Tuesday, October 24, 2017


’விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது மதம், சாதியை இந்தியன் என்றே குறிப்பிட்டேன்’

Published : 23 Oct 2017 13:35 IST

சென்னை

விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது மதம், சாதியை இந்தியன் என்றே குறிப்பிட்டேன் என்று இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடப்பெற்றிருந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற குறித்த வசனங்களை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர்கள் தமிழிசை, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தினர்.
மேலும் பாஜக தலைவர் ஹெச்.ராஜா மெர்சல் திரைப்படத்தில் இடப்பெற்றிருந்த காட்சியை சுட்டிக் காட்டி ,"சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளிக் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
மேலும் விஜய்யின்  மதத்தை குறிப்பிடும் வண்ணம் அவரின் வாக்காளர் அடையாள அட்டையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உண்மை கசக்கத்தான் செய்யும் என்று மீண்டும் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.
இந்த  நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்தப் பேட்டியில் பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு பதிலளித்துள்ளார்.
 இதுகுறித்து இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் கூறியதாவது, ”என் பெயர் சந்திரசேகர். ஒருவரின் பெயரை வைத்து அவரின் மதத்தை நிர்ணயிப்பது சிறுபிள்ளைத்தனமானது. நான் விஜய்யை பள்ளியில் சேர்க்கும்போது பள்ளி நிர்வாகம் அளித்த விண்ணப்பித்தில் மதம், சாதியில் இந்தியன் என்றே குறிப்பிட்டேன். பள்ளி நிர்வாகம் நீங்கள் தவறாக விண்ணப்பித்துள்ளீர்கள் என்றார்கள். நான் கூறினேன் நான் ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவன். எனது மனைவி இந்துக் குடும்பத்தில் பிறந்தவள். அப்போது நாங்கள் என்ன மதம் என்று அந்த தலைமையாசிரியரிடம் கேட்டேன்.. இரண்டு மதத்தையும் சேர்த்து ஏதாவது மதம் உள்ளதா? அவள் ஒரு மனுஷி... நான் ஒரு மனிதன்..  நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றேன்.
என் மகனின் நான்கு வயதில் அவன் இந்த மதம் என்று முத்திரை குத்தப்பட நான் விரும்பவில்லை. அவன் மனிதன் என்ற முத்திரை குத்தவே நான் விரும்பினேன்.
நாடாளுமன்றத்தில் மதங்கள் இல்லை என்று சொல்லிவிட்டு நான்கு வயதில் இவன் இந்த மதம்தான் என்று குத்தப்படுவது ஏன்? ஏதற்கு?
அதனாலேயே அவனை மனிதன் என்று சேர்த்துவிட்டேன். அந்தப் பள்ளி நிர்வாகம் ஒன்றுமே கூறவில்லை. சேர்த்துக் கொண்டார்கள்.
இன்றுவரை விஜய் மனிதனாக இருந்து கொண்டு இருக்கிறார். பெயரைப் பற்றி கவலைப்படாதீர்கள். பெயர் ஜோசப்பாக இருக்கலாம், வேறு ஏதாவதாக இருக்கலாம். பெயரில் ஒன்றும் கிடையாது.  நமது நடத்தையில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியம். எங்களுக்கு மனிதம்தான் மதம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

