Saturday, June 25, 2016

உங்கள் ஆளுமைக்கேற்ற துறை எது?

டாக்டர். ஆர். கார்த்திகேயன்

கெரியர் கவுன்சலிங் மாணவர்களுக்கு மட்டுமா? நம் சூழலில் பெற்றோர்களுக்குத்தான் அதிகம் தேவைப் படுகிறது. இன்று மார்க் வாங்குவதும் சீட் பிடிப்பதும் பெற்றோர்களின் சமூக அந்தஸ்தை நிர்ணயிக்கிறது.

ஒரு ஆட்டோ ஓட்டுநர் பெருமிதத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார்: “நிலத்தை அடமானம் வெச்சு பணம் வாங்கி இன்ஜினியரிங் சீட் வாங்கிட்டேன் சார் பையனுக்கு. மார்க் கம்மிங்கறதால செலவு ஆயிடுச்சு. முடிச்சான்னா பெரிய கம்பெனியில சேர்ந்து அப்புறம் இத மாதிரி பத்து மனை வாங்குவான்!”

அவரை குறை சொல்லவில்லை. அவருக்கு சிறந்ததாகத் தோன்றிய முடிவை எடுத்துள்ளார். மார்க் வாங்காத பையனுக்கு சீட் வாங்கித் தர முடியும். படிப்பை முடித்தாலும் நல்ல வேலை வாங்குவது கடினம் என்று அவர் உணர்ந்திருக்கவில்லை.

இரண்டு லட்சம் ரூபாய் புரட்டினால் வாழ்க்கை பிரகாசிக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார். அவருடைய மகனின் அறிவுக்கும் ஆர்வத்துக்கும் திறமைக்கும் ஏற்ற வேலைகள் நிறைய உள்ளன என்றும் அதை அறிய ஆய்வுகள் உள்ளன என்றெல்லாம் அவர் அறிந்திருக்க நியாயமில்லை.

அவருக்கு மட்டுமல்ல, எல்லா பெற்றோர்களுக்கும் நிறைய கேள்விகள் உள்ளன. பெற்றோர்கள் அதிகம் கேட்ட கேள்விகள் என்றே அவற்றை தொகுக்கலாம்:

நல்ல மார்க் வாங்கினா அவனுக்கு அந்த சப்ஜெக்ட் பிடிச்சிருக்குன்னு தானே அர்த்தம்? அதை வச்சு கோர்ஸ் தீர்மானிக்கலாமா?

பிளஸ் டூ மார்க் என்பது ஒரு கூட்டு முயற்சி. அதனால்தான் பள்ளியில் சதம் வாங்கியவர்கள்கூட காலேஜுக்கு போனதும் அரியர்ஸ் வைக்கிறார்கள். மார்க்கை மீறி அவர் எவ்வளவு புரிந்து படித்தார் என்பதை வைத்துதான் அந்தப் பாடத்தின் மீதான விருப்பதை தீர்மானிக்க முடியும்.

ஐ.க்யூ. டெஸ்ட் வேண்டுமா?

பிளஸ் டூ தாண்டியவருக்கு அடிப்படை ஐ.க்யூ. நிச்சயமாக இருக்கும். ஆகையால் கெரியர் கவுன்சலிங்கில் அதை சோதிக்க வேண்டியதில்லை.

ஆப்டிடியூட் டெஸ்ட் பயிற்சி எடுத்தால் உதவுமா?

ஒருவருடைய இயல்பு நிலை தெரிய எந்த பயிற்சியும் எடுக்கக் கூடாது. தவிர ஆப்டிடியூட் டெஸ்ட் பயிற்சியை நுழைவுத்தேர்வு பயிற்சியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். முன் தயாரிப்பின்றி உளவியல் சோதனை எடுக்கும்போதுதான் சரியாக இயல்பு நிலையைக் கண்டறிய முடியும்.

ஆர்வங்கள் மாறி மாறி வருகிறதே? எதை தீர்மானமாக எடுத்துக்கொள்வது?

எந்த வகை துறைகளில் ஆர்வம் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க உளவியல் சோதனை அவசியம். ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத வேலைகள் என்று நீங்கள் நினைபவற்றில்கூட ஒரு தொடர்பை இதன் மூலம் அறிவீர்கள். இது உங்கள் பிள்ளையின் துறைத் தேடலுக்கு அவசியம்.

வலைத்தளங்களில் உள்ள உளவியல் சோதனைகளை எடுக்கலாமா?

பல வலைத்தளங்களில் உளவியல் சோதனைகள் உள்ளன. அவற்றின் நம்பகத்தன்மையை ஆராயத் தெரிய வேண்டும். இலவசமாக அல்லது குறைந்த கட்டணம் என்பதற்காக அவற்றை மேற்கொள்ள வேண்டாம். தவிர நேர்காணலின்போது கிடைக்கும் உள்ளுணர்வு சார்ந்த தகவல் (intuitive data) மிக அவசிய மானது. அதனால் நேர்முக ஆய்வுதான் சிறந்தது.

இந்த ஆய்வுகள் கிடைத்தால் நாங்களே சோதித்துக்கொள்ள முடியாதா?

இன்று ஆய்வுகளை நகலெடுப்பது பெரிய விஷய மல்ல. ஆனால் நீங்கள் ஆலோசனைக்கு செல்லும் நபர் கல்வி அல்லது தொழில் உளவியல் துறையில் அனுபவம் வாய்ந்தவரா என்பதுதான் முக்கியம்.

எந்த கோர்ஸ் சிறந்தது என்று சொல்லமுடியுமா?

அது ஆய்வின் நோக்கமே அல்ல. எந்த துறைகள் உகந்தவை என்று மட்டும்தான் சொல்ல வேண்டும். அதற்கான காரணங்களையும் சொல்ல வேண்டும்.

ஆளுமைக்கேற்ற துறையைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், ஆளுமை வாழ்க்கை தோறும் மாறுவதில்லையா?

மாறும்; வளரும். ஆனால் துறையைத் தேர்வுசெய்ய ஆளுமை வடிவத்தகவல்கள் போதும். பணி சார்ந்த ஆளுமைத் தேவைகள் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும். காலப்போக்கில், ஆளுமையும் மாறும். தொழில்களும் மாறும். வேலைகளும் மாறும், அதனால்தான் மாறிக்கொண்டே இருக்கும் இயல்பைப் புரிந்துகொண்டு ஆலோசனை செய்வது முக்கியம்.

எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை வைத்துத் தயார் செய்ய முடியுமா?

வருங்கால வாய்ப்புகள் பற்றி ஆருடம் சொல்வது எல்லா காலத்திலும் பலிக்காது. தவிர, அவை நமக்கு எந்த அளவுக்கு ஏதுவானது என்று பார்க்க வேண்டும். அடுத்த சுழற்சியில் வேறு துறைகளில் வாய்ப்புகள் வரலாம். அப்போது அதற்குத் தாவ முடியுமா? அதனால் துறைக்கான தேர்வை வெளிலிருந்து தேடாமல், உள்ளேயிருந்து தேடுதல் உத்தமம்.

எந்த வயதில் கெரியர் கவுன்சலிங் கொடுக்கலாம்?

14 வயதில். ஒன்பதாவது படிக்கையில் தொடங்குதல் நல்லது. அதை பள்ளியிலேயே செய்வது நல்லது. எந்த நேர நெருக்கடியும் இல்லாமல், எல்லா துறைகள் பற்றியும் விரிவான பார்வைகளுடன், பதற்றமில்லாமல் ஆய்வுகள் நடத்தி, ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு செயல் திட்டம் அமைத்து கொடுப்பது நன்று.

போட்டி அதிகமாக இருக்கிறதே, இதெல்லாம் செய்தால் கண்டிப்பாக நல்ல எதிர்காலம் உண்டா?

இங்கு பற்றாக்குறையும் பதற்றமும் செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இது ஒரு சந்தை உத்தியும்கூட. இதில் பலியாகாமல் துணிவுடன் முடிவெடுக்க வேண்டும். வாழ்க்கையில் படிப்பு முக்கியம். படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. தவிர படிப்பு மட்டுமே வேலை, வசதி, வெற்றி போன்றவற்றை உறுதி செய்வதும் இல்லை. எல்லோருக்குமான வாய்ப்புகள் இங்கு உள்ளன. பதற்றப்படாமல் பிள்ளைகளுக்கு உதவுங்கள். நம் பிள்ளைகளுக்கு துறைத் தேர்வை விட முக்கியமாகப் புகட்ட வேண்டுயது ஒன்று உள்ளது: தன்னம்பிக்கை!

கட்டுரையாளர், உளவியலாளர் மற்றும் ஆலோசகர்,
தொடர்புக்கு: Gemba.karthikeyan@gmail.com

தொழில் ரகசியம்: பிராண்டுக்கு பொருந்தாத பிரபலங்கள்

Return to frontpage

பொது இடங்களில் சினிமா நட்சத்திரம், டிவி ஸ்டார், விளையாட்டு வீரர்களை பார்த்துவிட்டால் கை கால் பரபரத்து, வேர்த்து விறுவிறுத்து, எண்ணம் கிறுகிறுத்து, மனம் துடிதுடித்து பித்தம் தலைக்கேறி சாமி வந்து அவர் அருகே ஓடிச்சென்று கை கொடுத்து கொடுத்த கையை அவரே வைத்துக்கொள்ளக் கூடாதா என்று ஏங்கி அவர் கிளம்பி தலை மறையும் வரை பக்தி பரவசத்தில் பைத்தியக்காரன் போல் பலர் நிற்கிறார்கள் என்பதென்னவோ வாஸ்தவம் தான்.

இது நம் இனத்தின் தலையெழுத்து, இந்த சமுதாயத்தின் சாபக்கேடு ஒழிந்து போய் தொலையட்டும் என்று பார்த்தால் இந்த பைத்தியக்கார பக்தியை பாத்தி கட்டி சாகுபடி செய்ய ஒரு விளம்பர கூட்டம் தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்து வருகிறார்கள். பிரபலம் என்றால் பைத்தியமாய் அவர் பின்னால் தொடரும் மக்களை விளம்பரத்தில் நடிக்க வைத்து அந்த பிரபலம் கொண்டே கவர் செய்து பொருளை விற்கமுடியும் என்று நினைக்கிறார்கள்.

பிரபலத்தை விளம்பரத்தில் பயன்படுத்தும்போது மக்கள் மனதை கவர்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதில் தான் வில்லங்கமே!

மக்களின் கண்கள் பிரபலத்தையே பார்க்கிறது. மனம் அவரிடத்தில்தான் லயிக்கிறது. விளம்பரத்திலுள்ள பிராண்ட் கண்ணிற்கு தெரிவதில்லை. தெரிந்தாலும் பெரும்பாலான சமயங்களில் மக்கள் மனதில் நிற்பது பிரபலம் தானே ஒழிய பிராண்ட் அல்ல.

முதலில் ஒன்றை தெளிவாக்குகிறேன். பிரபலங்கள் மீது எனக்கு பிராப்ளம் இல்லை. அவர்களை பயன்படுத்தினால் பிராண்ட் பிய்த்துக் கொண்டு பறக்கும் என்று நம்பி பிராண்டை விட்டு பிரபலங்களை விளம்பரம் செய்வது தப்பாட்டம் என்கிறேன்.

