Wednesday, April 6, 2016

வேகமாய் வளரும் ஊழல்

சிந்தனைக் களம் » சிறப்புக் கட்டுரைகள்


நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி ‘முந்த்ரா ஊழலை’ நாடாளுமன்றத்தில் எழுப்பினார்

இந்தியாவின் தூதராக 1948-ல் பிரிட்டனில் பணியாற்றிய வி.கே. கிருஷ்ண மேனனைத் தொடர்புபடுத்தி ‘ஜீப் ஊழல்’ வெளியானது. இந்திய ராணுவத்துக்காக 200 ஜீப் ரக வாகனங்கள் வாங்க ரூ.80 லட்சம் வழங்கப்பட்டது. அவற்றில் 155 மட்டுமே வந்து சேர்ந்தன. ரூ.20 லட்சம் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மேனன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளினார் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. 1959-ல் நாட்டின் ராணுவ அமைச்சராகவும் மேனனை நியமித்தார்.

அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி. விதிமுறைகளை மீறி, தொழிலதிபர் முந்த்ராவின் நிறுவனங்களில் செய்த ரூ.1.24 கோடி முதலீடு ஒரு ஊழலாக வெடித்தது. 1958-ல் முந்த்ரா ஊழலை நேருவின் மருமகன் பெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எழுப்பினார். முந்த்ராவுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது நிதியமைச்சராக இருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி, நிதித்துறை செயலர் எச்.எம். படேல் ஆகியோர் பதவி விலகினார்கள்.

அலைக்கற்றை ஊழல்

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஊழலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர் ஆ. ராசா பதவி விலகினார். நாட்டின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை அளித்த பிறகும்கூட இன்னும் விசாரணை அளவிலேயே இருக்கும் இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

அரசு நிறுவனமான ‘ஏர்-இந்தியா’ தனக்கான தேவையைவிட இரு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் விமானங்களைக் கடனுக்கு வாங்கியது. இதற்குக் காரணம் விமானக் கொள்முதலுக்காக அந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட தரகுதான் என்று பின்னர் தெரியவந்தது. அப்போது விமானப் போக்குவரத்து அமைச்சராக பிரஃபுல் குமார் படேல் பதவி வகித்தார். விமானங்களை இரு மடங்காக வாங்கினாலும் வருவாய் தரும் விமான வழிப்பாதைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு இப்போது ரூ.35,000 கோடி கடனும், தொடர் இழப்பும் ஏற்பட்டிருக்கின்றன.

மக்கள் நல திட்ட ஊழல்

அரசுக்குத் தேவைப்படும் கொள்முதல்களில் மட்டுமல்லாமல், மக்கள் நலத்திட்டங்களிலும் கணிசமான அரசுப் பணம் தனியார் நிறுவனங்களுக்கு மடைமாற்றி விடப்படுகிறது. ஏழை மக்களுக்கான மண்ணெண்ணெயில் 40%, டீசலுடன் கலப்படம் செய்வதற்குக் கடத்தப்படுகிறது. மகாத்மா காந்தி பெயரிலான தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் 50% உரிய பயனாளிகளுக்குச் சென்று சேர்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படி அரசின் கொள்முதல், விநியோகம், மக்கள் நலத் திட்டங்களுக்கான தொகை கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டும்கூட அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், இடைத் தரகர்கள், அதிகாரத் தரகர்கள் என்று யாருமே வழக்குகளில் சிக்குவதோ தண்டனை பெறுவதோ மிக மிகக் குறைவு. கொள்ளையில் கிடைக்கும் பணம் மேல்நிலையிலிருந்து கீழ்நிலை வரையுள்ள அதிகாரிகள், அரசியல் தலைவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுவதால் யாரும் தண்டனை பெறுவதில்லை, ஊழலும் வெளியே தெரியாமல் மறைக்கப்படுகிறது.

தேசியமய நோக்கம்

1969-ல் தனியார் வங்கிகளையும் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்திரா காந்தி தேசியமய மாக்கினார். விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் வங்கிக் கடன்கள் கிடைக்க வேண்டும் என்பதே நோக்கம் என்று கூறப்பட்டது..

ஆனால் நடைமுறையில் விவசாயிகளுக்கும் கிராமப்புற ஏழைகளுக்கும் சிறு, நடுத்தரத் தொழில் முனைவோர்களுக்கும் வங்கிக் கடன் கிடைப்பது எளிதல்ல. வங்கிகளிலேயே ‘உள்நபர்கள்’ இடைத் தரகர்களாகச் செயல்பட்டு வங்கிப் பணத்தை, தங்களைக் கவனிப்பவர்களுக்குக் கொடுத்து, கூடுதல் வருமானம் பெறுகின்றனர். இப்போது இந்தத் தொகை இமாலய அளவுக்கு உருவெடுத்துவிட்டது.

சமதர்மம் (சோஷலிசம்) என்பது சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கானது; ஆனால் வரிவிதிப்பு என்பது ஏழைகளிடமிருந்து திருடி பணக்காரர்களுக்குக் கடனும் சலுகைகளும் வழங்குவதாக மாறிவிட்டது. வரி ஏய்ப்பும், ‘ஹவாலா’ என்று அழைக்கப்படும் சட்ட விரோதப் பணப் பரிமாற்றங்களும் அரசின் ஆசியோடு நடக்கின்றன. வரி விலக்கு பெற்ற நாடுகளாக சில நாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அந்நாடுகளின் முகவரிகளில் நிறுவனங்களைப் பதிவுசெய்துகொண்டு கருப்பை வெள்ளையாக்கிக் கொள்கின்றனர் தொழில் அதிபர்கள். இதற்காக ஏற்றுமதி மதிப்பைக் குறைத்தும், இறக்குமதி மதிப்பை அதிகரித்தும் போலியாக ஆவணங்களைத் தயாரித்துக் காட்டி இடைவெளியாகத் திரளும் பெரும் பணத்தை அப்படியே விழுங்குகின்றனர்.

ராஜீவும் ராவும்

1980-களில் ராஜீவ் காந்தியும் 1990-களில் நரசிம்ம ராவும் ‘லைசென்ஸ்-பர்மிட்-கோட்டா’ ராஜ்யத்தை ஒழிக்க முயன்றார்கள். முதலீடு, விற்பனை, வருமானம் போன்றவற்றுக்கு அரசு சில சலுகைகளை அளித்தாலும் அரசு இலாக்காக்களின் அதிகாரவர்க்கக் கட்டமைப்பு அப்படியே தொடர்கிறது. எனவே அதன் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும், ஊழல்களும் தொடர்கின்றன. இப்போதைய வித்தியாசம் என்னவென்றால் முன்பைவிடப் பல மடங்குக்குப் பணம் மடைமாறுகிறது.

இத்தகைய ஊழல்களை விசாரிக்கும் நடை முறைகளும் ஆண்டுக்கணக்காக மாற்றமில்லாமல் அப்படியே தக்கவைத்துக்கொள்ளப்படுகின்றன.

கோடிக் கணக்கில் பணம் கொள்ளையடிக்கப் பட்டால் அதை விசாரிக்கவும் தவறிழைத்தவர்களைத் தண்டிக்கவும் அரசு வலுவான கட்டமைப்பை உருவாக்காமல் இருப்பதால், தொழிலதிபர்களுடன் கூட்டுக் சேர்ந்து கொள்ளையடிப்பதே லாபம் என்று அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். அப்படியே குற்றச்சாட்டுகள் பேரில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தாலும் அது ஆண்டுக் கணக்கில் நீடித்து, கடைசியில் ‘போதிய ஆதாரங்கள் இல்லை’யென்று வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது அல்லது சிறு தொகை மட்டும் அபராதமாக விதிக்கப்பட்டு வழக்கு முடிக்கப்படுகிறது.

அரசின் வளம், நிதி ஆகியவற்றை விநியோகிப் பதற்கான அமைப்புகள் தவறு செய்தால் தண்டிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் பலமோ, அதிகாரமோ வழங்கப்படுவதில்லை. அதன் தலைவர்களே பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், ஆளும் கட்சியின் தயவில் பதவி வகிப்பவர்கள் என்பதால் தங்களைப் போன்ற அதிகாரிகளைக் கடுமையாகத் தண்டிக்க அவர்கள் முன்வருவதில்லை.

மொரிஷியஸ், சிங்கப்பூர்

மொரிஷியஸ் நாட்டில் மூலதன ஆதாய வரி இல்லை. எனவே அங்கிருந்து முதலீடு செய்யப் படுவதாகக் காட்டி வரி விதிப்பிலிருந்து தப்புகின்றனர். சில சிங்கப்பூர் வங்கிகள் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம், முதலீட்டாளர் யார் என்றே அறிவிக்காமல் முதலீடு செய்யச் சட்டரீதியாக இடம் தருகின்றன. இதைப் போன்ற வழிகளால் கருப்புப் பணம் பெருகுவதுடன் வெள்ளையாக்கப்பட்டு புழக்கத்துக்கும் வந்துவிடுகிறது. வரி ஏய்ப்பு மிக எளிதாகவும் சட்டபூர்வமாகவும் நடக்கிறது. இப்படியொரு ஏற்பாட்டை அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் வேண்டுமென்றே உருவாக்காமல், தற்செயலாக நடந்திருக்கிறது என்று நம்ப நீங்கள் தயாரா?

இப்போதுள்ள அரசும் முந்தைய நிர்வாக நடைமுறைகளை அப்படியே காப்பாற்றத்தான் நினைக்கிறது; இதை மாற்ற வேண்டும் என்ற விருப்பமோ நியாயமான சந்தை உருவாக வேண்டும் என்ற வேட்கையோ இப்போதைய அரசுக்குக் கிடையாது. ஊழலுக்கு எதிராகப் பேசும். ஆனால் ஊழலுக்கு வகை செய்யும் வழிமுறைகளை மாற்றாது, கருப்புப் பணம் புழங்குவதற்காகச் செய்துகொள்ளப்பட்ட ஏற்பாடுகளைக் களையாது. மிகப் பெரிய ஊழல் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்கப் போதிய எண்ணிக்கையில் நீதிபதிகளையும் நீதிமன்றப் பணியாளர் களையும் நியமிப்பதுகூட இல்லை. ஊழலுக்கு எதிரான, கருப்புப் பணத்துக்கு எதிரான இயக்கம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்புதான்; மேடைப் பேச்சுக்கு மட்டும்தான்.

- எஸ்.எல். ராவ், பயன்பாட்டுப் பொருளாதாரத்துக்கான தேசியப் பேரவையின் உறுப்பினர்.

தமிழில்: சாரி

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

ஆர்.ஷபிமுன்னா

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடுகள் காலி செய்யப்படுவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கேடர்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணியில் இணைந்து பணி யாற்றுவது வழக்கம். இந்த கால கட்டத்தில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள அரசு வீடுகள் அல்லது பங்களாக்கள் அவர் களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த அதிகாரிகள் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதலுக்குப் பின் தங்கள் வீடுகளை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. இந்நிலையில் இந்த அவகாசம் முடிந்த பிறகும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக கேஜ்ரிவால் அரசு அடையாளம் கண்டுள்ளது.

இவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கேஜ்ரிவால் அரசு, இவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்குமாறு கோரியுள்ளது. டெல்லியில் அரசு குடியிருப்புகள் பற்றாக்குறை நிலவுவது இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்புகளே எங்களுக்கு தரப்படுகிறது.

இதில் பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து குடியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவு செய்த அதிகாரிகள் சில மாதங்கள் கூடுதலாக தங்க விரும்புவது உண்டு. மேலும் குழந்தைகளின் கல்வி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. என்றாலும் கேஜ்ரிவால் அரசு - மத்திய அரசு இடையிலான அரசியல் மோதலே இதன் பின்னணி காரணம். தங்கள் பேச்சை கேட்காதவர்களை குறிவைத்து கேஜ்ரிவால் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக இந்த வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பை டெல்லி அரசு கடந்த சில மாதங்க ளாக தொகுத்து வந்தது. பிறகு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீடு களை காலி செய்ய அதிகாரி களுக்கு நிர்ப்பந்தம் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டது. என்றாலும் இதற்கு எந்தப் பலனும் இல்லாததால் தற்போது மத்திய அரசை கேஜ்ரிவால் அரசு அணுகியுள்ளது.

அரசு வீடுகளுக்காக ‘எஸ்டேட் ரூல்ஸ்’ என்ற விதிகள் உள்ளன. இதன்படி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன் பிறகு 2 ஆண்டுகள் வரை சந்தை மதிப்பில் வாடகை வசூலிக்கலாம்.

