போலி டாக்டர்கள் 200 பேர் கைது
பதிவு செய்த நாள்
23அக்2017
22:22
தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் மக்களை மிரள வைத்துள்ள நிலையில், மூன்று மாதங்களில், 90 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டு மட்டும், 200 போலி டாக்டர்கள் சிக்கி உள்ளனர். தமிழகம் முழுவதும், போலி டாக்டர்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த, சுகாதார பணிகள் குழு மட்டுமின்றி, மாநில, மாவட்ட நிபுணர்கள் குழுக்களும் முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்த நிபுணர்கள் குழு, டெங்கு பாதிப்பு அதிகம்உள்ள, சென்னை, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில், தீவிரமாக கண்காணித்து வருகிறது.
அதன்படி, மூன்று மாதங்களில், 90 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டில், மொத்தம், 200 போலி டாக்டர்கள் சிக்கி உள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போலி டாக்டர்கள், பெயர் பலகை வைத்திருக்க மாட்டார்கள். அவர்களது மருந்து சீட்டு ரசீதுகளிலும், பெயர் இடம் பெற்றிருக்காது. மேலும், மருத்துவ கவுன்சில் பதிவு எண், ஐந்து அல்லது ஆறு இலக்கு எண்ணாக இருக்கும். இதற்கு குறைவான எண்கள் இருந்தால், அவர்கள் போலி
டாக்டர்கள் என, அடையாளம் காண முடியும். போலி டாக்டர்களை அடையாளம் காணும் பொதுமக்கள், '104' என்ற மருத்துவ சேவை மைய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
அதன்படி, மூன்று மாதங்களில், 90 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தாண்டில், மொத்தம், 200 போலி டாக்டர்கள் சிக்கி உள்ளனர்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: போலி டாக்டர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. போலி டாக்டர்கள், பெயர் பலகை வைத்திருக்க மாட்டார்கள். அவர்களது மருந்து சீட்டு ரசீதுகளிலும், பெயர் இடம் பெற்றிருக்காது. மேலும், மருத்துவ கவுன்சில் பதிவு எண், ஐந்து அல்லது ஆறு இலக்கு எண்ணாக இருக்கும். இதற்கு குறைவான எண்கள் இருந்தால், அவர்கள் போலி
டாக்டர்கள் என, அடையாளம் காண முடியும். போலி டாக்டர்களை அடையாளம் காணும் பொதுமக்கள், '104' என்ற மருத்துவ சேவை மைய எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment