Thursday, October 12, 2017

பரோல் முடிந்து சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

கார்த்திக்.சி

ஐந்து நாள்கள் பரோல் காலம் முடிந்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.



வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கணவர் நடராசனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அதையடுத்து அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடராசனைப் பார்ப்பதற்காக சசிகலா 15 நாள்கள் பரோல் கோரி கர்நாடக மாநிலம் சிறைத்துறைக்கு விண்ணப்பித்திருந்தார். கர்நாடக அரசு, சசிகலாவுக்கு 5 நாள்கள் மட்டும் பரோல் வழங்கியது.



அதையடுத்து அவர், ஐந்து தினங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து வந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, அவர் கணவர் நடராசனை நேரில் சென்று பார்வையிட்டார். அவரின் ஆதரவாளர்கள், சசிகலா செல்லும் இடங்களில் பலத்த ஆதரவு அளித்தனர். இந்தநிலையில், இன்றோடு பரோல் முடிந்த நிலையில், சென்னையிலிருந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.


மீண்டும் சிறைக்கு கிளம்பினார் சசிகலா

Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
பெங்களூரு சிறைக்கு மீண்டும் சென்றார் சசிகலா
Powered by Sathya
சென்னை : 'பரோலில்' சென்னை வந்த சசிகலா, இன்று(அக்.,12) மீண்டும் சிறைக்கு கிளம்பி சென்றார். 
சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற சசிகலா, பிப்., மாதம், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில், அவரது கணவர், நடராஜனுக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரை பார்ப்பதற்காக, சசிகலா அக்டோபர் 6 ம் தேதி, ஐந்து நாட்கள், 'பரோலில்' வந்தார்.

சென்னை, தி.நகரில் உள்ள, உறவினர் கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கினார். அங்கிருந்து, தினமும் மருத்துவமனை சென்று, கணவரை பார்த்து வந்தார். அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், தன்னை சந்திக்க வருவர் என, சசிகலா எதிர்பார்த்தார்; ஆனால், யாரும் வரவில்லை.

அவரது பரோல் விடுமுறை, இன்று முடிவுற்றது. இன்று மாலை, 6:00 மணிக்குள் அவர், சிறைக்குள் செல்ல வேண்டும். இதனால் இன்று காலை 9 மணியளவில் தி.நகர் வீட்டில் இருந்து காரில் பெங்களூரு சிறைக்கு அவர் புறப்பட்டுச் சென்றார்.



2022 ல் குண்டு குழந்தைகளே அதிகம் இருப்பார்கள்

 குழந்தைகள்,children, ஆய்வு அறிக்கை, Research report, மும்பை, Mumbai, ஊட்டச்சத்து குறைபாடு ,  Nutrition deficiency,உலக சுகாதார மையம்,  World Health Center,லண்டன் இம்ரியல் கல்லுாரி, London Immigration stone, இந்தியா, India, குண்டு குழந்தைகள், fat children
Share this video : 
spaceplay / pause
 
qunload | stop
ffullscreen
shift + slower / faster
volume
 
mmute
seek
 
 . seek to previous
12… 6 seek to 10%, 20% … 60%
2022ல் குண்டான குழந்தைகள்: ஆய்வில் தகவல்
மும்பை : உலக அளவில் அடுத்த 5 ஆண்டுகளில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளை விட குண்டான குழந்தைகளின் எண்ணிக்கையே அதிக அளவில் இருக்கும் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் தகவல் :

உலக சுகாதார மையமும், லண்டன் இம்ரியல் கல்லுாரியும் இணைந்து நடத்திய மருத்துவ ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. ஆய்வு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, உலக அளவில் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. 2016 ம் ஆண்டு வரை இந்தியாவிலும், உலக அளவிலும் 97 மில்லியன் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களாக இருந்தனர். 
ஆனால் சமீப காலமாக இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கையே அதிகரித்து வருகிறது. 1975 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலக அளவிலும் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாவில் குண்டான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

குண்டு குழந்தைகள் அதிகம் :

