Sunday, May 31, 2015

இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரிக்கு சிக்கல் இல்லை:காலி பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம்

மருத்துவ கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நடத்த வசதியாக, கல்லுாரிகளில் காலியாக உள்ள, பேராசிரியர் பணியிடங்களை நிரப்புகிறது.தமிழகத்தில், சென்னை, கோவை உட்பட, நாடு முழுவதும், 13 இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. நிதிச்சுமையால் திணறிய, இ.எஸ்.ஐ., நிர்வாகம், மாணவர் சேர்க்கை நிறுத்தி விட்டு, கல்லுாரிகளை மூடும் முடிவுக்கு வந்தது.


மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்லுாரிகளை மூடும் முடிவை கைவிட்டதோடு, 'நடப்பு ஆண்டில் வழக்கம் போல் மாணவர் சேர்க்கப்படுவர்' என, அறிவித்தது. ஆனால், 'தொழிலாளர்களின் மருத்துவ சேவைக்காக துவக்கப்பட்ட, இ.எஸ்.ஐ., நிர்வாகம், சேவையில் கவனம் செலுத்த வேண்டும்; கல்லுாரிகளை செயல்படுத்தி, மீண்டும் ஒரு தவறை செய்யக்கூடாது' என, இ.எஸ்.ஐ., சந்தாதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

'மாணவர் சேர்க்கை நடந்தாலும், நீதிமன்ற தீர்ப்பு உட்பட்டது' என, தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதனால், மாணவர்களிடம், குழப்பம் ஏற்பட்டது.இந்நிலையில், 'எந்த சிக்கலும் இன்றி, மாணவர் சேர்க்கை நடக்கும்' என, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் அறிவித்துள்ளது.

கல்லுாரிகள் மூடும் முடிவால், காலியாக இருந்த பேராசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருந்த நிர்வாகம், தற்போது, அவற்றை நிரப்பும் முயற்சியில் இறங்கி உள்ளது.சென்னை, கே.கே.நகர் - 25 பேர்; மேற்கு வங்கம் - 30 பேர்; கர்நாடகா, குல்பர்கா - 27; கர்நாடகா, பெங்களூரு - 13 பேர் என, நான்கு மருத்துவக்கல்லுாரிகளிலும், பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர் என, மொத்தம், 95 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.'இந்த இடங்களில் பணியாற்ற, ஜூன், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, இ.எஸ்.ஐ., இயக்குனரகம் அறிவித்துள்ளது.- நமது நிருபர் -

'புளூடூத்' வசதியுடைய குடை:கேரளாவில் விற்பனை ஜோர்

கோட்டயம்:மொபைல் போனில் பேசுவதற்கும், பாடல்கள் கேட்பதற்கும் வசதியான நவீன குடைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனையில் சக்கை போடு போடுகின்றன.

கேரளாவில், பருவமழை காலங்களில், பெரும்பாலான நாட்கள், பலத்த மழை பெய்யும். அதனால், இங்குள்ள வீடுகளில், ஐந்து உறுப்பினர்கள் இருந்தால், கண்டிப்பாக ஐந்து குடைகள் இருக்கும். கேரளாவுக்கும், டீக்கடைக்கும் உள்ள தொடர்பு போல், குடைகளுக்கும் அதுபோன்ற தொடர்பு உண்டு.

கேரளாவில் வசிப்பவர்களை பற்றி கார்டூன் போட்டால், கண்டிப்பாக அந்த கார்டூனில் இருப்பவரின் ஒரு கையில் மலையாள நாளிதழும், மற்றொரு கையில் குடையும் இருக்கும். அந்த அளவுக்கு கேரள மக்களுடன், குடை கலாசாரம் பின்னிபிணைந்துள்ளது. இதை பயன்படுத்தி, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான குடைகள் விற்பனையாகின்றன. 'மழ மழ, குட குட; மழை வந்தால் குட குட' என்ற விளம்பர பாடல் கேரளாவில் மிகவும் பிரபலம். இந்தாண்டு குடை விற்பனையில், நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள குடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த குடைகள், 'புளூடூத்' அல்லது 'வை - பை' வசதியுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

