Wednesday, November 30, 2016

No cash for last rites, body taken to bank

NOIDA: A 62-year-old woman who died on Monday afternoon was yet to be cremated till Tuesday evening as her family members had no cash to perform the last rites. They alleged that the bank they went to refused to give them money saying they have no cash.

The family members of the woman, Phoolmati Devi, then protested with her body in front of the bank. Later on Tuesday, the bank delivered the money but the family could not perform the last rites in the evening owing to religious belief. The family members of the dead woman said they had low balance in their account, and visited the bank on Monday and Tuesday but returned empty-handed.

Phoolmati Devi lived with her family members in Sector 9. Her husband, Munnilal, is a vegetable seller and son, Yamuna Prasad, works as a tailor. The family had shifted to Noida five years ago from Basti.

Munnilal said his wife was suffering from cancer for the last six months. "We took her to ESIC Hospital and then to a private hospital in Ghaziabad. She did not respond to medical treatment and died on Monday afternoon. We visited the Bank of India branch in Sector 9 on both days but the bank officials did not allow withdrawal," he said.

Prasad said he had Rs 16,000 in his account but was unable to withdraw the money. "We had no cash in hand. We did not know how to perform the cremation. This was a complete failure of the system," Prasad said. The family members started protesting at the spot demanding immediate withdrawal of money.

On being informed, the police reached the spot and Dilip Singh Bisht, sub-inspector in charge of the Jhundpura police post, gave Rs 2,000 of his own accord to the family for the cremation. As the news spread, a local politician also reached the spot and offered Rs 10,000 to the family. However the family members persisted in their demand for permission to withdraw their own money.

A team of police officers intervened and spoke to the bank's branch manager, Shishupal, who said the bank had no cash available on Tuesday. "The relatives of the dead woman came for cash withdrawal in the morning. Since we had no cash, we could not give it to them. In the afternoon, we managed to give them Rs 15,000 from their account," he said.

Prasad said it was too late when the family finally received the money. "They gave money in the afternoon. For cremation we need to buy wood and other items. We cannot perform the cremation after sunset. We will perform the last rites on Wednesday morning," he said.

District magistrate N P Singh said he has ordered an inquiry into the matter. "If the bank officials deliberately refused cash withdrawal, we will take action," he said.

Tamil Nadu medical students left in lurch over delay in certificates

By Express News Service  |   Published: 29th November 2016 01:34 AM  |  
Last Updated: 29th November 2016 05:09 AM

CHENNAI: Even as the Tamil Nadu Dr MGR Medical University has announced convocation of MBBS students on December 3, students who passed out of Sri Muthukumaran Medical College are left in the lurch as the university is yet to issue them the provisional-II certificate.

This does not just mean the students could not enroll themselves with the state medical council, but they also can not get admission into PG courses.

The problem has it roots in the Medical Council of India’s bar on the institution to admit students after it found that the college did not meet the standards. But after a court battle, the students got a favourable order. Then, they also received provisional-I certificate from the university and also obtained temporary registration with Tamil Nadu Medical Council (TNMC) and completed their CRRI last year.

Now, to get registration in TNMC, the students need provisional-II certificate from the university. But it has now said that the provisional-II certificate can be issued only on the basis of a written order from the Medical Council of India.

“Ministry of health and family welfare and Executive Committe of MCI have recognised 2010 batch of our college. MCI in its executive committee meeting passed the order for recognition. But, the university is waiting for the order copy, which will take a few months,” said S Manoj Prabhakar, one of the affected students.

“We don’t understand why the university is sticking to the formal order. It has provided recognition without those orders to many colleges, even to a Government Medical College in the past. The MCI has filed in the court that it granted recognition for 2010 batch, and we also confirmed it from the MCI through official communication,” said a TNMC source.

“A few of our batchmates secured good ranks in the PG entrance exam conducted by All India Medical Sciences(AIIMS) and Postgraduate Institute of Medical Education and Research, Chandigarh this month. But could not participate in the counselling of AIIMS,which is scheduled for the second week of December and also in PGIMER counseling to be held this month end. Without provisional certificate II, we could not register our course. We are also unemployed for eight months now,” said Manoj Prabhakar.

The students also said after completion of one year Compulsory Rotatory Resident Internship (CRRI), they are eligible to get the degree. But the university is not ready to award them the degree at its 28th convocation to be held on December 3.

Speaking to Express, T Balasubramanian, Registrar of the university, said there was no direct communication from MCI to the university. “MCI should recognise the institution. We have not received any orders on it. We cannot take advocate’s version, who says that MCI had granted permission and submitted so in the court. We also have written three letters to MCI asking if its true, but we didn’t receive any response from them. Without recognition, nothing can be done, we need to get it on paper.”

Tuesday, November 29, 2016

வாடிக்கையாளர் பொய் புகார்: டாக்ஸி டிரைவரை போலீசிடம் இருந்து காப்பாற்றிய பெண்!


டாக்ஸிஸி

vikatan.com

மும்பையைச் சேர்ந்த இளம் பெண் ஹிமானி. அண்மையில் உபேர் டாக்ஸி ஒன்றில் ஹிமானி பயணித்த போது, வித்தியாசமான அனுபவத்தைச் சந்திக்க நேர்ந்தது. தனது அனுபவத்தை ஃபேஸ்புக்கில் ஹிமானி பதிவிட்டிருந்தார். அவரது பதிவு சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 6,500 முறை ஹிமானியின் பதிவு ஷேர் செய்யப்பட்டுள்ளது. 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் லைக் செய்திருந்தனர். ஏராளமானோர் ஹிமானியின் செயலை பாராட்டி வாழ்த்து தெரிவித்திருந்தனர். அந்த பதிவின் சுருக்கம் இங்கே...

சமீபத்தில் அலுலகத்தில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக ஒரு உபேர் டாக்ஸியை புக் செய்தேன். டிரைவர் மிகவும் பணிவாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டார். அது ஒரு ஷேர் டாக்ஸி. என்னுடன் 30 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரும் பயணித்தார். காருக்குள் ஏறியதுமே, அந்த பெண் டிரைவிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். டிராப் செய்வது குறித்து டிரைவரிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டார். டிரைவர் பணிவாக பதில் அளித்தும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை. 'ஆப்பில் குறிப்பிட்டுள்ளபடி உங்களை டிராப் செய்துவிடுகிறேன் ' என டிரைவர் கூனார். ஆனால், அந்த பெண்ணின் கோபம் அடங்கவில்லை.

அவரது கோபம் அதிகமாகிக் கொண்டே போனது. மூன்றாம் தர வார்த்தைகளை உபயோகித்து டிரைவரைத் திட்டடியதோடு, 'அடித்து துவைத்து விடுவேன்' எனக் கொந்தளித்தார். டிரைவரின் நிலையோ பரிதாபமாக இருந்தது. அவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அநத பெண் சமாதானமாகவில்லை. நானும் சமாதானப்படுத்திப் பார்த்தேன். 'இருவருக்கும் மிஸ் கம்யூனிகேசனால்தான் பிரச்னை. போதும் விடுங்கள்' என்றேன். அவர் காதில் ஏற்றிக் கொள்ளவேயில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அந்த பெண், 'போலீஸ் நிலையத்துக்கு வண்டியை விடு, போலீசில் புகார் அளிக்க வேண்டும்' என்றார். மேலும் என்னிடமும்' நீங்களும் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றார் .நான் உடனடியாக மறுத்தேன். தொடர்ந்து என்னையும் திட்டத் தொடங்கினார்.

டிரைவர் பரிதாபமாக என்னை நோக்கினார். பின்னர், 'என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் வேறு ஓரு காரை பிடித்து வீட்டுக்குச் செல்லுங்கள்' என்று என்னிடம் கூறினார். இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதத்தைப் பார்த்து 20க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர். இந்த சமூகம் பெண்ணுக்கு ஆதரவாகத்தானே பேசும். அந்த பெண்ணுக்கு ஆதரவாக டிரைவரை அனைவரும் திட்டினர். இதற்கிடையே இருவருமே அவசர போலீசை கூப்பிட, அந்த இடத்துக்கு இரு பெண் போலீசும் வந்தனர். பெண் போலீசாரிடம், டிரைவரின் நிலையை நான் விளக்கினேன் டிரைவர் பக்கம் தவறு இல்லை எனக் கூறினேன். 'போலீஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், என்னைக் கூப்பிடுங்கள் நான் டிரைவருக்கு ஆதரவாக வருவேன்' என அவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் எனது செல்போன் எண்ணையும் கொடுத்தேன்.

மேலும் டிரைவருக்கு ஆதரவாக வாக்குமூலம் தரவும் நான் தயாராக இருப்பதாக தெரிவித்தேன். அப்போது, என்னிடம் வந்த பெண் போலீஸ், ''மேடம் நீங்களும் தயவு செய்து போலீஸ் நிலையம் வாருங்கள் அதுதான் நல்லது ''என எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்பு வரை நான் போலீஸ் நிலையம் சென்றது இல்லை. அப்போதே இரவு மணி 9 மணியாகி விட்டது. ஆனாலும், டாக்ஸி டிரைவரை அப்படியே விட்டு விட்டு போக என் மனம் இடம் கொடுக்கவில்லை. நானும் போலீஸ் நிலையத்துக்கு அவர்களுடன் சென்றேன்.

போலீஸ் நிலையத்தில், அந்த பெண் , டிரைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடித்தார். நான் போலீசாரிடம் உண்மையை விளக்கினேன். நிலைமையை புரிந்து கொண்ட போலீசாருக்கு டிரைவர் மீது இரக்கம் பிறந்தது. அந்த பெண்ணை போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேற சொன்னார்கள். இரவு 11 மணி வரை அவர் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறவில்லை. 'டிரைவர் தனது காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டால்தான், போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே போவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டு அங்கேயே இருந்தார்.

பெண்ணின் நடவடிக்கையால் கோபமடைந்த போலீசார், டிரைவரை தனி அறைக்கு கொண்டு சென்றனர். தனி அறையில் வைத்து டிரைவரை அடிப்பது போல வெளியே சத்தம் கேட்டது. உடனே நான் அங்கே ஓடினேன். அங்கே சென்று பார்த்த போதுதான் போலீசாரின் செயல் என் மனதை நெகிழ வைத்துவிட்டது. போலீசார் வெறும் தரையில் போட்டு பெலட்டை அடித்துக் கொண்டிருந்தனர், டிரைவரோ சிரித்தபடி வலியால் துடிப்பது போல கத்திக் கொண்டிருந்தார்.

அறைககுள் சென்ற என்னிடம், டிரைவருக்கு ஆதரவாக வந்ததற்காக போலீசார் நன்றி தெரிவித்தனர். 'நீங்கள் உண்மையை விளக்கவில்லை என்றால் கேஸ் போட்டிருப்போம். அவரது வாழ்க்கை பாழாகிப் போயிருக்கும்' என்றனர். போலீசார் டிரைவரை அடித்ததாக நினைத்து சமாதானமடைந்த அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியேறினார். நாங்கள் இருவரும் போலீசாருக்கு நன்றி தெரிவித்து விட்டு வீட்டுக்கு புறப்பட்டோம். நான் வீடு போய் சேர்ந்த பிறகு அந்த டிரைவருக்கு போன் செய்தேன். அவரது குரலில் ஒரு பாதுகாப்பு தெரிந்தது.

சூழலை புரிந்து கொண்ட மும்பை போலீசுக்கு நன்றி!

பொலிவான கலைவாணர் அரங்கம் தெரிந்திருக்கும்... பாழடைந்த கலைவாணரின் இல்லம் பற்றி தெரியுமா?


நகைச்சுவையில் புரட்சியை ஏற்படுத்தியவர் என்.எஸ்.கிருஷ்ணன். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை பாடல்களாகவும் அமைக்க முடியும் என்பதை நிரூபித்தவர். வெறும் நகைச்சுவையாக மட்டும் இல்லாமல், தனது பாடல்களால், பேச்சால் மக்களின் சிந்தனையைத் தூண்டியவர். இன்றும் மக்களின் மனதில் நீங்காமல் வாழும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று.

என்.எஸ்.கே. என அனைவராலும் பாசமுடன் அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்துக்கு ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டு, மிக அழகாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் என்.எஸ்.கே. வாழ்ந்த இல்லம் எப்படி இருக்கிறது என்பது தெரியுமா? நாகர்கோவிலில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் அந்த வீடு, இப்போது பராமரிப்பின்றி, பாழடைந்து கிடக்கிறது.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

முதல் கான்கிரீட் வீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் எழுப்பப்பட்ட முதல் கான்கிரீட் வீடு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் "மதுர பவனம்" தான். இந்திய விடுதலைக்கு முன் அதாவது 1941ம் ஆண்டு இந்த வீடு கட்டப்பட்டது. ஒரு காலத்தில் ஒட்டுமொத்த குமரி மாவட்டமும் ஆச்சரியத்தோடு வியந்து பார்த்த வீடு இது. மொசைக் தரை போட்ட அந்த வீட்டை பார்க்க மாட்டு வண்டி கட்டி வந்தவர்கள் கூட உண்டு. இப்போதும் கம்பீரம் குறையாமல், அதே நேரத்தில் பராமரிப்பு இன்றி நிற்கிறது நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள மதுர பவனம்.

நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தன் பெயரைப்போலவே வாழ்க்கையையும், 49 ஆண்டுக்குள் சுருக்கிக் கொண்டார். கலைவாணருக்கு இரண்டு மனைவிகள் ஒருவருக்கு காவிரி ஆற்றங்கரையிலும்,இன்னொருவருக்கு குமரிமாவட்டம் பழையாற்றங்கரை ஒழுகினசேரியிலும் வீடு கட்டினார் கலைவாணர்.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பொக்கிஷங்களை பாதுகாக்கும் வீடு

அப்போது குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. அப்போது சித்திரை திருநாள் மகாராஜா மன்னராக இருந்தார். சமஸ்தானத்தில் உள்ள சில பகுதிகள் புயலால் பாதிக்கப்பட்டபோது நாடகம் நடித்து அந்த பணத்தை சமஸ்தானத்துக்கு கொடுத்தார் என்.எஸ்.கே. நாடகத்தில் கலைவாணரின் நடிப்பும், அத்துடன் அவரது சமூக சேவையும் பிடித்துப்போக அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றும் இந்த வீட்டில் அந்த படம் பொக்கிஷமாய் உள்ளது. தியாகராஜ பாகவதர்கூட இந்த வீட்டில் வந்து பாடல் பாடியுள்ளார் என்கிறார்கள். வீட்டின் மொட்டை மாடியில் அழகாக அமைக்கப்பட்ட கோபுர கூண்டிலில் கலைவாணர் அமர்ந்திருப்பாராம்.

