Thursday, February 26, 2015

Now, verify Goa University certificates online

PANAJI: Goa University (GU) has now made it possible for any individual to check at the click of a mouse the authenticity of degrees claimed by a student to have been issued by the varsity.

The university has provided a link on its website where an employer or an institute from outside the state can
upload a degree and verify if it is indeed one issued by Goa University.

"For a small sum that can be paid through the online mode, one can check the authenticity of a document. Recently, some cases had been reported to the police where fake certificates claimed to have been issued by the university were being used. The simple online authentication process will help employers a great
deal to identify such fake certificates," Goa University registrar Vijayendra Kamat told TOI.

Goa University recently sanctioned a 3.67crore ambitious project, under which work has begun on a integrated university management system.

Under the project, all Goa University data and that of affiliated institutes will be computerized and made centrally manageable through a linked system.

The system will make every detail under GU's ambit available at the click of a mouse to users for data on students, fees, course structures, university notifications, convocations, teacher trainings, alumni, varsity assets and finance.

After a rigorous process, a GU technical committee had finalized Kerala State Electronics Development Corporation (KSEDC) which is delivering the service along with its consortium partner, Expedeion.

GU is also slowly moving towards the online admission process, which will help it create a constant database of future students who register with it, and which will help in the process of checking the authenticity of certificates.

DECCAN CHRONICLE CHENNAI EDITION 26.02.2015 ..MIND THE ROOF ABOVE YOUR HEAD AT AIRPORT

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!



பொருளாதார வளர்ச்சி, அரசியல், பங்குச் சந்தை நிலவரம், கட்டமைப்பு வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்றெல்லாம் ஒருபுறம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், கண்ணுக்குத் தெரியாத ஓர் எரிமலை மீது அமர்ந்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பொருளாதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வதால் சமுதாயம் மேம்பட்டுவிட்டதாகக் கனவு கண்டுகொண்டிருக்கும் நாம், உணராமல் இருப்பது நமது உடல் ஆரோக்கியம் சீர்கெட்டு கொண்டிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை!

கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வானொலி உரையில் அவர் கூறிய ஒரு கருத்து, தனது பதவிக்காலம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு வந்து மக்களின் உடல் நலன் தொடர்பான பிரச்னைகளில் சேவை செய்ய விரும்புவது. அவரது நியாயமான கவலையும் இந்தியாவுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்கிற அவரது ஆர்வமும் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை.

அதிபர் ஒபாமா அடிக்கோடிட்டுக் கூறிய பிரச்னை உலகளாவிய அளவில் காணப்படும் உடல் எடை அதிகரிப்பு தொடர்பானது. இதுபற்றி நமக்கு அமெரிக்காவிலிருந்து வந்து பராக் ஒபாமா சொல்லித்தர வேண்டிய, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவல நிலையில் நாம் இருக்கிறோம் என்பதுதான் தலைகுனிவு. உடல் எடை அதிகரிப்பு, தேவைக்கதிகமான கொழுப்புச் சத்து உடலில் காணப்

படுவது என்பவை உலகளாவிய அளவில் கவலை அளிக்கும் பிரச்னைகள் என்பது மட்டுமல்ல, இதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது திடுக்கிட வைக்கும் செய்தியும்கூட.தொற்று நோய்களால் ஏற்படும் மரணங்களைவிட, அளவுக்கதிகமான கொழுப்புச் சத்து உடலில் சேர்வதால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. உலகமயமாக்கல் என்னும் கோர முகத்தின் வெளிப்பாடு இது என்று சொன்னால் அதில் தவறு இல்லை. மாறிவிட்டிருக்கும் வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கங்கள், நகர்மயமாதல் ஆகியவை தொற்று அல்லாத நோய்களை அதிகப்படுத்தி மரண விகிதத்தை அதிகரித்து விட்டிருக்கின்றன. இதன் விளைவாக, தனிநபர், குடும்பங்கள், சுகாதாரத் துறை, அரசு என்று எல்லா தரப்பினரும் பாதிப்புக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகி விட்டிருக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, தொற்று அல்லாத நோய்களான இருதய நோய்கள், புற்று நோய், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு நோய் ஆகியவை கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் கணிசமாக அதிகரித்து மிகப்பெரிய சமுதாய அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட நான்கு உடல் நலப் பிரச்னைகளால் ஆண்டுதோறும் இந்தியாவில் மரணமடைவோரின் எண்ணிக்கை 58 லட்சத்திற்கும் அதிகம். இந்தியாவில் நிகழும் மரணங்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகம் மேலே குறிப்பிட்ட நோய்களால் நிகழ்வதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலே குறிப்பிட்ட நான்கு பிரச்னைகளுக்கும் முக்கியமான காரணங்கள் புகையிலைப் பழக்கம், மது அருந்துதல், தேவையற்ற கொழுப்புச் சத்துள்ள உணவை உள்கொள்ளுதல், உடற்பயிற்சி அறவே இல்லாமல் இருப்பது ஆகியவைதான் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

