Tuesday, October 31, 2017

மெர்சல் படத்துக்கு ரூ. 200 கோடி வசூலா?: அபிராமி ராமநாதன் ஆச்சர்யம்!


By எழில்  |   Published on : 30th October 2017 01:05 PM  

mersal6


மெர்சல் படம் ரூ. 200 கோடி வசூலைத் தொடவுள்ளதாக வெளியாகும் தகவல்களுக்கு அபிராமி ராமநாதன் ஆச்சர்யம் தெரிவித்துள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் - மெர்சல். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் மருத்துவர்களைப் பற்றி உண்மையற்ற, மலிவான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக மருத்துவர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில் தயாரிப்பாளரும் திரையரங்க அதிபருமான அபிராமி ராமநாதன், மெர்சல் படத்தின் வசூல் குறித்து சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மெர்சல் வசூல் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்ததாவது:  
நாங்கள் 1976-ல் இருந்து இந்தத் துறையில் உள்ளோம். முன்பு, பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு 20% வரை டிக்கெட்டுகள் ஒதுக்கிவிடுவோம். எம்ஜிஆர் படத்துக்கு நூறு ரூபாய் டிக்கெட் விற்கிறார்கள் என மக்கள் வியந்தால் எனக்கு அந்த இடத்தில் இலவசமாக விளம்பரம் கிடைக்கிறது. இதனாலேயே இன்று ரூ. 150 கோடி, ரூ. 200 கோடி வசூலாகிறது என்று சொல்கிறார்கள். இது சிதம்பர ரகசியம். யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. சென்னை நகரத்தில் இந்தப் படத்துக்கு எவ்வளவு வசூல் கிடைத்தது என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். தயாரிப்பாளருக்கு இன்னும் அந்த வசூல் நிலவரங்களை நான் தரவில்லை. படம் ஓடிமுடிந்தபிறகுதான் வசூல் விவரங்கள் அளிக்கப்படும். அதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதமாகும். அதேபோல மற்ற ஊர்களிலும் எவ்வளவு வசூலாகிறது என்பதைத் தயாரிப்பாளருக்குச் சொல்லவேமாட்டோம். இந்த நிலையில் ரூ. 200 கோடி வசூல் என எப்படி ஒருவர் சொல்கிறார்? இதைச் சொன்னால் யாராலும் மறுக்கவும் முடியாது. இது ஒரு இலவச விளம்பரம். மற்றபடி 99% உண்மை கிடையாது என்றார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...