Monday, January 5, 2015

DoPT to Put Up Retiring Officials' Achievements Online


The usual garlanding and samosa- chai parties aside, retiring central government employees can now mark their going out of service with a dossier of their achievements and initiatives which would be showcased online to inspire their peers.

In a unique initiative, the Department of Personnel and Training (DoPT) has mooted a proposal for creating a "platform to showcase the significant achievements" of civil servants which they can look back on at the time of retirement with "satisfaction and a sense of fulfilment".

Under the voluntary scheme, employees who are retiring in the next six months will be provided with an online facility to submit a list of their outstanding achievements.

The said employees will be asked to give details as to commendable work done by them, their achievements and new ideas given by them which contributed to the efficiency, economy and effectiveness of government functioning.

The commendable work defined by DoPT includes innovation leading to improved work culture and creation of manuals and publications related to work.

The write-ups thus submitted will be displayed on the DoPT website to serve as a "motivator for serving employees".

The government has, however, clarified that comments which are religious or political in nature or against national interest will not be permitted.

"The exercise would be completed at least one month before retirement and the result uploaded on the departmental website. While an online system will be designed for this purpose, it would be possible for employees to submit hard copies instead of going online," states the circular in this regard.

The retiring employees have also been asked to remember to to mention where relevant the contribution of the entire team along with the names of their team members.

விருதும் விவாதமும்!

Dinamani
'பாரத ரத்னா' விருது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளிலேயே முதன்மையானது. தேசத்திற்கு அளப்பரிய தொண்டாற்றியவர்களுக்கும், உலக அரங்கில் இந்திய தேசத்திற்கு மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தித் தந்த சாதனையாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது அது. அந்த விருதின் கெளரவம் குலைக்கப்படுவது என்பதும், "பாரத ரத்னா' விருது பெறுபவர்கள் குறித்து விவாதம் எழுவது என்பதும் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே இழிவு.

2014-ஆம் ஆண்டுக்கான "பாரத ரத்னா' விருதுக்கு முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியும், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக நிறுவனரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், இந்துமகா சபை தோற்றுவிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவருமான பண்டித மதன்மோகன் மாளவியாவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அடல் பிஹாரி வாஜ்பாயி பற்றிய தேர்வில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க வழியில்லை. அவரது அரசியல் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் மரியாதைக்குரிய மக்கள் தொண்டராகவும், நாடாளுமன்றவாதியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் அவர். ஆனால், பண்டித மதன்மோகன் மாளவியாவின் தேர்வு அப்படியல்ல.

பண்டித மதன்மோகன் மாளவியாவின் தேசபக்தியும், அவர் ஆற்றியிருக்கும் கல்விப் பணியும் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே கிடையாது. இந்தியாவின் தலைசிறந்த விருதுக்குத் தகுதியற்றவர் பண்டித மதன்மோகன் மாளவியா என்று கூறிவிட முடியாது. ஆனால், 153 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த அந்த தேசபக்தர் மறைந்து 68 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இப்போது அவருக்கு "பாரத ரத்னா' விருது வழங்கி கெளரவிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது என்பதுதான் சர்ச்சைக்கு காரணம்.

எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கும்போது, தங்களது கொள்கையை நிலைநாட்டுவதும், தாங்கள் தலைவர்களாக ஏற்றுக்கொண்டவர்களின் நினைவைப் போற்றுவதும் இயல்பு. தமிழகத்தில் காணப்படும் பெரியார், அண்ணா சிலைகளும், உத்தரப் பிரதேசத்தில் காணப்படும் டாக்டர் அம்பேத்கர், கன்ஷிராம் சிலைகளும் இதற்கு உதாரணங்கள். இடதுசாரிக் கட்சியினர் மட்டும்தான் இந்த விஷயத்தில் மாறுபட்டு நிற்பவர்கள்.

