Tuesday, December 6, 2016

ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம்

சென்னை,



முதல் அமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் உடல் எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.

இன்றிலிருந்து 7 நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் காலை 4.30 மணிக்கு ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

அதன்பின் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இதனை அடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024