ஒருமுறை, என்.எஸ்.கிருஷ்ணனை வீட்டில் ஒரு நிறைமாத கர்ப்பிணி ஒருவர் சந்தித்து தனது வறுமையைச் சொல்லி உதவி கேட்டுள்ளார். அந்தப் பெண் மீது இரக்கப்பட்டு என்.எஸ்.கிருஷ்ணன் 100 ரூபாய் வழங்கினார். அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. நன்றி தெரிவித்துவிட்டு சிறிது தூரம் சென்ற அந்தப் பெண்ணை என்.எஸ்.கிருஷ்ணன் திரும்ப அழைத்தார்.வந்த பெண்ணிடம் மீண்டும் ஒரு 100 ரூபாய் கொடுத்தார்.

புரியாமல் விழித்த பெண்ணிடம் என்.எஸ்.கே. சிரித்தபடியே சொன்னார். ‘‘முதலில் கொடுத்த 100 ரூபாய் உன் மேல் இரக்கப்பட்டு கொடுத்தது. இப்போது கொடுத்தது உன்னுடைய நடிப்புத் திறமைக்காக. தயவு செய்து உன் வயிற்றில் கட்டியிருக்கும் துணியை எடுத்து விடம்மா..’’ என்றாராம். தன்னை ஏமாற்றி பணம் வாங்கிய பெண்ணிடம் கூட கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணின் தவறை தனக்கே உரிய நகைச்சுவையோடு சுட்டிக்காட்டியிருக்கிறார் கலைவாணர்.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

கலைவாணருக்கு வந்த 'சோதனை காலம்'

அள்ளி அள்ளி கொடுத்த கலைவாணருக்கு மிகப்பெரிய சோதனைக் காலம் வந்தது.லட்சுமிகாந்தன் கொலைச் செய்யப்பட்ட போது, லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தது. தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீராமுலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளாக்கியது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந் சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமயத்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர்ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இந்த முறை இப்போது நடைமுறையில் இல்லை.

வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதிக்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

மீண்டு வந்த என்.எஸ்.கே.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாகவதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இரண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந்திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்டனில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வேண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.

பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப்படவில்லை என்று கூறி, வழக்கை மறுவிசாரணை செய்யுமாறு கீழ் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபுதின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின்னாளில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிரபல வழக்கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.



மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

பாழடைந்து நிற்கும் 'மதுர பவனம்'

இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண்டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கிலிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பாதித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ம் ஆண்டு தன்னுடைய 49 வயதில் கலைவாணர் காலமானார்.

கலைவாணர் .என்.எஸ். கிருஷ்ணன் அருமை பெருமையோடு ஆசையாகக் கட்டிய "மதுரபவனம்" நாகர்கோவில் ஏலத்திற்க்கு வந்த செய்தி கேள்வி பட்டதும் ஏராளமான போட்டி ஏற்பட்டது. செய்தி எம்.ஜி.ஆர் காதுக்கு எட்டியதும் துடிதுடித்துப் போய் கலைவாணர் எப்படி எவ்வாறு வாழ்ந்தவர் அள்ளிக் கொடுத்த வள்ளல் அவர் வீடு ஏலத்திற்க்கு வருவதா? அப்படி வந்தால் அவரது குடும்பத்தினர் எல்லோரும் வீட்டை வீட்டு வெளியேறி நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களே என பதறினார். ஆர்.எம்.வீரப்பன் மூலம் பணம் கட்டி வீட்டை மீட்டு அதன் குடும்பத்தாரிடமே ஒப்படைத்தார்.

தமிழகத்தின் கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் பிறந்து நாடறிந்த திரைப்பட கலைஞர், சிரிப்பு நடிகர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் இது. இன்றும் அப்பகுதிவாசிகளின் அடையாள சின்னமாய் மாறி நிற்கும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீட்டில் இப்போது அவரது வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.


படங்கள் : ரா.ராம்குமார்

“இவரிடமிருந்துதான் இரக்கக் குணத்தைக் கற்றார் எம்.ஜி.ஆர்!''- என். எஸ்.கே பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

- எஸ்.கிருபாகரன்

50-களின் மத்தியில் சென்னையின் மத்தியில் உள்ள அந்த பிரபல மண்டபம் பிரபலஸ்தர்களால் நிரம்பி வழிந்தது. விழா நாயகனை விழா எடுத்த பிரபலமும் விழாவுக்கு வந்த பிரபலங்களும் மேடையில் பாராட்டித்தள்ளினர். பணமுடிப்பும் பாராட்டும் குறைவின்றி கொடுக்கப்பட்டது விழாவின் நாயகனுக்கு. நடந்து முடிந்த அந்த விழா குறித்து திரையுலகமே பல மாதங்கள் ஆச்சர்யமாக பேசிக்கொண்டனர். காரணம் விழா நாயகன் சாதாரண ஒரு டிரைவர். தனக்கு பல ஆண்டுகள் காரோட்டிய டிரைவரை கவுரவிக்க அவருக்குப் பிரபலங்களைக் கூட்டி விழா எடுத்த அந்த மனிதநேயர் வேறு யாருமல்ல; கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை என்.எஸ்கிருஷ்ணன்.

நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன், சாதாரண நாடக நடிகராக தன் வாழ்க்கையைத் தொடங்கி திரையுலகில் ஈடில்லாத நகைச்சுவை மேதையாகத் திகழ்ந்தவர். திரையுலகில் தான் சம்பாதித்ததை வாரி வழங்கி மகிழ்ச்சியடைந்தவர் கலைவாணர்



பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம் ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள் புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும் இடம்பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா முதற்படம். புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை. ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும் அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச் செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப் போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி கேட்டு.

இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம் இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார். ஆனால் கலைவாணரின் செயல் வெறுப்போடு கொஞ்சம் அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது. 'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை. அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது. படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன் கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன். ”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க... ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக் கூடாது. வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத் தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது. அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார். என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்துபோனார் மதுரம். புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர் இருவரும்.

சாதாரண நடிகராக மட்டுமின்றி புகழின் உச்சிக்கு சென்றபின்னரும் கலைவாணரின் இரக்க குணம் சற்றும் குறையவில்லை. வந்தவருக்கெல்லாம் வாரி வழங்கினார். திரையுலகில் வள்ளல்குணத்துக்கு உதாரணமாக ஒருவரை காட்டச்சொன்னால் சிறுகுழந்தையும் எம்.ஜி.ஆர் என்ற மனிதரை அடையாளம் காட்டும். எம்.ஜி.ஆர் என்ற மனிதநேயரின் வள்ளல்குணத்துக்கு வழிகாட்டி கலைவாணர்தான். கலைவாணரிடமிருந்துதான்தான் பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டேன் என பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பெருமிதமாகக் குறிப்பிட்டதுண்டு.



1966-ம் ஆண்டு ஆனந்த விகடன், தீபாவளி மலருக்காக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குறித்து எம்.ஜி.ஆர் எழுதியவற்றை பார்ப்போம். “புகழ் மிகுதியின் அடித்தளத்தில் என்.எஸ்.கிருஷ்ணனை அவரது அறிவும் பண்புமே நேர் வழியில் இயக்கிக்கொண்டிருந்தன. வந்து குவிகின்ற புகழ் வராமல் போனாலும் ஏமாற்றத்தால் துன்பப்பட்டுத் தவிக்கின்ற பலவீனமான நிலைமை அவரிடம் இருக்கவே இல்லை. மகாத்மா காந்தியை உண்மையிலேயே மதித்தவர் அவர். கதரும் கட்டுவார். ஆனால் காங்கிரஸ்காரர் அல்ல. அறிஞர் அண்ணா அவர்களைத் தலைசிறந்த தீர்க்க தரிசியாக, மக்கள் நலத்தின் வழி காட்டியாகப் போற்றியவர் அவர்; ஆனால் தி.மு.கழக உறுப்பினர் அல்ல. பெரியார் ராமசாமி நாயக்கர் அவர்களை அரசியல் வழிகாட்டியாகக் கருதினார். ஆனால் திராவிடக் கழகத்தில் அங்கத்தினர் அல்ல.மக்களால் போற்றப்பட்ட அவர், மக்களிடம் காணும் குறைகளை எடுத்துக் காட்டத் தயங்குவதில்லை. தங்கள் குறைகளை இடித்துக் கூறுகிறாரே என்று யாரும் கலைவாணரைக் குறை கூறுவதில்லை. அதற்கு மாறாக போற்றவே செய்வார்கள். சக நடிகர்களிடம் கூட குறைகண்டால் எடுத்துக் கூறித் திருத்துவார். ஆனால் அவர்களால் போற்றி, மாலைகளே சூட்டப்படுவார்.

இப்படி எல்லோரும் போற்றும் ஓர் அதிசயச் சக்தியாகத் திகழ்ந்த அவர் ஒரு புரியாத புதிர் என்று நான் சொல்லும்போது, உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். கலைவாணரைப் பற்றி எல்லாம் புரிந்ததுதானே, புரியாத ஒரு புதிராக அவர் இருந்தது எப்படி என்று கேட்கவும் செய்யலாம். கலைவாணருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்து வைத்துக்கொண்டு பார்த்தால்தான் நான் சொல்லும் உண்மையை விளக்க முடியும்.

இங்கே சில அனுபவங்களை, எக்காலத்திலும் மறக்க முடியாத சில நிகழ்ச்சிகளை உங்கள் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.



'மாய மச்சேந்திரா' படத்தில் நடிப்பதற்காக நாங்கள் எல்லோரும் கல்கத்தாவில் தங்கியிருந்தோம்.டைரக்டர் ராஜா சந்திரசேகர் அவர்கள்தான், படக் கம்பெனிச் சொந்தக்காரரான பி.எல்.கேம்கா அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் பாலமாக இருந்தார். பணம் வேண்டுமென்றாலும், வேறு எது வேண்டும் என்றாலும் அவர் மூலமாகத் தான் நாங்கள் பெறுவோம். பாடல்களை கிராமபோன் ரெக்கார்டிங்கில் பதிவு செய்யத் தீர்மானிக்கப்பட்டது. கலைவாணர், பின்னணி இசைக் கலைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள், அந்தப் பாட்டுப்பதிவுக்காக ஏதும் ஒரு தொகை தங்களுக்குத் தரப்படவேண்டும் என்று கேட்டார்கள். முதலாளி மறுத்துவிட்டார் என்று டைரக்டர் கூறினார்.
பாடல் பதிவுக்கு எந்த நாள் குறிக்கப்பட்டதோ அதற்கு முதல் நாள் வரை, பேச்சு நடந்தது. அதற்குப் பயனில்லாமல் போகவே, மறுநாள் அந்தப் பணியில் கலந்துக் கொள்ள முடியாது என்று கூறி விட்டார்கள்.

மறுநாள் விடியற் காலையிலேயே எல்லோரும் எழுந்தார்கள். எழுந்தார்கள் அல்ல; எழுப்பப்பட்டார்கள். வேறு யாராலும் அல்ல, கலைவாணரால்தான். என்ன? என்று கேட்டார்கள். இன்னைக்கு ரெக்கார்டிங் இல்லே? போக வேண்டாமோ? என்றார் கலைவாணர். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. நீங்களும் தானே சம்மதித்தீர்கள்! பணம் வாங்காமல் யாருமே வேலை செய்ய மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னீர்களே! ஏன் இப்போது போகச் சொல்லுகிறீர்கள்? பணம்தான் தரவில்லையே! போனால் அவமானம் இல்லையா? டைரக்டர் கேலிபண்ண மாட்டாரா? என்று எல்லோரும் கலைவாணரைப் பார்த்துக் கேட்டார்கள். அப்போது கலைவாணர் சொன்ன பதில் இதுதான்;



நம்மை யார் கேலி பண்ணப் போறாங்க! ராஜா சந்திரசேகர்தானே! அவர் நம்ம ஆளுதானே! ஆனால் முதலாளி யாரு தெரியுமா? கல்கத்தாக்காரர்! நம்மைப் பற்றி அவருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டிலிருந்து வரும் கலைஞர்கள், நடிகர்கள் அவர்களுக்கு ஒரு யூனிடி கிடையாது; ஒற்றுமை கிடையாது; கட்டுப்பாடு கிடையாது. தமிழ்நாட்டு ஆளுங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்க என்று எண்ணி இழிவாகப் பேசினா, அந்தக் கறையை எப்படித் துடைக்க முடியும்? முதலில் நாம் செய்ய வேண்டியதைச் செய்துவிடுவோம், அப்புறம் போராடி நம்ம உரிமையைக் கேட்டுக் கொள்வோம். அதன் பிறகு எல்லோரும் பாடல் பதிவில் கலந்துக் கொண்டார்கள். நானும் கூடப் போனேன். நான் பாடப் போனேனா என்று கேட்டு விடாதீர்கள்!

ராஜா சந்திரசேகர் கொஞ்சம் தாமதமாக வந்தார். கலைவாணரைப் பார்த்தவுடனே அவருடைய கண்கள் தெரிவித்த நன்றி இருக்கிறதே, அதை எந்த வார்த்தையாலும் விவரிக்க முடியாது. எது எப்படி இருந்தாலும் பாட்டுப் பதிவில் கலந்து கொள்ளமுடியாது என்று சொல்லி, கலைவாணருடைய கருத்துப்படி போய்க் கலந்து கொண்டார்களே, அவர்களுக்கும், எனக்கும் கலைவாணர் ஒரு புரியாத புதிராகத் தோன்றினார். ஏன் முதலில் போராட்டத்தில் கலந்து கொண்டார்! மற்றவரையும் போராடும்படி சொன்னாரே! ஆனால் பின்பு ஏன் திடீரென்று பாடல் பதிவில் கலந்து கொள்ள வற்புறுத்தினார்?