'ஜோசப்' விஜய் எங்கள் எதிரி இல்லை. அவரது பொய்யைத் தான் எதிர்க்கிறோம் என்று ஹெச்.ராஜா கூறியுள்ளார்.
'மெர்சல்' திரைப்பட சர்ச்சை தேசிய அளவில் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்நிலையில் ட்விட்டர் தளத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் நடிகர் விஜய்யை பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஹெச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
மெர்சல் எதிர்ப்பு ஏன்.. விஜய் மீதான காட்டம் ஏன் என்பன குறித்து எச்.ராஜாவிடம் கேட்டோம். அவர் 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்குப் பேட்டி அளித்தார்.
'மெர்சல்' எதிர்ப்பு விஜய் என்ற தனிநபர் மீதான எதிர்ப்பாக மாறியிருக்கிறதே ஏன்?
'ஜோசப்' விஜய் எங்கள் எதிரி இல்லை. அவர் பரப்பும் பொய்யைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 'ஜோசப்' விஜய்க்கு வாழ்த்து சொல்வேன். தமிழகத்தில் ஜன சங்கத்தை நிறுவிய டாக்டர் வி.கே.ஜான் ஒரு கிறிஸ்தவர். கிறிஸ்தவர் என்ற அடிப்படையில் விஜய்யை எதிர்க்கவில்லை. கோயில்களுக்குப் பதிலாக கல்வி நிலையங்களும், மருத்துவமனைகளும் கட்டச் சொல்லும் 'ஜோசப்' விஜய்யை கேள்வி கேட்டால் கொந்தளிக்கும் ஊடகங்கள் தேவாலயங்களுக்கு பதில் பள்ளிகள் கட்ட வேண்டும் என்று நான் ஒரு கருத்து சொல்லியிருந்தால் எனக்கு மதவாதி பட்டம் தந்திருக்கும்தானே.
'ஜோசப்' விஜய் என மத ரீதியிலான தாக்குதலை ஏன் தொடர்ந்து முன்வைக்கிறீர்கள்?
விஜய்யின் முழுப்பெயர் ஜோசப் விஜய் தானே. அவரது வாக்காளர் அடையாள அட்டையில் அப்படித்தானே இருக்கிறது. அவரது முழுப் பெயரை நான் குறிப்பிட்டு அழைக்கிறேன். அதில் ஊடகங்கள் இப்படி பதற்றம் கொள்வது ஏன்? என்னை யாராவது ஹரிஹரன் ராஜா என அழைத்தால் நான் இயல்பாகவே இருப்பேன்.
மத ரீதியிலான தாக்குதலை தவிர்த்து விஜய் என்றே அழைக்கலாமே?
நான் ரொம்ப அப்பாவி. எனக்கு அகட விகடம் எல்லாம் தெரியாது. அதனால் விஜய்யை அவரது முழுப் பெயரால் அழைக்கிறேன்.
தேசிய அளவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் நீங்கள் மதத்தின் பெயரால் கருத்துகளை பகிர்வது கட்சியை பலவீனப்படுத்தாதா?
ஒரு கிறிஸ்தவரை கிறிஸ்தவர் எனக் குறிப்பிடுவது மதவாத அரசியல் அல்ல. இந்த உண்மையைச் சொல்வதால் எங்கள் கட்சிக்கு எந்த பலவீனமும் இல்லை.
தமிழகத்தில் பாஜக காலூன்றாத நிலையில் இத்தகைய சர்ச்சைகள் பாஜகவை வலுவிழக்கத்தானே செய்யும்?
நிச்சயமாக செய்யாது. நாங்கள் ஒரு பொய்யை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுக்கிறோம். 'ஜோசப்' விஜய்யின் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்கள் பொய்யை பரப்புகின்றன. சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் இல்லை. அதேபோல் மதுபானங்களுக்கு வரி இல்லை எனக் கூறுவதும் பொய்ப் பிரச்சாரம். மதுபான வகைகளுக்கு 270% வரை வரி இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து ஒரு விஷயத்தை வலியுறுத்திப் பேசுவது எங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்தவே. பிரச்சினையைச் சார்ந்தே எதிர்ப்பை பதிவு செய்கிறோம். தனிநபர் சார்ந்து அல்ல.
அப்படி என்றால் எதற்காக விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையைப் பொதுவெளியில் பகிர்ந்தீர்கள்? அது தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது அல்லவா?
'ஜோசப்' விஜய்யின் சட்டைப் பையில் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துவந்து பகிரவில்லையே. சமூக வலைதளத்தில் சிலர் பதிவிட்டதையே நான் பகிர்ந்தேன். அதில் என்ன அத்துமீறல் இருக்கிறது.
‘மெர்சல்’ படத்தை ஆன்லைனில் பார்த்தேன் என்று பகிரங்கமாக கூறினீர்களே? வருத்தம் இல்லையா?
சர்ச்சை கருத்துகள் அடங்கிய காட்சிகளை ஆன்லைனில் பார்த்தேன் என்றுதான் சொன்னேன். முழுப்படத்தையும் ஆன்லைனில் பார்த்தேன் என்று சொல்லவில்லை. எனக்கு அதற்கான நேரமும் இல்லை. நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
சினிமா பார்ப்பது நேர வீணடிப்பா?
குடும்பத்துடன் திரையரங்குகளில் நானும் சில சினிமாக்களைப் பார்த்திருக்கிறேன். அது குடும்பத்துடன் பொழுதைப்போக்குவதற்காக. இப்போது எனக்கு அவ்வளவு நேரம் இல்லை என்பதால்தான் நேரத்தை வீணடிக்க முடியாது என்கிறேன். நான் எந்தப் படத்தையும் இணையத்தில் பார்த்ததில்லை என்பதை இங்கே 'தி இந்து' தமிழ் இணையதளம் வழியாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
'மெர்சல்' படத்துக்கு தேசிய அளவில் இலவச விளம்பரம் தேடித்தந்த பாஜகவுக்கு படக்குழு நன்றி தெரிவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே?
தேசிய அளவில் பேசப்படுவதெல்லாம் பாராட்டுக்குரியது என்றால் டிடிவி திஹார் சென்றதும் தேசிய அளவில் பேசப்பட்டது. அதற்காக டிடிவி தினகரன் ஸ்டார் ஆகிவிடுவாரா?
உங்கள் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழகத்தில் சலசலக்கப்பட்டதை அடக்கவே 'மெர்சல்' சர்ச்சையால் திசை திருப்புகிறீர்கள் என்ற விமர்சனம் பற்றி உங்கள் கருத்து?
இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை இதாகத்தான் இருக்கும். அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனத்தின் மீது ரூ.100 கோடி அளவுக்கு அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார். நியாயம் தன் பக்கம் இருப்பதால்தானே அவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
விஜய், மெர்சல், அமித் ஷா என பல்வேறு கேள்விகளுக்கும் ஹெச்.ராஜா தனக்கே உரித்தான பாணியில் பதில்களைத் தந்தார்.
அமெரிக்காவில் 'மெர்சல்' படத்தின் வசூல் மில்லியன் டாலர்களைக் கடந்துள்ளதாக, அப்படத்தின் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாஜக கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததிலிருந்தே, வசூல் கணிசமாக கூடியது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
தமிழகம் மட்டுமன்றி அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தி படங்களைத் தாண்டி வசூல் செய்து வருவதாக இந்தி திரையுலகின் வியாபார நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவில் 'மெர்சல்' படத்தை வெளியிட்டிருக்கும் ATMUS ENTERTAINMENT நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:
மில்லியன் டாலர் கனவு நனவானது! ஞாயிற்றுக்கிழமை மொத்த வசூல் 297214 (அமெரிக்க) டாலர்கள். சனிக்கிழமையன்று 972706 டாலர்கள். அமெரிக்காவில் மட்டும் மெர்சல் படத்துக்கு வசூல் மொத்தம் 10,02,420 டாலர்கள்!
#MillionDollarMersalUSA அமெரிக்காவில் இதுவரை அதிக வசூலான டாப் 5 தமிழ்ப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்தது மெர்சல்! விஸ்வரூபம், லிங்கா, எந்திரன் மற்றும் கபாலி ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன. மெர்சல் இன்றைய (ஞாயிறு) நாள் முடிவில் நான்காம்  இடத்தைப் பிடித்துவிடும். அமெரிக்காவில்  தமிழ்ப் பட வசூலில் ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய் இருப்பார்
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடன் வட்டி குறைப்பு

2017-10-24@ 00:43:37




சென்னை: வங்கிகள் கடன் வட்டி விகிதங்களை எம்சிஎல்ஆர் முறைப்படி நிர்ணயித்து வருகின்றன. இந்த வகையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), மூன்று மாதம் வரையிலான எம்சிஎல்ஆர் விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகளும், 6 மாதங்களுக்கு 30 அடிப்படை புள்ளிகளும், ஓராண்டு முதல் மூன்று ஆண்டு வரை 15 அடிப்படை புள்ளிகளும் குறைத்துள்ளது.

அதாவது, ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் வட்டி 8.55 சதவீதத்தில் இருந்து 8.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 3 மற்றும் 6 மாதங்களுக்கான எம்சிஎல்ஆர் வட்டி முறையே 8.10 சதவீதம், 8.20 சதவீதம் என இருக்கும். இதன்படி புதிய வீட்டுக்கடன் வட்டி ₹30 லட்சம் வரை 8.40 சதவீதமாக வசூலிக்கப்படும். செப்டம்பரை விட இது 15 அடிப்படை புள்ளிகள் குறைவாகும். புதிய வட்டி விகிதம் இந்த மாதம் 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது என இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தவிர, சுப கிரஹா திட்டம், என்ஆர்ஐ வீட்டு கடன், வீடு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் திட்டங்களின் கீழ் வீட்டு கடன்கள் மற்றும் வாகன கடன்களுக்கான செயல்பாட்டு கட்டணங்களை விழாக்கால சலுகையாக 3.10.2017 முதல் 31.1.2018 வரை ரத்து செய்து இந்த வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனுக்கள்26,989:அக்., 31 ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு
t
 வாக்காளர் பட்டியலில் சேர்க்க கோரி மனுக்கள்26,989:அக்., 31 ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு
மதுரை:மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யக் கோரி நேற்று வரை 26 ஆயிரத்து 989 பேர் மனு செய்துள்ளனர். இம்மாதம் 31ம் தேதி வரை மனு செய்யலாம் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.இம்மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அக்., 3ம் தேதி கலெக்டர் வீரராகவ ராவ் வெளியிட்டார். இதில் 12 லட்சத்து 64 ஆயிரத்து 343 ஆண், 12 லட்சத்து 92 ஆயிரத்து 765 பெண், 120 இதரர் உட்பட 25 லட்சத்து 57 ஆயிரத்து 228 வாக்காளர்கள் உள்ளனர்.
1.1.17 ம் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க கோரி தாலுகா, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அக்., 8, 22 தேதிகளில் சிறப்பு முகாம்கள் மாவட்டத்திலுள்ள 2687 ஓட்டுச்சாவடிகளில் நடத்தப்பட்டன. 22ம் தேதி ஒரே நாளில் மட்டும் பெயர் சேர்க்க 8,591, நீக்க 3236, முகவரி மாற்ற 1,157, திருத்தம் செய்ய 830 உட்பட 13,814 மனுக்கள் பெறப்பட்டன. இம்மாதத்தில் நேற்று வரை 26 ஆயிரத்து 989 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: 18 வயது பூர்த்தியானவர்கள் இம்மாதம் 31ம் தேதி வரை சம்பந்தப்பட்ட தாலுகா அல்லது மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் கலர் போட்டோக்களுடன் கூடிய விண்ணப்பங்களை கொடுத்து பெயர் சேர்த்து கொள்ளலாம். அனைத்து மனுக்கள் மீதும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் விசாரணை நடத்தி பட்டியலில் சேர்ப்பர். அடுத்தாண்டு ஜன., 5ம் தேதி வாக்காளர் பட்டியல் இறுதி பட்டியல் வெளியிடப்படும், என்றனர். மாவட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலுவலரும், நகரமைப்பு திட்ட இயக்குனருமான பீலா ராஜேஷ் இன்று (அக்., 24) மதுரையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பி.எட்., படிப்பு உடனடி சேர்க்கை