கடந்த, 2016 ல் இந்தியாவில் குண்டான ஆண் குழந்தைகளின் விகிதம் 15.03 முதல் 16.97 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 15.74 முதல் 16.94 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்தியாவின் உத்தரகாண்ட், பீகார், உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மிகப் பெரிய சவாலாக உள்ளது. கிராமப்புற குழந்தைகளை விட நகர்புறக் குழந்தைகளே உடல்எடை அதிகரிப்பால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
துரித உணவுகளே இதற்கு முக்கிய காரணமாகும். கடந்த 40 ஆண்டுகளில் குழந்தைகளின் உடல் எடை அதிகரித்து வருகிறது. துரித உணவு கலாச்சார 2000 ம் ஆண்டிற்கு பிறகு அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் உலக அளவில் 2022 ம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் எடை குறைந்த குழந்தைகளை விட உடல்எடை அதிகம் கொண்ட குழந்தைகளே அதிக அளவில் இருப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறை வாழ்க்கை கொடுமையானது; நடராஜன் சொல்படி நடக்க வற்புறுத்தல்

Advertisement
 அ.தி.மு.க, A.D.M.K, சசிகலா நடராஜன், Sasikala Natarajan,சிறை வாழ்க்கை,  jail life, சொத்துக் குவிப்பு வழக்கு,property accumulation case, பரோல்,  parole,பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை, Bangalore parappana Akrahar Central jail,கிருஷ்ணப் ப்ரியா,  Krishna Priya, சென்னை குளோபல் மருத்துவமனை,Chennai Global hospital, சசிகலா, Sasikala,சென்னை,chennai
சென்னை: ' நல்லதோ, கெட்டதோ, நடராஜன் குடும்பத்திலேயே பெரிய மனிதர். நான் இல்லாத சூழலில், அவரிடம் ஆலோசனை கேட்டு செயல்படுவதில் எந்தத் தவறும் இல்லை' என, , தினகரனை, சசிகலா கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினகரனுடன் சந்திப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, ஐந்து நாட்களுக்கு முன், கணவர் நடராஜன் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளி வந்தார். சென்னையில், தனது அண்ணி மகள் கிருஷ்ணப் ப்ரியாவின் தி.நகர் வீட்டில் தங்கியிருந்து, சென்னை குளோபல் மருத்துவமனைக்குச் சென்று நடராஜனை சந்தித்து திரும்பினார் .
ஒரு நாளில் ஒரு முறையாவது, குளோபல் மருத்துமனைக்கு செல்வது என்று முடிவெடுத்து, அதன்படி செய்த சசிகலா, மற்ற நேரங்களில், கட்சிக்காரர்களை ரகசியமாக சந்தித்தார். மற்றபடி, அவரை சந்தித்தவர்கள் எல்லோருமே உறவுக்காரர்கள்தான். ஆனால்,தினகரனை அழைத்து, பல முறை பேசியிருக்கிறார். கடைசியாக, நேற்று 11ம் தேதி, தினகரனை சந்தித்த சசிகலா, ரொம்பவும் உணர்ச்சிவயப்பட்டு பேசியிருக்கிறார்.


வேறு வழியில்லை
'சிறை வாழ்க்கை கொடுமையானதுதான். அதுவும் ஒரு பெண்ணுக்கு, சிறை வாழ்க்கை மிகப் பெரிய தண்டனை தான். 2 ஜி வழக்கில் கைதாகி, டில்லி, திஹார் சிறையில் அடைக்கப்பட்ட தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழி, கிட்டதட்ட ஆறு மாத காலம் வரை சிறையில் இருந்தார். அந்த சூழ்நிலையை, அவர் ஒரு தைரியமிக்க பெண்ணாக எதிர்கொண்டார். அதே நிலைமை, தற்போது, எனக்கும், இளவரசிக்கும் ஏற்பட்டிருப்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது; வேறு வழியில்லை.

இன்றோடு பரோல் முடிகிறது. மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும். அதை நினைத்தாலே, நெஞ்சு பகீர் என்கிறது. இப்படிப்பட்ட சூழலில், சிறையில் இருந்து நான் ஆலோசனை கொடுத்து கட்சியை நடத்து என்றால், உன்னால் முடியவில்லை. ஆனால், கட்சி தான் எனக்கு முக்கியம். இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளில் சரியான முடிவெடுக்கும், ஆலோசனை சொல்லும் நபர் ஒருவர் என்றால், அது என் கணவர் நடராஜனே. அதனால், அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியதும், எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்' என்று, உருக்கமாக சொல்லி இருக்கிறார்.ஆனால், தினகரன் தரப்பில், அதை ஏற்று செயல்பட தயாரில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Breaking: Aarushi Talwar-Hemraj Double Murder: Talwars Acquitted, Mystery continues | Live Law

Breaking: Aarushi Talwar-Hemraj Double Murder: Talwars Acquitted, Mystery continues | Live Law: The Allahabad High Court on Thursday acquitted Rajesh and Nupur Talwar in the 2008 Aarushi-Hemraj double murder case. A bench of Justice BK Narayana and AK Mishra granted the Talwar couple benefit of doubt while pointing out various loopholes in the probe conducted in the double murder which has seen numerous conspiracy theories from the start when …

பாஸ்வேர்டுக்கு ஆதார் ஆப்சில் புதிய வசதி


2017-10-12@ 02:02:38




அனைத்து பயன்பாடுகளுக்கும் ஒரே அடையாளமாக ஆதாரை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. வங்கி கணக்கு, வரி கணக்கு தாக்கல், ரயில் டிக்கெட் சலுகை, அரசு மானியங்கள் என பலவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் எம்ஆதார் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்து, இவற்றை ரயில் பயணத்தின்போது அடையாள சான்றாக காண்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

ஆதார் மொபைல் ஆப்ஸ் தற்போது 10 லட்சம் பதிவிறக்கங்களை தாண்டியுள்ளது. இனி ஆதாருக்கான ஒரு முறை பாஸ்வேர்டை இந்த ஆப்ஸ் மூலமாகவே பெறும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. டைனமிக் பாஸ்வேர்டு எனப்படும் இந்த புதிய வசதி, மொபைல் நெட்வொர்க் சரியாக இல்லாத பகுதிகளில் உள்ளவர்களுக்கு மிக உதவியாக இருக்கும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

HC verdict likely today on Aarushi case appeal

Omar Rashid
LUCKNOW, OCTOBER 12, 2017 00:00 IST

Rajesh and Nupur Talwar have challenged their conviction for double murder

The Allahabad High Court is likely to pronounce its verdict on Thursday on an appeal filed by dentist couple, Rajesh and Nupur Talwar, challenging their conviction for the murder of their teenage daughter Aarushi and domestic help Hemraj.

Life sentence

The couple were convicted for the double murder and sentenced to life imprisonment by a special Central Bureau of Investigation court in Ghaziabad in November 2013.

A Division Bench had on January 11 reserved its judgment on the appeal filed by the doctor couple.

However, the court decided to hear the appeals afresh due to contradictions in some submissions made by the CBI.

Sasikala to return to jail today



V.K. Sasikala, the deposed interim general secretary of the AIADMK who came to Chennai on a five-day parole, is set to return to the Parappana Agrahara Prison in Bengaluru on Thursday.
Her husband Natarajan, who recently underwent a renal and liver transplant, has been recuperating at a private hospital in Chennai.
Sasikala, while staying at a relative’s house in T. Nagar, has been visiting her husband in the hospital over the last few days.
Bar on political activities
She is expected to report back to the Bengaluru Central prison by 6 p.m. on October 12.
According to the terms of her parole, she has been barred from involving herself in any political activity.
Though she was allowed to speak to her relatives, she was not allowed to visit other places. She was also escorted by the police from her residence to the hospital.

Now, fly straight to Paris from Chennai

Alexandre Ziegler  

Jet Airways service to start from October 29

Jet Airways is all set to start its direct flight from Chennai to Paris from October 29. The service will operate five times a week from Chennai with a travel time of nine-and-a-half hours to Paris; transit may otherwise cost a passenger another three to four hours.
Alexandre Ziegler, Ambassador of France to India, said there were already 40 non-stop flights to Paris from other cities, including Mumbai and Delhi. “We have a fast growing footprint in Tamil Nadu, especially in Chennai, with a rapidly increasing French community. On the infrastructure front too, the growth has been significant and fast as we have about 20 companies here,” he added.
He noted that they planned to facilitate the visa issuance for visitors within 48 hours.
Sheetal Munshaw, director (India) of Atout France - France Tourism Development Agency, said, France had 83 million visitors from across the world in 2016. “France has received three awards the past year — the best honeymoon destination, second city of preference after London and also best destination for indulgence. We have a lot more women travellers too these days,” she added.
France has also been looked at as a stop for destination wedding by many Indians, she added.
Vinay Dube, chief executive officer, Jet Airways, said, “For those looking to travel beyond Paris, we have a code share agreement with airlines like Air France, KLM and Delta Airlines which can take them to destinations in Europe and North America too.”
He noted they have placed an order for 75 Boeing 737 aircraft and have plans to order another 75-100 narrow body aircraft.