அன்று யாருக்கமே புரியாத ஒரு புதிர்தான் அது. சிலர் இப்படியும் சொன்னார்கள் மறைவாக; கலைவாணர், தான் நல்ல பேர்வாங்கிக் கொள்வதற்காக நம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டார் என்று. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு, அந்தப் பாடல் பதிவில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதோ ஒரு பணம் வந்து சேர்ந்தபிறகுதான், அவர் தனக்காக அப்படிச் செய்யவில்லை; மற்றவர்களுக்காகவும் தான் செய்தார் என்பதைப் புரிந்துக் கொண்டார்கள். இவர் தான் கலைவாணர்.
நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம். ஆனால் ஒரு செயல் நிகழும்போது அவரைப் பற்றி ஒரு புதிராகத்தான் நினைப்பார்கள். முடிவுக்குப் பிறகுதான் உண்மை விளங்கும்.

கலைவாணர் தனக்காகக் கண்ணீர் விட்டதாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் சொல்ல முடியாது. அவர் அனுபவிக்காத உலக வாழ்க்கை கிடையாது. அவர் வைரம் பூண்டிருந்தார். ஆனால் அது நிரந்தரமானது என்று நினைத்ததில்லை. அதுதான் தன்னை உயர்த்துகிறது என்று நம்பியதும் இல்லை. யாரையோ திருப்திப்படுத்தவே அவர் அதை அணிந்தார்.கொள்கையைச் சொல்வதிலும், மற்றவர்களுக்குக் கொடுப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் கடலினும் பெரியது; மலையினும் உயர்ந்தது. அவர் தனக்காக எதையும் செய்ய வில்லை; பிறருக்காகவே செய்தார். அவர் முன்னேறியது அவரது உழைப்பால் அவருக்கு இருந்த நம்பிக்கையால். பிறருடைய சக்தியை வைத்துக்கொண்டோ பாதுகாப்பிலோ முன்னேறவில்லை.



அவருக்குப் பல கலைகளும் தெரியும். பாட்டு எழுதித் தருபவர் பாட்டை எழுதித் தராவிட்டால் அவரே பாட்டெழுதி விடுவார்.ஆனால் பாடல் எழுதுபவருக்குச் செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் இருந்து விடமாட்டார். இதுபோல் அவரிடம் வந்து சேர்வோர் அனைவருமே அவருடைய ஆற்றலைச் சிறிது நேரத்துக்குள் தெரிந்து கொண்டு விடுவார்கள். ஆனால் அந்த அடித்தளத்தில் எத்தகைய புரட்சிப் பண்பு படிந்திருக்கிறது என்பதை நடக்க நடக்கத்தான் புரிந்துக் கொள்வார்கள்.

கலைவாணர் அவருடைய கடைசி கால கட்டத்தில் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் இருந்தாரே, அப்போது ஒரு நிகழ்ச்சி. அவரைக் காண அங்கு சென்றவர்களில் குறிப்பிட்ட பலரிடமும் ராமச்சந்திரனைப் பார்க்கணும்; அவனை வரச்சொல்லுங்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். மதுரம் அம்மையார் அவர்களும் போன் வழியாக எனக்குத் தகவல் கொடுத்தார். யாரும் அவரைப் பார்த்துத் தொந்தரவு செய்யக் கூடாது என்று டாக்டர் அட்வைஸ் செய்திருப்பதாக அறிந்ததால், நான் நேரில் போய்ச் சந்திக்கத் தாமதித்தேன். ஆனால் உடனடியாக நேரில் போய்க் கலைவாணரைப் பார்க்கவில்லையே தவிர, அவருடைய நலத்துக்கான ஆர்வமும் எல்லாவிதத் தொடர்பும் கொண்டிருந்தேன். பிறகு இரண்டொரு நாட்களிலேயே நேரில் பார்க்கச் சென்றேன். அவர் என்னைப் பார்த்ததும், ராமச்சந்திரா, நான் எதுக்காகக் கூப்பிட்டனுப்பினேன் தெரியுமா? பல பேர் வராங்க. வந்து பார்த்துட்டுப்போறாங்க. பத்திரிகைக்காரங்க, அவர் வந்து பார்த்தார். இவர் போய்ப் பார்த்தார் என்று செய்தி வெளியிடறாங்க. நீ மட்டும் வந்து பார்த்ததாகச் செய்தி வர்றதில்லை. அதனால் நீ வந்து பார்க்கலைங்கற செய்திதான் வெளியே தெரியும். எனக்காக நீ செய்து வருகிற காரியங்கள் எல்லாம் யாருக்கும் தெரியாது. நீ வரலைன்னு மக்கள் தவறாக நினைப்பாங்க. அந்தக் கெட்ட பேர் உனக்கு வேண்டாம்னுதான் உன்னை வரச்சொன்னேன் என்றார்.

என்னை வற்புறுத்தி அழைத்ததன் காரணம் இதுதான் என்பது எனக்கு மட்டுமல்ல; யாருக்குத்தான் இந்த வகையில் புரிந்திருக்க முடியும்? அவர் தனக்காவா என்னை அழைத்தார்? எனக்காக அல்லவா என்னை அழைத்திருக்கிறார்!
எப்பேர்ப்பட்ட ஒரு மாபெரும் பண்பு அவரது அந்த அழைப்பில் வெளிப்பட்டது!



அப்படிப் புரியாத புதிராக இருந்த காரணத்தால்தான் என்றென்றும், வரலாறு உள்ள வரைக்கும் நிலைத்து விளங்கும் தகுதி அவரிடம் நிறைந்திருக்க முடிந்தது. இந்த நாட்டில் எத்தனை எத்தனையோ உள்ளங்களில் அவர் நினைவு குடி கொண்டிருப்பதற்குக் காரணம் அந்தப் பண்பு மிக்க செயல்கள்தாம். கலைவாணரின் மறைவின் போது துக்கம் தெரிவித்தவர்களில் கட்சிபேதம், மொழி பேதம், இனபேதம் இருக்கவில்லையே! எல்லோரும் தங்களைச் சேர்ந்த ஒரு நல்லவர், உத்தமர், கலைச்செல்வர், அறிவாளி மறைந்துவிட்டதாக அல்லவா துயரம் தெரிவித்தார்கள்!

அவர் மறைந்தாலும், அவர் நினைவு மறையாததற்குக் காரணம், அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட வாழ்க்கைப் பண்பு அல்லவா? அந்தப் பண்பின் செயல்களை, உள்ளபடி இன்னும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை என்று சொல்வதுதான் பொருத்தமாகும்.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன?  மனம் திறந்தார் பதிவாளர் மோகன் 


கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 80 உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் பல்கலைக்கழக பதிவாளர் பி.எஸ்.மோகன் ராஜினாமா செய்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் 88 உதவி பேராசிரியர், துணை பேராசிரியர், பேராசிரியர் ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 80 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கணபதிக்கும், பதிவாளர் பொறுப்பு பி.எஸ்.மோகனுக்கும் நேரிடையாகவே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவு பதிவாளர் மோகன், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து பி.எஸ்.மோகனிடம் பேசினோம். "நான், இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். வேதியியல் துறையின் தலைவராகவும் உள்ளேன். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பதிவாளராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டேன். நான் பணியில் இருந்த சமயத்தில் பல்கலைக்கழகத்தில் 88 உதவி பேராசிரியர்கள் நியமனம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கடந்த 19ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்த துணைவேந்தர் கணபதி என்னிடம் தெரிவித்தார். அதன்படி சிண்டிகேட் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். இந்த சமயத்தில் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்திலிருந்து கடந்த 18ம் தேதி ஒரு ஃபேக்ஸ் வந்தது. அதில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசிடமிருந்து வந்த கடிதத்தை துணை வேந்தர் அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். இந்த சமயத்தில் சிண்டிகேட் கூட்டத்தை கடந்த 22ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யுமாறு துணைவேந்தர் கணபதி, எனக்கு வாய்மொழியாக தெரிவித்தார். அதன்படி அன்றைய தினத்தில் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அன்றைய தினமே 40க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் நியமன உத்தரவை பெற்றுக் கொண்டு பணியில் சேர்ந்தனர். அடுத்தடுத்த நாட்களில் மற்றவர்களுக்கு நியமன உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த தகவல் உயர்கல்வித்துறை செயலர் அலுவலகத்துக்கு தெரியவந்ததும் அங்கிருந்து கூட்டத்தை நடத்தியதற்கான விளக்கத்தை கேட்டனர். அப்போதுதான், நான், துணைவேந்தருக்கு அனுப்பிய கடிதம் தாமதப்படுத்திய விவரம் எனக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக எனக்கும், துணைவேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட, என்னை அவர் பதவியை ராஜினாமா செய்யுமாறு தெரிவித்தார். உடனே நானும் என்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தேன். அப்போது எனக்கு கொடுக்கப்பட்ட 'ரிலிவிங்' ஆர்டரில், சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய அரசு அனுப்பியதை தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தது. எந்த தவறும் செய்யாத என் மீது இதுபோன்ற குற்றசாட்டுக்கள் கூறப்பட்டதால் அந்த 'ரிலிவிங்' ஆர்டரை நான் பெறவில்லை. என் தரப்பு நியாயத்தை சம்பந்தப்பட்ட உயர் கல்வித்துறை உயரதிகாரிகளிடம் விளக்கமாக கொடுக்க உள்ளேன்"என்றார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து துணை வேந்தர் கணபதியிடம் கேட்டோம். "சிண்டிகேட் கூட்டம் நடத்தக் கூடாது என்று உயர்கல்வித்துறை அனுப்பிய அந்த கடிதத்தை கூட்டம் முடிந்த பிறகு எனக்கு பதிவாளர் அலுவலகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டம் நடக்கும் போது கூட அதை நடத்தக்கூடாது என்று அரசு அனுப்பிய தகவலை என்னிடம் பதிவாளர் பொறுப்பிலிருக்கும் மோகன் சொல்லவில்லை. மேலும், யுஜிசி விதிப்படியே 80 உதவி பேராசிரியர்கள் தகுதி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்றவரிடம், பணம் வாங்கிக் கொண்டு உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வருகிறதே என்று கேட்டதற்கு, மெரிட் அடிப்படையிலேயே பணிநியமனம் நடந்தது. இந்த பதவிக்கு போட்டியிட்டு பணி கிடைக்காதவர்கள் தேவையில்லாமல் வதந்தியை பரப்புகிறார்கள்" என்றார்.

எஸ்.மகேஷ்


Return to frontpage

பார்வை: கடுகு டப்பா பணமும் கறுப்புப் பணமா?

பிருந்தா சீனிவாசன்

இன்னும் முப்பது நாட்களில் கறுப்புப் பணக் கறையில்லாமல் புத்தம் புதிதாகப் பிறக்கப்போகும் இந்தியாவைப் பார்ப்பதற்காகப் பலரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். இன்னும் சில வாரங்களில் கறுப்புப் பணம் முற்றாக ஒழிந்து, அதன் காரணமாகத் தங்கள் வங்கிக் கணக்கில் வந்து குவியப்போகிற லட்சங்கள் பற்றிய கனவிலும் சிலர் மிதந்துகொண்டிருக்கிறார்கள்.

“கால் கடுக்க ஏடிஎம் வாசலில் நின்றால் என்ன, நம் நாட்டு எல்லையைக் காக்கும் வீரர்களை நினைத்துப் பார்த்தால், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்று பலர் தேசப்பற்றுடன் உரையாற்றுவதையும் பார்க்க முடிகிறது. இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகின்றன சமூக வலைதளங்களில் உலாவரும் அவல நகைச்சுவையும் ‘மீம்’ சித்தரிப்புகளும். அதுவும் நகைச்சுவை என்ற பெயரில் இல்லத்தரசிகளை மையமாக வைத்து வெளியாகிற ஒவ்வொன்றும் அபத்தத்தின் உச்சம்.

பெண்கள் இந்தியர்கள் இல்லையா?

“எங்கள் வீட்டு கடுகு டப்பாவில் ஒளித்துவைத்திருந்த கறுப்புப் பணம் வெளிவந்துவிட்டது” என்று சொல்கிற ஆண்கள், அவைதான் குடும்பத்தைத் தொய்வில்லாமல் நடத்த உதவிய அச்சாணி என்று உணர்ந்திருக்க நியாயமில்லை. “கறுப்புப் பண ஒழிப்பு விவகாரத்தில் கார்ப்பரேட் ஆட்கள் சிக்குகிறார்களோ இல்லையோ, எங்கள் வீட்டம்மா பெரும்தொகையுடன் கையும் களவுமாகச் சிக்கிவிட்டார்” என்று பெருமிதத்துடன் நிலைத்தகவல் பதியும் அல்லது அதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆண்கள், தங்கள் வீட்டுப் பெண்களிடம் பணம் இருப்பதே மாபெரும் குற்றம் என்று சொல்லவருகிறார்களா?

நாட்டைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மதிப்பு இல்லாத நோட்டுகளாக அறிவித்ததெல்லாம் சரிதான். அதன் ஒரு அங்கமாக நாடு முழுவதும் பணத்தைக் கையாளுவது குறைந்து, பணஅட்டைகள் மூலமே பணப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்று தொலைநோக்குடன் பேசுவதும்கூடப் பரவாயில்லை. ஆனால் வங்கிக் கணக்கு, கடன் அட்டை, ஏடிஎம் மையம் என்று நவீன இந்தியாவின் எந்தவொரு அம்சத்தைப் பற்றியும் தெரியாமல், அப்படியே தெரிந்திருந்தாலும் அவற்றைக் கையாளும் சுதந்திரம் இல்லாமல் இருக்கும் லட்சக்கணக்கான பெண்களை இந்த அறிவிப்பு பாதிக்கக்கூடும் என்று அதிகாரத்தில் இருக்கும் எந்த ஆணுக்கும் தெரியாதா? பணம் என்பது ஆண்கள் மட்டுமே கையாளக்கூடிய பொருள் என்ற நினைப்பின் வெளிப்பாடுதானே, பெண்கள் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமல் தற்போது வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பு?

எது கறுப்புப் பணம்?