மழை பெய்யும்போது, இந்த குடையுடன் சென்றால், பாக்கெட்டில் இருக்கும் மொபைல் போனில் உள்ள, 'புளூடூத்' தொழில்நுட்பத்தை குடையில் உள்ள, 'புளூடூத்' உடன் இணைப்பை ஏற்படுத்தலாம். இதன்மூலம், பாக்கெட்டில் இருந்து மொபைல் போனை வெளியில் எடுக்காமலேயே, மற்றவர்களை போன் மூலம் தொடர்பு கொள்ளவும், அதில் உள்ள இசையை கேட்டு ரசிக்கவும் முடியும். இந்த நவீன குடைகள் விற்பனை, கேரளாவில் தற்போது சக்கை போடு போடுகிறது.

Saving grace: 18 grace marks saved 1 lakh Gujarat HSC students

AHMEDABAD: On Saturday, a record low of 54.98% students passed the HSC (general) stream exams held by Gujarat Secondary and Higher Secondary Education Board. This is the lowest pass percentage since 1991.

Sources say the result was a dismal 37% and it took the unprecedented decision of allowing up to 18 grace marks to bring the result close to 55% — substantially down from 63.3% last year. Incidentally, last year's results were low compared to previous years.

A senior board official said if not for the high grace marks, a lakh-odd more students would have failed the exam. "Board rules allow only five grace marks. Special sanction was sought from the education department to give up to 18 marks. If not for this, nearly one lakh students would have failed, creating a survival issue for 700-odd colleges," the official said.

Board officials may now seek approval for giving up to 20 grace marks for the soon-to-be-announced SSC results. Sources said CCTV and tablet surveillance in exam centres and strict screening may have led to a poor pass percentage in SSC as well.

GSHSEB chairman A J Shah could not be contacted for comment. Education minister Bhupendrasinh Chudasama said, "Low result can be mainly attributed to strict electronic surveillance that curbed copying."

Ex-Singapore foreign minister to be Nalanda University chancellor

NEW DELHI: Former foreign minister of Singapore George Yeo will replace Amartya Sen as the next chancellor of Nalanda University. Sen quit in a huff earlier this year, blaming it on the delay in approval to his second stint.

"George Yeo, former FM of Singapore is to be the new Chancellor of Nalanda University," external affairs ministry spokesperson Vikas Swarup said.

Yeo's appointment is significant in several ways — it maintains Nalada's importance as an international university. Yeo has been the driving force of the whole project since its inception and it's a fitting recognition of his contribution.

More important though, the Indian government wants a pair of hands at the helm of the university that can bring efficiency to the project. The MEA has been frustrated at the delay in the project and in 2013 appointed an official to maintain oversight of the project.

READ ALSO: Modi govt does not want me to continue as Nalanda University chancellor, Amartya Sen says

Amartya Sen: I believe the President wasn't given permission to clear my second term

The university is likely to appoint a governing board as well, something it has not done for years, in violation of the Nalanda Act. This might even involve a change in the academic leadership of the university, including the vice chancellor.

Yeo (60), who was conferred Padma Bhushan in 2012, is currently serving as a member of the governing board of the prestigious university.

Sen had withdrawn his candidature as chancellor, saying the Modi government does not want him to continue, a contention which was rejected by the Centre.

Mooted in 2005, the university is being built near the ruins of the historic academic place in Bihar with a number of member-countries of East Asia Summit grouping involved in the project. The Nalanda University Act was enacted in 2010.