பிரபலம் பிரபலத்துவம் பெற்றது ஒரு காரணத்திற்காக. அவர் பிரபலத்திற்கு உங்கள் பிராண்ட் உதவுகிறது என்றால் தாராளமாக அந்த பிரபலத்தை விளம்பரத்தில் பயன்படுத்துங்கள். நடிகைகளின் பிரபலத்திற்கு காரணம் அவர்கள் கவர்ச்சியான அழகு. அப்பேற் பட்ட நடிகைகளின் அழகு சோப் என்று ‘லக்ஸ்’ கூறும் போது மனதை கவர்கிறது. பிரபலத்துவத்திற்கு காரணம் இந்த சோப் என்றால் கவர்ச்சியான அழகு பெற விரும்பும் பெண்கள் லக்ஸ் பயன் படுத்தலாம் என்று நம்பி வாங்குவார்கள். வாங்குகிறார்கள். இன்றல்ல, நேற்றல்ல. 1956ல் ‘லீலா சிட்னிஸ்’ என்ற நடிகையை லக்ஸ் தன் விளம்பரத்தில் பிள்ளையார் சுழி போட்டு பயன்படுத்தத் துவங்கியது முதல்!

இந்த பிரபலம் பயன்படுத்தமாட்டார் என்று மக்கள் நினைக்கும் பொருளை அவர் கொண்டு விளம்பரம் செய்யும் போது விளம்பரத்தோடு பிராண்டும் புஸ்வானமாகிறது. ‘சச்சின் டெண்டுல் கரை வைத்து ‘விக்டர்’ மோட்டார் பைக் ஒரு முறை விளம்பரம் செய்தார்கள். சச்சின் பைக் ஓட்டி பார்த்திருக்கிறீர்களா? தலையில் ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு கிரிக்கெட் ஆடப் போவாரே ஒழிய பைக்கை உதைத்து கிரவுண்டிற்கு போவாரா? இந்த விளம்பரம் மனதில் எப்படி ஒட்டும்?

ஆனால் ‘டிவிஎஸ் ஸ்டார்’ ‘மஹேந்திர சிங் தோனி’யை கொண்டு விளம்பரம் செய்யும் போது அது கண்ணில் சட்டென்று பட்டு மனதில் பட்டென்று ஒட்டுகிறது. ஏனெனில் சிறு குழந்தைக்கும் தெரியும் தோனிக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம் என்று. அவர் சொன்னால் ஸ்டார் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்ப முடிகிறது. அவரே ஓட்டுகிறார் என்றால் வாங்கத் தோன்றுகிறது.

இதே போல் ‘ஃபியட் பாலியோ’ டெண்டுல்கரைக் கொண்டு செய்த விளம் பரமும் எடுபடவில்லை. டெண்டுல்கர் ‘ஆடி’, ‘பிஎம்டபிள்யூ’, ‘பெராரி’ போன்ற விலையுர்ந்த கார்கள் வைத்திருப்பவர்; அவர் அதில் பயணிப்பாரா இல்லை தன் ஆடி காருக்கு மாதம் பெட்ரோல் செலவுக்கு ஆகும் விலை கொண்ட பாலியோவில் போவாரா? பாலியோ போலியோ வந்தது போல் இளைக்காமல் வேறு என்ன செய்யும்!

பிரபலம் பிராண்டிற்கு கிரெடிபிலிடி சேர்க்கவேண்டும். அப்பொழுதுதான் பிரபலத்துவம் பிராண்டிற்கு பயன்படும். பழம்பெரும் நடிகை மனோரமா சமையல் சமாச்சார பிராண்ட் பற்றிச் சொன்னால் கேட்போமா? இல்லை ஒரு இளம் நடிகை சொன்னால் கேட்போமா? அந்த இளம் நடிகைக்கு சமையல் அறை எங்கிருக்கும், எப்படியிருக்கும் என்று தெரியுமா என்றுதானே கேட்போம்!

பிரபலங்களை உபயோகிப்பதில் இன்னொரு பிராப்ளம் அவர்கள் நடத்தை. பிராண்டோடு பிரபலத்தை பின்னிப் பிணைந்து பத்து வருடம் விளம்பரப்படுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின் அவர் ஒரு வேண்டத்தகாத வழக்கில் மாட்டுகிறார் என்றால் அவரோடு சேர்ந்து உங்கள் பிராண்டும் அல்லவா உள்ளே போக வேண்டியிருக்கும்?

இதெல்லாம் நடக்காது என்கிறீர்களா? ‘Accenture’ என்ற நிறுவனம் உலகமெங்கும் பல காலம் ‘டைகர் வுட்ஸ்’ என்ற கோல்ப் பிரபலத்தை கொண்டு விளம்பரம் செய்து வந்தது. இவர் ஒரு பலான மேட்டரில் மாட்டி சந்தி சிரிக்க அவரோடு நிறுவனம் பெயரும் சிக்கி அதிலிருந்து மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. ‘கெண்ட்’ வாட்டர் பியூரிஃபையர் தன் விளம்பரத்தில் உபயோகித்த கிரிக்கெட் பிரபலம் மேட்ச் ஃபிக்சிங் வழக்கில் சிக்கி சின்னாபின்னப்பட நிறுவனம் அதிலிருந்து தப்பித்து தங்களை பியூரிஃபை செய்ய வேண்டியிருந்தது!

அனைவரையும் போல் பிரபலங் களுக்கும் ஆளுமை உண்டு. அந்த ஆளுமை பிராண்டிற்கு பொருந்துகிறதா என்று பார்த்து தேர்ந்தெடுப்பது அவசியம். பிரபலம் பார்க்க அழகாக இருக்கிறார் என்பதற்காக அவரை வைத்து சிமெண்ட் விளம்பரம் எடுத்தால் எப்படி எடுபடும்? அப்படி செய்து பட்டுக்கொண்ட சிமெண்ட் பிராண்ட் ஞாபகம் இருக்கிறதா?

உங்கள் பிராண்டை வாடிக்கையாளர் எதற்கு வாங்கவேண்டும், மற்றவர்கள் அளிக்காத எந்த பயனை நீங்கள் தருகிறீர்கள் என்பதை குறிக்கும் பிராண்ட் பொசிஷனிங்தான் பிரதானம். அதை செய்யாமல் பிரபலத்தை கொண்டு பிராண்டை விளம்பரம் செய்தால் வாடிக்கையாளர் வாங்கிவிடுவார் என்று நினைப்பது மடத்தனம்.

வேஷ்டி தடுக்கி யாராவது விழுவதை பார்த்திருப்பீர்கள். வேஷ்டி விளம்பரங்களே தடுக்கி விழுவதை டீவியில் தினமும் பார்க்கலாம். எதற்கு தன் வேஷ்டியை வாங்கவேண்டும், மற்ற பிராண்டுகளுக்கும் தங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லாமல் நாலு படம் நடித்த பாவத்திற்காக ஒரு நடிகரைப் பிடித்து அவருக்கு வேஷ்டியை வலுக்கட்டாயமாக கட்டி பத்தாதற்கு கூட ஒரு பத்து பேரை வேஷ்டியோட ஆட வைத்தால் மக்கள் வாங்கிவிடுவார்களா?

இப்பிரபலங்கள் திரைப்படத்தில் வேஷ்டி கட்டியே நாம் பார்ப்பதில்லை. அவர்களுக்கு ஃப்ரீயாக ஒரு வேஷ்டி தருவதே ஜாஸ்தி, எதற்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து தோல்வியை விலைக்கு வாங்கிக்கொண்டு.

அதை விடுங்கள். எந்த வேஷ்டி விளம்பரத்தில் எந்த பிரபலம் வருகிறார் என்றாவது உங்களால் யூகிக்க முடிகிறதா?

பிரபலத்தை பயன்படுத்துவதில் இன்னொரு வயிற்றெரிச்சல் உண்டு. பல பிரபலங்கள் வந்தாரை வாழ வைத்து நானும் வக்கனையாய் வாழ்கிறேன் என்று சகட்டு மேனிக்கு விளம்பரப் படங்களில் நடித்துத் தள்ளுவார்கள். டீவி போட்டாலே இவர்கள் தோன்றும் விளம்பரங்கள் தான். இந்த மட்டும் டீவியை அணைத்தால் இவர்கள் வருவதில்லை என்று வேண்டுமானால் திருப்திபடலாம். ஓவர் எக்ஸ்போஸ்ட் ஆன பிரபலம் எப்படி உங்கள் பிராண்டை தனியாக தெரியவைக்கப் போகிறார்?

பிரபலங்கள் பிராண்டிற்கு வெறும் பெட்ரோமேக்ஸ் வெளிச்சம் போல. பிராண்டை வெளிச்சம் போட்டு காட்டி வாடிக்கையாளரை வாங்க வைப்பது அதன் ஆதார பொசிஷனிங். அது தரும் வேல்யூ, அது அளிக்கும் பயன்கள். அந்த வெளிச்சம் தான் பிராண்டை பளிச்சென்று தெரிய வைக்கும். அதன் தன்மையை புரிய வைக்கும். வாடிக்கையாளரை வாங்க வைக்கும்.

இத்தனை சொல்லியும் பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேணுமா!

தொடர்புக்கு : satheeshkrishnamurthy@gmail.com

நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் வெட்டிக்கொலை தப்பி ஓடிய மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு


சென்னை,

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் மர்ம ஆசாமியால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர்

சென்னை சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தான கோபால கிருஷ்ணன். மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் சுவாதி (வயது 24). செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள இன்போசிஸ் சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தினமும் காலையில் அலுவலகம் செல்ல, நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூருக்கு மின்சார ரெயிலில் சென்று வருவது வழக்கம்.

பட்டாக்கத்தியால் வெட்டு

அதேபோல், நேற்று அவர் அலுவலகத்துக்கு செல்வதற்காக காலை 6.45 மணிக்கு செல்லும் மின்சார ரெயிலில் ஏற வீட்டில் இருந்து தன்னுடைய தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

6.35 மணிக்கு ரெயில் நிலையதிற்குள் நுழைந்த அவர், மின்சார ரெயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஏறுவதற்கு வசதியாக ரெயில் நிலையத்தின் நடுப்பகுதிக்கு பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் பின்னால் வேகமாக வந்த மர்ம ஆசாமி ஒருவர் கூர்மையான பட்டாக்கத்தியால் சுவாதியை சரமாரியாக வெட்டினார். இதில், அவரது வாய், தலை, கழுத்து ஆகிய 6 இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

துடி, துடிக்க உயிர் இழந்தார்

திடீர் தாக்குதலில் நிலைதடுமாறிய சுவாதி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது குரல்வலையில் வெட்டு விழுந்ததால் அவரால் அய்யோ... அம்மா... என்று சத்தம்கூட போட முடியாமல், துடி, துடித்து உயிர் இழந்தார்.

காலை நேரம் என்பதால், ரெயில் நிலையத்தில் பயணிகள் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஒரு சிலர் மட்டும் ஆங்காங்கே நின்றதால், இந்த பயங்கரத்தை யாரும் நேரில் பார்க்கவில்லை.