1980-இல், யுகோஸ்லேவியராக இருந்தாலும் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கே சமூக சேவை புரிந்த அன்னை தெரஸாவுக்கும், 1987-இல், பிரிவினைக்குப் பிறகு பலுசிஸ்தானியர் என்பதால் பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவராக இருந்தாலும், சுதந்திரப் போராட்ட வீரரும், "எல்லைக் காந்தி' என்று பரவலாக அறியப்பட்டவருமான கான் அப்துல் கஃபார் கானுக்கும் "பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டபோது அதை அனைவரும் வரவேற்றனரே தவிர எதிர்க்கவில்லை.

"பாரத ரத்னா' விருது விமர்சனங்களுக்கு உள்ளானது 1990-இல் தான். வி.பி. சிங். தலைமையிலான அன்றைய தேசிய முன்னணி அரசு, பாபாசாகேப் அம்பேத்கர் இறந்து 34 ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு "பாரத ரத்னா' விருதை அறிவித்தபோது, அதற்குப் பின்னால் அரசியல் இருந்தது என்பதால் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. பாபாசாகேப், "பாரத ரத்னா' விருதைவிட உயர்ந்தவர் என்று ஒரு தரப்பும், மறைந்த தலைவர்களுக்கு "பாரத ரத்னா' விருது வழங்குவது என்று தொடங்கினால் பட்டியல் நீண்டு கொண்டே போய்விடும் என்று இன்னொரு தரப்பும் தெரிவித்தன. இந்தியாவுடன் தொடர்பே இல்லாத நெல்சன் மண்டேலாவுக்கு "பாரத ரத்னா' வழங்கப்பட்டதும் விமர்சிக்கப்பட்டது.

அடுத்தாற்போல வந்த சந்திரசேகர் தலைமையிலான குறுகியகால அரசு, ராஜீவ் காந்திக்கு "பாரத ரத்னா' வழங்கும் சாக்கில் மொரார்ஜி தேசாய்க்கும், மறைந்து 41 ஆண்டுகளான சர்தார் வல்லபபாய் படேலுக்கும் அந்த உயர்ந்த விருதை வழங்க முற்பட்டது.

வி.பி. சிங் அம்பேத்கருக்கும், சந்திரசேகர் சர்தார் வல்லபபாய் படேலுக்கும் "பாரத ரத்னா' விருது கொடுத்தனர் என்றால், 1992-இல் பி.வி. நரசிம்மராவ், காலமாகி 34 ஆண்டுகளுக்குப் பிறகு அபுல்கலாம் ஆசாதுக்கு "பாரத ரத்னா' வழங்க முற்பட்டார். அதேபோல, 1999-இல் அன்றைய வாய்பாயி அரசு, அஸ்ஸாமின் முதலாவது முதல்வரான கோபிநாத் பர்டோலாய்க்கு இறந்து 49 ஆண்டுகளுக்குப் பிறகு "பாரத ரத்னா' விருது வழங்கியது.

காலம் கடந்து தலைவர்களுக்கெல்லாம் விருது வழங்குவது என்று சொன்னால், லோகமான்ய திலகர், கோபாலகிருஷ்ண கோகலே, பகத் சிங், லாலா லஜபதிராய், ஏன், நமது "கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி. ஆகியோரும்தான் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதியானவர்கள். ரவீந்திரநாத் தாகூருக்கும், மகாகவி பாரதிக்கும் "பாரத ரத்னா' தரப்பட வேண்டாமா?

முதலில் "பாரத ரத்னா' விருது யாருக்கெல்லாம் வழங்கப்பட வேண்டும், மறைந்துவிட்ட தலைவர்களுக்கு எத்தனை ஆண்டுகளுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கு வரைமுறை ஏற்படுத்த வேண்டும். அதுமட்டும் போதாது. குடியரசுத் தலைவர், பிரதமர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் ஆகியோர் கொண்ட குழுவால் "பாரத ரத்னா' விருதுக்குத் தகுதி பெறுபவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முறை செயல்படுத்தப்பட்டால்தான் தேசத்தின் உயரிய விருதின் கெளரவம் காப்பாற்றப்படும்.

