Tuesday, October 31, 2017

21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது -சென்னை வானிலை மையம்



21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

அக்டோபர் 31, 2017, 12:53 PM
சென்னை

சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது . தென்கடலோர மாவட்டங்களின் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மேற்கில் நகர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

21 இடங்களில் கனமழையும் 16 இடங்களில் மிக கனமழையும் பெய்து உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ மழை பெய்துள்ளது. விமான நிலையத்தில் 17 செ. மீ மழை பெய்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ மழை, கேளம்பாக்கத்தில் 11 செ. மீ மழை பெய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைகழக பகுதியில் 15 செ. மீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court

Date Of Birth Recorded In HSC Pass Certificate Is To Be Taken As The Date Of Birth For All Purposes: Orissa High Court Udai Yashvir Singh 5 ...