவீதம் சத்தானதாகவும் சுவையானதாகவும் உள்ளன. கீரைகள், காய்கறிகள், பழங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றை இப்படி வளர்க்கலாம்.

காய்கறிகளில் தக்காளி, வெண்டை, புடலங்காய் உள்ளிட்டவையும், பூக்களில் செம்பருத்தி, ரோஜா, மல்லிகை உள்ளிட்டவையும், புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும்கூட வளர்க்கலாம். கீரையும் வளர்க்கலாம், ஆனால் அதிக இடம் தேவைப்படும்.

வரப்பிரசாதம்

நகர்ப்புறங்களில் தற்போது மாடித் தோட்டம் அமைக்கும் முறை பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இந்த மாடித் தோட்டம் அமைக்க மண், உரம், தண்ணீர் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன.

ஆனால், எங்களுடைய முறையில் இத்தேவைகள் ஏதும் கிடையாது. மேலும், செடிகளுக்குத் தினசரித் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. வேலையாட்களைக் கொண்டு பராமரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது.

இந்த மண்ணில்லா விவசாயத்துக்கான தேவையான உபகரணங்களை வாங்க ரூபாய் ஆயிரம் முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்வரை செலவாகும். இந்த விவசாய முறை குறித்து நாங்கள் பயிற்சியும் அளித்து வருகிறோம். நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு இந்த விவசாய முறை ஒரு வரப்பிரசாதம்.

ஸ்ரீராம் கோபால் தொடர்புக்கு: 9884009110

பஸ் கலெக் ஷன் தொகையை வாங்க மறுப்பு: கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி

பஸ் கலெக் ஷன் தொகையை வாங்க மறுப்பு: கண்டக்டர் தீக்குளிக்க முயற்சி
DINAMALAR
சேலம்: சேலம் அரசு போக்குவரத்துக்கழக, ஜான்சன்பேட்டை கிளையில், சென்னை - சேலம் வழித்தட பஸ்சின், கலெக் ஷனை அதிகாரிகள் வாங்க மறுத்ததால், கண்டக்டர் கிளை நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயற்சித்தார்.

நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சாமிநாதன், 57. இவர், சேலம் அரசு போக்குவரத்துக்கழக, ஜான்சன்பேட்டை கிளையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம், சேலம் - சென்னை வழித்தட பஸ்சில் பணியாற்றி உள்ளார். இந்த வழித்தட பஸ்சுக்கு கலெக்?ஷன் இலக்காக அதிகாரிகள், 13 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ரூபாய் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதே நேரத்தில், பஸ்சை இரண்டு மார்க்கத்திலும், சேர்த்து அனைத்து ஊர்களுக்குள்ளும் சென்று வருவதோடு, 14 மணி நேரத்துக்குள் இயக்க வேண்டும் என, அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனனர். சாமிநாதன் பணியாற்றிய பஸ், சேலம் - சென்னை இரண்டு மார்க்கத்திலும், கலெக் ஷனுக்காக அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்ததால், 18 மணி நேரம் இயக்கப்பட்டு, 8,672 ரூபாய் மட்டுமே வருவாய் ஈட்டி உள்ளது. பள்ளிகளுக்கான இறுதித் தேர்வு நடந்து வருவதால், பஸ்சில் கூட்டம் இல்லை.

நேற்று காலை, பஸ் சேலம், புது பஸ் ஸ்டாண்டுக்கு வந்த பின், கலெக்?ஷன் தொகையை வாங்க முடியாது என, தெரிவித்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த சாமிநாதன், கிளை மேலாளர் கலைவாணன் உட்பட அதிகாரிகள் பலரிடம் முறையிட்டும் பயன் இல்லை. மனம் உடைந்து, ஜான்சன்பேட்டை கிளை நுழைவு வாயிலில், பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார். இதை அறிந்த வாட்ச்மேன், சாமிநாதனை தடுத்து நிறுத்தி, அவர் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி வைத்துக் கொண்டார். தீக்குளிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் பால்பாண்டி, சம்பவ இடத்துக்கு வந்து கண்டக்டர் சாமிநாதன், கட்டுப்பாட்டு அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

ஓசிடி என்னும் மனநோய்: ஒரு பார்வை! க.சே. ரமணி பிரபா தேவி

THE HINDU TAMIL

ஓசிடி (Obsessive Compulsion Disorder)யைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஒரு செயலைத் திரும்பத் திரும்பச் செய்வது மட்டுமல்ல, ஒரே சிந்தனையில் ஆழ்ந்து போவதும் ஓசிடிதான்.

நகர வாழ்க்கையில் பொழுதைக் கழிக்கும் பெரும்பாலானோருக்கு, ஓசிடியைப் பற்றித் தெரியும். மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓசிடி. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்தக் குறைபாடு ஏற்படுகிறது. செரட்டோனின் குறையும்போது சிந்தனையைக் கட்டுப்படுத்தும் சக்தி வெகுவாகக் குறைகிறது. சிந்தனை நரம்பியல் மண்டலத்தோடு தொடர்புடையது என்பதால், இது சிந்தனையை வெகுவாகப் பாதிக்கிறது. இதை ஒரு வகையான மனக்குறைபாடு எனலாம்.

மனதை ஊடுருவித் துளைக்கும் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களால் இது ஏற்படுகிறது. மிகைப்படுத்தப்பட்ட எண்ணங்களால் உண்டாகும் ஓசிடி, பயம், கோபம், எரிச்சல், பதட்டம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துகிறது.

இந்த நோய் குறித்தும், அதன் அறிகுறிகள் மற்றும் வகைகள் குறித்தும் நம்மிடம் பேசினார் மனநல மருத்துவர் மோகன்.

"அலுவலக இலக்கு, மேலதிகாரியின் கோபம், சத்தில்லாத உணவு, வேலை, குடும்பப் பராமரிப்பு, சம்பள பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சனைகளால், சுமார் 65 சதவீதப் பேருக்கு, 25 வயதுக்கு முன்னாலேயே இந்த பிரச்சனை எழுகிறது. பொதுவான இயல்பான மக்களுக்கு, கோபம் பதற்றம், எரிச்சல் ஆகியவை சில நிமிடங்களுக்கே இருக்கும். ஆனால், ஓசிடி பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட பண்பு பல மணி நேரங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும். ஓசிடியின் தீவிரத்தைப் பொருத்து, மருந்துகள் கொடுக்கப்படும், கவுன்சலிங் மூலமும் சிகிச்சை அளிக்கப்படும். சில சமயங்களில் இரண்டு முறையும் பயன்படுத்தப்படும்.

ஓசிடி வருவதைப் பொருத்து, அவற்றில் பலவகைகள் உள்ளன.

செயல்கள் குறித்த பயம்

இந்த வகை ஓசிடியில், சந்தேகங்களும், கவலைகளும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். வீட்டுக் கதவைப் பூட்டினோமா, அடுப்பை அணைத்தோமா என்று யோசித்துக் கொண்டே இருப்பார்கள். பணம் சரியாக இருக்கிறதா என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே இருப்பார்கள்.

சுத்தத்தைக் குறித்த பயம்

இவர்களுக்கு தூசு, புகை போன்ற மாசுக்களால் அழுக்காகிவிடும் என்ற பயம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். பொருட்களை வெறும் கையால் தொட பயப்படுவார்கள். சோப்புப் போட்டு கைகளைக் கழுவிக் கொண்டே இருப்பார்கள்.

தாக்குதல் குறித்த பயம்

இந்த வகை ஓசிடியில், குறிப்பிட்ட சில குடும்ப, அலுவலக நபர்கள் அல்லது நண்பர்கள் நம்மைத் தாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் இருக்கும். அடிக்கடி நாம் பத்திரமாக இருக்கிறோமா, நம் சொந்தங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்.

ஒழுங்கு குறித்த பயம்

இவர்கள், எல்லாவற்றிலுமே அதிகப்படியான ஒழுங்கை எதிர்பார்ப்பார்கள். வேலையிலும், வீட்டிலும் அவர்களின் எதிர்பார்ப்பால் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும்..

பதுக்கல் குறித்த பயம்

ஏதாவது ஒரு பொருள் பழையதாகி, பயன்படுத்த முடியாமல் போனாலும் கூட, அதைத் தூக்கிப் போட அவர்களுக்கு மனது வராது. அதை அப்புறப்படுத்த முயற்சிக்கும், மற்றவர்கள் மீதும் தேவையில்லாமல் கோபப்படுவார்கள்.

