Wednesday, March 11, 2015

Suspense Over Admissions to ESIC Medical Colleges

KALABURAGI: There is a question mark over starting admissions to the first year MBBS course at ESIC medical colleges in Kalaburagi and Bengaluru in the coming academic year. For it is not yet clear whether the state government will take over these medical colleges after ESIC announced that it would exit the field of medical education from 2015-16 and would not undertake further admissions.

Sources in the State Medical Education Department told Express that the department had prepared a proposal on taking over the colleges and that it was with the Finance Department. The government could take a decision only after getting consent from the Finance Department.

Not just the students and faculty, even ESIC is concerned over the issue. A K Agarwal, Director General of ESIC, wrote to Reena Nayyar, secretary in-charge of Medical Council of India, on February 20 stating that the students and faculty of ESIC medical colleges have expressed concern over whether the course would be recognised if admissions were not undertaken.

The letter confirmed that ESIC was exiting the field of medical education and wanted to hand over medical colleges and other medical education institutions having separate infrastructure to state governments willing for such a transfer.

It stated that ESIC would not undertake further admissions and all ongoing medical education programmes would continue till the admitted students pass out or are adjusted as per the provisions of the Essentiality Certificate by the state government, whichever is earlier.

The letter stated that ESIC was running medical colleges in Bengaluru, Kalaburagi, KK Nagar (Chennai) and Joka (Kolkata).

Medical Council of India conducts year-wise inspections for renewal of MBBS batches after grant of letter of permission (LoP) and for the recognition of the college. This permission after grant of LoP is given each year after the applicant colleges fulfil the norms of faculty, infrastructure and equipment during the inspection.

Agarwal’s letter stated, “It is our understanding that after the approval of the scheme of renewal of MBBS batches, the college is at liberty to undertake or not undertake admissions...the recognition of MBBS course would not be jeopardised, irrespective of whether the actual yearly admissions have been undertaken or not.” However, ESIC has sought clarification from MCI on this issue. As per these norms, an MCI team inspected the ESIC medical colleges at Kalaburagi and Bengaluru last week. Dr Chandrashekhar, principal, ESIC Medical College, Kalaburagi, confirmed the MCI visit to the college on March 4. He said the team had pointed out that there was a shortage of teaching faculty by 31 per cent. He said ESIC would hold interviews to fill up the vacancies in faculty in Kalaburagi and Bengaluru Medical Colleges in Bengaluru, between March 16 and 18.

Asked if ESIC had reversed its stand on handing over medical colleges to the state government, Dr Chandrashekhar said he has not received any communication from ESIC other than asking him not to start the admission process for MBBS first year course for the year 2015-16.

INDIAN NURSING COUNCIL CIRCULAR


Dated: 5 March, 2015
 
To,
       Principal
       All Nursing Institutions
 

Sub: - Renewal for 2015-2016 -reg.
Sir/madam,
 
Institution renewal for 2015-2016 will not be considered if the institution has not submitted:
  1. Penalty for not having the own building.
  2. Teaching faculty are not uploaded.
  3. Renewal form not forwarded by State Nursing Council.
If the above 1 and 2 Sr. No. has not been compiled. The institutions are requested to submit immediately within four (4) weeks.
 
Yours faithfully,
Sd/-
Secretary

பஹல் திட்டமா... பகல் கொள்ளையா...!



'உங்கள் பணம், உங்கள் கையில்' என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையை அரசு நேரடியாக மக்கள் கையில் கொடுக்க முடிவு செய்தது. அதன்படி மார்ச் 31ம் தேதிக்குள் இந்த நேரடி மானியத் திட்டமான பஹலில் சேர மக்களுக்கு மத்திய அரசு அறைகூவல் விடுத்துள்ளது. திட்டத்தில் சேருவதற்கான கடைசி நாள் நெருங்கி கொண்டு இருக்க வாடிக்கையாளர்கள் கேஸ் விநியோகஸ்தர் அலுவலகங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆதார் கார்டு அல்லது வேறு ஏதாவது அடையாள ஆவணங்களை கேஸ் விநியோகஸ்தரிடம் வாடிக்கையாளர் சமர்ப்பிக்க வேண்டும். அதோடு மானியத் தொகையை வங்கியில் செலுத்த வசதியாக வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களையும் கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வங்கி கணக்கு இல்லை. இதனால் மத்திய அரசு குறிப்பிட்டுள்ள வங்கி கிளைகளில் முட்டி மோதி பெரும்பாலானவர்கள் வங்கி கணக்கைத் தொடங்கி விட்டனர்.