இதன் பிறகும் காலி செய்யாதவர்களை சட்டப்பூர்வ மாக வெளியேற்றலாம். என்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சில சிக்கலான மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவோ ருக்கு 3 மாதங்களுக்கு பதிலாக 2 ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!

Published: April 6, 2016 08:35 ISTUpdated: April 6, 2016 08:57 IST

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!


மருத்துவர்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிகளை நிர்ணயிக்க வேண்டிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தலைவராக இருந்தவரே லஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழு. 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் சுகாதார சேவையும் மருத்துவக் கல்வியும் முறையான கட்டுப்பாடுகளின்றி நிர்வகிக்கப்படுவது அதிர்ச்சி தருகிறது. ஒருபுறம் மருத்துவக் கல்விக்காகும் செலவு மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மறுபுறம் மருத்துவக் கல்வி நிர்வாகமும் வெளிப்படையாக இல்லாமல் திரைமறைவிலேயே நடக்கிறது.

தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் நேரடிப் பொறுப்பாளரான ‘இந்திய மருத்துவக் கவுன்சில்’ (எம்.சி.ஐ.) அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட உயர் அமைப்பாகும். உயர் கல்வி நிறுவனங் களை ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் அதற்குத் தரப்பட்டிருக்கிறது. மருத்துவர்களைப் பதிவு செய்யும் உயர் அமைப்பும் இதுதான். இப்படிப்பட்ட மருத்துவக் கவுன்சில் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்யத் தவறியதல்லாமல் ஊழலிலும் திளைத்தது மன்னிக்க முடியாத தவறு. லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் 2010-ல் கைது செய்யப்பட்டார். அந்தக் கவுன்சிலே தாற்காலிகமாகப் புதிதாக மாற்றியமைக்கப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியின் உயர் கல்வி இடங்கள் ரூ.50 லட்சம் வரை நன்கொடை பெற்றுக்கொண்டு விற்கப்படுவதாக வரும் செய்திகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்றக் குழு, அதைத் தடுக்கத் தவறியதற்காக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கிறது. தனியார் பெருநிறுவனங்களைப் போன்ற பெரிய மருத்துவமனைகளைத் தர ஆய்வு செய்வதிலும், புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்க அனுமதிப்பதிலும் ஒரேயொரு முகமையை அனுமதிப்பதில் உள்ள ஆபத்தையும் அறிக்கை உணர்த்துகிறது.

மருத்துவக் கல்வி அமைப்பையும் மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் நீண்ட காலமாகச் சீரமைக்காமல் அப்படியே நீடிக்கவிட்டது தவறு. இனியும் இதில் சமரசத்துக்கு இடமில்லை. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நல்ல தரத்தில் நிர்வகிக்கப்பட வேண்டும். அதற்கான நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுடைய நலனையும் பொது நலனையும் மட்டுமே கருதிச் செயல்பட வேண்டும். இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் மருத்துவ சேவை தனிப் பிரிவாகவும் மருத்துவக் கல்வி தனிப் பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், மாணவர்களுக்கான குறைந்தபட்சத் தகுதிகள், பாடத்திட்டம், பயிற்சிகள் போன்றவை நல்ல தரத்தில் முறையாக நிர்ணயிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு நியமித்த ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி 2 தனித்தனி வாரியங்களை இதற்காக ஏற்படுத்த வேண்டும். பட்ட வகுப்பு, முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிகளை மேற்பார்வையிடுவது, நிறுவனங்களை மதிப்பிடுவது போன்றவற்றை அந்த வாரியங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று சவுத்ரி குழு பரிந்துரை செய்திருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஊழலுக்கும் வழிவகுத்துவிட்ட இப்போதைய மருத்துவ உயர் கல்வி நிர்வாக அமைப்பை இனியும் இப்படியே நீடிக்கவிடுவது சரியல்ல. இது ஆதிக்க சக்திகள் பலனடைய மட்டுமே வழிவகுக்கும். ஒருபுறம் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க உண்மையான ஆர்வத்தோடு காத்துக் கிடக்கும் தகுதியாளர்கள் ஏராளமாக இருக்க, ஒரு சில இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல விலைக்கு விற்கும் இந்த வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கே இப்போது சிகிச்சை தேவைப்படுகிறது. அரசு தயங்கக் கூடாது!

7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து

7-வது சம்பள கமிஷனால் உணவு பொருள் விலை உயரும்: ரகுராம் ராஜன் கருத்து


7-வது சம்பள கமிஷன் பரிந் துரைகளை அமல்படுத்தினால் பணவீக்கம் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக நிகர உள்நாட்டு உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 0.40 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில் சில்லரை பணவீக்க விகிதம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
2016-17 நிதியாண்டின் இரண் டாவது காலாண்டில் 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஜிடிபி அதிகரிக்க வாய்ப்பு
இதன் காரணமாக நுகர்வோர் விலை குறியீடு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இதன் பிரதிபலிப்பு அடுத்த 24 மாதங்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்ப்பதாக ரகுராம் ராஜன் கூறினார்.
நடப்பு கணக்கிலிருந்து சுமார் 0.40 சதவீதம்வரை ஜிடிபி அதிகரிக்கும் வாய்ப்புள் ளது.
இதன் விளைவாக உணவுப் பொருட்கள் விலை உயரும் வாய்ப்புள்ளது என்றும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
அரசின் உணவு கையிருப்பு கொள்கைகள் மற்றும் கொள் முதல் விலை, குறைந்தபட்ச ஆதார விலை போன்றவை இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் என்றும் இந்த அறிக்கை கணித் துள்ளது.
5 மாநில தேர்தல் பணப்புழக்கம் ரூ.60 ஆயிரம் கோடி
சட்டப் பேரவைத் தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களின் பணப்புழக்கம் சுமார் ரூ. 60 ஆயிரம் கோடி வரை அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நேற்று குறிப்பிட்டார். தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் கையில் சாதாரணமாக பணப் புழக்கம் அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களிடம் ராஜன் குறிப்பிட்டார். மக்களிடம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடி வரை புழங்குகிறது, இது சாதாரணமானதல்ல என்றும் கூறினார்.
இதன் பாதிப்பு தேர்தல் நடக்கும் மாநிலத்தில் மட்டுமல்ல, பக்கத்து மாநிலத்துக்கும் நீள்கிறது என்றார். தேர்தல் நேரத்தில் பணப் புழக்கம் எப்படி நிகழ்கிறது என்பது குறித்து ராஜன் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்கள்படி பணப்புழக்கம் 48 சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னை,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பாஸ்போர்ட் பெறுபவர்களின் வசதிக்காக கடந்த மாதம் 19–ந் தேதி தாம்பரம் சேவை மையத்தில் சிறப்பு மேளா நடத்தினோம். இதன் மூலம் 435 பேர் பலனடைந்தனர். இதன்தொடர்ச்சியாக 9–ந் தேதி (சனிக்கிழமை) அமைந்தகரை மற்றும் சாலிகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சேவைமையத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அமைந்தகரையில் 500 பேரும், சாலிகிராமத்தில் ஆயிரம் பேர் உள்பட 1,500 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் கலந்து கொண்டு பயன் அடைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான பதிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்குகிறது. சிறப்பு மேளாவில் தட்கல் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

காணும் இடங்களில் எல்லாம் தெரிய வேண்டும்

வ்வொரு ஆட்சியின்போதும், பெயர் சொல்வதற்கு ஏதாவது திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்த ஆட்சியின் பெயர் காலம்காலமாக நிலைத்து நிற்கும். அந்த திட்டத்தை எத்தனை ஆண்டுகள் கழித்துப்பார்த்தாலும், அதை அறிமுகப்படுத்திய அரசாங்கம்தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், 2004–ம் ஆண்டு ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திட்டம் என்றால், அது 2006–ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமாகும்’. பா.ஜ.க. அரசாங்கமும் இதை தொடர்ந்து நிறைவேற்றிவருகிறது. சாதாரண கிராம மக்களுக்கு இதை 100 நாள் வேலைத்திட்டம் என்றால்தான் தெரியும். கிராமப்புறங்களில் உள்ள ஏழை–எளிய மக்கள், திறன் பயிற்சிபெறாத மக்கள், தங்கள் உடல் உழைப்புகளைக்கொண்டு வேலைபார்க்க முன்வரும் ஆண், பெண் இருவருக்கும், ஆண்டுக்கு 100 நாட்கள் வேலைதருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். ஆரம்பத்தில் முழுக்க முழுக்க மத்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், இப்போது மாநில அரசுகளுக்கான நிரந்தர சொத்துகள் உருவாக்கப்பட்டால், மத்திய அரசாங்கம் 75 சதவீத தொகையையும், மாநில அரசு 25 சதவீத தொகையையும் ஏற்கும்.

தமிழ்நாட்டில் ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒருநாள் சம்பளம் 64 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆண்டுக்கு ஆண்டு இந்தத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 183 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ஆண்டுக்கு இந்த தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த ஒருநாள் சம்பளம் 183 ரூபாயிலிருந்து 203 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவில் 229 ரூபாயிலிருந்து 240 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல, கர்நாடகத்தில் 204 ரூபாயிலிருந்து 224 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த தொகையை கேரளா அளவுக்கு 240 ரூபாயாக உயர்த்த மத்திய அரசாங்கத்தை, தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில், 85 லட்சத்து 11 ஆயிரம் குடும்பங்கள் 100 நாள் வேலைத்திட்டத்துக்கான கார்டு வைத்திருக்கிறார்கள். இந்த திட்டம் கிராம மக்களுக்கு நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாகும்.

ஆனால், இந்த திட்டத்திலும் பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இந்த திட்டம் வந்தபிறகு, கிராமப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு இதைவிட அதிக கூலி கொடுத்தாலும் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. ஏனெனில், விவசாய வேலைகளுக்குச்சென்றால் கொடுக்கும் கூலிக்கு வேலை வாங்கிவிடுவார்கள். ஆனால், 100 நாள் வேலைத்திட்டத்தில் நடக்கும் முறைகேடுகள் காரணமாக வேலை செய்யாமலோ, அல்லது பெயருக்கு கொஞ்சம் வேலை பார்த்துவிட்டோ, நிர்ணயிக்கப்பட்ட கூலியில் ஒருபங்கை சம்பளமாக வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிவிடலாம். மீதித்தொகை வேலைவாங்கும் பொறுப்பில் உள்ளவர்கள் பைக்கு போய்விடும். இத்தகைய முறைகேடுகளால்தான் இந்த திட்டத்துக்கு இதுவரையில் ஒதுக்கப்பட்ட, செலவழிக்கப்பட்ட தொகைக்கான பலன்களைப்பார்க்க முடியவில்லை. இப்போது ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டிவிட்டது. அனைவருக்கும் கூலியை இதன்மூலம் வங்கிக்கணக்கில் செலுத்துவதை உறுதி செய்யவேண்டும். மொத்த வேலைகளையும் நிரந்தர சொத்துகளாக்கவேண்டும். பார்த்த இடமெல்லாம் இது 100 நாள் வேலைத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட ஏரிகள், கட்டிடங்கள், கழிப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், வளர்க்கப்பட்ட மரங்கள், கட்டப்பட்ட பாலங்கள் என்று பெயர் சொல்லவேண்டும். இதற்கு பொறுப்பான உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் எங்கள் பஞ்சாயத்தில் இவ்வளவு தொகை செலவழித்தோம், அதன் பயனாக இவ்வளவு நிரந்தர சொத்துகளை உருவாக்கினோம் என்று கணக்குகாட்டவேண்டும். அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்கவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும். குறிப்பாக, இந்த வேலைகளை விவசாய வேலை இல்லாத நாட்களில் மேற்கொள்ளவேண்டும்.