புகையிலைப் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பது மிகவும் வேதனையளிக்கும் போக்கு. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் சமுதாயக் கண்டனமாக இருந்ததுபோய், இப்போது சமுதாயத் தகுதியாகக் கருதப்படுவது வருத்தமளிக்கிறது. அரசே மதுக் கடைகளை நடத்தும்போது, இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார், எப்படி, எப்போது என்பவை விடை தெரியாக் கேள்விகளாகத் தொடர்கின்றன.

நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து விட்டிருக்கும் புகைக்கும், மதுவுக்குமான நாட்டத்தில் அடுத்த கட்ட நாட்டமாக புலால் உண்பதும் மாறிவிட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஆண்டுக்கு ஐந்தாறு முறையோ அல்லது விருந்துகளில் மட்டுமோ இருந்த புலால் உண்ணும் வழக்கம், இப்போது அன்றாட அத்தியாவசியமாக மாறிவிட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில், சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே புலால் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய ஆபத்தாக மாறி வருகிறது. இதனால், சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பது பரவலாகக் காணப்படும் பிரச்னை. அதுமட்டுமல்ல, மதிப்பெண்கள் பெறும் ஆர்வத்தில் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோ விளையாட்டோ அறவே இல்லாத போக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற குளிர்ப்பிரதேசங்களில் மட்டும்தான் மாமிசத்தை மட்டுமே சாப்பிட்டு வந்த நிலைமைபோய், உஷ்ணப் பிரதேசமான இந்தியாவிலும் கே.எப்.சி., மெக்டொனால்ட் போன்ற துரித உணவு நிறுவனங்களின் வரவுக்குப் பின்னால் வெறும் மாமிசமும், குளிர்பானமும் இளைஞர்களுக்கு மதிய உணவாகி விட்டிருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டின் ஒரு பகுதியாக மாமிசம் இருந்ததுபோய், மாமிசமே சாப்பாடு என்றாகிவிட்டதன் விளைவு, நாற்பது வயதானவர்கள்கூட இருதய அடைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டிருக்கிறது.

உடற்பயிற்சியும் இல்லாமல், அளவுக்கதிகமான கொழுப்புச் சத்துள்ள மாமிச உணவையும் உள்கொள்வதுடன், புகை பிடிப்பதும், மது அருந்துவதும் சேர்ந்து கொள்ளும்போது, மரண தேவனுக்கு குதூகலம் ஏற்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!

இஎஸ்ஐ மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்: தமிழக அரசே கல்லூரியை ஏற்கக் கோரிக்கை



எட்டு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து, அவர்கள் வியாழக்கிழமை முதல் வகுப்புக்குத் திரும்ப உள்ளதாகத் தெரிவித்தனர்.

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் இஎஸ்ஐ நிர்வாகத்துக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல், மருத்துவ சேவைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்தது.

மேலும் அந்தந்த மாநிலங்கள் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்தவும் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. மாநில அரசுகள் எந்தப் பதிலையும் அளிக்காததையடுத்து,நாடு முழுவதும் உள்ள 11 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறாது என்றும் இப்போது படித்து வரும் மாணவர்கள் படிப்பை முடித்ததும் கல்லூரிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஎஸ்ஐ நிர்வாகத்தின் இயக்குநர் ஜெனரல், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இஎஸ்ஐ நிர்வாகத்தின் இயக்குநர் ஜெனரல் மாணவர்களின் பிரதிநிதிகள் நான்கு பேருடன் பிப்ரவரி 24-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து மாணவர்கள் சிலர் கூறியது:

பேச்சு வார்த்தையின்போது புதிய மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது என்று இயக்குநர் ஜெனரல் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் இப்போது படித்து வரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை கல்லூரி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

இஎஸ்ஐ நிர்வாகத்தின் திட்டவட்ட முடிவையடுத்து, இனி போராட்டம் மேற்கொள்வதில் பயன் இல்லை என்று தெரியவந்தது. எனவே போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்குத் திரும்ப முடிவு செய்துள்ளோம்.