Rs. 14 lakh seized in DVAC raids

Cracking down:DVAC officials checking documents at the Regional Transport Office in Dindigul.G. KarthikeyanG_KARTHIKEYAN;G_KARTHIKEYAN - G_KARTHIKEYAN  

Cases filed against transport, registration department staff

Unaccounted cash to the tune of Rs. 14 lakh was seized in simultaneous searches conducted in the offices of transport and registration department officials across the State on Wednesday.
The surprise checks were organised based on information that some officials were collecting mamool days ahead of the deepavali festival, DVAC sources said.
According to a statement, the searches commenced around 10 a.m. in RTO and Joint/Sub-Registrar offices in Chennai, Dindigul, Theni, Tiruchi, Thanjavur, Nagapattinam, Pudukottai, Sivaganga, Kanniyakumari, Tirunelveli and Tuticorin districts. In the operation conducted jointly by the DVAC and District Inspection Cell officials, Rs. 14,79,381 of unaccounted money was seized. Several documents were also seized.
The agency has registered cases in all the seizures for further investigation.

திருத்துங்கள் தீர்ப்பை!


By ஆசிரியர்  |   Published on : 11th October 2017 01:14 AM  
சட்டத்தால் மட்டுமே சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டுவந்துவிட முடியாது என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் சமூகத்தின் தவறான கண்ணோட்டத்தையும் நாகரிக சமுதாயத்திற்கு ஏற்புடையதல்லாத பழக்க வழக்கங்களையும் மாற்றுவதில் சட்டம் நிச்சயமாக உதவுகிறது. 
ஆண் - பெண் உறவில் இருபாலரும் அன்பினால் பிணைக்கப்பட்டு பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொள்வது என்பது சமுதாயத்தாலும் சட்டத்தாலும் அங்கீகரிக்கப்படுகிறது. அவர்களில் ஒருவருடைய விருப்பத்திற்கு மாறாக மற்றவர் செயல்படுவதோ, வற்புறுத்துவதோ இயற்கை தனக்குத் தந்திருக்கும் பலத்தைப் பிரயோகித்து ஒரு பெண்ணை ஆண் தனது இச்சைக்கு உடன்பட கட்டுப்படுத்துவதோ பாலியல் வன்கொடுமை என்று கருதப்படுகிறது. இரண்டு வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள் அதிர்ச்சி அளிப்பவையாகவும், பாலியல் வன்கொடுமையின் அடிப்படையையே தகர்ப்பவையாகவும் அமைந்திருக்கின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் மொஹம்மூத் பரூக்கியைத் தனது நண்பராக கருதிய அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் பாலியல் கட்டாயத்துக்கு உட்படுத்தப்பட்டார். பாலியல் கொடுமைக்கு ஆளான அந்த அமெரிக்கப் பெண் தொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் மொஹம்மூத் பரூக்கியை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டில், தில்லி உச்சநீதிமன்றம் மொஹம்மூத் பரூக்கியை விடுதலை செய்து தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்ல, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது. 
தயாரிப்பாளர் மொஹம்மூத் பரூக்கியுடன் பல ஆண்டுகளாக அந்த அமெரிக்கப் பெண்மணி நட்புப் பாராட்டி வந்தார் என்பது உண்மையாக இருக்கலாம். அதற்காக அந்தப் பெண்மணியின் முழு சம்மதம் பெறாமல், உறவு கொள்ள முற்பட்டதை எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்திவிட முடியாது. அந்த அமெரிக்கப் பெண் தன்னுடைய எதிர்ப்பை வன்மையாக தெரிவிக்கவில்லை என்றும், மிகவும் தயக்கத்துடன்தான் மொஹம்மூத் பரூக்கியின் பாலியல் ஆர்வத்துக்கு மறுப்புத் தெரிவித்தார் என்றும் உயர்நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்படுகிறது. 