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை கூறியதாவது:
இப்பல்கலை தொலைநிலை கல்வி சார்பில் பி.எட்., உடனடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் 
அட்மிஷன்) இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2017 -2019 ஆண்டு சேர்க்கைக்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ளவர்களுக்கு அக்., 26, 27 மற்றும் அக்.,30 முதல் நவ.,3 வரை உடனடி சேர்க்கை நடக்கிறது.நுழைவு தேர்வு இல்லை. ஆசிரியர் பணி அனுபவத்திற்கு முன்
னுரிமை அளிக்கப்படும். அனைத்து சான்றிதழ்களுடன் அறிவிக்கப்பட்ட நாட்களில் காலை 10:00 - மதியம் 3:30 மணிக்குள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு www.mkudde.org என்ற இணைய தளம் அல்லது இயக்குனர் (பொறுப்பு) கலைச் செல்வனை 98657 32822ல் தொடர்புகொள்ள
லாம், என தெரிவித்துள்ளார்.

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு சப்ளைக்கு நிரந்தர மையம் அமைக்க முடிவு
சென்னை மற்றும் மாவட்டங்களில் உள்ள உணவு வழங்கல் அலுவலகங்களில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்காக, நிரந்தர மையங்கள் அமைக்கப்பட இருக்கின்றன.
தமிழகத்தில், உணவு வழங்கல் துறை சார்பில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. தற்போது வழக்கப்படும், ஸ்மார்ட் கார்டு, சென்னை, பல்லாவரத்தில் உள்ள ஒரு அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. அங்கிருந்து, கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி, வட்ட வழங்கல் அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை வாயிலாக, மக்களிடம் வழங்கப்படுகிறது.
மாற்று ரேஷன் கார்டு தேவைப்படுவோர், அரசு, 'இ - சேவை' மற்றும் பொது சேவை மையங்களில், கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அங்குள்ள ஊழியர்கள், ஸ்மார்ட் கார்டு சேவைக்கு வரும் மக்களை அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில், 17 உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகங்களும்; மற்ற மாவட்டங்களில், அனைத்து தாலுகாவிலும், வட்ட வழங்கல் அலுவலகங்கள் உள்ளன. அவற்றில், ரேஷன் கார்டு தர, லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தன.இதனால், மக்கள் எங்கிருந்தும், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, 
'இ - சேவை' மையங்களில் பெற்றுக் கொள்ளும் வசதி துவக்கப்பட்டது. 
ஆனால், 'இ - சேவை' மையங்கள், அலட்சியமாக உள்ளதாக, புகார்கள் வருகின்றன. மக்களை சிரமப்படுத்தும் ஊழியர் மீது, நடவடிக்கை எடுக்கும்படி, மையங்களை நடத்தும் நிறுவனங்களிடம் தெரிவிக்கப்பட்டது.தற்போது, உணவு வழங்கல் அலுவலகங்களில், ஸ்மார்ட் கார்டுக்காக நிரந்தர மையம் அமைக்கப்பட உள்ளது. இவற்றில், புது ரேஷன் கார்டு விண்ணப்பம் பெறுதல், கார்டு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு ஒப்பதல் கிடைத்தும், அதற்கான பணிகள் துவங்கும். அனைத்து விபரமும், கம்ப்யூட்டரில் பதிவாகும் என்பதால், 
லஞ்சம் போன்ற முறைகேடு நடக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

போலி டாக்டர்கள் 200 பேர் கைது


தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் மக்களை மிரள வைத்துள்ள நிலையில், மூன்று மாதங்களில், 90 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு மட்டும், 200 போலி டாக்டர்கள் சிக்கி உள்ளனர். தமிழகம் முழுவதும், போலி டாக்டர்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, சுகாதார பணிகள் குழு மட்டுமின்றி, மாநில, மாவட்ட நிபுணர்கள் குழுக்களும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிபுணர்கள் குழு, டெங்கு பாதிப்பு அதிகம்உள்ள, சென்னை, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில், தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதன்படி, மூன்று மாதங்களில், 90 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டில், மொத்தம், 200 போலி டாக்டர்கள் சிக்கி உள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போலி டாக்டர்கள், பெயர் பலகை வைத்திருக்க மாட்டார்கள். அவர்களது மருந்து சீட்டு ரசீதுகளிலும், பெயர் இடம் பெற்றிருக்காது. மேலும், மருத்துவ கவுன்சில் பதிவு எண், ஐந்து அல்லது ஆறு இலக்கு எண்ணாக இருக்கும். இதற்கு குறைவான எண்கள் இருந்தால், அவர்கள் போலி 
டாக்டர்கள் என, அடையாளம் காண முடியும். போலி டாக்டர்களை அடையாளம் காணும் பொதுமக்கள், '104' என்ற மருத்துவ சேவை மைய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

பிரபல நகை கடை மீது போலீசில் மோசடி புகார்

சென்னை: தங்க நகை சேமிப்பு திட்டத்தில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டதாக, 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' தங்க நகை கடை மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.
சென்னை, பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர், செல்வராஜ். இவர் உட்பட, 50க்கும் மேற்பட்டோர் நேற்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்:
சென்னையில், தி.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி என, எட்டு இடங்களில், 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' என்ற, தங்க நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் அறிவிக்கப்பட்ட, தங்க நகை சேமிப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து, மாதம், ஆயிரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபாய் என, பல லட்சம் ரூபாய், தவணைத்தொகை கட்டி வந்தோம். 10 முதல், 15 மாதத்திற்குள், கட்டிய பணத்திற்கு தங்க நகை தருவதாக உறுதி அளித்து இருந்தனர்.
ஆனால், 15 மாதங்களுக்கு மேலாகியும் தங்க நகை தரவில்லை. இதுபற்றி, நிர்வாகிகளிடம் கேட்டோம். நகைக்கு பதிலாக, கட்டிய பணத்திற்கு காசோலை தருவதாக கூறினர். அந்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதுபற்றி, போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. அதனால், கடை நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், புரசைவாக்கம் பகுதியில், 'நாதெல்லா ஜூவல்லர்ஸ்' கடை நேற்று, திடீரென மூடப்பட்டது. அதனால், அந்தக்கடை முன் ஏராளமானோர் திரண்டனர். சில இடங்களில், அந்த கடைகள் முன், பணம் கட்டி ஏமாந்தோர் போராட்டமும் நடத்தினர்.