சுவாதியின் உயிர் அடங்கியதை உறுதி செய்துகொண்ட மர்ம ஆசாமி ரத்தம் சொட்ட... சொட்ட... பட்டாக்கத்தியுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

காலை 6.45 மணிக்கு சுவாதி ஏறுவதற்காக காத்திருந்த மின்சாரம் ரெயிலும் வந்து நின்றது. ரெயிலில் இருந்த பயணிகள் சுவாதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலை அடுத்து, எழும்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தனர். அங்கு நின்ற பயணிகளிடமும், கடைக்காரர்களிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சுவாதியின் கைப்பையில் இருந்த அடையாள அட்டையை போலீசார் எடுத்துப்பார்த்தனர். அதன் பிறகுதான் அவரது பெயர் சுவாதி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த அடையாள அட்டையில் இருந்த அவருடைய தந்தையின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.

மோப்பநாய்

அவரிடம் பேசிய போலீசார், முதலில் நடந்த உண்மையை கூறவில்லை. மாறாக, உங்கள் மகள் ரெயிலில் அடிபட்டு கிடக்கிறார் என்று கூறி அழைத்துள்ளனர். பதற்றத்துடன் ரெயில் நிலையத்துக்கு ஓடி வந்த சந்தான கோபாலகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் கிடந்த மகளின் பரிதாப காட்சியை பார்த்து அழுது துடித்தார்.

அதே நேரத்தில், சுவாதியை கொன்ற மர்ம ஆசாமியை பிடிக்க ரெயில்வே போலீசுக்கு சொந்தமான ‘ஜாக்’ என்ற மோப்பநாயும், மாநகர போலீசுக்கு சொந்தமான ‘அலெக்ஸ்’ என்ற மோப்பநாயும் சம்பவ இடத்துக்கு அழைத்து வரப்பட்டன.

சம்பவ இடத்தை நோட்டமிட்ட மோப்பநாய்கள், அங்கிருந்த ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் வழியாக நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு வரை சென்று பின்னர் அங்கே நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. எனவே, அதுவரை நடந்து வந்த கொலையாளி அங்கிருந்து வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

கழுத்து, தாடை, மண்டையில் வெட்டு

இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல கூறினார்.

சுவாதி உடல் கிடந்த பிளாட்பாரத்தில் ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது. அவருடைய கழுத்து, தாடை, மண்டை ஆகியவற்றில் வெட்டுக்காயம் ஆழமாக பதிந்திருந்ததால், முகமே முற்றிலும் சிதைந்து காணப்பட்டது. வாயில் இருந்த பற்கள் உடைந்து நடைமேடையில் சிதறிக்கிடந்தன.

சிதறிக்கிடந்த பற்கள், அவருடைய செருப்பு, கைப்பை ஆகியவற்றை தடயங்களாக போலீசார் எடுத்து சென்றனர். சுவாதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டிராவல் பேக்குடன் வந்த நபர்

கொலை நடந்த இடத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்கள். பொதுவாக நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் பயணிகள் அதிகம் வந்து செல்லும் முக்கிய இடமாக விளங்குகிறது. மேலும், ரெயில் நிலையத்தை ஒட்டி பிரபலமான லயோலா கல்லூரியும், பல்வேறு தனியார் நிறுவனங்களும் உள்ளன.

இதனால், எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கும் இந்த ரெயில் நிலையத்தில், இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்திருப்பது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலையாளி பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளி பச்சை நிற சட்டை மற்றும் கருப்பு நிற ‘பேண்ட்’ அணிந்து இருந்ததாகவும், கையில் ‘டிராவல் பேக்’ வைத்திருந்ததாகவும், தப்பியோடியதை நேரில் பார்த்த பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

மர்ம ஆசாமி யார்? எதற்காக சுவாதியை கொலை செய்தார்? சுவாதிக்கும், அந்த ஆசாமிக்கும் என்ன தொடர்பு? என்று பல்வேறு கோணங்களில் விசாரணையில் இறங்கிய போலீசார், முதலில் அவருடைய தந்தை சந்தான கோபாலகிருஷ்ணனிடம் விசாரித்தனர்.

கால் டாக்சி டிரைவர்

அப்போது, அவர் போலீசாரிடம் சில தகவல்களை தெரிவித்தார். அதாவது, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் கால் டாக்சி நிறுவனம் ஒன்றில் கார் ‘புக்கிங்’ செய்து சுவாதி பயணம் செய்துள்ளார். கார் ஓட்டிய டிரைவர் அவரிடம் கூடுதல் வாடகை கேட்டதால், அவரை பற்றி கால் டாக்சி நிறுவனத்தில் சுவாதி புகார் செய்தார். இதனால் கார் டிரைவரின் வேலை பறிபோனது. அதனால், அந்த கோபத்தில் இதுபோன்ற செயலில் கார் டிரைவர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் கருதினர்.

இதை ஒரு துருப்பு சீட்டாக எடுத்துக்கொண்ட போலீசார் குறிப்பிட்ட கார் டிரைவரை தேடிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த டிரைவர் கட்டணம் அதிகம் கேட்டதால், எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் அதன்பிறகு, அவரை (சுவாதியை) நான் பார்க்கவே இல்லை என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

செல்போன் காணவில்லை

அதைத் தொடர்ந்து, வெவ்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கால் டாக்சி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இந்த கொலைக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார். அடுத்தகட்ட விசாரணையை நோக்கி முன்நகர்ந்து கொண்டு இருக்கிறோம்.

நகை மற்றும் பணத்துக்காக சுவாதியை மர்மநபர் கொலை செய்திருப்பாரா? என்று நாங்கள் பார்த்த போது அவர் அணிந்திருந்த நகையும், பணமும் கொள்ளை போகவில்லை. எனவே கொலைகாரன் நகை மற்றும் பணத்துக்காக இந்த கொலையை செய்யவில்லை.

இந்த கொலை சம்பவத்தில் சுவாதியின் செல்போன் மட்டும் காணாமல் போய் உள்ளது. நாங்களும் அவர் இறந்து கிடந்த பகுதிக்கு அருகில் தேடிப்பார்த்துவிட்டோம். செல்போன் கிடைக்கவில்லை.

எனவே முக்கிய தடயமாக இருக்கும் அந்த செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது.

காதல் விவகாரமா?

அடுத்ததாக, நாங்கள் சுவாதியின் நெருங்கிய நண்பர்கள், அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் விசாரணை தொடங்கி இருக்கிறோம். சுவாதி பயன்படுத்திய செல்போன் எண்ணுக்கு கடைசியாக யார்? யாரெல்லாம்? தொடர்பு கொண்டு பேசினார்களோ? அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இதற்கிடையில் எங்களுக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. சுவாதி ஏற்கனவே ஒருவரை காதலித்து, இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பினால் காதல் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுவாதிக்கு, அவருடைய காதலர் போன் செய்து மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவருகிறது.

ஒரு வேளை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்குமோ? என்று 3 தனிப்படைகள் அமைத்து எங்களுடைய விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறோம். கொலையாளியை விரைவில் பிடித்துவிடுவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கத்தி கைப்பற்றப்பட்டது

போலீஸ் அதிகாரிகள் கூறிய தகவலை உறுதி செய்யும் வகையில், கொலை செய்யப்பட்டு கிடந்த சுவாதியின் உடலை பார்த்து அழுத அவருடைய தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், ‘‘எவ்வளவு நாள் தான் என்னால் உன்னை பாதுகாக்க முடியும்’’ என்று கூறியபடி கதறி அழுதார். இதனால், இது காதல் விவகாரத்தால் நடந்த கொலையாக தான் இருக்குமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், சுவாதியின் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் கூறும்போது, பெரும்பாலும் அவரது வீட்டில் சண்டை சச்சரவு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில், நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ‘டிராவல் பேக்’கில் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்றை கைப்பற்றினார்கள். சுவாதியை கொல்ல மர்ம ஆசாமி இந்த கத்தியை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவத்தால் நேற்று காலை பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடுமையான நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து சுவாதியின் சித்தப்பா கோவிந்தராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுவாதி மிகவும் அன்பானவள். அமைதியாக இருப்பாள். அவளுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சம்பவத்தை கேட்டதும் நாங்கள் அதிர்ந்துபோனோம். கொலை செய்த மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விரைவில் அவனை போலீசார் பிடிக்க வேண்டும். சட்டத்தின் முன் அந்த நபரை நிறுத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Dec.31 last date to apply for OCI cards

Logo
The Indian government has decided to extend the last date for applying for conversion of Person of Indian Origin (PIO) cards to Overseas Citizens of India (OCI) cards.
Indian External Affairs Minister Sushma Swaraj has said the last date has been extended from June 30 to December 31.
The process will be done free of cost, according to the Indian embassy statement.
The Indian Prime Minister Narendra Modi had announced that the PIO and OCI cards will be merged.
Earlier, the Indian government had extended the deadline from March 31 to June 30 this year.

Deadline extended for conversion of PIO cards to OCI, says Indian minister June 21, 2016 | 9:35 AM By Staff Reporter

Deadline extended for conversion of PIO cards to OCI, says Indian minister
June 21, 2016 | 9:35 AM
 
By Staff Reporter
Times of Oman

Muscat: The final date for applying to convert a Person of Indian Origin (PIO) card to an Overseas Citizens of India (OCI) card has been extended from June 30 to December 31, the Indian External Affairs minister said.

"I feel that the conversion will not be completed by June 30, so we have decided to extend the last date to December 31," External Affairs Minister Sushma Swaraj said.

The government had earlier granted an extension from March 31 to June 30 this year.

"There will be no charge for conversion during this period. So I suggest to those who are seeking to convert their PIO cards to OCI cards, use this timeline. I want this conversion to be completed by December 31," she said.

Prime Minister Narendra Modi had announced that the PIO and OCI cards will be merged and the Indian diaspora will benefit.

Officials said that the simultaneous existence of PIO and OCI cards leads to confusion among people of Indian origin living abroad.

UGC tweaks regulation on collaboration between Indian and foreignuniversities



Eucational institutions looking to partner with universities abroad for undergraduate and postgraduate programmes can now approach the University Grants Commission (UGC) directly for permission, as per the amended regulation for collaboration between Indian and foreign institutions.

Earlier, under the UGC (Promotion and Maintenance of Standards of Academic Collaborations between Indian and Foreign Educational Institutes) Regulations 2012, only foreign universities were allowed to apply for academic collaboration with Indian counterparts. The higher education regulator tweaked the rules on Wednesday to make only Indian universities and colleges eligible for permission.

HRD Minister Smriti Irani attributed the change to the poor response from foreign universities. The UGC has not received even a single proposal for partnership from foreign institutions under the old regulation, she informed reporters on Wednesday. "Since they are not familiar with our rules and regulations, it seems they find the process very cumbersome. Hence the poor response. So, it was decided that onus of seeking permission should be on the Indian partner," a senior ministry official told The Indian Express.

Under the amended regulation, only local institutions which have secured the highest accreditation grade from National Assessment and Accreditation Council (NAC) are eligible for academic partnership. Similarly, the partnering university abroad should have also secured the best grade from the accreditation agency in its home country.

It is now mandatory for Indian institutions entering into a twinning arrangement to send their students to study at the offshore university for at least two semesters in case of an undergraduate programme and one semester in a postgraduate programme. Although the regulations do not allow the collaborating partners to offer a joint degree, the degree awarded by the Indian university at the end of the programme will also bear the name and insignia of the foreign university. The transcripts carrying the credits earned in India and abroad will have to be signed jointly by both institutions.