Saturday, May 30, 2015

சாவித்ரி- 4. பாசமலர்



‘கை வீசம்மா கை வீசு’ என்று பிஞ்சுகளிடம் கொஞ்சத் தொடங்கினால், நம் ஒவ்வொருவரின் மனத்திலும் ’பாசமலர்’ பூத்துக் குலுங்கி மணம் வீசும். எத்தனை யுகங்கள் கடந்தாலும் திரை இசைத் தாலாட்டுப் பாடல்களில் ‘மலர்ந்தும் மலராத’ தேன் மழையாகப் பொழியும். ’பாசமலர்’ கண்ணதாசன் சூட்டிய காவியப் பெயர்!

பாசமலர் க்ளைமாக்ஸ். கருப்பு வண்ணச் சேலையில் கவலை ரேகைகள் வழியும் சோகம் விழுங்கிய முகத்தில், அரிதாரப் பூச்சு அதிகமின்றி சாவித்ரி செட்டுக்குள் வந்தார். ஏதோ இழவு வீட்டுக்குள் நுழைவது மாதிரியான தோற்றம். குறும்பு கொப்பளிக்க உலா வரும் ஜெமினியும் சும்மா எட்டிப் பார்த்து விட்டு ஓடிப் போனார்.

இறப்பதற்குத் தயாராக சிவாஜி தனது கடைசி வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார். நடிப்புக்காகப் பெற்ற ஆசிய விருதைக் கடந்து, உலகக் கலைஞனாகும் கனவுகள் அவருக்குள் கனல் விரித்து எரிமலையை ஏற்படுத்தின. வடலூரில் வள்ளலார் தீ மூட்டிய அனையாத அடுப்பு எரிவது போல், எப்போதும் அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது அவர் உள்ளத்தில்.

சிற்றுண்டி, மதிய உணவு இரண்டையும் தவிர்த்து அன்றைக்குப் பட்டினி. வழக்கமான நட்சத்திர தடபுடல், ஆமாம் சாமிகள், ஜால்ரா கூட்டம் அருகில் வர அனுமதியில்லை. சிவாஜி பிலிம்ஸ் காசோலையில் கையெழுத்து என அலுவலகப் பணிக்கும் கூட 144. வான் மழை போல் சகோதர வேதனையைக் கொட்டித் தீர்க்க வேண்டும் என்கிற முடிவோடு சிவாஜியும் சாவித்ரியும் கிளிசரினை மறுத்தார்கள். ஒப்பற்ற நடிப்பின் பல்கலைக்கழகங்களுக்கு ஓத்திகையா?

ரெடி டேக் ஆக்ஷன். விட்டல்ராவின் காமிரா ஓடியது. அண்ணன் பார்வை இழந்து நிற்கும் பரிதாபத்தைக் கண்டு தங்கை கதறுகிறாள்.

‘நீங்கள் மவுனமா இருந்தாலும் ஆயிரமாயிரம் அன்புக் கதைகளை எனக்குச் சொல்லுமே- அந்தக் கண்கள் எங்கே அண்ணா? வைரம் போல் ஜொலிச்சி வைரிகளையும் வசீகரிக்கக் கூடிய உங்க அழகான கண்கள் எங்கே அண்ணா?’

உணர்ச்சி வசப்பட்ட உச்சக்கட்ட நடிப்பில் சாவித்ரிக்கு வைரி என்கிற அவ்வளவு அறிமுகமில்லாத வார்த்தை ஞாபகமில்லை. விரோதி என மாற்றிச் சொல்லி விட்டார்.

’வைரி, விரோதி இரண்டுக்கும் ஒரே அர்த்தம்தான். பின்னே என்னா அம்மாடி. பீம்பாய் பர்பாமன்ஸ் ஓகேயா?’ உயிர் உருகும் நேரத்திலும் ராஜசேகரன் மெல்லிய வறட்சியான குரலில் ராதாவுக்காகப் பரிந்து பேசினார்.