ஒவ்வொரு வீட்டிலும் அம்மாவோ, மனைவியோ, மகளோ மற்றவர்களுக்குத் தெரியாமல் வைத்திருக்கும் பணம், குடும்ப நலனுக்கான சேமிப்பு என்பதைப் பலரும் ஏற்க மறுக்கின்றனர். “அப்படியென்ன புருஷனுக்கும் புள்ளைக்கும் தெரியாம சேர்த்துவைக்க வேண்டியிருக்கு?” என்று கொதித்தெழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் இப்படிச் சேர்த்துவைக்கும் பணம், அவர்களுடைய தனிப்பட்ட செலவுகளுக்கல்ல. குழந்தைகளின் கல்வி, திருமணம், நகை, அத்தியாவசியப் பொருள் என்று ஏதோவொரு முக்கியமான செலவுக்குப் பணம் இல்லாமல் கணவன் கையைப் பிசைந்துகொண்டு நிற்கும்போது கைகொடுத்து உதவும் பணம். அந்தப் பணம், வீட்டுக் கணக்கில்

இருந்து திருடப்பட்டதல்ல. வீட்டுச் செலவுக்காகக் கணவன் கொடுக்கும் பணத்தில், செலவைக் குறைத்து மிச்சப்படுத்தியது. அப்படி மிச்சப்படுத்திய பணத்தைச் சிறுகச் சிறுக சீட்டு கட்டிப் பெரிதாக்கியது. தன்னுடைய தனிப்பட்ட செலவுகளைக் குறைத்துக்கொண்டு குடும்பத்துக்கென ஒதுக்கிவைத்தது. இப்படிச் சேமித்த பணத்தைத்தான் ‘கறுப்புப் பணம்’ என்று சொல்லி நகைக்கிறார்கள் பெரும்பாலான ஆண்கள்.

பெண்கள் ஏன் சேமிக்கிறார்கள்?

பெண்கள் தங்கள் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை ஏன் பதுக்கி (அப்படிச் சொல்ல வேண்டும் என்றுதானே பலரும் விரும்புகிறார்கள்) வைக்கிறார்கள்? அதற்குக் காரணமும் ஆண்கள்தான். வாங்குகிற சம்பளத்தை முழுதாக வீட்டில் ஒப்படைக்காத கணவர்களால் நிறைந்தது நம் நாடு. சம்பளப் பணத்தை மனைவியிடம் கொடுக்கிற கனவான்களும் பாதியை எடுத்துக்கொண்டு, வீட்டுச் செலவுக்கெனக் கொஞ்சமாகக் கிள்ளித்தான் தருவார்கள். சில ஆண்கள் தங்கள் வருமானத்தின் பெரும்பகுதியை அரசாங்கத்தின் வருமானத்தைப் பெருக்கும் உயரிய சிந்தனையோடு டாஸ்மாக் கடைகளில் செலவழித்துவிடுவார்கள். அரசாங்கத்துக்குப் போக மீதமிருக்கும் பணம்தான் வீடு வந்து சேரும். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டுதான் அந்த வீட்டுக் குழந்தைகள் பிழைத்திருப்பதும், படித்து முன்னேறுவதும்.

பறிபோன பணம்

நகரங்களில் ஆண், பெண் இருவரும் வேலைக்குப் போகிற வீடுகளில் பெண்களின் சம்பளப் பணத்தைக் கையாள்வது பெரும்பாலும் அந்த வீட்டு ஆண்தான். பெண்ணின் கையில் பணத்தையும் குடும்ப நிர்வாகத்தையும் ஒப்படைப்பது, தங்கள் ஆண்மைக்கு இழுக்கு என்றே பலரும் நினைக்கிறார்கள். சம்பளப் பணம் முழுவதையும் மனைவியிடம் ஒப்படைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், அங்கே தலைக்கு மேல் வெள்ளமாகக் கடன் தொகை ஓடும். அந்தக் கடனைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் மனைவியின் தலையில்தான் விழும். இத்தனை சிக்கல்களுக்கு நடுவேதான் ஒரு பெண் பணத்தைச் சேமிக்க வேண்டியிருக்கிறது.

அப்படிச் சேமித்த பணத்துக்கும், பணமதிப்பு நீக்கம் மூலம் கேடு வந்துவிட்டது. எல்லாப் பெண்களுக்கும் வங்கிக் கணக்கு இல்லை. அப்படியே இருந்தாலும் அதைக் கையாளுவது கணவன் என்கிற நிலையில், தாங்கள் சேமித்துவைத்திருந்த பணத்தைக் கணவனிடமோ, மகனிடமோ கொடுக்க வேண்டிய நிலை. அப்படிக் கொடுக்கப்பட்டு வங்கிக் கணக்கில் ஏறும் பணம், முழுதாக இவர்கள் கையை வந்து சேரும் சாத்தியம் குறைவு. அதுவும் பணத் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில், பெண்களின் சேமிப்பு வாராக் கடனாகித்தான் போகும்.

அல்லல்படும் பெண்கள்

பெண்களின் இந்தச் சேமிப்பு பல குடும்பங்களில் சிக்கல்களையும் மனத்தாங்கலையும் ஏற்படுத்திவிட்டது. “நான் வீட்டில் இருந்தபடியே துணிகளை விற்கிறேன். கடந்த மூன்று மாதங்களில் எட்டாயிரம் ரூபாயைச் சேர்த்துவைத்திருந்தேன். அதை என் கணவரிடம் கொடுத்து மாற்றித் தரச் சொன்னேன். எனக்கே தெரியாமல் இவ்வளவு பணம் வைத்திருந்தாயா என்று கோபித்துக்கொண்டார். என் மீது அவருக்கிருந்த நம்பிக்கை குறைந்துவிட்டதாம்.

என்கிட்டே சரியா பேசறதுகூட இல்லை” என்கிறார் சென்னையைச் சேர்ந்த இல்லத்தரசி கனி. இல்லத்தரசிகளின் நிலை இப்படியென்றால், முதியவர்கள் படும் பாடு இன்னும் மோசம். மகனுக்கும் மருமகளுக்கும் தெரியாமல் சேர்த்துவைந்திருந்த சொற்பப் பணத்தை மீண்டும் அவர்களிடமே கொடுக்க வேண்டிய நிர்பந்தம். “வயசான காலத்துல எல்லாத்துக்கும் அவங்க கைய எதிர்பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா? ஆத்திர அவசரத்துக்கு என் கையில கொஞ்சம் பணம் வேணாமா? இப்ப அதையும் பறிகொடுத்துட்டேன்” என்று சொல்லும் செந்தாமரையின் வார்த்தைகளில் இருக்கும் நிதர்சனம் பலருக்கும் புரிவதில்லை.

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுவரும் பெண்களை மிகக் கடுமையாக பாதித்திருக்கிறது. தினசரி கூலி, வாரக் கூலியை நம்பிக் குடும்பம் நடத்தும் அவர்கள், வங்கிக் கணக்குக்கும் கடன் அட்டைக்கும் எங்கே போவார்கள்? மக்களிடம் பணப்புழக்கம் குறைந்ததால் காய்கறி, பழம், பூ, பால், மீன் போன்றவற்றை விற்கும் பெண்களின் வருமானம் குறைந்துவிட்டது.

சிலர் வருமானமே இல்லாமல் அல்லல்படுகிறார்கள். “ஒரு நாளுக்கு ஐநூறு ரூபாய்க்கு பூ வித்துடு வேன். பூ வாங்கவே காசில்லை. மார்கெட்ல கடன் சொல்லி வாங்கிட்டு வந்தேன். என்கிட்ட ரெகுலரா வாங்குறவங்க எல்லாம் சில்லறை இல்லைன்னு சொல்லிட்டுப் போறாங்க. இன்னைக்கு பொழுதை எப்படி ஓட்டுறதோ” என்று புலம்பும் சாந்தி அக்காவைப் பற்றி நமக்கென்ன கவலை? இவர்களை எல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டுப் பிறக்கப் போகும் புதிய இந்தியாவை வரவேற்க இப்போதே தயாராவோம்.


வாசகர் வாசல்: பதுக்கல் நல்லது!



மத்திய அரசுக்கு,

மத்திய வர்க்கத்து இல்லத்தரசியின் மடல். கடந்த நவம்பர் 8-ம் தேதி இரவு எட்டு மணியளவில் தாங்கள் ஆடிய செல்லும் நோட்டு, செல்லாத நோட்டு மங்காத்தாவால் ஸ்தம்பித்துப்போன கூட்டத்தில் நானும் ஒருத்தி. காரணம் அப்போது என்னிடம் இருந்த கறுப்புப் பணம் 35 ஆயிரம் ரூபாய். “எவ்வளவு வச்சிருக்க? எல்லாத்தையும் எடு. இல்லைன்னா அது வெறும் பேப்பர்தான்” என்று என் கணவர் பயமுறுத்தினார். அவரிடம் கொடுத்தாலும் திரும்ப கைக்கு வராது என்பதால், அது எனக்கு வெறும் பேப்பர்தான்.

“இனிமேல் வங்கி அட்டை மூலமாகத்தான் பணப் பரிமாற்றம் நடக்கப் போகுது. இனி என்னை ஏமாத்தி எதுவும் சுருட்ட முடியாது. நாட்ல மட்டுமில்லை, வீட்லயும் பதுக்க முடியாது தெரியும்ல” என்று அகமகிழ்ந்தவரைப் பரிதாபமாகப் பார்த்தேன். நவம்பர் 6-ம் தேதிதான், “மகனுக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். உங்கிட்டே எவ்ளோ இருக்கோ குடு. அப்புறமா தர்றேன்” என்று ஒப்பந்தம் போட்டார்.

இல்லத்தரசிகளின் கறுப்புப் பணத்தில்தான் முக்கால்வாசி இந்தியா இயங்குகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? பிள்ளைகளின் படிப்பு, கல்யாணம், வீடு, நிலம் வாங்க, நல்லது கெட்டதுக்கு செய்முறை செய்ய என கணவன்மார்களின் தேவை அனைத்துக்குமே பக்கத்து வீட்டு அக்காவிடம் வாங்கிய கைமாத்தாக, நகையை அடகுவைத்த பணமாக வலம்வருவது எல்லாமே கள்ளப் பணம்தான் பிரதமரே!

இந்தத் திட்டத்தினால் நாட்டுக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கக்கூடும் என்றாலும், நாட்டைக் காக்கும் இந்தப் போரில் நாங்கள் பங்குபெற முடியாமல் போனதற்கு வருந்துகிறோம். ரூபாய் நோட்டு பற்றாக்குறையைச் சமாளிக்க நோட்டு அடிக்கும்போது எங்களையும் கவனத்தில் கொண்டு சற்று கூடுதலாகவே அடிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

ரூபாய் நோட்டுக்குள் ஜிபிஎஸ் பொருத்துவது தொடர்பாகப் பலரும் ஆலோசனைகளை வழங்கிவரும் வேளையில், இல்லத்தரசிகள் சங்கத்தின் சார்பாக நாங்களும் சில யோசனைகளை முன்வைக்கிறோம். டாஸ்மாக் கடைகளுக்குச் செல்லும் நோட்டுகளை செல்லாத நோட்டுகளாக அறிவிப்பது, காலில் செருப்பை மாட்டிக்கொண்டு, ‘300 ரூபாய் கொடு, வந்து தர்றேன்’ என்று கேட்கும் கணவன்களைத் திருத்துவது இப்படி ஏதாவது திட்டம் இயற்றினால் கறுப்புப் பண ஒழிப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். நன்றி!

- சஞ்சலா ராஜன், கோயம்புத்தூர்.

இதிலுமா அரசியல்?

