Tuesday, October 31, 2017


சென்னையில் கனமழை : விமானங்கள் தாமதம்

சென்னை: கனமழை காரணமாக, சென்னையில் இருந்து, பல்வேறு நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக சென்றன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால், நகரின் பல்வேறு சாலைகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வர வேண்டிய ஏராளமான பயணியர், போக்குவரத்து நெரிசலில் சிக்கி, விமான நிலையத்திற்கு, கால தாமதமாக வந்து சேர்ந்தனர்.
அதை போல, பைலட்டுகள், விமான பணிப் பெண்களும் தாமதமாக வந்தனர். இதனால், சென்னையில் இருந்து கோலாலம்பூர், துபாய், கொழும்பு, டில்லி, மும்பை, அந்தமான், புனே, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய, 23 விமானங்கள், ஒரு மணி நேரம் வரை, தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...