Tuesday, December 6, 2016

VIKATAN,...... இவற்றைச் செய்யும் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது!

இவற்றைச் செய்யும் துணிச்சல் ஜெயலலிதாவிடம் மட்டுமே இருந்தது! 

ஜெயலலிதா
எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அ.தி.மு.க-வில் ஜெயலலிதா இணைந்தபோது, தமிழக அரசியலில் பெண்கள் என்ற பதமே பெரிய அளவில் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதது. அ.தி.மு.க-வில் நுழைந்து, தமிழக அரசியலில் வலிமை மிகுந்த முதல்பெண் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். சினிமாவில், அரசியலில், ஆட்சிப் பதவியில் என பல துறைகளிலும் முன்னோடியாக இருந்த 'முதல் பெண்' என்ற எண்ணற்ற சாதனைகளைத் தக்க வைத்துக் கொண்டவர்.

தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என ஜெயலலிதா, நடிகையாக இருந்த காலத்திலேயே பன்மொழிப் புலமையைப் பெற்றிருந்தார். அந்தக் காலத்திலே சரளமாக ஆங்கிலம் பேசக்கூடிய ஒரே சினிமா நடிகையாக ஜெயலலிதா திகழ்ந்தார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, அ.தி.மு.க இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து 1989-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க வெற்றி பெற்றது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க, 27 இடங்களைக் கைப்பற்றியது. இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டமன்றத்துக்குள் முதல்முறையாக எதிர்க்கட்சித் தலைவராக நுழைந்தார். ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவரான சில மாதங்களில், அ.தி.மு.க ஒன்றிணைந்தது. அப்போது முதல் அ.தி.மு.கவை வழி நடத்தி வரும், ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசு தான்தான் என்பதை தொண்டர்கள் மூலம் நிரூபித்தார்.



1991-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. தமிழகத்தில் ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96 காலகட்டத்தில், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான 'தொட்டில் குழந்தை திட்டம்', அனைத்து மகளிர் காவல்நிலையம், காவல்துறையில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 69 சதவீத ஒதுக்கீடு என இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும், பெண்களுக்கான மாபெரும் திட்டங்களையும் ஜெயலலிதா தொடங்கி வைத்து, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார்.



கடந்த 30 வருடங்களாக இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஜெயலலிதா, தென் இந்தியாவின் வலிமை மிகுந்த பெண்களில் ஒருவராக விளங்கினார். கோடிக்கணக்கானத் தொண்டர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அ.தி.மு.க என்னும் மிகப்பெரிய கட்சியின் பொதுச் செயலாளராக 26 வருடங்களுக்கும்மேல் இருந்துள்ளார். ஜெயலலிதாவின் ஆளுமை, கட்சித் தொண்டர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்காமல், அனைத்து 39 தொகுதிகளிலும் தனித்து நின்று, அ.தி.மு.க 37 மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றியது. தமிழக நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில், முதல் முறையாகும்.

37 தொகுதிகளை அ.தி.மு.க பிடிப்பதற்கு, ஜெயலலிதாவின் மக்களைக் கவரும், தேர்தல் பிரசாரம் மிகவும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதன் பின்னர் 2016-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், அனைத்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில், அ.தி.மு.க-வை முதல்முறையாக களமிறங்கச் செய்து, தனித்து நின்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது, ஜெயலலிதாவின் அரசியல் சாதுர்யத்திற்கு மிகப்பெரும் சான்றாகத் திகழ்கிறது.



32 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, 1984-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஆட்சியில் இருந்த ஒரு கட்சியே மீண்டும் ஆட்சியைப் பிடித்த பெருமையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க பெற்று மேலும் சாதனையைப் படைத்தது.

எண்ணற்ற சாதனைகளை தன்னகத்தே கொண்டுத் திகழ்ந்த, சாமான்ய மக்களும், சாதாரண தொண்டனும் அ.தி.மு.க-வில் எந்தநிலையையும் எட்டவைத்து, அவர்களுக்கான பதவி அங்கீகாரத்தை அளித்த சாதனை மிக்கத் தலைவி முதல்வர் ஜெயலலிதா. இத்தகைய பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி, லட்சக்கணக்கான பெண்களுக்கு அரசியல் முன்னோடியாக விளங்கிய ஜெயலலிதா என்றும் மகத்தான மாண்புமிக்க தலைவர் இன்று கோடிக்கணக்கான தொண்டர்களையும், தமிழக மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்தி விட்டு, இப்பூவுலக வாழ்வில் இருந்து மீண்டு விட்டார்!

ஜெயலலிதா நேசித்த 5 பெண்கள்! #jayalalithaa

ஜெயலலிதா

ஒரு பெண்ணின் எல்லைகள் இவைதான் என வகுத்திருந்தவற்றைத் தகர்த்தெறிந்து சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அவரின் மறைவுக்குக் கட்சி பேதமின்றிப் பலரும் கண்ணீர் சிந்துவதற்கு முக்கியக் காரணம், Ôஒரு பெண்ணான நாம் இதைச் செய்யலாமா?Õ என்று எந்த இடத்திலும் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தன் ஆளுமையை வளர்த்துக்கொண்டு நிகரில்லாத தலைமையாக விளங்கியதே! பல தலைவர்களோடு கைகோத்து தேர்தல் களத்தைச் சந்தித்து வெற்றி, தோல்விகளைப் பார்த்தவர். எப்போதும் தன் ஆளுமையைச் சரித்துக் கொள்ளாதவர்.
இத்தகைய பண்புகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா, தன் வாழ்க்கையில் நேசித்த பெண்களில் ஐந்து பேர் முக்கியமானவர்கள்.



அன்னை சந்தியா:
தன்னுடைய சிறுவயதிலேயே அப்பாவை இழந்த ஜெயலலிதாவுக்கு அம்மாவாக மட்டுமல்லாமல் சிறந்த தோழியாகவும் இருந்தவர் சந்தியா. ஜெயலலிதாவின் ஒவ்வோர் அசைவையும் அன்போடு கவனித்து வழிநடத்தியவர். அதேபோல, அம்மாவின் அரவணைப்பை எப்போதும் விரும்பும் பெண்ணாக இருந்தார் ஜெயலலிதா. சென்னை, சர்ச் பார்க் கான்வென்ட்டில் தான் படிக்க வந்ததைப் பற்றி குறிப்பிடும்போது, “பல ஆண்டுகள் அம்மாவைப் பிரிந்து பெங்களூரில் இருந்த எனக்கு, சென்னையில் அம்மாவுடன் இருந்து படிக்கும் வாய்ப்பாக அமைந்தது” என உற்சாகமானார்.
ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டுமானால், என்ன உடை உடுத்திச் செல்வது என்பதில்கூட அம்மாதான் உதவ வேண்டும். பள்ளிக்குச் செல்லும்போது அடம்பிடித்தவர், பின்னாளில் நடிக்கச் செல்லும்போது, இன்றைக்கு லீவு போட்டுவிடவா என அடம்பிடிப்பாராம். அப்போதும் செல்லக் கோபத்துடன் கடிந்துகொண்டு, அனுப்பி வைப்பது அம்மாதான். பள்ளிக்கோ, நடிக்கவோ எங்கு சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், வீட்டில் இருந்து அம்மா வரவேற்க வேண்டும் என்பதில் கறாராக இருப்பராம் ஜெயலலிதா. இவரின் மனதை நன்கறிந்த அம்மா, தான் வெளியே எங்கு சென்றிருந்தாலும் ஜெயலலிதா வீட்டுக்கு வரும் நேரத்துக்குத் தவறாமல் ஆஜராகிவிடுவார்.

ஜெயலலிதாவிடம் அவர் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட ஒரே விஷயம், பரதநாட்டியம் பழகுவதற்குத்தான். நாட்டியம் கற்றுக்கொடுக்க வரும் குருவிடம், தலை வலிக்கிறது... வயிறு வலிக்கிறது... என ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அனுப்பிவிடுவார். இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிந்ததும் கண்டிப்போடு, உனக்கு என்னவானாலும் சரி, பரதநாட்டிய வகுப்புக்குச் சென்றே ஆகவேண்டும் என வற்புறுத்துவாராம். அந்த நடனம்தான் சினிமா வாழ்க்கைக்கு கை கொடுத்தது என்பார் ஜெயலலிதா. ‘பத்திரிகைகளில் வரும் எதிர்மறைச் செய்திகளைத் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதே’ என்று ஆறுதல்படுத்திய அம்மாவையே தன்னுடைய குரு, சிநேகிதி, வழிகாட்டி என்பார் ஜெயலலிதா.



கேத்ரின் சைமன்:
ஜெயலலிதாவின் ஆங்கிலத் திறன் எல்லோரையும் வியக்க வைக்கக்கூடியது. சின்ன இடறல் கூட இல்லாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என்பதற்கு மாநிலங்களவையில் அவர் நிகழ்த்திய பேச்சுக்களே உதாரணம். ஜெயலலிதாவின் இநந்த் திறமைக்கு, அவரின் ஆசிரியர்களே காரணம். அவர்களில் முதன்மையானவர், கேத்ரின் சைமன். சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் ஜெயலலிதா படிக்கும்போது, அவரிடம் அன்புகொண்டு தனிக்கவனம் எடுத்துக்கொண்டவர். மாணவர்களோடு நட்புறவுடன் பழகி, அவர்களைப் பண்படுத்தும் குணம்கொண்டவர் கேத்ரின் சைமன். சில மாதங்களுக்கு முன் கேத்ரின் இறந்தபோது, ‘தன் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் என் ஆசிரியர்’ என நெகிழ்வோடு குறிப்பிட்டார் ஜெயலலிதா.



