Friday, January 2, 2015

தமிழகத்தில் 1½ கோடி சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு நேரடி மானிய திட்டம் அமலுக்கு வந்தது வாடிக்கையாளர்களுக்கு தலா ரூ.568 5–ந் தேதிக்குள் வங்கி கணக்கில் சேர்க்கப்படும்

தமிழகத்தில் 1½ கோடி சமையல் கியாஸ் இணைப்புகளுக்கு மானிய தொகையை நேரடியாக வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் 5–ந் தேதிக்குள் தலா 568 ரூபாய் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்துக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

நேரடி மானிய திட்டம்

எனவே, சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மானிய தொகையை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் இந்தியா முழுவதும் 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, புத்தாண்டு தினமான நேற்று முதல் இந்த திட்டம் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமலுக்கு வந்தது.

1½ கோடி இணைப்புகள்

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் ‘சப்ளை’ செய்து வருகின்றன. இந்த 3 எண்ணெய் நிறுவனங்களிலும் சேர்த்து தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 54 லட்சம் சமையல் கியாஸ் சிலிண்டர் இணைப் புகள் உள்ளன. இதில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இண்டேன்’ சமையல் கியாசுக்கு அதிகபட்சமாக ஒரு கோடி இணைப்புகள் உள்ளன.

வங்கி கணக்கின் மூலம் நேரடியாக மானியம் பெறும் திட்டத்திற்காக சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன.

இண்டேன்
வாடிக்கையாளர்கள்

இந்தியன் ஆயில் நிறுவனமும், ‘இண்டேன்’ சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் விவரங்களை சேகரித்து வருகிறது.

இந்த பணியை விரைவுபடுத்துவதற்காக தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கீழ் திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய 4 பகுதி அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு பதிவு முகாம்களை நடத்தி வாடிக்கையாளர்களிடம் இருந்து, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களை பெற்று வருகிறது. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு பொதுமக்களுக்கு உதவ அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வங்கி கணக்கில் மானியம்

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 1–ந்தேதியான நேற்று முதல் ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை அளித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்த (‘லிங்’) வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் மானிய முன்பணம் செலுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலக செய்தித்தொடர்பு முதுநிலை மேலாளர் வி.வெற்றிசெல்வகுமார் கூறியதாவது:–

53 லட்சம் பேர் இணைப்பு

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 1 கோடியே 54 லட்சம் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் இந்தியன் ஆயில் நிறுவனம் மூலம் மட்டும் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் கையாளப்பட்டு வருகின்றனர். சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை நேரடியாக வங்கி கணக்கில் சேர்க்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த டிசம்பர் 31–ந்தேதி வரை 53 லட்சம் பேர் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் சேர்க்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக அரியலூர் மாவட்டத்தில் 52.83 சதவீதம் பேரும், குறைந்த பட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 சதவீதம் பேரும் இணைந்து உள்ளனர். இதில் 38.75 சதவீதம் பேர் ‘ஆதார்’ அட்டை மற்றும் வங்கி கணக்கும், 22.98 சதவீதம் பேர் வங்கி கணக்கு எண்ணை மட்டும் இணைத்து உள்ளனர். மீதம் உள்ள அனைவரையும் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

வருகிற 15–ந்தேதி வரை 4 பகுதி அலுவலகங்களின் கீழ் உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம்கள் நடத்தப்பட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படும். மார்ச், 31–ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அதுவரை மானியம் சேர்க்காமல், அதாவது பழைய விலைக்கே வீட்டு உபயோக சிலிண்டர்கள் வினியோகிக்கப்படும். வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மானியம் சேர்க்கப்பட்டு அப்போதைய சர்வதேச சந்தையின் விலை மதிப்பில் வசூலிக்கப்படும்.

வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு

கடைசி தேதி மார்ச்–31 என்று அறிவிக்கப்பட்டு
இருப்பது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணைதளத்தில் இணைவதற்கான தேதி ஆகும். எனவே கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக முகாம்களிலோ அல்லது டீலர்களிடமோ விண்ணப்பங்களை அளித்து மானியத்தை தங்கள் வங்கி கணக்கில் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் அட்டை இல்லையே என்று இருக்கவேண்டாம், வங்கி கணக்கு இருந்தால் உடனடியாக அதனை முன்பதிவு செய்யலாம்.