சாவித்ரி ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லே இந்தத் தடவை சரியா சொல்றேன். அது நல்ல டயலாக். ஒன்மோர் டேக் ப்ளீஸ்’ எனக் கெஞ்சும் குரலில் வற்புறுத்த,

வைரி மிகச் சரியாக ஒலித்தது. ஆனால் முந்தைய டேக்கில் பொங்கிய அணை மீறிய உணர்ச்சி வெள்ளம் காணாமல் போய் விட்டது. ‘முதல் ஷாட்டையே வெச்சுக்கலாம் அம்மாடி’ என ஆறுதலாக சிவாஜி சொல்ல, சாவித்ரி கூனிக் குறுகிப்போய், தன் இரு கைகளாலும் முகம் பொத்தி நிஜமாகவே அழுதார்.

‘திரைப்பட வசனகர்த்தாவாக- எனது நீண்ட நெடிய அனுபவத்தில் - எத்தனையோ படங்களுக்கு எழுதி, எண்ணற்ற நடிகர் நடிகைகள் நடித்ததில், வசனத்தில் ஒரே ஒரு வார்த்தை தன்னை அறியாமல் மாறிப் போனதற்காக வருந்திக் கண்ணீர் விட்டு அழுத ஒரே ஒரு நடிகை சாவித்ரி மட்டுமே.’- ஆரூர்தாஸ்.

32 வாரங்களைக் கடந்து ஓடியது பாசமலர். 1961 கோடையில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் 2015ல் இன்னமும் மங்காமல் சின்னத் திரைகளிலும் வியாபித்து நிற்கிறது. வருடம் தவறாமல் அனைத்து சேனல்களிலும் நூறு தடவைகளாவது சலிக்காமல் வாசம் பரப்புகிறது!
அந்த நாளும் வந்தது...

பாசமலர் கடைசி நாள் படப்பிடிப்பு தயாராயிற்று. அதில் நான் இறந்து போவதாகவும் என் மீது மலர்களைத் தூவுவது போலவும் காட்சியை எடுக்க வேண்டும். செட்டில் அன்று யாருமே பேசவில்லை. ஊசி போட்டால் சத்தம் கேட்கும். அவ்வளவு அமைதி! லைட் பாய்ஸ் கூட வாய் திறக்காமல் நடந்து கொண்டனர். காபி தரும் வரும் பையன்கள் கண்ணைத் துடைத்துக் கொண்டே வந்தார்கள். மேலேயிருந்து என் மீது மலர்களைப் போடுபவர்கள் அழுதவாறே தூவினார்கள்!

அதனுடைய சோக முடிவு என்னை உலுக்கி விட்டது. அது ரீலீஸ் ஆன போது நான் சென்னையில் இல்லை. காஷ்மீரில் இருந்தேன். தேனிலவு ஷூட்டிங்கிற்காக ஜெமினியுடன் நானும் சென்றேன். மே 11ஆம் தேதியே நாங்கள் போய் விட்டோம். பாசமலர் அபாரமான வெற்றி அடைந்திருப்பதாக எனக்குத் தயாரிப்பாளர் தந்தி கொடுத்திருந்தார்.

மலர்கள் மணம் வீசிய பிறகு வாடி மறைந்து விடுவது வாடிக்கை. பாசமலர் அப்படியல்ல. நாள் ஆக ஆக அதற்கு வாசம் அதிகம். உங்கள் உள்ளங்களில் நான் என்றென்றும் ஒரு பாசமலராகவே இருந்து மனம் பரப்பிக் கொண்டிருக்க வேண்டும். அதுவே என் ஆசை.’- சாவித்ரி.

‘அண்ணனுக்கு ஏற்ற தங்கை. சிவாஜிக்கு ஏற்ற சாவித்ரி.’ ‘’ராதா’ பாகத்தைச் சொந்த பாணியிலேயே முழுக்க முழுக்கக் கையாண்டிருப்பது திருமதி கணேஷிற்கு ஒரு சிறப்பு.