இந்திராகாந்தி:
1984-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டபோது, நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்திலும், சக எம்.பி-க்களிடம் இந்தியிலும் பேசி அசரவைத்தார். இந்த மொழியாற்றல் இந்திரா காந்தியின் நட்பு கிடைக்க வழிசெய்தது. இயல்பாகவே இந்திரா காந்தியின் மீது ஈர்ப்பும் பிரமிப்பும் உள்ள ஜெயலலிதா, இந்திரா காந்தியுடன் நெருக்கமானார். அது எந்தளவுக்கு என்றால், ஜெயலலிதா, தனக்கு ஒரு நெருக்கடி வந்தபோது, “அம்மா... எனத் தொடங்கித் தன் நிலையை விளக்கி, உதவுமாறு கடிதம் எழுதியபோது... இந்திரா காந்தி, டெல்லியிலிருந்து தனக்கு நம்பிக்கையானவர்களை அனுப்பி ஆறுதலும் உதவியும் செய்யவைத்தார். நம்பிக்கை தரும் இளம் அரசியல் தலைவர் என ஜெயலலிதா மீது இந்திரா காந்திக்கும் அன்பு இருந்தது. அதனால்தான் யூகோஸ்லேவியா நாட்டு அதிபருக்குத் தரப்பட்ட விருந்துக்கு ஜெயலலிதாவை அழைத்திருந்தார். அந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 16 பேர்தான் எனும்போதே, இதன் முக்கியத்துவத்தை உணர முடியும். ஒவ்வொரு நாட்டு அதிபரிடமும் ஜெயலலிதாவை அறிமுகம் செய்துவைத்தார் இந்திரா காந்தி. தன் அரசியல் வாழ்வைப் பிரகாசிக்கவைக்கப் பெரிதும் உதவுவார் என நம்பிக்கையோடு இருந்த ஜெயலலிதாவுக்கு இந்திரா காந்தியின் படுகொலை பெரும் இடியாக விழுந்தது.



மனோரமா:
‘ஆச்சி’ என்று திரை உலகினரால் அன்போடு அழைக்கப்பட்ட மனோரமாவும் ஜெயலலிதாவும் திரைப்படங்களில் நடிக்கும்போதிருந்தே நல்ல தோழிகள். பல திரைப்படங்களில் இணைந்து நடித்ததன் மூலம் நட்பு இன்னும் வலுப்பட்டது. தனிப்பட்ட வாழ்வில் ஏற்றம், சரிவு ஏற்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர். ஜெயலலிதா அரசியலுக்கு வந்தபிறகு, மனோரமா அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தார். மனோரமா இறந்தபோது, ஜெயலலிதா சிறுதாவூரில் இருந்தார். பரபரப்பான அரசியல் சூழல்நிலவிய நேரம் அது. ஆனாலும் அங்கிருந்து வந்து அஞ்சலி செலுத்தினார். ‘தன் அம்மாவுக்குப் பிறகு, தன்னை Ôஅம்முÕ என பாசத்தோடு அழைக்கும் மனோரமா, தனக்கு மூத்த சகோதரி என நினைவுகூர்ந்தார்.



சசிகலா:
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாகக் கருதப்படுவர் சசிகலா. தமிழ்நாடு அரசின் செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராசனின் மனைவி. வீடியோ கேசட் வாடகைக்கு விடும் கடையை நடத்தி வந்தவர். ஜெயலலிதா அறிமுகமான சிறிது காலத்திலேயே அவரின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார். பின்னாட்களில் போயஸ் கார்டனிலேயே குடியேறும் அளவுக்கு இவரின் நட்பு வளர்ந்தது. இவரின் சகோதரி மகன் சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுத்து பிரமாண்ட திருமணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவின் நிழலாக தொடரும் அளவுக்கு அவரின் நம்பிக்கையைப் பெற்றவர். வெற்றியிலும் தோல்வியிலும் கூடவே இருக்கும் இவர்களின் நட்பில், சில நேரங்களில் உரசல்கள் வந்தபோதிலும், இன்று, ஜெயலலிதாவின் உடல் அருகே கலங்கி நிற்கும் வரை உடன் இருப்பவர்

VIKATAN NEWS

எல்லோருக்கும்

எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் ஜெயலலிதாவைப் பிடித்திருப்பது ஏன்?


நடு வீட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூத உடலை, மயானத்துக்கு தூக்கிச் செல்லும் அந்த நொடியில், அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் பீறிட்டு வெளிப்படும். அத்தனை சொந்தமும் வெடித்து அழும். கலங்காத மனமும் கலங்கும்.

அப்போலோவில் இருந்து போயஸ்கார்டனுக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டதும், ‛முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பூத உடல்...’ என செய்தி சேனல்கள் உச்சரித்த நொடியிலேயே, அதிமுக அல்லாதவர்களின் கண்களிலும் கண்ணீர். அப்போது டிவிகளில் ஒளிபரப்பான ஜெயலலிதாவின் சிரித்த முகம் ரொம்பவே வாட்டியது. இதைப் பார்க்க முடியாது வெளிய வந்த பக்கத்து வீட்டுக்காரர், 'இத்தனைக்கும் ஜெயலலிதாவை எனக்குப் பிடிக்காது. செத்துட்டாங்கன்னு தெரிஞ்சதும் ஏனோ கலங்குது' என்றார்

அவரைப் போலவே, ‛ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்...’ என பலரும் கலங்கினர். ‛பள்ளியைமுடித்து வெளியே வந்ததும்தான் கண்டிப்பான ஆசிரியர்கள் மீதான மரியாதை துளிர்விடத் துவங்குகிறது’ என நண்பர் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். யோசித்துப் பார்த்தால், ஆதரவாளர்களை விட எதிர்ப்பாளர்களே ரொம்பவும் ஆதங்கப்படுகின்றனர். உண்மை அது. ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர்கள்தான் இன்று கலங்கி நிற்பது விநோத முரண்.

ராஜாஜி - பெரியார் இருவரும் கொள்கை ரீதியாக கடைசி வரை முட்டிக் கொண்டவர்கள். ஆனால் ராஜாஜி இறந்தபோது பெரியார் கலங்கி அழுதார். இன்று ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடம் கருணாநிதிக்கே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கும். குறைந்தபட்சம், தனக்கு நிகரான ஒரே எதிரியும் இனி இல்லை என்றாவது நினைத்திருப்பார். எதிரியை பட்டவர்த்தனமாக வெற்றியாளன் என அறிவிக்க, மரணம் தேவைப்படுகிறது.

ஜெயகாந்தனை ஒருவன் ஆழ்ந்து படித்திருக்கவே மாட்டான். ஏன் அவரைப் பிடிக்கும் என கேட்டால் ‛அவர் சிங்கம் மாதிரி, அந்த ஆளுமை, அந்த திமிர், மீசையை முறுக்கி விடுறது’ என அடுக்குவான். அதேபோலத்தான் இன்று. ஜெயலலிதா இறந்ததும் எல்லோரும் இப்போது அந்த ஆக்ருதியைத்தான் பேசுகிறோம். நேற்று வரை திமிர் என்று சொன்னவன் இன்று மிடுக்கு என்கிறான். அகம்பாவம் என்றவன் இன்று போர்க்குணம் என்கிறான். அவரது ஆணவம் கம்பீரமாகப் பார்க்கப்படுகிறது. ‛இரும்பு மனுஷி’ என பெருமையாக சொல்கிறார்கள். இத்தனை நாள் ”இவ்வளவு திமிரா” என கோவப்பட்டவர்கள் எல்லாம், இனிமேல் இப்படியொரு பெண்ணை பார்க்க முடியுமா என ஏங்குகிறார்கள்.

சில சமயங்களில் நிசப்தம் பயங்கரமானது. ஓயாது அடம் பிடிக்கும் குழந்தை, கொஞ்ச நேரம் அமைதியாக தூங்கினால், எதாவது சேட்டை பண்ண மாட்டானா என மனம் ஏங்கும் இல்லையா? ஜெயலலிதாவை இத்தனை நாள் எதிர்த்தவர்கள் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கின்றனர். ‛ஜெயலலிதா முதல்வரா இருந்ததால் எனக்கு எந்த பலனுமே இல்லை. ஆனா, அவங்க இல்லைன்னதும் தமிழ்நாடு அநாதை மாதிரி ஆயிடுச்சேன்ற நினைப்பு வந்திருச்சு. தார்மீக பலம் இல்லாத பயம் வந்திருச்சு’ என்பதே அரசியல் வாடையே இல்லாதவரின் கருத்து. கிட்டத்தட்ட, 75 நாட்கள் மனதை தயார்படுத்தியே, இப்படியொரு சூழல் எனில், பட்டென செப்டம்பர் 23-ம் தேதியே இறந்து விட்டதாக அறிவித்திருந்தால், என்ன ஆயிருக்கும்?

‛ஆணவக்காரி’ என திட்டிய பெண்கள் கூட, இன்று இமயம் சரிந்து விட்டதாகவே உணர்கின்றனர். , ‛அவங்க என்னுடைய ரோல் மாடல்டா. அவங்க. உங்களை எல்லாம் காலில் போட்டிருந்தாடா’ என உள்ளூர பெருமை கொண்டிருந்த பெண்கள், இந்த மரணத்தை பெண்மையின் மரணமாகப் பார்க்கின்றனர்.

பிரிவினால்தானே பிரியத்தின் மொழியைப் பேச முடியும். இவ்வளவு பேருக்கு ஜெயலலிதாவைப்பிடிக்கும் என்பதே ஆச்சரியம்தான். ரத்த சொந்தம் யாரும் இல்லாததும், இந்த பரிதாப காட்சிகளும் காரணமாக இருக்கலாம். சொந்தமே இல்லாமல் இப்போது தனியாக இருப்பதைப் பார்த்தால் அவ்வளவு திமிர் இல்லாவிடில், பொதுவாழ்க்கையை எப்படி சமாளித்திருக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது.

‛ஜெயலலிதாவைச் சுற்றி நிற்கும் யார் முகத்திலும் துக்கம் இல்லை. கோரம்தான் இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் இந்த அம்மா எப்படி சாந்தமாக இருந்திருக்க முடியும்? அப்ப இந்த அம்மா இத்தனை நாள் இந்த வலி எல்லாம் பொறுத்திட்டுதான் இருந்திருக்கு’ என்பது ஒரு ர.ர.வின் கேள்வி.

எது எப்படியோ, அவர் மரணம் புனிதத்தன்மையை ஏற்படுத்தி விட்டுச் சென்று விட்டது. தன் மீதான விமர்சனத்துக்கு முற்றப்புள்ளி வைக்க ஜெயலலிதாவுக்கு மரணம் தேவைப்பட்டிருக்கிறது. என்ன செய்தால் என்னை விமர்சிப்பதை நிறுத்துவீர்கள் என்ற கேள்வி அவரைத் துரத்திக் கொண்டே இருந்திருக்கும் அல்லவா? மரணம்தான் அதன் பதில். அது அவருக்கு கடைசி வரைக்கும் தெரியவே இல்லை.

சமூக வலைதளத்தில் ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார். “ எல்லோருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் அவரைப் பிடித்தேதான் இருந்தது.! ”

எம்.ஜி.ஆர். இறந்த அன்று.... ஜெயலலிதா இறந்த அன்று... சென்னையில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது?



அன்று...

