Thursday, April 9, 2015

ஒன்பதை வெட்டினால் ஒன்றையாவது நடு! By இடைமருதூர் கி.மஞ்சுளா



நம் முன்னோர் மொழிந்த "ஒன்றைப் பிடுங்கினால் ஒன்பதை நடு' என்கிற வாசகத்தை நாமெல்லாம் மறந்துவிட்ட காரணத்தால்தான் உலகம் இன்றைக்கு வெப்ப மிகுதியால் தாக்கப்பட்டு, ஆண்டுக்கு ஆண்டு கூடுதல் வெப்பத்தால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

காரணம், ஒன்பதைப் பிடுங்கினோம்; அதற்கு மேலும் பிடுங்கிக் கொண்டே இருக்கிறோம்; ஆனால், ஒன்றைக்கூட நம்மால் நட முடியவில்லை. அதை நடுவதற்கு இன்றைக்கு நமக்கு இடமுமில்லை; எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகிக் கொண்டிருப்பதனால்...

உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டிருப்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்களை மட்டும் குறிப்பிடலாம்.

முதல் காரணம், காடுகளில் உள்ள மரங்களை அழித்து, மழை பொழிய விடாமல் தடுப்பது; இரண்டாவது, சாலை, தொழிற்சாலை, கட்டடங்கள் போன்றவற்றைப் புதிது புதிதாக அமைக்கிறோம், குடியிருப்புகளை உருவாக்குகிறோம் என்கிற பெயரில் நாட்டில் உள்ள மரங்களையும் வயல்களையும் அழித்து வருவது.

சங்க காலம் தொட்டு இன்றுவரை மரங்களை தெய்வமாக வழிபடும் மரபு தமிழருடையது. வேம்பு, அரசு, ஆல் எனப் பலவகை மரங்களை, அவை தரும் பலன்களைக் கருத்தில் கொண்டு பூஜித்து, வழிபட்டு வருகின்ற மரபு நம்முடையது.

சில தெய்வீக மரங்கள்தான் இத்தமிழ் மண்ணுக்குப் பல மகான்களை - ஞானிகளை அடையாளம் காட்டி, சமயங்களையும் மதங்களையும் தழைத்தோங்கச் செய்து, அவர்களுக்கு ஞானம் போதித்து, ஞானம் தரும் மரங்களாக இருந்துள்ளன.

சைவ சமயத்தின் தலையாய குறிக்கோளான அன்பையும், அறிவையும் உணர்த்துவதற்காக அவதாரம் செய்த வாதவூரடிகளுக்கு, திருப்பெருந்துறை என்ற தலத்தில் உள்ள "குருந்த மர'த்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "மாணிக்கவாசகர்' ஆனார்; பெளத்த மதம் சிறந்தோங்க அவதரித்த சித்தார்த்த கெளதமர் என்பருக்கு பிகாரில் உள்ள "கயை' என்ற இடத்தில் இருந்த "போதி' மரத்தடியில் ஞானம் கிடைத்தபோதுதான் அவர் "புத்தர்' ஆனார்.

சமண மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய வர்த்தமானருக்கு "சாலா' என்ற மரத்தடியில் ஞானம் கிடைத்த போதுதான் மாபெரும் ஜைனத் துறவியான "மகாவீரர்' எனப் போற்றப்பட்டார்.

இப்படி மணிவாசகருக்கு "குருந்த' மரமும், புத்தருக்கு "போதி' மரமும், மகாவீரருக்கு "சாலா' மரமும்தான் ஞானம் தரும் மரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. அதனால்தான் இன்றைக்கும் அவை போற்றப்படுகின்றன.

காற்றில் இருக்கும் வெப்பத்தையும் அசுத்தக் காற்றையும் தாம் வாங்கிக்கொண்டு, உலகை ஒருசேர குளிர்விக்கும் ஒரே குளிரூட்டி இயந்திரம் மரங்கள்தாம். இன்றைக்கு நமக்குப் பயன் தரும் பலவகை மரங்களை நம் முன்னோர் நட்டிருக்காவிட்டால், நாம் நிழலின் அருமையையும் அதன் தண்மையையும் உணர்ந்திருக்கவே முடியாது.

சமீபத்தில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 8,000 வீடுகள் மட்டுமே உள்ள ஒரு சிறிய கிராமமான, "பிபிலாந்திரி'யில் நிகழ்ந்துள்ளது. அக்கிராமத்தின் தலைவரான ஷியாம் சுந்தர் பலிவாலின் மகள் இளம் வயதில் இறந்துவிட்டதால், அவள் நினைவாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி ஒரு குழுவை (கமிட்டி) அமைத்துள்ளார்.