மூடுவிழாவுக்கு தயாராகும் பி.எட்., கல்லூரிகள்:மாணவர் சேர்க்கை சரிவால் தடாலடி முடிவு

Posted: 04 Apr 2016 06:58 AM PDT

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு குறைந்ததாலும், பி.எட்., படிப்பு இரண்டு ஆண்டாக மாற்றியதாலும், அப்படிப்பின் மீதான ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. மாணவர் சேர்க்கை நடத்த முடியாத பல பி.எட்., கல்லுாரிகள் நடப்பு கல்வியாண்டுடன் மூடுவிழா நடத்தவும் தயாராகி வருகின்றன.தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், தமிழகம் முழுவதும், 726 பி.எட்., கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழக அரசு பள்ளிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.எட்., முடித்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், பி.எட்., படிப்பதில் மாணவ, மாணவியரிடையே ஆர்வம் அதிகமாக இருந்தது. அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை விடவும் அதிகம் கொடுத்து, படிக்கவும் போட்டிகள் இருந்தது.ஆனால், அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், ஆண்டுக்காண்டு உபரி
ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால், கடந்த இரு ஆண்டுகளாக புதிதாக ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படவில்லை. மேலும் எதிர்காலத்தில், பணிபுரியும் ஆசிரியர்களுக்கே வேலை உத்தரவாதம் இல்லாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில், கடந்த கல்வியாண்டில், பி.எட்., படிப்பு ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கூடுதல் பாடங்கள், கூடுதல் கல்விக்கட்டணம் உள்ளிட்டவைகளால், மாணவர்களிடையே ஆர்வம் வெகுவாக சரிந்துள்ளது. கடந்த கல்வியாண்டிலேயே, 60 சதவீத இடங்களே நிரம்பின. வரும் கல்வியாண்டில், 40 சதவீத இடங்கள் கூட நிரப்ப முடியாத நிலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பி.எட்., கல்லுாரிகளை லாபகரமாக நடத்துவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால், பல கல்லுாரி நிறுவனங்கள் பி.எட்., கல்லுாரிகளுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, கலை அறிவியல் மற்றும் வேறு சில பாடங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளன.

Saturday, April 2, 2016

எம்ஜிஆர் 100 | 35 - எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்! தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

எம்ஜிஆர் 100 | 35 - எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை உன்னிப்பாக கவனித்தபடி இருப்பார். அவர் கவனிப்பது பிறருக்குத் தெரியாது. சில நேரங்களில் தெரிந்தது போல காட்டிக் கொள்ளவும் மாட்டார். ஆனால், தனக்குத் தெரியும் என்பதை பின்னர் பூடகமாக வெளிப்படுத்திவிடுவார். அவரது கூரிய பார்வையில் இருந்து எதுவும் தப்பாது.

திரையுலகில் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் மிகவும் கண் டிப்பானவர். அவரிடம் பேசவே பிறர் பயப்படுவார்கள். அப்படிப்பட்டவரிடம் முன்னணிக்கு வந்து கொண்டிருந்த நடிகராக இருந்தபோதும் தனக்கு சரி என்று பட்டதை எம்.ஜி.ஆர். தயங்காமல் சொல்வார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயா ரித்த ‘சர்வாதிகாரி’ படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகன். அந்தப் படம் ‘தி கேலன்ட் பிளேடு’ (The gallant blade) என்ற ஆங் கிலப் படத்தின் தழுவல். அதற்கு ‘வீர வாள்’ என்று முதலில் பெயரிடப்பட்டது. கதைக்குப் பொருத்தமாக படத்தின் பெயரை ‘சர்வாதிகாரி’ என்று மாற்றி யதே எம்.ஜி.ஆர்.தான். அதை டி.ஆர். சுந்தரமும் ஏற்றுக் கொண்டார்.

இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் அஞ்சலி தேவி நடித்தார். நடிகை அஞ்சலி தேவி மீது எம்.ஜி.ஆருக்கு மதிப்பு உண்டு. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவ ராக இருந்த நடிகை என்ற பெருமை அஞ்சலி தேவிக்கு உண்டு. அவர் தலை வராக வருவதற்கு எம்.ஜி.ஆர். முக்கிய காரணம். எம்.ஜி.ஆருக்குப் பிறகு 1959-ம் ஆண்டில் நடிகர் சங்கத் தலைவரானார் அஞ்சலி தேவி. ‘சர்வாதிகாரி’ படப்பிடிப் பின்போது ஒரு பாடல் காட்சியில் அஞ்சலி தேவி பம்பரமாக சுற்றிச் சுழன்று தரையில் விழ வேண்டும். அதன்படியே, நடித்து முடித்தார். எல்லாருக்கும் காட்சி திருப்தியாக இருந்தது. டைரக்டரும் ஓ.கே.சொல்லிவிட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர். மட்டும் ‘‘மறுபடி யும் ஒரு ‘டேக்’ எடுங்க’’ என் றார். காட்சி நன்றாகத் தானே வந்திருக் கிறது, எதற்காக மறுமுறை எடுக்கச் சொல்கிறார்? என்று யாருக்கும் புரிய வில்லை. எம்.ஜி.ஆரின் வற்புறுத்த லால் காட்சி மீண்டும் படமாக்கப்பட் டது. மறுபடியும் அஞ்சலி தேவி அதேபோல நன்றாகவே நடித்தார். இம் முறை எம்.ஜி.ஆருக்கும் திருப்தி. காட்சிக்கு அவரும் ஓ.கே. சொன்னார். இரண்டு ‘டேக்’கிலும் ஒரே மாதிரிதானே அஞ்சலி தேவி நடித்தார்? எதற்காக மறுபடியும் ‘ரீ டேக்’ எடுக்கச் சொன் னார்? என்று எல்லோரும் எம்.ஜி.ஆரை பார்த்தனர்.

எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, ‘‘முதல் முறை அஞ்சலியம்மா பம்பரம் போல சுற்றி வரும்போது அவரது பாவாடை குடை போல விரிந்து முழங்கால் வரை ஏறிவிட்டது. படத்தில் விரசமாகத் தெரியும் என்பதால்தான் காட்சியை மறுமுறை எடுக் கச் சொன்னேன்’’ என்று விளக்கம் அளித்தார். எம்.ஜி.ஆரின் கண்ணியத்தை அறிந்து அஞ்சலி தேவி நெகிழ்ந்து போனார். ஒரு காட்சி படமாக்கப்படும்போது நடிகர்களின் நடிப்பு மட்டுமின்றி, கேமரா கோணம், ஒளி அமைப்பு, ஒப்பனை, உடை அமைப்பு என எல்லாவற்றையும் எம்.ஜி.ஆர். நுட்பமாக கவனிப்பார்.

‘மீனவ நண்பன்’ படத்தில் இயக்குநர் ஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆரின் ஒப்பனையாளர் பீதாம்பரத்தின் மகனும் பிரபல இயக்கு நருமான பி.வாசு உதவி இயக்குநராக பணியாற்றினார். படத்தில் எம்.ஜி.ஆருக் கும் நடிகை லதாவுக்கும் டூயட் பாடலான ‘கண்ணழகு சிங்காரிக்கு விழியிரண்டில் கண்ணி வைத்தேன்...’ பாடல் காட்சி கர்நாடக மாநிலம் மங்களூர் கடற்கரை யில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது பாடலில் ஒரு வரிக்கு எம்.ஜி.ஆர். சரியாக வாயசைக்கவில்லை என்று உதவி இயக்குநர் பி.வாசுவுக்கு தோன்றி யது. இயக்குநரான ஸ்ரீதர் அதை கவனிக்க வில்லை. காட்சியை எடுத்து முடித்ததும் ஸ்ரீதர் ஓ.கே.சொல்லிவிட்டார். ஆனால், பி.வாசுவுக்கு இதில் திருப்தி இல்லை.

எம்.ஜி.ஆருக்கு பின்னே நின்றிருந்த அவர், இயக்குநர் ஸ்ரீதருக்கு ஜாடை காண்பித்து ‘பாடல் வரிகளுக்கு எம்.ஜி.ஆரின் உதட்டசைவு சரியில்லை’ என்று சைகையில் விளக்கினார். ஸ்ரீதர் புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆரிடம் வந்து, ‘‘அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை படமாக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். ‘‘எதற்காக?’’ என்று விளக்கம் கேட்டார் எம்.ஜி.ஆர்.!

பலர் முன்னிலையில் மிகப் பெரிய நடிகரான எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘உங் கள் வாயசைப்பு சரியில்லை என்று தோன்றுகிறது. அதனால் மீண்டும் ஒரு முறை...’ என்று சொன்னால் நாகரிகமாக இருக்காது. எம்.ஜி.ஆரும் தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது? என்று தயங்கிய ஸ்ரீதர், ‘‘கேமரா ரிப்பேர், காட்சி சரியாக பதிவாகவில்லை’’ என்று சொல்லி சமாளித்தார்.

மீண்டும் குறிப்பிட்ட அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்தார். ஸ்ரீதர், பி.வாசு உட்பட அனைவருக்கும் திருப்தி. அப்போதுதான் எதிர்பாராமல் அந்தக் கேள்வியை எம்.ஜி.ஆர். கேட்டார்.

பி.வாசுவைப் பார்த்து ‘‘என்ன வாசு? காட்சி ஓ.கே.வா? திருப்தியா?’’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வெலவெலத்துப் போய்விட்டார் வாசு. தான் ஸ்ரீதரிடம் ஜாடை காண் பித்தது எம்.ஜி.ஆருக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று வாசுவுக்கு தர்மசங்கடம். ஸ்ரீதருக்கு வாசு ஜாடை காட் டியதை பக்கவாட்டில் திரும்பியபடி ஓரக்கண்ணால் எம்.ஜி.ஆர். கவனித் திருக்கிறார். அவரது கேள்விக்கு ‘‘ஓ.கே. சார்’’ என்று வாசுவும் வெட்கப் புன்னகையுடன் பதிலளிக்க, அவரைப் பார்த்து மீண்டும் சிரித்தார் எம்.ஜி.ஆர்.!

காட்சி ஏன் மீண்டும் படமாக்கப்படு கிறது என்ற நிலைமையைப் புரிந்து கொண்டு, இயக்குநர், உதவி இயக்குநர் ஆகியோருக்கு திருப்தி அளிக்கும் வகையில் முழு ஒத்துழைப்பு அளித்து மீண்டும் நடித்துக் கொடுத்ததுடன், நடந்தது தனக்கும் தெரியும் என்பதை சூசகமாக பி.வாசுவுக்கு எம்.ஜி.ஆர். உணர்த்திவிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு முதுகிலும் கண்!

- தொடரும்...

Friday, April 1, 2016

ஜி மெயிலை காலி செய்யப் போகிறதா வாட்ஸ்-அப்?


VIKATAN NEWS

கவல் தொடர்புக்கு புறாவில் தொடங்கி கடிதம், தந்தி, தற்போது  இ-மெயில் எனும் நவீன முறைக்கு வந்திருக்கும் மனிதனின் தொலைத்தொடர்பு சாதனங்கள்,  மேலும் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கின்றன. அதற்குச் சான்றாக ஆப்பிளின் ஐ-ஓ.எஸ் சில் வெளியாகியிருக்கும் வாட்ஸ்-அப் அப்டேட்கள், ஜி-மெயிலையே தேவை இல்லாத ஒன்றாக மாற்றும் வகையில் அமைந்திருக்கின்றன.

இன்று ஒவ்வொரு இளைஞர்களையும் அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரு மொபைல் ஆப் வாட்ஸ்-அப். மெயில், ஃபேஸ்புக் உரையாடல்களை இன்னும் எளிமையாக்கியதில் இதற்கு பெரும் பங்குண்டு. டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ,சிறிய வீடியோ என சிலவற்றை மட்டுமே அனுப்பப் பயன்பட்ட வாட்ஸ்-அப்,  ஃபேஸ்புக் நிறுவனத்தால் வாங்கப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்களைக் கண்டு வருகிறது. அதுவும் சமீபத்தில் ஐ-ஓ.எஸ்சில் ஏற்படுத்தப்பட்ட அப்டேட்கள் இதன் தரத்தைப் பலமடங்கு உயர்த்தியுள்ளன.