24.12.87...வியாழக்கிழமை காலை 7 மணி அளவில் தான் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மரணம் என்கிற செய்தி ஊர்ஜிதமாக நகரினுள் பரவியது.தொண்டர்கள் செயலிழந்து கதறித்துடிக்க, பல சமூக விரோதிகள்...இந்த சோகமான நேரத்தை வசதியாகப் பயன்படுத்திக்கொண்டனர். திறந்திருந்த ஒட்டல்களில் டீ குடித்துவிட்டு, காசு கொடுக்காமல் கடைக்காரர்களைத் தாக்கினார்கள். கோடம்பாக்கம் பகுதியில் நான்கு டீக்கடைக்காரர்கள் காயம் அடைந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்போக, ’உங்களை யாருய்யா கடையை திறக்கச் சொன்னது? உயிரோட வந்திருக்கீங்களே...இதுவே பெரிசு!’ என்று சொல்லி விரட்டினார்கள். வாகனங்களில் செல்பவர்களின் மீது கல்லெறியும் கலாட்டா துவங்கியபோது, காலை மணி எட்டு. நுங்கம்பாக்கம் வள்ளுவர் சிலையருகே ஒரு மாருதி காரை துவம்சம் செய்தார்கள். அண்ணா சாலையின் இருபுறமும் சவுக்குக் கம்புகளால் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. அந்த சவுக்குக் கம்புகளை ஆளுக்கொன்றாய் உருவிக்கொண்டு சைக்கிளில் செல்பவர்கள் மீது கூட அடித்து சந்தோஷப்பட்டார்கள். ஆயிரம் விளக்குப் பகுதியில் ஒரு ஜவுளிக்கடை, மாடியில் தையல்கடை போன்றவற்றைச் சூறையாடினார்கள். அண்ணா மேம்பாலம் முதல் அண்ணா சிலை வரையிலான பகுதிகளில் இருந்த கடைகள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளானது. அண்ணா சாலையில் இருந்த முக்கிய பிரமுகரின் சிலையை சேதப்படுத்தினார்கள்.



அன்று இரவு நிலைமை இதைவிட மோசமானது. திருவல்லிக்கேணி பகுதியில் சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர், பைக் போன்ற எல்லா வாகனங்களின் பெட்ரோல் டாங்கிலும் மணலை போட்டுவிட்டுப் போனது ஒரு கும்பல். மைலாப்பூர் பகுதியில் ஒரே நாளில் 47 சைக்கிள்கள் காணாமல் போயின. தேனாம்பேட்டை பகுதியில் 12 வயது சிறுவனின் உடல் மீது மண்ணெண்ணை ஊற்றிவிட்டு, தீ வைத்துவிடுவோம் என்று மிரட்டி பணம் வசூல் செய்து கொண்டு நகர்ந்தது.

அமைந்தகரை பகுதியில் வீடு வீடாகப் போய், கதவைத் தட்டி டிபன் கேட்டார்கள். இல்லை என்று சொன்ன வீடுகளில் கல் எறிந்து கலாட்டா செய்தார்கள்.

சென்னை சென்ட்ரலுக்கு வந்த ரயில்களெல்லாம் சில சமூக விரோதிகளால் கற்களால் அடித்து நொறுக்கப்பட்டு, எண்ணூர் அருகேயே நிறுத்தப்பட்டுவிட்டன. பாவம்... பயணிகள் கம்பார்ட்மென்ட் கதவுகளை இறுக்கமாக மூடியபடி, நடுங்கியபடி காத்திருந்த காட்சிகள் அரங்கேறின.

ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உடல், டிரக்கில் ஏற்றி மெரீனா பீச்சில் இறுதி அடக்கம் செய்ய இறக்கினார்கள். ஆங்காங்கே நின்ற கும்பல் சமாதி அருகே வரத் துடிக்க, ஏக கலாட்டா. போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப்படை அவர்களை அடக்க படாத பாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்டது. பதிலுக்கு கும்பல் தரப்பில் மண்ணையும் கற்களையும் எறிந்தனர். நிலைமை கட்டுக்கு அடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. கும்பலில் இரண்டு, மூன்று பேர் சுருண்டு விழுந்தனர்.

சஃபையர் தியேட்டர்

’ஒரு பெரிய கூட்டம் கம்பெல்லாம் வைத்துக்கொண்டு தியேட்டர் உள்ளே இருக்கும் ஷோரூமை உடைத்து ஃபர்னிச்சர்களை எடுத்துட்டுப் போயிட்டாங்க. இவற்றுடைய மொத்த மதிப்பு சுமார் 30 ஆயிரம்!’’ என்றார் தியேட்டர் மேனேஜர் அப்புண்ணி.

ஸ்பென்ஸர்

இதன் துணைத் தலைவர் ராமானுஜம், ‘’கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக விதவிதமான கேக் செய்து வைத்திருந்தோம். பேக்கரி செக்ஷனை உடைத்து, கேக்குகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார்கள். பக்கத்தில் அழகழகான சர விளக்குகள் விற்பனை செய்யும் செக்ஷன். பல பொருட்கள் சேதம். எல்லாம் சேர்த்து சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு நஷ்டம்!’’

அந்தக் காலகட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்தவர் வால்டேர் தேவாரம். உளவுப்பிரிவில் 12 வருட அனுபவம் உள்ள அதிகாரியான இருதயதாஸ், கூடுதல் டெபுடி கமிஷனராக இருந்தார். எம்.ஜி.ஆர். இறந்த அன்று பாதுகாப்புக்காக சுமார் 7 ஆயிரம் போலீஸாரை நியமித்திருந்தனர். இருந்தும், பயங்கர கலவரம் நடந்தன. எம்.ஜி.ஆர் உடலைப் பார்க்க கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும் லட்சக்கணக்கான ரசிகர்களும் பொதுமக்களும் திரண்டு சென்னைக்கு வந்துவிட்டனர். நேரம் ஆக, ஆக பசியெடுத்து. இரண்டு நாட்கள் பயணம் செய்து வந்ததால், மாற்று உடை இல்லை. கைச் செலவுக்கு பணமில்லை. முக்கிய சாலைகளில் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. அவற்றைப் பார்த்ததும், கும்பலுக்கு ஏக குஷி. சூறையாட ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களை விரட்டியடிக்க.. ஆங்காங்கே கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, தடியடி, சில இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தவேண்டிய அளவுக்கு நிலைமை சீரியஸானது.



ஜெயலலிதா காலமான இன்று..!

கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர் இறந்த காலகட்டத்தில் நடந்த கலவரங்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது சென்னையில் நடந்த கலவரங்கள். இந்த இரண்டையும் நேரில் பார்த்த சென்னைவாசிகளில் பலர் டிசம்பர் 4-ம் தேதியன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு செய்தி வெளியானதும், மிரண்டு போனார்கள். சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டு விடுவார்களோ? என்று பதட்டமானார்கள். வர்த்தக நிறுவனம் நடத்துகிறவர்கள் கடைகள் சூறையாடப்படுமோ என்று டென்ஷனில் தவித்தார்கள். ஆனால்... எல்லோரின் பயத்தைப் போக்கும் வகையில் எந்தப் பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் சென்னை போலீஸ் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், உளவுப்பிரிவு கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் போன்றவர்கள் அவசரமாக கூடி விவாதித்தனர். அவர்கள் திட்டமிட்டதை கனகச்சிதமாய் செயல்படுத்தினார்கள். அதன் எதிரொலியாக... ஜெயலலிதா இறந்த நாளன்று சென்னையில் வழக்கம்போல் டூ வீலர்கள், கார்கள் ரோடுகளில் ஓடின. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தாலும், ஆங்காங்கே சில கடைகள் திறந்திருந்தன. நடமாடும் டீக்கடைகள் ஆங்காங்கே முளைத்தன.





கடந்த டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி பரவியது. உடனடியாக அப்போலோ மருத்துவமனை முன்பு மக்கள் கூட்டம் அலைமோதின. நேரம் கடந்து செல்லச் செல்ல... ஜெயலலிதா உடல்நிலை பற்றிய வதந்திகள் தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கின. இதனால் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். அதோடு ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. இந்த சமயத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தததோடு, அவரது உடல் நலம் கவலைக்கிடமாக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டது. இது அ.தி.மு.க தொண்டர்கள் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், அன்றிரவு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. சென்னை முழுக்க ’விசிபிள் போலீஸ்’என்கிற பேனரில் ஆயிரக்கணக்கான போலீஸார் வலம் வந்துகொண்டிருந்தனர். மறுநாள் விடிந்தது. 05.12.16...திங்கட்கிழமை. பகல் முழுக்க அமைதியாகக் கழிந்தது. மாலையில், முக்கால்வாசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நேரம் முடிவதற்கு முன்பே, வீட்டுக்கு போகச் சொல்லிவிட்டன.

மாலை நேரத்தில் திடீரென்று ஒரு தனியார் தொலைக்காட்சி, ஜெயலலிதா காலமானார் என்று தவறுதலாக செய்தியை ஒலிபரப்பியது. அதையடுத்து, சென்னையில் ஒருவித பதட்டம் தொற்றிக்கொண்டது. அப்போலோ வாசலில் போலீஸாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டு அது மோதலானது. ஆஸ்பத்திரிக்குள் தொண்டர்கள் நுழைய முயல்கிறார்கள் என்கிற செய்தி ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கு எட்டியதும், ‘ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடர்கிறது” என்று அறிவித்தது. அப்போதைக்கு பரபரப்பு அடங்கியது.

ஆனால், அன்று இரவு 11.45 மணிக்கு அப்போலோ தரப்பில் ஜெயலலிதா காலமானார் என்று அறிக்கை வெளியானது. ஜெயலலிதாவின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்ட சில அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோ மருத்துவமனைக்குள் நுழைய முயன்றனர். அப்போது காவலர்களுக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் லேசான தடியடி நடத்தி நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பெரியமேடு பகுதியில் அ.தி.மு.கழக வட்டச் செயலாளர் ஒருவர் கடைகளை மூடச் சொல்லி ரகளை செய்ய...போலீஸுக்கு தகவல் போனது. அவரை ரவுண்டு கட்டி அலேக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிச் சென்றனர். இந்தத் தகவல் சென்னை முழுக்க உள்ள அ.தி.மு.கழக பிரமுகர்களுக்குப் பரவியது. அவ்வளவுதான்... அ.தி.மு.க-வினர் அமைதியானார்கள்!

