Tuesday, October 31, 2017

வீடு புகுந்த 2 திருடர்கள் 'துவைத்தெடுத்த' இளம்பெண்

திருப்பூர்: திருப்பூரில், பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இரண்டு வாலிபர்களை, இளம்பெண் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்தார். திருப்பூரைச் சேர்ந்தவர் செல்வகுமார், 32; மனைவி கஸ்துாரி, 28. அதே பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில், வேலை செய்கிறார். நேற்று, வழக்கம் போல் வீட்டை பூட்டி, வேலைக்கு சென்று விட்டார். பிற்பகல், 3:30 மணியளவில், அவரது வீட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைந்த இருவர், பீரோவில் இருந்த, 5 சவரன் நகை மற்றும், 8,000 ரூபாயை திருடி, தப்ப முயன்றனர். எதேச்சையாக வீடு திரும்பிய கஸ்துாரி, இதை பார்த்து அதிர்ச்சிஅடைந்தார்.
உடனே, அங்கிருந்த பெரிய தடியை எடுத்து, துணிச்சலுடன் உள்ளே சென்றார். திருடர்கள் இருவரையும், கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக தாக்கினார். 
வலி தாங்காமல் இருவரும் போட்ட சத்தத்தில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இருவரையும் கட்டி வைத்து, போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார், இருவரையும் கைது செய்து, அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...