வீடியோ ஓடையில் ஜூம் செய்வது, அதிக பேக் கிரவுண்ட் ஆப்ஷன்கள் மற்றும் பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்பும் வசதி என நிறைய அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளன. கூகுள் டாக்குமென்ட், ஐ கிளவுட் மற்றும் டிராப் பாக்ஸ் போன்ற ஆப்களின் உதவியோடு பி.டி.எஃப் பைல்களையும் டாக்குமன்ட் பைல்களையும் அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பைல்களை அனுப்பவே ஜி-மெயில் போன்ற இன்டெர்நெட் மெயில் சர்வீஸ்கள் உபயோகப்பட்டுவந்த நிலையில்,  வாட்ஸ்-அப்பிலேயே இந்த வசதி வந்திருப்பது, நமது தொடர்பு முறையை மேலும் எளிதாக்கிவிடும்.
இனிமேல் லாக்-இன் செய்து மெயில் கம்போஸ் செய்யத் தேவையில்லை. வழக்கமாக நாம் எந்நேரமும் சேட் செய்து கொண்டிருக்கும் வாட்ஸ்-அப்பிலேயே அனைத்தையும் முடித்துவிடலாம். குரூப் மெயில் அனுப்ப நினைத்தால்,குரூப் சேட்டில் அந்த மெசேஜை அனுப்பிவிடலாம். அதுமட்டுமின்றி மிகப்பெரிய பைல்களை ஐ-கிளவுடில் சேவ் செய்துகொள்ளவும் முடியும் என்பதால், டேடா ரிசீவிங்கும் இதில் எளிதே. குறைந்த நேரத்தில் எளிதில் அனுப்ப முடியும் என்பதால், இதை அனைவரும் விரும்புவர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லேப் டாப்களிலும் வாட்ஸ்-அப் வலம் வருவதால் மொபைல் மட்டுமின்றி அனைத்து தளங்களிலும் இதன் பயன்பாடு எளிதே.

ஃபேஸ்புக் வந்த பிறகு ஆர்குட், ஜி-மெயிலின் வருகைக்குப் பிறகு ஹாட் மெயில் போன்றவையெல்லாம் காணாமல் போன வரலாறு நாம் அறிந்ததே. எந்த வேலையையுமே மனிதன் எளிதாக செய்ய நினைப்பதால் தான் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டே போகிறது. தந்தி சேவைக்கு இந்தியாவில் மூடுவிழா கண்டதுபோல வாட்ஸ்- அப்பின் இந்த முன்னேற்றங்களால் ஜி-மெயில் போன்ற இ-மெயில் தளங்களுக்கும் மூடுவிழா காணும் நாள் விரைவில் வந்துவிடும் என்று கணிக்கின்றனர் வல்லுநர்கள்.
கூகுளின் சி.இ.ஓ வான நம்ம ஊரு சுந்தர் பிச்சை இதை எப்படி டீல் பண்ணப் போறாரோ?

மு.பிரதீப் கிருஷ்ணா
(மாணவர் பத்திரிகையாளர்)

Making students repeat all exams for failing in one paper unreasonable: Kerala HC


Making students repeat all exams for failing in one paper unreasonable: Kerala HC
TIMES OF INDIA

KOCHI: Making students who fail in one theory or practical exam to reappear for all the examinations once again is unreasonable and arbitrary, the Kerala high court said on Thursday. Such practice would only result in unfairness to the extreme and doesn't help in achieving higher quality, the court said.
Medical and engineering students having to give up their hopes of obtaining a graduation, or losing multiple years in pursuit of the dream, has become a common scene across the state owing to the insistence of universities that students should reappear for all the examinations if they fail in one of the exams.
The practice was sharply criticized by Justice V Chitambaresh after considering a total of 11 petitions filed by post-graduate medical students, Geethu S and others, questioning the insistence of Kerala University of Health Sciences (KUHS). The students had challenged a clause in KUHS Regulations that stipulated that the students must write all the examinations once again if they fail in one of the examinations or practicals.

Through the petitions, the students had also pointed out that while KUHS Regulations requires a student to achieve a minimum of 50 per cent marks in total and a separate minimum of 40 per cent in each examination, Medical Council of India (MCI) Regulations require them to achieve 50 per cent marks in total and doesn't specify a separate minimum for each paper. Thus, KUHS Regulations is contrary to MCI Regulations, the petitioners had contended.

The court said in the judgment, "Repetitive undertaking of examinations after having secured the minimum prescribed does not scale up the standard and can only be termed as oppressive from the point of view of the student. The repetitive appearance in examinations under the KUHS Regulations has no rationale nexus with the object sought to be achieved and is obviously violative of Article 14 of the Constitution of India (equality before law)."

"The mental anguish which a student has to face in the event of his losing a theory or practical by marginal marks necessitating reappearance for all the papers in theory and practical in order to secure a pass is unimaginable. It is possible that a candidate who has passed in the first attempt may fail in the same examination in the second attempt and the vicious circle of pass and fail will only result in unfairness to the extreme. Clause 3.16 of the KUHS Regulations to the extent it insists that 'a candidate who fails in one subject either theory/practical shall have to appear for all the papers including theory and practical' is unreasonable and arbitrary," the court further said.

Disposing the petitions, by ruling that KUHS Regulations is not valid as it was not notified in the gazette when the university statue (KUHS First Statutes, 2013) came into being, the court directed MCI to clarify whether the students should simultaneously pass in all papers and asked MCI to advise the university within four months so that it can be incorporated into the KUHS Regulations.

Thursday, March 31, 2016

பிஹாரில் நாளை முதல் மதுவிலக்கு: மது அருந்துவோருக்கும் 10 வருட தண்டணை

ஆர்.ஷபிமுன்னா

THE HINDU TAMIL

பிஹாரில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக பகுதியளவு மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. இதற்காக அதன் மீது கடுமையான சட்டங்கள் இம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இச் சட்டத்தின்படி பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 10 வருடம் வரையும், வீடுகளில் அருந்தி விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு 5 வருடங்கள் வரையும் சிறைதண்டனை விதிக்கப்படும்.

நிதிஷ்குமார் முதல் அமைச்சராக இருக்கும் பிஹார் மாநில சட்டப்பேரவையில் நேற்று மதுவிலக்கு அமல்படுத்தும் சட்ட மசோதா 2016 நிறைவேற்றப்பட்டது. அனைத்து உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா பிஹார் மாநிலம் முழுவதிலும் ஒருபகுதி மதுவிலக்கு அமல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக ஏப்ரல் 1 முதல் உள்நாட்டு மதுபான வகைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அயல்நாட்டு மதுபானங்கள் அரசு கடைகளில் மட்டுமே கிடைக்கும் என்றும் பிஹார் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்டம், காவல்துறை அராஜகத்திற்கு வழி வகுக்கும் என எதிர்கட்சியான பாரதிய ஜனதாவில் சில உறுப்பினர்கள் மட்டும் எதிர்ப்பு குரல் கொடுத்தனர். எனினும், மற்ற அனைத்து உறுப்பினர்களும் மேஜையை தட்டி ஆராவரத்துடன் அளித்த ஆதரவிற்கு பின் அமைதியாகி விட்டனர்.

இதன் மீது சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றிய முதல் அமைச்சர் நிதிஷ்குமார், மதுவால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களை காப்பது தம் அரசின் தலயாய கடமை எனக் குறிப்பிட்டார். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்தில் அதை அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், நிரந்தர உடல் பாதிப்பு அடைவோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன் போதை தடுப்பு மறுவாழ்வு மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக, அரசு மருத்துவர்களுக்கு பெங்களூரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ன்படி மதுவிலக்கை அமல்படுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும் எனவும் நிதிஷ் தெரிவித்தார். இறுதியில் அவர், ‘மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’ என அறிவித்தார்.

பிஹாரின் மதுவிலக்கு சட்டத்தின்படி, கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்தி சிக்குவோருக்கு 5 முதல் 10 வருடம் வரையும், தமது வீடுகளில் குடித்து விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு ஐந்து வருடம் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் 7 வருடம் சிறையில் தள்ளப்படுவர்.

மருந்து உபயோகத்திற்கு எனும் பெயரில் மது விற்பனை செய்வோருக்கு 7 வருடம் வரையும், சிறைத்தண்டனை உண்டு. ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பாளர்களுக்கும் 100 மில்லிக்கும் அதிகமாக மது விற்பனை கிடையாது எனவும், இவற்றை தீவிரமாகக் கண்காணிக்க கூடுதலான சோதனை சாவடிகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இத்துடன், மதுவின் மீதான சட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் எனவும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

எனவே, பிஹாரின் பகுதி விலக்கு அமலில் வெளிநாட்டு மதுவகைகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்கும். இதுவும் தனியார் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது, பிஹார் அரசின் மதுகடைகளில் மட்டும் கிடைக்கும். இதுவும் வரும் காலங்களில் தடை செய்யப்பட்டு முழுமையான மதுவிலகு அமல்படுத்தப்படும்.

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

எம்ஜிஆர் 100 | 32 - எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
எம்.ஜி.ஆர். எதிலும் எதிர்நீச்சல் போட்டே வளர்ந்தவர். நெருக்கடியான கட்டங்கள் ஏற்படும்போது தனக்கு நம்பிக்கையானவர்களின் துணை கொண்டு அதை எளிதாகக் கடந்து விடுவார். அதுபோன்ற சமயங்களில் அவருக்கு தோள்கொடுக்க ராஜவிசுவாசிகள் இருப்பார்கள் என்று வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஒருமுறை குறிப்பிட்டார். அப்படிப்பட்ட ராஜவிசுவாசிகளில் முக்கியமானவர் ஆர்.எம். வீரப்பன்.

1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் நிர்வாகியாக ஆர்.எம்.வீரப்பன் பொறுப்பேற்றுக் கொண்டார். விரைவிலேயே அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆருக்கு பிடித்துப் போனது. எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் முதல் நாடகம் ‘இடிந்த கோயில்’. திமுக சார்பில் நடந்த கல்லக்குடி போராட்ட நிதிக்காக, 1953-ம் ஆண்டு அக்டோபர் முதல் வாரம் இடிந்த கோயில் நாடகம் திருச்சியில் அரங்கேறி மக்களின் வரவேற்பை பெற்றது.

அப்போதைய சூழலில் திமுக மீது நாத்திகக் கட்சி என்ற முத்திரை பலமாக விழுந்திருந்தது. அந்த நேரத்தில் ‘இடிந்த கோயில்’ என்ற பெயரில் நாடகம் போட்டால் கடவுள் மறுப்பு நாடகம் என்று மக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் என்றும் நாடகத்தின் கருத்துக்கள் இன்னும் அதிக மக்களை அடைய நாடகத்தின் பெயரை ‘இன்பக் கனவு’ என மாற்றலாம் என்றும் எம்.ஜி.ஆருக்கு யோசனை சொன்னார் வீரப்பன். அது நியாயமாக இருக்கவே, ஏற்றுக் கொண்டார் எம்.ஜி.ஆர்.

அந்தக் காலத்திலேயே மேடை நாடகத்தில் புதிய உத்திகளை எம்.ஜி.ஆர். கையாண்டார். நாடகத்தில் கனவுக் காட்சி வரும். சாட்டின் படுதா ஒன்றின் மீது சிவப்பு, பச்சை வண்ணங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சி அந்தப் படுதாவை லேசாக ஆட்டும்போது அலை அலையாக வண்ணக் கலவையில் தோன்றும் கனவுக் காட்சி கைதட்டல் பெறும்.

அந்தச் சமயத்தில் ‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிக்க எம்.ஜி.ஆர். ஒப்பந்தம் ஆனார். படத்துக்கு திரைக்கதை வசனம் எழுத கருணாநிதியை ஏற்பாடு செய்தார். படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர். நாடக மன்ற நிர்வாகியாக இருந்த வீரப்பன், அவரது படங்கள் தொடர்பான வேலைகளையும் கவனித்துக் கொண்டார்.

குலேபகாவலி, மதுரைவீரன் போன்ற வெற்றிப்படங்கள் மூலம் எம்.ஜி.ஆர். திரையுலகில் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில் ‘நாடோடி மன்னன்’ படம் தயாரிக்க முடிவு செய்தார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். எம்.ஜி.ஆரும் அவரது அண்ணன் சக்ரபாணியும் பங்குதாரர்கள். பின்னர், சிறிது காலம் கழித்து அந்நிறுவனம் ‘எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனமாக மாற்றப்பட்டது. அதில் ஆர்.எம்.வீரப்பனையும் பங்குதாரராக சேர்த்ததுடன் அவரை நிர்வாக இயக்குநராகவும் நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

‘நாடோடி மன்னன்’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவு களை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய் தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.

கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.

திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.

சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.

‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.

எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.

முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.

- தொடரும்...

‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.

படங்கள் உதவி: ஞானம்

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

எம்ஜிஆர் 100 | 33 - குண்டு பாய்ந்ததால் பாதிக்கப்பட்ட குரல்வளம்!

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

மீனவ நண்பன்’ படத்தில் குமரனாக எம்.ஜி.ஆர்.! படத்திலும் எம்.ஜி.ஆர். பெயர் குமரன்தான்.