By சந்திர. பிரவீண்குமார்  |   Published on : 29th November 2016 02:03 AM 
பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த நேரத்தில், எங்கள் வீட்டில் ஒரு திருமண நிகழ்ச்சிக்குத் திட்டமிட்டிருந்தோம். அனைவருமே இந்த நடவடிக்கையை ஆதரித்தாலும், நடைமுறை சிக்கல்கள் இருக்கவே செய்தன.
வங்கிகள் செயல்படத் தொடங்கியதும் வீட்டிலிருக்கும் அனைவரும் முடிந்த அளவு பணத்தை எடுத்தோம். பல இடங்களில் வங்கி அட்டைகளை ஏற்று கொண்டனர். திட்டமிட்டு செயல்பட்டதால், குழப்பங்கள் எதுவும் நிகழவில்லை. எனது சொந்த அனுபவம் இது.
வரலாற்றில் முதல் முறையாக மத்திய அரசு எடுத்துள்ள திடீர் நடவடிக்கை, இதேபோல் பலரது அன்றாட செலவுகளை நிச்சயம் பாதித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
எரிவாயு நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் மட்டும் ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டதால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. வங்கிகளிலும், தானியங்கி மையங்களிலும் வரிசைகள் அதிகரித்தன. பல தொழில்கள் தாற்காலிகமாக முடங்கின.
போதாததற்கு வதந்திகளும் ஏராளமாகப் பரவின. சாமானிய மக்கள், மாதாந்திர சம்பளதாரர்கள் போன்றோரின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்தப் பாதிப்புகளையும் மீறி மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவுகள் பெருகி வருகின்றன. கருப்புப் பணத்தையும், கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பேசி வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், கள்ள நோட்டுகள் பற்றிய அச்சத்தால், 500 ரூபாய் நோட்டுகளை பலர் வாங்க மறுத்தது, நினைவிருக்கலாம். அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கள்ள நோட்டு நடமாட்டத்தை நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில், உடனடியாகவும் துணிச்சலாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். அதைதான் மோடி மத்திய அரசு செய்துள்ளது என்று அவர்கள் நினைக்கின்றனர்.
அதேபோல், கணிசமான சிலர் இந்த நடவடிக்கையை எதிர்க்கின்றனர். கருப்புப் பணத்தை ஒழிப்பது நடைமுறை சாத்தியமற்றது என்பது அவர்களின் கருத்து.
பிரதமரின் நடவடிக்கையை பா.ஜ.க. மட்டுமல்ல, நிதீஷ் குமார் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரிக்கின்றனர்.
எதிர்பார்த்ததைப்போல், காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜவாதி கட்சி ஆகியவை எதிர்க்கின்றன. மோடி எதிர்ப்பாளர்களுக்கோ, வழக்கம் போல மோடியைத் திட்டுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு, அவ்வளவே.
மத்திய அரசின் நடவடிக்கையில் சில குறைகள் இருக்கலாம். அவற்றை விமர்சிப்பது நியாயமானதும்கூட. ஆனால், எதிர்க்கட்சிகளோ அரசைக் குறை கூறுவதில் மட்டுமே முனைப்பு காட்டுகின்றன.
சமூக வலைதளங்களிலும், பொது அரங்குகளிலும் கடுமையாக விமர்சித்து மக்களிடம் அவநம்பிக்கையை உருவாக்கியதோடு, அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவும் மறுத்தன.
கருப்புப் பணமும் கள்ள நோட்டுகளும் நாட்டின் பல்வேறு தளங்களில் பரவியுள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே தகவல் கொடுத்து விட்டு, அதிரடி நடவடிக்கையை எடுத்திருத்திருக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
அவகாசம் கொடுத்திருந்தால், கருப்புப் பணக்காரர்கள் தப்பிக்க வாய்ப்புண்டு என்பதே நிதர்சனம்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் மன்னர் ஆட்சி முறையும், ஜமீந்தார் முறையும் ஒழிக்கப்பட்டன. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அவற்றால் மக்களுக்கு அதிக பலன்கள் கிடைத்தாலும் சிலருக்கு பாதிப்புகள் ஏற்படவே செய்தது. அதனால், அந்தச் சீர்திருத்தங்களைக் குறை கூற முடியுமா?
அரசியல் காரணங்களுக்காக அவசரநிலையை இந்திரா காந்தி கொண்டு வந்தாலும், அந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட சில நன்மைகளை இன்னும் காங்கிரஸ்காரர்கள் பிரசாரம் செய்யத் தவறுவதில்லையே?
உச்சகட்டமாக, அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரிசையில் நின்று ரூபாய் நோட்டுகளை மாற்றினார். சாதாரண உள்ளூர் அரசியல்வாதியே கோடிகளில் புரளும் உண்மை அனைவருக்கும் தெரியும்.
அப்படியிருக்க, சில தலைமுறைகளாக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து வரும் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர், வெறும் ரூ.4,000 மட்டுமா வைத்திருப்பார் என்று மக்கள் நகைப்புடன்தான் பார்த்தனர்.
கேரளத்தில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் ஆட்சியின்போது நில சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டத்தை அமல்படுத்தியதால், நம்பூதிரிகள் பட்ட துன்பங்கள் ஏராளம். அதற்காக, அந்த திட்டத்தைத் தவறு என்று சொல்லிவிட முடியுமா?
சிங்கப்பூரில் முன்னாள் அதிபர் லீ குவான் யூ அந்நாட்டைத் தூய்மைப்படுத்த கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். முதலில் அதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், பின்னர் அதற்கு மக்கள் ஒத்துழைத்தனர்.
அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை பயங்கரவாதிகள் தகர்த்தபோது, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட்டன. ஆளுங்கட்சியைக் குறை கூறி கொண்டிருக்கவில்லை. இரண்டாம் உலகப் போர் நேரத்தில் ராணுவ வீரர்கள் முட்டை சாப்பிட ஒத்துழையுங்கள் என்று சர்ச்சில் கேட்டுக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வரிசையில் நின்று முட்டைகளைத் திருப்பியளித்தனராம்.
எதற்கெல்லாமோ வெளிநாட்டவரைப் பின்பற்றும் நாம், அரசியல் நாகரிகத்தில் அவர்களை ஏன் பின்பற்றக் கூடாது?
மக்களுக்கு சேவை புரியும் பொறுப்பு ஆளுங்கட்சிக்கு மட்டுமல்ல; எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. அரசின் திட்டங்களை விமர்சிப்பதோடு, ஆளுங்கட்சி செய்யத் தவறிய கடமைகளை சுட்டிக்காட்டும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு உண்டு.
மக்களிடத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவற விட்டு விட்டன.

'அமைச்சரை அனுசரிக்காவிட்டால் இதுதான் கதியா?!'  -பல்கலைக்கழகத்தை பதற வைத்த 26 கோடி ஊழல்



பேராசிரியர் பணி நியமன ஊழல் புகார் தொடர்பாக, கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கப்பட்டுள்ளார். ' அமைச்சர் ஒருவர் கொடுத்த பட்டியலில் இருந்தவர்களுக்கு பணியிடம் ஒதுக்கப்படாததே, விவகாரம் இந்தளவுக்கு வெடிக்கக் காரணம்' என்கின்றனர் கல்வியாளர்கள்.

தமிழ்நாட்டில் ஊழல் புகார்களில் சிக்காத பல்கலைக்கழகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, உயர்கல்வித் துறை சீரழிந்து வருகிறது. நேற்று கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் மோகன், அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ' பதவியில் இருந்து விலகுமாறு துறையின் உயர் அதிகாரியிடம் இருந்து அழுத்தம் வந்ததே இதற்குக் காரணம். இதற்கு முன்பு பதிவாளராக இருந்த செந்தில் வாசன் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால், கடந்த ஏப்ரல் மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த இடத்துக்கு வேதியியல் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் மோகன் பொறுப்பேற்றார். இப்போது அவரும் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார்' என்கின்றனர் பல்கலைக்கழக பேராசிரியர்கள்.  

"பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 76 பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் அண்மையில் நடந்து முடிந்தன. பணியிடங்கள் நிரப்புவது குறித்து தகவல் வெளியானதும், அமைச்சர் ஒருவர் துணைவேந்தர் கணபதியை வீட்டுக்கு வரவழைத்தார். ' பதவிக்கு வந்துவிட்டால், அமைச்சரை வந்து சந்திக்கக் கூடாது என்பது விதியா? ஏன் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை' என சத்தம் போட்டுள்ளார். ' நான் பதவிக்கு வந்தபோது தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் உங்களைச் சந்திக்க முடியவில்லை. முதல்வர் அப்பாயின்மெண்ட்டும் கிடைக்கவில்லை' என விளக்கம் அளித்தார் கணபதி. இதை ஏற்றுக் கொள்ளாத அமைச்சர், துணைவேந்தரை கடுமையாக எச்சரித்திருக்கிறார். இந்தத் தாக்குதலை எதிர்பார்க்காத துணைவேந்தர் அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்துவிட்டார் என அவருடன் சென்றவர்கள் தெரிவித்தனர். சில நிமிடங்கள் கழித்து, யாருக்குப் பணி வழங்க வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார் அமைச்சர். ஆனால், அந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்குப் பணியிடங்கள் வழங்கப்படவில்லை. அதுதான் வேறு விதங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது" என விரிவாகவே விளக்கினார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர். தொடர்ந்து,

" பேராசிரியர் பணியிடங்கள் அனைத்தும் வெளிப்படையாகவே நடத்த வேண்டும் என்பதில் துணைவேந்தர் உறுதியாக இருந்தார். அதற்கேற்ப, பணி நியமன தேர்வுக் கமிட்டியில், ஆளுநர் பிரதிநிதியாக வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நியமிக்கப்பட்டார். சில தினங்களில் அவர் மாற்றப்பட்டு துணைவேந்தர் மணிமேகலை தேர்வு செய்யப்பட்டார். அரசு பிரதிநிதியாக பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார் . இவர் மீது சில புகார்கள் உள்ளன. 'இவை திட்டமிட்டே நடத்தப்பட்டது' என கல்வியாளர்கள் மத்தியில் புகைச்சல் ஏற்பட்டது. இதையும் மீறி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்களின் தகுதிக்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஸ்லெட், நெட் தேர்வு எழுதியவர்கள், ஆராய்ச்சிப் படிப்பை நிறைவு செய்தவர்கள் என துறை வல்லுநர்கள் முன்னிலையே நேர்காணல் நடந்தது. இதில், அமைச்சர் கொடுத்த பட்டியியலில் இருந்தவர்களுக்குப் பணியிடம் வழங்கப்படவில்லை.

இதனால் கொந்தளித்த அமைச்சர், உயர்கல்வித் துறையின் முக்கியப் புள்ளியின் மூலம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு நெருக்கடி கொடுத்தார். 'சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெற்றுவிடக் கூடாது' என்பதற்காக, உயர்கல்வித் துறையில் இருந்து கடைசி நிமிடத்தில் ஃபேக்ஸ் அனுப்பப்பட்டது. அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு பணியிடத்துக்கான ஆணை வழங்கப்பட்டுவிட்டது. இதையும் அமைச்சர் தரப்பினர் எதிர்பார்க்கவில்லை. எனவேதான், பேராசிரியர் பணியிடத்துக்கு 45 லட்சம் ரூபாய் வரையில் விலைபோனது என தகவல் பரப்பப்பட்டது. சொல்லப் போனால், இவ்வளவு தொகைகளை பேரம் பேசி முன்கூட்டியே வாங்கிக் கொண்டது அமைச்சர் தரப்புதான். பணியிடத்துக்கு வேண்டப்பட்டவர்கள் வராததால், உயர்கல்வித்துறையின் உதவியோடு கூடுதல் நெருக்கடிகளைக் கொடுக்கிறார். இதில், யாரையாவது பலியாக்க வேண்டும் என்பதற்காக, பதிவாளரை விலகச் சொல்லிவிட்டனர். வரும் நாட்களில் கூடுதல் அழுத்தங்களை துணைவேந்தர் கணபதி சந்திக்க நேரிடும்" என்றார் ஆதங்கத்தோடு.

" பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது ஆளுநர் அலுவலகத்தின் பார்வை எப்போதும் விழுந்து கொண்டே இருக்கும். அதற்கேற்ப, துணைவேந்தர்களும் ஆளுநர் அலுவலகத்தை அனுசரித்துச் செல்வது வழக்கம். அரசு, ஆளுநர் என இரண்டு தரப்பிலும் 

நெருக்கடிகளை சந்திக்க வேண்டும். தற்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், பல்கலைக்கழகங்களின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக நிர்வாகங்களில் உள்ளூர் அமைச்சர்கள் தலையிடுவதால், சரியான நிர்வாகத்தை அளிக்க முடிவதில்லை. ' பல்கலைக்கழகம் நன்றாக இருக்க வேண்டும்' எனக் கவலைப்படும் துணைவேந்தர்களும் நிம்மதியாக வேலை பார்க்க முடிவதில்லை. ஆளும்கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக அவர்களைத் தயார்படுத்தும் வேலைகளில் அ.தி.மு.கவினர் இறங்குகின்றனர். பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதா என ஆளுநர் தீவிரமாக விசாரித்தால், பல உண்மைகள் வெளியாகும்" என்கின்றனர் பல்கலைக்கழக வட்டாரத்தில்.


- ஆ.விஜயானந்த்

Digital signature on degree certificates


THIRUVANANTHAPURAM: As part of its ongoing e-governance drive, Kerala University has installed a ‘digital signature device' that can affix the signature of the Vice-Chancellor on degree certificates.

The first batch of certificates sporting the electronically generated signature of Vice-Chancellor A. Jayakrishnan was printed on Thursday.

“A Vice-Chancellor signs hundreds of certificates in a day. On some days, I have signed 1,000 certificates at one go. It takes it toll on you,” Dr. Jayakrishnan told The Hindu as he demonstrated the operation of the device.

Security features

The device is designed in such a manner that the Vice-Chancellor has to operate it in person.

First he has to place his thumb on a scanner so that the computer can confirm that it is the Vice-Chancellor himself who is operating the system.

Then he has to key in a user name and a password which is known only to him. Again, before giving the command to print certificates, he has to get his thumb scanned again for a final confirmation of identity.

As many as 100 certificates can be printed at a time. After each batch of certificates is printed, the Vice-Chancellor has to manually sign a form which states the number of certificates printed and the time of printing. This, according to Dr. Jayakrishnan, makes the new system tamper-proof.

“The device has been placed right next to the Vice-Chancellor's desk and will not under any circumstance be taken out of his chamber for printing certificates,” he said.

For students, the installation of the new system will mean a drastic reduction in the waiting period for getting a degree certificate signed by the Vice-Chancellor.

“We have amended the university ordinance and the Senate and the Syndicate have cleared the amendment. Of course, I will still sign a certificate personally if for any reason I am required to do so,” Dr. Jayakrishnan added.

The software has been designed by the Technopark firm Azinova Technologies and the device cost the varsity Rs.1.66 lakh.

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

நவம்பர் 29: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பகிர்வு...

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்

டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும், கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துகளை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன்; உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுடச் சொன்னார் ராதா .

என்.எஸ்.கே., லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்



என்.எஸ்.கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்டபொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனே
பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

"நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று

சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.

குறள் இனிது: உடனடி வளர்ச்சியும் நீண்டகால வளமையும்...

சோம.வீரப்பன்

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை (குறள்: 512)


பல மேலாளர்கள் தம் நிறுவனத்தில் டக் டக் கென்று விற்பனையில் வளர்ச்சியைக் காண் பித்து நல்ல பெயர் வாங்கி விடுவார்கள். ஆமாம், அதெல்லாம் இந்த துரித உணவு போலத்தான்!

ஆனால் சில பணியாளர்களோ அந்நிறுவனத் திற்குத் தற்காலிகமாக இல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விற்பனையுடன் லாபமும் அதிகரிக்கும்படியான வழிவகைகளைச் சிந்தித்து, அதற்காகச் செயல்படுவார்கள்.

ஆமாங்க. கீரைச்செடி போன்றவை சீக்கிரமே பலன் கொடுக்கலாம்.ஆனால் ஒரு முறை தானே! தென்னைமரம், மாமரம் போன்றவை காய்க்க நாளாகலாம்.ஆனால் பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பலன் கிடைக்குமே!

நான் வங்கியில் பணிபுரிந்த போது இரு வகையினரையும் பார்த்து இருக்கிறேன். நம்ம குமார் போன்றவர்கள் வருடம் முழுவதும் தூங்கி விட்டு மார்ச், செப்டம்பரில் மட்டும் படு சுறுசுறுப்பாகி விடுவார்கள்!

