Saturday, April 11, 2015

பத்மினி - 1. எல்லாம் இன்பமயம்!


அழகு, ஆற்றல், இளமை, ஈடுபாடு, உழைப்பு, உற்சாகம், ஊக்கம், எளிமை, ஏற்றம், ஓய்வறியா அர்ப்பணிப்பு, ஓங்கு புகழ் போன்ற தமிழ்ச் சொற்களின் ஒரே உருவம் பத்மினி. தாய்நாட்டின் விடுதலையோடு வேர் விடத் தொடங்கிய, நர்த்தன நந்தவனம்.

திரும்பத் திரும்பத் திரையில் வெவ்வேறு வயதுகளில் தோன்றினாலும், இந்திய ரசிகர்கள் பத்மினியை மட்டும் மனத்துக்குள் பாசப்பதியம் போட்டு வைத்துக்கொண்டார்கள். அவரது பாதச் சதங்கைகளின் ரீங்காரம் இன்னமும் சின்னத்திரைகளில் இந்தியா முழுதும் கேட்கிறது. மற்ற எந்த நடிகைக்கும் கிடைக்காத வரவேற்பு பத்மினிக்கு மாத்திரம் நிலைத்து நின்றது. பத்மினியின் நடிப்பு உயரத்தை அவ்வளவு எளிதில் வேறு யாரும் தொட்டுவிட முடியாது

மேடைகளில் கொண்ட பற்று காரணமாக பாடசாலைகளைத் துரிதமாகத் துறந்தவர் பத்மினி. பால்யத்தில் சமஸ்க்ருதம் கற்றுக்கொண்டவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் நீடித்த அவரது தொடர் பங்களிப்பு உன்னதமானது. நடித்த அத்தனை படங்களிலும் சொந்தக் குரலில் பேசியது அன்றைக்கு அபூர்வம். அவரது சாதனைகளின் பிள்ளையார் சுழி அது!

அதனாலேயே, தமிழில் பத்மினி நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவு. ஆனால், அவர் ஏற்று ஜொலித்த பாத்திரங்கள் தந்த மன நிறைவில், யாரும் அதை உணர்ந்ததே கிடையாது. அவரது படப் பட்டியலை சற்றே எண்ணிப் பார்த்தபோது வியப்பு தோன்றியது. ஆண்டுக்கு நான்கு ஐந்து படங்களில் நடித்திருந்தார். 1970-களில் அவர் இந்தியாவை விட்டு அமெரிக்காவுக்குக் குடும்பம் நடத்தச் சென்றார். அப்போது, ஏறக்குறைய எட்டுப் படங்கள் (1971-ல்) பத்மினி நடிப்பில் ஒரு சேரத் தமிழில் வெளிவந்தன. அவற்றில் அன்னை வேளாங்கன்னி, ஆதிபராசக்தி போன்ற பக்திச் சித்திரங்களும் அடங்கும்

வண்ணத்திரையில் பத்மினியின் ஒட்டுமொத்த சாதனைகளுக்கும் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டியது இருவருக்கு மட்டுமே. முதலாமவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். இரண்டாமவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். கலைவாணர் வற்புறுத்தி பத்மினியை நாயகியாக்கியவர். கணேசனோ, பத்மினியின் பரவசமூட்டும் நடிப்புக்குப் பாதை வகுத்துத் தந்தவர்.

தமிழில் பத்மினி பங்கேற்ற நூற்றுச் சொச்சம் படங்களில், அவர் கணேசனோடு நடித்ததே அதிகம். பணம் படத்தில் தொடங்கி லட்சுமி வந்தாச்சு (சூப்பர் டைட்டில் பொருத்தம் இயல்பாகவே அமைந்துவிட்டது. திரையில் அவர்களது முதலுக்கும் நிறைவுக்கும்) கடந்தும், கடைசி வரையில் நட்போடு நீடித்தது அவர்களின் மிக நீண்ட கலைப்பயணம், தோழமை யாவும்.

85 ஆண்டு காலத் தமிழ் சினிமா சரித்திரத்தில், இட்லியும் சாம்பாருமாக இணை சேர்ந்த ஒப்பற்ற ஜோடி அவர்கள். நிஜ வாழ்வில் (1960-களில்) தாலி கட்டி முடித்ததும், கால் கட்டு போட்டதும், தமிழர்களின் கல்யாணங்களில் சிவாஜி - பத்மினிபோல் சேர்ந்து வாழ திருமண வீட்டார் வாழ்த்தியது காலத்தின் கல்வெட்டு.

திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும் (பப்பி) அக்கா லலிதாவும் நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. பப்பியின் எட்டு வயசுக்கெல்லாம் அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம் சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்துக்கு, சிறப்பு விருந்தினர் ஜோத்பூர் மகாராஜா ஜோராகக் கை தட்டினார்.

அக்கா லலிதாவோடு ஏழு வயது பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில் பங்கேற்றார். அன்றைக்குப் 'பாரிஜாத புஷ்பகரணம்' நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம். தலைமை கலைவாணர்.

'தேவலோகத்தில் எல்லாரும் அழகாக இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்'. என்.எஸ்.கே.யின் பாராட்டில் த்வனித்த கிண்டலுக்கும் கேலிக்கும் எல்லாரும் சிரித்தார்கள். ஆனால் பப்பிக்கோ, வெட்கச் சிறகுகள் முளைத்தன. தம்பூராவால் தன் தாழம்பூ முகத்தை மூடிக்கொண்டார்.

பரம்பரையான கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல லலிதாவும் பத்மினியும். அவர்களுக்குள் அந்த ஆசை விதையை ஆழமாக ஊன்றியவர் மிஸஸ் பிள்ளை. பப்பியின் அம்மாவுக்கு அக்கா. பெரியம்மாவுக்கு, ஆறுமுகங்கள்போல் அத்தனையும் ஆண் பிள்ளைகள். எனவே, தங்கை மகள்களின் மீது தனிப் பிரியம்! பெரியம்மாவுக்கு, மலேசியாவில் நாலாயிரம் ஏக்கரில் ரப்பர் எஸ்டேட் இருந்தது. வசதியான வாழ்க்கை. பணம் லட்சியமில்லை. தங்கை பெற்ற செல்வங்களுக்குத் தங்கத்தில் உருத்திராட்சம் கட்டிப் போட்டார்.
பப்பியின் மாமா, பம்பாயில் கடற்படையில் கமாண்டர். உலகப் புகழ்பெற்ற நாட்டியக் கலைஞர் உதயசங்கரின் பக்கத்து வீட்டுக்காரர். விடுமுறைக்கு வந்திருந்த சகோதரியின் பெண்களை அவரிடம் அறிமுகப்படுத்தினார். சலங்கைகள் பேசின. இளம் தளிர்களின் அங்க அசைவுகளில், ஜதிக்குப் பதில் சொல்லும் நயண பாஷைகளில், நான்கு பாதங்களின் அதிவேகப் பாய்ச்சலில், கலா மேதை கண் கலங்கினார். ஏற்கெனவே திருவிடைமருதூர் மகாலிங்கம் பிள்ளையிடம் தேர்ச்சி பெற்றவர்களை சினிமாவில் ஆட அழைத்தார்.

'ஜெமினி எஸ்.எஸ்.வாசன் ஆதரவில் கல்பனா என்ற பெயரில் முழுநீள நாட்டியச் சித்திரம் தயாரிக்கப்போகிறேன். அதில் நீங்களும் ஆடுகிறீர்களா' என்றார். நிஜத்தில் மெய்சிலிர்த்துப் போனது இருமலர்களுக்கும். கலைச் சமூகத்தின் மேட்டுக்குடிகளிடம் வாசம் பரப்ப வந்திருக்கும் வசந்த அழைப்பைத் தவறவிடலாமா? எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்பா அது!

அரண்மனை அந்தப்புரங்களில் ஆடியவர்கள், சினிமா ஸ்டுடியோவில் தடம் பதித்தார்கள். சந்திரலேகா ஷூட்டிங்கும், கல்பனாவுக்கான நடனப் பயிற்சிகளும் வருடங்களை விழுங்கியபடி நடந்தன. ராஜ வம்சத்து யவன ராணிகளை, வாசனின் ஊழியர்கள் பிரியத்தோடு கவனித்தார்கள். அவர்களில் நல்ல பெர்சனாலிடியும் சுறுசுறுப்பும் உடையவராக, பத்மினியின் கண்களுக்குத் தட்டுப்பட்டவர் ஜெமினி கணேசன்!

கல்பனா ரிலீஸுக்கு பிறகு காலத்தை விரயம் செய்யாமல் 'டான்ஸ் ஆஃப் இந்தியா'வைத் தொடங்கினார்கள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவாபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்றச் சின்னச் சின்ன அயிட்டங்களைத் தாங்களே உருவாக்கி ஆடினர்.

சென்னைக்கு வந்தால், பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில் நின்றவை, லலிதா - பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர் மியூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.

'ஆஹா, எவ்வளவு களையான முகம் இருவருக்கும். அவர்கள் தன் சொந்த மண்ணான காரைக்குடியில் வந்து ஆடமாட்டார்களா. வேதாள உலகத்தில் நடிக்கவைத்தால் வசூல் கூடுதலாக இருக்குமே...' இதய வீணை மீட்டிய இனிய ராகத்துக்கு விடை தேடிப் புறப்பட்டார்.

'நாங்கள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டியம் மட்டுமே ஆடுவோம். படங்களில் நடிக்கமாட்டோம்'. கலை உலகம் தேடிச் சென்று கேட்டபோதெல்லாம் ஏமாற்றத்தோடு திருப்பி அனுப்பினார்கள் ஆடல் அரசிகள் இருவரும்.

சொல் புதிது. பொருள் புதிது என்று புதுமை விரும்பியாக வாழ்ந்தவர் மெய்யப்பன். நினைத்ததை முடிக்கும் திறமைசாலி. பலமுறை தீர யோசித்துத் தொண்டைக்குழிக்குள் ஒத்திகை பார்க்காமல் ஒரு வார்த்தை பேசமாட்டார்.

'உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டாம். ஆடினால் போதும்'. உடனடியாக, நான்கு நடனங்களுக்கு ஒப்பந்தம் செய்துகொண்டு ஊருக்குத் திரும்பினார் செட்டியார்.

வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா - பத்மினி ஆடிய பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம் செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது பதிந்தது. விளைவு, திருவிதாங்கூர் சகோதரிகளின் பங்களிப்பு இல்லாமல் எந்தப் படமும் போணி ஆகாது என்ற நிலை விரைவில் வந்தது. சுமார் நூற்றைம்பது சினிமாக்களில் வெறும் நடனம் மாத்திரம் ஆடினர்

எல்லோரையும் போலவா கிருஷ்ணன். குடும்ப நண்பர் ஆயிற்றே! தேவதைகளின் தாயாரை நேரடியாகவே அணுகினார், நாயகி வாய்ப்போடு.


மணமகள்னு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன். அதில் ஹீரோயின்களா உங்க பொண்ணுங்க நடிக்கணும்'.

சரஸ்வதி அம்மாளுக்குச் சந்தேகம். பப்பிக்குள் அந்தத் திறமையெல்லாம் அடங்குமா? டி.ஆர்.ராஜகுமாரி, பானுமதி, அஞ்சலி, வசுந்தராபோல் நடிப்பதெல்லாம் அவளுக்குச் சாத்தியமா? தகுதி இருக்கட்டும். அதற்கான பக்குவம் இன்னமும் வரவில்லையே. இந்தக் கார்த்திகை போனால்தானே பதினாறும்கூடப் பூர்த்தி ஆகும். (பத்மினி பிறந்த தேதி டிசம்பர் 13).

'சினிமால நடிக்கிறதுன்னா கதையை காட்சியைப் புரிஞ்சிக்கிட்டு செய்யணுமே. அவ சின்னவ. இன்னும் விவரம் போதாது' அன்னை சிந்தித்தார். அவரது தயக்கத்தின் நொடிகளில், கலைவாணர் தாயம் போட்டார்.

'நல்லா நடனம் ஆடறவங்களால நல்லா நடிக்கவும் முடியும். நீங்க சம்மதம் சொல்லுங்க. உங்க பப்பியை ஸ்டார் ஆக்கிக் காட்டறேன்'.

கிருஷ்ணன் சொன்னது அதுவரையில் நிரூபிக்கப்படாத ஒன்று. ஏவிஎம்மின் வாழ்க்கை படம் மூலம் வைஜெயந்திமாலா அறிமுகமாகிய நேரம். குமாரி கமலா, குசலகுமாரி, சாய் சுப்புலட்சுமி போன்றோர் நாட்டியத் தாரகைகளாக ஒளி வீசிய அளவு, நடிப்பில் அரிச்சுவடி வகுப்பைக்கூடத் தாண்டாமல் போனார்கள்.

தண்டவாளத்தின் இரு பக்கங்கள்போல் நடனம், நடிப்பு இரண்டிலும் எடுத்த எடுப்பில் எழிலரசி பத்மினிபோல் புகழின் தொடர்வண்டியை ஓட்டி, சிகரம் தொட்டவர் இன்றுவரை எவரும் கிடையாது.