பிரதமர் நரேந்திர மோடி தனது வாராணசி தொகுதி மக்களை மகிழ்ச்சிப்படுத்த "பாரத ரத்னா' விருதைப் பயன்படுத்தி இருக்க வேண்டாம்!

Sunday, January 4, 2015

வானொலிகளின் வசந்தகாலம்



தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.

அறியாமையின் அழகு!

‘இந்தப் பொட்டியிலிருந்து எப்படி சித்தப்பா பாட்டுக் கேக்குது?’ என்று கேட்ட போது சித்தப்பா சொன்ன விளக்கத்தை மறக்கவே முடியாது. மிகப் பெரிய ரகசியத்தை எங்களிடம் மட்டும் சொல்வது போன்ற பாவனையுடன் மெதுவாகச் சொல்வார், “பாட்டுப் பாடுறவங்க மொத நாளே இந்தப் பொட்டிக்குள்ள போய் உக்காந்துக்குவாங்க… பாடி முடிச்சவுடனே காத்துல ஏறிக் காணாமப் போய்டுவாங்க.” சிறுவர்கள் எங்களுக்கு என்ன தெரியும், நம்பித்தொலைத்தோம். ஆனால், அந்த அறியாமை பல கற்பனை களைத் தூண்டிவிட்டது தனிக் கதை.

வானொலியைப் பொக்கிஷம் போல் பாதுகாத்தார் சித்தப்பா. வானொலிப் பெட்டியைச் சுற்றி மரத்தாலான காப்புப் பெட்டியைப் பொருத்தி வைத்திருந்தார். மேலிருந்து கீழே இறக்கி மூடும் கண்ணாடிக் கதவு உண்டு அதற்கு. சிறுவர்கள் எங்கள் கைபடாத உயரத்துக்கு வானொலியை வைத்திருப்பார் சித்தப்பா. அவருக்குத் தெரியாமல் யாரேனும் தொட்டால் தொலைத்துவிடுவார். “நூறு ரூபா குடுத்து வீராவரத்தில் வாங்கினதுடா” என்பார்.

டெல்லி அஞ்சலில் ஒலிபரப்பாகும் இந்துஸ்தானி இசையை அதில் கரகரப் பாய் கேட்கும்போது வித்தியாசமாய் இருக்கும். அப்பாவும் வானொலி விசிறிதான். அவரால் வந்தே மாதரம் கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால் நாளைத் தொடங்க முடியாது. சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும் அந்தக் கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கல இசை கேட்கும்போது, உலகமே கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாசமாவதாய்த் தோன்றும்.

நெல்லை வானொலியின் சான்றோர் சிந்தனை அப்பாவுக்குப் பிடித்தமானது. நாகூர் ஹனிபாவின் பாடல்கள், பி.சுசீலா வின் ‘தாமரைப்பூவில் அமர்ந்தவளே..’ பாடல், ‘ஏசுநாதர் பேசினால் அவர் என்ன பேசுவார்?’ பாடல் என்று காலையில் ஒலிக்கும் பாடல்கள் மனசை லேசாக்கிவிடும். தென்கச்சி சுவாமிநாதனின் இன்று ஒரு தகவலும் மறக்க முடியாதது.

இலங்கை எனும் பூங்காற்று

இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம், விவித் பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, பிபிசியின் தமிழோசை, ஆல் இந்தியா ரேடியோ என்று பல வானொலி நிலையங்கள் எங்கள் காதுகளுக்குச் சாமரம் வீசின. இலங்கை வானொலியின் மயில்வாகனம், கே.எஸ்.ராஜா, ராஜேஷ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, விமல் சொக்கநாதன், சில்வெஸ்டர் பாலசுப்ரமணியம், கமலினி செல்வ ராஜன், எழில்வேந்தன் ஆகியோரின் குரல்களுக்குக் கடல் கடந்தும் ரசிகர்கள் இருந்தார்கள்.