'மனித மனநிலை சிலவேளை தயக்கத்துடனான மறுத்தலை, வெளிப்படுத்தாத சம்மதம் என்று எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகவும், உறவில் ஈடுபடுபவர்கள் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால் மட்டுமே தயக்கத்துடனான மறுத்தலை பாலியல் வன்கொடுமைக்குக் காரணமாக்க முடியும்' என்றும் நீதிமன்றம் தெரிவித்திருப்பது விசித்திரமாக இருக்கிறது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பாலியல் வன்கொடுமை குறித்த சமூகத்தின் பார்வையை நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டுபோய் நிறுத்துகிறது. இரண்டு காவல்துறையினரின் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் மதுரா என்கிற ஆதிவாசிப் பெண். அந்த இரண்டு காவல்துறையினரும் நீதிமன்றத்தால் நிரபராதி என்று அப்போது விடுவிக்கப்பட்டனர். 
மதுரா என்கிற அந்த ஆதிவாசிப் பெண் அதற்கு முன்னால் வேறு சிலருடன் பாலியல் உறவு கொண்டிருந்தவர் என்பதும், காவல்துறையினரால் வன்கொடுமைக்கு ஆளானபோது உதவி கேட்டு குரலெழுப்பவோ, அந்த காவல்துறையினரின் பலவந்தத்தை எதிர்த்துப் போராடவோ முயலவில்லை என்றும் அப்போது அந்தத் தீர்ப்பில் காரணங்கள் கூறப்பட்டன. மதுரா என்கிற ஆதிவாசிப் பெண்ணுக்கு அநீதி வழங்கப்பட்டது. அந்த அநீதிக்கு எதிராக இந்தியா முழுவதும் எழுந்த எதிர்ப்பின் விளைவுதான் கடுமையான பாலியல் வன்கொடுமைச் சட்டம்.
அமெரிக்க ஆராய்ச்சியாளர் பெண்மணிக்கும், மதுரா என்கிற ஆதிவாசிப் பெண்ணுக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கும் தரப்பட்டிருக்கும் தீர்ப்புகளுக்கும் அதிக அளவிலான மாற்றம் காணப்படவில்லை. 'முடியாது, மாட்டேன், வேண்டாம்' என்பவை ஒரு பெண்ணால் முணுமுணுப்பாகவோ, செய்கையாலோ, உடல் மொழியாலோ மென்மையாகக் கூறப்பட்டாலும், வன்மையாகக் கூறப்பட்டாலும் அதன் பொருள் ஒன்றாகத்தான் இருக்க முடியுமே தவிர, அது 'ஏற்றுக்கொள்கிறேன்' என்பதாக இருக்க முடியாது. பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் ஆணின் புரிதலின் அடிப்படையில் பெண்ணின் சம்மதம் கருதப்படுமேயானால், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகளிலும் குற்றவாளிகள் நிரபராதிகளாகவும், பாதிக்கப்பட்டவர்கள் நீதி கிடைக்காதவர்களாகவும் மாறும் அவலம் ஏற்படும்.
இன்னொரு வழக்கில் பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட மூன்று பேரின் 20 ஆண்டு தண்டனையை ரத்து செய்து அவர்களை நிரபராதிகள் என்று விடுவித்திருக்கிறது. காரணம், பாதிக்கப்பட்ட பெண் அதற்கு முன்னால் பலருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதும், பாலியல் உறவு கொள்வது அவருக்கு புதிதல்ல என்பதும். 
இது என்ன வேடிக்கை? ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டவராகவே இருந்தாலும்கூட, அவரது விருப்பத்துக்கு மாறாகக் கட்டாயப்படுத்தப்பட்டால், அது பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்பட வேண்டும் என்பதுதானே நியாயம்? இப்படியொரு தீர்ப்பை பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்ற நீதிபதிகளால் எப்படி தரமுடிந்தது என்பது வியப்பாக இருக்கிறது.
உச்சநீதிமன்றம் இந்த இரண்டு தீர்ப்புகளையும் மீள்பார்வை செய்து உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைத் திருத்தி எழுதியாக வேண்டும். இல்லையென்றால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும்.
 

பாதுகாப்பில்லாத பயணங்கள்!