சரஸ்வதி அம்மாளுக்குக் கண்டிப்பு ஜீவ நாடி. அவரது விழி அசைவுகளுக்குள் பத்மினியின் கால்ஷீட் கடைசிவரையில் கட்டுண்டு நின்றது. ரசத்துக்குப் பெருங்காயம் போடுவதில் சந்தேகம் வந்தாலும், நியூஜெர்ஸியில் இருந்து ட்ரங்க்கால் போட்டு அம்மாவிடம் கேட்பார் திருமதி பத்மினி ராமச்சந்திரன்.

டி.ஏ.மதுரம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டைரக்டர் கே.சுப்ரமணியம் போன்ற கலை மேதைகள் மிக வேண்டியவர்களாக இருந்ததால், சரஸ்வதி அம்மாள் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். கே.சுப்ரமணியம், கதகளி ஆடிக்கொண்டிருந்த சகோதரிகளுக்கு, பரதநாட்டியத்தையும் கட்டாயமாகக் கற்றுத் தரச் சொன்னப் பிதாமகன். 1944-ல் பத்மினியின் குடும்பம் சென்னைக்குக் குடி வந்தபோது, தன் வீட்டில் தங்க இடம் தந்து ஆதரவு அளித்தவர்.

1950-ம் ஆண்டின் மிகச் சிறந்த காவியம், ஏழை படும் பாடு. கே.ராம்நாத் என்ற மாபெரும் திரைச்சிற்பி இயக்கியது. அதில், வி.கோபாலகிருஷ்ணனுடன் கனவுக் காட்சியில் பத்மினி தோன்ற வேண்டும்.

'பப்பி அப்படி நடிக்கமாட்டாள்' என, தயாரிப்பாளரைத் தவிக்க வைத்தார் தாயார். இயக்குநர் என்ன சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில், தங்கை ராகினிக்கு ஆண் வேடம் போடப்பட்டது. இளைய சகோதரியுடன் தன் முதல் காதல் பாடலைப் பாடி நடித்தார் பத்மினி.

மணமகள் தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங்கில், வியர்வைக் குளத்தில் நீராடினார் பத்மினி. தமிழை கொச்சையாகப் பேச மட்டும் தெரிந்த அவரிடம், மு.கருணாநிதியின் வசனத்தைக் கொடுத்தார்கள். அடுத்து, புடைவையை நீட்டி கட்டிக்குங்க என்றார் காஸ்ட்யூமர். சேலை, இடுப்பை விட்டு நழுவிற்று. நாயகியின் தவிப்பைப் புரிந்துகொண்டார் மதுரம். 'போய் ரெடிமேட் ஸாரியை வாங்கிட்டு வாங்க என்றார் தயாரிப்பு நிர்வாகியிடம்.

பத்மினி அணிந்துகொண்டு நடிக்க, தன் சொந்த நகைகளைப் பூரிப்போடு வாரி வழங்கினார் இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி. மற்றொரு சங்கீதவாணி எம்.எல்.வசந்தகுமாரி, பத்மினிக்காகத் திரையில் பாடினார். எல்லாம் இன்பமயம் எனத் தொடங்கி, 65 ஆண்டுகளாக வசீகரிக்கிறது அந்த அற்புத கீதம்.

மணமகளில் பத்மினிக்குக் காதலன் யார் தெரியுமா? பிரபல குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம். பாவம் பத்மினி. சிவாஜி கணேசனின் இணையற்ற ஜோடியாகப் புகழ்பெறும் வரையில், அவருக்கு நாயகனாக வாய்த்தவர்கள் அவரைவிட வயதில் மூத்த டி.எஸ்.பாலையா, கே.ஆர்.ராமசாமி, நாகையா, எஸ்.வி.சுப்பையா எனப் பட்டியல் நீள்கிறது.

மணமகள் மகத்தான வெற்றியைப் பெற்றது. கலைவாணர், பப்பியை விடுவதாக இல்லை. தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தார். அவரது பணம், சிவாஜி கணேசனின் இரண்டாவது படமாக வெளியானது. அதைத் தயாரித்தபோதும் பத்மினியை மறக்கவில்லை.

கணேசனுக்குப் பத்மினியோடு நடிப்பது கனவுபோல் இருந்தது. பராசக்தி எப்போது ரிலீஸாகும் என்று தெரியாத நிலை. பப்பி ஏற்கெனவே புகழ் பெற்ற நட்சத்திரம். இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்பது போன்ற அற்புதமான முகத்தோற்றம்! அழகின் ஆலயத்துடன் நடிக்கும் ஆனந்தத்தில், இளமை கரை புரண்டு ஓடியது புதுமுகத்துக்கு.

அவர்கள் இருவரும் நடித்த முதல் காட்சி, மங்களகரமாக ஆரம்பித்தது. அன்றைய இரவு, தன்னுடைய நிஜ திருமணத்துக்காக சுவாமிமலைக்குச் செல்ல வேண்டியவர் கணேசன். காலையில், மணமகள் பத்மினியின் கழுத்தில் சினிமா தாலியைக் கட்டி அவரை மாமியார் வீட்டுக்கு அழைத்து வருவதாகப் படம் பிடித்தார்கள். பிற்பாடு சந்தித்த வேளைகளில் சிரித்துச் சிரித்து மகிழ, சிவாஜிக்கும் பத்மினிக்கும் கிடைத்த இனிப்பு அவல், அந்தத் தித்திப்பான முதல் சம்பவம்.

பணம் படத்தைத் தொடர்ந்து அன்பு, இல்லற ஜோதி எனத் தொடர்ந்தது சிவாஜி - பத்மினி ஜோடி. இரண்டிலும் ஒரு விசேஷம். படங்களுக்கு நடுவில் ஓரங்க நாடகம். ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவாக கணேசனும், டெஸ்டிமோனாவாக பத்மினியும், அன்பில் வாழ்ந்து காட்டினார்கள்.

கண்ணதாசன் வசனம் எழுதிய மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பான இல்லற ஜோதியில் சலீம் - அனார்கலியாக சிவாஜி - பத்மினியைச் சந்தித்தார்கள் ரசிகர்கள். ஓரங்க நாடகத்துக்கு மட்டும் காதல் வசனம் எழுதியவர் கலைஞர்!