M.G.R. உழைப்புக்கு அஞ்சாதவர். எடுத்துக் கொண்ட காரியத்துக்காக தன்னை வருத்திக் கொள்ளவும் தயங்காதவர். சினிமா ஆனாலும் சரி, அரசியல் என்றாலும் சரி, தன் முழு உழைப்பையும் திறனையும் அவர் வெளிப்படுத்துவார்.

1967-ம் ஆண்டுக்கு முன் வந்த படங் களில் எம்.ஜி.ஆரின் குரல் கணீ ரென வெண்கல மணி போல ஒலிக் கும். துப்பாக்கிச் சூடு சம்பவத் துக்கு பின் தொண்டையில் குண்டு பாய்ந்ததால் அவரது குரல்வளம் பாதிக்கப்பட்டது. படங்களில் வேறு யாரையா வது ‘டப்பிங்’ கொடுக்கச் செய்யலாம் என்ற யோசனை களை எம்.ஜி.ஆர். நிராகரித்து விட்டார். சொந்தக் குரலில் பேசி நடிக்கவே அவர் விரும்பினார். அவர் குரல் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ரசிகர்களும் மக்களும் ஏற்றுக் கொண்டனர்.

‘காவல்காரன்’ படத்தில் எம்.ஜி.ஆர். பேசும் வசனங்கள் இரண்டு, மூன்று முறை ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஒரு காட்சி முடிந்ததும் அதற்கான வசனங் களை எம்.ஜி.ஆர். மீண்டும் பேசி ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்படி ஒலிப்பதிவு செய்யப்பட்ட வசனங்களை எடிட்டிங்கின்போது காட்சிகளோடு ஒருங்கிணைப்பது மிகவும் கடினம். எம்.ஜி.ஆர். தனக்கே உரிய தொழில் நுட்ப சாதுர்யத்தோடு பலமுறை பதிவு செய்யப்பட்ட வசனங்களில் எந் தெந்த வார்த்தைகள் சரியாக ஒலிக் கிறதோ அவற்றை அங்கிருந்து ஒரு வார்த்தை, இங்கிருந்து ஒரு வார்த்தை என்று எடுத்து ஒன்று சேர்த்து காட்சிகளோடு ஒருங் கிணைத்து தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே அற்புதமாக எடிட் செய்தார்.

பாதிக்கப்பட்ட பேச்சு திறனை மீண்டும் பெற எம்.ஜி.ஆர். விடாமுயற்சியுடன் செயல்பட்டார். ‘ஸ்பீச் தெரபிஸ்ட்’ எனப்படும் பேச்சு பயிற்சி அளிக்கும் நிபுணர்களை வரவழைத்து பயிற்சிகள் எடுத்துக் கொண்டார். நரம்பியல் நிபுணர் டாக்டர் பி.ராமமூர்த்தி, குடும்ப டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரின் ஆலோசனையின்படி, நள் ளிரவில் உதவியாளர்களுடன் கடற்கரை சென்று தண்ணீர் படும்படி அமர்ந்து உரக்கப் பேசி பயிற்சி மேற்கொண்டார்.

‘‘நானும் சாமி என்பவரும் எம்.ஜி.ஆரு டன் நள்ளிரவில் கடற்கரைக்குச் செல் வோம். அலை வந்து மோதும் இடத்தில் அவர் அமர்ந்துகொள்ள நாங்கள் அவரை பிடித்துக் கொள்வோம். அவர் உரக்க பேசி பயிற்சி மேற்கொள்வார்’’ என்று நெகிழ்கிறார் எம்.ஜி.ஆரின் மெய்க்காவலர் கே.பி.ராமகிருஷ்ணன். மாதக்கணக்கில் எடுத்துக் கொண்ட பயிற்சி களால் பெரும் அளவில் பேச்சுத் திறனை எம்.ஜி.ஆர். மீண்டும் பெற்றார். தொண்டையில் குண்டு பாய்ந்ததால் பழைய குரலில் பேச முடியாமல் கட்டைத் தொண்டையில் ஒலித்த எம்.ஜி.ஆரின் குரலும் கம்பீரமாகவே இருந்தது.

‘உரிமைக்குரல்’ படத்தின் வெற்றிக் குப் பின் எம்.ஜி.ஆரும்ஸ்ரீதரும் இணைந்த மற்றொரு வெற்றிப் படம் ‘மீனவ நண்பன்.’ இந்தப் படத்தை கரு.சடையப்ப செட்டியார் தயாரித்தார். இயக்கம்ஸ்ரீதர். படத்தில் கிளை மாக்ஸ் காட்சி எடுக்கப்படாத நிலையில், பெங்களூரில் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தபோது தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சென்னை திரும்பிவிட்டார். தேர்தல் வியூகங்கள் வகுப்பதிலும் பிரச்சாரத் திலும் அவர் தீவிரமாகிவிட்டதால் ‘மீனவ நண்பன்’ கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்படவில்லை. தேர்தலில் ஆட்சி யைப் பிடித்து எம்.ஜி.ஆர். முதல்வராகி விட்டால், படத்தின் கதி என்ன? என்றுஸ்ரீதரும் படக் குழுவினரும் கவலையோடு இருந்தனர்.

1977-ம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். தமிழகம் முழு வதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்வராக பதவியேற்பதற்கான நாளும் குறிக் கப்பட்டு விட்டது. அதற்கு பத்து நாட்களுக்கு முன் இயக்குநர்ஸ்ரீதரை எம்.ஜி.ஆர். அழைத்தார்.

‘‘மீனவ நண்பன் படத்தை முடிக்க இன்னும் எத்தனை நாள் தேவைப்படும்?’’ என்றுஸ்ரீதரிடம் எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரண்டு நாட்கள் ஒதுக்கினால் போதும். முடித்து விடலாம்’’ என்றுஸ்ரீதர் பதிலளித்ததும் உடனே, படப்பிடிப்புக்கு தேதி கொடுத்து ஏற்பாடு செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

சொன்னபடி, குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள எம்.ஜி.ஆர். வந்துவிட்டார். எடுக்க வேண்டிய காட்சி குறித்துஸ்ரீதருடன் ஆலோசித்தார்.

கிளைமாக்ஸில் புயல் வீசும் கொந்தளிக்கும் கடலில் மோட்டார் படகில் வில்லன் நம்பியாரை விரட்டிச் சென்று பிடித்து, படகில் கொட்டும் மழையில் அவருடன் எம்.ஜி.ஆர். சண்டையிட வேண்டும். அவர் நடிக்கத் தயாரானபோது,ஸ்ரீதர் குறுக்கிட்டு, ‘‘அண்ணே, மழை மட்டும் இப்ப வேண்டாம். படகு சேஸ், சண்டை மட்டும் எடுக்கலாம். தேவைப்பட்டால் புயல், இடி, மின்னலுடன் நிறுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.

‘‘ஏன்?’’, காட்சியில் திடீர் மாற்றம் குறித்து புரியாமல் கேட்டார் எம்.ஜி.ஆர்.

‘‘இன்னும் ஒரு வாரத்தில் முதல்வ ராக பதவியேற்கப் போகிறீர்கள். இந்த நேரத்தில் தண்ணீரில் நீண்ட நேரம் நனைந்து சளி, காய்ச்சல் வந்து விட்டால் என்னாவது?’’ என்று தனது கவலையை பதிலாக்கினார்ஸ்ரீதர்.

எதையும் முழு அர்ப்பணிப்போடு செய்யும் எம்.ஜி.ஆர். கேட்கவில்லை. ‘‘எனக்கு ஒன்றும் ஆகாது. மழையும் இருக்கட்டும். அப்போதுதான் இயல்பாக இருக்கும். காட்சிக்கு எஃபெக்ட்டும் கூடும்’’ என்று சொல்லிவிட்டு, மழையில் நனைந்தபடியே நம்பியாருடன் சண்டை போடும் காட்சியில் நடித்து முடித் தார்.

சில நாட்களில் தமிழகத்தின் முதல் வராக பொறுப்பேற்கப் போகிறவர், எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டு எடுத் துக் கொள்ளுங்கள் என்று சொல்லி யிருக்கலாம். இயக்குநரே வேண்டாம் என்று சொல்லியும் மழையில் நனைந்த படி நடித்துக் கொடுத்துவிட்டுச் சென் றார் என்றால், எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வெற்றியின் விளைச்சலுக்கு அவர் பாய்ச்சிய உழைப்பின் வியர்வை பிரமிக்கச் செய்யும்.

தோட்டாவுக்கு டாட்டா காட்டிய தேக்குமர தேகம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு அவர் சொன்னது போலவே, மழையில் நனைந்ததால் சளியோ, காய்ச்சலோ வரவில்லை.

படங்கள் உதவி : ஞானம்

எம்.ஜி.ஆர். நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படம் 1959-ம் ஆண்டு திருவண்ணாமலை கிருஷ்ணா திரையரங்கில் மறுவெளியீடு செய்யப்பட்டது. டிஜிட்டல், சினிமாஸ்கோப் போன்ற நவீன உத்திகள் இல்லாமல் தினசரி மூன்று காட்சிகளாக மறுவெளியீட்டில் 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது ‘நாடோடி மன்னன்.’

- தொடரும்...

Wednesday, March 30, 2016

NGGOA takes exception to DoPT order on purchase of air tickets

NGGOA takes exception to DoPT order on purchase of air tickets

Port Blair
16 Mar 2016

The Department of Personnel & Training recently has issued a series of orders making it compulsory for the government employees to purchase air tickets from concerned Airlines or a few approved travel agents while availing LTC. In this regard, the General Secretary of the Non-Gazetted Govt. Officers’ Association in a letter addressed to the Secretary, Department of Personnel & Training, Ministry of Personnel Public Grievances & Pension, Govt. of India has brought to the notice that around 24 thousand government employees & workers under Andaman and Nicobar Administration posted at various department/offices located in these islands are put to untold difficulties due to such orders. Expressing concern, Shri T.S.Sreekumar informed about the remoteness of these islands and poor internet connectivity which makes the booking of tickets online, more difficult and challenging especially for those who are posted in outer islands away from Port Blair. Many of the employees & workers posted outside at far-flung islands are required to come to Port Blair in advance to book their tickets by availing leave and spending money. The General Secretary has requested the Secretary, DoPT for an urgent intervention, in reviewing the existing instructions on purchase of air tickets for government employees serving in Andaman and Nicobar Islands, as a special case, considering the remoteness and poor internet connectivity in these islands.

A copy of the said letter sent to the Chief Secretary, A & N Administration by the General Secretary with the request to take up the matter with the DoPT, Govt. of India. In another copy sent to the Director of Accounts & Budget, the Association has requested him to continue the previous practice of passing LTC/AFSP bills purchased from private travel agents until a decision had been taken on the said issue by Govt. of India.

NTRUHS convocations tomorrow

NTRUHS convocations tomorrow

எம்ஜிஆர் 100 | 31 - சந்திரபாபு நட்பு

‘புதுமைப்பித்தன்’ படத்தில் எம்.ஜி.ஆர். , சந்திரபாபு.


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. எல்லாருக்கும் உதவும் நல்ல உள்ளம் கொண்டவர். என்றாலும், சில நேரங்களில் சிலரால் அவர் தவறாக புரிந்து கொள்ளப்பட்டார். தன்னைப் பற்றி வரும் தவறான செய்திகளுக்கும் வதந்திகளுக்கும் அவர் விளக்கம் அளிக்க மாட்டார். மக்கள் தன்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமல்ல; விளக்கம் அளிப்பதன் மூலம் யாருடைய பெயரும் கெடக் கூடாது என்ற எண்ணம் எம்.ஜி.ஆருக்கு.

நடிகர் சந்திரபாபு பன்முகத் திறமை வாய்ந்த கலைஞர். நடிப்பு, நடனம், இசை என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். எப்போதும் வெளிநாட்டவர்போல கோட்டும் சூட்டும் அணிந்து மிடுக்காகக் காட்சி தருவார். ‘குலேபகாவலி’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் நட்பு மலர்ந்தது. படப்பிடிப்பில் ஒருநாள் சந்திரபாபுவின் கைகளைப் பற்றிக் கொண்டு ‘‘இனி நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவர்’’ என்று நெகிழ்ந்துபோய் எம்.ஜி.ஆர். கூறினார்.

அப்போதைய எம்.ஜி.ஆரின் படங்களில் சந்திரபாபுவும் கட்டாயம் இடம் பெறுவார். தனது சொந்த தயாரிப்பான ‘நாடோடி மன்னன்’ படத்திலும் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப்பளித்தார். அப்படத்தில் முட்டைகளை குடித்து விட்டு, பிறகு வாயிலிருந்து கோழிக் குஞ்சை அவர் வெளியே எடுக்கும் காட்சியில் சிரிக்காதவர் இருக்க முடியுமா?