போலீஸார் தரப்பில், ’பொதுமக்கள் போர்வையில் கலவரம் தூண்டும் சமூக விரோதிகள் கலந்துவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினோம். சில ரகசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் பலர் கண்காணிக்கப்பட்டதோடு, எதிர்கட்சியினரின் வீடுகளுக்கும் பாதுகாப்பை பலப்படுத்தினோம். மத்திய அரசும், தமிழகத்துக்கு பாதுகாப்பு பணிகளுக்கு துணை ராணுவம் அனுப்பத் தயாரானது. சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் இறக்கிவிடப்பட்டனர். 7 கூடுதல் கமிஷனர்கள், 4 இணை கமிஷனர்கள், 18 துணை கமிஷனர்கள், 60 உதவி கமிஷனர்கள், 300க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் களத்தில் இறக்கிவிடப்பட்டனர். பக்கத்து மாவட்டங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ராஜாஜி அரங்கம், எம்.ஜி.ஆர் சமாதி உள்ளிட்ட இடங்களில் போலீஸார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்ப்பட்டனர்!’’ என்றனர்.

இதற்கிடையில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் இருந்து முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் 'விடுமுறையில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். காவல் நிலையங்களுக்குத் தேவையான காவலர்களை வைத்துக் கொண்டு மீதமுள்ள 75 சதவிகிதம் காவலர்களை ரோந்து, பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து இணை கமிஷனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப தனியார் வாகனங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம்' என்று ஜார்ஜ் உத்தரவிட்டு இருந்தார்.

மேலும், சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக சாரங்கன், ஜெயராமன் என்ற இரண்டு ஐ.ஜிக்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஐ.ஜி சாரங்கனுக்கு சென்னையில் உள்ள மூலைமுடுக்கெல்லாம் அத்துப்படி. இதனால் காவல்துறை ரோந்துப் பணி தொய்வில்லாமல் நடந்தது. உடனுக்குடன் வாக்கி டாக்கி மூலம் உத்தரவுகள் பிறக்கப்பிட்டன. இரவு முழுவதும் காவல்துறை வாகனங்கள் நகர் முழுவதும் உலாவந்தன.

அப்போலோவிலிருந்து ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு திரண்டிருந்த அ.தி.மு.கவினருக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டு இருந்த தடுப்புகள் தகர்த்தெறியப்பட்டன. டிசம்பர் 6-ந் தேதி காலை ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த சிலர் இரும்புத்தடுப்புகளை உடைத்துக்கொண்டு குறுக்குவழியில் உள்ளே நுழைந்தனர். அதைப் பார்த்த போலீஸார் அவர்களை துரத்திச் சென்று தடியடி நடத்தினர். இந்த களேபேரத்தில், பத்துக்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களில் சிலருக்கு போலீஸாரே தண்ணீர் குடிக்க கொடுத்து மயக்கம் தெளிய வைத்தனர். முன்எச்சரிக்கையுடனும், பாதுகாப்புட ஏற்பாடுகளுடன் செயல்பட்ட காவல்துறையால் கலவரமில்லாமல் அமைதியாக ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் முடிந்தது!

- எஸ்.மகேஷ்

ஒரு பெண் முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபம் அல்ல: தமிழிசை புகழஞ்சலி

இடது: ஜெயலலிதா, வலது: தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.
ஒரு பெண் அரசியல்வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

ஜெயலலிதா மறைவு குறித்து தமிழிசை இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''மீண்டும் மீண்டு வருவார் என்று நினைத்து கொண்டிருந்த நேரத்தில் மாண்டுபோனார் என்ற செய்தி பேரிடியை நன்மை தாக்கி இருக்கிறது. ஒரு துணிச்சல் மிக்க தலைவரை ஒரு மனிதாபிமான தலைவரை மரணம் இன்று கொண்டு சென்றிருப்பதை மனது ஏற்க மறுக்கிறது. தீர்க்கமாக முடிவெடுக்கும் தலைவருக்கு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை சிந்திக்க மனது மறுக்கிறது.

அம்மா அம்மா என்று அழைக்கப்பட்ட அந்த தாய் உள்ளம் இன்று இல்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் மறுக்கிறது, ஜெ என்ற பெருமை ஆண்டிருந்தது, தற்போது வெறுமை தமிழகத்தை சூழ்ந்திருக்கிறது. அவரின் இழப்பை தனிப்பட்ட இழப்பாகவே நான் கருதுகிறேன். ஒரு பெண் அரசியல் வாதியாக முன்னுக்கு வருவதும் முதல்வர் ஆவதும் சுலபமான காரியம் அல்ல.

உடல்நலம் சரியில்லாதபோதும் கடுமையாக உழைத்து, கடுமையாக சுற்றுப்பயணம் செய்து தன் கட்சியை வெற்றி பெற செய்த மரியாதைக்குரிய ஜெயலலிதா முழுவதுமாக முடியும் வரை முதல்வராக இருப்பார் என்று நினைத்தபோது முதல்வராக இருக்கும்போதே அவருக்கு முடிவு வந்திருப்பதை நம்ப முடியவில்லை.

உடல் நிலை தேற வேண்டும் என இறைவனை பிரார்த்தித்தோம், இன்று இழப்பை தாங்கும் உறுதியை இறைவன் தர வேண்டும் என பிரார்த்திப்போம். அவர்களின் தொண்டர்கள் தனது தாயை இழந்து தவிக்கிறார்கள், அவர்களுடனும் தமிழக மக்களுடனும் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துகொள்கிறேன்.

மரியாதைக்குரிய ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஒரு துணிச்சலை துணிச்சலாக கொண்டு செல்லும் துணிச்சல் மரணத்திற்கு எப்படி வந்தது என்று வியந்து கொண்டிருக்கிறேன், அழுதும் கொண்டிருக்கிறேன். தமிழக பாஜக வின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம்... எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?
 Poet Vairamuthu condoles for Jayalalithaa's demise
ஜெயலலிதா என்ற கலையோடு கூடிய அரசியல் சரித்திரம் மரணத்தின் முற்றுப் புள்ளியோடு முடிந்திருக்கிறது. ஆணாதிக்கமிக்க அரசியலில் தான் ஒரு திண்ணென்ற பெண்ணென்று நின்று காட்டியவர் வென்று காட்டியவர் தன் போராட்டத்தை முடித்துக் கொண்டுவிட்டார். மாண்டியா மாவட்டம் மேல்கோட்டையில் பிறந்தவர் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலே தன் நீண்ட வாழ்க்கையை நிறைவு செய்திருக்கிறார்.

அவர் செய்த சாதனைகள் இன்னொரு பெண்ணால் எட்டமுடியாதவை. ஒரு கலையரசி புவியரசி ஆக முடியுமென்றது ஒரு சாதனை. ஒரு நட்சத்திரம் நிலவாக நீண்டது ஒரு சாதனை. திராவிட இயக்கத்தின் ஒரு கிளையின்மீது ஒரு பிராமணப் பெண்மணி பேராதிக்கம் செலுத்தியது ஒரு சாதனை. கலையுலகில் 'அம்மு' என்று அறியப்பட்டவர், அரசியல் உலகில் 'அம்மா' என்று விளிக்கப்பட்டது ஒரு சாதனை. தமிழ்நாட்டிலிருந்து ஒரு 'பிரதமர் வேட்பாளர்' என்று தன்னைப் பிம்பப்படுத்தியது பெருஞ்சாதனை. போராட்டங்களால் சூழப்பட்டது அவரது வாழ்வு. ஆனால் எந்த நிலையிலும் அவர் தன் கர்வப் பெருமையைக் கரைத்துக் கொண்டதில்லை. மழையில் நனைந்தாலும் சாயம்போகாத கிளியின் சிறகைப்போல இழிவுகளுக்கு மத்தியிலும் அவர்தன் இயல்புகளை மாற்றிக்கொண்டதில்லை.

 உறுதி என்பது அவர் உடன்பிறந்தது. ஒருமுறை கர்நாடகத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது, கன்னடப் போராளிகளால் சூழப்பட்டார். 'கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக' என்று முழங்குமாறு வற்புறுத்தப்பட்டார். 'கன்னடம் வாழ்க' என்று சொன்னாலும் செல்வேனே தவிர எந்த நிலையிலும் 'தமிழ் ஒழிக' என்று கூறமாட்டேன் என்று துணிந்து நின்று வன்முறைக்கு நடுவிலும் வழிமாறாதவர் மொழிமாறாதவர் ஜெயலலிதா. கலைத்துறையில் அவர் பதித்த தடங்கள் அழகானவை; அழியாதவை. அவரைத் தவிர யாரும் ஆட முடியாது என்ற நடனங்களும், அவரைத் தவிர யாரும் நடிக்க முடியாது என்ற காட்சிகளும் அவருக்கே சொந்தம். 'எங்கிருந்தோ வந்தாள்' படத்தில் அவர் காட்டிய குணச்சித்திரம் கொண்டாடத்தக்கது. 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் இறந்ததாக அவர் நடித்தபோது மரணத்திற்கே ஒரு செளந்தர்ய ஒய்யாரம் தந்திருப்பார். 'ஆயிரத்தில் ஒருவனில்' அவரது அழகு சந்தனச் சிலையா சந்திர கலையா என்று சொக்க வைக்கும்.

 சந்தியாவின் மகளாய்ப் பிறந்தார்; இந்தியாவின் மகளாய் மறைந்தார். எல்லோர்க்கும் வாய்க்காது இந்தச் சரித்திரம். அவர் உயிரோடிருந்தபோது இந்தப் புகழ்மொழியைச் சொல்லமுடியாத சூழ்நிலையில் இருந்த நான், அவர் இறந்த பிறகு சொல்கிறேனே என்ற துயரம் இறப்பின் வலியை இருமடங்கு செய்கிறது. மறைந்தும் மறையாத கலையரசிக்கு ஒரு ரசிகனாக என் அஞ்சலிப் பூக்களை அள்ளித் தெளிக்கிறேன். எனக்கே ஆறுதல் தேவைப்படும்போது நான் யாருக்கு ஆறுதல் சொல்வது?

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/poet-vairamuthu-condoles-jayalalithaa-s-demise-269087.html

Jayalalithaa dies: December a fateful month for Tamil Nadu?

CHENNAI: December seems to be jinxed for Tamil Nadu as it witnessed yet another major loss with AIADMK supremo and Chief Minister J Jayalalithaa joining a list of iconic leaders whose end came in the last month of the year.

While AIADMK founder and charismatic actor-turned politician MGR died on December 24, 1987, his protege Jayalalithaa breathed her last yesterday (December 5), in a tragic coincidence of their end coming in the same month.

Both leaders had also gone through prolonged period of illness before their end came.