கடைசி நேரத்தில் யார் காலிலாவது விழுந்து, சாளர அலங்காரம் (window dressing) செய்து விடுவார்கள்! நீங்களும் அனுபவப்பட்டு இருப்பீர்கள். வாடிக்கையாளர்களிடம் அவர்களது ஓவர் டிராஃப்ட் கணக்கிலிருந்து தொகையை எடுத்து சும்மா சிறிது நாட்களுக்கு நடப்புக் கணக்கிலோ சேமிப்புக் கணக்கிலோ வைக்கச் சொல்லி நச்சரிப்பார்கள்.

எங்குமே வளர்ச்சி என்பது வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாதில்லையா? வங்கிகளில் நிலைத்து நீடிக்கும் வளர்ச்சிக்கு வித்திடுபவர்களும் இல்லாமல் இல்லை. எனது நண்பர் ஒருவர். தான் கிளையில் பொறுப்பு எடுத்தவுடன் தமது கணக்கைச் செயல்பாட்டில் வைத்துக்கொள்ளாத வாடிக்கையாளர்களைப் பட்டியலிட்டுத் தொடர்பு கொள்வார். அவர்களின் ஆட்சேபங்களுக்கெல்லாம் பொறுமையாய் பதில் சொல்லி மீண்டும் எங்கள் சேவையைப் பயன்படுத்துங்கள் என்று அவர் கேட்கும் தோரணையே வெற்றி தந்து விடும்!

எந்தப் பிரச்சினை வந்தாலும் அஞ்சி ஓடாமல் எதிர்கொள்வார். அதாங்க, ஆங்கிலத்தில் trouble shooter என்பார்களே. ஒவ்வொரு பிரச்சினையும் ஒரு தீர்வுடன் தான் பிறக்கிறது என்பது அவரது நம்பிக்கை ! எந்த ஊரிலும் மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் பல துறைகளின் கணக்குகளைத் திறக்க பெரும் முயற்சிகள் எடுப்பார். அதற்கு நீண்ட நடைமுறைகள் இருக்கும். நம்மவர் சளைக்க மாட்டார்!

இம்மாதிரிக் கணக்குகளைத் தொடங்குவது சிரமமாக இருக்கலாம். ஆனால் பின்னர் யார் வரி கட்டினாலும் அதுபாட்டுக்குக் கூடிக் கொண்டே போகுமே! தற்பொழுது ,ரூபாய் நோட்டு விவகாரத்திற்குப் பின் பலமடங்கு அதிகரித்த நகராட்சிகளின் வரி வசூல் ஞாபகம் வருகிறதா?

‘நீங்கள் ஓடும் திசை சரியாக இருந்தால்தான் உங்கள் வேகத்தினால் பலன் உண்டு' என்கிறார் மேலாண்மை குரு ஜோயல் பார்க்கர்!

நண்பர் வங்கிக்கு வர்த்தகம் பெருக ,புதுப்புது வழிகளை உண்டாக்க முயலுவார். ஒரு முறை ஒரு பள்ளியில் மாணவிகளுக்குச் சேமிப்பு விழா நடத்தி சில ஆயிரங்களில் ஆரம்பித்தது இன்று அச்சிறுமிகளுடன் பல கோடிகளாய் வளர்ந்துள்ளது! வற்றாத ஊற்றுக்களைத் தேடிப்பிடிப்பவர்கள் தானே நல்ல பணியாளர்கள்! வருவாயைப் பெருக்குவதுடன், தடைகளைத் தகர்த்து தொடர்ந்து பலனளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பவர்களையே பணியிலமர்த்த வேண்டுமென்கிறார் வள்ளுவர்!

சிரிக்க வைத்தவரின் குடும்பத்தில் சிரிப்பு இல்லை

என். சுவாமிநாதன்

நாகர்கோவிலின் அடையாளங்களில் ஒன்று ‘மதுர பவனம்’. மறைந்த நகைச்சுவை நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் வீடுதான் அது. கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கான்கிரீட் வீடும் அதுதான். கம்பீரமான அந்த வீட்டை இப்போது புனரமைக்கக் கூட வசதியின்றி தவிக்கின்றனர் கலைவாணரின் வாரிசுகள்.

நாகர்கோவில், ஒழுகினசேரி யில் பிறந்த, நாகர்கோவில் சுடலையாண்டி பிள்ளை கிருஷ் ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. தனது தொடக்க காலங்களில் நாடகக் கொட்டகையில் சோடா விற்பனையாளராகவும், டென்னிஸ் கிளப்பில் பந்து பொறுக்கி போடுபவராகவும், வில்லுப்பாட்டு மற்றும் நாடக கலைஞராகவும், பல தொழில்கள் செய்து, தனது திறமையால் திரைத்துறைக்குள் வந்தவர் என்.எஸ்.கே.

திரைப்படங்களில் நகைச்சுவை யுடன், கருத்துகளையும் விதைத்த வருக்கு ‘கலைவாணர்’ என்று பட்டம் கொடுத்தவர் பம்மல் கே.சம்பந்த முதலியார். ஈகை பண்பிலும் என்.எஸ்.கே. சிறந்தவர். அப்படிப்பட்டவரின் வீடு இன்று குடும்பத்தினரின் வறுமையால் கவனிப்பாரின்றி கிடக்கிறது.

அண்ணா, எம்ஜிஆர் தங்கினர்

என்.எஸ்.கிருஷ்ணனின் மருமகள் உமைய பார்வதி கூறும் போது, ‘‘நாகர்கோவிலில் ‘இன்ப கனவு’என்ற நாடகம் நடந்த போது, சென்னையில் இருந்து நடிகர்கள் வந்திருந்தனர். நாடகத்தைப் பார்க்க எம்ஜிஆரும் வந்திருந்தார். அப்போது இந்த வீட்டில் எம்ஜிஆர் 12 நாட்கள் தங்கியிருந்தார். ஒரே மக்கள் கூட்டம். மாடியில் இருந்து ரசிகர்களைப் பார்த்து எம்ஜிஆர் கையசைத்தார். முன்னாள் முதல்வர் அண்ணாவும் இங்கு வந்துள்ளார். அவர் படுத் திருந்த கட்டிலை, அவர் ஞாபக மாக இப்போதும் பராமரித்து வருகிறோம்.

உலகத்திலேயே 2 நகைச்சுவை நடிகர்களுக்குத்தான் சிலை உண்டு. ஒன்று சார்லி சாப்ளின், மற்றொன்று கலைவாணர். எம்ஜிஆர்தான் நாகர்கோவிலில் கலைவாணருக்கு சிலை வைத் தார். காந்தியின் மீது அதிக பற்று கொண்டவர் கலைவாணர். காந்தி இறந்த செய்தி கேட்டு 3 நாட்கள் சாப்பிடாமல் இருந்தார். நாகர்கோவில் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபி அமைத்தார்.



மாமாவோட, காலத்துக்கு பின், என் கணவர் என்.எஸ்.கே.கோலப் பனுக்கு திரைத்துறையில் நடிக்க எம்ஜிஆர் வாய்ப்பு கொடுத்தார். பெரிய இடத்து பெண், பணக்கார குடும்பம் உள்ளிட்ட சில படங்களில் நகைச்சுவை நடிகராக வந்தார். ஆனால், இளவயதிலேயே என் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த 22-வது நாளில் எம்ஜிஆரும் மறைந்தார்.

எங்கள் வீட்டில் இறப்பு நடந்து 41 நாட்கள் ஆகாததால் போகக்கூடாது என பலர் சொன்னார்கள். ஆனால், நாங்கள் ஊருக்குத் தெரியாமல் குடும்பத்தோடு சென்று எம்ஜிஆருக்கு அஞ்சலி செலுத்தினோம்.

கலைவாணரும், என் கணவரும் இறந்த பின் எங்கள் குடும்பம் வறுமையில் விழுந்தது. எனக்கு 3 ஆண், 2 பெண் பிள்ளைகள். பிள்ளைகளும் தாத்தா, அப் பாவைப் போல சினிமா துறையில் வர வேண்டும் என முயற்சிக் கின்றனர். ஆனாலும் ஜொலிக்க முடியவில்லை. உண்மையான பேரன்களுக்கு இன்னும் திரைத் துறை கனவாகவே உள்ளது’’ என்றார்.

ரஜினிகாந்த் - கமல்ஹாசன்

சில ஆண்டுகளுக்கு முன்பு கலைவாணர் குடும்பம் கஷ்டப்படுவது குறித்து நடிகர் ரஜினிக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர் மறைந்த நகைச்சுவை நடிகர் வி.கே.ராமசாமி மூலம் இக்குடும்பத்தை தொடர்புகொள்ள சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் ஏனோ உதவியை மறுத்து விட்டனர்.

கமல்ஹாசன் கலைவாணர் மீது அதீத பற்று கொண்டவர். இப்போதும் என்.எஸ்.கே. குடும்பத்தினர் சென்னை சென்றால் கனிவோடு விசாரிப்பாராம். 5 ஆண்டுகளுக்கு முன் இந்த வீட்டுக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வந்துள்ளார். வீட்டை வாசலில் இருந்து பார்த்ததுமே கண்கலங்கியுள்ளார்.

இன்று கலைவாணர் பிறந்த நாள்

Monday, November 28, 2016

பொண்ணுங்க எப்போல்லாம் அழகா இருப்பாங்க தெரியுமா?


vikatan.com

பசங்கள ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒண்ணு பொண்ணுங்கள கொஞ்சம்கூட வெட்கப்படாம பார்க்குறவங்க. இன்னொண்ணு பொண்ணுங்களுக்கே தெரியாம திருட்டுத்தனமா வேடிக்கை பார்க்குறவங்க. ஏன்னா பொண்ணுங்கள ரசிக்காத பசங்களே கிடையாது. அப்படி ரசிக்கும்போது பெண்கள் பேரழகா தெரியும் தருணங்கள் எவையெல்லாம் தெரியுமா?

* தமிழ்நாட்டுல மழைக்காலத்துலயும் வெயில் அடிக்கும்கிறது உலகம் அறிஞ்ச விஷயம். கொளுத்துற வெயில்ல கூட்டம் அதிகமான பஸ்ல ஏறிட்டு கர்சீஃப் எடுத்து வியர்வையைத் துடைச்சிட்டு, அதே கர்சீஃப்பை விசிறியாக்கி விசிறும்போதுகூட பொண்ணுங்க அவ்வளவு அழகு பாஸ்! அடிக்கிற சம்மர்ல இதெல்லாமா ரசிப்பீங்கங்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேட்குது.

* தெருவுல நடந்து போற வழியில் இருக்கிற எல்லாக் கோயில் வாசலைக் கடக்கிறப்பவும், கண்ணை மூடி ரெண்டு விரலை மட்டும் எடுத்து நெத்தியில் வெச்சுட்டு அப்புறமா அதே விரல்களை கிஸ் பண்றதைப் பார்த்ததுக்கு அப்புறமா 'கடவுள் இருக்கான் கொமாரு'-ன்னு மாறுன பசங்களோட எண்ணிக்கை அதிகம்.

* கீழே குனிஞ்சு தெருவையே வெறிக்க வெறிக்கப் பார்த்துட்டு வர்ற பொண்ணுங்க, நாம கிராஸ் ஆகிறப்போ மட்டும் சொல்லி வெச்ச மாதிரி சைடு லுக் விட்டுக்கிட்டே தலைகோதி, பசங்களுக்கு ஆயிரம் டன் மின்சாரத்தை பாய்ச்சுவாங்க பாருங்க! அந்த டைம்ல பசங்க மனசுல சேதாரமே இல்லாம ஒரு விபத்தே நடக்கும்.

* ஏதாவது சண்டை வந்தா கோபமும், கண்ணு கலங்கி ரெண்டு மில்லி லிட்டர் அழுகையும் சேர்த்துப் பேசுவாங்க. வேற வழியில்லாம நம்மப் பசங்க ஸாரி கேட்டு சரண்டர் ஆவாங்க. அந்நேரம் வலியே வராத அளவுக்கு சின்னதா ஒரு அடி அடிக்கிறப்போ பொண்ணுங்க பேரழகு பாஸ்.

* தப்பித்தவறி கோயில் பக்கம் போனா... நெய் விளக்குப் போடுற இடத்துல வலம் வர்ற பொண்ணுங்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவுல தெரியுற ஹீரோயின் மாதிரி எக்ஸ்ட்ரா அழகோட தெரியுறதைக் கவனிச்சதுண்டா? அதே மாதிரி மோதிர விரல்ல பட்டும் படாம குங்குமத்தை எடுத்து வெச்சுக்கிற அழகை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டு இருக்கலாம்னு பசங்களுக்குத் தோணும்.

* எங்கேயோ பார்க்கிற மாதிரி பசங்க பக்கம் திரும்பும்போது கண்ணும் களவுமா மாட்டிக்கிட்டா டக்குனு வேற பக்கம் திரும்பறதுக்கும், மிரட்சி கலந்து சின்னதாப் பொண்ணுங்க சிரிக்கிறதுக்கும் ஆயிரம் லைக்ஸ் தாராளமாப் போடலாம். ஆண்கள என்ன கொடுமைப்படுத்தினாலும் இந்தக் காரணங்களால மன்னிச்சு விட்றலாம்.

* ஏதாவது கேள்வி கேட்டாலோ இல்லை கலாய்ச்சாலோ... ஒரேயொரு புருவத்தைச் சுருக்கி முறைக்கிற பார்வையாலே 'போடா டேய்' அப்படிங்கிறதைக் கண்ணாலேயே பேச பொண்ணுங்களால மட்டும் எப்படித்தான் முடியுதோ? இதையே பசங்க பண்ணா... மைண்ட் வாய்ஸ்ல யோசிக்கிற வடிவேலுவா தெரிவாங்கங்கிறது வேற விஷயம்.

* வேலைக்கு நடுவுல மானிட்டரை வெறிச்சுப் பார்த்துக்கிட்டே இல்லாத நகத்தைக் கடிக்கிறதுலேருந்து... சூடே இல்லாத காபியை ஊதி ஊதிக் குடிக்கிறதுவரை பொண்ணுங்க பண்ற எல்லாமே மொத்தத்துல அழகுதான் ஜி!