Dinamani

அதன்படி, அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்கள் நடப்படுகின்றன. ஓராண்டில் 60 பெண் குழந்தைகள் பிறந்தால், 6,660 பயன்தரும் மரங்கள் நடப்படுகின்றன.

அந்த மரங்களை பெண்களே பராமரிக்கும் வாய்ப்பையும் தந்து, அதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பையும் இக்குழுவினர் ஏற்படுத்தித் தருகின்றனர்.

அது மட்டுமல்ல, அந்தப் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அந்தக் குழுவின் சார்பில் அந்தப் பெண் குழந்தைகளுக்கு ரூ.21 ஆயிரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தாய்-தந்தையரின் பத்தாயிரம் ரூபாய் சேர்த்து அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, அதில் சேமித்துவிட வேண்டுமாம்.

அந்தப் பெண் 20 வயதாகும்போது மரம் வளர்வது போல இந்தத் தொகையும் வளர்ந்து அந்தப் பெண்ணின் கல்விக்கும், திருமணத்துக்கும் உதவுகிறது.

இந்த நடைமுறைகளை ஒவ்வொரு கிராமமும் பின்பற்றினால் என்ன?

சங்கப் புலவர் ஒருவர், மரத்தோடு தொடர்புடைய மிக நுட்பமான செய்தி ஒன்றை நற்றிணையில் (பா.172) பாடியுள்ளார். தலைவன்-தலைவி இருவரும் ஒரு பூஞ்சோலைக்குள் நுழைகின்றனர். அங்கே ஒரு புன்னை மரம் இருக்கிறது. அதன் அடர்ந்த கிளைகளின் நிழலில் அமர்ந்து காதல் மொழிகள் பேச ஆசைப்படுகிறான் தலைவன். ஆனால், "இந்த இடத்தில் வேண்டாம்' எனத் தலைவி வெட்கப்பட்டு மறுக்கிறாள்.

"என்ன காரணம்?' என்று கேட்கிறான் தலைவன். "இந்தப் புன்னை மரம் எனக்கு தமக்கை உறவாகும்' என்கிறாள். "மங்கைக்கு மரம் சகோதரியா?' என அவன் கேட்க நினைப்பதற்குள் அவளே சொல்கிறாள்:

"என் தாய் இளம் வயதில் இச்சோலையில் வந்து விளையாடுவாளாம். அப்போது கேட்பாரற்றுக் கிடந்த ஒரு புன்னை விதையை இந்த மண்ணில் ஊன்றி வைத்திருக்கிறாள். அவள் கன்னிப் பருவம் எய்தியபோது இந்த மரமும் வளர்ந்துள்ளது. என் அன்னை வளர்த்ததால் இந்த மரம் எனக்கு சகோதரி உறவு ஆனது. அதனால், என் சகோதரியின் முன்பு உன்னோடு காதல் கதை பேசுவது எவ்வாறு? எனக்கு நாணம் உண்டாகாதா?'' என்கிறாள்.

இப்படி அஃறிணையைக்கூட உயர்திணையாக்கிக் காட்டி, மரங்களுக்குப் பெருமை சேர்த்து மகிழ்ந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆகவே, நாம் ஒன்பதைப் பிடுங்கினால் ஒன்றையாவது நட்டு, நம் சந்ததியினரை உலக வெப்ப மிகுதிக்கு ஆளாக்காமல் பாதுகாப்போம் - நாமும் பயன் பெறுவோம்.

புது அரசு மருத்துவ கல்லூரியில் எம்.சி.ஐ., குழு ஆய்வு : வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை?

அரசு ஓமந்தூரார் தோட்டத்தில், புதிய மருத்துவ கல்லூரி பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு தயாராக உள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலான எம்.சி.ஐ.,யின் குழு, நேற்று திடீர் ஆய்வு நடத்தியது. முறையான அனுமதி பெற்று, திட்டமிட்டபடி, வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை துவங்கும் என தெரிகிறது.சென்னை, ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில், கடந்த, தி.மு.க., ஆட்சியின் போது, பிரமாண்டமாக, புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த கட்டடம், அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு, 2014 பிப்., 22 முதல் செயல்பட்டு வருகிறது.

