Wednesday, April 6, 2016

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் அரசு வீடுகளை காலி செய்யாத 40 ஐஏஎஸ் அதிகாரிகள்: மத்திய அரசின் உதவியை கோருகிறார் அர்விந்த் கேஜ்ரிவால்

ஆர்.ஷபிமுன்னா

பணியிட மாறுதலுக்கு பிறகும் டெல்லியில் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் அரசு வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடுகள் காலி செய்யப்படுவதற்கு மத்திய அரசின் உதவியை நாடியுள்ளார் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச கேடர்களின் ஐஏஎஸ் அதிகாரிகள் டெல்லி மாநில அரசு அல்லது மத்திய அரசுப் பணியில் இணைந்து பணி யாற்றுவது வழக்கம். இந்த கால கட்டத்தில் டெல்லியின் முக்கியப் பகுதிகளில் உள்ள அரசு வீடுகள் அல்லது பங்களாக்கள் அவர் களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

இந்த அதிகாரிகள் பணி ஓய்வு அல்லது பணியிட மாறுதலுக்குப் பின் தங்கள் வீடுகளை காலி செய்ய குறிப்பிட்ட கால அவகாசம் தரப்படுகிறது. இந்நிலையில் இந்த அவகாசம் முடிந்த பிறகும் 40 ஐஏஎஸ் அதிகாரிகள் தங்கள் வீடுகளை காலி செய்யாமல் இருப்பதாக கேஜ்ரிவால் அரசு அடையாளம் கண்டுள்ளது.

இவர்களின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ள கேஜ்ரிவால் அரசு, இவர்கள் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் வீடுகளை காலி செய்ய நிர்ப்பந்திக்குமாறு கோரியுள்ளது. டெல்லியில் அரசு குடியிருப்புகள் பற்றாக்குறை நிலவுவது இதற்கு காரணமாகக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது “மிகவும் மோசமான நிலையில் இருக்கும் குடியிருப்புகளே எங்களுக்கு தரப்படுகிறது.

இதில் பலரும் லட்சக்கணக்கில் செலவு செய்து குடியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு செலவு செய்த அதிகாரிகள் சில மாதங்கள் கூடுதலாக தங்க விரும்புவது உண்டு. மேலும் குழந்தைகளின் கல்வி இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. என்றாலும் கேஜ்ரிவால் அரசு - மத்திய அரசு இடையிலான அரசியல் மோதலே இதன் பின்னணி காரணம். தங்கள் பேச்சை கேட்காதவர்களை குறிவைத்து கேஜ்ரிவால் அரசு இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது” என்றார்.

முன்னதாக இந்த வீடுகள் தொடர்பான கணக்கெடுப்பை டெல்லி அரசு கடந்த சில மாதங்க ளாக தொகுத்து வந்தது. பிறகு கடந்த மாதம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வீடு களை காலி செய்ய அதிகாரி களுக்கு நிர்ப்பந்தம் தருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸும் அளிக்கப்பட்டது. என்றாலும் இதற்கு எந்தப் பலனும் இல்லாததால் தற்போது மத்திய அரசை கேஜ்ரிவால் அரசு அணுகியுள்ளது.

அரசு வீடுகளுக்காக ‘எஸ்டேட் ரூல்ஸ்’ என்ற விதிகள் உள்ளன. இதன்படி அதிகாரிகள் வீடுகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தரப்படுகிறது. இதன் பிறகு 2 ஆண்டுகள் வரை சந்தை மதிப்பில் வாடகை வசூலிக்கலாம்.

இதன் பிறகும் காலி செய்யாதவர்களை சட்டப்பூர்வ மாக வெளியேற்றலாம். என்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சில சிக்கலான மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவோ ருக்கு 3 மாதங்களுக்கு பதிலாக 2 ஆண்டுகள் அவகாசம் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...