‘உங்கள் காலில் என் அண்ணா விழுந்து மன்னிப்பு கேட்டால்தான் என்னை ஏற்றுக் கொள்வீர்கள் என்றால், உங்கள் காதல் எனக்குத் தேவை இல்லை...’ என்று உதறும் இடத்தில், தியாகத்தின் கம்பீரமும் தோல்வியின் சோகமும் நம் உள்ளத்தை அள்ளுவதில் வியப்பென்ன...!’ என சாவித்ரியின் நடிப்பைப் புகழ்ந்து தள்ளியது குமுதம்.

பூனைக்கு நாமே மணி கட்டுவோமே...!

vikatan.com



சென்னைப் பெருநகர வீதிகளில் அலுவல் நிமித்தம் சுற்றித்திரிந்தபோது, என் கண்ணில் கண்ட காட்சி, அதன் அசுர வளர்ச்சியோ, விண்ணை முட்டும் கட்டிடங்களோ, வீதிகளில் உலா வரும் ஆடம்பர கார்களோ, நவநாகரீக மங்கைகளோ, கொட்டி இரைத்த செல்வச் செழிப்புகளோ, ஓடி ஓடி உழைக்கும் மனிதர்களோ அல்ல!
என்னை சொல்லொண்ணா வருத்தத்தில் ஆழ்த்தியது - அங்கு குவிந்து இருக்கும் குப்பைகளும், படிந்து இருக்கும் தூசிகளும், அசுத்தமான ரோடுகளும், பார்க்கக்கூட சகிக்காத வியாபாரத்தலங்களும், அதையெல்லாம்விட, இதற்கும் நமக்கும் துளிகூட சம்பந்தமே இல்லையென்று மனித உருவில் நடமாடும் நம் ஜனங்களும்!

இது சென்னைக்கு மட்டுமானது அன்று. தமிழகத்தின் எல்லா நகரங்களுக்கும் பொருந்தும். எங்கே போகிறது இந்த சமூகம்? தனிமனித கட்டுப்பாடோ, சமுதாய சிந்தனைகளோ, பொறுப்போ, சமூக அக்கறையோ, சுகாதாரம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வோ அற்று, நாம் யாரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எனக்குத் தெரிந்து, வாசல் கூட்டி, கோலம் போட்டு, நமது தெருக்களை சுத்தமாக வைத்து இருந்தோம் ஒரு காலத்தில். நம் வாசல் மீதும், நம் வீதிகளின் மீதுமே அக்கறை இல்லாமல் போய்விட்டதா? வீட்டைப் பெருக்கி ரோட்டில் போடும் கலாச்சாரத்திற்கு எப்பொழுது மாறினோம்? ரோட்டில் மலம் கழிக்க நமக்கு யார் அதிகாரம் கொடுத்தது? அண்டை மாநிலமான கேரளத்தில்கூட இந்த அசிங்கம் அரங்கேறுவது இல்லை. நமக்கு சாலையை அசுத்தம் செய்ய உரிமை இருக்கும்போது, அதே சாலையை பராமரிக்கும் உரிமையும், கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

நம்மைவிட வளர்ச்சியில் பின்தங்கிய ஸ்ரீலங்கா சென்றிருந்தபோது, அவர்களின் தூய்மை என் கண்ணை உறுத்தியது. பொறாமையில் என் நெஞ்சம் குமுறியது. இரக்கமே இல்லாத, அரக்க குணம் பெற்றவன் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்தபோதும், அவன் தன் நாட்டைத் தூய்மையாக வைத்து இருந்தான். ஒருவர் சாலையைக் கடக்க வேண்டும் என்று விரும்பினால், அத்தனை வாகனங்களும் பொறுமையாக நின்று அவர் கடக்கக் காத்திருக்கிறது. என்னே ஒரு சமுதாய அக்கறை?
சிங்கப்பூரில் தூய்மை மட்டுமல்லாது, சின்ன மண் தரைகள்கூட அழகிய பூங்காவனங்களாக மிளிர்கிறது. ஒரு காலத்தில் கடத்தலுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்ட சிங்கப்பூர், ஒரு மாமனிதரின் முயற்சியால் எப்படி மாறிப்போனது. நம் வீட்டு மொட்டை மாடியில் குப்பை இருந்தால்கூட, வீட்டுக்கு வந்து அபராதம் வசூலித்துவிடுவார்கள். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே!