விமான பயணி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தல் : 3 நாட்கள் போராடி ரூ.14 லட்சம் தங்க கட்டி பறிமுதல்



விமான பயணி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தல் : 3 நாட்கள் போராடி ரூ.14 லட்சம் தங்க கட்டி பறிமுதல்
கோவை: விமான பயணி வயிற்றில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம் கடந்த, 20ம் தேதி கோவை சர்வதேச விமான நிலையம் வந்தது. விமானத்தில் பயணம் செய்த இலங்கையை சேர்ந்த சத்தியசீலன், 37, என்பவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரது உடமைகளை சோதனை நடத்தினர்.தொடர்ந்து, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று, 'ஸ்கேன்' செய்து பார்த்தபோது, வயிற்றில் தங்க கட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் தங்க வைத்து, மூன்று நாட்கள் போராட்டத்துக்கு பின், வயிற்றில் இருந்து, 20 சிறிய அளவிலான தங்க உருண்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை சுங்கத்துறை கமிஷனர் சீனிவாசராவ் கூறியதாவது: இலங்கையை சேர்ந்த சத்தியசீலன் வயிற்றில் இருந்து, 434 கிராம் அளவிலான, 20 சிறிய தங்க உருண்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை பொருட்களை தான் வழக்கமாக இதுபோன்று வயிற்றில் வைத்து கடத்தி வந்தார்கள். தற்போது தங்க கட்டிகளையும், சிறிய உருண்டை வடிவில் வயிற்றில் வைத்து கடத்த துவங்கியுள்ளனர். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 14 லட்சம் ரூபாய். இருபது லட்சம் ரூபாய் மதிப்புக்கும் அதிகமான பொருட்கள் கடத்தப்பட்டால் தான், கடத்தலில் ஈடுபட்ட நபரை கைது செய்ய முடியும். இதனால், சத்தியசீலனை கைது செய்யவில்லை. அவர் கடத்தி வந்த தங்க கட்டிகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த கடத்தல் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சத்தியசீலனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

கோவை சர்வதேச விமானநிலையம் வழியாக, சமீபகாலமாக தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது. நடப்பாண்டு தற்போது வரை, 3.69 கோடி ரூபாய் மதிப்பிலான, 13 கிலோ தங்கத்தை கோவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


பல்கலை பதவிகளுக்கு நாளை நேர்காணல் : 'கைப்பற்ற' கடும் போட்டி


மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் உயர் பதவிகளுக்கான நேர்காணல் நாளை மற்றும் நாளை மறுநாள் (அக்.,25, 26) நடக்கிறது. பதவிகளை கைப்பற்ற பேராசிரியர், துறைத் தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பல்கலையில் பதிவாளர், தேர்வாணையர், கூடுதல் தேர்வாணையர், டீன், தொலைநிலை கல்வி இயக்குனர் என உயர் பதவிகளை தற்போது துறைத் தலைவர், பேராசிரியர்கள் கூடுதல் பொறுப்பாக கவனிக்கின்றனர். துணைவேந்தராக செல் லத்துரை பதவியேற்ற பின், ''பொறுப்பு' பதவிகளுக்கு விரைவில் நிரந்தர நியனம் மேற்கொள்ளப்படும்,'' என தெரிவித்தார். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 150க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே துணைவேந்தர் செல்லத்துரையால் 'பொறுப்பு' பதவிகளை பெற்றவர்கள் அதை தக்கவைக்கவோ அல்லது வேறு ஏதாவது பதவியை பெறும் வகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
நேர்காணல் முடிந்த மறுநாள் (அக்.,27) 
சிண்டிகேட் கூட்டத்தில், பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில், ''வழக்கமான தேர்வு தான். பிற பல்கலைகளில் இதுபோன்ற தேர்வு முடிந்துள்ள நிலையில் இங்கும் நடக்கவுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தபட்சம் 30 பேர் விண்ணப்பித்துள்ளனர். கல்வி தகுதி, அனுபவம், பணியின் போது பிற சாதனை உள்ளிட்டவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். தேர்வு நேர்மையாக 
நடக்கும்,'' என்றார்.

மருத்துவம் படித்து அரசியலுக்கு வந்தது ஏன்?: தமிழிசை விளக்கம்

மருத்துவம்,படித்து,அரசியலுக்கு,வந்தது ஏன்,Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்,விளக்கம்
சென்னை: ''இலவச மருத்துவம் வேண்டும் என்பது தான், பா.ஜ., நோக்கம். அதற்காகத் தான், மருத்துவம் படித்து, அரசியலுக்கு வந்தேன்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில், நேற்று, அவர் அளித்த பேட்டி: ஆர்.கே.நகர் தேர்தலில், ஏற்கனவே கண்டறியப்பட்ட குறைபாடுகள், நீக்கப்பட வேண்டும். அடுத்து நடக்கப் போகும் தேர்தல்களுக்கு முன்னோடியாக, ஆர்.கே.நகர் தேர்தல், நேர்மையாக நடத்தப்பட வேண்டும். நடிகர் வடிவேலை, பா.ஜ.,விற்குள் இழுக்க, நாங்கள் முயற்சிக்கவில்லை. இது போன்ற கருத்துக்களை கூறும் திருமாவளவனுக்கு, கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
மெர்சல் படத்தில், ஜி.எஸ்.டி., தொடர்பாக தவறான கருத்துக்கள் இருந்ததால், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என, கூறினேன். கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில், விஜய்க்கும், எனக்கும், எந்த பிரச்னையும் இல்லை. இவ்விவகாரத்தில், இன்று காலை வரை, மிரட்டும் வகையிலும், விமர்சிக்கும் வகையிலும், பல தொலைபேசி அழைப்புகள் எனக்கு வந்தன. இலவச மருத்துவம் வேண்டும் என்பது தான், பா.ஜ., நோக்கம். அதற்காகத் தான், மருத்துவம் படித்து, அரசியலுக்கு வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'


'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
புதுடில்லி: 'சினிமா தியேட்டர்களில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காவிட்டால், அந்த நபருக்கு தேசப்பற்று குறைவாக இருப்பதாக கருது முடியாது; தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

உத்தரவு:

நாட்டின் அனைத்து சினிமா தியேட்டர்களிலும், படம் திரையிடப்படுவதற்கு முன், தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, கடந்த ஆண்டு, டிசம்பர் முதல், அனைத்து தியேட்டர்களிலும், தேசிய கீதம் இசைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் போது எழுந்து நிற்காத, முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிலர், சக பார்வையாளர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேச பக்தி குறைவா..