By ஆசிரியர்  |   Published on : 12th October 2017 01:40 AM  
மும்பையின் புறநகர் ரயில்நிலையங்களில் ஒன்றான எல்பின்ஸ்டன் சாலை ரயில்நிலையத்தின் பயணிகள் மேம்பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் 23 பேர் மரணமடைந்ததும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததும்கூட அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. சம்பவம் நடந்து முடிந்த பிறகு ரயில்வே காவல்துறையினரும், மும்பை மாநகர காவல்துறையினரும் அந்தப் பயணிகள் மேம்பாலம் யாருடைய அதிகார வரம்பிற்குள் வருகிறது என்பது குறித்து விவாதம் செய்து கொண்டிருந்ததுதான் அதிர்ச்சி அளிக்கிறது. காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதிலும், நெரிசலைக் கட்டுப்படுத்துவதிலும் அக்கறை காட்ட வேண்டியவர்கள் மனிதாபிமானமே இல்லாமல் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக்கொண்டு பொறுப்பைத் தட்டிக்கழித்த அவலம் இந்தியா தவிர வேறு எந்த ஒரு நாட்டிலும் காணக் கிடைக்காது.
இந்தியாவின் ஏனைய பகுதிகளுக்கும் மும்பையில் ஏற்பட்ட அவலம் அதிக வேறுபாடு இல்லாமல் பொருந்தும். ஒன்று, ஒன்றுக்கும் மேற்பட்ட துறையினர் ஒரே வேலையில் ஈடுபடுவார்கள். அல்லது ஒரு வேலைக்காக ஒதுக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் கடமையைச் செய்யாமல் தட்டிக்கழிப்பார்கள். எப்படி இருந்தாலும் எந்தவொரு தவறுக்கும் யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த நிலைமையின் பிரதிபலிப்புதான் மும்பை எல்பின்ஸ்டன் சாலை பயணிகள் மேம்பால நெரிசல் விபத்து.
மும்பை மாநகரத்தின் ஒன்றரைக்கோடி மக்கள்தொகையில் 78% மக்கள் மின்சார ரயில்களையும் 'பெஸ்ட்' போக்குவரத்து ஊர்திகளையும்தான் நம்பியிருக்கிறார்கள். மும்பையில் 75 லட்சம் பேர் தினந்தோறும் புறநகர் மின்சார ரயில்களை பயன்படுத்துகிறார்கள். 2016 - 17இல் மட்டும் மும்பை புறநகர் மின்சார ரயிலில் பயணித்தவர்களின் எண்ணிக்கை 270 கோடி. இத்தனை பேர் பயணிக்கும் ரயில் சேவைக்கு எந்த அளவுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அதன் கட்டமைப்பு வசதிகளும் பாதுகாப்பும் மேம்படுத்தப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் அப்படி செய்யப்படவில்லை.
கடந்த 2016-இல் மட்டும் மும்பையில் 3200-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் விபத்தில் இறந்திருக்கிறார்கள். அதாவது, தினந்தோறும் சராசரியாக 9 பேர் இறந்திருக்கிறார்கள். 136 ரயில் நிலையங்களுடன் இயங்கும் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவை 40 ஆண்டுகளுக்கு முந்தைய வசதிகளுடன்தான் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வர்த்தக நகரம் என்று போற்றப்படும் மும்பை புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்னும் குளிர்பதன வசதியுள்ள பெட்டிகள் கிடையாது. 