செக்ஸ் குறித்த பயம்

அடிக்கடி தனக்கு தெரிந்த நபர்களின் முகம், பாலியல் உணர்வுகளோடு மனதில் வந்துபோகும். அது தவறு என்று தெரிந்தாலும், எண்ணங்களை அவர்களால் கட்டுப்படுத்தவே முடியாது. குற்ற உணர்ச்சியால் இந்த வகையினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள்" என்று கூறுகிறார்.

ஓசிடிக்கான சிகிச்சை குறித்து சித்த மருத்துவர், ஜெரோம் சேவியரிடம் பேசினோம்.

"சித்த மருத்துவம் மன நோய்களை பல விதமாக வகைப்படுத்துகிறது. இதில் ஓசிடி என்பது உன்மத்தம் (உடலில் செயல்படும் இயக்கங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்புகளால் மனநிலையில் ஏற்படும் பாதிப்பு) என்ற வகைப்பாட்டில் வருகிறது. இதற்கு கவுன்சலிங் அவசியம் என்றாலும், அத்தோடு வேறு சிலவற்றையும் பார்க்க வேண்டும்,

கவுன்சலிங்குக்கு முன், உடலில் சீர்கெட்டிருக்கும் வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சரியாக்க சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளியின் நிலையை முதலில் கண்டறிந்து, அதற்கான மருத்துவம் செய்த பின்னர் கவுன்சிலிங் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓசிடிக்கான சிகிச்சை முறை

1. வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமப்படுத்த சிகிச்சை அளிக்கவேண்டும்.

2. உடலில் உள்ள தாதுக்களின் வலிமை குறைந்தாலும் கோபம், எரிச்சல், பயம் உண்டாகி, மனநிலை பலவீனமடையும். இதை வலிமைப்படுத்த வேண்டும்.

3. மனநிலையைச் சரிசெய்ய வேண்டும். இதற்கு மூச்சுப் பயிற்சி, சில யோக ஆசனங்கள், தியானம் ஆகியவை அடங்கிய எட்டு வகையான பயிற்சிகள் உள்ளன. நோயாளியின் தேவைக்கும், மனநிலைக்கும் ஏற்ற வகையில் தேவைப்படும் பயிற்சியை கற்றுக் கொடுக்க வேண்டும்.

4. கவுன்சலிங் கொடுக்க வேண்டும்.

நோய்க்கு, வெறும் கவுன்சலிங் மட்டுமே முறையான தீர்வாகாது. மேலே சொன்ன இயக்கங்களான வாதம், பித்தம், கபம் மற்றும் தாதுக்களை சமப்படுத்தி, மனப்பயிற்சி கொடுத்த பிறகே, கவுன்சலிங் கொடுக்கப்பட வேண்டும். இயந்திரமயமாகிவிட்ட இந்த சூழலில், கொஞ்சம் குடும்பத்தோடும், இயற்கையோடும் இயைந்து வாழ்ந்தாலே போதும், எந்த நோயையும் குணப்படுத்தி விடலாம்" என்கிறார் நம்பிக்கையுடன்.

பதின் பருவம் புதிர் பருவமா? - வலைவிரிக்கும் வலையுலகம் டாக்டர் ஆர்.காட்சன்

THE HINDU

என் பையனுக்கு மொபைல் போன்ல உள்ள எல்லா அப்ளிகேஷனும் அத்துப்படி”, “மூணு வயசுலேயே எல்லா கேம்ஸையும் இண்டர்நெட்டை ஆன் பண்ணி, அவனாகவே டவுன்லோட் செஞ்சிருவான்”, “பேஸ்புக்குல இப்பவே அவனுக்கு 200 ப்ரெண்ட்ஸ் இருக்காங்க தெரியுமா?” என்று மெய்சிலிர்த்துக்கொள்ளும் பெற்றோர் பலர், சில வருடங்கள் கழித்துப் பள்ளி ஆசிரியரிடமோ அல்லது மருத்துவரிடமோ “24 மணிநேரமும் நெட்லயே இருக்கான், ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம்பிடிக்கிறான், ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்து மாசாமாசம் டேட்டா ரீசார்ஜ் பண்ணலேனா காலேஜ் போக மாட்டேன்னு சொல்லி வீட்டுல உள்ள பொருட்களை எல்லாம் உடைக்கிறான்” என்ற புகாருடன் வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

நாம் பயன்படுத்தும் பென்சில் மிகவும் பயனுள்ள ஒரு பொருள், அதே நேரம் அவற்றை உருவாக்க மரம் பலியாக்கப்படுகிறது என்பதை மறுக்க முடியாது. அதுபோலத்தான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியாக வரும் புதிய கண்டுபிடிப்புகளால் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இல்லாமல் இல்லை.

மீம்ஸ் கலாச்சாரம்

ஒரு படத்தை அல்லது ஒருவரின் கருத்தை, நகைச்சுவை உணர்வுடன் கேலி, கிண்டல் செய்து வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் கலாச்சாரம்தான் மீம்ஸ் (Memes). ஆரம்பத்தில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த மீம்ஸ், இன்று பிறரைக் கேலி செய்யவும், மனதைப் புண்படுத்தவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற ஒரு சமூகச் சூழலை உருவாக்கிவருகிறது. ஒரு தனிநபரையோ, அரசியல் தலைவரையோ, ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ இப்படி உலகம் அறியத் தாக்குவது மிகவும் எளிது. அது மட்டுமல்லாமல் இதன் மூலம் ஒரு தரமான, நல்ல கருத்தை நீர்த்துப்போகவும் வைக்க முடியும். அல்லது விவாதத்துக்கே தகுதியில்லாத ஒரு விஷயத்தை மிக முக்கியமான கருத்தாக எல்லோருடைய கண்களுக்கும் பூதாகரப்படுத்திக் காண்பிக்கும் மாயக்கண்ணாடியாகவும்கூட இதைப் பயன்படுத்தலாம்.

பாதிப்பின் தீவிரம்

வள்ளுவர் சொன்ன ‘நாவினால் சுட்ட வடு’கூட கொஞ்ச காலத்தில் ஆறிப் போகலாம். ஆனால், இது போன்ற சமூக வலைதளத் தாக்குதல்களின் சிறப்பம்சம் என்னவென்றால், ஒருவரைப் பற்றிய தவறான அல்லது ஆபாசமான கருத்து ஒருமுறை உருவாக்கப்பட்டுவிட்டால், அதை முற்றிலும் அழிப்பது அவ்வளவு சுலபமல்ல. ஆயுட்காலம் முழுக்க வலைதளங்களில் சுற்றிச் சுற்றி வந்து மனரீதியாக நிரந்தரக் காயத்தை ஏற்படுத்தும் விஷயமாக அது மாறிவிடலாம்.

சம்பந்தப்பட்ட நபருக்கு இது தீவிர மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், சிலநேரம் தற்கொலைக்கு முயற்சிக்கும் அளவுக்கு விபரீதமாகவும் கூடும். மேலும் யார் எந்தப் பதிவை வெளியிட்டாலும் அதற்கு ‘லைக்' போடுவதற்கும், தர்க்கத்துக்கு எடுத்துக்கொள்வதற்கென்று ஒரு கூட்டம் எப்போதும் இருப்பதால், தங்கள் பதிவுகள் மிகுந்த வரவேற்பு பெறுவதாக ஒரு போலியான தோற்றம் கிடைக்கிறது. இதனால் நேரம் விரயமாவது மட்டுமல்லாமல், அடிக்கடி மொபைல் போனைச் சோதித்துப்பார்க்க வேண்டும் என்ற எண்ணச் சுழற்சியும் ஏற்படுகிறது.

பாதுகாப்பற்ற உலகம்

தகவல் தொழில்நுட்பம் பல சவுகரியங்களைத் தந்து காலத்தைச் சுருக்கிக்கொள்ள உதவினாலும், சில நேரம் இந்த உலகத்தைப் பாதுகாப்பற்ற ஒரு கூண்டாகக் கருதும் அளவுக்கு நம் கண்ணோட்டத்தைத் தலைகீழாக மாற்றவும் வாய்ப்பு உண்டு. ஏனென்றால், உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தாலும் நாம் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம், நம்முடைய படுக்கை அறைகூடப் பாதுகாப்பாகத் தோன்றுவதில்லை. சமூக வலைதளங்களில் வரும் எச்சரிக்கைகள் நம்மைப் பதற்றப்பட வைக்கின்றன, சந்தேகக் கண்ணோட்டத்தை அதிகரிக்கின்றன. எல்லா வாழ்க்கை சூழ்நிலைகளையும் பயத்தோடு அணுகும் அளவுக்கு இது நம்மைப் பாதிக்கலாம்.