‘ஆதார்’ அட்டை இருப்பவர்கள் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பதிவு செய்ய னீஹ்றீஜீரீ.வீஸீ என்ற இணையதள முகவரியில் ‘ஆதார்’ அட்டை எண்ணை பதிவு செய்யலாம். இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சினிமா ஸ்லைடு, துண்டு பிரசுரம், செல்போன் குறுஞ்செய்தி, பெட்ரோல் பங்க் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறது. வங்கிகளும் விரைந்து செயல்படுவதற்காக வங்கி உயர் அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

53 லட்சம் பேருக்கு மானியம்

விண்ணப்பங்களை முறையாக செலுத்தி (கடந்த 31–ந்தேதி நிலவரப்படி) இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்த 53 லட்சத்து 42 ஆயிரத்து 260 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரும் 5–ந்தேதிக்குள் தலா ரூ.568 வீதம் முன்பணம் (மானிய தொகை) செலுத்துவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் ரூ.404.50 விலையிலும், வர்த்தக நிறுவனங்களுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ.1,500 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஜனவரி மாதம் முழுவதும் மானியம் அல்லாத வீடுகளுக்கான 14.2 கிலோ சிலிண்டர் ரூ.729–க்கு விற்பனை செய்யப்படும். இந்த மானிய திட்டம் யாருக்கு போய்ச் சேரவேண்டுமோ, அவர்களுக்கு விரைவாக சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 12 ஆயிரம் பேர் தங்களுக்கு மானியம் தேவையில்லை என்று கோரி மனு அளித்துள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூட வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, January 1, 2015

ஆறே வினாடியில் 40ஆயிரம் ஜியோமி ரெட் மீ 4ஜி போன்கள் விற்று சாதனை !

ஏற்கனவே எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட விஷயம் தான் இது! ஆம், இதற்கு முன்பு வெளியான ஜியோமி நோட் தைவானில் ஒரே வினாடிக்குள் 10,000 நோட் ஸ்மார்ட் போன்கள் விற்று சக்கைப்போடு போட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இப்படி வெறித்தனமாய் விற்று தீரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.  ஏன் ஜியோமி நிறுவனம் கூட இதனை  எதிர்பார்த்திருக்காது. 

இந்திய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் வெளியாகியது இந்த ஸ்மார்ட் போன். வெளியான 6 வினாடிகளுக்குள் 40,000 மொபைல் விற்று தீர்ந்து போனது.
இதன் விளைவாக ஜியோமி நிறுவன இந்திய தலைவர் மனுகுமார் ஜெயின் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து  சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

ஜியோமியின் அடுத்த விற்பனை  ஜனவரி 6ஆம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 30ஆம் தேதியன்றே தொடங்கிவிட்டது.

இந்த ரெட் மீ நோட் 4ஜி ஏற்கனவே 2லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் முதலில் 40ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இயங்குதளம்:

ஆண்டிராய்டு 4.4 ஓஎஸ்

உருவளவை:

154 x 78.7 x 9.5 மிமீ

டிஸ்ப்ளே:

5.5 இன்ஜ் தொடு திரையுடன் கார்னிங் கொரில்லா க்ளாஸ்-வுடன் கூடிய IPS டிஸ்பிளேவை (720x1280) கொண்டுள்ளது. 267ppi பிக்ஸல் அடர்த்திக் கொண்டுள்ளது.

பிராசசர்:

2 ஜிபி ரேம்-வுடன் கூடிய Qualcomm MSM8928 Snapdragon 400 Quad-core 1.6 GHz Cortex-A7 Adreno 305 பிராசசரை கொண்டு இயங்குகிறது.

நினைவகம்:

8 ஜிபி போன் மெமரியை கொண்டுள்ளது. மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது. 64 ஜிபி வரை மெமரி கார்டு-ஐ ஏற்றுக் கொள்கிறது.

கேமரா:

LED பிளாஷ்-வுடன் கூடிய 13 மெகா பிக்சல் திறன் கொண்ட பின் பக்க கேமிராவும், 5 மெகா பிக்சல் முன் பக்க கேமிராவும் கொண்டுள்ளது.

பேட்டரி:

இதன் பேட்டரி 3,100mAh திறன் கொண்டது. தொடர்ந்து பயன்படுத்தினால்  2ஜி-யில் 38 மணி நேரம் வரையும்,
3ஜி-யில் 14மணி நேரம் வரையும் பேட்டரி தாங்கும். ஸ்டேண்ட் பை-யில் 775மணி நேரம் வரை பேட்டரி தாங்கும்.

சிம்:

இந்த மொபைலில் ஒரு சிம் மட்டுமே இயக்கலாம். ஆனால் மைக்ரோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

நிறம்:

கருப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் இந்தப் போன் வெளி வருகிறது.