‘பிறந்தநாள்… இன்று பிறந்தநாள்’ என்ற பாடலுடன் தொடங்கும் வாழ்த்து நிகழ்ச்சியை என்றுமே மறக்க முடியாது. வாழ்த்துபவர்களின் பட்டியலில் ‘அப்பப்பா, அம்மம்மா’ என்று சொல்லும்போது உறவுமுறைப் பெயர்கள்குறித்து ஆச்சரியம் ஏற்படும். நமக்கே பிறந்தநாள் வந்ததைப் போல் அறிவிப்பாளர்களின் குரல்கள் ஆனந்தப் படுத்தும். 30 ஆண்டுகளுக்கு முன் வந்த பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் பற்றிய தகவல்களை எந்தக் குறிப்பும் இல்லாமல் நினைவில் இருந்தே எடுத்துச் சொல்வார்கள். அந்த அளவுக்கு ரசனை மிகுந்த அறிவிப்பாளர்கள் அவர்கள்.

செய்திகள் வாசிப்பது…

அகில இந்திய வானொலியும் சளைத்ததல்ல. ‘செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண் சுவாமி’ என்ற அந்தக் கரகரப்பான காந்தக் குரலை மிகவும் நேசித்தோம். இடையிடையே நிறுத்தி மூச்சு வாங்க எடுத்துக்கொள்ளும் அவர் பாணி வித்தியாசமானது. சில நாட்களில் அவர் செய்தி வாசிக்கும்போது தாள்களை நகர்த்தும் சத்தம்கூடத் தெளிவாய்க் கேட்கும். கோபால் பல்பொடி, பொன்னான புதிய ரக்சோனா, பாண்ட்ஸ் என்று பல்வேறு பொருட்களின் விளம்பரங்களைக் கேட்பதே ஆனந்தமாக இருக்கும். நாம் பயன்படுத்தும் பொருளைப் பற்றி வானொலியில் சொல்கிறார்களே என்று ஒரு சின்ன குதூகலம் இருக்கும்.

இன்றும் வானொலிக்கான தனி ரசிகர்கள் உண்டு. ஆனால், காதுகளுக்காக மட்டும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பான காலம் முடிந்துவிட்டது. பண்பலையில் பாட்டும் பேச்சும் என்று பல விஷயங்கள் ஒலிபரப்பாகின்றன. என்னவோ அவற்றில் மனம் லயிப்பதில்லை. இளமைக் காலத்தில் வானொலியில் கேட்ட பாடல் களைக் கேட்கும்போது, அந்தக் கால நினைவுகளின் இனிமையை இன்றும் உணர முடிகிறது.

- முனைவர் சௌந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்,தொடர்புக்கு: mahabarathi1974@gmail.com​

IRCTC makes international travel plans


Rail ticketing portal is now organising international tours.

Indian Railway Catering and Tourism Corporation Ltd. (IRCTC) has gone beyond its primary business as a rail ticketing portal and has ventured into international tours.

The IRCTC, a government of India enterprise, which had been concentrating on inbound tours to various States, has started focusing on promoting trips to popular tourist spots abroad. The IRCTC offices of Kerala, Tamil Nadu and Karnataka — in Ernakulam, Chennai, and Bangalore — have come up with tailor-made international tour packages.

The IRCTC has announced a four-day three-night package from Kochi to Dubai from January 23 following the success of its maiden tour to Malaysia from the State. The package is limited to 24 persons to give personal attention to those flying to Dubai, says Rajeev Sadanandan, Regional Manager, IRCTC.

The package, ‘Magical Dubai Shopping Festival 2015,’ starting from Rs.44,155, includes to and fro ticket in Air India Express from Kochi, overseas travel insurance, three-star accommodation, all meals on full board basis, transportation by luxury coach, airport transfers, tour guide and English-speaking tour escort.

Visits to Burj Khalifa, the world’s tallest building, a Portuguese fort, the old village of Hatta, Global Village, camel race track, Dubai Racing Club and Golf Club, dhow cruise with dinner, and desert safari are part of the package.

An official said that the success of a four-day, three-night tour to Malaysia prompted the IRCTC to come up with a package to Dubai. “The IRCTC is working out international affordable tour packages with airlines and tour operators to cater to the demand for foreign tours from the State. Packages for Singapore are being planned. More domestic tours from Kerala could be introduced this year,” he added.