அமெரிக்க மனநல மருத்துவரான நார்மன் கேமரான், ஒருவருக்கு மனச்சிதைவை மற்றும் பிறழ்வை (Delusion) ஏற்படுத்தக்கூடிய பல சமூகச் சூழல்களை வரிசைப்படுத்திக் கூறியிருக்கிறார். ‘அதிகப்படியான சந்தேகத்தையும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் சமூகச் சூழல் அல்லது ஒருவர் தன்னைச் சுற்றிலும் ஏதோவொரு மாயவலை பின்னப்பட்டிருப்பதாக உணரும் சமூகச் சூழ்நிலை போன்றவை ஒருவருக்கு மனச் சிதைவை உருவாக்கும் அளவுக்குச் சக்திவாய்ந்தவை’ என்ற அவருடைய கருத்து கவனிக்க வேண்டியது.

தொற்றுநோயா?

டெலூஷன் (Delusion) என்பதற்கு நடக்காத ஒரு விஷயத்தை, அது உண்மையில் தனக்கு எதிராக நடந்துகொண்டிருப்பதாகத் தீர்க்கமாக நம்புவது என்று அர்த்தம். முன்பெல்லாம் மனச்சிதைவு (Schizophrenia) நோயாளிகள், யாரோ தனக்குச் செய்வினை வைத்துவிட்டதாகவோ அல்லது வேறு கிரகத்திலிருந்து யாரோ தன்னைக் கட்டுப்படுத்துவதாகவோதான் சொல்வார்கள். ஆனால், சமீபத்தில் நான் பரிசோதித்த படிப்பறிவற்ற ஒரு கிராமத்துப் பெரியவர், அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் தன்னை ‘வாட்ஸ்அப்' மூலமாகக் கட்டுப்படுத்தி, ‘வாய்ஸ் மெயில்' மூலமாக மிரட்டுவதாகச் சொன்னது மிகுந்த ஆச்சரியத்துக்குரிய ஒன்று. உண்மையில் அப்படியென்றால் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை. மனரீதியாக மட்டுமல்ல, மனநோயின் தன்மையையே சமூக வலைதளங்கள் பாதிக்க ஆரம்பித்துவிட்டதற்கு இது ஒரு ‘சோற்றுப் பதம்’தான்.

மொத்தத்தில் வலிமையான ஆயுதத்தை ஆக்கத்துக்குப் பயன்படுத்துவதா, அழிவுக்குப் பயன்படுத்துவதா என்பது நம் கையில்தான் இருக்கிறது.

(அடுத்த வாரம்: இதுவும் ஒரு போதைதான்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

Saturday, March 26, 2016

Pay in full for rail berth for kids from April 22

TIMES OF INDIA

NEW DELHI: A small change in Railways's child fare rule could ensure the availability of 20 million additional confirmed berths or seats in a year for other passengers without the state-run transporter spending a single penny, while adding over Rs 525 crore annually to its coffers.

This could be made possible with the decision to charge full fare for children aged 5-12 if a separate seat or berth is sought. Till now, children in this age group were entitled to a separate seat or berth at half the fare.

Now, the half rate is still available, but without a seat or berth. In such cases, parents or the accompanying passenger will have to share their reserved space with the kids. Children under five years of age will continue to enjoy free ride (without a berth) in trains.

The new rule will come into effect on April 22.

Though the move could adversely affect the travel budget of families, a senior Railways official said the decision has potential to release 20 million confirmed berths to other travellers, including senior citizens and women.

Once the new rules are in place, the transporter calculates that availability of 20 million additional berths a year will be equivalent to running 20,000 additional trains annually and 54 additional trains every day. "The move would also help in generating additional revenue of around Rs 525 crore a year along with ensuring optimal utilisation of available accommodation in trains," said an official.

In 2014-15, the number of child passengers aged 5-12 who opted for berths on half fare was around 2.11 crore.

Justifying the move, a Railways official said, "The decision will help in augmenting passenger transport capacity till the time the sanctioned works for creating additional tracks are completed to facilitate running of more trains."

However, there will be no change in the rule for child fare of unreserved tickets, which means the rate for children of 5-12 years for unreserved class will continue to be half of the adult fare. The number of child passengers in unreserved class was 6.20 crore in 2014-15, said an official.

Railways will carry out necessary changes in the reservation form so that passenger can indicate whether they are opting for a full berth or seat for a child or not.

Madras HC judge directed to reconsider woman’s plea dispassionately


Madras HC judge directed to reconsider woman’s plea dispassionately

DECCAN CHRONICLE

Chennai: Coming to the rescue of a woman denied compassionate appointment on the ground that her deceased husband was only an ad hoc/temporary employee, the Madras high court has directed the Principal District and Sessions Judge (PDSJ), Erode, to consider her representation afresh in a dispassionate manner by taking into account the present social, financial status and other relevant requirements.


Disposing of a petition from M, Fathima, a Division Bench comprising Justices Satish K. Agnihotri and M. Venugopal also set aside the order of PDSJ dated November 24, 2015, rejecting her application for compassionate appointment.
According to petitioner, she belonged to Islam and her husband S. Thangadurai was a Hindu scheduled caste and they were married on December 4, 2001. They have two children.

Her husband joined the judicial department on May 26, 2010, and died on November 1, 2013, due to jaundice while in service. Her aged father was a
tailor and he was getting only a meagre income. She had no other source. She had studied up to class 12 and also has a diploma in co-operative management and diploma in computer application.

Writing the judgment for the Bench, Justice Venugopal said the term ‘compassionate’ means a deep feeling of pity for the suffering of another and an inclination to render assistance either to shower mercy or to support. The object of compassionate appointment was to render social justice.

The bench said taking note of a primordial fact that the petitioner’s husband entered into service on May 31, 2010, and expired on November 1, 2013, and also notwithstanding the fact that he was reportedly unauthorisedly absent (for 14 times) for more than one year, yet, the court was of the considered view that his appointment as temporary night watchman was against a regular post of night watchman in a clear vacancy (his name being sponsored by the district employment exchange, Erode). It cannot be termed ad hoc or temporary one in the strict sense of the term notwithstanding the fact that the petitioner husband’s services were not regularised on account of pending disciplinary proceedings.