மேற்கிந்திய ரயில்வேயின் புறநகர் ரயில் சேவைக்காக பயணிகளின் தேவையை ஈடுகட்ட உயரடுக்கு (எலிலேடட்) ரயில் சேவை தொடங்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இரண்டாவது மும்பை மாநகர போக்குவரத்துத் திட்டத்தின்படி கூடுதல் தண்டவாளங்களை அமைத்துப் பயணிகள் ரயில் சேவையின் அளவை அதிகரிப்பது, ரயில் பாதைகளை அதிகரிப்பது, பழைய தண்டவாளங்களையும் அடிக்கட்டைகளையும் (ஸ்லீப்பர்) மாற்றுவது ஆகிய திட்டங்கள் அனைத்துமே தாமதப்பட்டிருக்கின்றன. அதனால் முதலீட்டுச் செலவுகள் அதிகரித்து கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. 
எல்பின்ஸ்டன் சாலை விபத்தைப் பொருத்தவரை ரயில்வே நிர்வாகத்தைதான் முற்றிலுமாகக் குற்றப்படுத்த வேண்டும். இந்த பயணிகள் மேம்பாலத்தில் விபத்து ஏற்படும் என்று பயணிகள் பலரால் தொடர்ந்து புகார்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. கூடுதலாக ஒரு பயணிகள் ரயில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்கிற திட்டம் ஏட்டளவில் மட்டுமே நெடுங்காலமாகக் காணப்படுகிறது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கிறார்கள். இவ்வளவெல்லாம் இருந்தும்கூட இது குறித்து மேற்கிந்திய ரயில்வே நிர்
வாகம் கவலைப்படாமல் இருந்திருக்கிறது எனும்போது எந்த அளவுக்கு பயணிகளின் பாதுகாப்பு குறித்து அது கவலைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்டுதோறும் 3,200-க்கும் மேற்பட்டவர்கள் ரயில் விபத்தில் இறக்கிறார்கள் என்றாலும்கூட, அதுகுறித்துக் கவலைப்படாமல் ரயில்வே துறை இயங்கிவருவது குறித்து, எல்பின்ஸ்டன் சாலை விபத்துக்குப் பிறகுதான் விழிப்புணர்வே ஏற்படுகிறது என்பது மிகப்பெரிய சோகம். கடந்த 20 ஆண்டுகளாக சாலைகள் அமைப்பதிலும், ரயில் பெட்டிகளை நவீனப்படுத்துவதிலும், அதிநவீன புல்லட் ரயில் விடுவதிலும் செலுத்தும் கவனத்தை, பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் நலனிலோ, பாதுகாப்பிலோ அரசு செலுத்தவில்லை என்பதைத்தான் இந்த மரணங்கள் வெளிப்படுத்துகின்றன. 
மழை, வெயிலிலிருந்து பாதுகாக்கும் வகையில் மின் தூக்கிகள் (லிப்ட்), மின் படிகள் (எஸ்கலேட்டர்) அமைத்தல், ரயில்பெட்டியிலிருந்து இரண்டு புறமும் இறங்கும் வசதி, தடையில்லாமல் ரயில் நிலையத்திலிருந்து சாலைக்கு வெளியேறும் பாதை போன்றவை ரயில் நிலையங்களில் நெரிசல் ஏற்படாமல் பயணிகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தித் தருபவை. அவை குறித்து கவலைப்படாமல் ரயில்வே நிர்வாகம் தொடர்வது கண்டனத்துக்குரியது.
இந்திய ரயில்வேயைப் பொருத்தவரை தண்டவாளங்கள் தொடர்பான பிரச்னைகள் மட்டும் 2016 - 17இல் 3,544. சமிக்ஞை உபகரணங்கள் (சிக்னல்கள்) இயங்காத சம்பவங்கள் 1,30,200. இந்தியாவில் ரயில்கள் தடம்புரள்வதால் 53% ரயில் விபத்துகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆண்டுதோறும் 860 கோடி பேர் ரயில்களை நம்பி பயணிக்கின்றனர். பிரபா தேவி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் எல்பின்ஸ்டன் சாலை ரயில்நிலைய மேம்பால நெரிசல் விபத்து ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!
 

