Wednesday, April 8, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்வு 50 லட்சம் பேர் பயன் அடைவார்கள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அகவிலைப்படி

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2014–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல், 90 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பின்பு மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்ததும், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு 7 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

இந்த உயர்வு 2014–ம் ஆண்டு ஜூலை மாதம் 1–ந் தேதி அமலுக்கு வரும் என அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி சதவீதம் 107 ஆக உயர்ந்தது.

6 சதவீதம் அதிகரிப்பு

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. 6 சதவீத அளவிற்கு இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

இதன் காரணமாக தற்போது மத்திய அரசு ஊழியர்கள் பெறும் அகவிலைப்படி 107 சதவீதத்தில் இருந்து 113 சதவீதமாக உயர்ந்தது.

இந்த உயர்வு 2015–ம் ஆண்டு ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

50 லட்சம் பேர் பயனடைவார்கள்

இந்த உயர்வின் காரணமாக 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களும், 20 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைவார்கள் எனவும், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அகவிலைப்படி நிவாரண சலுகையின் கீழ் அடிப்படை சம்பளத்தில் இது 113 சதவீதமாக உயரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

IIM-I partners with 2 foreign varsities for dual degree

IIM-I partners with 2 foreign varsities for dual degree  TIMES NEWS NETWORK 19.09.2024  Indore : Indian Institute of Management, Indore, (II...