மறைகின்ற நடைபாதைகள்


மறைகின்ற நடைபாதைகள்


By மலையமான்

First Published : 26 March 2016 01:24 AM IST


சென்னையில் ஏறத்தாழ 2,500 கி.மீ. அளவுக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலைகளை ஒட்டி மக்கள் நடந்து போவதற்காக, ஏறக்குறைய 830 கி.மீ. அளவில் நடைபாதைகள் போடப்பட்டுள்ளன. இந்த நடைபாதைகளில் 60 விழுக்காட்டுக்கு மேல் ஆக்கிரமிப்பாளரின் பிடியில் சிக்கியுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக நடைபாதைகள் அமைக்கப்படுகின்றன. ஆனால், நடைபாதை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கென்றே நிகழ்வுகள் நடைபெறுகின்றன. நடைபாதைகளில் இரு சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் நிறுத்தப்படுகின்றன. நடைபாதைகளில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தாதீர்கள் என்று கூறுவதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை.
அப்படிப்பட்ட இடங்களில், நடைபாதையைத் தவிர்த்து சாலை ஓரத்தில் நடந்து செல்கின்றனர்; இதனால், முதியவர்களும், சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
நடைபாதைகளின் சில பகுதிகள் விற்பனைக்களமாக மாறி விடுகின்றன. அங்கே கரும்புச் சாறு பிழியும் இயந்திரம் நிற்கின்றது; பக்கத்தில் கரும்புக் கட்டுகள் கால் நீட்டிப் படுத்துக் கொண்டிருக்கும். கொஞ்ச தூரம் சென்றால் ஆயத்த ஆடைகள் அணிவகுத்து அமர்ந்திருக்கும். அவற்றின் அணிவகுப்பு மரியாதையை அருகில் நடந்து செல்வோரின் பார்வை ஏற்றுக் கொள்ளும்.
மற்றுமோர் இடத்தில் சிறிய பெட்டிக் கடை; மற்றோர் இடத்தில் தேநீரின் மணம்; அது அப்பக்கம் செல்வோரின் கவனத்தை ஈர்க்கும். அந்தத் தேநீர்க் கடையைச் சுற்றி இருப்பவர்களால் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும்.
சில இடங்களில் நடைபாதைப் பகுதி, குப்பை மேடாக மாற்றப்படுகிறது. நகராட்சி மன்றத்தின் குப்பைத் தொட்டி கொஞ்சம் தள்ளியிருந்தால், ஏமாளியின் வீட்டுப் பின்புற நடைபாதை குப்பை மேடாகிறது.
வீடு கட்ட முனைவோருக்கு நடைபாதை கை கொடுத்து உதவும். நடைபாதை செங்கல் அடுக்கு மிடுக்குடன் நிற்கும். அதன் தனிமையைப் போக்குவதற்கு அருகில் மணல் குவியல் துணை புரியும். சில இடங்களில் நடைபாதைப் பகுதி அறிவுப் பரப்பலுக்குப் பெரிதும் வழி அமைக்கும். புதிய புத்தகங்கள் மட்டுமன்றி பழைய நூல்களும் வழிப் போக்கரை அழைக்கும்.
நடைபாதை குறுக்கு வழிப் பாதையாகவும் மாற்றப்படுவதுண்டு. பெரு நகரத்தில் போக்குவரத்து நெரிசல் நாள்தோறும் நடைபெறும் செயலாகும். பேருந்துகள் நிலைத்து நிற்கும் யானைகள் போல் தோன்றும். பின் தொடர்ந்த யானைக் குட்டிகள் போல் சிற்றுந்துகளும் நின்று கொண்டிருக்கும். இவற்றுக்குப் பின்னால், இருசக்கர வாகனங்கள் நிற்க வேண்டியிருக்கும்.
இந்நிலையில் நடைபாதை இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குக் குறுக்குவழிப் பாதையாக மாறும். அந்த வண்டி நடைபாதை மேலே ஓடும். அதைக் கண்டு பாதசாரிகள் அஞ்சி ஓடுவர்; கீழே விழுவர்.
நடைபாதையின் அகலம் 1.5 மீட்டர் என்று இந்தியச் சாலைக் குழுமம் வரையறுத்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை சில இடங்களில் மேற்கொள்ளப்படுவதில்லை. சாலைகள் விரிவுபடுத்தும் முறையில் நடைபாதைகளுக்குரிய நிலப்பரப்பு விழுங்கப்பட்டு விடுகிறது. பின்பு நடைபாதை குறுகி விடுகிறது. அதன் மேல் நடந்து செல்வதற்குக் கால்கள் மறுத்துவிடுகின்றன. நடைபாதையின் நோக்கம் அடிபட்டுப் போகிறது.
நடைபாதை பற்றி ஆய்வும் செய்யப்பட்டு வருகிறது. வெளிப்படையான சென்னை (டிரான்ஸ்பெரண்ட் சென்னை) என்பது ஒரு தன்னார்வ நிறுவனம். இது சென்னையில் உள்ள நடைபாதைகளைப் பற்றி ஆய்வு செய்தது. அது அறிவித்த முடிவுகள் சிந்தனைக்கு உரியவை.
அவையாவன: சென்னை மாநகராட்சி 830 கி.மீ. நீளமுள்ள நடைபாதைகளைக் கவனித்து வருகிறது. இந்த நடைபாதை சில இடங்களில் 3.5 மீட்டர் அளவு விரிவாக உள்ளது (இந்த இடப்பரப்பு இரவில் மக்கள் படுத்துறங்கப் பயன்படுகிறது. இங்கு குடிசை தோன்றுவதற்கும் இடமளிக்கிறது). சில இடங்களில் நடைபாதையின் பரப்பளவு 0.6 மீட்டர் அளவாகக் குறுகியுள்ளது. 52% நடைபாதைகள் இந்தியச் சாலைக் குழுமத்தின் விதிப்படி அமையவில்லை.
சென்னையில் நடைபெறும் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுவது 33 சதவீதம் நடந்து செல்பவரும், மிதிவண்டி ஓட்டுநருமே ஆவார். சென்னையின் நடைபாதைகளில் 30 கி.மீ. அளவு வியாபாரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. சாலைகளில் போடப்பட்ட நடைபாதைகளில் 40% பயன்படுத்தப்படவில்லை.
நடைபாதையைப் பயன்படுத்தும் பழக்கம் மக்களிடம் குறைவாக உள்ளது. இதனால் விபத்துக்கு ஆளாகின்றனர். ஓர் ஆண்டில் ஏறத்தாழ 230 பாதசாரிகள் கொல்லப்படுகின்றனர்.
நடைபாதைகள் பற்றி ஓர் அறிஞர் சிந்தனை செய்தார். அவர் மும்பைய் ஐ.ஐ.டி. நிறுவனத்தின் போக்குவரத்துத் திட்டப் பொறியியல் துறைப் பேராசிரியர். அவருடைய பெயர் டாக்டர் பி. வேதகிரி. நடைபாதையைப் பயன்படுத்துபவர்களின் நலனுக்காக - அவர்களின் பாதுகாப்புக்காகச் சில திட்டங்களைச் சொன்னார்.
"நடைபாதை - சாலை - என்ற இவற்றுக்கு இடையில் தடுப்புக் கம்பி வேலி அமைக்கப்பட வேண்டும்; நடைபாதையில் இருசக்கர வண்டிகள் நிறுத்துவதைத் தடுக்கும் முறையில், குட்டையான, செங்குத்துச் சிறு தூண்கள் நடப்பட வேண்டும்; போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படும் பகுதியில் பாதசாரிகள் தடையில்லாமல் செல்வதற்கு ஏற்றபடி சிறு பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்; இதன் காரணமாக பாதசாரிகளுக்கு ஏற்படும் விபத்துகள் குறையும். சாலை அமைக்கும் திட்டத்தில் நடைபாதை அமைப்பது பற்றிய கருத்துக்கு முக்கிய இடம் தரப்பட வேண்டும். நடைபாதைகளைத் தவறாகப் பயன்படுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்' என்று கூறுகிறார் அவர்.
இதைத் தவிர, சாலை விதிகளை இயல்பாக பின்பற்றும் வழக்கம் மக்களுக்கு அமைய வேண்டும். இது இளமையிலிருந்தே உருவாக வேண்டும். அதுதான் முக்கியம்.

AICTE to take lawyers on board


AICTE to take lawyers on board

The All India Council for Technical Education (AICTE) has roped in advocates for the approval process for new and existing institutions. According to officials, the move is aimed at ensuring that the institutions do not resort to any shortcuts as the approval process is online and institutions may submit false or exaggerated details.

Accordingto an official from AICTE, ever since the online submission of details for approval was started two years ago, AICTE had received numerous complaints of institutions not sharing accurate details or providing misleading information, as it was not being physically verified.

“Complaints ranged from multiple institutions operating from the same premises while each institution has to have an independent structure. Apart from this, classrooms and laboratory details as well as faculty details were being manipulated, based on which the institutions were getting annual approval. Hence, it was decided to not only rope in academic experts but also have advocates on board to initiate penal action against institutions that provide false information,” said the official.

Towards this end, AICTE has issued a public advertisement inviting experts and the legal fraternity to join them so that the online approval process can be strengthened. Institutions coming under the purview of AICTE have to take annual approval for continuation, courses as well as in-take capacity.

Based on the information provided through the online submission process, AICTE gives its consent for continuation or permission to increase the in-take or offer newer courses. “AICTE has laid down norms from academic to infrastructure compliances that institutions have to adhere to, failing which their approval is cancelled. While older institutions tend to comply on all parameters, it is the newer ones that try to go around the norms. To curb such practices and send out a strong message AICTE will not tolerate such misdemeanors, experts and advocates will be taken on board,” said the official, adding that AICTE would be including the new persons in the academic monitoring committee too from the next academic year.

Beijing extends leave for new parents as China hopes for more children


Beijing extends leave for new parents as China hopes for more children

TIMES OF INDIA

BEIJING: Authorities in China's capital will extend leave from work for new mothers and fathers, state media reported on Friday, in what appeared to be the latest incentive to encourage families to have more children.

The world's largest economy faces a shrinking labour force and aging population, meaning it could be the first country in the world to age before it first gets rich.

Last year, the ruling Chinese Communist Party announced it would relax its long-standing and controversial "one-child policy", allowing all couples to have two children.

The government, keen to address the looming aging crisis, is concerned many people will choose not to exercise that right, worried about the cost of raising two children in an increasingly expensive country.

The state-run China News Agency, in reporting the new rules for leave for new parents, did not link them to hopes people would have more children.

Fathers in Beijing will now be entitled to 15 days of paternity leave under the new regulation, the news agency said. New fathers in China now get three to 10 days paternity leave depending on where they live, according to state media.

Mothers in Beijing can extend their leave to a maximum of seven months if their employers agree, the news agency said, which is 30 days longer than now.

Under the new regulations for Beijing, couples who already have a child each from a previous marriage can have another baby, the news agency said.

Several provinces and major municipalities have similarly amended their maternity and paternity leave policies, state media has reported.

China's population is set to peak at about 1.45 billion by 2050 when one in every three people is expected to be more than 60 years old, with a shrinking proportion of working adults to support them.