'அரசாங்கம் செய்யும்' என்ற நம்பிக்கையை தயவுசெய்து விட்டுவிடுங்கள். அவர்களில் பலர், அவர்களின் வாரிசுகளுக்கு சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். சில நல்ல (அரசியல்வாதிகளையும்) உள்ளங்களையும் அவர்கள் கட்டுபடுத்தி, நடமாடக்கூட விடமாட்டார்கள்.

வழக்கமான ஒரு கேள்வி எழும் உங்கள் மனதில்... 'நீ என்ன செய்தாய்?' என்று. நான் கோவையில் ரேஸ் கோர்ஸ் பகுதியை அடுத்துள்ள பி.என்.ஆர். லே-அவுட்டில் சில வருடங்கள் இருந்தேன், முதல் இரண்டு வருடமும் நானும் அரசாங்கத்தைக் குறைக் கூறிக்கொண்டு, என் வாசலிலே குப்பைக் கொட்டிக்கொண்டு மிக மோசமான இந்திய பிரஜையாகவே இருந்தேன்.

ஒரு நாள் என் மூளையில் மின்னல் ஒன்று தாக்கியது, என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது. ஏதாவது செய்ய வேண்டும் என்று மனது துடித்தது. பிறகென்ன...? எல்லோர் வீட்டு கதவுகளையும் தட்டினேன். அறிமுகம் இல்லாத பலர் வீடுகளும் இதில் அடக்கம். ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். என் வார்த்தைகளில் ஏதோவொன்று அவர்களுக்கு நம்பிக்கை தர, என்னுடன் துணையாகப் போராட சம்மதித்தனர். பிறகென்ன... அடுத்தடுத்து அரங்கேறியது அதிரடி நடவடிக்கைகள்.

முதலில் சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் அவர்களை சந்தித்து எங்கள் குறைகளைத் தெரிவித்தோம். 'முதல் ஒரு முறை நீங்கள் சுத்தம் செய்து தாருங்கள். பிறகு நாங்கள் அதைப் பேணிக் கொள்கிறோம்' என்ற எங்கள் உறுதிமொழியை நம்பி அவரும் நடவடிக்கைகள் எடுத்தார்.

மலைப்போல் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டது. பல எதிர்ப்புகளுக்கிடையே பல அரசியல் ஆதரவு பெற்றவரின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இருபுறமும் மரங்கள் நடப்பட்டது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று தரம் பிரிக்கப்பட்டது. அதிகாரிகளின் பேருதவியாலும், மக்களின் தளராத முயற்சியாலும் அப்பகுதி மிக அழகிய வசிப்பிடமாகியது.

அப்பகுதியில் இருந்து நான் வெளியேற வேண்டும் என்ற சுழல் வந்தபோது, கண்ணில் நீர்த்திவலைகளோடு வழி அனுப்பி வைக்கப்பட்டேன். அதே பணிகளை இன்று நான் இருக்கும் பகுதியிலும் தொடர்கிறேன் - பல நல்ல நெஞ்சங்களின் பேராதரவுடன். எங்கள் காலனியில் ஏதோ ஒரு மூலையில் யாராவது மரத்தில் இருக்கும் ஒரு கிளையை வெட்ட முற்பட்டால், உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தப்படும், உடனே அதிரடி நடவடிக்கை எடுத்து, விஷமிகள் விரட்டி அடிக்கப்படுவர். ஆகவே, நாம் என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்போம்.

