Wednesday, April 6, 2016

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னையில் 2 இடங்களில் பாஸ்போர்ட் ‘மேளா’ 9–ந் தேதி நடக்கிறது

சென்னை,
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
பாஸ்போர்ட் பெறுபவர்களின் வசதிக்காக கடந்த மாதம் 19–ந் தேதி தாம்பரம் சேவை மையத்தில் சிறப்பு மேளா நடத்தினோம். இதன் மூலம் 435 பேர் பலனடைந்தனர். இதன்தொடர்ச்சியாக 9–ந் தேதி (சனிக்கிழமை) அமைந்தகரை மற்றும் சாலிகிராமம் ஆகிய இடங்களில் உள்ள சேவைமையத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் அமைந்தகரையில் 500 பேரும், சாலிகிராமத்தில் ஆயிரம் பேர் உள்பட 1,500 பேர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இதில் கலந்து கொண்டு பயன் அடைய விரும்புபவர்கள் பாஸ்போர்ட் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான பதிவு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்குகிறது. சிறப்பு மேளாவில் தட்கல் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

CMRL’s first driverless train ready.

CMRL’s first driverless train ready. The train will likely arrive at the Poonamallee depot by mid-October, say CMRL officials. It will be op...