The one-child policy was introduced in the late 1970s to prevent population growth spiraling out of control.

But it is now regarded as outdated and responsible for a shrinking the labor pool and an aging society, with a smaller number of productive young people, a phenomenon usually seen in industrialized countries.

Critics say the relaxation of the one-child policy and related reforms have come too late to avert a dangerous population imbalance as many couples are now not keen on having more children.

போராட்ட களம் போராட்ட களமாக மாறி வரும் பல்கலை: சர்வதேச அளவில் மதிப்பு குறையும் அபாயம்

போராட்ட களம் போராட்ட களமாக மாறி வரும் பல்கலை: சர்வதேச அளவில் மதிப்பு குறையும் அபாயம்
தினமலர்

சென்னை பல்கலைக்கு இருந்து வந்த, நுாற்றாண்டு கடந்த பாரம்பரிய கவுரவம், வன்முறை சம்பவங்களால், நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பல்கலையின் சான்றிதழுக்கு, வெளி நாடுகளில் உள்ள மதிப்பு குறையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 1857ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டப்படி, இங்கிலாந்தில் உள்ள லண்டன் பல்கலையை பின்பற்றி, சென்னை பல்கலை உருவாக்கப்பட்டது. தென் மாநிலங்களில் உள்ள அனைத்து பல்கலைகளுக்கும் தாயாக, சென்னை பல்கலை மதிக்கப்படுகிறது. 159 ஆண்டு கால பாரம்பரியத்தில், சென்னை பல்கலையின் சான்றிதழ்கள், சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்பட கூடியவை.

பேராசிரியர் படுகாயம்:அதனால் தான், 'மெட்ராஸ்' என்ற நகரத்தின் பெயர்,'சென்னை' என, மாற்றப்பட்ட பின்பும், பல்கலையின் பெயர் மட்டும், 'யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்' என்றே பயன்படுத்தப்படுகிறது.ஆனால், இந்த பல்கலையில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் வன்முறை சம்பவங்களால், பதற்ற பூமியாக மாறியுள்ளது. அதனால், சர்வதேச மாணவர்களிடம் பல்கலை குறித்த மரியாதை குறைந்து வருகிறது.


வன்முறையின் உச்ச கட்டமாக, நேற்று முன்தினம், சட்ட படிப்பு பேராசிரியரை, அவரது அறைக்குள்ளே புகுந்து, இரு மாணவர்கள் தாக்கியதுடன், அலுவலக அறையையும் சூறையாடினர். படுகாயம் அடைந்த பேராசிரியர், அரசு மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளார். பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் வந்த போது, அவர் முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர், நிகழ்ச்சி அரங்கிற்குள் செல்லவே இயலாத நிலை ஏற்பட்டது

சில வாரங்களுக்கு முன், சில மாணவர் கள் சென்னை பல்கலை வளாகத்தில் எந்த அனுமதியும் பெறாமல், டில்லி ஜே.என்.யூ., பல்கலை பிரச்னை குறித்து உண்ணாவிரதம் இருந்தனர் ஒரு மாணவர், கையில் கெரசின் கேனுடன், பல்கலையின் நுாற்றாண்டு கட்டட உச்சிக்கு சென்று, தற்கொலை செய்வதாக போராட்டம் நடத்தினார். அன்று முழுவதும், பல்கலையில் வகுப்பு நடக்கவே இல்லை

அரசியல் அறிவியல் பிரிவில் காரணமே இல்லாமல், துறை தலைவரை எதிர்த்து, சில மாணவர்கள் மட்டும் போராட்டம் நடத்தினர்ஊடகவியல் துறையில், ஜப்பான் மாணவர்களுடன் இணைந்து கலாசார நிகழ்ச்சிநடத்திய போது, மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்டனர். பல்கலை வளாகத்திற்குள் புகுந்து, ஒரு மாணவரை முன்னாள் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர்.

நிர்வாகம் திணறல்: இப்படி, பல்கலையில், ஒவ்வொரு மாதமும் வன்முறை சம்பவம் நடக்காத, போராட்டம் இல்லாத நாட்களே இல்லை என்ற அளவுக்கு, பதற்றம் நிலவுகிறது.இதையெல்லாம் சமாளிக்க, சரியான நிர்வாகம் இல்லாமல், பல்கலை அதிகாரிகள் திணறி
வருகின்றனர். துணைவேந்தர் இல்லாததால், பல அதிகார மையங்களின் நெருக்கடியில் சிக்கி, பல்கலையை நடத்த முடியாமல், பேராசிரியர்களும், நிர்வாகிகளும் திணறி வருகின்றனர்.

விதி மீறல்களுக்குசெயலர் உடந்தை?

சென்னை பல்கலையை கட்டுப்படுத்த வேண்டிய, தமிழக உயர் கல்வித்துறையின் செயல்களே பல விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

தற்காலிக ஒருங்கிணைப்பு குழு தலைவரான உயர் கல்வித்துறை செயலர் அபூர்வா, பல்கலை விவகாரங்களில் பல விதங்களில் தலையிடுவதா கவும், விதி மீறல்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும், கவர்னரிடம் பேராசிரியர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கையால், மாணவர் களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என, அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

- நமது நிருபர் -

7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு

7 வயது அரசு பள்ளி மாணவி தேர்தல் தூதுவராக அறிவிப்பு

வேலுார்:தமிழகத்திலுள்ள, 234 தொகுதி பெயர்களை, மனப்பாடமாக சரளமாக ஒப்பித்து, 7 வயது அரசு பள்ளி மாணவி அசத்தினார். அவருக்கு, பணமுடிப்பு வழங்கிய சப் - கலெக்டர், தேர்தல் துாதுவராகவும் அறிவித்தார்.சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஓட்டளிக்க வாருங்கள் என்ற தலைப்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அரசு கலைக் கல்லுாரியில், நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.

செய்யாறு சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலரும், சப் - கலெக்டருமான பிரபுசங்கர் தலைமை வகித்தார். தேர்தல் குறித்த தகவல்கள் வீடியோ காட்சி மூலம் விளக்கப்பட்டது. கல்லுாரியில் பயிலும், 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவ, மாணவியரையும் வாக்காளர்

பட்டியலில் பெயர் சேர்த்தமைக்காக, கல்லுாரி முதல்வர் நிர்மலாதேவிக்கு பாராட்டு தெரிவித்து,

சான்றிதழ் வழங்கப்பட்டது.செய்யாறு தொகுதியில், 90 வயதுக்கு அதிகமான, 7 மூத்த வாக்காளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்து, கல்லுாரி மாணவர்கள் நினைவுப் பரிசு வழங்கினர்.

வந்தவாசி அடுத்த விளாநல்லுார் கிராமத்திலுள்ள, அரசு நடுநிலைப் பள்ளியின், 2ம் வகுப்பு மாணவி கே.பிரீத்தி, தமிழகத்திலுள்ள, 234 தொகுதிகளின் பெயர்களையும், மாவட்டம் வாரியாக சரளமாக ஒப்பித்து, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். மாணவி பிரீத்தியை பாராட்டிய, தேர்தல் அலுவலர் பிரபுசங்கர், ஊக்கத்தொகையாக, 2,100 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி, பிரீத்தியை தேர்தல் துாதுவராக நியமித்தார்.

அனுமனிஸம் தெரியுமா?

சொல் வேந்தர்  சுகி சிவம்

அனுமனிஸம் தெரியுமா?

சின்னஞ் சிறுசுகள் இருக்கிற இடம் எப்போதும் கலகலப்பாக இருக்கும். "குபீர் குபீர்' என்று சிரிப்பொலி, "ஓ... ஆ...' என்கிற ஒலி அலைகள் இவையெல்லாம் இளசுகளின் முரசுகள். காரணம் இன்றியே கலகலப்பாக இருத்தல் இளமையின் இயல்பு. அதனால்தான் திருவெம்பாவையில் இளம்பெண்களை எழுப்பும் பாடல்களில், "முத்தன்ன வெண்நகையாய்', "ஒள் நித்தில நகையாய்' என்று நகையை, சிரிப்பைக் குறித்து விளிப்பதாக மணிவாசகர் பாடுகிறார். காசு கொடுத்தாலும் கலகலப்பு வராத காலம் முதுமை. சாப்பிடும்போது கூட, "அந்தப் பாயசத்தைப் போட்டுத் தொலை', "அந்தச் சனியனை எடு' என்று அலுத்தும் சலித்தும் உண்ணுவதே கிழத்தனம். வாழ்க்கை வறண்டுவிட்டது.