இங்கு, 'எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, 100 மாணவர்களை சேர்க்கும் வகையில், புதிய மருத்துவக்கல்லூரி துவக்கப்படும்' என, அரசு அறிவித்தது. 200 கோடி ரூபாயில், ஏழு அடுக்கு மாடி கட்டடங்களின் கட்டுமானப் பணி நடந்தது.இந்தப்பணிகள் முடிந்து, செயல்படத் தேவையான கட்டமைப்பு வசதிகளுடன், மருத்துவக்கல்லூரி தயாராக உள்ளது.மூன்று பேர் கொண்ட, எம்.சி.ஐ., குழு, நேற்று ஆய்வுக்கு வந்தது.புதிய மருத்துவ கல்லூரியில் உள்ள வசதிகள்; இதற்காக உருவாக்கப்பட்ட, கஸ்தூரி பா அரசு பொது மருத்துவமனையில், நோயாளிகள் வருகை, சிகிச்சை வசதிகள், பணியாளர் செயல்பாடு குறித்து ஆய்வு நடத்தியது.மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி, கல்லூரி முதல்வர் சாந்திமலர் உள்ளிட்டோர், பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். ஆய்வுப்பணி நேற்றுடன் முடிந்தது.இந்த குழுவினர் தரும் அறிக்கை அடிப்படையில், எம்.சி.ஐ., முறையான அனுமதி அளிக்கும் என தெரிகிறது.மருத்துவக்கல்வி இயக்குனர் கீதாலட்சுமி கூறுகையில், ''கல்லூரி, செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. எம்.சி.ஐ., ஆய்வு முடிந்துள்ளது. திருப்திகரமாக அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால், நிச்சயம் செயல்பாட்டு அனுமதி கிடைக்கும். வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, அனைத்து முயற்சிகளையும், அரசு எடுத்து வருகிறது,'' என்றார்.- நமது நிருபர் -

விண்ணப்பங்கள் குவிந்ததால் குலுக்கல் முறையில் ‘எச் 1 பி’ விசா அமெரிக்கா முடிவு

logo

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இன்றி வேலை நிமித்தமாக செல்கிறவர்களுக்கு அந்த நாட்டு அரசு ‘எச் 1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த விசாவுக்கு தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை செய்கிறவர்களிடத்தில் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்து 3–வது ஆண்டாக இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டும் தேவைக்கு அதிகமாக குவிந்து விட்டன. அதுவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட 5 நாட்களுக்குள் குவிந்து விட்டன.

இந்த ஆண்டும் கடந்த ஆண்டுகளைப் போன்றே 65 ஆயிரம் ‘எச் 1 பி’ விசா வழங்கப்பட உள்ளது.

மேலும், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்து முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு 20 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படும்.

தற்போது மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் குவிந்துள்ளதை அடுத்து, இரு பிரிவிலும் கணினிவழி லாட்டரி குலுக்கல் நடத்தி விசா வழங்கப்படும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு பணிகள் அமைப்பு அறிவித்துள்ளது.

சிவப்பு ரத்தம் குடித்த செம்மரக்கட்டை

கடலில் மட்டுமல்ல, காடுகளில் எல்லைத்தாண்டி போனாலும், உயிருக்கு ஆபத்து என்பதை நிரூபிக்கும் ஒரு கொடூர சம்பவம் ஆந்திரா வனப்பகுதிகளில் அரங்கேறியிருக்கிறது. செம்மரக்கட்டைகளை வெட்டிக்கொள்ளையடித்ததாக தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 20 இளைஞர்கள், ஆந்திர மாநில போலீசைச் சேர்ந்த செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தென்மாநிலங்களில் எங்கும் இல்லாத அளவுக்கு ஒரே நேரத்தில் 20 பேர்கள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல்முறையாகும். ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள சிலருக்கு மரம் வெட்டுவதில் உள்ள லாவகம் வேறு யாருக்கும் இருப்பதில்லை என்பார்கள். சாதாரண ரம்பத்தை பயன்படுத்தியே மரங்களை வெட்டி, பட்டையை உரித்து, லாரிகளில் ஏற்றும் வலிமை கொண்டவர்கள் என்பதால், ஆந்திராவில் உள்ள வனப்பகுதிகளில் செம்மரத்தை வெட்டி கடத்தும் தொழிலுக்கு இவர்களைத் தேடிப்பிடித்து கடத்தல்காரர்கள் இந்த வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது உயிருக்கு ஆபத்தான வேலை என்றாலும், ஒருநாள் காட்டுக்குள் சென்று செம்மரத்தை வெட்டிக் கொடுத்தால் பலமுள்ளவன் ரூ.20 ஆயிரத்தை சம்பாதித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற நப்பாசையில், உயிரை பணயம் வைத்து இந்த தொழிலுக்கு செல்கிறார்கள்.