கப்பலை கவிழ்க்க சிறு ஓட்டைபோதும் - இதுதாங்க வாழ்க்கையிலும்..

பழக்க வழக்கங்களின் அடிமைகள் நாம். காலையில் பல் துலக்குவது முதல், இரவில் பேஸ்புக்கில் 'குட்நைட்' போஸ்ட் போடுவது வரை எல்லாமே பழக்கங்கள்தாம். வேறுசில வேண்டாத பழக்கங்கள் நமது அன்றாட பழக்கத்துடன் பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதுபோல் சில தவறான பழக்கங்களும் நம்மிடையே இருக்கின்றன. அந்த
பழக்கங்கள்தான் நமக்கு தெரியாமலே நம்மோடு இருந்து நமது குடும்ப வாழ்க்கை என்ற குட்டையை குழப்பிக்கொண்டிருக்கும். அதை கண்டுபிடித்து களைந்தால் வாழ்க்கை இனிக்கும்!

அலட்சியம்: கப்பலை கவிழ்க்க சிறிய ஓட்டை போதும். அதுபோலத்தான் வாழ்வும். சின்னச்சின்ன விஷயங்களில் அலட்சியமாக இருந்தால் அது வாழ்வையே புரட்டிப்போட்டுவிடும். நமக்காக ஒவ்வொரு விஷயங்களிலும் கவனம் செலுத்தும் மனைவியின் மீது, கொஞ்சமும் அக்கறை காட்டாமல், கவனிக்காமல், பாராட்டாமல் இருப்பதுதான் ஏராளமான கணவன்மாரின் அலட்சிய போக்கு. 'நல்லா இருக்கு', 'இந்த சூப்பர் ஐடியா உனக்கு எப்படி தோணிச்சு' என சின்னச்சின்ன பாராட்டு வார்த்தைகளை கூறிப்பாருங்கள். 2015 முழுக்க மகிழ்ச்சி நீடிக்கும்.

மதிப்பெண் வழங்குதல்: கணவன்- மனைவிக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் மிகப்பெரிய பழக்கம் மதிப்பெண் வழங்கும் மனப்பான்மை. சின்னச் சின்ன விஷயங்களையும் கண்காணித்து குற்றம் சாட்டும் கணவன்மார்கள் நிறைய உண்டு. தனது குடும்பத்துக்கு சாதகமான செயல்களுக்கு மனைவியை பாராட்டும் இவர்கள் மற்ற நேரங்களில் அவளை கண்டுகொள்வதே கிடையாது. சிறு தவறு நேர்ந்தாலும் நீ செய்வது எல்லாமே தவறு என்பதுபோல மதிப்பீடு செய்து பழைய பிழைகளையெல்லாம் சொல்லிக் காட்டுவார்கள். இந்த பழக்கத்தை விட்டொழியுங்களேன்!

வார்த்தைகளை பூர்த்தி செய்வது: மனைவி ஒரு கருத்தை சொல்ல ஆரம்பிக்கும் முன்பே, 'நீ இதைத்தானே சொல்ல வந்தாய்', என கணவனே ஏதாவது வார்த்தைகளைப் போட்டு கற்பனையாக கருத்துச் சொல்வது நிறைய தம்பதி களிடையே பிரச்சினையை கிளப்பி இருக்கிறது. இதேபோல தவறான புரிதலுடன் செயல்படும் மனைவிமார்களும் உண்டு. உதாரணமாக 'என் சம்பாத்தியம் போதவில்லை' என்று கணவன் சொன்னால், 'நான் தெண்டச்சோறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்னு சொல்ல வர்றீங்க அப்படித்தானே' என்று மனைவி பொறுமிக் கொள்வது போன்றவற்றை சொல்லலாம்.