Indian educational institutions which already have a collaborative arrangement will have to apply for permission within six months of the new regulations being notified. These institutions have a year’s time to secure 'A' grade from NAAC. The regulations will be notified soon.

Irani further added that under the new rules, all applications received by the UGC will be acknowledged within a month and processed in two months. The applications will be judged based on the infrastructural facilities, student-faculty ratio, course fee and curriculum of the Indian and foreign partner. A committee consisting of experts, including a representative of the Association of Indian Universities (AIU) look into the grading of foreign universities, will vet all collaboration proposals.

MCI certificate must for MBBS study abroad

The Tribune

Balwant Garg

Tribune News Service

Bathinda, June 22

Students who want to study MBBS abroad will have to obtain an eligibility certificate from the Medical Council of India (MCI) before leaving the country.

The certificate is also mandatory for students who are presently pursuing their MBBS or an equivalent course abroad.

The MCI executive committee has decided that those not obtaining an eligibility certificate will not be allowed to appear in the screening test, which is compulsory to get registered with the council and for practising medicine in India.

Due to the shortage of MBBS seats in the country, aspirants take admission in medical colleges in China, Russia, Central America and Philippines. The admission process in these countries is not so competitive.

Sources say many even get admission to medical colleges abroad without even possessing the qualification as required for a similar course in India.

The MCI thus wants to make sure that the student is eligible for admission to the MBBS course. The council will also check the credentials of the medical college concerned, said a senior functionary in MCI.

The eligibility certificate was mandatory earlier as well, but it was discontinued in October 2013 after irregularities came to the fore.

Ayurveda practitioner appointed Maharashtra Medical Council's registrar



As we've moved beyond the turmoil at Film and Television Institute of India (FTII), we thought the requisite lessons were learnt and the nation would not have to put up with repeat absurdity. We were obviously wrong — this was followed by Central Board of Film Certification (CBFC) and then National Institute of Fashion Technology (NIFT). In the latest imprudent move that can also be described as aggressive nonsense, the Government of Maharashtra appointed an Ayurveda practitioner as the Registrar of the Maharashtra Medical Council (MMC). Dilip Wange, a professor at an Ayurveda College and Registrar of Ayurveda Council, took charge as the chief executive officer of a council that deals exclusively with modern allopathic medicine and its practitioners.

Section 14(1) of the Maharashtra Medical Council Act, 1965 states:


“The Council shall, with the previous sanction of the State Government, appoint a Registrar.”

Appointment of the Registrar, therefore, is a prerogative of the Council. In this case, the State ie the Government of Maharashtra has gone ahead and without even informing the Council appointed its Registrar. The Registrar is the chief executive officer of the Council, who attends all the meetings of the Council and its executive committee. He is an officer who keeps the accounts of the council, supervises over the staff and implements or executes the various provisions of the Act.

There are legitimate reasons why the medical fraternity in Maharashtra is particularly outraged at this decision. Firstly, it has been a long standing demand of the medical fraternity to make the council completely autonomous. And here we have a decision that completely bypasses the council and imposes on it an officer who has a clear cut conflict of interest.

Secondly, the Indian Medical Association is fighting court cases against 'cross-pathy' practice. The practitioners of modern allopathic medicine in Maharashtra strongly maintain that those qualified in alternative forms of medicine should practice only their discipline and not something they are not trained in. In fact, there are court verdicts to that effect, including a Supreme Court judgment that terms 'cross-pathy' practice as quackery. The newly appointed Registrar is an Ayurveda practitioner and also registrar at Ayurveda council. This is where conflict of interest comes into play. One side would like to indulge in 'cross-pathy' practice, whereas the other side would oppose it. And the registrar will occupy a quasi-judicial office in both the councils. Thirdly, the medical fraternity would like to have an MMC registrar who understands the finer points of modern allopathic practice; someone who is familiar with issues like quackery, enquiry procedures of the council, code of medical conduct, issues involved in medical education etc.

There is a strong reason why the political class is not very comfortable with an autonomous Council. Many of the private medical institutions are owned and run by them. They need a pliant council that they can manipulate to suit their needs. It, therefore, should not surprise anyone when they post the officer of their whim and choice to an important position.

The MMC was constituted under the force of the Maharashtra Medical Council Act, 1965. It is meant to be the apex body that governs the medical profession in Maharashtra. It has wide and extensive powers, particularly regarding hearings and enquiries, including power of punishment. It also has power and duty to prescribe a code of ethics for regulating the profession. It can reprimand, suspend or remove a registered medical professional from its register. This quasi-judicial watchdog body is also required to supervise and regulate the medical education. Such functions and duties require that the council commands a high degree of respect and credibility. And that can happen only if it is given the independence it deserves.

The sitting Council has finished its mandated term and elections to constitute a new body are long overdue. In spite of three representations to the state government, both by MMC and IMA, to hold the elections immediately, nothing seems to be moving at all. Tired of it, thus, the Indian Medical Association has moved the Mumbai High Court praying for immediate elections to the Council and to annul the registrar’s appointment.

The author is a consulting surgeon based in Mumbai.

'Tainted' MCI set to be replaced by medical education commission

TIMES OF INDIA

NEW DELHI: The Medical Council of India, often in the news for controversial approvals and corruption, is set to be replaced by a medical education commission that will have three independent wings to oversee curriculum, accreditation of colleges and medical ethics.



The new commission could be run by eminent persons from the medical field, who will be allowed to continue their professional commitments as the Niti Aayog panel that framed the guidelines felt this would ensure a wider talent pool.

The scandal-hit MCI will be a thing of past as the panel, headed by Niti Aayog chairperson Arvind Panagariya, has sought a detailed overhaul of the medical education regulator that aims to bridge shortages of skilled health workers and address a major hurdle in meeting growing quality health careneeds.

The proposed commission will be an umbrella organisation at the top with a mandate to regulate and monitor medical education and practices and the division of responsibilities is intended to ensure more responsive functioning. "The plan is to totally disband MCI and set up an entirely new entity," said a source.


TOI had on March 28 reported that during a health sector review, PM Narendra Modi and the health ministry had discussed the option of scrapping the MCI, which has been shrouded in controversy in recent years, altogether. Keen to reform the medical education sector and make the healthcare system deliver, the government set up a three-member committee to prepare a blueprint to revamp the current set-up. The committee has PM's additional principal secretary P K Mishra, Niti Aayog CEO Amitabh Kant as members, besides Panagariya.

MCI's credibility hit an alltime low in 2010 when its former president Ketan Desai was arrested on April 22 by CBI along with some others in a Rs 2 crore bribery case. The money was allegedly intended to grant permission to a college in Patiala to enrol students.



Sources said the committee met eminent medical experts and representatives of MCI and is due to formally submit its report soon. A source said the posts of members and heads of the panel and three autonomous bodies would also be open for experts of the field.

Thursday, June 23, 2016

எம்ஜிஆர் 100 | 91 - ரசிகர்களுக்கு மதிப்பளித்து மகிழ்ச்சிப்படுத்தியவர்!


‘அடிமைப் பெண்’ படத்தின் வெற்றி விழாவின்போது மதுரை சிந்தாமணி திரையரங்கில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, தியேட்டர் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, பண்டரிபாய்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. தனது திரைப்படங்களைக் காணவரும் ரசிகர்களை ஏமாற்றியதில்லை. உழைத்துக் களைத்து படம் பார்க்க வரும் மக்கள், படத்தைப் பார்த்துவிட்டு திருப்தியாக செல்லும் வகையிலேயே அவரது படங்கள் இருக்கும். பொழுதுபோக்கோடு நல்ல கருத்துக்களும் இருக்கும். படங்களில் மட்டுமின்றி; நிஜவாழ்விலும் தன்னைக் காணவரும் ரசிர்களுக்கு மதிப்பளித்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர்!

சாண்டோ சின்னப்பா தேவர் தயாரித்த ‘தேர்த் திருவிழா’ படத்தின் படப்பிடிப்பு கும்ப கோணம் அருகே ஏழு மைல் தொலை வில் காவிரி ஆற்றில் நடந்தது. படப் பிடிப்பு நடந்த சமயம் கோடைக்காலம். எம்.ஜி.ஆர். வந்திருப்பதை அறிந்து ஏராளமான மக்கள் கூடிவிட்டனர். ‘‘படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வந்து யாரும் தொல்லை செய்யக் கூடாது’’ என்று ஒலிப்பெருக்கி மூலம் எம்.ஜி.ஆர். அன்புக் கட்டளையிட்டார்.

அவர் வார்த்தைக்கு மதிப்பளித்து ஒருவர்கூட படப்பிடிப்பு நடக்கும் இடத்தின் அருகே செல்லவில்லை. கொதிக்கும் மணலில் நின்றபடியே தூரத்தில் இருந்து எம்.ஜி.ஆரைப் பார்த்து ரசித்தனர். வெயிலில் நிற்கும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள், மோர், தண்ணீர் கொடுக்க எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்தார். பத்து நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. தினமும் படப்பிடிப்பு முடிந்து கும்பகோணம் திரும்பும் வழியில் சாலையின் இரு புறமும் மக்கள் கூடி நின்று எம்.ஜி.ஆரை வாழ்த்தினர். மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் அன்பை வெளிப் படுத்தினர்.

படப்பிடிப்பு குழுவினர் கும்பகோணம் டி.எஸ்.ஆர். இல்லத்தில் தங்கியிருந்த னர். அங்கும் தினமும் வாசலில் ரசிகர்கள் திரண்டனர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எம்.ஜி.ஆர். முடிவு செய்தார். படப்பிடிப்பின் கடைசி நாளன்று திறந்த வேனில் ஏறி நின்று ரசிகர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார். சக கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் அவர்களையும் வேனில் ஏறச் சொல்லி மக்களின் வாழ்த்துக்களை ஏற்கச் செய்தார்.

ஒரு ரசிகர் கூட்டத்தில் முண்டியடித்து முன்னேறினார். அவரை எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் தடுத்தனர். அதை கவனித்த எம்.ஜி.ஆர்., அந்த ரசிகரை அருகில் வரும்படி சைகை செய்தார். சின்னப்பா தேவர் அந்த ரசிகரை ‘அலாக்’காக தூக்கி வேன் மேலே ஏற்றினார். தன் கையில் வைத்திருந்த கடலைப் பொட்ட லத்தை எம்.ஜி.ஆரிடம் கொடுத் தார் அந்த ரசிகர். உடனேயே, ஒவ்வொரு கடலையாக வாயில் போட்டுக் கொள்ள ஆரம்பித் தார் எம்.ஜி.ஆர்.! உலகையே ஜெயித்துவிட்ட திருப்தி அந்த ரசிகரின் முகத்தில் ஜொலித்தது. இந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது!

எம்.ஜி.ஆர். சொந்தமாக தயாரித்து, நடித்த ‘அடிமைப் பெண்’ திரைப்படம் 1969-ம் ஆண்டின் பிரம்மாண்டமான வெற்றிப் படம். மதுரை சிந்தாமணி திரையரங்கில் வெள்ளி விழா கொண்டாடியது. அந்த திரையரங்கில் நடந்த வெற்றி விழாவில் எம்.ஜி.ஆரும் சக கலைஞர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்த எம்.ஜி.ஆர்., பாண்டியன் ஓட்டலில் தங்கியிருந்தார். காலையில் இருந்தே ஓட்டல் முன் மக்கள் திரள ஆரம்பித்தனர்.