கோழிக்குஞ்சு தொண்டையை பிறாண்டும் அபாயம் இருக்கிறது என்று எம்.ஜி.ஆர். தடுத்தும் கேட்காமல் அந்தக் காட்சியில் பிடிவாதமாக அர்ப்பணிப் போடு நடித்தவர் சந்திரபாபு. படத்தின் தயாரிப்பாளருமான எம்.ஜி.ஆர் கவலை அடையும் அளவுக்கு சில நேரங்களில் அவரின் வேடிக்கை விளையாட்டுக்கள் சென்றுவிடும். ‘நாடோடி மன்னன்’ படப் பிடிப்பின்போது ஒருநாள் எம்.ஜி.ஆர். எச்சரித்தும் கேட்காமல் ஒரு முரட்டுக் குதிரை மீது ஏறி கீழே விழுந்து மயக்க மடைந்துவிட்டார். நல்லவேளையாக, பெரிய காயம் எதுவும் இல்லை.

‘‘எண்ணங்கள் ஏப்பங்கள் அல்ல, அப்படியே வெளியே விடுவதற்கு’’ என்று நயமான உவமையை பேரறிஞர் அண்ணா சொல்வது உண்டு. சந்திரபாபு தனது எண்ணங்களை அப்படியே வெளியே விடக்கூடியவர். கேலியும், கிண்டலும், அலட்சியமும் அவருடைய நகைச்சுவை போலவே உடன் பிறந்தவை. எல்லாரையும் கிண்டல் செய்யும் ஜாலி பேர்வழி. எம்.ஜி.ஆரைப் பற்றியும் அவருடைய நடிப்பைப் பற்றியும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்வார் சந்திரபாபு.

இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி தன்னால் கிண்டல் செய்யப் படும் எம்.ஜி.ஆரை வைத்தே ஜூபிளி பிக்சர்ஸ் கோவிந்தராஜூடன் சேர்ந்து ஒரு படம் எடுக்க அவர் முடிவு செய்தது சுவாரஸ்யமான முரண். படத்தின் இயக்குநரும் சந்திரபாபுதான். கதாநாயகி அவரது தோழி சாவித்திரி. படத்தின் கதையை சந்திரபாபு சொல்ல எம்.ஜி.ஆருக்கும் பிடித்துப் போனது. ‘‘எனக்கு நிறைய படங்கள் ‘கமிட்’ ஆகியிருக்கு.கொஞ்சம் பொறுமையா இருங்க. நானே நடிச்சுத் தரேன்’’ என்று எம்.ஜி.ஆர். உறுதியளித்தார். ‘‘இருந்தாலும் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு இல்லியா?’’ என்று சந்திரபாபு துரிதப்படுத்தினார்.



பரணி ஸ்டுடியோவில் பூஜை போடப்பட்டு இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. எம்.ஜி.ஆரை வைத்தே படம் எடுக்கும்போதும் அவரைப் பற்றிய விமர்சனங்களை சந்திரபாபு நிறுத்தவில்லை. அந்த நேரத்தில், எம்.ஜி.ஆருக்கும் பல படங்களின் படப்பிடிப்பு. உடனடியாக, சந்திரபாபுவுக்கு கால்ஷீட் தரமுடியாத நிலை. ஒரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடமே கேட்டார் சந்திரபாபு. கால்ஷீ்ட் விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளும் தனது அண்ணன் சக்ரபாணியை பார்க்குமாறு எம்.ஜி.ஆர். சொன்னார். பொதுவாக கலைஞர்கள் உணர்ச்சிமயமானவர்கள். சந்திரபாபு என்ற பெரும் கலைஞனைப் பற்றி கேட்கவே வேண்டாம். எம்.ஜி.ஆரின் கால்ஷீட் தொடர்பாக சக்ரபாணியுடன் பேசும்போது இருவருக்கும் இடையே வார்த்தைகள் தடித்தன. நிலைமை ரசாபாசமானது. ‘‘நான் நாற்காலியைத் தலைக்கு மேல் தூக்கி விட்டேன். நண்பர்கள் என்னைத் தடுத்திருக்காவிட்டால் ஒன்று நாற்காலி உடைந்திருக்கும். இல்லை…’’ என்று சந்திரபாபு பதிவு செய்திருக்கிறார்.அதோடு, படமும் நின்றுபோனது.

அதன் பிறகும் சந்திரபாபுவை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்த எம்.ஜி.ஆர். ‘‘என்ன பாபு சார்?’’ என்று நலம் விசாரித்தார். படத்துக்கு ‘மாடிவீட்டு ஏழை’ என்று பெயர் வைத்த ராசியோ என்னவோ, சந்திரபாபுவுக்கு கஷ்டகாலம் ஏற்பட்டது. தனது பழைய நண்பர் கஷ்டப்படுவதைப் பொறுக்காத எம்.ஜி.ஆர்., ‘பறக்கும் பாவை’, ‘கண்ணன் என் காதலன்’, தனது சொந்தப் படமான ‘அடிமைப் பெண்’ ஆகிய படங்களில் சந்திரபாபுவுக்கு நடிக்க வாய்ப்புகள் அளித்தார். ‘அடிமைப் பெண்’ படத்தில் நடிக்க அவருக்கு கணிசமான தொகை யையும் ஊதியமாக அளித்தார்.

பி.யு.சின்னப்பா நடித்த ‘கண்ணகி’ படத்தில் கண்ணகியாக நடித்த கண்ணாம்பா பேசும் அனல்தெறிக்கும் வசனங்கள் 60-ஐக் கடந்த பலருக்கு இன்னும் காதுகளில் ரீங்காரமிடும். கண்ணாம்பாவின் கணவர் கே.பி.நாகபூஷணம். எம்.ஜி.ஆர். நடித்த ‘தாலிபாக்கியம்’ படத்தை தயாரித்து இயக்கினார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் நடந்தது. படப்பிடிப்புக் குழுவினர் மைசூரில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தனர். திடீரென, நாகபூஷணம் பதறியபடி எம்.ஜி.ஆரை சந்தித்து, ‘‘தயாரிப்பு செலவுக்காக கொண்டு வந்திருந்த 3 லட்ச ரூபாய் தொலைந்து விட்டது. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு திரும்ப வேண்டியதுதான்’’ என்று கலங்கினார். 1966-ம் ஆண்டில் ரூ.3 லட்சம் மிகப்பெரிய தொகை.

அவரைத் தேற்றி ஆறுதல் கூறிய எம்.ஜி.ஆர்., தனது அண்ணன் சக்ரபாணியின் மைத்துனர் குஞ்சப்பன் மூலம் சென்னையில் இருந்து ரூ.3 லட்சம் கொண்டுவரச் சொல்லி உதவினார். அதோடு மட்டுமல்ல, ‘‘இந்தப் பணத்தை நீங்கள் திருப்பித் தரவேண்டாம்’’ என்றும் சொல்லிவிட்டார். எம்.ஜி.ஆரை பார்த்து கண்களில் கண்ணீருடன் கைகூப்பி நின்றார் நாகபூஷணம்.

‘நாடோடி மன்னன்’ படத்தில் எம்.ஜி.ஆர். சொல்வார்… ‘‘என்னை நம்பாமல் கெட்டவர்கள் அதிகம். நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை.’’

தொப்பி ரகசியம்

‘அடிமைப் பெண்’ படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். ராஜஸ்தான் சென்றபோது, அந்த மாநில முதல்வராக இருந்த மோகன்லால் சுகாதியா, எம்.ஜி.ஆருக்கு விருந்தளித்து கவுரவித்தார். அப்போது அவர் பரிசளித்த புசுபுசுவென்ற வெள்ளைத் தொப்பி, எம்.ஜி.ஆருக்கு அழகாக பொருந்தியது. அதிலிருந்துதான் எம்.ஜி.ஆருக்கு தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது.

படங்கள் உதவி : ஞானம், செல்வகுமார்

- தொடரும்...

High Court acquits ‘depressed’ engineer who killed his son

High Court acquits ‘depressed’ engineer who killed his son


THE HINDU

An engineer who poisoned his five-year-old son to death out of “severe depression” developed after a road accident in which he lost his pregnant wife has been acquitted by the Madras High Court.

In its order acquitting the young engineer – A. Steepen – who was convicted and sentenced to life by a Sessions Court, a Division Bench of Justices M. Jaichandren and S. Nagamuthu said, “It is not every homicide which is made is punishable under the Indian Penal Code. It is only a culpable homicide which is punishable.”

Delivering the order, Justice Nagamuthu said the “unblessed son of a poor family, educated by his poor parents, on becoming an engineer, secured a decent job and lived a life with full of joy and jubilation,” (he) would not have imagined that a “severe blow to his life was fast approaching to make a complete topsy-turvy.”

Steepen was living with his wife and a five-year-old son at West Mambalam, Chennai. On October 20, 2008 he visited his ailing father in a village near Vellore. On his way back to Chennai the next day, Steepen’s car met with an accident in which his wife, then pregnant, died on the spot. Steepen and his son sustained serious injuries and were admitted in a private hospital. The entire medical expenses was taken care by his friends and his landlord, as none of his relatives including in-laws offered any help. Subsequently, his wife’s body was cremated by her parents in the absence of Steepen.

Thereafter, the life of Steepen became difficult. “Everyday went on with extreme grief and agonies; he struggled to make the ends meet and manage the medical expenses as he lost his job due to complete immobility.” Due to this, he developed a “kind of depression”.

On July 8, 2009 Steepen lost his mind “out of depression” and gave sleeping pills to his son, took him to his father-in-law’s house and hanged himself. leaving behind a suicide note. However, he was rescued and admitted to a hospital. Steepen was treated for “severe mental depression” in the Government Royapettah Hospital in the convict ward for about a month and was discharged on August 1, 2009. Meanwhile, a charge-sheet was filed against Steepen on October 10, 2009 and he was later convicted for murder. The Additional Sessions Judge, Fast Track Court IV, Chennai sentenced him to life imprisonment based on the evidence of 19 witnesses, 27 documents and 12 material evidences. Steepen preferred an appeal against the conviction.

Perusing the records, the Bench observed that the culpability as defined under Section 299 of IPC should be established by the prosecution. “A person, who is of unsound mind, cannot have any intention or knowledge in terms of IPC … a person who does not know the consequences of the act that he does, cannot be attributed either with intention or knowledge as is required by IPC,” the judges said.








Hence the court acquitted him of all charges.

A tragic story that made judges rethink homicide

A tragic story that made judges rethink homicide

TIMES OF INDIA

CHENNAI: Road accidents are but a mere data for government, but how a mishap could ruin people's lives and wreck families is best explained by this tragic story of A Steepen.

Born into a poor family and completed engineering course with great difficulty, Steepen landed a decent job and fell in love with Sangeetha. Fortunately, both the families supported their relationship and they got married soonafter. They were blessed with a child.

A fraction of a moment on October 22, 2008, when Steepen's car dashed against a roadside tree, changed his life upside down, forever.

Rushing back to his office in Chennai after visiting ailing father in Vellore district, Steepen's car hit a roadside tree, killing his young wife on the spot and leaving himself and his five year old son badly injured. Steepen was crippled by serious injuries and could not move around without crutches, and, consequently, lost his job as well. By the time he recovered, all the jewellery and cash kept at his home in Chennai had been cleaned out by his in-laws who demanded more 'refund' of the expenses incurred after Sangeetha's death.

With medical bills and debts mounting and family struggling to meet even basic needs of the child, depression set in. Less than a year after the accident - on July 8, 2009, to be precise - Steepen gave 'some unidentified poison' to his son and he himself attempted suicide by hanging. The child died, whereas Steepen survived, only to face murder charge. He was convicted for murder, and sentenced to undergo imprisonment for life in June 2010.

It was when the criminal appeal against his conviction was taken up for hearing by a bench of Justice M Jaichandren and Justice S Nagamuthu, that all these details tumbled out. His counsel and chairman of Bar Council of Tamil Nadu and Puducherry D Selvam narrated the tragic sequence of events, and pointed out that Steepen was under immense stress and depression and hence he did not deserve life imprisonment.

To test his claim, the bench summoned two psychiatrists - Dr Ranjani and Dr Mythili - who treated Steepen to the court and re-examined their earlier statements. Their reply was that Steepen suffered from a major depressive disorder, and said they had even warned hospital staff to keep a close vigil on the patient as there was every likelihood that he might attempt to commit suicide due to the illness.