ஈரோடு கதிர் அவர்களின் காவிரிப் பற்றிய பதிவொன்றில், நமக்கு கிடைக்கும் மழைக்கு முக்கிய காரணிகளாக கேரள மற்றும் கர்நாடகம் வனப்பகுதியைச் சுட்டி காட்டி இருந்தார். இதை படித்த எனக்கு,  வெட்கி தலை குனியத்தான் தோன்றியது. எங்கே போனது நம் காடுகள், சாலை ஓர மரங்கள்..? மொத்தத்தில் இரக்கமற்று துருப்பிடித்துவிட்டதா தமிழர்களின் நெஞ்சங்கள்? 

எனதருமை தமிழ் மக்களே! நம் நாட்டை சுத்தப்படுத்த நாம் களம் இறங்குவோம். நமது வருமானத்தில் இரண்டு சதவிகிதமாவது நமது சுத்தம் சுகாதாரத்திற்காக செலவிடுவோம். முதலில் நம் வீட்டு முன்பகுதியை மட்டும் சுத்தம் செய்வோம். பிறகு அந்த வீதியில் மற்றவர்களை செய்ய வைப்போம். வாய்ப்பு இருந்தால் கிடைக்கும் இடத்தில் எல்லாம் மரங்களை நட்டுச்செல்வோம். நம் குழந்தைகளுக்கு சுகாதாரத்தின் முக்கியம் உணர்த்துவோம். மாற்றங்களை பிஞ்சு நெஞ்சங்களில் விதைப்போம். வரும் சந்ததியினர் வாழட்டும். நாடு சுடுகாடாய் மாறுவதை தவிர்ப்போம்! மூச்சு விடுவதற்காவது சிறிது ஆக்சிஜனை விட்டுச் செல்வோம் இவ்வழி மண்டலத்துக்கு.

பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதுதான் நமக்குப் பிரச்னை. நாமே மணி கட்டுவோம். நம் தெருவுக்கு நாமே ஹீரோவாக இருப்போமே!

அரசாங்கத்துக்கு ஒர் வேண்டுகோள்! அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்திக் கொடுங்கள். அதற்காக நீங்கள் என்ன கசப்பு மருந்து கொடுத்தாலும் இரு கரம் நீட்டி பெற்றுக் கொள்கிறோம். சட்டங்களை இருக்குங்கள். தவறுவோர்க்கு தண்டனைகளைக் கடுமையாக்குங்கள். மூச்சுத்திணறும் எங்களை காப்பாற்றுங்கள். தனி மனித சுகாதாரத்தைக்கூட பேண முடியாத அந்த ஜனநாயகம் நமக்குத் தேவைதானா? முடிவெடுங்கள் மக்களே! நம் சந்ததி வாழ முடிவெடுங்கள்.

மாற்றம் நம் மனதில் தோன்ற வேண்டும்... அரசாங்கத்திடம் அல்ல!

- டிம்பிள்

வாழ்வு இனிது: அழைத்தால் வரும் வாகனங்கள்

காலையிலும் மாலையிலும் பேருந்துகளும் புறநகர் ரயில்களும் பிதுங்கி வழியும் கூட்டத்துடன் செல்வது சென்னை போன்ற பெரு நகரில் அன்றாடக் காட்சி. விடுமுறை நாட்களிலோ கேட்க வேண்டாம். எங்கெங்கும் கூட்டம்தான். ஆனால் எல்லோரும் ஏதோ தேவையின் பொருட்டு வெளியே செல்கிறார்கள், திரும்புகிறார்கள்.

இவர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பேருந்து ரயில் போன்றவற்றைத் தவிர ஆட்டோ, வாடகை கார் போன்ற போக்குவரத்து வசதிகளும் இருந்துவருகிறது. ஆனாலும் இதைவிட வசதியான, நியாயமான கட்டணம் வசூலிக்கும் வாகனத்தின் தேவை இருந்துகொண்டிருந்தது. அதைப் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது கால் டாக்ஸி. சொந்த கார் இல்லாதவர்கள் ஓரளவு நியாயமான கட்டணத்தில் சொகுசாக காரில் பயணம் செய்ய உதவுபவை கால் டாக்ஸிகள் எனலாம்.