விழாவுக்கு எம்.ஜி.ஆர். புறப்பட்ட போது, பாண்டியன் ஓட்டலில் இருந்து சிந்தாமணி டாக்கீஸ் வரை இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வாழ்த்துக் கோஷங்களை எழுப்பினர். அதற்குமுன் தியேட்டர்களில் நடந்த நூறாவது நாள் விழாக்களில் நடிகர், நடிகைகள் கருப்பு கண்ணாடி ஏற்றிய காரில் செல்வார்கள். தியேட்டரில் இருப்பவர்கள் மட்டுமே அவர்களைப் பார்க்க முடியும்.

ஆனால், ‘அடிமைப் பெண்’ வெற்றி விழாவின்போது, பொதுமக்களும் பார்க்க வசதியாக எம்.ஜி.ஆர். திறந்த வேனில் வந்தார். தேர்தல் பிரசாரத் துக்கு தான் பயன்படுத்தும் வேனில் ஜெயலலிதா, பண்டரிபாய் ஆகியோரு டன் நின்று கொண்டே வந்தார். வழிநெடுக மக்களின் ஆர்ப்பாட்டமான வரவேற்பை கையசைத்தும், கும்பிட்டபடியும் ஏற்றுக் கொண்டார். ‘அடிமைப் பெண்’ படப்பிடிப் புக்காக ராஜஸ்தானுக்கு எம்.ஜி.ஆர். சென்றபோதுதான் அவருக்குத் தொப்பி அணியும் பழக்கம் ஏற்பட்டது. திரை யரங்குக்கு தொப்பி, கண்ணாடியுடன் வந்த எம்.ஜி.ஆரைப் பார்த்த ரசிகர்கள் எழுப்பிய கரவொலியிலும் உற்சாக ஆரவாரத்திலும் மதுரையே குலுங்கியது!

திரையரங்கில் மதியக் காட்சியிலும் பின்னர் மாலைக் காட்சியிலும் இடை வேளையின்போது மேடையில் எம்.ஜி.ஆர். தோன்றி நன்றி தெரிவித்துப் பேசினார். அவருடன் கைகுலுக்க போட்டியிட்ட ரசிகர்களுடன் கைகுலுக்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இதற்கு நடுவே, திரையரங்கு அலு வலகத்தில் அமர்ந்து ஊழியர்கள், பார்வையாளர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழ் திரையுலகின் தன்னிகரில்லா சூப்பர் ஸ்டார், செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் என்பதையெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆரிடம் தூக்கலாக இருந்த குணம் மனிதாபிமானம்.

ஒவ்வொருவரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எப்போதும் உறுதியாக இருப்பார். சிந்தாமணி திரையரங்கிலும் அவரது மனிதநேயம் வெளிப்பட்டது. தியேட்டர் அலுவலகத்தில் அவர் அமர்ந்திருந்த போது, கடமையே கண்ணாக பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்த போலீஸாரை எம்.ஜி.ஆர். அழைத்தார். அவர்களுடைய பணி மற்றும் குடும்ப விவரங்களை அன்போடு கேட்டறிந்து கைகுலுக்கி வாழ்த்தினார். போலீஸாரின் முகங்கள் ஆயிரம் வாட்ஸ் விளக்காய் பிரகாசித்தது!

எம்.ஜி.ஆருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு. ஆனால், பல தளங்களிலும் உள்ள விதவிதமான தனது ரசிகர்களை நேசித்து ரசித்தவர் எம்.ஜி.ஆர்.!

‘குடியிருந்த கோயில்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடங்கள். ஓட்டலில் நடனமாடி பாடும் கலைஞராக ஒரு பாத்திரம். அறிமுகக் காட்சியில் ‘என்னைத் தெரியுமா?...’ பாடலில் திரையரங்கில் இருக்கும் ரசிகர்களைப் பார்த்தபடி திரையில் எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும் வரிகள்...

‘ஆஹா ரசிகன்... ஆஹா ரசிகன்,

நல்ல ரசிகன்... நல்ல ரசிகன்

உங்கள் ரசிகன்... உங்கள் ரசிகன்...!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்




ஆண்களைப் போலவே ஏராளமான அளவில் எம்.ஜி.ஆருக்கு ரசிகைகளும் உண்டு. 1967-ம் ஆண்டு ‘காவல்காரன்’ படம் வெளியானபோது, படத்தைப் பார்க்க பெண்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் குளோப் திரையரங்கில் பெண்களுக்காகவே பிரத்தியேக காட்சி திரையிடப்பட்டது. குளோப் திரையரங்கில் முதன்முதலில் 100 நாட்கள் கடந்த தமிழ்ப் படம் ‘காவல்காரன்’!

Wednesday, June 22, 2016

At this government school, you need to gift Headmaster an electronic item for a seat

CHENNAI: Television sets, fans and mixies – no, this is not the government’s freebies list. These are some of the items allegedly demanded by headmaster of a government-run school on the city’s outskirts from parents for Class XI admissions this year.
While demand for donations and capitation fees is nothing new in private schools, the parents who wanted to enrol their children in the Kelambakkam Government Higher Secondary School were shocked when headmaster Marimuthu demanded either money or appliances.
Agitated by this, the Class XII students of the school boycotted classes on Monday and gheraoed the headmaster’s office. This forced the Kancheepuram District Education Officer (in-charge) Rajarathinam to reach the school and conducted an enquiry into the issue around 11.30 am. “The students have given in writing their complaints and also a few evidences to substantiate it. I will submit my report to the Chief Educational Officer, who will decide further course of action,” he told Express.
Meanwhile, parents of a few students of Pallikaranai Government Higher Secondary School, where Marimuthu served as Assistant Headmaster till last year, also accused Marimuthu of forcing them to pay bribe for admissions. “Now, he seems to be continuing the same in the new school he is posted in,” said a parent of the Pallikaranai school.
Speaking to Express, many students of the Kelambakkam school narrated how the headmaster was demanding money for the Class XI admissions. Rather than collecting it as money, the headmaster has demanded fans, mixies and television sets for his residence and some have been asked to take up fencing and renovation works in the school.
From what the students say, the rates varied depending on the student’s score and stream. Since Computer Science was the most sought-after stream, those with less than 75 per cent marks in Class X, had to bribe the headmaster around Rs 20,000 to get admission.
For commerce and accountancy streams, students had to pay roughly around Rs 1,000 in addition to the tuition and exam fees fixed by the government.
“I was asked to fence the school with barbed wires and replace tiles in the toilets to get admission into commerce stream”, said Naveen Kumar, Class XII student from the school.
He added that while the government allocated funds every year to renovate worn-out elements in the school, the HM forced them to pay for it and swindle the government grants.
The school located at the end of Chennai’s IT corridor, has also allegedly collected excess annual fee from the students.
While Rs 300 was the annual fee for a Class XII government school student, students here said that they had paid around Rs 1,000 to Rs 5,000 annually.
“Despite buying electronic appliances for his house, we had to pay this excess fee to continue education”, said Balaji, another Class XII student.
Despite collecting excess fees, students complained of poor infrastructure which included leaky roofs, defunct fans, poor electrical lighting and ruptured floors along the classrooms and corridors.
As a result of these malpractices, the Kelambakkam school’s performance has taken a beating. While the district recorded an overall pass percentage of 90.72 per cent,  this particular school continued its poor show by recording a pass percentage of 78 % in the recently concluded Class XII Board exam.
Out of the 221 students, around 49 had failed and only two managed to score above 1,000 out of 1,200.

Exit exam for MBBS graduates on cards Centre mulls test to see if good enough to practise

Aditi Tandon
Tribune News Service

New Delhi, June 21

After rolling out the National Eligibility-cum-Entrance Test (NEET) for undergraduate medical admissions this year, the government is mulling an exit exam for MBBS graduates from the next academic session.

The idea is to test MBBS passouts for skills acquired through the course and see if they are good enough to practise at the end of the drill.

The exit exam proposed from the 2017-18 academic session will be the first-ever exercise mandating MBBS graduates to attain minimum prescribed percentiles to be able to practise medicine. The licence to practise is proposed to be given to only those medical undergraduates who cross the threshold of quality set in terms of marks attained in the exit test.

The catch is — Health Ministry is considering converting the already existing all-India PG medical entrance exam into a three-in-one test which will include the MBBS exit exam. “There will be no additional burden on MBBS students. The objective is to see if the graduate is good enough to practise medicine at the end of his course. We are, however, not proposing a new exam for MBBS exit. The existing all-India PG entrance exam conducted annually around November-end will be used for this purpose. The proposal is to use the PG exam for MBBS exit as also for testing foreign graduates who seek licences to practise in India,” a Health Ministry official said. At present, there is a separate exam (Foreign Graduates Medical Exam) for foreign graduates seeking equivalence to practise medicine in India.

The idea is to do away with this and offer the PG medical entrance exam to foreign graduates as well.

A ministry source says: “The proposal is to have foreign graduates, Persons of Indian Origin and Overseas Citizens of India holding foreign medical degrees to take one test — the all-India PG entrance test — and become eligible to practise in India. One test will thus serve three purposes.”

The ministry’s argument behind using the PG test as the MBBS exit exam is that annually 95 per cent of MBBS passouts anyway take the all-India PG entrance exam.

“Those who secure a minimum 45 percentile in the PG entrance exam are eligible to apply for PG courses. This criteria can be fixed as the threshold for MBBS exit exam, which means graduates who touch this mark will be eligible to practise medicine,” a ministry official said.

Tuesday, June 21, 2016

எம்ஜிஆர் 100 | 90 - படுத்துக்கொண்டே நடித்தவர்!


மதுரை அவனியாபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மூதாட்டியின் குறைகளை பரிவோடு கேட்கிறார் எம்.ஜி.ஆர்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R. பலருக்கும் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறார். ஆனால், அவருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் குடும்பச் சொத்துக்களை விற்க முனைந்த தாய்மார்கள் உண்டு. எம்.ஜி.ஆரை தங்கள் மகனாகவே கருதிய மூதாட்டிகள், தங்கள் விவசாய நிலத்தில் அவர் காலடி பட்டால் மண்ணெல்லாம் பொன்னாய் விளையும் என்று நம்பினர்!

வரி பாக்கிகளுக்காக எம்.ஜி.ஆரின் சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட லாம் என்று வதந்திகள் பரவிய நேரம். திண்டிவனத்தில் ஆசிரியராக பணி யாற்றி வந்த இரா.ஷெரீப் என்பவர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதினார். ‘‘தங்கள் சொத்துக்கள் ஜப்தி செய்யப் படலாம் என்று வரும் செய்திகள் அறிந்து என்னைப் போலவே தங்களையும் தனது மகனாகக் கருதும் எனது தாய் மிகுந்த வருத்தமடைந்திருக்கிறார். குடும்பச் சொத்துக்களை விற்று தங்களுக்கு உதவச் சொன்னார். என் வீடு, மனை ரூ.40 ஆயிரம் விலைபோகும். அதை தங் களுக்கு அளிக்கிறேன். என் தாய் தங் களுக்காக உயிரைக்கூட தர சித்தமாக இருக்கிறார்’’ என்று கடிதத்தில் ஷெரீப் கூறியிருந்தார்.