காவல்துறையின் கடமை 


By ஆர். வேல்முருகன்  |   Published on : 12th October 2017 01:33 AM  | 
கடந்த மூன்று நாள்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் புறநகர் பயணிகள் ரயிலில் செல்லும்போது பட்டாக் கத்தியை ரயில் நிலையங்களில் தரையைத் தேய்த்துச் சென்றனர். அதிலிருந்து எழும் நெருப்பைக் கண்டதாலும் மாணவர்களின் மன நிலை புரிந்ததாலும் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். 
இந்தச் சம்பவத்தை யாரோ ஒருவர் செல்லிடப்பேசியில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினார். அதையடுத்து போலீஸார் வீறுகொண்டு எழுந்து சில மாணவர்களைக் கைது செய்து சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று காட்டியுள்ளனர்.
சென்னையின் சில குறிப்பிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ரயில் நாள் மற்றும் பேருந்து நாள் கொண்டாடும் போது ஒரு சிலருக்காவது அரிவாள் வெட்டு விழுவது வாடிக்கை. 
தங்களுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி மனப்பான்மை காரணமாகத்தான் இது நடைபெறுவதாகப் பெரும்பாலான மாணவர்கள் கருதுகின்றனர்.
மாணவர்கள் ரயிலில் பட்டாக்கத்தியுடன் வரும்போது அங்குள்ள பயணிகளோ அல்லது அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீஸாரோ என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொதுமக்கள் மாணவர்களிடம் பேச முடியாது என்பது தெரிந்ததே. 
ஆனால், ரயில்வே போலீஸார் என்ன செய்தார்கள்? குறைந்தபட்சம் தாங்கள் பார்த்ததை அடுத்த ரயில் நிலையத்தில் உள்ள போலீஸாரிடம் சொல்லி மாணவர்களைக் கைது செய்திருக்கலாம். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.
இந்தச் சம்பவத்தைப் பதிவேற்றம் செய்த பிறகு மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலர் கைது செய்யப்படலாம். 
ஆனால் எந்த ஓர் அரசியல் கட்சியும் இதைப்பற்றி குறைந்தபட்சம் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம். அவர்களின் குடும்பத்தினர் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அதன்விளைவு கடுமையாக இருந்திருக்கலாம்.
ஆனால் இம்மாணவர்களைப் பொதுமக்கள் கூட்டமாகச் சேர்ந்து தாக்கி சில மாணவர்களுக்குக் கையும் காலும் முறிந்திருந்தால் தாக்கியவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருப்பார்கள். 
மருத்துவமனையில் மாணவர்களைப் பார்க்கப் படையெடுத்து ஆளாளுக்குப் புகைப்படத்துடன் பேட்டியும் கொடுத்திருப்பார்கள். போலீஸார் தடியடி நடத்தியிருந்தாலும் இதுதான் நடக்கும்.
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றில்லை பள்ளி மாணவர்கள் கூட பெரும்பாலும் பேருந்துகளுக்குள் வருவதேயில்லை. ஜன்னல் கம்பிகளில்தான் தொங்கி வருகின்றனர். 
பெற்றோர்கள் அந்த மாணவர்களைப் படிக்க அனுப்பினார்களா அல்லது சர்க்கஸ் செய்ய அனுப்பினார்களா என்பது தெரியவில்லை. பேருந்துகளுக்குள் அவர்களின் ஆட்டமும் பாட்டமும் சொல்லி மாளாது. 
அவர்கள் பேசும் பேச்சால் பேருந்தில் உள்ள பயணிகள், குறிப்பாக, பெண்கள் முகம் சுளித்தாலும் மாணவர்கள் கண்டு கொள்வதில்லை.
முன்பெல்லாம் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும்போது பெற்றோர், கண்ணையும் காதையும் மட்டும் விட்டுவிடுங்கள் என்பார்கள். ஆனால் இப்போது அவ்வாறு சொல்வதற்கும் பெற்றோர்கள் தயாராக இல்லை. 
பெரும்பாலான ஆசிரியர்களுக்கும் மாணவர்களை அடித்துத் திருத்தும் தகுதியில்லை. கண்டிப்புடன் இருக்கும் ஒரு சில ஆசிரியர்களும் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக் கூடாது என்ற அரசின் உத்தரவைச் செயல்படுத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
மிகக் குறைந்த அளவு மாணவர்கள்தான் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையினர் நினைத்தால் இது போன்ற செயல்களை எளிதில் தடுக்க முடியும். ஆனால் காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்வதிலிருந்து பின்வாங்குகின்றனர். 
அப்பாவிப் பொதுமக்களைத் தேவையில்லாமல் வதைக்கும் போலீஸாருக்கு மாணவர்கள் செய்வது தவறு என்று தோன்றவில்லையா?
அடுத்தவர்களுக்குத்தான் பிரச்னை நமக்கில்லை என்று காத்திருந்தால் நமக்குப் பிரச்னை வரும்போது அதைத் தடுப்பதற்கான காலம் முடிந்திருக்கும் என்பதைப் போலீஸார் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
கைது செய்யப்பட்ட மாணவர்களைக் கல்லூரிகளில் இருந்து நீக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள காலங்களில் போலீஸார் மிகக் கடுமையாகப் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். 
விதியை மீறுபவர்கள் மாணவர்கள் என்றாலும் தயவு தாட்சண்யமின்றி கண்காணிப்புக் கேமராக்களின் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பெற்றோரை அழைத்து வந்து பள்ளி மற்றும் கல்லூரிகளின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பேச வேண்டும். தேவைப்பட்டால் சிறந்த மன நல மருத்துவர்களின் உதவியோடு சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங்கூட செய்யலாம்.
இவை அனைத்தும் ஒரே நாளில் நடந்துவிடும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் காவல்துறையினர் மனது வைத்தால் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற முடியும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை. 
மாணவர்கள் கொண்டாடும் ரயில் நாள் மற்றும் பேருந்து நாளைத் தடை செய்தாலும் தவறில்லை. மீறி கொண்டாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தால் போதும். 
அதற்குத் தேவை துணிவுதான். அந்தத் துணிவு நமது காவல்துறையிடம் உள்ளதா?

    Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court

    Children Of Those Who Acquired Foreign Citizenship Can't Resume Indian Citizenship Under Section 8(2) Of Citizenship Act : Supreme Court...