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். இதற்காக மாணவர்கள் சார்பாக தமிழக அரசிடம் முறையிட உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

'எச் 4' விசா வழங்க அமெரிக்கா முடிவு...dinamalar 26.02.2015

வாஷிங்டன்: கணவரோ அல்லது மனைவியோ, அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்தால், அத்தகையவருக்கு, 'எச் 1 பி விசா' இருந்தால், அமெரிக்கா வந்து பணியாற்ற, அவரின் மனைவிக்கோ அல்லது கணவருக்கோ, 'எச் 4 விசா' வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த முடிவு, கணவன் இந்தியாவிலும், மனைவி அமெரிக்காவிலும்; அல்லது மனைவி இந்தியாவிலும், கணவன் அமெரிக்காவிலும் என்ற பிரிவை போக்கும். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களால், குறிப்பாக இந்தியர்களால், நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த இந்த கோரிக்கை, இப்போது நிறைவேறியுள்ளது. வரும் மே மாதம், 26ம் தேதி முதல், இந்த புதிய நடைமுறைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதனால், முதல் ஆண்டில், 1.79 பேரும், அடுத்தடுத்த ஆண்டுகளில், 55 ஆயிரம் பேரும் பயன்பெறுவர். எனினும், சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு, இந்தியர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதற்கு, ஒபாமா நிர்வாகத்திற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கிணறு தோண்ட அனுமதி பெற ரூ.5,000 கட்டணம்: மாநிலத்தில் புதிய சட்டம் அமல்

சென்னை: 'ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய கிணறு கள் தோண்டவோ, பழைய கிணற்றை ஆழப்படுத்தவோ, ஊராட்சி தலைவரிடம் அனுமதி பெற வேண்டும்' என, புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம், இந்த மாதம், 18ம் தேதியில் இருந்து, அமலுக்கு வருகிறது.

30 நாட்களுக்குள்...:

கவர்னர் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக அறிவித்துள்ளார். இச்சட்டம், 'தமிழ்நாடு ஊராட்சிகள் (கிணறு தோண்டுவதற்கான மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் ஒழுங்கு படுத்துதல்) விதிகள் - 2015' என, அழைக்கப்படும். இச்சட்டப்படி, செயல் அலுவலர் என்பவர், கிராம ஊராட்சி தலைவர் ஆவார்.

* இச்சட்டத்தின்படி, புதிய கிணறு தோண்ட விரும்புவோர், ஆழப்படுத்த விரும்புவோர், 5,000 ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன், விண்ணப்பிக்க வேண்டும்.

* விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள், செயல் அலுவலர் விண்ணப்பத்தை, பரிசீலனை செய்து, அனுமதி அளிக்க வேண்டும்.

* விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தால், உரிய காரணங்களை, எழுத்து மூலமாக, விண்ணப்பதாரருக்கு, விண்ணப்பம் பெறப்பட்ட, 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.

* கிணற்றை ஆழப்படுத்தவும், புனரமைக்கவும் மேற்கொள்ளப்படும் பணியை, வணிக ரீதியாக மேற்கொள்வோருக்கு, பதிவுச் சான்று வழங்கப்படும்.


* இதை பெற, 15 ஆயிரம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையுடன், பதிவு சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை, கலெக்டரிடம் வழங்க வேண்டும்.


* விண்ணப்பத்தை, 45 நாட்களுக்குள், கலெக்டர் பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும்.

* விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தால், அதற்கான காரணங்களை, விண்ணப்பதாரருக்கு, எழுத்து மூலமாக தெரியப் படுத்த வேண்டும்.

ஆழப்படுத்த...

* கிணறு தோண்ட, ஆழப்படுத்த, அனுமதி பெற்றவர்கள், முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை பின்பற்றுகின்றனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

'பாஸ்போர்ட்'டுக்கு விண்ணப்பிக்க தனியார் வங்கி கணக்கும் உதவும்

சென்னை: 'பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், தனியார் வங்கி கணக்குப் புத்தகத்தையும், அடையாள சான்றாக இணைக்கலாம்' என, பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன், அடையாள சான்றாக, புகைப்படம் ஒட்டிய, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகங்களை இணைக்க, ஏற்கனவே அனுமதி உள்ளது. இந்நிலையில், தனியார் வங்கி கணக்குப் புத்தகங்களையும் இணைக்கலாம் என, வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது, 26 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கணக்குப் புத்தகங்ளோடு, 56 கிராமப்புற வங்கிகள், 23 தனியார் வங்கிகள் உட்பட, 105 வங்கிகள் அளிக்கும், புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகத்தை, அடையாள சான்றாக, பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் இணைக்கலாம். இதற்கு, ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

NEWS TODAY 06.12.2025