தினம் ஓயாமல் ஒலித்த சலங்கை ஒலிகளுக்கு நடுவே, பத்மினி கேமரா முன்பு தோன்றினார் என்றே சொல்ல வேண்டும். தூக்கம் தொலைத்த இரவுகளில், பத்மினியின் பஞ்சுப் பாதங்கள் ஓய்வுக்காக ஏங்கும். கடிகாரங்கள்கூட சாவி கொடுத்தால்தான் ஓடும். திருவிதாங்கூர் சகோதரிகளுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. ராத்திரி பகல் பார்க்காமல், பதத்துக்கு ஆடினார்கள். ராமாயணம், கண்ணகி, தசாவாதாரம், வள்ளித் திருமணம் என நீண்ட நெடிய நாட்டிய நாடகங்கள். கலைத் தாகமா... புகழ் மோகமா எனப் பட்டிமன்றம் நடத்தலாம். வெகு சீக்கிரத்தில், சென்னை, மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் இருந்த 12 பங்களாக்கள் அவர்களுக்குச் சொந்தமானது.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 14-ம் தேதியை பாரதப் பிரதமருக்காக ஒதுக்கினார்கள். பத்மினி குழுவினரின் 'கீதோபதேசம்', நேருவுக்கு மிகவும் பிடிக்கும். பாதி ஆட்டத்தில் தன்னை மறந்து அபாரம் அபாரம் என்று கைகளைத் தட்டுவார் ஜவஹர். இந்தியர்களின் ரசிப்புத்தன்மைக்கு நேற்றைய உதாரண புருஷர். உலகின் ஒப்பற்ற தலைவரின் முன், அவரது பிறந்த நாள் தோறும் ஆடும் பாக்கியம், இந்தியாவில் எத்தனை நடன மணிகளுக்குக் கிடைக்கும்!
பத்மினி நாயகியாக அறிமுகமானபோது, தென் இந்தியா முழுவதும் தெலுங்கு நடிகைகளின் ஆதிக்கம் அதிகம்.

1. உணர்ச்சி மிகுந்த நடிப்புக்கும், தெளிவாக வசனம் பேசுவதற்கும் கண்ணாம்பா...

2. நளினமாக நடிக்கவும் இளமையாகப் பாடவும் பானுமதி...

3. டி.ஆர்.மகாலிங்கத்துக்கு முத்தம் கொடுத்து நடித்து கவர்ச்சிக் கன்னியாக அரங்கேறிய அஞ்சலிதேவி...

4. அழகான தோற்றத்துக்கும் வசீகரமான குரலுக்கும் எஸ்.வரலட்சுமி...

5. மனத்தை உருக்கும் நடிப்புக்கு ஜி.வரலட்சுமி

ஆகியோர் போதாது என்று புதுமுகங்களாக வந்த சௌகார் ஜானகி, கிரிஜா, மாலதி, சாவித்ரி போன்றோர், ரசிகப் பெருமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டார்கள். ஏறக்குறைய நவரத்தினங்கள் மாதிரி அவர்கள் அனைவரும் தமிழிலும் தெலுங்கிலும் ஒரு சேர ஒளிவீசினார்கள்.

அத்தகைய போட்டி மிகுந்த சந்தர்ப்பத்தில், கேரளத்தில் இருந்து முதன் முதலில் தடம் பதித்து, தமிழர்களின் அபிமான நடிகை ஆனவர் பத்மினி. எழுத்தாளர் லஷ்மியின் காஞ்சனையின் கனவு, ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. அதில், லலிதாவும் பத்மினியும்தான் நடிக்க வேண்டும் எனத் தமிழ்நாட்டின் தாய்க்குலங்கள் அபிப்பிராயம் சொன்னார்கள். தட்டாமல் அதை நிறைவேற்றினார், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடு. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, லஷ்மியின் படைப்பு காஞ்சனா என்ற பெயரில் வெளியாகி வசூலைக் குவித்தது.

திரையில் பத்மினியை ரசிகர்கள் ஏனோ அதிகம் சிரிக்க விடவில்லை. அவர் அழும்போதும் அழகாக இருந்தார். இறைவனின் வரப்பிரசாதம். அதுவே போதும் என திருப்தி அடைந்தார்கள். புகழின் சமுத்திரத்தில் உற்சாக அலைகளில், தமிழ் சினிமா உலகம் பப்பியைக் கொண்டாடியது.

பத்மினியின் பெயரில் தன் புது சினிமா கம்பெனியை ஆரம்பித்தார் பி.ஆர்.பந்தலு. அதில் முதல் தயாரிப்பு காமெடியாக வளர்ந்தது. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்கிற டைட்டிலில் 100 நாள்கள் ஓடியது. ஆரம்ப நாள்களில், கணேசனைவிட பத்மினிக்கு ஊதியம் மிகவும் கூடுதல். உச்ச நட்சத்திரம் அல்லவா.

தூக்குதூக்கியும் கூண்டுக்கிளியும், 22 ஆகஸ்டு 1954-ல் ஒரே நாளில் வெளியாகின. முதலும் கடைசியுமாக சிவாஜியும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளியை, வசூலில் தூர வீசி எறிந்த மகத்தான வெற்றிச்சித்திரம் தூக்குதூக்கி. திருவிதாங்கூர் சகோதரிகள் மூவரும் சேர்ந்து நடித்த முதல் படம். சிவாஜி - பத்மினி ஜோடியின் நகைச்சுவை நடிப்பும், இனிய பாடல்களுமாகச் சிகரம் தொட்டது. கூண்டுக்கிளியின் தோல்விக்கான காரணங்களில் முக்கியமானது, பத்மினி அதில் நாயகி இல்லை என்பது.

1954. சிவாஜிக்கும் பத்மினிக்கும் மறக்க முடியாத மன்மத ஆண்டு. வருடக் கடைசியில் வெளியான எதிர்பாராதது, நிஜத்திலும் அப்படியே. தமிழ் சினிமாவின் முதல் மாறுபட்ட காதல் சித்திரம். ஸ்ரீதர் எழுதியது. அன்றைய கல்லூரிகளில் பாடத்தைவிட அதிகம் ஒப்பிக்கப்பட்டவை ஸ்ரீதரின் வசனங்கள். சுமதியாக பத்மினியும் சுந்தராக கணேசனும் பேசியதில் இருந்து சில வரிகள்

சுந்தர் - சுமதி! உன் பாட்டிலே நான் அப்படியே மெய்மறந்து...

சுமதி - தூங்கிட்டீங்களா!

சுந்தர் - இல்லை சுமதி. நீ பாடியது வெறும் பாட்டல்ல! என் இதய நரம்புகளை ஒவ்வொன்றாக மீட்டி...

சுமதி - அடடே, வர்ணனை பண்ணக்கூடத் தெரியுமா?

சுந்தர் - இதென்ன பிரமாதம்! இன்னும் கேள். அந்தரங்கத்தில் அரங்கம் நிர்மாணித்து... அ... அ...