பரிசோதனை: கணவன்-மனைவி உறவை சிதைக்கும் முக்கியமான பழக்கம், ஒருவரையருவர் பரிசோதித்துப் பார்க்கும் செயல் களாகும். காதலிக்கும் நேரத்தில் ஒருவரது அன்பை மற்றவர் புரிந்து கொள்வதற்காக சோதனை செய்வது வேறு? திருமண உறவுக்குப் பிறகு கோபம் வருகிறதா? என்று சீண்டுவதும், திறமையை சோதிக்கும் வகையில் சந்தேக நோயை வளர்ப்பது, கேள்விக் கணைகளை தொடுப்பது போன்றவை கூடாத பண்புகளாகும். சின்னச்சின்ன இன்பங்களையும் சிதறடிக்கும் இது, வாழ்வையே சிறைச்சாலையாக மாற்றிவிடும்.

குற்றம் சாட்டுதல் : கணவன்-மனைவிக்கு இடையே குற்றம் சாட்டும் மனோபாவம் அறவே இருக்கக்கூடாது. ஏனெனில் மனைவிக்கு இருக்கும் ஒரே ஆதரவு கணவன்தான். அப்படி இருக்கும்போது நீங்களே அவரை நோக்கி குற்றச்சாட்டை நீட்டினால் அவள் நிராதரவாக நிற்பது போல உணர்வாள். பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டதுபோல மனம் உடைந்துபோவாள்.

எதிர்காலம் பற்றிய அச்சத்தில் கணவன்களை குற்றம் சுமத்தும் பழக்கம் பெண்களிடமும் உண்டு. சின்னச்சின்ன பிரச்சினைகளிலும் மனைவியின் மீது குற்றத்தை திருப்பி சுமத்தும் பழக்கம் ஆண்களிடமும் இருக்கிறது. இவை நிச்சயம் மாற்றப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் வருந்துதலும், திருந்து தலும் உறவை பலப்படுத்தும்.

மவுனப் போர்: சின்னச் சின்ன சச்சரவுகளில் கூட சிலர் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு திரிவார்கள். எதற்காகவும் பேசிக்கொள்ளாமல் மவுனமாகவே செல்வார்கள். அப்படி ஒருவர் பேச்சுக்கு மற்றவர் பதிலளிக்காமல் மவுனம் காத்தால் (இங்கே மவுனம் சம்மதம் ஆகாது) அதுவே அவரை அவமதித்தது போலாகிவிடும். பிரச்சினையை மேலும் பெரிதாக்கி பிளவை உருவாக்கிவிடும். சுமுகமான பேச்சு செய்யும் வேலையை மவுனங்கள் சிலநேரம் செய்வதில்லை என்பதே உண்மை. இன்னும் சிலர் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரே வார்த்தையில் பதிலளிப்பார்கள். 'ஆமாம்', 'இல்லை', '...ம்ம்', 'ம்ஹ¨ம்' என்று ஒற்றை வார்த்தையில் பேசிக் கொண்டிருப்பது நம்மிடம் பேசுபவரை நிராகரிப்பதற்கு ஒப்பானதாகும். இதுவும் தவறான பழக்கம். புரியும்படியாக பேசித் தீர்த்துக் கொண்டால் சுபம் கூடும்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள்: ஒருவருக்கொருவர் அளவற்ற எதிர்பார்ப்புகளை வைத்திருப்பது உறவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும். 'நமது சகோதரன் இந்த பிரச்சினையில் நமக்கு உதவுவான் என்று நினைத்தோமே?, இந்த சின்ன உதவியைக் கூட கணவன் செய்ய யோசிக்கிறாரே? என்பதுபோன்ற புலம்பல்கள் எல்லாம், அளவு கடந்த எதிர்பார்ப்புகளால் ஏற்படுபவையே.

நீங்கள் கேட்கும் உதவி அல்லது உங்களது எதிர்பார்ப்பு அவர்களால் நிறைவேற்றக் கூடியதாகவே இருக்கலாம். ஆனால் அவர் அதை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதாதபோது உங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகிப் போகிறது. அதுவே 'இவர்களுக்காக நாம் என்னவெல்லாம் செய்தோம்?' என புலம்ப வைத்து, மனக்கசப்பை உருவாக்கி உறவில் விரிசல் விழச் செய்கிறது.