Convinced that the circumstances were peculiar and Steepen had a grave mood disorder during commission of the crime, the judges said: "It is not every homicide which is made punishable under IPC. It is only culpable homicide which is punishable...Fundamentally what is required is that the accused should have had the intention or knowledge which are traceable to the cognitive faculty of the accused. A person, who is of unsound mind, who does not know the consequences of the act that he does, cannot be attributed with either intention or knowledge as required under Section 299 IPC."

So saying, the bench set aside Steepen's conviction and ordered his immediate release.

சோகத்தால் மனவேதனை: மகனை கொன்ற தந்தைக்கு விடுதலை

DINAMALAR

சென்னை:'அடுத்தடுத்த சோகத்தால் பாதிக்கப்பட்டு, மனவேதனைக்கு ஆளான தந்தை, தன் மகனுக்கு துாக்க மாத்திரை கொடுத்தது, கொலை குற்றம் ஆகாது' என, சென்னை உயர் நீதிமன்றம், பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் ரத்து செய்தது.சென்னை, மேற்கு மாம்பலத்தில் வசித்து வருபவர், ஸ்டீபன். தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிய இவர், சங்கீதா என்பவரை காதல் திருமணம் செய்தார். இவர்களுக்கு, ஐந்து வயதில், ஒரு ஆண் குழந்தை இருந்தது.

வேலுார் அருகில், ஸ்டீபனின் பெற்றோர் வசித்து வருகின்றனர். தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என தகவல் கேள்விப்பட்டு, மனைவி, மகனுடன், வேலுார் புறப்பட்டு சென்றார். அதன்பின், பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரவே, உடனடியாக, மனைவி, மகனுடன் சென்னை புறப்பட்டார்.காரில் வரும்போது, மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தில், மனைவி சங்கீதா இறந்தார். ஸ்டீபனுக்கு, இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்தது.

வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில், ஸ்டீபன் சேர்க்கப்பட்டார். மகனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 2008, அக்டோபரில், சம்பவம் நடந்தது.

ரூ.2.5 லட்சம்:விபத்துக்கு பின், சங்கீதாவின் உடல், சென்னை கொண்டு வரப்பட்டு, கணவன் இல்லாமலே இறுதி சடங்கு நடந்தது. அப்போது, ஸ்டீபன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை செலவு, 2.5 லட்சம் ரூபாய் ஆனது.சிகிச்சை முடிந்து, சென்னை திரும்பிய ஸ்டீபனுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. பீரோவில் இருந்த, 50 சவரன் நகையை காணவில்லை. விசாரித்தபோது, மாமனார் எடுத்து சென்றது தெரியவந்தது. மகளின் இறுதி சடங்குக்கு, 80 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும், அந்த பணத்தை தரும்படி, மருமகனிடம் கேட்டார்.

வேலையும் இல்லாமல், குடும்ப செலவுக்கும், சிகிச்சைக்கும் கையில் பணமும் இல்லாமல், ஸ்டீபன் தவித்தார்; வாழ்க்கையில், விரக்தி ஏற்பட்டது. மகனுக்கு, துாக்க

மாத்திரைகளை கொடுத்தார்.


மேற்கு மாம்பலத்தில் வசிக்கும், மாமனார் வீட்டுக்கு, மகனுடன் சென்றார். அங்கு, மாமியார் மட்டும் இருந்தார். வீட்டுக்குள் சென்று, கதவை பூட்டி கொண்டார்; துாக்கு மாட்டினார்; எடை தாங்காமல், கம்பி அறுந்து கீழே விழுந்தார். துாக்க மாத்திரை சாப்பிட்ட, மகன் இறந்தான். இது, 2009 ஜூலையில் நடந்தது.மாமியாரின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்தனர்; கதவை உடைத்து உள்ளே சென்றனர். இருவரையும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மகன், இறந்து விட்டான்; சிகிச்சையினால், ஸ்டீபன் உயிர் பிழைத்தார்.


இதையடுத்து, ஸ்டீபன் மீது, கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த, சென்னை, விரைவு நீதிமன்றம், ஸ்டீபனுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்தார். மனுவை, நீதிபதிகள் ஜெய்சந்திரன், நாகமுத்து அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. ஸ்டீபன் தரப்பில், வழக்கறிஞர் டி.செல்வம், அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகினர்.


குற்றமாகாது:மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:

சிகிச்சை அளித்த டாக்டரின் விளக்கம் மற்றும் அவரது கருத்தில் இருந்து, 'ஸ்டீபன், சுய கட்டுப்பாட்டில் இல்லை; அவரது செயலால் ஏற்படும் விளைவுகள் பற்றி, அவர் அறிந்திருக்கவில்லை' என்பது தெரிகிறது.மருத்துவ சாட்சியத்தை பார்க்கும்போது, சம்பவம் நடக்கும் போது, ஸ்டீபனின் மனநிலை சரியில்லாமல் இருந்தது தெளிவாகிறது. எனவே, அவரது செயல், கொலை குற்றமாகாது. விடுதலை பெற, ஸ்டீபனுக்கு உரிமை உள்ளது. தண்டனையில் இருந்து, ஸ்டீபனை விடுதலை செய்கிறோம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

Tuesday, March 29, 2016

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி

செல்போன் மூலம் ரயில் டிக்கெட் ரத்து செய்யும் வசதி


ரயில்கள் புறப்படும் முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமென்றால் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். இணையதளம் மூலம் முன்பதிவு செய்திருந்தால், அவர்கள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் வந்துவிடும். ஆனால், கவுன்ட்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் மீண்டும் கவுன்ட்டருக்கு சென்று விண்ணப்பித்து பணத்தை திருப்பப் பெற வேண்டும். இந்த நிலைதான் தற்போது இருக்கிறது.

இந்நிலையில், கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு செல்போன் மூலம் 139 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு டிக்கெட் ரத்து செய்யும் புதிய திட்டம் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கான மென்பொருள் தயாரிக்கும் பணிகள் முடிந்துள் ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கவுன்ட்டர்களில் டிக்கெட் பெறுவோர் அதை ரத்து செய்ய வசதியாக இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும். உடனடியாக செல்போன் மூலம் ரத்து செய்வதால், திரும்பப் பெறும் கட்டணமும் பெரிய அளவில் இழப்பில்லாமல் கிடைக்க வாய்ப்புள்ளது. 139 எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி முழுவிவரங்களையும் அளித்த பின்னர், உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் (ஒன் டைம் பாஸ்வோர்டு) வரும். இதை உறுதி செய்த பின்னர், டிக்கெட் ரத்தாகும். பயணிகள் காலம் தாமதிக்காமல் அதே தினத்திலேயே அருகில் உள்ள கவுன்ட்டருக்கு சென்று, பணத்தை பெற்றுக்கொள்ளலாம்’’ என்றனர்.

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..? சோம.வீரப்பன்

குறள் இனிது: அன்பு கொண்டா, ஆற்றல் கண்டா..? சோம.வீரப்பன்

எனது நண்பர் ஒருவர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் மனிதவளத் துறையின் மேலாளர். நேர்மையானவர், திறமையானவர். சமீபத்தில் அவரது தூரத்து உறவுப் பையன் குமார் (இந்தப் பெயர் பிடிச்சிருக்கா..) அவரிடம் வேலை கேட்டு வந்தார். வயது 23, படிப்பு பிளஸ்டூ. நிறையப் பேசினார். வெட்டிப் பேச்சென்பது சட்டெனப் புரிந்துவிட்டது. 4 ஆண்டுகளில் 5 வேலைகள் மாறியிருந்தார். நண்பருக்கு தர்மசங்கடம். தனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். முதலில் சம்மதிப்பவர்கள் குமாரைப் பார்த்ததும் பயந்து மறுத்து விடுவார்கள். வேறு வழியின்றி தனது அலுவலகத்திலேயே எடுபிடி வேலைக்கு வைத்துக் கொண்டார். குமார் எதையும் ஒழுங்காய்ச் செய்யாவிட்டாலும் நண்பரின் பதவி காரணமாக மற்றவர்கள் சகித்துக்கொண்டனர்.
ஆறு மாதம் கழித்து டெஸ்பாட்ச் பகுதியில் ஓர் எழுத்தர் வேலை காலியாய் இருப்பது தெரிந்ததும் குமார் நம் நண்பரை நச்சரிக்கத் தொடங்கிவிட்டார். நண்பருக்கு ‘நாம் இந்த நிறுவனத்திற்கு எவ்வளவோ உழைத்திருக்கிறோம். நமக்கு வேண்டிய ஒருவருக்கு உதவினால் தப்பில்லை' என்கிற எண்ணம் வந்து விட்டது. அலுவலகத்தில் பலரையும் சரிக்கட்டி அந்த வேலையை குமாருக்கே வாங்கிக் கொடுத்து விட்டார். ஆனால் குமார் குமாரராகவே இருந்தார். பின்னே என்ன? பிச்சைக்காரனை ராஜமுழி முழிக்கச் சொன்ன கதைதான்! அவ்வேலைக்கு வேண்டிய சுறுசுறுப்போ, மற்றவர்களிடம் வேலை வாங்கும் சாமர்த்தியமோ குமாரிடம் சுத்தமாக இல்லை! ஆவணங்கள் போய்ச் சேர தாமதமாயிற்று. பல புகார்கள் குவிந்தன.
ஆனால், கொடுமை என்னவென்றால், குமார் என்ன தவறு செய்தாலும் எல்லோருக்கும் உடனே நம்ம நண்பர் ஞாபகம் தான் வரும்! அவர்கள் குமாரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நம்ம நண்பரையே சாட ஆரம்பித்து விட்டனர்! அவருக்கு நிறுவனத்தில் இருந்த மதிப்பும் மரியாதையும் போயின!
அறிய வேண்டியவற்றை அறியாதவரை அன்புடமை காரணமாக தேர்ந்தெடுப்பது எல்லா மடமையான விளைவுகளையும் உண்டாக்கும் என்கிறது குறள். உங்கள் அனுபவத்திலும் பார்த்திருப்பீர்கள். பணியமர்த்து வதற்கான, பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்துபவர்களுக்குப் பல சிபாரிசுகள் வரும். கைதூக்கி விடுங்கள் என்பார்கள். ஐயா, இது என்ன தர்மகாரியமா? கொஞ்சமும் தகுதியற்றவனைத் தேர்ந்தெடுக்கலாமா? நிறுவனம் என்னவாகும்? கள்ளிச் செடியையா நடுவது?
தொழிலில் வெற்றி பெற்ற வளர்ச்சியடைந்த குடும்பங்களிலும் இதே கதை தான். எனக்குத் தெரிந்த ஒருவர் கோடிக்கணக்கில் வர்த்தகம் புரிந்து வந்தார். தனது மகனை பள்ளிப்படிப்பிற்கே ஸ்விட்சர்லாந்து அனுப்பி இருந்தார். மகன் இந்தியா திரும்பியவுடன் அவரிடம் எல்லாப் பொறுப்புக்களையும் கொடுத்தார். ஆனால் மகனுக்கோ இங்கிருந்தது ஒன்றும் பிடிபடவில்லை. அண்ணே, பிள்ளைகளை முதலாளி ஆக்குவது வேறு; நிறுவனத்தை நடத்தச்சொல்வது வேறு!
கார் ஓட்டப்பழகிக் கொண்டிருப்பவனிடம் போய் நாம் பயணிக்கும் பெரிய பஸ்ஸைக் கொடுக்கலாமா? அது அவனுக்கும் நமக்கும்கூட ஆபத்தானதாயிற்றே! அலுவலகப் பணிகள் ஆற்றலைப் பார்த்து கொடுக்கப்படவேண்டியவை. அங்கு பச்சாதாபமோ பாசமோ பார்ப்பது காலப்போக்கில் எல்லோருக்கும் தீங்காய் முடியும்!

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்

பேதமை எல்லாம் தரும் (குறள் 507)

- somaiah.veerappan@gmail.com

Bleak future for retired staff


Bleak future for retired staff

R. SRIKANTH


There has been a delay in disbursal of pension and other retirement benefits to them

Thousands of former employees of the eight transport corporations in the State no longer have the pleasure of a ‘happy’ retired life, as they are staring at an uncertain financial future. The reason is delayed payment of pension and other retirement benefits.

The delayed payment of commuted pension, dearness allowance arrears and in certain cases the pension amount itself is driving employees to take desperate measures. More than 8,000 retired employees are running from pillar to post to get their pension benefits.