இதுவரையில் பலர் போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் மே மாதத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர்களும், ஜூன் மாதத்தில் ஒருவரும், ஜூலை மாதத்தில் 2 பேர்களும், ஆகஸ்டு மாதத்தில் 2 பேர்களும் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் ஆந்திர போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல், இப்போதும் ஆந்திரா வனப்பகுதிகளில் செம்மரம் வெட்டச் சென்ற நேரத்தில் கைது செய்யப்பட்ட 1,121 தமிழக மக்கள் கடப்பா, கர்னூல், நெல்லூர், சித்தூர் மாவட்ட சிறைகளில் கைதிகளாக இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் காட்டுக்குள் போய் செம்மரம் வெட்டப் போனால் பிடித்து ஜெயிலில் போடுவார்கள், துப்பாக்கியால் சுடுவார்கள் என்ற பயமில்லாமல் இப்படி போய் மாட்டிக் கொண்டு உயிரிழந்து இருக்கிறார்கள்.

ஆந்திர அரசாங்கம் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 4,160 டன் செம்மரக்கட்டைகளை ஏலம் போட்டே கடந்த டிசம்பர் மாதத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு பக்கம் தொடர்ந்து இவ்வாறு செம்மரம் வெட்டப்பட்டுக் கொண்டே இருந்தால், தமிழக காடுகளில் சந்தன மரங்களை வெட்டிச் சாய்த்த நிலை செம்மரங்களுக்கும் வந்துவிடும், அரசுக்கு வரவேண்டிய வருமானம் களவாடப்படுவது மட்டுமல்லாமல், காடுகளும் அழிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் செம்மரம் வெட்டுபவர்களை சுட்டுத் தள்ள போலீசுக்கு, ஆந்திர அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. அப்படி இருந்தும் சட்ட விரோதமாக மரம் வெட்டச் சென்று உயிரை இழந்துவிட்டனர். இனி மேலும் இப்படி யாரும் செம்மரம் வெட்டவரக் கூடாது, வந்தால் இதுதான் நிலை என்று காட்டுவதற்காக இந்த துப்பாக்கி சூடு நடந்தது போல தெரிகிறது. இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தி உயிரை பறித்தற்கு பதிலாக கைது செய்து இருக்கலாம், முட்டுக்குகீழ் சுட்டு இருக்கலாம், அதைத்தவிர்த்து இப்படி செய்தது மனித உரிமை மீறிய செயல், இது போலி என்கவுண்டர், சி.பி.ஐ. விசாரணை, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இனியும் ஜவ்வாது மலையில் இருந்து யாரும் இந்த செம்மர கடத்தல் தொழிலுக்கு செல்லாத வகையில், அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தை வழங்க பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்கள், மலைவாழ் மக்கள் மேம்பாட்டு திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்களை மத்திய அரசாங்கமும், மாநில அரசும் நிறைவேற்றி, அவர்களுக்கு புதிய வாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

Wednesday, April 8, 2015

NRI couple barred from taking a flight from China to Chennai

CHENNAI: Lack of communication about the lifting of a travel ban led to officials of an airline barring a woman from the city and her husband, both US nationals, from taking a flight from Kunming, China, to Chennai, where they intended to visit the woman's mother.

The woman and her husband had to return directly to the US from China.

The Bureau of Immigration was apparently the villain of the piece, having failed to convey to airlines that the country had lifted a rule barring foreign nationals from travelling to India on a tourist visa more than once within a two-month period.

Amiya Kesavan, the woman's mother, told TOI that her daughter Kamala Kesavan Witowsky and her husband James Witowsky, both US nationals, arrived in Chennai from the US on February 25. After spending a few days in her mother's house in Chennai, Kamala and her husband took a flight to Kunming, in southwest China's Yunnan Province, where they planned to visit friends.

Trouble was waiting for the couple in Kunming airport, from where they had tickets to fly to Chennai via Kolkata on March 11, with airline staff informing them that they could not allow them to board the aircraft because of the ban on foreign nationals visiting India a second time within two months.