- கருப்பு

இன்னும் என்ன செய்யப்போகிறீர்கள் மிஸ்டர் மோடி? சாமானியனின் குரல்

vikatan.com

பெருந்தொகை ரூபாய் நோட்டுக்கும், சில்லறை நோட்டுக்குமான பிரச்னையில் சிக்கித்தவிக்கிறார்கள் சாமானிய மக்கள். 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பு, கிட்டத்தட்ட சாமானிய மக்களை முடக்கி போட்டுள்ளது. கடந்த 8ம் தேதி இரவு தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டின் சரித்தரத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கு முக்கியமான பங்கு வகிக்கும் தருணங்கள் அரிதாகவே வரும். அப்படியான சந்தர்ப்பம் தான் இது. மக்கள் சில கஷ்டங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும். இரு தினங்களில் நிலைமை சீராகும்," என பேசினார்.

"செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு பதில், புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும். இரு தினங்களில் நிலைமை சீரடையும். பழைய ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்.நவம்பர் 25ம் தேதி வரை 4 ஆயிரம் பணம் எடுக்கலாம். அதன் பின்னர் அது மாற்றியமைக்கப்படும்," எனவும் மோடி தெரிவித்திருந்தார்.

2 நாட்கள் இப்போது 20 நாட்களாகி விட்டன. ஆனால் நிலைமை சீரடையவில்லை. சொல்லப்போனால் மிகவும் மோசமாகிக்கொண்டே போகிறது. பிரதமர் மோடி சொன்னது ஒன்று. ஆனால் இப்போது நடப்பது ஒன்று. அரசின் மிக மோசமான திட்டமிடலால் சாமானிய மக்கள்சொல்ல முடியாத சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.



மோசமான இந்த 20 நாட்கள்...

டிசம்பர் 30ம் தேதி வரை பணத்தை மாற்றிக்கொள்ளலாம். நவம்பர் 25ம் தேதி வரை ஒருவர் 4 ஆயிரம் ரூபாய் மட்டுமே மாற்ற முடியும் என்று தெரிவித்திருந்தார் மோடி. நவம்பர் 25ம் தேதிக்கு பின்னர் இந்த வரம்பு உயர்த்தப்படும் என்று தான் அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் 'நவம்பர் 25ம் தேதி வரை மட்டுமே மாற்ற முடியும். அதன் பின்னர் வங்கிகளில் மாற்ற முடியாது' என அறிவித்து விட்டார்.

உங்களிடம் சில 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருக்கிறது என்றால் அதை மாற்ற நீங்கள் ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டும்.ஒரு நாளைக்கு 2 ஆயிரம் தான் தரப்படும். நெருக்கடியான சூழலை சொன்னால், அதிகபட்சமாக 4 ஆயிரம் ரூபாயை பெறலாம். கோயமுத்தூரில் இருந்து உங்களிடம் உள்ள 2 ஆயிரத்தை மாற்ற நீங்கள் சென்னை வந்து சென்றால் உங்களுக்கு மிக குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகும்.

திருவாரூரில் இருந்து வந்த ஒருவர் ரிசர்வ் வங்கியில் தன்னிடம் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, 10 ரூபாய் நாணயங்கள் 200ஐ வாங்கி சென்றிருக்கிறார். "நான் இங்கு வந்த ரயில் கட்டணம், உணவு எல்லாம் சேர்த்து ஆயிரத்துக்கும் மேல் செலவாகி விட்டது. என்னுடைய உழைப்பு விரையமாகி இருக்கிறது. 30ம் தேதி வரை மாற்றலாம் என்றார்கள். இப்போது ரிசர்வ் வங்கியில் தான் மாற்ற முடியும் என சொல்லி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றார்.



வங்கிகளிலேயே பணமில்லை

மறுபுறம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தையும் எடுக்க முடியவில்லை. ஏனென்றால் வங்கிகள் பணமில்லை. நிலைமை சீரடைய 2 நாட்கள் எனச்சொன்னது இப்போது 50 நாட்கள் ஆகியிருக்கிறது. ஏற்கனவே 20 நாட்கள் கழிந்து விட்டது. ஏ.டி.எம்., வங்கி என எங்கும் பணமில்லை. புதியதாக வருவதாக சொல்லப்பட்ட ரூ.500 பணம் இன்னும் பெரும்பான்மை மக்களை சென்று சேரவில்லை.

செயல்பாட்டில் இல்லை என ஏ.டி.எம். மையங்களும், பணமில்லை என வங்கிகளும் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டிருக்கின்றன. ஏ.டி.எம். மையங்களில் அறிவித்த நாள் முதல் இந்த நிலை தான் என்பதால் அதைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் வங்கிகளிலேயே பணமில்லை என்றால், நிலைமையின் விபரீதம் அதிர்ச்சியளிக்கிறது.

என்ன தான் நடக்கிறது என சாமானிய மக்களுக்கு புரியவில்லை. புரியவைக்கவும், சாமானிய மக்களின் பிரச்னைகளை தீர்க்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவும் இல்லை.



தொடர் பரிதவிப்பில் சாமானியர்கள்

பிரதமர் மோடி அறிவித்த போது 'கறுப்பு பணம் ஒழியும், கள்ள நோட்டுகள் இனி இருக்காது. ஊழல் என்பது காணாமல் போய் விடும்' என்றே சாமானியர்கள் நினைத்தார்கள். நம்பினார்கள். சொல்லாப்போனால் இன்னும் பெரும்பான்மையானோர் நம்புகிறார்கள். ஆனால் இந்த 20 நாட்களில் இவையெல்லாம் சாத்தியம் தானா என்ற கேள்வி எழுந்துள்ளதை மறுக்க முடியவில்லை. எந்த பணக்காரர்களும் வங்கியில் வரிசையில் நின்று பணத்தை செலுத்தவில்லை. 'கணக்கில் வராத பணம் ரூபாய் நோட்டுகளாக இல்லை. பெரும்பகுதி தங்கமாக, ரியல் எஸ்டேட்களில் முடங்கி இருக்கிறது. இதனால் பெரும் பலன் கிடைக்கப்போவதில்லை' என்ற பேச்சு பரவலாக கேட்கத்துவங்கியுள்ளது.

இந்த 20 நாட்களில் பல இடங்களில் புதியதாக வந்த 2000 ரூபாய் நோட்டின் கள்ள நோட்டுகள் வரத்துவங்கி விட்டன. 'ஆயிரம் ரூபாயை ஒழித்து விட்டு, 2 ஆயிரம் ரூபாய் கொண்டு வருவது ஊழலை எப்படி ஒழிக்கும். ஊழல் செய்த பணத்தை பதுக்குவதை இது எளிதாக்கத்தானே செய்யும்' என்ற கேள்வியையும் எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

ஆனால் இன்னும் பொறுமையோடு தான் இருக்கிறான் சாமானியர்கள். 'கையில் பணமில்லை. அத்தியாவசிய செலவுகளை கூட செய்ய முடியவில்லை. வேலை இல்லை. தொழில் முடங்கி விட்டது' என ஏராளமான சிரமங்களுக்கிடையே விரைவில் பிரச்னை சரியாகும் என்று பொறுமையோடு காத்திருக்கிறார்கள் சாமானியர்கள்.

"இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். மக்கள் பாதிக்கப்பட்டு வேதனையில் இருக்கிறார்கள். ஒருவேளை நாட்டில் கலவரமே வெடிக்கலாம்" என உச்சநீதிமன்றமே கவலைப்பட்டது. ஆனால் அரசிடம் அந்த கவலை இருப்பதாக தெரியவில்லை.



2 நாட்கள் ஏன் 50 நாட்கள் ஆனது?

8ம் தேதி இரவு தான் இந்த பொருளாதார சீர்த்திருத்த முடிவை அறிவித்தார். 9ம் தேதி வங்கி இருக்காது. 9,10 தேதிகளில் ஏ.டி.எம். மையங்கள் இருக்காது. 10ம் தேதி முதல் வங்கிகளிலும், 11ம் தேதி முதல் ஏ.டி.எம்.களிலும் நீங்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். நவம்பர் 25ம் தேதி வரை வங்கியில் தினமும் 4 ஆயிரம் ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம். ஏ.டி.எம். மையத்தில் தினம் 2,500 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்தார். இருநாளில் சிரமம் சீராகும் என்றார்.

ஆனால் சொன்னபடி 2 நாளில் பிரச்னை சரியாகவில்லை. வங்கிகள், ஏ.டி.எம். முன்னால் கால் கடுக்க காத்திருந்தார்கள் மக்கள். நிலைமை எப்போது சீராகும் என்ற கேள்வி பரவலாக எழுந்த போது, 'நிலைமை சீரடைய 2,3 வாரங்கள் ஆகலாம்' என்றார் நிதியமைச்சர். ஆனால் ஒரு படி மேலே சென்று இன்னும் 50 நாட்கள் ஆகும் என்றார் பிரதமர் மோடி.

மக்களின் பாதிப்புகள் குறித்த பல கேள்விகளுக்கு அரசிடம் பதில் இல்லை. இது தொடர்பான விரிவான விளக்கத்தை வலியுறுத்திய போதும் அரசிடம் இருந்து எந்த விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை. "500, 1000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிப்பு தொடர்பாக விரிவாகப் பேசுமாறு என்னை சிலர் தொடர்ந்து நெருக்கி வருகின்றனர். நான் முன்பு சொன்ன அதே கருத்தையே திரும்பக் கூறுகிறேன். 50 நாட்கள் நான் அவகாசம் கேட்டுள்ளேன். அதன் பிறகு இதுகுறித்து விரிவாகப் பேசுவேன்," என்கிறார் பிரதமர் மோடி. ஆனால் 50 நாட்கள் அல்ல. சில மாதங்கள் இந்த பிரச்னை என்பது தொடரத்தான் செய்யும் எனச்சொல்லி இருக்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.



ஒத்திவைக்கப்பட்ட திருமணங்கள்

500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பல திருமணங்கள் ஒத்தி வைக்கப்பட்டன. திருமணங்கள் நின்று போன நிகழ்வும் கூட நடந்திருக்கிறது. குஜராத்தில் 500 ரூபாயில் தண்ணீரும், டீயும் மட்டும் கொடுத்து ஒரு திருமணம் நடந்தது. திருமண வீடுகளில் இருக்க வேண்டி மகிழ்ச்சி முற்றிலும் மறைந்திருந்தது. இதையும் பெருமையாகவே சொன்னார் மோடி. "குஜராத் மாநிலம் சூரத்தில் 500 ரூபாய்க்குள் ஒரு திருமணம் நடந்ததை அறிந்தேன். வெறும் டீ விருந்துடன் அது முடிந்துள்ளது. மக்கள் இதுபோலத் தியாகங்கள் செய்வது என்னை நெகிழ வைக்கிறது," என தெரிவித்தார். அதே நேரத்தில் 500 கோடி ரூபாய் செலவில் பெங்களூருவில் நடந்த ரெட்டி குடும்ப திருமணத்தை பற்றி பேச அவர் மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார்.

திருமணம் நடக்கும் வீடுகளுக்கு 2.5 லட்சம் வரை பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு உள்ளதே என கேட்க கூடும். ஆனால் அதற்கான விதிமுறைகள் என்னவென தெரியுமா?. வங்கியில் நீங்கள் 8ம் தேதிக்கு முன்னர் போடப்பட்ட தொகையை தான் எடுக்க முடியும்.கையில் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்து அதை இப்போது வங்கியில் டெபாசிட் செய்து எடுக்க முடியாது. அதற்கும் ஏகப்பட்ட விதிமுறைகள்.



திருமணத்துக்கு பணம் எடுக்க என்ன விதிமுறை தெரியுமா?

திருமண பத்திரிகை உள்ளிட்ட ஆவணங்களோடு, நீங்கள் திருமண செலவுக்கு யாருக்கெல்லாம் பணம் கொடுக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதற்கான ஆவணத்தையும் நீங்கள் சமர்பிக்க வேண்டும். திருமணத்தில் வாழை மரம் கட்டுபவர்கள் துவங்கி சமையல் செய்பவர்கள் என தின சம்பளத்துக்கு வருபவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை என்பதற்கான ஆவணத்தை கொடுத்தால்தான் உங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும். இத்தனை ஆவணங்களையும் கொடுத்தால் கூட உங்கள் வங்கியில் இருந்து பணம் கிடைக்காமல் போகலாம். ஏனென்றால் பெரும்பாலான வங்கியில் பணமில்லை.

"எங்கள் மகளின் திருமணத்துக்காக வங்கியில் பணம் போட்டு வைத்திருந்தோம். திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார்கள். கையில் இருந்த தொகையை மாற்ற முடியவில்லை. வங்கியில் இருக்கும் பணத்தையும் எடுக்க முடியவில்லை. எல்லா ஆவணங்களை சமர்பித்தும் பலனில்லை. பணம் கிடைக்கவில்லை. வழக்கமாக எங்கள் வீட்டு விசேஷத்துக்கு சமையல் செய்பவர்கள், நகை செய்யும் பொற்கொல்லரை நான் பயன்படுத்த முடியவில்லை. ரெடிமேடாக நகைகளை பெரிய கடைகளில் வாங்கினோம். வங்கி கணக்கை கையாளும் பெரிய சமையல் காரரை அணுகினோம். திருமண ஏற்பாடுகளை கவனித்துக்கொள்ளும் பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தோம். எங்கள் வீட்டு திருமண செலவு இதனால் இரட்டிப்பானது," தொலைக்காட்சியில் வெளிப்படையாகவே சொல்லி இருந்தார் சென்னையைச் சேர்ந்த மிடில் க்ளாஸ் நபர்.

இப்போது இந்த விதிகளை தளர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என சொல்லி இருக்கிறார் மத்திய நிதியமைச்சர். விதி தளர்த்தப்படும் என்று கூட அவர் சொல்லவில்லை.



பெரு நுகர்வு கலாச்சாரத்துக்கு தள்ளப்படுகிறோமா?