M. Natarajan, who worked as a driver for Tirunelveli Transport Corporation at Kovilpatti depot, distressed at having to wait for several months to get the commuted pension amount, committed suicide.

The family members of R. Jayaraman, who worked as a driver in the Metropolitan Transport Corporation (MTC) at Basin Bridge depot, were not able to save him, because of lack of funds.

Mr. Balakrishnan said except for employees of MTC and State Express Transport Corporation (SETC) the other six transport corporations — Madurai, Villupuram, Kumbakkonam, Salem, Tirunelveli and Coimbatore — have been defaulting on various retirement benefits.

Arumugam Nainar, secretary, Tamil Nadu State Transport Employees Federation, said what was disheartening was the manner in which the commuted pension (one-third amount of the total pension amount paid in advance) entitled to an employee at the time of retirement was yet to be paid, but that ‘recovery’ was being carried out.

At present the commuted pension has been proposed to be paid in 24 monthly instalments, literally making a mockery of the commutation of pension system, he also added.

Shifting of 141 MBBS students

Shifting of 141 MBBS students



Balwant Garg

Tribune News Service

Faridkot, March 28

The Department of Medical Education and Research (DMER), Punjab, Baba Farid University of Health Sciences (BFUHS) and the administration of eight medical colleges in the state today allowed adjustment of 141 MBBS final-year students of Chintpurni Medical College and Hospital (CMCH), Pathankot, subject to certain conditions.

These students will not get stipend till the Punjab government gets Rs 10 crore from the Medical Council of India (MCI).

All 141 medical students have been shifted to three government and five private medical colleges in the state.

While every MBBS students is provided stipend by its college for one-year internship after the completion of academic course, it would not be so in case of these 141 students. These students will not get any stipend from their new college unless the MCI pays Rs 10 crore of endowment funds to the state government.

This endowment of Rs 10 crore was deposited by CMCH with MCI on the directions of the Supreme Court last year after it failed to comply with the MCI norms in providing infrastructure in the medical college.

The Secretary, DMER, has written a letter to the MCI that endowment fund of Rs 10 crore should be transferred to the Punjab government and this amount will be utilised for meeting fee and other expenses for education and training of these shifted students, said Dr Raj Bahadur, vice-chancellor, BFUHS.

As these 2011-batch students have already paid their full fee to CMCH for their four-and-a-half-year academic course, their new colleges will get the fee from the endowment fund after the state government receives the same from the MCI.

Of these 141 students, 26, 26 and 15 are being shifted from CMCH to government medical colleges at Patiala, Amritsar and Faridkot, respectively.

Ludhiana-based Christian Medical College and Dayanand Medical College each will take the responsibility of 10 shifted students.

Gian Sagar Medical College, Banur; Sri Guru Ramdas Medical College, Amritsar; and Adesh Institute at Bathinda will adjust 18 students each.

Forty-six of these 141 students have already passed their academic course and have to complete one-year compulsory internship. Other 95 students will appear in their final year Part-II examinations in May 2016.

As the eight medical colleges will not be able to provide the adjusted students with hostel facilities, they will have to stay and attend the new college at their own expenses. All students who are due for internship should follow the migration procedure as laid down by BFUHS.

In a meeting attended by DMER director, vice-chancellor and registrar of BFUHS and principals and heads of eight medical colleges today, it was agreed that infrastructure and staff, including faculty, was available in all medical colleges except Gian Sagar Medical College, Banur.

The faculty of this private medical college is on strike for the last over a month after the management failed to pay them salary.

- See more at: http://www.tribuneindia.com/mobi/news/punjab/shifting-of-141-mbbs-students-of-pathankot-college-allowed-with-riders/214585.html#sthash.TRnG13AQ.dpuf

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா

விடைபெற்றது இனோவா, வருகிறது கிறிஸ்டா


ஜப்பானின் டொயோடா நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிகவும் பிரபலமானது இனோவா. சொந்த உபயோகத்துக்கான வாகனம் மட்டுமின்றி வாடகைக்கார் நிறுவனங்களின் பெரும்பாலான தேர்வு இனோவா என்றால் அது மிகையில்லை.
எந்த ஒரு நல்ல தொடக்கமும் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் இனோவா உற்பத்தியை நிறுத்திவிட டொயோடா இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதற்கு மாற்றாக புதிய பிராண்டான கிறிஸ்டாவை சந்தைப்படுத்த உள்ளது டொயோடா. அனேகமாக இனோவாவுக்கு பிரிவுசார விழாவே பெங்களூரில் உள்ள ஆலையில் நடத்தப்பட்டுவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் இடம்பெற்ற டொயோடாவின் புதிய வரவான கிறிஸ்டா, இனி இந்தியச் சாலைகளில் வலம் வர உள்ளது.
இனோவாவுக்கு மாற்றாக வரும் கிறிஸ்டா அதைவிட பல மடங்கு மேம்பட்டது. இது இனோவாவை விட நீளமானது. அதைவிட அதிக திறன் கொண்ட இன்ஜின் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. தற்போது இனோவா மாடல் காரின் விலை ரூ.17 லட்சமாகும். புதிய மாடல் கிறிஸ்டாவின் விலை ரூ.20 லட்சமாக இருக்கும் என தெரிகிறது.
இனோவாவைவிட விலை சற்று அதிகமாக இருந்தாலும் கொடுக்கும் தொகைக்கு மிகவும் உண்மையான உழைப்பு மற்றும் சொகுசான பயணத்தை அளிக்கக் கூடியது என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கிறிஸ்டா 2.4 லிட்டர் இன்ஜின் 2ஜிடி எப்டிவி நான்கு சிலிண்டர் டீசல் இன்ஜினைக் கொண்டது. இது 142 பிஹெச்பி சக்தியும் 342 நியூட்டன் மீட்டர் டார்க் அளவையும் கொண்டது. இது லிட்டருக்கு சோதனை ஓட்டத்தின்போது 14 கி.மீ முதல் 16 கி.மீ. தூரம் ஓடியதாம். 5 கியர்களைக் கொண்டதாகவும், ஆட்டோமேடிக் மாடலில் 6 கியர்களைக் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் உள்புறம் மிகவும் உயர் ரக தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. டிரைவர் சீட்டை தானியங்கி முறையில் தேவைக்கேற்ப அட்ஜெஸ்ட் செய்யும் வசதி உள்ளது. பயணிகள் சவுகர்யமாக அமர்ந்து பயணிக்க போதிய இடவசதி, 7 அங்குல தொடுதிரை மானிட்டர் மிகச் சிறந்த பொழுது போக்கு அம்சங்களை அளிக்கக் கூடியது. போதிய விளக்கு வசதி, சூழலுக்கேற்ப உள்புற குளிர் நிலையை நிர்ணயிக்கும் நுட்பம், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதி உள்ளிட்டவை இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சமாகும்.
இதே பிரிவில் உள்ள பிற நிறுவன தயாரிப்புகளைக் காட்டிலும் இனோவாவுக்கு அதிக கிராக்கி இருந்ததற்கு அதன் செயல்பாடு மட்டுமின்றி விலையும் ஒரு காரணமாக இருந்தது. கிறிஸ்டாவும் விலை குறைவாக இருக்கும் பட்சத்தில் இது தொடர்ந்து பிற நிறுவனத் தயாரிப்புகளுக்குச் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. டொயோடா நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய மாடல்களை அறிமுகம் செய்வதோடு முந்தைய மாடலை முற்றிலுமாக நிறுத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
முன்பு குவாலிஸ், தற்போது இனோவா.
புதிய வரவுகள் பழையனவற்றை அடித்துச் செல்லும். கிறிஸ்டாவின் வரவு இனோவாவை ஓரங்கட்டிவிட்டது.

பொருளாதார வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்தது சரியே: ஜேட்லி திட்டவட்டம்

பொருளாதார வளர்ச்சிக்காக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்தது சரியே: ஜேட்லி திட்டவட்டம்

THE HINDU
பிபிஎப் உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைத்தது சரியான நடவடிக்கையே என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

இந்தியாவில் கடனுக்கான வட்டி விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை ஏற்படுத்தக் கூடியது என்று கூறினார்.

இதுகுறித்து இன்று அருண் ஜேட்லி கூறியதாவது:

"சிறு சேமிப்புகளுக்கு வரி விலக்கோடு 8.7 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் அளிக்கப்படும் வட்டி 12 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது. இதனால் தொழில்துறைக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 14 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை விதிக்க வேண்டியிருக்கிறது.

சிறு சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி மிகவும் அதிகமாகும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது.

உதாரணமாக பிபிஎப்-புக்கு அளிக்கப்படும் 8.7 சதவீத வட்டி மற்றும் அளிக்கப்படும் வரிச் சலுகையோடு கணக்கிடும்போது அது 12.5 சதவீதம் முதல் 13 சதவீதம் வரை உள்ளது.

ஆனால் சர்வதேச அளவில் 12.5 சதவீத வட்டிக்குக் கடன் கிடைக்கிறது. 12.5 சதவீத வட்டிக்குக் கடன் வாங்கி அதை 14 சதவீதம் முதல் 15 சதவீத வட்டிக்கு விடுவது எப்படி எளிதாக இருக்கும். இந்த அளவுக்கு வட்டி விகிதம் அதிகமாக இருந்தால் அது தேக்க நிலை பொருளாதாரத்துக்குத்தான் வழிவகுக்கும்.

உலகின் எந்த ஒரு நாட்டிலும் சேமிப்புகளுக்கு அளிக்கப்படும் வட்டி அதிகமாகவும், கடனுக்கு விதிக்கப்படும் வட்டி குறைவாகும் இருப்பதில்லை.

சிறுசேமிப்புக்கு அளிக்கப்படும் வட்டி விகிதமும், கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை" என்றார் ஜேட்லி.

வட்டிக் குறைப்பு நடவடிக்கை மூலம் மிகவும் பிரபலமில்லாத நடவடிக்கையை அரசு எடுத்துவிட்டதாகக் கருதப்படுகிறதே, என்று கேட்டதற்கு, "கடன் தொகைக்கு 15 சதவீத அளவுக்கு வட்டி விதிக்கப்படுவதுதான் பிரபலமில்லாத நடவடிக்கை. வட்டிக் குறைப்பு நடவடிக்கை அனைவருக்கும் பயனளிக்கக் கூடியது.

வீடு கட்ட ஒருவர் வங்கியில் கடனுக்கு அணுகினால் 9 சதவீத வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வாரா? அல்லது 15 சதவீத வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வாரா?

இப்போது அளிக்கப்படும் 8.1 சதவீத வட்டி விகிதமே மிக அதிகமான வட்டி விகிதம்தான். உலகில் எங்குமே இந்த அளவுக்கு சிறுசேமிப்புக்கு வட்டி அளிக்கப்படுவதில்லை. வரி விலக்குடன் 8.1 சதவீத வரி விகிதத்தை கணக்கிட்டால் அது 12.2 சதவீதமாகும். இது மிகக் குறைந்த வட்டி விகிதம் அல்ல.

பணவீக்கம் 11 சதவீதமாக இருந்தபோது 8.7 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. வளர்ச்சி 5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும்போது வட்டி விகிதமும் குறைக்கப்படுவதுதான் நியாயம்.

இபிஎப் திட்டத்தில் 60 சதவீத தொகைக்கு வரி விதிக்க உத்தேசித்தது அதிக அளவில் தொகையை எடுப்பதைக் குறைப்பதற்கும் அதே சமயம் வரி விலக்குடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதன் மூலம் மிகுந்த ஆரோக்கியமான ஓய்வூதியம் பெறும் மூத்த குடிமக்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை. ஆனால் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டது.

இப்போது இபிஎப் திட்டங்களுக்கு அளிக்கப்படும் அதே அளவு வரிச் சலுகை புதிய பென்ஷன் திட்டத்துக்கும் (என்பிஎஸ்) உண்டு.

ஓராண்டுக்குப் பிறகு பாருங்கள் எத்தனை பேர் என்பிஎஸ் திட்டத்தைத் தேர்வு செய்திருப்பார்கள் என்று. அரசு அளிக்கும் அதிக வட்டி திட்டங்களில் என்பிஎஸ் மிகச் சிறந்த ஒன்று" என்கிறார் அருண் ஜேட்லி.

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated

Expanding Air India ’s punctuality woes leave passengers frustrated  Delay In Int’l Flights Testing Patience Of Loyal Customers  New Delhi :...