After missing their flight, the Wittowskys contacted officials at the Indian mission in China, who informed them that the Centre had enforced the ban in view of the Mumbai terror attack. They said the government had lifted the ban and, anyway, it had only been applicable only to citizens of Afghanistan, Iran, Pakistan, Iraq, Sudan, Bangladesh and China, and stateless persons.

Immigration officials failed to communicate to airlines that the government had revoked the ban, so officials did not allow her daughter and son-in-law to return to India, Kesavan said.

"They were stuck in China for three days before they decided to return to the US directly from China," she said. "Kamala and her husband attempted in vain to contact immigration officials in both New Delhi and Chennai. Nobody answered their calls."

As a result, she said, they could not use or cancel the tickets they booked for the flight from Kunming to Chennai via Kolkata, causing them both distress and unnecessary financial loss.

Immigration officials were not available for comment.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல், 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 7 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

இந்த உயர்வு 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி சதவீதம் 107 ஆக உயர்ந்தது.

6 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 6 சதவீத அளவிற்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதன் காரணமாக தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்ந்தது.

இந்த உயர்வு 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

50 லட்சம் பேர் பயனடைவார்கள்

இந்த உயர்வின் காரணமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 20 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் எனவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிவாரண சலுகையின் கீழ் அடிப்படை சம்பளத்தில் இது 113 சதவீதமாக உயரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவகழகம் அங்கீகாரம் கல்லூரி முதல்வர் தகவல்

திருவாரூர் அரசு மருத்துவகல்லூரிக்கு இந்திய மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கி உள்ளதாக கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறினார்.

மருத்துவகழகத்தின் அங்கீகாரம்

மருத்துவகல்லூரிகளை நடத்துவதற்கு இந்திய மருத்துவகழகத்தின் அங்கீகாரம் அவசியம். புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவகல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகள் இந்திய மருத்துவகழகம் தொடர்ந்து ஆய்வு நடத்தி ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்குவது நடைமுறையில் உள்ளது. திருவாரூர் மருத்துவகல்லூரியிலும் தொடர்ந்து 4 ஆண்டுகளாக மருத்துவ கழகம் ஆய்வு நடத்தி அங்கீகாரம் வழங்கியது. இந்த ஆண்டு தொடர்ந்து 5–வது முறையாக அங்கீகாரம் வழங்குவது குறித்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தியது.

மருத்துவகழகத்தின் சார்பில் மேற்குவங்காளம், அரியானா மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர்கள் தத்தா, ஷாம்சிங்க்லா, பிரிசில்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் திருவாரூர் மருத்துவ கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி, 17–ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஆய்வு செய்தனர். ஆய்வு பணி முடிவடைந்ததை தொடர்ந்து இந்திய மருத்துவ கழகம் திருவாரூர் மருத்துவ கல்லூரிக்கு தற்போது அங்கீகாரம் வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக திருவாரூர் மருத்துவகல்லூரியின் முதல்வர் மீனாட்சிசுந்தரம் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முதல் ஆய்வு

திருவாரூர் மருத்துவகல்லூரியில் தொடர்ந்து 5–வது முறையாக கடந்த பிப்ரவரி மாதம் இந்திய மருத்துவகழகம் ஆய்வு நடத்தியது. ஆய்வு குழுவினருக்கு எனது தலைமையிலான மருத்துவர்கள் மருத்துவகல்லூரி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பற்றி விவரித்தோம். உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்தி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவகழகம் திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வின்போது மருத்துவகழகம் சில வசதிகளை செய்ய வேண்டும் என சுட்டி காட்டியது. அந்த வசதிகளை செய்த பின்னர் 2–வது கட்டமாக ஆய்வு நடத்தி அதன் பின்னர் தான் மருத்துவ கழகம் அங்கீகாரம் வழங்கியது. ஆனால் இந்த ஆண்டு முதல் கட்ட ஆய்வின் முடிவிலேயே மருத்துவ கழகம் திருப்தி அடைந்து திருவாரூர் மருத்துவகல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கி விட்டது குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். அடுத்ததாக 2020–ம் ஆண்டு தான் மருத்துவகழகம் ஆய்வு நடத்தும்.

நன்றி

இந்த சாதனையை எட்டுவதற்கு உதவி புரிந்த உணவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர், மருத்துவ கல்லூரி இயக்குனர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...