மறுபுறம் பெரு நுகர்வு கலாச்சாரத்துக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். "பணப்பை வைத்திருந்த காலம் எல்லாம் போய் விட்டது. இனி மின்னணுப்பைக்கு மாறுங்கள். நீங்கள் உங்கள் செல்போனை வங்கிக்கிளையாக பயன்படுத்துங்கள். எப்படி செல்போனில் படம் எடுத்து நண்பர்களுக்கு அனுப்புகிறீர்களோ, அதே போன்று இதைச் செய்யுங்கள்" என சாதாரணமாக சொல்கிறார் பிரதமர் மோடி. நாட்டில் வங்கி கணக்கை கையாளதவர்கள் எண்ணிக்கை என்பது 45 சதவீதத்துக்கும் அதிகம். வங்கி கணக்குகள் இத்தனை கோடி புதியதாக துவங்கப்பட்டது என சொன்னாலும், அவை எல்லாம் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட். அவற்றில் மிகப்பெரும்பாலான கணக்குகள் பயன்பாட்டில் இல்லை. அப்படியே இருக்கிறது.

நம் நாட்டில் 80 சதவீதத்துக்கும் மேல் பண பரிவர்த்தனைகள் தான் நடக்கிறது. இன்னும் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்கிறது. செல்போனை பயன்படுத்த தெரியாத, வங்கி கணக்கை கையாளத்தெரியாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். ஆனால் இது எதைப்பற்றியும் கவலைப்படமால் ஒற்றை அறிவிப்பில் 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்து விட்டார் மோடி.

நடுத்தர மக்களின் நிலை மிக மோசம். அவர்களை பெரு நுகர்வு கலாச்சாரத்துக்குள் தள்ளியுள்ளது. காய்கறி விற்பவர்கள் சிறிய மளிகை கடை நடத்துபவர்கள், டீக்கடை, சிறிய உணவகங்கள் என யாரிடமும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் இயந்திரங்கள் இல்லை. தினமும் காய்கறி வாங்க பெரும் டிப்பார்ட்மென்டல் ஸ்டோர்ஸ்க்கும், உணவு உட்கொள்ள பெரு உணவகங்களுக்கும் செல்ல வேண்டிய சூழலை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. முடி திருத்துவதற்கு கூட பெரும் தொகை செலவிடும் அளவுக்கு பெரும் சலூன் நிறுவனங்களுக்கு செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

பன்னாட்டு உணவகங்களும், குளிர்பானங்களும் இந்தியாவில் கால்பதித்த போது அவர்கள் சொன்னது, "இந்தியாவில் உள்ளவர்கள் வீட்டில் சாப்பிடுவதும், தண்ணீர் குடிக்கும் பழக்கங்களும் தான் எங்கள் தொழிலுக்கு எதிரி". இதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. இப்போது பெரு நிறுவனங்களை நோக்கி மக்களை அரசே ஓட வைத்திருக்கிறது.



திட்டமிடல் இல்லாதது தான் காரணம்...

உலகத்திலேயே 85 சதவீத புழக்கத்தில் இருந்த பணத்தை செல்லாது என அறிவித்து எடுக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்பது இந்தியாவில் தான். அதுவும் இப்போது தான். இவ்வளவு பெரிய சீர்த்திருத்தத்தை கையில் எடுத்த அரசு, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்து யோசிக்காதது ஏன் என தெரியவில்லை. புதிய ரூபாய் நோட்டுகள் வரவில்லை. வங்கி, ஏ.டி.எம்.களிலேயே பணமில்லை. இப்படி எந்த முன்னேற்பாடும் இல்லை.

பணமின்றி அல்லாடுகிறார்கள் மக்கள். 65க்கும் மேற்பட்ட மக்கள் வரிசையில் நின்று மரித்துப்போய் இருக்கிறார்கள். 10க்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் இறந்து போய் இருக்கிறார்கள். வங்கி வாசலில் தங்கள் பணத்தை எடுக்க வருபவர்கள் மிக மோசமாய் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இது குறித்த எந்த கவலையும் அரசுக்கு இருப்பதாய் தெரியவில்லை.

ரூபாய் நோட்டுப் பிரச்சனையால் மக்கள் வங்கி, ஏடிஎம் வாசல்களில் நீண்ட வரிசையில் நிற்பதை பற்றி கேட்டால், 'எல்லையைப் பாதுகாக்க ராணுவ வீரர்கள், ஜவான்கள் நிற்கவில்லையா. அதை விட இது பெரியதா?' என கேட்கிறார். மக்கள் படும் கஷ்டங்களை பற்றி பேசினால் அவர்கள் கறுப்பு பணத்தை ஆதரிப்பவர்களைப்போல, தேச துரோகிகள் போல பார்க்கப்படுகிறார்கள்.

சற்றும் முன் யோசனை இல்லாமல் பண நடமாட்டத்தை நிறுத்தியதுதான் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கிய காரணம். 85 சதவீத பணத்தை செல்லாது என அறிவிக்கும் போது, 80 சதவீதத்துக்கு மேல் பண பரிவர்த்தனைகள் செய்யும் நாட்டில் எப்படியான பாதிப்புகள் என்பதை யூகிக்க முடியும். புதிய நோட்டுகள் 2 நாளில் கிடைக்கும் என்றார்கள். 500 ரூபாய் நோட்டு இன்னும் வரவே இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெருமளவு புழக்கத்தில் வரவில்லை. 100, 50 என செலவு செய்யும் மக்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்து என்ன செய்வது என தெரியவில்லை.



2 டிசைன்களில் புதிய ரூபாய் நோட்டுகள்

நாட்டில் சில பகுதிகளில் தான் 500 ரூபாய் நோட்டு கிடைக்கிறது. அதுவும் 2 டிசைன்களில். அரசு அச்சடித்து வெளியிட்டதே இரு வடிவங்களில் வெளியாக அதிர்ந்து போய் உள்ளார்கள் மக்கள். கள்ள நோட்டு என சந்தேகம் எழுவதாக மக்கள் அச்சம் தெரிவிக்க, தவறு நடந்து விட்டது. கள்ள நோட்டு என பயந்தால் அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. ஆனால் இதில் எது சரி? எது தவறு என்பதை மக்கள் எப்படி உணர்வார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு இதுவரை ரூபாய் நோட்டு அச்சிடுவதில் தவறு நிகழ்ந்ததாக தெரியவில்லை. அதையும் இப்போது நிகழ்த்தி இருக்கிறது. ஏற்கனவே ரூபாய் நோட்டுகளே கிடைப்பதில்லை. இது போன்ற சூழலில் ரூபாய் நோட்டுகளை பெறவும் பெரும்பாலானோர் தயங்குகின்றனர். சில்லறை பிரச்னையால் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

'கறுப்பு பணத்தை ஒடுக்கும் போரில் சாமானியர்களே, முன்னணி படை வீரர்களாக இருக்கிறார்கள்' என்கிறார் பிரதமர் மோடி. முன்னணி படைவீரர்கள் தான் போரில் முதலில் பலி கொடுக்கப்படுகிறார்கள்' என்ற அர்த்தத்தில் அவர் சொன்னாரா தெரியவில்லை. ஆனால் படைவீரர்களை பலி கொடுக்கும் நிகழ்வாகத்தான் இது அமைந்திருக்கிறது.

சேதாரம் இல்லாமல் நகை செய்ய முடியாது... சிலரேனும் மடியாமல் பகை வெல்ல முடியாது' என்கிறார்கள். அந்த சிலர் சாமானியர்களாக இருப்பது தான் வேதனை.

- ச.ஜெ.ரவி,

பழைய நோட்டுக்களால் பதறும் அமைச்சர்கள்! -மொத்தமாக முடங்கிய அரசு

vikatan.com

தமிழக அரசின் சார்பில் கோரப்பட்ட டெண்டர் பணிகளுக்கு பழைய ரூபாய் நோட்டுக்களில் கமிஷன் கொடுக்க முன்வருவதால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் அமைச்சர்கள். ' பொதுப்பணி தொடங்கி பள்ளிக்கல்வி வரையில் பழைய நோட்டுக்களைப் பார்த்தாலே தெறித்து ஓடுகின்றனர். அரசின் பணிகளும் மொத்தகமாக முடங்கியுள்ளன' என வேதனைப்படுகின்றனர் ஒப்பந்ததாரர்கள்.

மத்திய அரசு அறிவித்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது அறிவிப்பால், சிறு வணிகர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியான சில நாட்களில், தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுக்களை டாஸ்மாக், ஆவின், போக்குவரத்துத்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் சில்லறை நோட்டுக்களாக மாற்றிக் கொண்டனர் சில அமைச்சர்கள். மூன்று தொகுதி தேர்தல்களுக்கும் தேவையான சில்லறை நோட்டுக்களும் அரசு நிறுவனங்களில் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதன்பின்னர், அரசு சார்பாக அறிவிக்கப்படும் பணிகள் உள்பட இதர வருமானங்களையும் 100 ரூபாய் மற்றும் புதிய நோட்டுக்களாகவே அமைச்சர்கள் கேட்கின்றனர்.

"வணிகவரித்துறை, சி.எம்.டி.ஏ, டாஸ்மாக் உள்பட அரசின் வளம் கொழிக்கும் துறைகளில் அன்றாடம் வர வேண்டிய கமிஷன் தொகையை, சில்லறை நோட்டுக்களாகவே அதிகாரிகள் வாங்கிக் கொள்கின்றனர். ஒவ்வொரு துறையின் முக்கியப் புள்ளிகளுக்கும் சில்லறை நோட்டுக்களாக பணத்தைக் கொடுத்துவிடுகின்றனர். அன்றாட வருமானத்தை குறிவைத்து, தனியார் யாரும் பயன்பெற்றுவிடக் கூடாது என்பதற்காக டாஸ்மாக், இந்து அறநிலையத்துறை உள்ளிட்ட துறையில், வங்கிகளில் செலுத்தும் தொகைகளுக்கான டினாமினேஷன்களை நகல் எடுத்து தலைமையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அரசுத் துறைகளில் கூடுதல் எச்சரிக்கையுடன் பணத்தைக் கையாள்கின்றனர் ஊழியர்கள்.



"மின்வாரியத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக, கடந்த மாதம் பத்துக்கும் மேற்பட்ட கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய தொகைள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதற்குள் ரூபாய் நோட்டுக்கள் குறித்து அரசின் அறிவிப்பு வெளியாகிவிட்டதால், துறையின் முக்கியப் புள்ளிக்குச் சேர வேண்டிய தொகைகளை வழங்க முடியவில்லை. இதனால், வாரியத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதிகளையும் முடக்கி வைத்துவிட்டனர். இந்தப் பணிகளை எல்லாம், பல மாதங்களுக்கு முன்பே நிறைவு செய்துவிட்டனர். மின்வாரியத்தில் இருந்து நிதிகளை அளிக்காமல் இழுத்தடிப்பதால், ஒப்பந்ததாரர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலை உள்பட பல துறைகளில் எந்த வேலைகளும் நடக்கவில்லை. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை யாருக்கு ஒதுக்க வேண்டும் என அமைச்சர்கள் முன்கூட்டியே முடிவு செய்துவிடுகின்றனர். அதற்கேற்ப, கமிஷன் தொகைகளும் முன்பே பெற்றுக் கொள்வது வழக்கமான நடைமுறை. நடப்பு பட்ஜெட்டில் அரசின் திட்டங்கள் தொடர்பான பணிகளுக்குக் கடந்த மாதம் டெண்டர்கள் விடப்பட்டன. இவற்றை உடனடியாக செய்து முடிப்பதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுப் பணித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் ஆறு, குளம் தூர்வாருதல், புதிய கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றுக்கான ஒதுக்கப்பட்ட நான்காயிரம் கோடி ரூபாய் வரையில் முடங்கியுள்ளன. காரணம். பழைய நோட்டுக்களில் கமிஷன் கொடுப்பதுதான்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்.



"பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் கட்டடப் பணிகள், பராமரிப்புப் பணிகள், நாற்காலிகள், ஆய்வக உபகரணங்கள் ஆகிய பணிகள் அனைத்தும் அக்டோபர் மாதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்தப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 30 கோடி ரூபாயில் 6 கோடி ரூபாய் கமிஷனாகக் கொடுக்கப்பட்டுவிட்டது. இதில், சேலத்தைச் சேர்ந்த ஒருவர் 1.20 கோடி ரூபாயும் மூத்த அமைச்சர் ஒருவரின் உறவினர் 4.80 கோடி ரூபாயும் கொடுத்துவிட்டார். இந்தப் பணத்தை நல்ல நோட்டுக்களாக மாற்ற துறையின் புள்ளிகள் பட்டபாடு தனிக்கதை. வருகிற ஜனவரி முதல் வாரத்தில் அடுத்தகட்ட பணிகளை ஒதுக்கீடு செய்வதற்கான வேலைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ' புதிய நோட்டுக்கள் அல்லது 50, 100 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்' என அதிகாரிகள் உறுதியாகக் கூறிவிட்டனர். ஒப்பந்ததாரர்களும் சில்லறை நோட்டுக்களாக மாற்றும் வேலையில் முனைப்போடு இறங்கியுள்ளனர்.

நடப்பு ஆண்டில், நெடுஞ்சாலை, உயர்கல்வித்துறை, வேளாண்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டன. இந்தப் பணிகளுக்காக துறையின் மூத்த அமைச்சர் ஒருவரை சந்தித்தனர் ஒப்பந்ததாரர்கள். அவர்களிடம் பேசிய அமைச்சர், ' பழைய 500, 1000 ரூபாய் என்றால், யாரும் கமிஷனை எடுத்துக் கொண்டு வர வேண்டாம். இதுதவிர, வேறு எந்த ரூபாய் நோட்டு என்றாலும், உடனே வரவும்' என நேரடியாகவே கூறிவிட்டார். மற்ற துறைகளின் அமைச்சர்களும் கெடுபிடியாக இருக்கின்றனர். இதனால், சில்லறை ரூபாய் நோட்டுக்களைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. அதற்குள் யாராவது முந்திக் கொண்டு போய் புதிய நோட்டுக்களைக் கொடுத்துவிட்டால், அவர்களுக்கே பணிகளை ஒதுக்கீடு செய்துவிடுகின்றனர்" என ஆதங்கப்பட்டார் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்.

புதிய ரூபாய் நோட்டுக்களின் வரவால் அமைச்சர்களின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளதாக குரல் எழுப்புகின்றனர் கோட்டை வட்டாரத்தில். ' வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்' என்கின்றனர் சில அதிகாரிகள்.


-ஆ.விஜயானந்த்

NEWS TODAY 27.09.2024