இது குறித்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: மக்கள், பொழுது போக்கிற்காக சினிமா தியேட்டருக்கு செல்கின்றனர். தேச பக்தியை நிரூபிக்கும் இடம், அது அல்ல. தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்படும் போது, எழுந்து நிற்காத நபருக்கு, தேச பக்தி குறைவாக இருப்பதாக கருத முடியாது. தியேட்டர்களுக்கு வருவோர், டி - சர்ட்டுகள், அரைக்கால் சட்டை அணிந்து வந்தால், அது தேச பக்திக்கு பங்கம் விளைவிக்கும் செயல் எனக் கருதி, அதற்கும் தடை விதிக்க, மத்திய அரசு விரும்பலாம்.

தெளிவுபடுத்தனும்:

பல்வேறு போட்டித் தொடர்களின் போது, விளையாட்டு மைதானங்களில், தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. அங்கு அமர்ந்திருக்கும் பார்வையாளர்களில், பாதிக்கு மேற்பட்டோருக்கு, அதன் பொருள் புரிவதில்லை. அது, ஏன் இசைக்கப்படுவது என்றும் தெரிவதில்லை. அவர்களில் பலர் எழுந்து நிற்பதும் கிடையாது. தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து, மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். எங்கெங்கு இசைக்கப்பட வேண்டும். அதன் விதிமுறைகள் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

சித்தா மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கவுன்சிலிங்



சென்னை: சித்தா, ஆயுர்வேதம் மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, அரசு மற்றும் தனியார் கல்லுாரி களில், 1,216 இடங்கள், அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. இந்த படிப்புகளில் சேர, 6,938 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கவுன்சிலிங், அக்., 11 முதல், 14 வரை நடந்தது. கவுன்சிலிங் முடிவில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், 390 இடங்களும், தனியார் கல்லுாரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கு, 295 இடங்களும் காலியாக உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், சென்னை, அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவ கல்லுாரியில், நாளை துவங்கி, அக்., 27 வரை நடைபெற உள்ளது. இதில், தர வரிசை பட்டியலில், 3,526 முதல், 5,633 இடங்கள் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
முதுநிலை, 'நீட்' தேர்வில் மாற்றம் : நாடு முழுவதும் ஜன.,7ல் தேர்வு


முதுநிலை, 'நீட்' தேர்வு, நாடு முழுவதும், ஜன.,7ல், ஒரே நாளில் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ்., முடித்தவர்கள், எம்.டி., - எம்.எஸ்., மற்றும் முதுநிலை டிப்ளமா படிக்கவும்; பி.டி.எஸ்., படித்தவர்கள், எம்.டி.எஸ்., படிக்கவும், மத்திய அரசின் முதுநிலை, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டில், முதுநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புவோருக்கான, 'நீட்' தேர்வு தேதியை, தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
இதன்படி, '2018, ஜன., 7ல், கணினி வழி தேர்வாக, முதுநிலை, 'நீட்' மற்றும், எம்.டி.எஸ்., 'நீட்' தேர்வுகள் நடக்கும்; தேர்வு முடிவுகள், ஜன., 31ல் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.இந்த தேர்வு, நாடு முழுவதும், ஒரே நாளில் நடத்தப்படுகிறது.
அதேபோல், அனைவருக்கும் ஒரே வினாத்தாள் இடம் பெறும். 'மாடரேட்டிங்' என்ற மதிப்பெண் சமப்படுத்தும் முறை எதுவும் கிடையாது. ஒவ்வொரு கேள்வியின் சரியான பதிலுக்கும், நான்கு மதிப்பெண் வழங்கப்படும். ஒவ்வொரு கேள்வியின் தவறான பதிலுக்கும், தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். முயற்சிக்காத கேள்விக்கு, எந்த மதிப்பெண்ணும் கிடையாது.
முதுநிலை, 'நீட்' தேர்வு, 2016 வரை, நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக, எட்டு நாட்கள் நடத்தப்பட்டது. ஆனால், வரும் கல்வி ஆண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வினாத்தாள், ஒரே நாள் என, தேர்வு முறை மாற்றப்பட்டுள்ளது. சந்தேகங்களுக்கு, http://nbe.edu.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் எண் கட்டாயம் : முதுநிலை, 'நீட்' தேர்வில் பங்கேற்க, nbe.edu.in என்ற இணையதளத்தில், ஆன்லைன் பதிவு மேற்கொள்ள வேண்டும். அப்போது, தேர்வரின் ஆதார் எண்ணை பதிவு செய்வது கட்டாயம். ஆதார் எண் இல்லாதோர், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்த பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். விண்ணப்ப பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, தேசிய தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது. 

- நமது நிருபர் -

Monday, October 23, 2017

Pay compensation for Siddha treatment too: HC

TNN | Oct 17, 2017, 00:38 IST

Madurai: In a landmark judgment in an accident relief claim case, the Madurai bench of the Madras high court has ruled that a person who undergoes treatment in Indian systems of medicine — Siddha, Unani, Homeopathy and Ayurveda — is also eligible to get compensation.

The bench, accordingly, enhanced the compensation amount to Rs 2.71 lakh from a meagre Rs 13,000 in the case of a minor boy who suffered 60 per cent permanent disability in an accident a decade ago. As the boy had taken treatment in Siddha, the Motor Accident Claims Tribunal, Tirunelveli had refused to accept treatment bills and directed the branch manager of The New India Assurance Company, Dindigul to pay Rs 13,000 to the boy by its order dated March 9, 2010.

Seeking to enhance the compensation, the boy, Karthick Raja, represented by his father, filed an appeal six years ago. The accident happened on July 12, 2006 when he was hit by a lorry while walking on the Kalakkadu Cheranmahadevi road. "The government has recognised Siddha, Ayurveda, Unani and Homeopathy and opened colleges in them. In that situation, the yardstick applied that the medical bills of a person who takes treatment in allopathy alone shall be taken into consideration for the purpose of arriving at compensation is illusive and not sustainable in the eye of law," said Justice J Nishabanu who heard the appeal.

"A person who takes treatment in Siddha, Unani, Homeopathy and Ayurveda is also eligible to get compensation.

"It can't be said that a person has to take treatment only in a particular hospital and (undergo) a particular method of treatment. It is for the injured to take decision for taking treatment in the interest of his health." The judge also said that as per the Indian Medicine Central Council Act the Siddha doctor was empowered to sign or authenticate a medical or fitness certificate and can depose evidence before the court.

"When the Act itself gives such recognition to the Siddha doctors, there is no logic in rejecting the medical bills on the ground that the treatment was taken through the Siddha medicine," the judge said.

நான் பார்த்தேன்னு சொன்னேன்... முழுசா பார்த்தேன்னு சொன்னேனா? விஷாலுக்கு பதிலடி கொடுத்த ஹெச்.ராஜா!





வலைதளத்தில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் பார்த்தேன்; நான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு பேச வேண்டும்; விஷாலுக்கு ஹெச்.ராஜா விளக்கமளித்துள்ளார்.