C Rajagopalachari, the last Governor General of India, passed away on December 25, 1972 while rationalist leader "Periyar" E V Ramasamy died on December 24, 1972, both aged 94.

Nature too had played havoc with citizens of the state in the last month of the year.

The killer tsunami of 2004 struck on December 26, while the torrential unprecedented downpour in December 2015 left a scar in the minds of many harried citizens of Chennai, Kancheepuram, Cuddalore, Tiruvallore and Thoothukudi.

Jayalalithaa: A warrior queen with welfare heart who won many a war

Jayalalithaa: A warrior queen with welfare heart who won many a war

CHENNAI: Leading a rump AIADMK after MGR's death, Jayalalithaa had lost the 1989 assembly election. Down and apparently wanting to opt out, she wrote a letter to the assembly Speaker saying she was resigning as MLA. She didn't send the letter, but, mysteriously enough, it made its way to the Speaker who said he was accepting the resignation. Enraged by this, Jayalalithaa dug in her heels and swept the polls in 1991. This was not the only time she chose to fight back and win when her opponents sought to corner her.

Tragedies and setbacks were never a stranger to Jayalalithaa. She lost her father early and her mother just when she was stepping into adulthood. She could never settle into never settle into the domestic, married life she year ned for. When her film world mentor MGR brought her into politics, the bigwigs with in the party threw a fit. Some of them rebelled openly . But, for her, life was as much about coming out on top in the big bad world of movies as it was about staving off challenges in the murky, male-dominated world of politics.

Jayalalithaa's political graph was an improbable one. Though born and raised in a Brahmin family, she seized the initiative in a party of the Dravidian movement known for its antipathy to Brahmins. From film star and political novice to fierce protector and mother-figure for the people, she reinvented herself often. For Tamil women - her mass base - she showed what a woman can do in a man's world. They identified with her personal story, her seemingly indomitable spirit.

Critics chafed at Jayalalithaa's take-no prisoners approach. Remember when her growing demands brought down the Vajpayee government in 1998. Even in Cauvery her last policy battle - she chose to fight it out in courts till the end rather than negotiate.

Allegations of corruption dogged her for nearly 20 years. The cases against her were often watertight and judges found them compelling. She was convicted four times, yet managed to shake loose legal shackles and come back to power. Jayalalithaa's earliest training ground may have moulded her political ideas.

Her mentor MGR had given her a key role in putting together the landmark noon-meal scheme that has been lauded for its audacity as well as for achieving key social goals like boosting school enrolment and cutting down dropout levels. Taking welfare politics to heart - the subsidised Amma canteens were only a recent example - she expanded it to freebies that reinforced her stern but caring mother image.


Jayalalithaa inherited MGR's AIADMK, whose rank and file comprised the lowest rungs of Tamil society , and presided over it as its unquestioned leader. Under her, novices who demonstrated their loyalty found themselves catapulted into the big league; they also faced the axe when they crossed the line. They queued up to fall at her feet, irrespective of age, and she seemed to tower over them.


When parties everywhere seemed to prefer coalitions, she boldly went alone and won. In the 2014 Lok Sabha poll marked by the national Modi wave, the AIADMK scored nearly 45% of the votes, on its own, and won 37 of the 39 seats in the state. This year in Tamil Nadu, for the first time in more than 30 years, the AIADMK bucked the trend of regime change.

Just as it reached its apogee in terms of mass base, AIADMK finds itself in trouble. With Jayalalithaa at the helm, there was little room for any other leader with mass appeal in the party .Without her, the party stares at a political vacuum.

மக்கள் வெள்ளத்தில் ’மக்களால் நான்.. மக்களுக்காக நான்… ஜெயலலிதா’


’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவியான ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி இல்லத்தில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சென்னை அப்போலோவில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். போயஸ் கார்டன் இல்லத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்தபின்னர், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட ஜெயலலிதா உடல் மீது படை வீரர்கள் மூவர்ண தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.

’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய ஒரு வலிமையான அரசியல் ஆளுமை மிக்க தலைவி ஜெயலலிதாவின் உடல் மீது மூவர்ண தேசிய கொடியும் அவருக்கு பிடித்தமான பச்சை நிற பட்டுப்புடவை போர்த்தி கண்ணுறங்கிறார்.

’மக்களால் நான்.. மக்களுக்காக நான்…’ என முழங்கிய வீரமங்கையின் உடல் அவரது மக்களின் கண்ணீர் கடலில் மிதந்து வருகிறது. அவரது உடலுக்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த மக்களின் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அங்கு உள்ள அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மக்கள், திரையுலகினர் என வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல்

karunanidhi

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கட்சிகளைப் பொறுத்து வேறுபாடுகள் இருந்தாலும்,அதிமுக கட்சியின் நலன்களுக்காக துணிச்சலோடு காரியங்களை ஆற்றியவர் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் வேற்றுக் கருத்து இருக்க முடியாது.அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை இழந்து வாடும் அவருடைய கட்சி தொண்டர்களுக்கும் லட்சக்கணக்கான தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு பிடித்தமான யானைகள்

jeya6


யானைகளின் மனதையும் அறிந்தவராக முதல்வர் ஜெயலலிதா திகழ்ந்தார். ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டார். யானைகள் தனக்கு மிகவும் பிடித்தமானவை என்பது குறித்து ஜெயலலிதாவே கூறியதாவது:
நீரும் நெருப்பும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக முதுமலை காட்டுக்குச் சென்றிருந்தேன். அந்தப் படத்தில் எம்ஜிஆர் கதாநாயகன். நாங்கள் இருவரும் நடித்த ஒரு காதல் காட்சியில் நிறைய யானைகள் இடம் பெற்றன. முதுமலைக் காட்டில் மரங்களை வீழ்த்துவது, அந்த மரங்களை வெட்டும் இடத்துக்கு கொண்டு சேர்ப்பது, வெட்டிய மரத் துண்டுகளை வரிசையாக அடுக்கி வைப்பது, பின்னர் அவற்றை லாரிகளில் ஏற்றுவது போன்ற பணிகளுக்காக யானைகள் பயன்படுத்தப்பட்டன.
அந்த யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, நன்றாகப் பழக்கப்படுத்தப்பட்டு மிகவும் சாதுவாக இருந்தன. அங்கே அவற்றில் மிகப்பெரிய யானை ஒன்று என் கவனத்தை ஈர்த்தது.
அந்த யானை குறித்து பாகன் சொன்னவை:
அந்தப் பாகனுக்கு மிகவும் அழகான இளம் மனைவி இருந்தாளாம். ஆனால், அவள் மிகவும் முன் கோபியாம். அண்மையில் பாகனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏதோ மனப் பூசல் ஏற்பட, இருவருக்கும் இடையே வாய்ச்சண்டை வலுத்தது. இதனால், கோபம் அடைந்த பாகனின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறி, தனது பிறந்த வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்காக எத்தனையோ முறை அங்கு சென்று பாகன் அவளைத் தன்னுடன் திரும்பி வருமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்ட போதிலும், அந்தப் பெண் பிடிவாதமாக வர மறுத்துவிட்டாள். இதனால், சோகத்துடன் பாகன் இருந்து வந்துள்ளான்.
ஓர் இரவு எப்படியோ அந்த யானை, பூட்டப்பட்டிருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல், 15 மைல் தொலைவில் இருக்கும் பாகனின் மனைவி ஊருக்குப் புறப்பட்டுவிட்டது. நேராக அந்த ஊருக்குச் சென்று, பாகன் மனைவி இருக்கும் வீட்டை உடைத்து, அவன் மனைவியைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டதாம்.
யானை என்பது அதிசயப் பிறவி. விலங்குகளில் ராஜா யானைதான் என்று குறிப்பிட்டார் ஜெயலலிதா.
குருவாயூர் உள்ளிட்ட பல கோயில்களுக்கு யானைகளை முதல்வர் ஜெயலலிதா தானமாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி வெற்றி மேல் வெற்றி குவித்த ஜெயலலிதா

jeya4

ஆணாதிக்கம் நிறைந்த அரசியலில் தனியொரு பெண்ணாகக் களம் இறங்கி, சாமானியத் தொண்டர்கள் நிறைந்த அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா.
அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, அந்தக் கட்சியைத் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியவர் ஜெயலலிதா. கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களையும், தொண்டர்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அரசியல் வித்தகர். "அம்மா என்ன சொன்னாலும் சரி...அம்மா எடுக்கும் முடிவு சரியாகத்தான் இருக்கும்' என்று கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் அவருக்குப் பின்னால் அணி திரண்டு நிற்கும் அளவுக்குக் கட்சியை தனது விரல் அசைவில் வைத்திருந்தவர்.
தவறுகளையும் திருத்தத் தயங்காதவர்: கடந்த 2001, பேரவைத் தேர்தலுக்கான அதிமுக அறிக்கை தயாரிப்பின் போது கட்சிக்குள் ஒரு விவாதம் எழுந்தது. விவசாயத் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு தொடர்பாக பிரச்னை எழுப்பப்பட்டது. ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக பெண் தொழிலாளர்களுக்கும் கூலியை வழங்குவோம் என்ற அறிவிப்பை தேர்தல் அறிக்கையில் வெளியிடலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஆனால், இந்தக் கருத்தை அதிமுக நிர்வாகிகள் சிலர் மறுத்து, அது கிராமத்தில் சரியாக எடுபடாது என்றனர். இதுகுறித்து நேரடியாக விசாரித்து, அதன் உண்மை நிலையை அறிந்து அந்த அறிவிப்பை வெளியிடாமல் கைவிட்டார் ஜெயலலிதா.
கட்சியினரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாலும், அவர்கள் ஏதேனும் கருத்தைக் கூறினால் அதுதொடர்பாக மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் அதன் உண்மை நிலையை ஆய்ந்து அறிந்து அதைச் செயல்படுத்தத் தயங்காதவர்.
அதிமுக என்னும் பேரியக்கத்தைக் கட்டிக் காத்து அந்தக் கட்சியை எம்.ஜி.ஆருக்குப் பிறகு உயிர்ப்புடன் வைத்திருந்தவர் ஜெயலலிதா.
அவரது தலைமையில் அதிமுக குவித்த வெற்றி வரலாறுகள்:
1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டு, 164 இடங்களில் வென்று ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 18 இடங்களில் வென்று, மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த பாஜக கூட்டணி அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 132 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் பொதுத் தேர்தலில் 150 இடங்களில் வென்று, ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார்.
தனித்து வெற்றி: 2011 ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அனைத்து மாநகராட்சிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகம்- புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37-இல் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. மேலும், மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227-இல் நேரடியாகவும், 7-இல் கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லைச் சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
தமிழகத்தில் 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016-இல்தான்.
மேலும், 2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 ( மக்களவையில் 37, மாநிலங்களவையில் 13) ஆக உயர்ந்தது. இது தமிழகத்தில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
இது மட்டுமன்றி, 2011 சட்டப்பேரவைத் தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்

தமிழகத்தை கலங்க வைத்த டிசம்பர்
தமிழகத்தைப் பொறுத்த வரை டிசம்பர் மாதம் இழப்பை ஏற்படுத்தும் மாதமாகவே அமைந்துள்ளது.
1972, டிசம்பர், 25- சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி காலமானார்.
1973, டிசம்பர், 24- தி.க. தலைவர் ஈ.வே.ரா., காலமானார்
1987, டிசம்பர், 24- முதல்வர் எம்.ஜி.ஆர்., காலமானார்.
2004, டிசம்பர், 26- சுனாமி எனும் பேரலை தாக்கி தமிழகத்தில் பல உயிர்கள் பலியாயின
2015, டிசம்பர், 1- சென்னை, கடலூர் பகுதிகளில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
2016, டிசம்பர், 5- முதல்வர் ஜெயலலிதா காலமானார்.