சுமதி - என்ன அ'னாவிலே வரணும்னு தேடறீங்களா?

சுந்தர் - ஆமா... இரு இரு. ஆழ்கடலின் நீளத்தைச் சுவராக நிறுத்தி, தவழ்ந்து செல்லும் காற்றைத் தரையாக்கி, வண்ணமலர் இதழ்களை வகையாக அதில் பரப்பி, அந்த இனிய மாளிகையில் இதய ராணியான உன்னோடு இரவும் பகலும் இன்பத்தின் எல்லையில் மிதக்கத் துடிக்கிறேன் சுமதி!

சுமதி - ஒன்ஸ்மோர்!

சுந்தர் - நான் என்ன சொன்னேன்னு எனக்கே புரியல்லை. ஒன்ஸ்மோராம்லே ஒன்ஸ்மோர்!


அதன் உச்சகட்டக் காட்சியில், நடிப்பு என்பதை மறந்து கணேசனைக் கன்னத்தில் அறைந்தார் பத்மினி. அந்த நிகழ்வு, பப்பியின் வார்த்தைகளில்..

'சிவாஜியின் காதலியான நான், விதி வசத்தால் அவருக்குச் சித்தி ஆகிறேன். கணேசனுக்கோ பார்வை பறி போய்விடுகிறது. அப்பா நாகையாவின் இளம் மனைவியான என்னிடம், பழைய ஞாபகத்தில் சிவாஜி பழகுவதாக நினைக்கிறேன். மனம் பதறி அதைத் தவிர்க்க அவரை அறைவதாக சீன்.

டைரக்டர் சி.எச்.நாராயணமூர்த்தி என்னிடம், 'ரியலிஸ்டிக்கா இருக்கணும். கணேசனை நீ நிஜமாகவே அடிக்கணும்' என்றார். சிவாஜியும், 'பரவாயில்ல தைரியமா விடு ஒரு அறை. சீன் பிரமாதமா வரணும்' எனத் தூண்டினார். இருவருக்குமே அப்படி ஒரு ரிசல்ட் கிடைக்கும் என்று தெரியாது.

ஒரு ஆவேசத்தில், பளார் பளாரென்று சிவாஜியை அடித்து வெளுத்து வாங்கிவிட்டேன். சிவாஜியின் கன்னமெல்லாம் வீங்கிவிட்டது. உடம்பு சரி இல்லாமல் ரெண்டு மூன்று நாள்கள் செட்டுக்கே வரவில்லை.

'பார்க்க சின்னப் பெண்ணாக இருக்கிறாய். உனக்கு எப்படி இவ்வளவு பலம் இருந்தது...?' என்று திகைப்புடன் கேட்டார்.

'நான் பரத நாட்டியம் ஆடி ஆடி, கை விரல்களுக்கு அதிகம் பயிற்சி கொடுத்திருக்கேன் சார். உடல் பலம் எப்படியோ. கைகளின் வலுவுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை’ என்றேன்.

சிவாஜிக்கு என்னால் நேர்ந்த கதியை நினைத்து வருத்தப்பட்டேன். சிவாஜி அதை சட்டை செய்யவில்லை. 'ரொம்ப இயற்கையாக நடித்தாய். அடியால் வலி இருந்தாலும், உன் நடிப்புத் திறமையை நினைத்து சந்தோஷமாகவே இருந்தது பப்பி' என மிகவும் பெருந்தன்மையோடு சொன்னார்.

எதிர்பாராதது படத்தின் இமாலய வெற்றி, சிவாஜி - பத்மினி ஜோடியைத் திரையில் நிரந்தரமாக்கியது.

CENTRAL GOVERNMENT EMPLOYEES REVISED RATES OF DA ORDER WEF 1.1.2015


Source document: http://finmin.nic.in/the_ministry/dept_expenditure/notification/da/da01012015.pdf

Tough Biology Paper Dampens Med Hopes

COIMBATORE: In what could be bad news for students aspiring to get into medical colleges, it has been revealed that their performance in the zoology part of the Biology paper in the recently held plus two exams is poor.

But the fact remains that Biology paper, this year, was very tough.

“This year, Biology question paper was very tough. There were lots of unexpected questions. They have asked four questions from just one chapter of Zoology, which normally is not the case,” said a Biology teacher who is part of the evaluation process at a centre in the city. I have not seen such a tough question paper in my 35 years of teaching experience, she added.

A Biology teacher, on condition of anonymity said, “In the last four days of evaluating Biology answer sheets, only one student has scored 75 out of 75 in Botany and Zoology - both parts of the Biology subject. Many students who have secured 75 out of 75 in Botany have managed to score just 40-50 marks in the Zoology part. This will definitely affect their dream of joining a medical college.”

For instance, one of the students, who has scored 66 marks in Botany has managed to score just eight marks in Zoology, she explained.

In the last three years, 620 (2012), 682 (2013) and 652 (2014) students had scored centum in Biology.

Admission for medical and dental courses is done based on marks secured in Biology (100 marks), Physics and Chemistry (50 marks each).

As students, who failed to make it to either a medical or a dental college by a whisker, last year, would be applying this year, the current batch of students are at a disadvantage on account of their below-average performance.

The Plus Two public examination was held between March 5 and 31. The examination for the Biology subject was held on March 31, which was attended by around five lakh students.

Anna University Seeks Alumni Aid to Build Auditorium

CHENNAI: Anna University has been granted clearance to construct a `45 crore 5000-seater indoor auditorium-cum-stadium on its campus, by the State Government. Speaking to City Express, university officials said that the huge auditorium was of vital importance as the institute was struggling to accomodate people into its current 800-seater auditorium.

“During last year’s convocation held for PhD scholars, over 1100 scholars were conferred degrees and we couldn’t accomodate all students,” said a university official.

“Year on year, the number of students, faculty, visitors and others who turn out for events held by us touch 3000 regularly. So this auditorium will help accomodate them all,” another official said.

Sources said that the land identified for the building to come up is located near the Mechanical Engineering workshop. “This includes the land transferred to us from the Highways Department a few years back,” an official said.

Registrar Dr S Ganesan, who during the Madras Institute of Technology Alumni meet held on Tuesday, made an appeal to the University alumni to come forward and donate to help with the construction of the auditorium/stadium at the College of Engineering campus.

“While the state government will likely allot funds, it cannot be all of it. The rest will have to be secured by the University. That is the reason we are approaching the alumni,” he said.

University sources said that the move to approach alumni for funding was taken up after the State Government’s Finance Committee mooted the idea. “We will soon be setting up a committee to draw out plans on how best to reach out to our alumni many of whom are in a financial position from where they can donate,” an official said.