மெர்சல் திரைப்படத்தில், டிஜிட்டல் இந்தியா, ஜிஎஸ்டி வரி, திட்டங்களை விமர்சித்த தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இணையதளத்தில் மெர்சல் படத்தைப் பார்த்ததாக கூறியிருந்தார்.

இதற்கு, நடிகர் விஷால், ஒரு தேசிய கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொது வெளியில் நான் திருட்டுத்தனமாக இணையதளத்தில் சட்டவிரோதமாக புதிய படத்தை பார்த்தேன் என்று பேட்டி கொடுப்பது மிகவும் வேதனை அளிப்பதாக கூறியிருந்தார்.

மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் விஷால் கூறியிருந்தார்.

இணையதளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்ததாக கூறி, ஹெச்.ராஜா மீது பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், ஹெச்.ராஜா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

தான் கூறியதை சரியாக பார்த்துவிட்டு நடிகர் விஷால் பேச வேண்டும் என்றார். சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட காட்சியை மட்டும்தான் பார்த்தேன். அதில் தவறு இல்லை. குறிப்பிட்ட காட்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்து இருந்தால்கூட தவறு என்று கூறலாம் என்றும் அப்போது ஹெச்.ராஜா விளக்கமளித்தார். ஆனாலும், ஹெச்.ராஜாவை, நடிகர்கள் விஜய் மற்றும் விஷால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Dailyhunt
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணம் கட்டாயம்: வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவு




மத்திய அரசு மேற்கொண்டு வரும் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களின் அசல் அடையாள ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, இனி வங்கியில் ரூ.50,000-க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்வது, புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவது, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளின்போது வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாள ஆவணத்தின் நகல்களுடன், அதன் அசலையும் எடுத்துச் செல்ல வேண்டும். போலியான அடையாள ஆவணத்தின் மூலம் வங்கிக் கணக்குத் தொடங்குவது, பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றைத் தடுக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்ட விதிகளில் சில திருத்தங்களைச் செய்து அரசாணை ஒன்றை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நிதி சார்ந்த சேவைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல்களைப் பெறும்போது, அசல் ஆவணத்தையும் பார்த்து உறுதி செய்வதுடன், அந்த ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். இது தவிர வாடிக்கையாளர்களிடம் பெற்ற தகவல்களை இந்திய நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கும் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை முகவர்கள், சீட்டு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், வீட்டுக் கடன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

புதிதாக வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பணப்பரிமாற்றத்துக்கும் ஆதார் உள்ளிட்ட முக்கிய அடையாள ஆவணங்கள் கட்டாயமாகும். வெளிநாட்டு கரன்சிகள் மூலம் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் ரொக்கப் பரிமாற்றம் இருந்தால் ஆதாரை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.

மின்னணு முறையில் வெளிநாட்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் பணம் அனுப்புவது மற்றும் பெறுவது, பொருள்கள் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது; ரூ.50 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள அசையாத சொத்துகளை வெளிநாட்டில் வாங்குவது ஆகியவற்றுக்கும் இந்த விதிகள் உண்டு.
மேலும், இருப்பிடத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படும் மின் கட்டணம், தொலைபேசி கட்டணம், போஸ்ட் பெய்டு செல்லிடப்பேசி கட்டணம், காஸ் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்கள் 2 மாதங்களுக்கு முந்தையதாக இருந்தால் அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

UGC decision may reduce SC/ST, OBC faculty posts

The UGC’s Standing Committee examined 10 court judgments on the subject and recommended that the Allahabad High Court’s verdict should be applied to all universities.

Written by Ritika Chopra | New Delhi | Published:October 23, 2017 4:30 am


The proposed change could result in fewer positions for SCs, STs and OBCs, according to P S Krishnan, former secretary to the central government.

THE NUMBER of SC, ST and OBC faculty on university campuses could shrink if the HRD Ministry decides to accept the University Grants Commission’s (UGC) new formula for implementing reservation in teaching posts.

In a decision taken last month, the UGC resolved that the number of reserved faculty posts shall be calculated department-wise and not based on the aggregate posts in a university. The proposed change could result in fewer positions for SCs, STs and OBCs, according to P S Krishnan, former secretary to the central government and an expert on the subject.

The new formula is in response to a verdict of the Allahabad High Court in April. While hearing a case on teachers’ recruitment in Banaras Hindu University, the court held that reservation in teaching posts has to be applied department-wise by treating the department as a “unit” and not the university.

The court criticised UGC for applying reservation in a “blanket manner” and advised the regulator to revisit its implementation. “If the University is taken as a ‘Unit’ for every level of teaching and applying the roster, it could result in some departments/subjects having all reserved candidates and some having only unreserved candidates. Such a proposition again would be discriminatory and unreasonable. This again would be violative of Article 14 and 16 of the Constitution,” the Allahadbad High Court had observed in its verdict that cancelled the BHU recruitment and asked it to start afresh.

The UGC’s Standing Committee examined 10 court judgments on the subject and recommended that the Allahabad High Court’s verdict should be applied to all universities.

The UGC is learnt to have shared this decision with the HRD Ministry and is waiting for its “concurrence”. The change will be notified through an executive order after the government’s nod, said sources in the Commission.

As per official data, there are 17,106 teaching positions at 41 UGC-funded central universities, of which 5,997 are vacant as of April 1, 2017. This roughly works out to 35 per cent vacant teaching positions. Out of vacant faculty posts, the maximum are at the assistant professor level (2,457), followed by those of associate professor (2,217) and professor (1,098).

The higher education regulator has been writing regularly to all institutions to fill faculty positions on priority. Any change in the implementation of reservation will affect all new recruitment drives taken up by universities in future.

According to Krishnan, the number of reserved teaching posts in universities will be “much fewer” under the formula proposed by UGC.

Currently, the number of SC, ST, OBC faculty positions are calculated by treating the university as a “unit”. In other words, all posts of the same grade, such as assistant professor, across different departments in a university are grouped or clubbed together to calculate the reserved quota.

If the new UGC formula is accepted, reservation would be applied by treating each department in a university as a “unit”. This means the number of reserved posts at the level of, say, assistant professor will be determined separately for each department; calculated based on the total assistant professor posts in each department.

“Take professors, for instance. There are fewer professors in a department compared to assistant professors. If a department has only one professor, there can be no reserved posts there as reservation cannot be applied in case of a single post. But if all posts of professors across different departments are clubbed together, then naturally there is a better chance of positions being set aside for SC, ST and OBC,” said Krishnan, who has worked in the field of social justice for SCs, STs and OBCs for more than six-and-a-half decades.

“If our goal is to strengthen India by giving opportunities to persons belonging to the submerged populations, who have become qualified, then we should interpret rules or make rules to enable them to come in due numbers. If our aim is to weaken India then we can interpret rules in a manner, which defeats the goal of reservation,” he said.

மெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா?