எம்.ஜி.ஆர். தனது தாய் சத்யா அம்மையாரை தெய்வமாக மதிப்பவர். ராமாவரம் தோட்டத்து வீட்டில் தாய்க்கு சிறிய கோயிலே கட்டியிருந்தார். வெளியே புறப்படும் முன் தாயை வணங்கி விட்டுத்தான் புறப்படுவார். மற்ற தாய்மார் களையும் சொந்தத் தாய் போலவே கருதினார். ஷெரீப் எழுதிய கடித விவரங் களைப் பற்றியும் அந்தத் தாயைப் பற்றியும் ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளிவந்த தனது சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்’ தொடரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

‘‘வயதான காலத்தில் அந்தத் தாய் தன் மக்களுடைய எதிர்காலத்துக்கு என் பதைப் பற்றி சிறிதேனும் கவலைப்படா மல் என்னுடைய கடனைத் தீர்க்க, தங் களின் சொத்துக்களை விற்க முடிவெடுத் தார்களே, அந்த மனித தெய்வத்தை நான் வணங்காதிருப்பது எப்படி? அந்தத் தாய் எனக்காக உயிரைத் தரவும் துணிந்து விட்ட நிலையில், நான் அவர்களுக்காக என் உயிரைத் தராவிடினும் உழைப்பை யாவது தரவேண்டாமா?’’ என்று எம்.ஜி.ஆர். எழுதியுள்ளார்.

தனக்காக அவர்கள் சொத்துக் களை விற்பதை ஏற்க எம்.ஜி.ஆர். மறுத்துவிட்டார். பின்னர், அந்தத் தாயார் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளார் என்பதை கடிதம் மூலம் அறிந்து, திண்டிவனம் சென்றார். ஷெரீப்பின் வீட்டுக்குச் செல்வதற்காக சிறிய சந்துகளின் வழியே எம்.ஜி.ஆர். நடந்து சென்றார். தங்கள் சந்தில் எம்.ஜி.ஆர். நடந்து வருவதை நம்பமுடி யாத மக்கள் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று, ஓட்டமும் நடையுமாய் கூடவே சென்றனர். ஷெரீப்பின் வீட்டை அடைந்த எம்.ஜி.ஆரை, மூத்த மகனை கண்ட மகிழ்ச்சியுடன் படுக்கையில் இருந்தவாறே கண்ணீருடன் வரவேற் றார் அந்தத் தாய். அவரது கரங்களை ஆதரவாகப் பிடித்தபடி நலம் விசாரித்தார் எம்.ஜி.ஆர்.!

‘‘எங்கே உன்னைப் பார்க்காமலே செத்துப் போயிடுவேனோன்னு பயந் தேன். லெட்டர் போட்டவுடனே வந்துட் டியே. நல்லா இருப்பா…’’ என்று கண் கலங்கியபடி நெஞ்சு குளிர வாழ்த் தினார் ஷெரீப்பின் தாய். ‘‘அழாதீங் கம்மா. உங்களுக்கு ஒன்றும் இல்லை. சீக்கிரமே உடம்பு சரியாகி விடும்’’ என்று கண்ணீரைத் துடைத்தபடியே தேற்றிய எம்.ஜி.ஆர்., ஒரு கவரை அவரிடம் அளித்தார். அதில் பணம் இருப்பதைப் பார்த்துவிட்டு அதை ஷெரீப்பின் தாய் ஏற்க மறுத்தார்.

‘‘அம்மா. உங்களுக்கு கொடுக்க வேண்டியது என் கடமை. நீங்க என்னை மகனா நினைக்கிறது உண்மையா இருந்தா, மூத்த மகன் செய்யற இந்த சிறிய உதவியை ஏத்துக்கணும்’’ என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தையைத் தட்ட முடியாமல் மகிழ்ச்சியோடு பணத்தை வாங்கிக் கொண்டார் ஷெரீப்பின் தாயார். இது நடந்தது 1979-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். பின்னர், ஓரளவு உடல் நலம் தேறிய அந்தத் தாயின் உடல் நிலை 1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் மோசமடைந்தது. எம்.ஜி.ஆருக்கு தந்தி அடித்தார் ஷெரீப். அப்போதும், திண்டிவனம் சென்று பார்த்தார் எம்.ஜி.ஆர்.! அந்த மகிழ்ச்சியிலேயே கண்ணை மூடினார் அந்தத் தாய்!

ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.

அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!

எம்.ஜி.ஆர்., கே.ஆர்.விஜயா நடித்த ‘நல்ல நேரம்’ திரைப்படத்தில் ‘நீ தொட்டால் எங்கும் பொன்னா குமே, என் மேனி என்னாகுமோ?…’ என்ற டூயட் பாடல் இடம்பெறும். மற்ற எம்.ஜி.ஆர். பட பாடல்களுக்கு இல்லாத சிறப்பு இந்தப் பாடலுக்கு மட்டுமே உண்டு.

வழக்கமாக, பாடல் காட்சிகளில் பார்ப் பவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள் ளும் வகையில் எம்.ஜி.ஆர். ஆடுவார், ஓடுவார். ஆனால், இந்தப் பாடலில் வலைப் படுக்கையில் (நெட்) படுத்த படியே பாடி நடித்திருப்பார். முழு பாடல் காட்சியிலும் படுத்தபடியே நடித்த நடிகர் எம்.ஜி.ஆராகத்தான் இருப்பார்! ஓடி ஆடி நடிப்பதைவிட, படுத்துக் கொண்டே பாடல் காட்சியில் நடிப்பது கஷ்டம். ஆனாலும், படுத்துக் கொண்டே ஜெயித்தவருக்கு படுத்துக் கொண்டே நடிப்பது கஷ்டமா என்ன?

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


தேவர் ஃபிலிம்ஸின் முதல் வண்ணப் படமான ‘நல்ல நேரம்’ 1972-ம் ஆண்டு வெளியாகி தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சென்னையில் இரண்டு திரையரங்குகளில் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்தது. அதோடு, அந்த ஆண்டு வெளியான படங்களில் சென்னையில் சித்ரா, மகாராணி, மேகலா, ராம் ஆகிய 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி, சாதனை செய்த ஒரே படம் ‘நல்ல நேரம்’!

Monday, June 20, 2016

வீட்டை காலி செய்யும் பிரச்சினையில் போலீஸார் தலையிடக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு



வீட்டை காலி செய்வது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையில் ஏற்படும் பிரச்சினையில் போலீஸார் தலையிடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், குருவி குளத்தில் வீட்டின் உரிமையாளர் ஒருவர், தனது வீட்டில் வாடகைக் குக் குடியிருப்பவரை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அவர் காலி செய்ய மறுத்ததால் வீட்டின் உரிமையாளர் குருவிகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 2 மாதங்களில் வீட்டை காலி செய்வதாக வாடகைதாரர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீட்டை காலி செய்யும் விவகாரம் சிவில் பிரச் சினை. இதில் தலையிடுவதற்கு போலீஸாருக்கு அதிகாரம் கிடை யாது. இதனால் வீட்டை காலி செய்யும் பிரச்சினையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தக் கூடாது என நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சங்கரன் கோவில் துணை காவல் கண் காணிப்பாளர், குருவிகுளம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வாடகைதாரர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.விமலா பிறப்பித்த உத்தரவு: வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் இடையி லான வீட்டை காலி செய்யும் விவகாரம் சிவில் பிரச்சினை. இதற்கு சம்பந்தப்பட்ட சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் பெற முடியும். இந்த பிரச்சி னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக போலீஸார் நீதிமன் றங்களுக்கு இணையான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.

வீட்டின் உரிமையாளரின் புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸார், 2 மாதங் களில் வீட்டை காலி செய்வ தாக ஒப்புக்கொள்ள வைத்துள்ள னர். சிவில் பிரச்சினையில் போலீஸாரின் இந்த நடவடிக் கையை ஏற்க முடியாது. எனவே மனுதாரர் பிரச்சினையில் போலீஸார் தலையிடக்கூடாது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் 100 | 88 - கலைஞருக்கெல்லாம் வள்ளல்!

1973-ம் ஆண்டு திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மாயத்தேவர், எம்.ஜி.ஆருக்கு மாலை அணிவிக்கிறார். புகைப்படம் எடுப்பவர்களுக்கு வசதியாக அவரது கையை எம்.ஜி.ஆர். பற்றியிருப்பதைக் காணலாம்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்
M.G.R. புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர். கேமராவை கையாள்வதில் நிபுணர். புகைப்படம் எடுக்கும்போது படம் எடுப்பவர்களுக்கு அருமையாக போஸ் கொடுத்து ஒத்துழைப்பு அளிப்பதுடன், அவர்களின் நடைமுறை சிரமங்களையும் அறிந்தவர். ஸ்டில் கேமரா மட்டுமின்றி, படப்பிடிப்பு கேமராக்களின் கோணங்களையும் பெரும்பாலும் அவரே முடிவு செய்வார். அதனால்தான், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களைப் போலவே அவரது புகைப்படங்களும் ரசிக்க வைக்கின்றன!

பொதுவாக, தலைவர்களுடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்க மான ஒன்று. அந்த நேரத்தில் ஆர்வமாக எடுத்துக் கொள்வார்களே தவிர, தலை வரைப் பார்த்த மகிழ்ச்சியில் தங்களைப் புகைப்படம் எடுத்தது யார் என்றுகூட தெரியாமல் சென்றுவிடுவார்கள். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பல பேரை படம் எடுத்துவிட்டு, தலைவர்களுடேனேயே புறப்பட்டுவிடும் புகைப்படக் கலைஞர் களும் யார், யாரை படம் எடுத்தோம்? யாரிடம் புகைப்படங்களைக் கொடுப் பது என்று தெரியாமல் தவிப்பார்கள். இதுபோன்று, புகைப்படக் கலைஞர்களி டம் கேட்பாரின்றி ஏராளமான புகைப் படங்கள் இருக்கும்.

ஒருமுறை தேர்தல் பிரசாரத்தின் போது மதுரைக்குச் சென்ற எம்.ஜி.ஆர்., அங்கு தங்கியிருந்தார். அவரைப் பார்க்க கட்சியினரும் தொண்டர்களும் குவிந்தனர். காலையில் எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணத்துக்கு புறப்படும்முன், தொண்டர்கள் குழுக்களாக அவர் இருந்த அறைக்குச் சென்று சந்தித்தனர். ஒரு குழுவினர் அவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் தெரிவித்தனர்.

அப்போது, அந்த அறையில் இருந்த புகைப்படக் கலைஞரிடம் எம்.ஜி.ஆர். படம் எடுக்கச் சொன்னார். படம் எடுத்து முடித்தபின் சுற்றுப் பயணம் செல்வதற் காக அறையில் இருந்து வெளியே வந்தார். அவருடன் கூடவே பிரசார நிகழ்ச்சிகளைப் படம் எடுப்பதற்காக புகைப்படக் கலைஞரும் புறப்பட்டார். தொண்டர்களும் எம்.ஜி.ஆரை வழி யனுப்ப வந்தனர்.