ஜெயித்துக்காட்டிய ஜெ.,



அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''
என்ற பாரதியார் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் தான் ஜெயலலிதா. அசாத்திய துணிச்சலுடன் சினிமா, அரசியல் என பல துறைகளிலும் தடம் பதித்தார். காலத்தை வென்று காவியம் படைத்த இவர், தமிழக வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்தார். தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்தவர்; இந்தியாவின் நீண்டகாலம் பதவி வகித்த பெண் முதல்வர்களில் 2வது நபர்; 29 ஆண்டுகளாக அ.தி.மு.க., வின் பொதுச்செயலர்; தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டியவர்; ஏழு மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்; திருமணமாகாத பெண் தலைவர்; தைரியமான பெண்மணி; 'அம்மா' என அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுபவர் என பல சாதனைகளை கொண்டிருந்தவர் முதல்வர் ஜெயலலிதா. கர்நாடகாவின் மைசூருவில், 1948 பிப்., 24ல் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா இரண்டு வயதிலேயே தன் தந்தை ஜெயராமை இழந்தார். பின் அவரின் அம்மா மற்றும் தாய்வழி தாத்தா--பாட்டி வாழ்ந்த பெங்களூருவுக்குச் சென்றார். இங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில், சில ஆண்டுகள், 'பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்' பயின்றார். ஜெயலலிதா, மூன்று வயதில் இருந்தே பரதநாட்டியத்திலும், கர்நாடக இசையிலும் பயிற்சி பெற்றார். மோகினி ஆட்டம், கதக், மணிபுரி ஆகிய பாரம்பரிய நாட்டியங்களிலும் நன்கு தேர்ச்சி பெற்றவர். பரத நாட்டியக் கலையில் நுாற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். வெள்ளித் திரையில் அவரது தாய்க்கு நடிக்க வாய்ப்புக் கிடைத்ததால், சென்னை சென்றார். ஜெயலலிதா சென்னையிலுள்ள, 'சர்ச் பார்க் ப்ரேசென்டேஷன் கான்வென்ட்டில்' மெட்ரிக்குலேஷன் படிப்பை நிறைவு செய்தார். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், உயர்கல்வி படிக்க மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஆனால் குடும்ப சூழல் காரணமாக சினிமாத் துறையில் நுழைய நேரிட்டது. 15 வயதிலேயே நடிக்கத் தொடங்கினார். அரசியல் அமர்க்களம் தமிழக முதல்வராக இருந்த, எம்.ஜி.ஆரின் வழிகாட்டுதல்படி, 1982ல் அ.தி.மு.க., வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தார். 1983ல் கொள்கை பரப்புச் செயலரானார். 1983ல் நடந்த திருச்செந்துார் இடைத்தேர்தலில், பிரசார பொறுப்பை ஏற்றார். முதல் பணியை வெற்றிகரமாக முடித்து, வேட்பாளரை வெற்றி பெற வைத்தார். இதையடுத்து, 1984ல் முதன்முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1989ல் போடி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், ஜெ., அணி மற்றும் ஜானகி அணி என அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. இதன் விளைவாக, தேர்தல் கமிஷனால் 'இரட்டை இலை' சின்னம் முடக்கப்பட்டது. 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அணி, 'சேவல்' சின்னத்தில் தனித்து போட்டியிட்டது. 27 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. போடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயலலிதா முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார். 1989 பிப்ரவரியில், அ.தி.மு.க., மீண்டும் ஒன்றிணைந்தது. ஜெயலலிதா பொதுச்செயலரானார். 'இரட்டை இலை' சின்னம் மீட்கப்பட்டது. தமிழக சட்டசபைக்கு நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு, பெரணமல்லுார் ஆகிய இடைத் தேர்தல்களில் அ.தி.மு.க.,வுக்கு வெற்றி தேடித் தந்தார். முதன்முறை முதல்வர்
1991ல் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், அ.தி.மு.க, கூட்டணி, 225 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதையடுத்து முதன்முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழத்தின் முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர், 43, என்ற பெருமையை பெற்றார்.
அதே ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும்,

அ.தி.மு.க., கூட்டணியை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்து சாதனை படைத்தார். 1996 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தது. 168 இடங்களில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வெறும் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பின், 1998 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 30 தொகுதிகளில் வெற்றியடைந்தது. இதற்கு ஜெயலலிதா பெரும் பங்கு வகித்தார். 2001ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 234 தொகுதிகளில், 195 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதல்வரானார். 2006 தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 68இட ங்களை மட்டுமே கைப்பற்றியது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றார்.



3வது முறையாக முதல்வர்:




எதிர்க்கட்சியாக இருந்த போது, அப்போதைய தி.மு.க. ஆட்சியை எதிர்த்து தொடர் போராட்டம், ஆர்ப்பாட்டம், அறிக்கைகள் மூலம் ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். கோவை, திருச்சி, மதுரை ஆகிய பிரமாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தினார். இதன் பின், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி 203 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றது. அ.தி.மு.க., மட்டும் தனியாக, 150 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, 2011, மே 16ல் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றார். இந்த ஆட்சிக் காலத்தில் நடந்த திருச்சி மேற்கு, சங்கரன்கோவில் மற்றும் புதுக்ேகாட்டை, ஏற்காடு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில் தனியாக போட்டியிட்ட, 39 தொகுதிகளில், 37 இடங்களில் அ.தி.மு.க.,வை வெற்றி பெற வைத்தார். தடைகளை மீறி... கடந்த, 2014 செப்., 27ல் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு, கர்நாடக சிறப்புநீதிமன்றத்தால் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து முதல்வர் பதவியை இழந்தார். 22 நாட்களுக்குப் பின் ஜாமினில் வெளிவந்தார்.தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில்மேல்முறையீடு செய்தார். 2015 மே 11ல் கர்நாடக ஐகோர்ட் இவரை விடுதலை செய்து தீர்ப்புவழங்கியது. இதையடுத்து மே 23ல் முதல்வராக பதவியேற்றார். 2016 சட்டசபை தேர்தலில் 227 இடங்களில்அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டது.இதில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். எம்.ஜி.ஆர்., க்குப்பின் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக
பதவியேற்று சாதித்தார்.



கடந்து வந்த பாதை





1948: மைசூருவில் பிப்., 24ம் தேதி பிறந்தார்.
1961: 'எபிஸில்' என்ற ஆங்கில படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
1964: கன்னட படத்தில் அறிமுகம்
1965: வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் படங்களில் அறிமுகம்
1965: தெலுங்கு படத்தில் அறிமுகம்
1968: இந்தி படத்தில் அறிமுகம்
1982: எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., வில் உறுப்பினரானார்.
* 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் முதன்முறையாக கட்சித் கூட்டத்தில் உரை.
1983: திருச்செந்துார் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து முதன்முறையாக



தேர்தல் பிரசாரம்.





1983: கொள்கை பரப்பு செயலராக எம்.ஜி.ஆரால் நியமனம்.
1984 - 89: ராஜ்யசபா எம்.பி.,
1984: சட்டசபை தேர்தலில் எம்.ஜி.ஆர்., வெளிநாட்டில் சிகிச்சை. ஜெ., வின் சூறாவளி சுற்றுப்
பயணத்தால் அ.தி.மு.க., வெற்றி.
1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின் அ.தி.மு.க., இரண்டாக பிரிவு. இரட்டை இலை சின்னம் முடக்கம்.
1989: சட்டசபை தேர்தலில் வெற்றி. முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரானார்.
* அ.தி.மு.க., மீண்டும் ஒன்றானது. இரட்டை சிலை சின்னம் மீண்டும் ஒதுக்கீடு. ஜெ., பொதுச் செயலர் ஆனார்.
1991: முதல் முறையாக தமிழக முதல்வர். தேர்தல் மூலம் வெற்றி பெற்ற முதல் பெண் முதல்வர், இளம் முதல்வர் என்ற பெருமை பெற்றார்.
1991: லோக்சபா தேர்தலில் இவரது தலைமையிலான கூட்டணி 39 இடங்களிலும் வெற்றி.
1996: எதிர்க்கட்சி தலைவர்
2001: 2வது முறையாக தமிழக முதல்வர்.
2002 : 3வது முறையாக தமிழக முதல்வர்.
2006: எதிர்க்கட்சி தலைவர்
2011: 4வது முறையாக தமிழக முதல்வர்.
2014: செப்., : சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை.
2015 மே: விடுதலை
2015 மே: 5வது முறையாக தமிழக முதல்வர்.
2016 : 6வது முறையாக தமிழக முதல்வர்.