இணைப்பு:

நெட்வொர்க்
இணைப்பிற்கு 4ஜி, 3ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும்
ஜி.பி.எஸ். ஆகிய தொழில்
நுட்பங்கள் தரப்பட்டுள்ளன.
4ஜி LTE இணைப்பில் 150 எம்பிபிஸ் வரை டவுன்லோட்
வசதி மற்றும் 50 எம்பிபிஸ் வரை அப்லோட் ஆகும்.

தனிச் சிறப்புகள்:

4ஜி LTE தொழில்நுட்பம் மிக குறைந்த விலை

குறைகள்:

கஸ்டமர் சப்போர்ட் குறைவு. ஆண்டிராய்டு ஓஎஸ் லாலிபாப் இதில் இல்லை.

விலை:

இந்த மொபைல் பிரத்யேகமாக பிளிப்கார்ட் ஆன்லைன் ஸ்டோரில் மட்டுமே விற்பனைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலை ₹8,999 ரூபாய் .

ஜி.கே.தினேஷ்.,
மாணவப் பத்திரிகையாளர் 

HAPPY NEW YEAR WISHES 2015

விமான விபத்துக்களுக்கு மோசமான காலநிலை காரணமா?

மோசமான காலநிலையும் விமான விபத்தும்
விமான விபத்துக்களுக்கு மோசமான காலநிலை முழுமையான காரணமாக அமைய முடியாது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானம், தான் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக கடுமையான இடி மேகத்தினுள் இருந்து தனது பாதையை மாற்றிக்கொள்ள அனுமதி கேட்டிருந்தது.


தனது பாதையில் இருந்து இன்னமும் உயரமாக பறப்பதற்கு அந்த விமானத்தின் ஓட்டுனர் அனுமதி கோரியிருந்தார்.

உலகெங்கும் நடந்த விமான விபத்துக்களை பொறுத்தவரை, அனைத்து சிறிய மற்றும் பாரதூரமான விபத்துக்களுக்கு 23 வீத காரணமாக மோசமான காலநிலை இருந்திருப்பதாக பெடரல் ஏவியேசன் நிர்வாகத்தை சேர்ந்த குளோரியா குலெசா கூறுகிறார்.

கடுமையான காற்று இருந்த இடங்களுக்கு அருகில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானால், அதில் மோசமான காலநிலையில் பங்கு என்னவாக இருந்தது என்ற ஆய்வும் அங்கு நடக்கும்.

ஜூலையில் ஏர் அல்ஜீரியா விமானம் சஹாராவுக்கு அருகே விபத்துக்குள்ளாகி 118 பேர் பலியான சம்பவத்தின் போது, விபத்துக்கான சரியான காரணம் என்னவென்று இன்னமும் தெளிவாக கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அங்கு மோசமான காலநிலை குறித்தும் ஆராயப்படுகின்றது.



ஆனால், வெறுமனே மோசமான காலநிலை மாத்திரமே ஒரு விமானத்தை விபத்துக்குள்ளாக்குவதற்கு வாய்ப்பு மிகவும் அரிது என்று விமானத்துறை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அப்படியான தருணங்களில் அந்த விமானம் எதிர்கொள்ளும் சம்பவங்களுக்கு பின்னர் அதனை அதன் விமானியும், சிப்பந்திகளும் எப்படி செலுத்துகிறார்கள் என்பதில்தான் அது மோசமான விபத்தை எதிர்கொள்கிறதா இல்லையா என்பது தங்கியிருப்பதாக, சிறிய ரக விமானங்களின் ஓட்டுனரும், ‘’விமான விபத்து ஏன் ஏற்படுகிறது?’’ என்ற புத்தகத்தை எழுதியவருமான சில்வியா ரிங்கிலி கூறுகிறார்.

ஒரு விபத்துக்கு மோசமான காலநிலை முழுமையான காரணமாக இருக்கமுடியாது என்று கூறும் அவர், ஆனால், ஒரு மோசமான விபத்து ஏற்படுவதற்கான சூழ்நிலையை காலநிலை ஏற்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறார்.



ஒரு கடுமையான புயல் காற்று ஒரு சிறிய விமானத்தின் இறக்கைகளுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம், ஆனால், விமானியும், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும், அது ஏற்படாமல் தடுக்க முயல முடியும் என்கிறார் அவர். அப்படியான மிகவும் மோசமான சூழ்நிலையில்கூட விமான சிப்பந்திகள் விமானத்தை குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர்களுக்காவது செலுத்த முடியும். அத்தோடு தற்போது இருக்கும் நவீன ராடர் தொழில்நுட்பம் மோசமான காலநிலை உள்ள இடங்களை முன்கூட்டியே அறிந்து, அவற்றில் இருந்து பாதையை மாற்றிச் செல்லவும் உதவுகின்றன.