இதன்பிறகு கேஸ் விநியோகஸ்தர்களிடம் சென்றால் அங்கு வேறு ஒரு பிரச்னை. வாடிக்கையாளர்களில் பலரது இணைப்பு அவர்களது பெற்றோர் பெயரில் இருந்து வருகிறது. இதில் என்ன கொடுமை என்றால் இறந்து போன பெற்றோரின் பெயரில் இணைப்பு இருப்பதால் அதை மானியத் திட்டத்தில் சேர மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோரின் பெயரிலிருந்து தன்னுடைய பெயருக்கு மாற்ற வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியதுள்ளது

பாதிக்கப்பட்டவரில் ஒருவரான புரசைவாக்கத்தை சேர்ந்த சரவணன் என்பவர், “ சென்னை மந்தைவெளியில் குடியிருந்தபோது எனது தந்தை ஜெகநாதன் பெயரில் இந்த கேஸ் இணைப்பு பெறப்பட்டது. பிறகு வேலை நிமித்தமாக சென்னை புரசைவாக்கத்திற்கு குடியேறினேன். இதனால் அங்கிருந்த கேஸ் இணைப்பை புரசைவாக்கத்திற்கு மாற்றினேன். இந்த சூழ்நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது தந்தை ஜெகநாதன் இறந்து விட்டார்.

இதனால் அவரது பெயரில் உள்ள கேஸ் இணைப்பை என்னுடைய பெயருக்கு மாற்ற கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு சென்றேன். அப்போது நான் கொடுத்த ரேஷன் கார்டில் எனது தந்தை பெயரை தவறுதலாக ஜெகன்ராஜ் என்று அச்சிடப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டிய விநியோஷஸ்தர் அலுவலக ஊழியர்கள், 2500 ரூபாய் கொடுத்தால் உன்னுடைய பெயருக்கு இணைப்பை மாற்றித் தருகிறேன் என்கிறார்கள். பெயர் மாற்ற பணம் செலுத்த தேவையில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக நான் கூறினேன்.

சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால் ரேஷன் கார்டில் உள்ள தந்தையின் சரியான பெயரை மாற்றிவிட்டு வரும்படி தெரிவித்தனர். இதனால் பெயரை மாற்ற வள்ளுவர் கோட்டத்தில் உள்ள குடிமைப் பொருள் அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு இப்போது பெயரை மாற்ற முடியாது என்று கூறினர். இதனால் சேப்பாக்கம் எழிலகத்தில் செயல்படும் குடிமை பொருள் தலைமை அலுவலகத்துக்கு சென்றேன். அங்கு பெயரை மாற்ற அதற்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் கொடுங்கள். அதற்கு அவர்கள் லஞ்சம் கேட்டால் எழுத்துப்பூர்வமாக எழுதித்தரச் சொல்லுங்கள் என்றார்கள்.

இதனால் மீண்டும் வள்ளுவர் கோட்ட அலுவலகத்துக்கு சென்றேன். அவர்கள் இன்று, நாளை என்று இழுத்தடிக்கிறார்கள். வேறுவழியின்றி கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்துக்கு சென்றால் பணம் கொடுத்தால் மட்டுமே பெயரை மாற்ற முடியும் என்கிறார்கள். ரேஷன் கார்டில் தவறுதலாக எனது தந்தை பெயரை எழுதிய அந்த அரசு அதிகாரியால் நான் மானிய திட்டத்தில் சேர வீட்டுக்கும் அரசு அலுவலகத்துக்கும் அலைந்து கொண்டு இருக்கிறேன்" என்றார் வருத்தத்துடன்.

இந்தப் பிரச்னையை கையில் எடுத்துள்ள தேவை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ கூறுகையில், " பெயர் மாற்ற பணம் தேவையில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் தந்தால் மட்டுமே மாற்ற முடியும் என்கிறார்கள். கேஸ் விநியோகஸ்தர்கள் பணம் கேட்பது குறித்து சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்தின் டோல் ப்ரி நம்பரை தொடர்பு கொண்டால் அது சேவையில் இல்லை என்று பதில் வருகிறது. எண்ணெய் நிறுவனத்தின் நம்பர் பல நாட்கள் செயல்படாமல் உள்ளது. இந்த சூழ்நிலையில் எப்படி வாடிக்கையாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க முடியும்.