6 முறை முதல்வர்





1) 1991 ஜூன் 24 முதல் 1996 மே 12 வரை
2) 2001 மே 14 முதல் செப்., 21 வரை
3) 2002 மார்ச் 2 முதல் 2006 மே 12 வரை
4) 2011 மே 16 முதல் 2014 செப்., 27 வரை
5) 2015 மே 23 முதல் - 2016 மே 22
6) 2016 மே 23 முதல் நேற்று வரை

எதிர்க்கட்சித்தலைவர்


1989 பிப்., 9 முதல் டிச., 12 வரை
2006 மே 29 முதல், 2011, மே 13 வரை



ராஜ்யசபா எம்.பி.,





1984 ஏப்., 3 முதல் 1989 ஜன., 28 வரை எம்.எல்.ஏ.,
1) 1989 ஜன., 27 முதல், 1991 ஜன., 30 வரை
2) 1991 ஜூன் 24 முதல், 1996 மே 12 வரை
3) 2002 மார்ச் 2 முதல், 2006 மே 11 வரை
4) 2006 மே 11 முதல், 2011 மே 13 வரை
5) 2011 மே 14 முதல், 2014 செப்., 27 வரை
6) 2015 ஜூன் 27 முதல், 2016 மே 18
7) 2016 மே, 19 முதல்



04.தேர்தல் களத்தில்





ஆண்டு தொகுதி முடிவு வித்தியாசம்
1989 போடி வெற்றி 28,731
1991 பர்கூர் வெற்றி 37,215
1991 காங்கேயம் வெற்றி 33,291
1996 பர்கூர் தோல்வி 8,366
2002 ஆண்டிபட்டி வெற்றி (இடைத்தேர்தல்) 41,201
2006 ஆண்டிபட்டி வெற்றி 25,186
2011 ஸ்ரீரங்கம் வெற்றி 41,848
2015 ஆர்.கே.நகர் வெற்றி (இடைத்தேர்தல்) 1,41,062
2016 ஆர்.கே.நகர்., வெற்றி 39,545
2001 தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

2வது இடம் இந்தியாவில் பதவி வகித்த பெண் முதல்வர்களில் நீண்டகாலம் பதவியில் இருந்தவர்களின் பட்டியலில் ௨வது இடத்தில் ஜெயலலிதா உள்ளார். இவர், நேற்றுடன் சேர்த்து 5,௨௪4 நாட்கள் தமிழக முதல்வராக இருந்தார். முதலிடத்தில் டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் (5,504) உள்ளார். ஜெயலலிதா முதலிடம் பெற வாய்ப்பிருந்தது. ஆனால் காலம் கைகொடுக்கவில்லை.

குருவை மிஞ்சினார்: ஜெயலலிதாவின் அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர்., கூட தனித்து போட்டியிட தயங்கினார். ஆனால், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியிடும் என்ற துணிச்சலான முடிவை எடுத்தார் ஜெயலலிதா. புதுச்சேரி சேர்த்து மொத்தம் 40 இடங்களில் போட்டியிட்டு, 37 இடங்களில் வென்ற அ.தி.முக., லோக்சபாவில் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.

நீங்கள் செய்வீர்களா... பிரசாரத்தின் போது மக்களிடம் கேள்வி கேட்டு அவர்களிடம் இருந்தே பதிலை பெறும் புது 'டிரெண்டை' ஜெயலலிதா பிரசாரத்தில் அறிமுகம் செய்தார். 'நீங்கள் செய்வீர்களா' என இவர், கேட்க, மக்களும் 'செய்வோம்' என ஓட்டுகளை தவறாமல் அளிக்க, வெற்றி மேல் வெற்றி பெற்றார்.

ஜெ., மறைவுக்கு மத்திய அரசு ஒரு நாள் துக்கம்


புதுடில்லி: முதல்வர் ஜெ., காலமானதை தொடர்ந்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதேபோல், இன்று ஒரு நாள் கர்நாடகாவிலும், துக்கம் அனுசரிக்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 நாள் அனுசரிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. 3 நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வி டுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பீஹார், கேரளா, புதுச்சேரியில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்

சென்னை,



முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

இன்றிலிருந்து 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் காலை 4.30 மணிக்கு ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இதனை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது: பொதுமக்கள் அஞ்சலி

சென்னை,


பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது


முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.


பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.


ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.


ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம்: சிகிச்சை பலன் இன்றி உயிர் பிரிந்தது



சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

திடீர் மாரடைப்பு

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 19-ந் தேதி அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஜெயலலிதாவின் இதயம் மற்றும் நுரையீரல் செயல் இழந்ததால் அவற்றை இயங்கச் செய்யும் வகையில் அவருக்கு ‘எக்மோ’ என்னும் அதிநவீன கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டது.

உயிரை காப்பாற்ற முயற்சி

இந்த நிலையில், நேற்று மதியம் 12.45 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாலை 4.40 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் டாக் டர்கள் குழுவினர் ஆஸ்பத்திரிக்கு வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஜெயலலிதாவின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் டாக்டர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அறிந்துகொள்வதற்காக மத்திய மந்திரி வெங்கையா நாயுடு மாலை 5.30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

ஜெயலலிதா மரணம்

டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார். இரவு 11-30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் சில அறிவுறுத்தல்கள் உள்ளன.

இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், மாநில முதல்-அமைச்சர் இறந்தது உறுதியானவுடன், அந்த மாநில கவர்னரும் அதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அந்த தகவலை மத்திய உள்துறை மந்திரி, பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலைமையை உறுதி செய்து கொண்ட பிறகு, மத்திய அரசின் அனுமதியோடு நள்ளிரவு அல்லது அதிகாலை கவர்னர் அல்லது தலைமைச் செயலாளர் முறையாக, முதல்-அமைச்சர் இறந்த தகவலை மக்களுக்கும், ஊடகங்களுக்கும் தெரிவிப்பார்.

இந்த வழிமுறையின்படி முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தி நள்ளிரவு 12-15 மணிக்கு அதிகாரபூர்வமாக அறிவிக் கப்பட்டது.

முன்னதாக நேற்று இரவு 11-30 மணி அளவில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். திடீரென தெரு விளக்குகள் அணைக்கப்பட்டன.

அதே சமயம் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா வீடு உள்ள போயஸ் கார்டன் வரை ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் ஜெயலலிதா காலமானார் என்ற அறிவிப்பு வெளியானது.

தொண்டர்கள் கதறல்

அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் திரண்டு இருந்தனர். ஜெயலலிதா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டதும், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். துக்கத்தை தாங்க முடியாமல் அவர்கள் முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு ‘அம்மா, அம்மா’ என்று கதறி அழுதார்கள். சில பெண்கள் தரையில் விழுந்து புரண்டு அழுதார்கள்.

ஜெயலலிதா மரணம் அடைந்த தகவல் வெளியானதும் சென்னை நகரில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க. தொண்டர்கள் கண்ணீரும், கம்பலையுமாக அப்பல்லோ ஆஸ்பத்திரியை நோக்கி கதறி அழுதபடி சாரை, சாரையாக வந்தனர். போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை நோக்கியும் கூட்டம், கூட்டமாக வந்தனர்.

காட்டுத்தீ போல் பரவியது

ஜெயலலிதா இறந்த தகவல் தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியும், பெரும் சோகமும் அடைந்தனர். பலர் துக்கம் தாங்க முடியாமல் கதறி துடித்தனர். ஜெயலலிதாவின் புகைப்படங்களை தெருக்களில் ஆங்காங்கே அலங்கரித்து வைத்து அஞ்சலி செலுத்த தொடங்கினார்கள்.

மாநிலம் முழுவதும் போலீசார் ‘உஷார்’ படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

பஸ்கள் நிறுத்தம்

பதற்றம் ஏற்பட்டதால் மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, சேலம், ஈரோடு உள்ளிட்ட அனைத்து ஊர்களிலும் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க.வினர் சென்னையை நோக்கி வரத்தொடங்கி உள்ளனர்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு



தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற நட்சத்திரமாக திகழ்ந்த சந்தியா-ஜெயராமன் தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாக 1948 பிப்ரவரி 24-ந்தேதி மகம் நட்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தார். ஜெயலலிதா பிறந்தது மைசூரு நகரில் என்றாலும் அவருடைய முன்னோர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்கள்.

ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் தகப்பனார் பெயர் ரங்காச்சாரி. இவர் மைசூரு மகாராஜாவின் குடும்ப டாக்டர். ஜெயலலிதாவுக்கு 1 1/2 வயது ஆனபோது, தந்தை காலமானார். முதலில் பெங்களூரு பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்த ஜெயலலிதா, பின்னர் சென்னையில் சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்தார். படிப்பில் முதல் மாணவியாக திகழ்ந்தார். படிக்கும்போதே முறைப்படி பரத நாட்டியம் பயின்றார். 12-வது வயதில் அவருடைய நடன அரங்கேற்றம் நடந்தது.

பிரபல வித்வான்களிடம் முறைப்படி கர்நாடக சங்கீதத்தை கற்றுக்கொண்ட ஜெயலலிதா, இசை கருவிகளை மீட்டவும் இனிமையாக பாடவும் தேர்ச்சி பெற்றார்.

1964-ம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் தேறிய ஜெயலலிதா தாய் மொழி தமிழை போல் ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் முதலான பிற மொழிகளையும் சரளமாக பேச கற்றுக்கொண்டார்.

மேல் படிப்புக்கு ஜெயலலிதா முயற்சி செய்யும்போது, அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டு திரை உலக பிரவேசம் நடந்தது. ஜெயலலிதாவின் சித்தி(தாய் சந்தியாவின் தங்கை) வித்யாவதி ஏற்கனவே சினிமாவில் நடித்து வந்தார். அடுத்து சந்தியாவும் சினிமா நட்சத்திரமானார்.

ஜெயலலிதாவுக்கு சினிமாவில் விருப்பமில்லை என்றாலும், குடும்ப நிலை காரணமாக திரை உலகில் புகுந்தார்.

தொடக்கத்தில் சில கன்னடப்படங்களில் நடித்தாலும் அவர் கதாநாயகியாக நடித்து 1965-ல் வெளிவந்த டைரக்டர் ஸ்ரீதரின் "வெண்ணிற ஆடை" தான் அவரது முதல் தமிழ்ப்படம்.

வெண்ணிற ஆடை படம் வெளிவருவதற்கு முன் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகன் சங்கர் கிரி தயாரித்த 'எபிசில்' (லிகிதம்) என்ற ஆங்கிலப்படத்தில் ஜெயலலிதா நடித்தார். அந்த படத்தை பார்த்தவர்கள் இதில் ஜெயலலிதா பேசுவதுதான் இங்கிலீஷ்! மற்றவர்கள் பேசுவது பட்லர் இங்கிலீஷ்! என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்கள்.