The university’s sports board deputy chairman and MIT Alumni Association’s vice-president M Veerabadran said that when the auditorium was not being used for events, it will double up as an indoor stadium which will allow students to utilise for indoor sports activities. “It will be used for a variety of sports including badminton, tennis and even basketball,” he said.

நகைகள் வைக்க பீரோ வாங்கியாச்சு....அட்சய திரிதியை அமர்க்களம்

cinema.vikatan.com

ட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் பயந்ததுபோலவே இதோ அட்சயதிரிதியை வந்தேவிட்டது. தங்க நகைக் கடைகளுக்குள் எக்கச்சக்க விளம்பரப் போட்டி. கொஞ்சம் புதுமை சேர்த்தால் வியாபாரம் களைகட்டும். நாமளும் யோசனை சொல்வோம்ல!

கடந்த ஆண்டுகளில் உங்கள் கடையில் தங்கம் வாங்கியதால் பெற்ற பலன்கள் என்ற வகையில் சிலரை பேசவைப்பது போல ஏற்பாடு பண்ணலாம். அப்போது, 'இங்கே அட்சயதிரிதியை அன்று நாலு பவுனில் ஒரு தங்க செயின் வாங்கினேன். அன்றிலிருந்து அந்த செயின் வளரத் தொடங்கி, தற்போது எட்டு பவுன் தங்க செயினாக மாறி விட்டது' னு சொல்லச் சொல்லலாம்! 

கடந்த ஆண்டு இங்கே தங்கம் வாங்குவதற்கு முன் குடிசையில் வசித்து வந்தேன் என்றும், தங்கம் வாங்கியதுமே செல்வம் பெருகி ஒரே ஆண்டில் பெரிய அபார்ட்மென்ட்டுக்கே சொந்தக்காரனாகி விட்டேன் என்றும் சொல்ல வைக்கலாம். 

அதேபோல, 'நான் அந்தக் கடையில் அட்சயதிரிதியை அன்று ஒரு கிராம் தங்கம் வாங்கிய பிறகுதான் எங்க வீட்டில் மாதாமாதம் ஒரு தங்க செயின் வாங்குற அளவுக்கு வசதி வந்தது. இப்போ எங்க வீட்டில் தங்க செயின்களை மட்டுமே பூட்டி வைப்பதற்காக ஒரு பெரிய பீரோவே வாங்கியாச்சு' என்று அளந்துவிட வைக்கலாம்.

அட்சயதிரிதியை அன்று உங்கள் கடையில் நகை வாங்கி அணிந்தால் காந்தப் படுக்கை மாதிரி, தங்கத்தின் கதிர்வீச்சினால் பல காலமாக தீராத மூட்டு வலி, சர்க்கரை வியாதி உள்ளிட்ட பத்து வகை வியாதிகள் தானாகவே சரியாவதாக டாக்டர் கோட் மாட்டிய ஒருவரை வைத்து விளம்பரப்படுத்துங்கள். மூலிகை பெட்ரோல் மாதிரி மூலிகை தங்க நகைக்கடை என்று ஃபேமஸாகுங்கள்!
அட்சயதிரிதியை அன்று வழங்கும் தங்க நாணயங்களில் சென்டிமென்டாக சாமி படம் பிரின்ட் செய்வ தற்குப் பதிலாக பவர் ஸ்டாரின் உருவத்தை பிரிண்ட் செய்யலாம். அதன் பின்னர், கூட்ட நெருக்கடியைச் சமாளிக்க காவல் துறை உதவி தேவைப்படலாம்!

அட்சயதிரிதியை அன்று உங்கள் கடையில் நகை வாங்கும் குடும்பத்தினரின் குழந்தைக்கோ, பேரக் குழந் தைக்கோ, அந்த நகைக்கடைக் காரர்களே நடத்தும் பள்ளியில் படிப்பதற்கு அட்மிஷன் இலவசமாக வாங்கித் தரப்படும் என்று அறிவிப்பு விடுங்கள். அப்புறம் பாருங்கள்  கூட்டத்தை. 

பக்கத்து வீட்டுக் குழந்தைகளை அழைத்து வருபவர்களுக்கு இந்தச் சலுகை கிடை யாது என்பதை மறக்காமல் தெரிவிக்க வேண்டும்!

ரெண்டு நாள் முன்பாக, ஏதாவதொரு ஊரில் முருங்கை மரம் சாய்ந்து விட்டதென்றும், அப்படி சாய்ந்தால் வீட்டிலிருக்கும் ஆண் மகனுக்கு ஆபத்து என்றும் வதந்தி கிளப்புங்கள். அதற்குப் பரிகாரமாக சகோதரிகளுக்கு தங்க நாணயமோ, நகையோ அட்சய திரிதியை அன்று வாங்கித் தர வேண்டுமென பரிகாரமும் சொல்லுங்கள். 

மறக்காமல் அந்த நகைகளை உங்கள் கடையில் மட்டுமே வாங்க வேண்டுமென அழுத்தந்திருத்தமாகச் சொல்லுங்கள்!

அட்சயதிரிதியை அன்று உங்கள் கடையில் நகை வாங்கினால் வழுக்கைத் தலையில் முடி வளருமென்று அடித்துவிடுங்கள். எதைத் தின்றால் முடி வளருமென்று ஒரு கூட்டமே திரிகிறார்கள். அவர்களை ஒட்டுமொத்தமாக உங்கள் கடைப்பக்கம் திருப்பிவிடலாம்!

- வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்

சி.பி.சி.ஐ.டி. மீது நம்பிக்கை

இப்போதெல்லாம் எந்த கொலையோ, கொள்ளையோ நடந்தாலும், உடனடியாக மக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்பது வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக ஒரு குற்றம் நடந்தால், மாநில போலீசார்தான் விசாரிப்பார்கள். சற்று கொந்தளிப்பை ஏற்படுத்திய குற்றம் என்றால், உடனடியாக மாநில அரசு நாங்கள் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடுகிறோம் என்று கூறுவது வழக்கம். சில நேரங்களில் அதிலும் மக்கள் திருப்தியடையாமல், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கேட்பது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படி உணர்வு ஏற்படுவது நல்லதல்ல.

ஆனால், சி.பி.சி.ஐ.டி.யும் எல்லா வழக்குகளையும் புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத நிலை இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. சமீபத்தில் சமூகஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சி.பி.சி.ஐ.டி.யில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?, எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற கேள்விகளை குறிப்பிட்டு, அதோடு சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும் பல முக்கியமான வழக்குகளைப்பற்றியும் கேட்டிருந்தார். ஆனால், சி.பி.சி.ஐ.டி. சார்பில் ஒரேவரியில், தகவல்களை அளிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி முடித்துவிட்டார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதால் வழக்குகளுக்குள் செல்லாமல் பொதுவான விவரங்களை அளிக்க ஒரு கட்டாயம் இருக்கவேண்டும். இதற்கு அடுத்தநாள், ஐகோர்ட்டு மதுரை கிளையில் வந்த ஒரு வழக்குத்தான், எல்லோரையும் மனக்குறைக்கு ஆளாக்கியுள்ளது.