ஸ்ரீராம் சத்தியமூர்த்தி




தீபாவளி ரிலீஸ் திரைப்படங்களில், அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தனதாக்கியிருக்கும் படம் 'மெர்சல்'. படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' ரிலீஸ் முதலே பரபரப்பு பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. 'ஜல்லிக்கட்டை மையப்படுத்திய படம்' என்ற விவாதத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாக்கியதென்றால், அதன் பின் வெளிவந்த டீஸரிலோ, ''ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்'' என்ற அழுத்தமான வசனமோ அரசியல் அரங்கில் கடும் அனலைக் கிளப்பியது. விலங்குகள் நல அமைப்பிடம் அனுமதி வாங்காதது, படத் தலைப்பு பிரச்னை என ஆரம்பத்திலிருந்தே பல்வேறு தடைகளை உடைத்தெறிந்துதான் திரையரங்குகளில் வெளியானது 'மெர்சல்' திரைப்படம். இப்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசின் திட்டங்களைக் கடுமையாகச் சாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, இலவச மருத்துவம், மெடிக்கல் எரர் எனப்படும் மருத்துவத் தவறுகள் எனப் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேசுகிறது மெர்சல் திரைப்படம். இந்தக் கருத்துகளுக்கு பி.ஜே.பி. தரப்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையானப் பின்னணி என்ன என்று பார்த்தால், கிடைத்தத் தகவல்கள் ஆச்சர்யமளிக்கின்றன.

மருத்துவத் தவறுகள் :

இந்தியாவில் மருத்துவர்கள் செய்யும் மருத்துவத் தவறுகள் காரணமாக மட்டும் ஆண்டுக்கு 52 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவதாக இந்திய மருத்துவக் கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 100 பேரில் 6 பேருக்குத் தவறான மருந்துகள் மூலமாகவோ அல்லது மருந்துகளின் செயல்பாட்டில் உள்ள மாற்றங்கள் காரணமாகவோ மருத்துவத் தவறுகள் நேர்கின்றன.

வளரும் நாடுகளில், அதிக மருத்துவத் தவறுகள் நிகழும் நாடுகள் பட்டியலில், இந்தியாவுக்கு முன்னணி வரிசையில் இடம் கிடைத்துள்ளது. இதற்குக் காரணம் 'மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்காததே' என்கிறது ஹார்வர்டு ஆய்வு.

மருத்துவத் தரவரிசை :

உலக சுகாதார அமைப்பின் தரவரிசைப்படி மருத்துவம் முறையாகவும், தரத்தோடும் வழங்கப்படும் நாடுகளின் தரவரிசையில் இந்தியா 112-வது இடத்தைப் பிடித்துள்ளது. 'வளர்ந்துவரும் நாடுகள் என்ற அடிப்படையில் பார்க்கும்போது, இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளின் தரம் என்பது மிகவும் கவலைக்குரியதாகவே இருக்கிறது' என்று இதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

இலவச மருத்துவம் தரும் நாடுகள் :

ஃபிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, ஸ்வீடன், ஜப்பான், ஐஸ்லாந்து, நார்வே, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில், மருத்துவம் இலவசமாகவும், மருத்துவத்துக்கான செலவுகளை அரசே மானியமாகக் கொடுக்கும் முறையும் உள்ளது. சிங்கப்பூரில், மருத்துவம் இலவசம் இல்லை என்றாலும் அங்கு காப்பீடு மூலம் மக்கள் மருத்துவச் செலவுகளைச் சரிசெய்துகொள்ளும் வசதி உள்ளது. அங்குள்ள மக்களில் 80 விழுக்காட்டினர் அரசு மருத்துவத் திட்டத்தைப் பயன்படுத்திப் பயன்பெறுகின்றனர்.

மருத்துவர்கள் தேவை :

உலக சுகாதார அமைப்புத் தகவல்படி, '1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர்' என்ற விகிதத்தில் மதிப்பிட்டால், இந்தியாவில் 5 லட்சம் மருத்துவர்களுக்கான தேவை உள்ளது. தற்போதுள்ள நிலையின்படி 1,674 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்கிறார். இந்த நிலைமை வியட்நாம், அல்ஜீரியா மற்றும் பாகிஸ்தானைவிடவும் மோசமானது.

இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் பெறும் 55 விழுக்காட்டு மருத்துவர்களில், பெரும்பாலானோர் நன்கொடை கொடுத்து மருத்துவப் படிப்பில் சேர்ந்தவர்கள்தான். மேலும், வெளிநாடுகளில் மருத்துவம் படித்த இந்திய மருத்துவ மாணவர்களில், '19 விழுக்காட்டினர்தான் முழு தகுதியுடன் இருப்பதாக' வெளிநாடு மருத்துவப் படிப்பு கழகம் தெரிவித்துள்ளது.

மெர்சல் சினிமாவில் வரும் ஒரு காட்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தந்து எதிர்ப்பதோடு, 'அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும்' என்று வலியுறுத்தும் அரசியல் தலைவர்கள், மருத்துவத் தன்னிறைவு கொண்ட நாடாக இந்தியாவை மாற்றிக்காட்ட முன்வருவார்களா?
Mersal row: Important topic addressed. Well done, tweets Rajinikanth
Updated: Oct 22, 2017, 11:18 PM IST, PTI

The BJP had criticised the film for speaking out against GST

Tamil superstar Rajinikanth on Sunday lauded the crew of actor Vijay's starrer 'Mersal', saying the film has addressed an important issue.

However in a terse Twitter message, he did not explicitly refer to any specific issue, although the film has courted controversy over Goods and Services Tax, with BJP claiming that there have been incorrect references to the central taxation.

"Important topic addressed..... well done!!! congratulations team#mersal' Rajinikanth said in a brief tweet.

Important topic addressed... Well done !!! Congratulations team #Mersal— Rajinikanth (@superstarrajini) October 22, 2017

Diwali release "Mersal" has kicked up a row with the BJP taking exception to references on GST in the movie.

BJP leaders, including Raja, a national secretary in the party, state president Tamilisai Soundarajan and Union minister Pon Radhakrishnan, have been demanding that the "incorrect" references be deleted from the big-budget flick.

However, Congress vice president Rahul Gandhi, his senior colleague P Chidambaram, DMK working president M K Stalin, veteran star Kamal Haasan and a host of Tamil cinema industry representatives had supported the film crew on the issue.

The BJP had on October 20 objected to what it termed as "untruths" regarding the GST in just-released "Mersal", and wanted dialogues on the central taxation to be deleted.

Actor Vishal had earlier accused Raja of advocating piracy by watching the movie online, a charge rejected by latter.
More women in B'luru have cancer than men, says study

Raina Paul, DH News Service, Bengaluru, Oct 23 2017, 1:14 IST

Doctors say there is an increased detection of cancer in the recent past as people are willing to come forward for screening.

More women in Bengaluru have cancer than men, according to statistics from the Indian Council of Medical Research.

According to the data, from 2012 to 2014, the registered cases of cancer among women under population-based cancer registry (PBCR) was 4,547, while the number of men in the city with cancer was 3,824 in one lakh population.

According to doctors, breast cancer is being regularly detected in women in Bengaluru.

The city stands third in cases of breast cancer among females, with 34.4%, behind Delhi at 41% and Chennai at 37.9% (in one lakh population in each state) and second in brain tumours among women after Sikkim. Bengaluru stands first in brain tumors among men.