இந்த பிரச்னையை யாரிடமும் சொல்ல முடியாமல் கேட்கிற பணத்தை கொடுத்து விட்டு அரசு கொடுக்கும் சொற்ப மானியத் திட்டத்தில் சேருகின்றனர். கேஸ் விநியோகஸ்தர்களின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலகத்தில் மக்களை அலைக்கழிப்பவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, "பெயர் மாற்றுவதற்கு என்று தனிக் கட்டணம் கிடையாது. முன்பு சிலிண்டருக்கான டெபாசிட் தொகை குறைவு. ஆனால் இப்போது அதிகம். அதற்காக பணம் கேட்டு இருப்பார்கள். கூடுதலாக பணம் கேட்டால் எங்களிடம் சம்பந்தப்பட்ட கேஸ் விநியோகஸ்தர் மீது புகார் அளிக்கலாம்" என்றார்.

பஹல் திட்டம் பாமர மக்களை பாடாய்படுத்துகிறது!

- எஸ்.மகேஷ்

ஆர்.டி.ஐ: தகவல் கேட்டதற்காக தினமும் மன உளைச்சலில் மனுதாரர்

கடந்த ஓராண்டாக தனக்கு வந்த வெவ்வேறு விதமான பதில் கடிதங்களுடன் சரவணகுமார். படம்: ம.பிரபு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கடந்த ஓராண்டு காலமாக வெவ்வேறு மாதிரியான பதில்கள் வந்து கொண்டிருப்பதால், சரவண குமார் என்னும் மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

ஒவ்வொரு இந்திய குடிமகனும் அரசு சார்ந்த கேள்விகளை கேட்டு பதில்களைப் பெறுவதற்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டால் அதற்கு முறையாக பதில்கள் வருவதில்லை என்றும், சம்பந்தமே இல்லாமல் நூற்றுக் கணக்கான கடிதங்களை அனுப்பி மனுதாரரை மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக தருமபுரியை சேர்ந்த அ.ப.சரவணக்குமார் என்ப வர் ‘தி இந்து’ விடம் கூறிய தாவது:

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தமிழக அரசு மூடப்போவதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, “அண்ணா நூலகம் கட்டப்பட்டதன் நோக்கம் என்ன? அதனுடைய செயல்பாடுகள் எப்படி உள்ளது? அதை ஏன் மூட வேண்டும்? தமிழகத்தில் அண்ணா மறுமலர்ச்சி நூலகத் திட்டத்தின்படி எத்தனை கிராமங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன?” என்பன உள்ளிட்ட கேள்விகள் அடங்கிய மனுவை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்தாண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தேன்.

மனு அனுப்பப்பட்ட 30 நாட்களுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விதிமுறை. ஆனால் எந்த பதிலும் வரவில்லை. எனவே, மீண்டும் தலைமைச் செயலகத்தின் மேல் முறையீட்டு அலுவலரிடம் மனு செய்தேன். இம்முறை எனது கேள்விகள் நூலகத்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தலைமைச் செயலகத்திலிருந்து அனுப்பப்பட்ட எனது கடிதத்தின் ஒரு பக்கத்தை காணவில்லை என்று நூலகத்துறை அதிகாரிகள் கூறினார்கள். நான் மீண்டும், எனது மனுவின் நகலை அவர்களிடம் அளித்தேன். அப்போது, ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டதாக பதில் அளித்தார் கள். மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்படி உருவாக்கப்பட வுள்ள நூலகங்கள் குறித்த கேள்விகள் 385 வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பப் பட்டன. இதன்பேரில் தான் தினமும் வெவ்வேறு பதில் கடிதங்கள் வருகின்றன. இதுவரை 100-க்கும் அதிகமான கடிதம் வந்துள்ளன. ஒரு துறை என்றால், அதன் தலைமையிடமான இயக்குநரகத்தில் அந்த துறை சார்ந்த அனைத்து தகவல்களும் கட்டாயம் இருக்கும். ஆனால் மனுதாரர்களை அலைக்கழிக்க வேண்டும் என்ற நோக்கில் தான் கிளை அலுவலகங்களுக்கு மனுவை அனுப்பி வைக்கிறார்கள்.

இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. இந்த கடிதங்களில் உரிய பதிலையும் சொல்வதில்லை. தினமும் தபால்காரர் வீட்டுக்கு வருகிறார். பெரிய அளவில் தபால் கட்டுகள் குவிந்து கொண்டே போகிறது. மனு செய்பவர்களை முட்டாளாக்குவது போல் இருக்கும் இந்த நடைமுறை மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து பொது நூலகத் துறையின் கூடுதல் இயக்குநரி டம் கேட்டபோது, “மாநில அலுவ லகத்தில் எல்லா தகவல்களும் இருக்காது. அரசுக்கு தேவையான தகவல்கள் மட்டும் மாவட்டங் களிலிருந்து வாங்கிப் பெற்றுக் கொள்ளப்படும்” என்றார்.

இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரும் சட்டப்பஞ்சாயத்து இயக்க ஒருங் கிணைப்பாளருமான செந்தில் ஆறு முகத்திடம் கேட்டபோது, “இதற்கு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையே காரணமாகும். ஏதோ எந்திரங்கள் போல் அவர்கள் நடந்து கொள்கிறார்கள். உரிய பதில் வராவிட்டால் மேல் நடவடிக்கை நிச்சயம் என்ற நடைமுறை வேண்டும்” என்றார்.

MCI nod for 2 more colleges

Number of seats in govt. medical colleges same as last year

The Medical Council of India has approved of two colleges, a government and a self-financing institution, to admit students to the MBBS course for the 2015-16 academic year.

The Villupuram Medical College has been permitted to admit 100 students and the Tagore Medical College has received recognition for five years to admit 150 students.

The Council’s executive committee, however, has deferred its decision on the four-year-old Thiruvarur Medical College till its next meeting. The college, which admits 100 students, requires the MCI’s annual renewal permission to admit students.

The Chennai-based Sri Muthukumaran Medical College Hospital and Research Institute, which till 2013-14 admitted 150 students under the Tamil Nadu Dr. MGR Medical University, did not get approval. Taking cognisance of a complaint from K.M. Krishnan, secretary of Chennai-based Society for Common Cause, the committee noted that the college did not have plan approval for construction from the appropriate authority and its bed occupancy was 72.1 per cent on the day of assessment. It did not have wards as per MCI norms for psychiatry or a medical records officer either.

Apart from a range of deficiencies pointed out in the assessment report, the college fell short of 15 beds in the Psychiatry department and post-operative patients were sent to surgical intensive care unit, as it did not have an intensive care unit.

The committee ruled that the institute must submit compliance for rectification of the deficiencies within a month for further consideration.

Last year, as the Centre offered conditional permission to five private medical colleges at the end of the admission season, 450 students lost the opportunity to study medicine.

Director of Medical Education S. Geetalakshmi said the number of seats in government medical colleges this year would be the same as last year (2,565).

The State government was making all attempts to get permission for the new medical college in Omandurar Estate, she said. The college would be attached to Kasturba Gandhi Government Hospital.

Health department officials said under a 70-30 shared scheme, the State government along with the Centre, was expanding its facilities - infrastructure and personnel, in the government medical colleges in Coimbatore, Kanyakumari, Tirunelveli and Madurai. Together in these colleges, the government is hoping to add 450 seats.

Tuesday, March 10, 2015

அப்துல் கலாமையும் அசத்திய இந்திய வெற்றி



உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய அணிக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவ்வளவாக விளையாட்டு பக்கம் திரும்பி பார்க்காதவர். குடியரசுத் தலைவராக இருந்த போது அவ்வப்போது விளையாட்டு வீரர்களை ஏதாவது விருது நிகழ்ச்சியில் சந்தித்து பேசுவதோடு சரி. விளையாட்டை விட்டு ஒதுங்கியிருக்கும் அவரையும் இந்த உலகக் கோப்பையில் தொடர் வெற்றி பெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி அசைத்து பார்த்து விட்டது.

இந்திய அணி தொடர்ச்சியாக உலகக் கோப்பை போட்டியில் 5 வெற்றிகளை பெற்றதையடுத்து, அப்துல் கலாம் இந்திய அணி வீரர்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் தளத்தில், ''வெல்டன் இந்தியா.. இதுவரை நீங்கள் பெற்ற வெற்றிக்கு முழு மதிப்பெண் ''எனக் கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடியும் தனது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். "உங்களின் அனைத்து செயல்திறனும் சூப்பர். இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள். உங்களுடையே உத்வேகம் தொடரட்டும்" என்று கூறியுள்ளார்.

உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக வெற்றி



உலகக் கோப்பை போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை ஆல்அவுட் ஆக்கி இந்திய அணி புதிய சாதனையை படைத்துள்ளது.

உலகக் கோப்பை போட்டியில் ஹாமில்டன் நகரில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் போர்ட்ஃபீல்ட் 67 ரன்களும் ஸடிர்லிங் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.

அடுத்து வந்த எட்ஜாய்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினாலும், ஓ பிரையன் அபாரமாக விளையாடி 75 ரன்களை எடுத்தார். மறுமுனையில் பல்பிரின் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 49 ஓவர்களில் அயர்லாந்து அணி 259 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் வேறு இதற்கு முன் எந்த அணியும் செய்திராத உலக சாதனை இது. முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.

அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...