உற்சாகம் செத்துவிட்டது. மனம் மரணித்துவிட்டது. "டிப்ரஷன்' என்னும் ஆழ்மனச் சோர்வு முதுமையில் ஆட்டிப் படைக்கிறது. இளமையில் உற்சாகமும் முதுமையில் சோர்வும் வாழ்வின் அமைப்பு. ஆனால் இளமையிலேயே சோர்வு இருந்தால் வாழ்க்கை என்னாவது? ரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கண்களில் எரிச்சல் என்று இளைஞர்கள் சோர்ந்து வழிகிறார்கள். இத்தகைய உடற்குறைபாடுகள் காரணத்தால் வந்த சோர்வு எளிதாகக் களையத் தக்கது. முருங்கைக் கீரை, அகத்திக் கீரை, அரைக் கீரை, உளுத்தங்கஞ்சி, பேரீச்சம் பழம், முட்டை, பால், தயிர் என்கிற உயிர்ச்சத்தும் இரும்பு, கால்சியம் நிறைந்த உணவுகளையும் திட்டமிட்டுச் சேர்த்தால் உடற்சோர்வை விரட்டலாம். விசையுறு பந்தினைப் போல் விண்ணில் குதிக்கலாம்.

மனச்சோர்வு (டிப்ரஷன்) வந்தால் என்ன செய்வது? பூலோக சுவர்க்கமான அமெரிக்காவில் சின்னஞ்சிறிசுகள், பள்ளிப் பிள்ளைகள், கை நிறையக் காசு கொழிக்கும் இளைய தொழிலதிபர்கள், வாலிப வணிகர்கள்கூட இன்று டிப்ரஷனில் சோர்ந்து போகிறார்கள். சம்பாதிப்பதில் ஆர்வம் இல்லை. சம்சாரிப்பதில் அக்கறை இல்லை. எதிலும் அலட்சியம், ஈர்ப்பில்லை. மானுட மண்புழுக்களாக வட்டமடித்துப் புதைந்து கொள்ளும் மனச் சோர்வில் தவிக்கிறார்கள். என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? இரண்டாயிரத்து இருபதில் உலகம் ஒரு கொள்ளை நோயால் கொண்டு போகப்படும். அது எய்ட்ஸ் அல்ல. டிப்ரஷன் என்பது அமெரிக்க உளவியல் ஆய்வு! அதற்கு என்ன செய்யலாம்? எப்படி ஜெயிக்கலாம்? வாழ்வின் எதார்த்தமான உண்மைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எண்ணங்களின் அலை வீச்சே மனம்... மனத்தின் இயக்கம். ஒரு அலை எவ்வளவு உயரமாக எழுந்து ஆடுகிறதோ அவ்வளவு மூர்க்கமாகத் தரையில் எறியப்படும். ஓங்கி அடி விழும். எழுச்சியைத் தொடர்வது வீழ்ச்சி.

ஒவ்வொரு எழுச்சியும் வீழ்ச்சியில்தான் முடிவடையும். இந்த வீழ்ச்சியைத் தாங்க முடியாதவர்கள் சோர்வடைகிறார்கள். ஒவ்வொரு வீழ்ச்சியாலும் பாதிக்கப்படாமல் மறுபடியும் எழுவதே உயிர்ப்பு இயற்கை, வாழ்முறை. வீழ்ச்சியின் வேகத்தை மீண்டும் எழுவதற்கான வேகமாக மாற்றிக்கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் இந்தக் கடல் அலைகளின் எழுச்சி, வீழ்ச்சியைப் பூமி தாங்கிக் கொள்ள முடியாத மாதிரி, மனசின் எழுச்சி, வீழ்ச்சியை உடம்பு தாங்க முடிவதில்லை.

எனவே உடம்பைப் பலப்படுத்தினால் பாதி வெற்றி. வாழ்வின் இயக்கத்தை விளங்ள்கிக்கொண்டால் மீதி வெற்றி. இதற்கு மேலும் சோர்வு தாக்காமல் இருக்க அருமையான யோசனை சொல்கிறேன். குறித்துக் கொள்ளுங்கள். ராமாயணத்தில் அனுமனுக்கு "மகா உத்சாகாய' என்று ஒரு நாமம் உண்டு. மிகவும் உற்சாகம் - சுறுசுறுப்பு உள்ளவன் என்று பொருள். அவன் சோர்ந்த இடங்கள் இல்லையா? உண்டு. சீதையைத் தேடிப் போகும்போது கடல் கடக்க வேண்டிய இடம். எல்லோரும் நம்மால் முடியாது என்று சோர்ந்து சுருண்டபோது அனுமனும் சுருண்டு சோர்ந்தான். எவ்வளவு பெரிய மனிதனுக்கும் டிப்ரஷன் வரும் என்பதற்கு இதுவே அடையாளம். அப்போது ஜாம்பவன்தான் அனுமனைத் தட்டி எழுப்பினார். ""அடேய்... இந்தக் கடலைக் கடப்பது உனக்கு சிறிய வேலை'' என்று சொல்லிச் சோர்வை விரட்டினார்.

அனுமனது நம்பிக்கைத் தீயை ஊதி ஊதி உலை வைத்தார். விஸ்வரூபம் எடுத்து விண்ணில் பாய்ந்தான் ஆஞ்சநேயன். என்ன பொருள்? நாம் சோர்வடையும்போது நமது பலத்தை நினைவூட்டும் நல்ல நண்பர்கள் நம்கூட இருந்தால் வெற்றி நிச்சயம். தன்னம்பிக்கை தூண்டப்பட்டால் வெற்றி நிச்சயம். அதையும் தாண்டிக் கடலில் பறக்கும்போது அனுமனுக்கு மீண்டும் சோதனை. சோர்வு. எப்படி? மைந்நாக மலை. அங்கார தாரை, சுரசை என்ற மூவரால் தொடர்ந்து தொல்லைகள் வந்தன.

தன்னம்பிக்கை தள்ளாடியதும் கடவுள் நம்பிக்கைக்குத் தாவுகிறான் அனுமன். ராம நாமத்தை ஜபித்தால் துன்பம் நீங்கும் என்று "ராம என எல்லாம் மாறும்' என்று ராம நாமம் சொல்லுகிறான். கவலையைக் கடந்து இலங்கையை மிதிக்கிறான். தன்னம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் ஒன்றுக்கொன்று எதிரி அல்ல. அரிசியும் கோதுமையும் மாதிரி. ஒன்று இல்லாதபோது மற்றொன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். காரில் மலைப்பாதையில் போகிறபோது ஒரே கியரில் வண்டி போகுமா? போகாது. கியர் மாற்றி கியர் போட்டுக் காரை மலைமீது ஓட்டவில்லையா? அப்படித்தான்.

வாழ்க்கைப் பாதையும் மலைப் பயணம் மாதிரிதான். கியர் மாற்றி கியர் போடுகிற மாதிரி தன்னம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திப் பயணத்தை நிகழ்த்தலாம். "தன்னம்பிக்கை உடையவன் கடவுளைக் கும்பிடக் கூடாது... கடவுள் நம்பிக்கை உள்ளவன் சுயமுயற்சி செய்யமாட்டான்...' என்கிற வெட்டி விஷயங்களை வெளியே வீசிவிட்டு முன்னேறுகிற வழியைப் பாருங்கள். தன்னம்பிகையோடு இரு... அது தளரும்போது தட்டிக் கொடுத்து முறுக்கேற்றும் நண்பர்களைப் பெறு... அதற்கும் வழியில்லையா? இறை நம்பிக்கையைப் பயன்படுத்து. தயக்கம் இன்றி மாறி மாறி இவற்றைப் பயன்படுத்தி வெற்றியைக் குவிக்கப் பார். இதுவே அனுமனிஸம்... நண்பனே... இதை நீ புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

Friday, March 25, 2016

திரையில் மிளிரும் வரிகள் 7 - காதலை அறிவிக்கும் காலடியோசை ப.கோலப்பன் THE HINDU TAMIL




திரையில் மிளிரும் வரிகள் 7 - காதலை அறிவிக்கும் காலடியோசை
ப.கோலப்பன்
THE HINDU TAMIL
கும்பகோணம் வெறும் கோயில் நகரம் மட்டுமல்ல. இலக்கியத் துறையிலும் இசைத் துறையிலும் பெருந்தடம் பதித்தவர்கள் குடந்தையின் தெருக்களில் உலவினார்கள். பேராசிரியரும் எழுத்தாளருமான இந்திரா பார்த்தசாரதியைச் சந்தித்து இது குறித்து உரையாடினேன். கும்பகோணம் டவுன் உயர்நிலைப் பள்ளியில் அவருக்கு ஆசிரியராக இருந்தவர் தி. ஜானகிராமன்.