“Women are more independent and prefer to marry late and have children late. This is one of the reasons for increased breast cancer,” said Dr Shasikala Prabaharan, consultant radiologist, Health Care Global (HCG).

She added that one year of breastfeeding can reduce the chances of breast cancer by five percent.

Dr S Krishnamurthy, professor, surgical oncology and medical superintendent, Kidwai Memorial Institute of Oncology said more people are getting obese. Lack of physical activity and change in food habits are reasons for increased rates of cancer.

A few doctors said that there is an increased rate of detection of cancers in the recent past as people are willing to come forward for screening.

Dr Sunil Furtado, senior consultant, Neurosurgery, Cytecare Cancer Hospital said that there is no reason for the occurrence of brain tumours other than a genetic mutation in cells. He added that increased numbers in brain tumours could be because Bengaluru has institutions like Kidwai and Nimhans which have a good registry that records the cases.

According to ICMR, the country will have more than 17 lakh cases of cancer by the year 2020.

Dr Shasikala said that there should be regular screening, especially when it comes to a history of cancer in the family. She added that reduced consumption of red meat and more vegetable intake can reduce the chance of cancer.

AIIMS staff told not to directly write to Modi

Press Trust of India, New Delhi, Oct 23 2017, 0:19 IST



Taking a serious note of AIIMS employees writing to the prime minister or other ministers directly for redressal of grievances, the hospital administration has warned them of disciplinary action if found doing so.

In a memorandum, the AIIMS administration said submission of such representations directly to “outside authorities”, bypassing the hospital, would be treated as an “unbecoming conduct” and advised them to submit those to the officer concerned or to the director of the institute.

The memorandum states that the hospital received a number of representations by the staff on service matters, which were directly addressed to the prime minister, ministers and MPs, among others outside the institute.

“Such representations directly submitted to other authorities bypassing the institute’s authorities has been viewed seriously,” read the memorandum.

The hospital authorities have advised the employees, who wish to make representations regarding any claim or to seek redressal of a grievance related to service rights or conditions, to submit the same to the officer concerned, the deputy director or the director of AIIMS.
Nilavembu Kudineer safe, efficacious, confirms National Institute of Siddha

DECCAN CHRONICLE. | J.V. SIVA PRASANNA KUMAR
PublishedOct 22, 2017, 6:02 am IST

National Institute of Siddha (NIS), functioning under the Union Ayush ministry, plans to take up a full-fledged study for global reach.


This institute plans to take up a full-fledged study for global reach of this traditional medicine.

Chennai: Nilavembu Kudineer is safe and effective to treat dengue and other viral fevers and one need not have any qualms in consuming this herbal concoction for immediate relief, the National Institute of Siddha (NIS) functioning under the Union Ayush ministry, here has assured. This institute plans to take up a full-fledged study for global reach of this traditional medicine.

Nilavembu kashayam has been in use for over half-a-century at Government Siddha Medical College, Palayamkottai. It is one among the 32 types of internal medicines described in the Siddha system of medicine. “The nilavembu kudineer, now used for the prevention and management of dengue fever has been explained in the Siddha literatures several centuries ago. There are many research papers on nilavembu kudineer for the treatment and prevention of dengue and other viral diseases. Based on the research studies conducted by our National Institute of Siddha, 70 per cent prevention has been proven against dengue and other viral fever cases by intake of nilavembu kudineer for 5 days. It was used also to control and prevent the outbreak of chikungunya in Tamil Nadu, a few years back,” asserts Prof Dr. V. Banumathi, director, NIS, on Saturday.

This is the first time the national institute has come out in the open to endorse the Siddha preparation after a controversy on the use of nilavembu decoction erupted recently.

“Nilavembu kudineer is safe and effective for dengue,” Prof Banumathi said and stated that Dr Shanmugavelu and Dr G. D. Naidu (Siddha scholar) published the book “The Pharmacopoeia of Siddha Research Medicine” in 1973, which elaborated the research evidences about the prevention and management of dengue and other fevers caused by influenza viruses. Prof. Dr.V. Banaumathi advised the public to take nilavembu kudineer without any fear; for the prevention and management of dengue, in consultation with registered Siddha medical practitioners.

Why no largescale study on efficacy of Nilavembu Kudineer, ask experts
Further, she appealed to the public not to worry or panic about the rumours regarding the nilavembu kudineer, which she said is “safe polyherbal being used for decades without any reported adverse effect strengthened by safety studies and clinical research studies conducted in King Institute and NIS respectively.”

Research for global reach:
“Our director has plans to take up a full-fledged study as part of a national level programme so as to include this herbal concoction for treatment of dengue and viral fevers in India, besides help the global community understand and treat the people effectively,” says Dr N. J. Muthukumar, superintendent of Ayothidoss Pandither Hospital, NIS. This preparation is not something new. It is a Shastric preparation made under the guidelines of the Drugs and Cosmetic Act.

Also, as per the WHO guidelines, if any traditional herbal medicine is being continuouslyconsumed by the public for several decades, it does not require any toxic study or safety measures research, he said. To a question if there's any proposal to recommend this for treating fevers, he replied, the TN government had already issued an order in 2012 to administer nilavembu kudineer for all fevers and for chikungunya.

“The Union ministry has to take a call on this… hopefully our full-fledged study will provide a direction to the entire nation and the world as well,” he added.

Over 2,000 patients treated at OPD 

The NIS, a postgraduate research institute, which is regularly conducting special OPDs on its campus and mobile medical camps in and around South Chennai and Kancheepuram districts for prevention and management of dengue through the distribution of nilavembu kashayam, has treated over 2,200 patients at its OPD. During the 2015 December deluge nilavembu kudineer was distributed to prevent the people from various infectious diseases.

For adults, the dosage recommended is 30 - 60 ml of freshly prepared concoction and for children 5 - 20 ml, twice a day before meals for 3 to 5 days in lukewarm state, in consultation with a qualified Siddha practitioners.

Plea for ICMR’s intervention

Wondering why the Indian Council of Medical Research (ICMR) has not taken up a study on the efficacy of nilavembu kashayam, Dr V. Pugazhenthi of Doctors for Safe Environment (Dose) said even now it is not too late. The ICMR could be persuaded to take up this study.

“As dengue is a notifiable disease, with major episodes of worst affliction, the government should have conducted the chemical study after identifying all parameters. If it's a mutated virus, as in the case of swine flu, it is not wrong to conduct a molecular study. My point is that, without going into the controversy, I would say, even Siddha doctors and Allopaths could be involved in this for the betterment of humanity,” Dr Pugazhenthi who had been raising his voice for Siddha doctors, says.

Contending that there has not been sufficient studies to warrant the introduction of this Siddha drug combination, Dr Ramesh of Dose, says it is wrong to introduce a particular treatment modality when results were inconclusive. He argued that a large-scale chemical study should be taken up to ascertain the efficacy of Nilavembu kudineer in controlling this virus strain. Already we had the swine flu virus which got mutated and it was found that Tamiflu did not work on it, he cited as a reason.

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration

Life for dad, 4 kin, who poured acid in woman’s mouth for ‘honour’ Vocal Cords In Shreds, She Had Written Down Her Dying Declaration Kanward...