காரில் ஏறப்போகும் சமயம். புகைப் படக் கலைஞரைப் பார்த்து எம்.ஜி.ஆர்., ‘‘படம் எடுத்துக் கொண்டவர்களை உங்களுக்குத் தெரியுமா?’’ என்றார். ‘‘தெரியாது’’ என்று பதில் வந்தது. அதே போல, தொண்டர்களைப் பார்த்து, ‘‘உங்களை படம் எடுத்த இந்த போட்டோகிராபரின் அட்ரஸ் தெரி யுமா?’’ என்றார். திருதிருவென அவர்கள் முழித்ததே ‘தெரியாது’ என்ற பதிலைச் சொன்னது. புரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்., புகைப்படக் கலைஞரிடம் அவரது விசிட் டிங் கார்டை படம் எடுத்துக் கொண்டவர் களிடம் கொடுக்கச் சொன்னார். அவரது சமயோசிதத்தை அறிந்து தொண்டர்கள் வாழ்த்து கோஷம் எழுப்பினர். அவர்களைக் கையமர்த்திய எம்.ஜி.ஆர்., ‘‘மறக்காமல் புகைப்படங்களுக்கு உரிய பணத்தைக் கொடுத்து வாங்கிக்கொள் ளுங்கள்’’ என்று சொன்னதும் எழுந்த சிரிப்பொலி அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது!

தலைவர்களுக்கு மாலை போடும்போது, மாலை அணிவிப்பவரின் கைகள் தலைவர்களின் முகத்தை மறைத்தபடி இருக்கும். அந்த நிலையில், படம் எடுக்க முடியாமல் புகைப்படக் கலைஞர்கள் தவிப்பார்கள். இதை எம்.ஜி.ஆர். அறிந்திருந்தார். அதனால், தனக்கு யாராவது மாலை போட்டால் தன் முகத்தை மறைக்காதபடி, அவரது கைகளை இறுகப் பிடித்துக் கொள்வார். புகைப்படக் கலைஞர்கள் திருப்தியாக படம் எடுத்து முடிந்த பிறகே மாலை போட்டவரின் கைகளை விடுவார்.

சந்தையில் எந்த புதிய கேமரா வந்தாலும் எம்.ஜி.ஆர். வாங்கி விடு வார். படப்பிடிப்பின் போது இயற்கை காட்சி களை படம் பிடிப்பார். புகைப்படம் நன்றாக அமைந்தால்தான், அதை எடுத்த கலை ஞர்களுக்கும் நல்ல பெயர். பார்ப்பவர் களையும் படம் கவரும். எந்தக் கோணத் தில் எப்படி எடுத்தால் படம் நன்றாக இருக் கும்? தான் எப்படி போஸ் கொடுக்க வேண் டும் என்பதெல்லாம் எம்.ஜி.ஆருக்கு அத்துபடி. பெரும்பாலும் கைகளை வெறுமனே தொங்கவிட்டபடி நிற்க மாட்டார். அது பார்க்க நன்றாக இருக் காது என்பதால், கைகளில் ஏதாவது பொருட்களையோ, பேப்பரையோ ஸ்டைலாக வைத்துக் கொண்டோ, தொண்டர்களை அணைத்தபடியோதான் போஸ் கொடுப்பார்.

எம்.ஜி.ஆரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞர் ஆர்.என். நாகராஜ ராவ். அவரது பெரும்பாலான படங்களுக்கு நாகராஜ ராவ்தான் ஸ்டில் போட்டோகிராபராக பணியாற்றியுள்ளார். முதல்முறை தமிழக முதல்வராக பதவியேற்றபின், தலைமைச் செயலகத்தில் முதல்வர் நாற்காலியில் எம்.ஜி.ஆர். அமர்ந்ததும் அவரது விருப்பப்படி முதலில் புகைப்படம் எடுத்தவர் நாகராஜ ராவ்!

‘நாடோடி மன்னன்’ திரைப்படம் எடுத்து முடிந்தபின், அதன் சிறப்புக் காட்சிக்கு நாகராஜ ராவையும் எம்.ஜி.ஆர். அழைத்திருந்தார். அப் போது, நாகராஜ ராவ் எம்.ஜி.ஆரிடம், ‘‘படம் நிச்சயம் அமோக வெற்றி பெற்று நூறு நாட்களுக்கு மேல் ஓடும்’’ என் றார். எம்.ஜி.ஆரும் மகிழ்ச்சியுடன், ‘‘நீங் கள் சொன்னது நடந்தால் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கிறேன்’’ என்றார். படம் பிரம் மாண்ட வெற்றிபெற்றது. தான் சொன் னதை நாகராஜ ராவே மறந்துவிட்டார். ஆனாலும், எம்.ஜி.ஆர். அவருக்கு நினைவுபடுத்தி ஆயிரம் ரூபாயை பரிசளித்தார். அந்த காலகட்டத்தில் பவுன் விலை ஏறத்தாழ நூறு ரூபாய்!

எம்.ஜி.ஆர். நடித்த ‘அரச கட்டளை’ படத்துக்கும் நாகராஜ ராவ்தான் புகைப் படக் கலைஞராக பணியாற்றினார். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘என்னைப் பாட வைத்தவன் ஒருவன்…’ பாடலில் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து எழுதப்பட்ட வரிகள் இவை…

‘அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்;

நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல், வள்ளல்!’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன், செல்வகுமார்




‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தின் விளம்பரத்துக்காக சாட்டையைச் சுழற்றுவது போல, அடிப்பது போல, சாட்டையை உடலைச் சுற்றி பிடித்தபடி என, இந்தத் தொடரின் ‘லோகோ’வில் இடம்பெற்றுள்ள படம் உட்பட விதவிதமாக எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்க, அந்தப் படங்களை எடுத்தவர் நாகராஜ ராவ். இதில் ஒரு விசேஷம், எம்.ஜி.ஆர். தனக்குத் தோன்றிய விதங்களில் தானாகவே யோசித்து கொடுத்த அட்டகாசமான போஸ்கள் அவை!

நாய்க்கறி திருவிழாவுக்கு சீன மக்கள் எதிர்ப்பு: நிரந்தர தடை விதிக்க 64% பேர் ஆதரவு

சீனாவின் யூலின் நகரில் நடைபெறும் நாய்க்கறி திருவிழாவுக்கு கொண்டு செல்லப்படும் நாய்கள் | (கோப்புப் படம்)

சீனாவில் நாய்க்கறி திருவிழா நடத்துவதற்கு, பெரும்பான்மை சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் இத்திருவிழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என, 64 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சீனாவின் குவாங்சி மாகாணத்தில் உள்ள யூலின் நகரில் வருடாந்திர நாய்க்கறி திருவிழா இன்று நடைபெறுகிறது. பல்வேறு இடங்களில் இருந்து, 10,000-க்கும் மேற்பட்ட நாய்களை கொண்டுவந்து, அவற்றை வெட்டி கறியாக்கி சாப்பிட்டு மகிழ்வதே இத்திருவிழாவின் நோக்கம்.

சீன பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும், உள்ளூர் கலாச்சாரம் எனக் கூறியும், 2009-ம் ஆண்டுக்குப் பிறகு, இத்திருவிழா சர்வதேச அளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. எனினும், அண்மைக்காலமாக இத்திருவிழாவுக்கு சீன மக்களே எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர்.

திருவிழா இன்று நடைபெறும் நிலையில், சீனாவைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை ஒன்றின் சார்பில் பொதுமக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், கருத்து கேட்கப்பட்ட, 16 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களில், 64 சதவீதம் பேர் நாய்க்கறி திருவிழாவுக்கு நிரந்தரமாக தடை விதிக்க ஆதரவு தெரிவித் தனர்.

யூலின் நகர மக்களே இத்திருவிழாவை ரசிக்கவில்லை என்பது இந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி, 69 சதவீதம் பேர், இதுவரை தாங்கள் நாய்க் கறி சாப்பிட்டதில்லை எனக் கூறியுள்ளனர்.

‘ஆக, உள்ளூரில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கே நாய்க்கறி சாப்பிட பிடிக்கவில்லை. இத்திரு விழாவை வியாபாரிகள் சிலர் சர்வதேச வர்த்தகமாக்க முயற்சிப்பதாக தெரிகிறது’ என, கருத்துக்கணிப்பு நடத்திய அறக்கட்டளை இயக்குனர் கின் ஜியோனா குறிப்பிட்டார். மேலும், கருத்துக்கணிப்பில் பங்கு பெற்ற பலரும், இத்திருவிழா சர்வதேச அளவில் சீனாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

Sunday, June 19, 2016

எம்ஜிஆர் 100 | 89 - நடிகர் நலனில் அக்கறை கொண்டவர்!

எம்.ஜி.ஆருடன் கே.பி.ராமகிருஷ்ணன்


தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.தன்னுடன் நடிக்கும் நடிகர்களின் நலனில் அக்கறை கொண்டவர். அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சகோதரனைப் போல கவனித்து உதவிகள் செய்வார். சில தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படத்துக்கு மேல் எடுக்காமல் ஒதுங்கிவிட்டனர் என்று விமர்சனங்கள் உண்டு. தன் படங்கள் மூலம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கும் லாபம், எல்லா கலைஞர்களுக்கும் பகிரப்பட வேண்டும் என்று அவர் நினைத்ததுதான் அதற்கு காரணம்!

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான வட்டத் தில் இருந்தவர்களில் அவரது மெய்க்காவலரும் ஸ்டன்ட் நடிகரு மான கே.பி.ராமகிருஷ்ணனும் ஒருவர். 1949-ம் ஆண்டு பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்தில் கே.பி.ராம கிருஷ்ணன் சண்டைக் காட்சியில் நடித் தார். சென்னை கீழ்ப்பாக்கம் நியூடோன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பின்போது, பி.யூ.சின்னப்பாவை சந்திக்க வந்த எம்.ஜி.ஆருக்கு ராமகிருஷ்ணன் அறி முகமானார். பின்னர், ‘நாடோடி மன்னன்’ படத்தில் அவருக்கு எம்.ஜி.ஆர். வாய்ப் பளித்தார். ஏறத்தாழ 30 ஆண்டுகள் எம்.ஜி.ஆருடன் கூடவே இருந்தவர்.

‘ஒரு தாய் மக்கள்’ படத்தின் படப் பிடிப்பு சென்னை வடபழனியில் சாரதா ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ராமகிருஷ்ணன் மோதும் காட்சி பட மாக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். அடித்ததும் ராமகிருஷ்ணன் அருகில் உள்ள குளத் தில் விழ வேண்டும். அப்படி, விழுந்த போது குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால், அதில் ராமகிருஷ்ணன் குதித்தபோது கணுக்காலில் எலும்பு முறிந்துவிட்டது. எம்.ஜி.ஆரைப் பார்த்து ‘‘அண்ணே, கால் உடைஞ்சு போச்சு’’ என்று கத்தினார் ராமகிருஷ்ணன்.

படத்தின் தயாரிப்பாளர் எலும்பு முறி வுக்கு சிகிச்சை அளிக்க ராமகிருஷ் ணனை புத்தூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதை எம்.ஜி.ஆர். ஏற்கவில்லை. ராமகிருஷ்ணனை தன் காரிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலை யில் உள்ள கே.ஜே.மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். ராமகிருஷ்ணனுக்கு தைரியம் சொன்னதோடு, ஒருநாள் விட்டு ஒருநாள் அவரைப் பார்க்க வருவார். சிகிச்சைக்கான செலவை தயாரிப்பாளரை ஏற்கச் சொல்லா மல், ரூ.37 ஆயிரத்தை எம்.ஜி.ஆரே கொடுத்தார். அதோடு, ராமகிருஷ்ண னின் குடும்பச் செலவுக்காக ரூ.10 ஆயிரமும் கொடுத்தார்.