அடக்கமின்றி இருத்தல் : சுதந்திரமாக இருக்கிறேன் என்று கூறிக் கொண்டு அடக்கமில்லாமல் நடந்து கொள்வது உறவை கெடுக்கும். உதாரணமாக டி.வி. பார்த்துக் கொண்டே ஹாயாக சாப்பிடுவது, புகை ஒத்துக்கொள்ளாதவர்கள் மத்தியில் புகைபிடித்துக் கொண்டு பேசுவது போன்றவற்றைச் சொல்லலாம். 'யாரும் இதில் தலையிடக்கூடாது' என்று கருதும் விஷயம் உங்கள் தனிமைக்கு மட்டுமே பொருந்தும். மற்றவருடன் சேரும் சூழல் வரும்போது அது பொதுவானதாகிவிடுகிறது. அதில் அவர்களுக்கும் உரிமை இருக்கிறது. எனவே சூழலுக்கேற்ப அடக்கமாக, கண்ணியமாக நடக்காவிட்டால் உறவுகள் பாதிக்கும்.

Saturday, January 3, 2015

ஸ்மார்ட் நகராக சென்னைக்கு தகுதி இருக்கிறதா?



இந்தியாவின் எல்லா மாநிலங்களும் தங்கள் மாநிலத்தில் உள்ள பெரு நகரங்களுக்கு 'ஸ்மார்ட் சிட்டி' அந்தஸ்தை பெறுவதற்காக விண்ணப்பிக்க கெடு நெருங்கிவிட்டது. பட்டியலை அனுப்ப இதுவே கடைசி வாரம்.

இந்நிலையில், மற்ற நகரங்களின் வளர்ச்சியுடன் சென்னை நகரின் வளர்ச்சியை ஒப்பிட்டுப் பார்க்கும் போது கவலையே எழுகிறது.

ஏனெனில் சென்னை மாநகரின் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் ஒரு நூற்றாண்டு பின் தங்கியே இருக்கின்றனர் என சொல்ல வேண்டும். ரயில் நிலையங்களில் சீஸன் டிக்கெட்டுகளை புதுப்பிக்கவும், மின்வாரிய மையங்களில் மின் கட்டணம் செலுத்த இன்னமும் நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்திருக்கும் கூட்டத்தை பார்க்கும்போதும் இது உண்மையோ என்றே தோன்றுகிறது.

இத்தனைக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் சென்னை நகரில் இணையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. சென்னை நகரின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 60 லட்சம். இதில் பாதிக்கும் மேலானோர் ஆன்லைனை உபயோகிக்கின்றனர்.

இருப்பினும், பல்வேறு அரசு இணையதள சேவைகள் எளிமையாக இல்லாததாலும், சில முக்கிய அரசுத் துறைகள் ஆன்லைன் சேவையை இதுவரை துவக்காததாலும், கட்டணம் செலுத்துவது போன்ற வேலைகளுக்கு மக்கள் இன்னமும் வரிசையிலேயே காத்திருக்க வேண்டியுள்ளது.

மற்ற மாநிலங்களின் முக்கிய நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக உருமாறிக் கொண்டிருக்கும் நிலையில் சென்னையின் நிலை அப்படியேதான் இருக்கிறது. சென்னை மாநகரில் இயக்கப்படும் பேருந்துகளில் ஜி.பி.எஸ் பொருத்தப்படவில்லை; அடுத்த வருடம் இயங்கப் போகிற மெட்ரோவில் மொபைல் செயலி பொருத்தப்படவில்லை. 'காகிதங்கள் இல்லா அரசு செயல்பாட்டு முறை'-க்கு இன்னமும் நாம் ஆயத்தமாகவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரைக்கும், ஒவ்வொரு முறையும் நேரில் வந்து படிவத்தைப் பூர்த்தி செய்து, அடையாள அட்டையைக் கொடுத்த பின்னர்தான் மாதாந்திர ரயில்வே பாஸ் பெற முடிந்தது என்கிறார் ராஜ் செருபால் என்னும் சென்னைவாசி. உலக தகவல் தொழிநுட்பத்திற்கான தலைநகராய் இருக்க வேண்டிய இந்தியா இந்த விஷயங்கள் எதையும் கண்டுகொள்வதில்லை எனவும் ஆதங்கப்படுகிறார்.