முதல் படத்திலேயே கதாநாயகி ஆகி புகழ் ஏணியின் உச்சிக்கு சென்ற ஜெயலலிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல மொழிகளிலும் நடித்தார். சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று முன்னணி கதாநாயகர்கள் எல்லோருடனும் நடித்தார். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா 1971-ம் ஆண்டு காலமானார். தாயாரின் நினைவாக தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டிய ஜெயலலிதா அந்த வீட்டிற்கு "வேதா நிலையம்" என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். (சந்தியாவின் இயற்பெயர் 'வேதா')

ஜெயலலிதாவின் 100-வது படமான "திருமாங்கல்யம்" 1977-ல் வெளிவந்தது. அதன்பின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்து கொண்டார். 1980-ல் வெளிவந்த "நதியைத்தேடி வந்த கடல்" என்ற சினிமாதான் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம். சுமார் 16 ஆண்டுகளில் 112 படங்களில் நடித்து முடித்தார்.

ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்

சென்னை,



முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

இன்றிலிருந்து 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் காலை 4.30 மணிக்கு ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இதனை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் வெற்றி-தோல்வி


ஜெயலலிதா தமிழக சட்டசபை தேர்தலில் 8 தடவை போட்டியிட்டு, அதில் 7 முறை வெற்றி பெற்று உள்ளார். ஒரு தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2001-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அவரால் போட்டியிட முடியவில்லை.

* ஜெயலலிதா முதன் முதலாக 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தி.மு.க.வை சேர்ந்த முத்து மனோகரன்.

* 1991-ல் நடந்த சட்டசபை தேர்தலில் பர்கூர், காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது பர்கூர் தொகுதியில் அவரை எதிர்த்து டி.எம்.கே. சார்பில் டி.ராஜேந்தரும், காங்கேயம் தொகுதியில் தி.மு.க. சார்பில் ராஜ்குமார் மன்றாடியாரும் போட்டியிட்டனர்.

* 1996-ம் ஆண்டு பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அப்போது அந்த தொகுதியில் அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஈ.ஜி.சுகவனம்.

* 2001-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் போட்டியிட ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இரு தொகுதிகளுக்கு மேல் ஒருவர் போட்டியிட முடியாது என்பதால் அப்போது அந்த 4 தொகுதிகளிலும் அவரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அந்த தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை.

* 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வைகை சேகர் (தி.மு.க.) தோல்வியை தழுவினார்.

* 2006-ம் ஆண்டு தேர்தலில் அதே ஆண்டிப்பட்டி தொகுதியில் தன்னை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சீமானை வென்றார்.

* 2011 சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா தி.மு.க. வேட்பாளர் என்.ஆனந்தை தோற்கடித்து வெற்றிவாகை சூடினார்.

* 2015-ல் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளரை விட மிக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

* இந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் சிம்லா முத்து சோழனை கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

* 1984 முதல் 1989 வரை அ.தி.மு.க. சார்பில் டெல்லி மேல்-சபை உறுப்பினராகவும் ஜெயலலிதா பதவி வகித்து உள்ளார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.

சென்னை,


பொதுமக்கள் அஞ்சலிக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது

முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணி அளவில் மரணம் அடைந்தார். இதையொட்டி அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதுபற்றி அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் ஆஸ்பத்திரியில் திரளாக குவிந்தனர்.இதனிடையே ஆஸ்பத்திரியில் இருந்து ஜெயலலிதா உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் ஜெயலலிதா உடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. அதன்பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி மண்டபத்திற்கு காலை 5.50 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது.

ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனங்களுடன் ஜெயலலிதா உடல் எடுத்துச்செல்லப்பட்டது. ஜெயலலிதா வழக்கமாக கோட்டைக்கு செல்லும் கடற்கரை சாலை வழியாகவே அவரது உடல் எடுத்துச்செல்லப்பட்டது. காலை 6.10 மணியளவில் அவாது உடல் ராஜாஜி அரங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அதிகாலை முதலே பொதுமக்கள் அதிமுக தொண்டர்கள் ராஜாஜி அரங்கில் குவிந்துள்ளனர். இன்னும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஜாஜி அரங்கில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் , முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் என அனைவரும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்

* ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வருகை.

* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அஞ்சலி

* முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவுக்கு நடிகர் பிரபு, விக்ரம் பிரபு அஞ்சலி செலுத்தினர்

அரசு அலுவலகங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை,


உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு(திங்கள் கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார். ஜெயலலிதாவின் உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்கு ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டு பின்னர் மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.


ஜெயலலிதா காலமான செய்தி வெளியானவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில் இன்று அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக செய்தியகள் வெளியாகியுள்ளன.

Sunday, December 4, 2016

Medicos urged to serve the impoverished


Need for quality healthcare and environment-friendly practices highlighted at college event
Delivery of quality healthcare to the poorer and economically deprived sections of society was the need of the hour, said Jagdish Prasad, Director General of Health Services, Ministry of Health and Family Welfare, on Saturday.
Dr. Prasad was delivering the convocation address of the Tamil Nadu Dr. MGR Medical University.
“It is frequently observed that patients from the poorest segments of our society have to spend large sums of money while undergoing treatment in healthcare institutions in the private sector. In the process, they incur tremendous financial and property losses,” he said, urging students to not shy away from serving the impoverished sections of the population.
Dr. Prasad also highlighted the growing levels of environmental pollution and the necessity for inculcation of environment-friendly practices and interventions for a pollution-free environment.
He stressed the need for adherence to medical ethics, the judicious use of clinical resources and the necessity of talent to join research and development organisations in the country to further national healthcare goals.
“The erstwhile trend of migration to the west for wider opportunities has now decelerated significantly. More and more young medical graduates should be able to pursue quality goals in their career while staying back in India,” he said.
A total of 20,489 candidates were awarded degrees and diplomas under the faculties of medical, dental, AYUSH and allied health sciences. Of these, 73 per cent were women.
Vice-Chancellor S. Geethalakshmi spoke of the university’s achievements, including its focus on research and plans to set up an anti microbial lab by the department of experimental medicine. Speaking on the sidelines of the event, Dr. Prasad praised the State for its record in organ transplantation.
State Health Minister C. Vijaya Baskar and Health Secretary J. Radhakrishnan also participated.

Governor empowered to direct varsities: V-C

Governor-Chancellor Ch. Vidyasagar Rao’s circular on Thursday directing universities to go cashless has put the spotlight on the office’s powers in a university.
The Governor, as the Chancellor, presides over the university convocation and also appoints the Vice-Chancellor. But the official rarely participates in the senate or the syndicate meetings.
Since the Chancellor limits his association with the universities, it has given an impression that he is only a ceremonial head.
It is unusual for a Chancellor to offer suggestions or even direct a university on financial matters, says former Anna University V-C M. Anandakrishnan. However, in the appointment of a V-C the Governor has complete independence.
“There was a time when the Governors would not consult the Chief Minister. But in Karnataka there is a clear rule that the V-C appointment is in consultation with the CM,” he adds.
But M. Vanangamudi, the Vice-Chancellor of the Tamil Nadu Dr. Ambedkar Law University, said the Governor as Chancellor has absolute authority.
“The Governor chairs the Senate and the Syndicate meetings. In his absence the Vice-Chancellor officiates. As the visitor of the university he can inspect, order and command. The institution runs under his stewardship,” he said.
Going cashless
Irrespective of this debate, Mr. Vanangamudi said all transactions in the university were only through electronic transfer.
Students paid their fees through challans or sometimes through demand draft. The Registrar of the University of Madras, David P. Jawahar, said the university had only recently switched over from cash transactions.
“Normally in evaluation camps payment to teachers is in cash. From now on it will only be through ECS. We were also paying our temporary staff who earn less than Rs. 8,000, ” he said.

வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைகிறது: டாக்டர் ஜெகதீஷ் பிரசாத்

By DIN  |   Published on : 04th December 2016 02:41 AM  

tnmgr

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மருத்துவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் கூறினார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழா, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத் பேசியது:
தரமான மருத்துவ சேவையை நிர்ணயம் செய்வதில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதன் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நியாயமான செலவில் நவீன மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உலகில் பெரும்பாலான ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களில் இந்தியர்களே பணியாற்றுகிறார்கள். மேலும் பல ஆராய்ச்சிகளுக்கு காப்புரிமைகளையும் பெற்றுள்ளனர். தற்போது இந்தியாவிலேயே உயர்தர ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், வெளிநாடுகளுக்குச் சென்ற உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் இந்தியாவுக்கே திரும்பி வருகின்றனர். மேலும் மருத்துவம் படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் இளம் மருத்துவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துவிட்டது என்றார் அவர்.
விழாவில் மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், துணை மருத்துவப் படிப்புகள் உள்ளிட்டப் பிரிவுகளில் 20,489 பேருக்கு பட்டமளிக்கப்பட்டது. அதில் 5,266 மாணவர்கள் நேரடியாக வந்து பட்டங்களைப் பெற்றனர்.
141 மாணவர்களுக்கு பதக்கங்கள்: படிப்பில் சிறந்து விளங்கிய 141 மாணவர்களுக்கு மொத்தம் 181 பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே.பாவனா எம்.பி.பி.எஸ்.படிப்பில் மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக, வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த கே.அதிதி முதுநிலை பொது மருத்துவப் படிப்பில் 5 பதக்கங்களையும், கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பி.மீனலோஷனி முதுநிலை பொது அறுவைச் சிகிச்சைப் படிப்பில் 5 பதக்கங்களையும் பெற்றார்.
2 நிபுணர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது: சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் முகமது ரேலா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
கௌரவ டாக்டர் பட்டம்: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டாக்டர் ஜெகதீஷ் பிரசாத், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா, முடநீக்கியல் நிபுணர் ஆர்.எச்.கோவர்தன் ஆகியோருக்கு கெüரவ டாக்டர் பட்டத்தை தமிழக ஆளுநர் (பொறுப்பு) சிஎச்.வித்யாசாகர் ராவ் வழங்கினார்.


டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு கௌரவம்

சென்னை காது-மூக்கு-தொண்டை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், இரண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வெவ்வேறு மருத்துவ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பெற்றுள்ளார்.
காது-மூக்கு-தொண்டை மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சனிக்கிழமை (டிச.3) வழங்கப்பட்டது. இதேபோன்று வங்கதேசம் தலைநகர் டாக்காவில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் ("சார்க்') காது-மூக்கு-தொண்டை மருத்துவர்கள் மாநாட்டில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 28 -ஆவது பட்டமளிப்பு விழாவில் டாக்டர் மோகன் காமேஸ்வரனுக்கு (வலமிருந்து 2-ஆவது) வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குகிறார் மத்திய சுகாதாரத் துறையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஜெகதீஷ் பிரசாத். உடன் (இடமிருந்து) சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி, கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற டாக்டர் சுபாஷ் சந்திர பாரிஜா.

NEWS TODAY 27.09.2024