இதைவிடவும் முக்கியமான ஒன்று. ‘‘ராமகிருஷ்ணன் குணமடைந்து வந்து, அவர்தான் மீண்டும் இந்தக் காட்சியில் நடிக்க வேண்டும். அதுவரை செட்டை கலைக்க வேண்டாம்’’ என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார். அதன்படியே, அந்த செட் மூன்று மாதங்களுக்கு அப்படியே இருந்தது. எம்.ஜி.ஆர். நினைத்திருந்தால் வேறு ஸ்டன்ட் நடிகர்களை வைத்து அந்தக் காட்சியை எடுத்திருக்கலாம். ஆனால், உடன் நடிக்கும் கலைஞர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர் எம்.ஜி.ஆர்.! அவர் விருப்பப்படியே, ராமகிருஷ்ணன் குணமாகி வந்ததும், குளத்தில் நிறைய தண்ணீர் ஊற்றப் பட்டு சண்டைக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.

மற்ற நடிகர்களுக்கு, குறிப்பாக உயிரைப் பணயம் வைத்து நடிக்கும் ஸ்டன்ட் நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் நியாயமான ஊதியத்தைக் கொடுக் காமல் இருப்பதை எம்.ஜி.ஆர். அனுமதிக்க மாட்டார். அவர் நடித்த ஒரு படத்தில் சண்டைக் காட்சியில் ராமகிருஷ்ணன் நடித்திருந்தார்.

அந்தத் தயாரிப்பாளரிடம் சென்று 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கேட்டார். ‘‘சண்டைக் காட்சியில் நடிக்க 5 ஆயிரமா? 3,500 ரூபாய் வாங்கிக் கொள்’’ என்றார் தயாரிப்பாளர். ராமகிருஷ்ணன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வந்துவிட்டார். எம்.ஜி.ஆரை சந்தித்து விஷயத்தைக் கூறினார். அதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட எம்.ஜி.ஆர்., ‘‘என்னிடம் சொன்னதாக காட்டிக் கொள்ளாதே. நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பின்னர், தன்னை சந்தித்த தயாரிப் பாளரிடம், ‘‘இந்த ராமகிருஷ்ணன் இருக்காரே, என் பேரை சொல்லி சம்பளம் அதிகமாக கேட்பார்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். தயாரிப்பாளரின் முகம் மலர்ந்தது. ‘‘ஆமாண்ணே…’’ என்று மேற்கொண்டு பேச முயன்றவரைத் தடுத்து, ‘‘நீங்க அவர்கிட்ட எதுவும் பேசாதீங்க. 20 ஆயிரம் ரூபாய்க்கு மேலே ஒரு பைசா கூட கொடுக்காதீங்க. மேலே கேட்டால் என்கிட்டே சொல்லுங்க’’ என்றார். தயாரிப்பாளருக்கு மெல்லவும் முடியவில்லை, முழுங்கவும் முடிய வில்லை. எம்.ஜி.ஆரே சம்பளம் நிர்ணயித்த பிறகு, அதைத் தட்ட முடியுமா? ராமகிருஷ்ணனுக்கு 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்க மறுத்த அதே தயாரிப்பாளர் பிறகு, 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். தான் மட்டுமே லாபம் சம்பாதிக்க நினைக்கும் தயாரிப்பாளர்களை எம்.ஜி.ஆர். இப் படிப் படுத்துவது வழக்கம்!

ஜெயந்தி ஃபிலிம்ஸ் சார்பில் கனக சபை செட்டியார் தயாரித்த வெள்ளி விழா படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘மாட்டுக்கார வேலன்’. நூறாவது நாளையொட்டி நடந்த படத்தின் வெற்றி விழாவின்போது எம்.ஜி.ஆர். ஆலோசனையின்படி, கலை ஞர்களுக்கு ஒரு பவுன் மோதிரத்தை தயாரிப்பாளர் பரிசாக அளித்தார். ‘ஜெயந்தி ஃபிலிம்ஸ்’ என்பதை குறிக்கும் வகையில், ‘ஜே. எஃப்’ என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அந்த மோதிரத்தை ராமகிருஷ்ணன் இன்னும் அணிந்துள்ளார்.

‘சிரித்து வாழவேண்டும்’ படத்தில் ‘உலகமெனும் நாடக மேடையில் நானொரு நடிகன்…’ என்ற பாடல் காட்சி இடம்பெறும். கீழ்க்கண்ட வரிகளை எம்.ஜி.ஆர். பாடி நடிக்கும்போது தியேட்டர் அதகளப்படும்.

‘சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே

நான் ஆடியும் பாடியும் நடிப்பது

என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம்

நலமாய் வாழ்ந்திட நினைப்பது…’

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார், எஸ்.எஸ்.ராமகிருஷ்ணன்


எம்.ஜி.ஆர். நடித்து சடையப்ப செட்டியார் தயாரிப்பில், தர் இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான படம் ‘மீனவ நண்பன்’. படத்தில் கே.பி.ராமகிருஷ்ணனும் நடித்துள்ளார். ‘‘இந்தப் படத்துக்காக எம்.ஜி.ஆருக்கு அதிகபட்சமாக ரூ.45 லட்சம் சம்பளம் தரப்பட்டது. அதுவரை தென்னகத்தில் வேறு எந்த ஹீரோவுக்கும் அவ்வளவு சம்பளம் கொடுக்கப்படவில்லை. இப்போது அந்த தொகை பல கோடிகளுக்கு சமம்’’ என்று நினைவுகூர்கிறார் ராமகிருஷ்ணன்!

Saturday, June 18, 2016

Fly like a Super Star: AirAsia's exclusive flight for 'Kabali' FDFS

Inline image 1

Super Star Rajinikanth's 'Kabali' is the hot topic in Tamil Nadu. Entire film industy is buzzing about 'Kabali'. This movie has created a huge hype among super star fans and audiences. We have already reported that AirAsia has signed upas official airline partner for this movie and they are providing special 'Kabali' menu for their passengers in flights.

With the movie script requiring an airline to be featured in the film, AirAsia aircraft was used in a few sequences, said a spokesperson for AirAsia India.

Now the most exciting news we heard is 'Kabali' exclusive flight. This is the special offer for all Bengalurians who want to witness and experience the real super star power in Chennai. Yes, AirAsia announced a special flight for 'Kabali' first day first show. AirAsia introduced special package for Super Star fans for Rs 7860 . Fly from Bengaluru to Chennai to watch the FDFS of ‪ ‎'Kabali‬' including all expenses (Movie ticket charge, Lunch and return charge)

http://chennaionline.com/article/fly-super-star-airasias-exclusive-flight-kabali-fdfs

ரிலீஸுக்கு முன்பே சாதனைகள்: கோலிவுட்டை கலக்கும் கபாலி.........கா. இசக்கிமுத்து..



தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் பேசப்படும் படம் ‘கபாலி’. பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘கபாலி’ பட ரிலீஸுக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். அதிலும் படத்தின் டீஸர், மற்றும் பாடல்கள் வெளியான பிறகு இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிறியுள்ளது. இந்தச் சூழலில் ‘கபாலி’ படத்தைப் பற்றிய சில விவரங்களை படக்குழுவினரிடம் இருந்து சேகரித்தோம்.

கதை என்ன?

தன் வாழ்க்கையின் 25 ஆண்டுகளைச் சிறையில் கழித்துவிட்டு வெளியில் வரும் ஒரு மனிதன், மீண்டும் தன் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதைக்களம் என்று கூறப்படுகிறது. பல வருடங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வரும் ரஜினி, ‘43 ஓ’ என்ற வில்லன் கும்பலைத் தனி நபராக எதிர்த்து நிற்கிறார். வில்லன் கோஷ்டியை அவர் எதிர்கொள்ளும் காட்சிகள், ரஜினி ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் என்கிறது ‘கபாலி’ படக்குழு. ரஜினி ரசிகர்களுக்கு தீனி போடுவதற்காகவே சென்னை, மலேசியா, கோவா உள்ளிட்ட இடங்களில் சுமார் 110 நாட்களுக்கும் மேல் பார்த்துப் பார்த்து எடுத்து படத்தைச் செதுக்கியுள்ளனர்.

நீண்ட காலத்துக்குப் பிறகு ரஜினியின் நடிப்புக்கு முக்கியத் துவம் அளித்திருக்கும் படமாக 'கபாலி' இருக்கும் என்கிறது படக்குழு. அதே நேரத்தில் இதிலும் ரஜினியின் ஸ்டைல் இருக்கிறது. ஆனால், படமாக பார்க் கும்போது ஸ்டைலை விட ரஜினியின் நடிப்பு ரசிகர்களை அதிகம் கவரும் என்கிறார்கள் படக்குழுவினர்.

நட்சத்திர பட்டாளம்

இப்படத்தில் ரஜினிக்கு மனைவி யாகவும் தோட்டத் தொழிலாளியாகவும் குமுதவல்லி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. யோகி என்னும் ரவுடிக் கூட்டத்தில் இருக்கும் பெண்ணாக தன்ஷிகாவும், ரஜினி நடத்தி வரும் பள்ளியின் ஆசிரியர் தமிழ்க்குமர னாக கலையரசனும், ஒரு ரவுடியின் மகனாக தினேஷும், ரஜினியின் நண்பராக அமீர் என்ற பாத்திரத்தில் ஜான்விஜய்யும் நடித்துள்ளனர். வில் லன்களாக கிஷோர், வின்ஸ்டன் சாவ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘கபாலி’யின் சாதனைகள்

ஒரு மாதத் துக்கு முன் வெளியான ‘கபாலி’ படத்தின் டீஸரை இதுவரை 2 கோடியே 23 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதன் மூலம் அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஆமிர்கான், சல்மான்கான் போன்ற இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் டீஸர் செய்த சாதனையை ‘கபாலி’ முறியடித்துள்ளது. டீஸருக்குக் கிடைத்திருக்கும் வர வேற்பால், இப்படத்தின் வியாபாரம் 200 கோடியைத் தாண்டும் என்கிறார்கள்.

கபாலி படத்தின் பாடல்களும் சாதனைகளைப் படைத்து வருகிறது. திரைப்பட பாடல் சிடிக்கள் இப்போது அதிகம் விற்பனையாவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலை யிலும் ‘கபாலி’ படத்தின் சிடிக்கள் 15 ஆயிரத்துக்கும் அதிகமாக விற் றிருக்கின்றன. ஆயிரக்கணக்கான வர்கள் அதை இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கேட்டுள்ளனர். இப்படி ரிலீ ஸாகும் முன்பே சாதனைகள் பலவற்றை செய்துள்ள கபாலி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகிழ்ச்சி!

Madras univ convocation: Higher edu secy will sign certificates, says minister

Madras univ convocation: Higher edu secy will sign certificates, says minister A RaguRaman@timesofindia.com 25.09.2024  Chennai : In the abs...