ஒருமுறை அவரைச் சந்திப்பதற்காக மகாமகக் குளக்கரைக்குச் சென்றபோது அங்கே கரிச்சான் குஞ்சு என்ற புனைபெயரில் எழுதி வந்த நாராயணசாமி, “ஒட்டும் இரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் பாடலை விளக்கி்க்கொண்டிருந்தாரம். வடமொழியில் பெரும்புலமை பெற்று, காளிதாசனின் படைப்புகளையெல்லாம் கசடறக் கற்றிருந்த கரிச்சான் குஞ்சு, “பாரதி பாடலின் வரிகளுக்கு நிகரான வரியை இதுவரை படித்ததில்லை” என்று சொல்லிக்கொண்டிருந்தாராம்.

“பாங்கினிற் கையிரண்டும் தீண்டி அறிந்தேன்.

பட்டுடை வீசுகமழ் தன்னில் அறிந்தேன்,

ஓங்கிவரும் உவகை ஊற்றில் அறிந்தேன்;

ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டில் அறிந்தேன்”.

கடலை நோக்கி அமர்ந்திருக்கும் காதலன் காதலியின் கையைத் தீண்டியும் அவள் உடுத்திருக்கும் பட்டுப் புடவையின் மணத்தை முகர்ந்தும் அவன் உள்ளத்தில் பெருகும் மகிழ்ச்சியையும் கொண்டு அவள் வருகையை அறிகின்றான். ஆனால் அதையெல்லாவற்றையும் விட அவள் வந்ததுமே அவனுடைய இதயமும் ஒரே கதியில் துடிக்க ஆரம்பிக்கிறது. இந்த உணர்வைக் கொண்டே காதலி வருகையை அறிந்துவிடுகிறான்.

இந்த வரிகள்தான் பின்னாளில் கண்ணதாசனின் கைவண்ணத்தில், “உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்” என்று வல்லவனுக்கு வல்லவன் திரைப்படத்தில் வெளிப்பட்டது எனலாம். பாடலின் வரிகள், “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்” என்று தொடங்கும்.

தமிழ்த் திரைப்பட உலகில் வில்லன்கள் வரிசையில் தனக்கென ஒரு பாணியை வகுத்திருந்த கே.ஏ.அசோகன்தான் காதலர்களின் இந்த தேசிய கீதத்தைப் பாடும் காட்சியில் தோன்றினார் என்பது முக்கியமான விஷயம். இப்பாடலுக்கு இசையமைத்தவர் வேதா. பல இந்திப் பாடல் மெட்டுகளை அப்படியே தமிழில் மாற்றித் தந்தவர் இவர்.

“வெற்றிப் பாடல்களைக் காப்பியடித்து ஜெயம் பெறலாம் என்பதே சினிமாக்காரர்களின் கொள்கை. இதற்குப் பலியானார் வேதா. ஆனால் பாட்டுக்காரனின் கனவைப் பார்த்திபன் கனவில் படரவிட்டார். வல்லவன் படங்களில், இந்தி மெட்டுகளையே தமிழில் வாழும்படி செய்துவிடுவதில் தான் வல்லவர் என்று காட்டினார். இளம் வயதில் காலமானாலும் மக்கள் செவிகளில் இன்றும் கானமாக வலம் வருகிறார்” என்று ‘திரை இசை அலைகள்’ புத்தகத்தில் வேதா குறித்து எழுதியிருக்கிறார் திரைத்துறை ஆய்வாளர் வாமனன்.

“நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்

உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை”

என்று டி.எம். சௌந்தரராஜன் தொகையறா வரிகளை ஓங்கி உச்சரிக்கையில் உலகமெங்கும் இருக்கும் காதல்களின் உள்ளங்களில் அது எதிரொலிக்கிறது. அதிலும் இரவின் அமைதியில் தூக்கத்தைத் தொலைத்துக் கிடக்கும் காதலர்களை மயிலிறகால் வருடுகிறது இப்பாடல்.

காதல்வயப்பட்டுக் கிடப்பவர்கள் எல்லோருமே எல்லாப் பிறவிகளிலுமே ஒன்றாவே இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொள்கிறார்கள். பக்தி இலக்கியங்களிலும் இக்கருத்து உண்டு.

“ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்”

என்று நம்மாழ்வார் வேண்டுகிறார்.

“எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்”

என்று திருப்பாவையில் ஆண்டாள் சொல்கிறாள். அவளே நாச்சியார் திருமொழியில்

“இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்முடையவன் நாராயணன் நம்பி”

என்கிறாள். பக்தியின் இன்னொரு வடிவம்தானே காதல். அதனால்தான் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் சைவ சமயக் குரவர்களும் நாயகி பாவம் கொண்டு ஆண்டவனை அடைய நினைக்கிறார்கள்.

“இந்த மானிடர் காதல் எல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்

நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்”

ஆணவக் கொலைகள் நடக்கும் காலம் இது. மனித மனங்கள் இணைந்தாலும் மனிதர்கள் அவர்களை வாழ விடுவதில்லை. ஆகவே நிரந்தரத் தன்மையற்ற மானுடக் காதலையும் மலர்களின் வாசனையையும் ஒதுக்கித் தள்ளுகிறான் கவிஞன்.

“இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களைத் தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையில்

ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்.

Obsession என்ற ஆங்கில வார்த்தைக்கு இந்த வரிகளைப் பொருத்திக்கொள்ளலாம். தலைவன் நினைவு முழுவதையும் காதலியே ஆக்கிமித்துக் கிடக்கிறாள். உலகில் உள்ள எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி அவளின் பூமுகத்தைக் காண்கிறான். காதல் உணர்வின் உச்சம் என்று இதைச் சொல்லலாமா?

தொடர்புக்கு: bagwathi@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

அரசு விழாவில் மூதாட்டிக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உதவி வழங்குகிறார். அருகே எஸ்.டி.சோமசுந்தரம்.

எம்ஜிஆர் 100 | 29 - மக்களின் மனங்களில் இன்றும் வாழ்பவர்!

THE HINDU TAMIL

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. பிறர் அடைய முடியாத எட்டாத உயரத்துக்குச் சென்றபோதும் அவரது எண்ணம் எப்போதும் சமூகத்தின் கடைநிலையில் வாழும் சாதாரண மக்களைப் பற்றியே இருந்தது. அதனால்தான் சாதாரண மக்களின் மனங்களில் இன்றும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

‘மும்பையில் மாதுங்கா, டெல்லி யில் கரோல்பாக் போல கொல் கத்தா நகரில் லேக் ஏரியா என்ற இடம் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி. 1982-ம் ஆண்டில் அங்கு கட்டப்பட்ட தமிழ்ச்சங்கக் கட்டிடத்தை நிர்வாகிகள் அழைப்பின்பேரில் அங்கு சென்று முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். அந்தக் கட்டிடம் எழும்ப மூல காரணமாக இருந்தவரே எம்.ஜி.ஆர்.தான். கட்டிடம் கட்டுவதற்காக ரூ.5 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

விமானம் மூலம் கொல்கத்தா சென்ற எம்.ஜி.ஆரை திரளான தமிழர்கள் வரவேற்றனர். மாலையில் தமிழ்ச்சங்க கட்டிடத் திறப்பு விழா நடந்தது. இரண்டு நாட்கள் அங்கு தங்கினார். அப்போது, மேற்குவங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை சந்தித்து பேசினார்.

எம்.ஜி.ஆர். அப்போது தமிழகத்தின் முதல்வர் என்ற முறையில் மேற்கு வங்க அரசின் விருந்தாளியாக வரவேற்கப்பட் டார். விமான நிலையத்தில் இருந்து அதி காரிகள் அவரை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்குதான் இரண்டு நாட்களும் எம்.ஜி.ஆர். தங்குவ தாக ஏற்பாடு. பிரம்மாண்டமும் ஆடம் பரமுமான ஆளுநர் மாளிகைக்கு அழைத் துச் செல்லப்பட்ட எம்.ஜி.ஆர், தான் தங்க வேண்டிய இடத்தை சுற்றிப் பார்த்தார். 10 நிமிடங்களில் ‘‘இந்த இடம் நமக்கு சரிப்பட்டு வராது. ஓட்டலுக்குச் சென்று தங்கிவிடலாம்’’ என்று கூறி புறப்பட்டு விட்டார்.

மேற்குவங்க அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஒருபுறம்; வியப்பு மறுபுறம். ‘‘ராஜ் பவனில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. இங்கேயே தங்கலாமே’’ என்று கேட்டுக் கொண்டனர்.

எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடியே, ‘‘தங் களின் அன்புக்கு நன்றி. இங்கே எனக்கு வேண்டிய எல்லா சவுகரியங்களும் உள்ளன. ஆனால், நிறைய தமிழர்கள் என்னைப் பார்க்க வருவார்கள். கட்டுப்பாடுகள் நிறைந்த ஆளுநர் மாளிகைக்குள் அவர்களால் நுழைய முடியாது. அவர்களுக்கு சவுகரியமான இடத்தில் நான் இருக்கணும்’’ என்று சொல்லிவிட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து கிளம்பிவிட்டார்.

ஆளுநர் மாளிகை அமைந்திருக்கும் ‘டல்ஹவுசி சதுக்கம்’ என்ற பகுதியிலேயே இருந்த ஒரு ஓட்டலில் தங்கினார். தன் னுடன் வந்த உதவியாளர்கள், தமிழக அரசு அதிகாரிகளையும் அதே ஓட்டலில் தங்க வைத்தார். அரசு சார்பில் ராஜ போகங்களுடன் இலவசமாக தங்கு வதற்கு வாய்ப்பு இருந்தும் தன்னைப் பார்க்க வரும் தமிழர்களின் வசதிக்காக சொந்த செலவில் ஓட்டலில் தங்கினார் எம்.ஜி.ஆர்.

அவர் வரும் தகவல் பற்றி பெரிய அளவில் கொல்கத்தாவில் விளம்பரம் செய்யப்படவில்லை. இருந்தாலும் தன் னைப் பார்க்க தமிழர்கள் வருவார்கள் என்ற எம்.ஜி.ஆரின் கணிப்பு தவற வில்லை. கொல்கத்தாவில் வாழும் தமிழர்களுக்கு விஷயம் தெரிந்து சில மணி நேரங்களில் எம்.ஜி.ஆரைப் பார்க்க ஓட்டலுக்கு கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டனர்.

அப்படி வந்தவர்களில் பெரும் பாலோர் சாதாரண மக்கள். எம்.ஜி.ஆரை விழிகளால் விழுங்கியபடியே அவரது கையை குலுக்கியும் காலில் விழுந்து வணங்கியும் மகிழ்ச்சியையும் அன்பை யும் வெளிப்படுத்தினர்

அவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்த சாதாரண மக்களின் கைகளில் எம்.ஜி.ஆர். ஏற்பாட்டின்படி அவரது உதவியாளர் மாணிக்கம் பணத்தை திணித்து அனுப்பினார். மக்கள் எம்.ஜி.ஆரை வாழ்த்திச் சென்றனர்.

தமிழ்ச்சங்கக் கட்டிடத் திறப்பு விழா வுக்கு மறுநாள் காலை, திடீரென தான் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து புறப்பட்டு சாலையில் இறங்கி எம்.ஜி.ஆர். நடக்க ஆரம்பித்து விட்டார். அங்கு வந்திருந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் எம்.ஜி.ஆரோடு நடந்தனர். சாலையில் கொய்யாப் பழம் விற்றுக் கொண்டிருந்த வயதான தமிழ்ப் பெண்ணிடம் ‘‘பழம் என்ன விலை?’’ என்று ஜாலியாக கேட்டார். அந்த மூதாட்டியும் சளைக்கவில்லை. எம்.ஜி.ஆரை பார்த்த மகிழ்ச்சியில் அந்த மூதாட்டி, ‘‘உனக்குப் போய் விலை சொல்ல முடியுமாய்யா? எல்லாமே உனக் குத்தான் எடுத்துக்கோ’’ என்று கூறினார்.

அந்த மூதாட்டி நினைத்துப் பார்க்காத தொகையை அவர் கையில் திணித்த எம்.ஜி.ஆர்., கூடையில் இருந்த பழங் களை எடுத்து அருகே இருந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த மூதாட்டியிடமும் பழத்தைக் கொடுத்து ‘‘நீயும் சாப்பிடு’’ என்றார். அந்த மூதாட்டிக்கு அழுகையே வந்துவிட்டது. ‘‘நீ நல்லா இருக்கணும் ராசா’’ என்று கூறிக் கொண்டே காலில் விழ முயன்றவரை தடுத்து அணைத்து ஆறுதல் கூறினார் எம்.ஜி.ஆர்.!

‘நாடோடி மன்னன்' படத்தில் நாடோடி யாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க் கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.’’

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

எம்.ஜி.ஆரின் 100-வது படம் ‘ஒளிவிளக்கு’. 1968-ம் ஆண்டில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. மதுரையில் 21 வாரங்கள் ஓடியது. மறு வெளியீடுகளிலும் சக்கைபோடு போட்டது. 1979-ம் ஆண்டு இலங்கையில் மறு வெளியீட்டிலும் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘ஒளிவிளக்கு’.

- தொடரும்...

விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு

விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


DAILY THANTHI


சென்னை,


கணவன் மறுதிருமணம் செய்த பின்னர், கீழ் கோர்ட்டு பிறப்பித்த விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து காலதாமதமாக மேல்முறையீடு செய்த மனைவியின் மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.


விவாகரத்து
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமிக்கும், சென்னை புழுதிவாக்கத்தை சேர்ந்த ராமலிங்கத்துக்கும் (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 2007–ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2008–ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இதற்கிடையில் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தாம்பரம் கோர்ட்டில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு மகாலட்சுமி ஆஜராகாததால், கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராமலிங்கத்துக்கு ஒரு தலைபட்சமாக விவாகரத்து வழங்கி தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.


மேல்முறையீடு
இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி அதே ஆண்டு ஏப்ரல் மாதம் தாம்பரம் கோர்ட்டில் மகாலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு 2014–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் ராமலிங்கம் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், தாம்பரம் கோர்ட்டு தன்னுடைய மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் மகாலட்சுமி மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:


திருமணம் செல்லுமா?
விவாகரத்து தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து, அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் காலம் முடிந்த பின்னர், கணவர் மறுதிருமணம் செய்து கொண்டார். ஆனால், மேல் முறையீடு செய்யும் கால அவகாசம் முடிந்த பின்னர், கீழ் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து முதல் மனைவி மேல்முறையீடு செய்தால், அந்த கணவர் செய்த இரண்டாவது திருமணம் செல்லுமா? என்ற கேள்வி இந்த வழக்கில் எழுந்துள்ளது.


பொதுவாக விவாகரத்து தீர்ப்பை எதிர்த்து சில நாட்கள் காலதாமதம் செய்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார், அந்த மனுவை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளும்.


ஆஜராகவில்லை
ஏன் என்றால், இதுபோன்ற வழக்கில் கணவன்மனைவிக்கு இடையே உள்ள பிரச்சினைகளை தாண்டி, அவர்களது குழந்தைகளின் நலனும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. இந்த வழக்கில் தாம்பரம் கோர்ட்டு கணவருக்கு ஒரு தலைபட்சமான விவாகரத்து வழங்கிய பின்னர், அதை ரத்து செய்ய வேண்டும் என்று 24 நாட்கள் காலதாமதமாக மகாலட்சுமி மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அவர் நேரில் ஆஜராகவில்லை. வழக்குக்குரிய கட்டணத்தையும் அவர் செலுத்தவில்லை. எனவே, அவரது மனுவை தாம்பரம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. அந்த தள்ளுபடி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யும் காலம் முடிந்த பின்னர், ராமலிங்கம் மறுதிருமணம் செய்து கொண்டார். இப்போது தாம்பரம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மகாலட்சுமி மனு செய்துள்ளார்.


உரிமை இல்லை
உரிய காலத்தில் விரைவாக செயல்படாமல், அலட்சியமாக இருந்து விட்டு, காலம் கடந்த பின்னர் அவர் இந்த கோர்ட்டை நாடியுள்ளார். இப்போது ராமலிங்கம் திருமணம் செய்து விட்டதால், அந்த பெண்ணின் வாழ்க்கையையும் கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால், ராமலிங்கம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மேல்முறையீடு காலம் முடிந்த பின்னர்தான் தன் கட்சிக்காரர் திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்த பின்னர், இதுபோன்ற மனுவை தாக்கல் செய்ய மகாலட்சுமிக்கு உரிமையே கிடையாது’ என்று கூறி சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் அளித்துள்ள தீர்ப்புகளை தாக்கல் செய்துள்ளார்.


தள்ளுபடி
தற்போது இவர்கள் இருவருக்கும் பிறந்த மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. ஆனால், அந்த குழந்தைக்கு மாதந்தோறும் ஜீவனாம்சத்தை ராமலிங்கம் வழங்கி வருவதாக அவரது வக்கீல் கூறினார். எனவே, மனுதாரரின் காலதாமதமான மனுவை ஏற்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறேன்.


இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

NEWS TODAY 20.09.2024