மிகவும் மோசமான காலநிலையால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகமாக ஆராயப்பட்ட இன்னுமொரு விபத்தாக, 2009இல் அத்திலாந்திக் கடலில் ஏர் பிரான்ஸ் விமானம் காணாமல் போன சம்பவத்தை கூறலாம். இந்தச் சம்பவத்தின் போது காற்று மண்டலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு நிலை குறித்த எச்சரிக்கைகளை விவாதிக்க அந்த விமானி தவறிவிட்டார். அதற்கு போதுமான பயிற்சி அவருக்கு இருக்கவில்லை.

விமான இறக்கையிலோ அல்லது வால் பகுதியிலோ பனி படிவதன் மூலமும் விபத்துக்கள் ஏற்படலாம். ஆனால், அதனை தவிர்க்க விமானியால் முடியும். அத்துடன் இடிகளால் உருவாகும் மின்சாரத்தை தாக்குப் பிடிக்கும் ஏற்பாடுகள் இப்போது விமான இறக்கைகளில் உள்ளன.

ஒவ்வொரு வணிக ரீதியிலான விமானமும் வருடாந்தம் ஒரு தடவையாவது இடியால் தாக்கப்படுவதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

கடுமையான மழை அல்லது ஆலங்கட்டி மழை விமான என்ஜின்களில் தீச்சுவாலையை ஏற்படுத்தலாம். ஆனால், என்ஜினே அதனை அணைத்துக்கொள்ளும். அப்போது அந்த என்ஜினை விமானி மீளவும் இயங்கச் செய்யலாம். ஆனால் அதனை எல்லா சந்தர்ப்பங்களிலும் செய்துவிடமுடியாது.

ஆகவே மோசமான காலநிலையால் பெரும் விபத்துக்கள் ஏற்பட்டுவிடுவது மிகவும் குறைவாகும். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், நடந்த விபத்துக்களில் அரைவாசி ஓடுபாதையின் பாதுகாப்பு குறைபாடுகளால் நடந்தவையாகும்.

CRASH..AUTOPSY

BRISK SALES AT TASMAC SHOPS

QZ8501 made unbelievably steep climb before crash?

Ascent May Have Pushed Jet Beyond Limit: Source
Radar data being examined by investigators appeared to show that AirAsia Flight QZ8501 made an “unbelievably” steep climb before it crashed, possibly pushing it beyond the Airbus A320’s limits, said a source familiar with the probe’s initial findings.

The data was transmitted before the aircraft disappeared from the screens of air traffic controllers in Jakarta on Sunday, added the source, who declined to be identified.

So far, the numbers taken by the radar are unbelievably high. This rate of climb is very high, too high. It appears to be beyond the performance envelope of the aircraft,” he said. The source added that the data on which those assumptions had been made were incomplete. Colleagues and friends of the Indonesian captain on board have described him as an experienced and professional pilot.

The findings sharpen the focus on the role bad weather and crew’s reaction to storms and clouds in the area had to play in the plane’s crash which killed all 162 people on board. Finding the plane’s cockpit voice recorder (CVR) and flight data recorder (FDR), more commonly known as black boxes, was vital to complement the radar data already available. “With the CVR and FDR, we can establish what went on in the cockpit and what was going on with the plane. We can conclude if the radar information is accurate,“ the source said.

At 6.12am on Sunday , 36 minutes after taking off from Surabaya's Juanda Airport, the pilot asked for permission to climb to 38,000ft from 32,000ft and deviate to the left to avoid bad weather. Two minutes later, Jakarta responded by asking QZ8501 to go left seven miles and climb to 34,000ft.There was no response from cockpit. The aircraft was still detected by the ATC's radar before disappearing at 6.18am.

An image that was reportedly leaked from AirNav Indonesia, which manages the country's air space, and shared on websites, appeared to show QZ8501 at an altitude of 36,300ft and climbing at a speed of 353 knots. The source declined to confirm if that image was accurate.

Two veteran pilots said that, if accurate, the image and information released so far pointed to the fact that the aircraft may have climbed suddenly and then lost speed.This can result in the aircraft stalling in mid-air before plunging to the sea, they said.

The source said other aircraft in the area at the time of the crash were flying at higher altitudes. Aircraft tracking website flightradar24.com said, “We know that there was severe local weather and big clouds. But the other planes were higher and did not appear to encounter any major problems. We want to look into that too,“ added the source.

NEWS TODAY 25.05.2026