விருதுநகரில் 2005–ம் ஆண்டு நடந்த ஓய்வுபெற்ற வருமானவரித்துறை ஆணையர் எபநேசர் பால், அவர் மனைவி ஷீலா கொலை வழக்கில் குற்றவாளிகளின் கைரேகை கிடைத்தபிறகும், 9 அதிகாரிகள் புலன்விசாரணை செய்த நிலையிலும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சி.பி.ஐ. விசாரணைக்கோரி வழக்கு போடப்பட்டு இருந்தது. நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி.யின் பணி அளவை கருத்தில்கொண்டால், மேலும் பல அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள் என்று சூப்பிரண்டு அன்பு தெரிவித்த கருத்தும், தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பும் நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டியதாகும்.

சி.பி.சி.ஐ.டி. முதன்மையான புலன்விசாரணை அமைப்பாகும். மக்கள் சி.பி.சி.ஐ.டி. மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். வேகமான புலன்விசாரணை முடிந்து, நீதி கிடைக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால், அவர்களாலேயே குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், தங்கள் குறைகளை தீர்க்க மக்கள் எங்கே போவார்கள்? என்றுதான் எனக்கு தெரியவில்லை. சமீபகாலமாக பல வழக்குகளில், பொதுமக்கள் சி.பி.ஐ. விசாரணைவேண்டும் என்று கேட்கிறார்கள். இந்த உணர்வு இப்படி வளர்வது தமிழக போலீசுக்கு நல்லதல்ல என்று கூறிய நீதிபதி எஸ்.நாகமுத்து, உடனடியாக சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து இந்த வழக்கை மீண்டும் விரைவாக புலன்விசாரணை செய்யவேண்டும், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளார். ஆக, இந்த நிலையில், உடனடியாக சி.பி.சி.ஐ.டி.யின் உள்கட்டமைப்பு வசதிகளும், திறமைவாய்ந்த அதிகாரிகள், போலீசாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு, இந்த படையை வலுப்படுத்தவேண்டும். இதுபோல, ஐகோர்ட்டு நீதிபதி குறைகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு இல்லாமல், தமிழக காவல்துறையும், தமிழக அரசும் இனி எந்த வழக்கும் புலன்விசாரணை செய்யமுடியாமல், குற்றவாளிகளை கண்டுபிடிக்கமுடியாமல் கைவிடப்பட்டது என்ற நிலையை உருவாக்கிவிடாமல், ஒவ்வொரு வழக்கும் எவ்வளவு நாட்களுக்குள் கண்டுபிடிக்கவேண்டும் என்ற காலக்கெடுவை நிர்ணயிக்கவேண்டும். தமிழக போலீசார், ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் என்ற பெயரை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

Friday, April 10, 2015

1960களின் அற்புதங்கள்: சிரிப்புக்குப் பஞ்சமில்லை

’காதலிக்க நேரமில்லை’ படத்தில்

அப்போதெல்லாம் திரைப்படக் கொட்டகைக்கு வரும் ரசிகர்கள், கதாநாயகன், கதாநாயகிக்குப் பிறகு படத்தில் ‘டமாஷ்’ நடிகர் யார் என்றுதான் துழாவுவார்கள். அவர்களை ஏமாற்ற விரும்பாமல் நகைச்சுவை நடிகர் - இடமிருந்தால் - நடிகையும் சுவரொட்டியில் இடம்பெறுவார்கள். டைட்டில் போடும்போது கதாநாயகனுக்கு விசிலும் கைதட்டலும் பறக்கும். அதில் பத்தில் ஒரு பங்கு நகைச்சுவை நடிகருக்கும் உண்டு. கதாநாயகிக்குக்கூட சீட்டியோ கைதட்டலோ அதிகம் இருந்ததில்லை. (அந்தக் காலத்திலேயே அவ்வளவு ஆணாதிக்கம், ஹூம்..)

பாலய்யா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. சகஸ்ரநாமம் போன்ற குணச்சித்திர நடிகர்களுடன் தங்கவேலு, நாகேஷ், சோ, வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, வி,கே. ராமசாமி, சச்சு போன்றவர்கள் இணைந்து சிரிக்கவைத்த வழங்கிய காலம் 1960கள். நாகேஷின் ஆக்கிரமிப்பு இருந்த பத்தாண்டு இது. நகைச்சுவைக் காட்சிகளைத் தனியாகத் தயாரித்து இணைக்கும் என்.எஸ். கிருஷ்ணன் பாணி சற்றே ஓய்வெடுத்துக்கொண்ட காலம் .

நினைத்து நினைத்துச் சிரிக்க

அடுத்த வீட்டுப் பெண் (1960-61) அறுபதுகளின் நகைச்சுவைப் போக்கைத் தொடங்கிவைத்த படம் என்று சொல்லலாம். கதாநாயகன் ராமாராவ், நாயகி அஞ்சலி தேவி. அடுத்த வீட்டுப் பெண்ணான அஞ்சலி தேவியைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் அவருக்கு உதவுகிறார்கள் ‘காரியம் கைகூடும் சங்கம்’ (‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்துக்கு முன்னோடி!) அமைப்பைச் சேர்ந்த தங்கவேலு, கருணாநிதி, பிரண்ட் ராமசாமி உள்ளிட்ட நால்வர் அணி. இந்தப் படத்தில் பாட்டு வாத்தியார் புலவர் பூவரசன்தான் காமெடி வில்லன். இன்றைக்கும் பார்த்தும் நினைத்தும் சிரிக்க முடிகிற படம்.

தெய்வப் பிறவி திரைப்படத்தின் தங்கவேலு நகைச்சுவை தனி இசைத்தட்டாக வெளிவந்து சக்கைபோடு போட்டது. நாள் முழுக்க நண்பர்களுடன் சீட்டாடுவது, மனைவி பக்கத்து வீட்டுப் பெண்களுடன் ஊர் வம்பு பேசுவது என்று குடும்பம் சீரழிய அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் அம்மா, அப்பா விளையாட்டாகவே அதை நடிப்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னார் தங்கவேலு. ஆபாச வசனங்களைப் பேசாத அற்புதக் கலைஞர் தங்கவேலு. அவருடைய குரலின் ஏற்ற இறக்கமே காட்சிக்கும் வசனத்துக்கும் தனி பலத்தைத் தந்துவிடும்.