சென்னை நகரம் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பெரிதும் பின்னடைந்துள்ளது. கிராமங்களைப் நவீனப்படுத்துதலுக்கான முந்தைய வருட பட்ஜெட்டைக் கொண்டு, குறைந்த பட்சம் 1000 அரசுப் பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி இருக்க முடியும். 2012-ம் ஆண்டில் 600 பேருந்துகளில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்த முடிவு செய்யப்பட்டு பணமும் செலவிடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டதால் கிடப்பில் போடப்பட்டது என்கிறார் சென்னை மாநகரப் போக்குவரத்து அதிகாரி ஒருவர். 50-க்கும் குறைவான பேருந்துகளே இப்போது ஜி.பி.எஸ். கருவியுடன் இயக்கப்படுகின்றன.

சென்னையின் நிலை இப்படி இருக்க மற்ற மாநகரங்கள் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும் வீச்சோடு செயல்பட்டு வருகின்றன. டெல்லி காவல்துறை, நகரத்தைக் கண்காணிக்கும் வகையில் மொபைல் செயலித் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டின் மத்தியில் பெங்களூருவின் 6,500 பேருந்துகளும் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது. அகமதாபாத்தில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஸ்மார்ட் நகராக சென்னைக்கு தகுதி இருக்கிறதா என்ற ஐயம் எழுகிறது.

தமிழில்: க.சே. ரமணி பிரபா தேவி

50.85 lakh LPG consumers eligible for subsidy in TN

Pahal scheme beneficiaries have to pay Rs. 705 per cylinder and draw the subsidy from their accounts.
Rs. 568 as advance to be credited to bank accounts

Around 4.9 lakh LPG consumers in the city are likely to receive Rs. 568 as advance in their bank accounts to buy cooking gas at market price. These are customers who have booked cylinders and are waiting for refills.

A cylinder of subsidised domestic gas costs Rs. 404.50 in Chennai. Consumers, who have enrolled in the Pahal scheme where the government deposits the subsidy amount directly into their bank accounts, will have to pay Rs. 705 per cylinder on delivery, and draw the subsidy paid into their accounts.

In the neighbouring Tiruvallur and Kancheepuram districts, a total of 4.9 lakh and 2.89 lakh customers respectively are eligible to get the subsidy. In the State, out of 1.53 crore LPG customers, 50.85 lakh are eligible to receive cash, said oil industry sources.

Meanwhile, enrolment in the scheme is progressing well with oil companies and distributors burning the midnight oil. Employees even worked on the New Year day so that more consumers can join the scheme.

“We have met bankers and have asked them to speed up processing of applications. We have about 10,000 applications collected on behalf of the banks,” explained an oil industry source. Consumers have been complaining that banks are going slow on processing their applications for linking Aadhar cards or 17-digit LPG IDs with their accounts.

“It has been 25 days since I submitted my application in a nationalised bank, but it is yet to be processed,” said Krishnan, a resident of Velachery.

Oil company sources said that though the scheme had been rolled out from January 1, 2015 consumers will continue to get cylinders at a subsidised rate till March end.

Online link

Many customers who had Aadhar cards were able to link their details on www.mylpg.in. “Though I followed the correct procedure, I am yet to get confirmation for my online registration. It has been over 20 days since I registered. I could not also get any confirmation from *99*99# that we have to dial for status. When I asked my agency, they asked me to wait,” said N. Ananthan, a resident of Vadapalani. Many consumers such as Ananthan say that they are unable to get confirmation online. However, oil company sources said that initial hitches had been set right and that residents should check online once again for the status update.

NEWS TODAY 25.05.2026