முழுமையான நகைச்சுவை

காதலிக்க நேரமில்லை. எவ்வளவுதான் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சி ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்துவிட முடியுமா என்று சவால்விடும் நகைச்சுவைக் காவியம். கதை எங்க கிடைக்கும்? அட ஹாலிவுட்டிலோ பாலிவுட்டிலோகூடக் கிடைத்துவிடும். பாலய்யா, நாகேஷுக்கு எங்க சார் போவீங்க? தன்னால் உதாசீனப்படுத்தப்பட்ட அசோகன் என்னும் இளைஞன் பணக்கார வீட்டுப் பிள்ளை என்று தெரிந்ததும், ‘அசோகர் உங்க மகரா?’ என்று புதிய சொல்லாட்சியையே படைத்துவிட்டாரே பாலய்யா!

‘டேய் செல்லப்பா, உன் படத்துடைய கதையைக் கொஞ்சம் சொல்லு பாப்பம்’ என்று வம்பில் போய் மாட்டிக்கொள்ளும்போதும் சரி, பீதியில் ஆழ்ந்து கதை போதும் என்று சொல்லி நிறுத்திய பிறகு பணமும் கிடையாது ஒண்ணும் கிடையாது என்று இயல்பு நிலைக்கு வரும்போதும் சரி, எங்கேயோ கொண்டுபோய்விடுகிறாரே?

‘என் கதை என்னோட மடியட்டும்’ என்று செல்லப்பா (நாகேஷ்) சொன்னபோது சிரித்துத் தொலைத்தோமே, அதனால்தான் இன்னொரு கா.நே. நமக்குக் கிடைக்கவில்லை.

நாயக நடிகர்களின் நகைச்சுவை

நாயகனே நகைச்சுவையிலும் வெளுத்துக் கட்டுவது அப்போது தோன்றிய பழக்கம்தான். சிவாஜி கணேசன் அப்படிப் பல படங்களில் நடித்திருக்கிறார். பலே பாண்டியா அதில் ஒன்று. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்பும் வில்லனின் கண்ணில் படுகிறான் அப்பாவி பாண்டியன்.

30 நாள் மட்டுமே வாழ்ந்துவிட்டுச் செத்துப்போவதாக வாக்குறுதி கொடுக்கும் அப்பாவி, பணக்காரக் காதலி கிடைத்ததும் வாக்குறுதி தவறுகிறான். வில்லனைப் போலவே தோற்றம் கொண்டவர்தான் காதலியின் தந்தை என்று தெரியாமல் அவர் வீட்டுக்குப் போய், ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ என்று பாடத் தொடங்கி முத்தாய்ப்பாக முகத்தைப் பார்த்து ஓடும் காட்சியை இருக்கையில் உட்கார்ந்து பார்க்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்?

எங்கும் பரவிய நகைச்சுவை வாசம்

முழு நகைச்சுவைப் படங்கள் ஒருபுறம் வந்தவண்ணம் இருக்க, வேறு வகையான படங்களிலும் அங்கத ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறந்தது. 1964-ல் வெளியான நவராத்திரி, சிவாஜியின் நவரச நடிப்பாற்றலையும் சாவித்திரி ஒரு நடிகையர் திலகம் என்பதையும் வெளிப்படுத்தியது.

திருவிளையாடல் படத்தில் தருமிக்குப் பொற்கிழி கொடுக்கவும், ஹேமநாத பாகவதரை மதுரையை விட்டுக் கிளப்பவும் சிவன் செய்த திரு விளையாடல்களை நகைச்சுவை கலந்து சொன்னார் ஏ.பி. நாகராஜன். தருமி – சிவன் உரையாடல் அற்புதமான தமிழ் விருந்து. சுறா மீனை சிவன் வதம் செய்யும் காட்சியும் அதற்குப் பிறகு கடற்கரை மணலில் அவர் டஜிங் டஜிங் என்று நடப்பதும் - எதில்தான் நகைச்சுவை இல்லை போங்கள்!

தேன் நிலவு - ஸ்ரீதரின் அற்புதமான கதை, இயக்கத்தில் உருவான மெலிதான நகைச்சுவைப் படம். நாகேஷும் சோவும் சேர்ந்து நகைச்சுவையை மழையாகப் பெய்த படம்.

ஊட்டிவரை உறவு திரைப்படம் காதல், நகைச்சுவை, குடும்பக்கதை என்று எல்லாமும் சரிவிகித கலவையில் கலந்த படம்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தை நகைச்சுவைப் படமாக வகைப்படுத்த முடியாது. ஆனால் தரமான கைச்சுவைக்கு உதாரணமான படம். பாலய்யா, சாரங்கபாணி, நாகேஷ், மனோரமா, ராமாராவ், தங்கவேலு, மனோரமா எல்லோரும் ஒரு படத்தில் இருந்தால் வேறு எப்படி இருக்கும்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் திகிலான நகைச்சுவைப்படம். சோ ஜெய்சங்கருடன் சேர்ந்து கலக்கியிருப்பார்.

அப்படியே விட்டுவிடுங்கள்

இது ரீமேக் யுகம். பல படங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் திரும்ப எடுக்கிறார்கள். குறைந்த பட்சம் தலைப்புகளையாவது தூக்கிவிடுகிறார்கள். ஆனால் அறுபதுகளின் மாசற்ற நகைச்சுவையை இப்போது மீண்டும் திரையில் கட்டமைக்க முடியாது. காரணம், சமூகக் கட்டமைப்பு அடியோடு மாறிவிட்டது.

பாட்டிலைத் திறக்காமல், வாட்ஸ்அப்பில் கடலை போடாமல், யாரையும் கேவலமாகத் திட்டாமல் சிரிக்கவைக்க முடியாது என்று ஆகிவிட்ட காலம் இது. எனவே, அறுபதுகளின் நகைச்சுவைச் சித்திரங்களின் அசல் வடிவங்களையே பார்ப்பதுதான் நல்லது. இதன் மூலம் அந்தக் காலம் எப்படியிருந்தது என்றும் புரிந்துகொள்ளலாம்.

புதிய திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களுக்கு அன்பு வேண்டுகோள்: துளியும் முகம் சுளிக்காமல் இன்றும் சிரிக்கவைக்கும் இந்தப் படங்களைப் போல் படம் எடுக்கச் சொந்தமாக முயற்சிசெய்து பாருங்கள். இந்தப் படங்களை அப்படியே விட்டுவிடுங்கள். அதுவே தமிழ்த் திரையுலகுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.

சித்திரை மலரில் (2015) வெளியாகியிருக்கும் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம்

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...