சென்னையைப் பொறுத்தவரை ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பே தனது சேவையைத் தொடங்கிவிட்டது. ஒரு தொலைபேசி இருந்தால் போதும், எங்கே போக வேண்டும், எத்தனை பேர் போக வேண்டும், எப்போது போக வேண்டும் போன்ற விவரங்களைச் சொல்லிவிட்டால் அதற்குத் தகுந்தாற்போன்ற வாகனம் சொன்ன நேரத்தில் உங்கள் வீட்டின் முன்னே வந்து நிற்கும்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி எனத் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் இந்த கால் டாக்ஸிகள் பயணிகளது தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இதே போல் என்.டி.எல். டாக்ஸி நிறுவனமும் தமிழகத்தின் பல நகரங்களில் சேவையைத் தந்துவருகிறது.

மும்பையை மையமாகக் கொண்ட ஓலா கால் டாக்ஸி நிறுவனம் 2011-ல் தனது சேவையைத் தொடங்கியது. இந்தியாவில் சுமார் 19 நகரங்களில் இயங்கிவரும் இந்நிறுவனத்திடம் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன என்கிறது புள்ளிவிவரம்.

அமெரிக்க நிறுவனமான ஊபர் இந்தியாவில் தனது சேவையை 2013-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால் இந்த நிறுவனத்துக்கென ஒரு வாகனம் கூட இல்லை. கார்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் வேலையை மட்டுமே பார்த்துவருகிறது ஊபர். இந்த நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன் ஆப்பை அறிமுகப்படுத்தியது. அதன் மூலமே தேவையான காரை புக் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கியது.

ஊபரில் கார் புக் செய்தால் காரின் வகை, காரின் எண், டிரைவரின் பெயர், மொபைல் எண் ஆகியவை உடனே வாடிக்கையாளருக்கு அனுப்பப்பட்டுவிடும். இப்போது கிட்டத்தட்ட பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல் ஆப்பை உருவாக்கிவிட்டன. ஓலாவின் புக்கிங்கில் 70 சதவீதம் மொபைல் ஆப் வழியாகவே வருவதாகத் தெரிகிறது.

ஊபர் கால் டாக்ஸியைப் பொறுத்தவரை பணத்தை பே டிஎம் மூலமாகவே செலுத்த இயலும். எங்கே செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கான கட்டணத்தை அறிந்துகொண்டு அதைச் செலுத்திய பின்னர் தான் வாகனத்தை புக் செய்யவே முடியும். ஊபர் நிறுவனம் கால் டாக்ஸிக்கான கட்டணத்தை கிரெடிட் கார்டு மூலம் வசூலித்து வந்தது. ஆனால் இது ரிசர்வ் பேங்க் இந்தியாவில் விதிமுறைகளுக்கு மாறானது எனும் புகார் வந்ததை அடுத்து தற்போது பே டிஎம் வழியே பணம் செலுத்தும் முறை அமலில் உள்ளது. ஓலாவிலும் வாலெட் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளது.

பெருகிவரும் போட்டிகளைத் தொடர்ந்து ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களைக் கவர புதுப்புது உத்திகளைக் கையாளத் தொடங்கின. கட்டணங்களில் சிறிய அளவு வேறுபாடு அறிமுகமானது. ஒரு கால் டாக்ஸி கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் வசூலித்தால் மற்றொன்று கிலோ மீட்டருக்கு 12 ரூபாய் வசூலிக்கத் தொடங்கியது. தங்களது நிறுவனத்துக்குப் புதிய வாடிக்கையாளரை அறிமுகப்படுத்தினால் அவரும் புதிதாக அறிமுகமான வாடிக்கையாளருக்கும் இலவச சவாரி போன்ற சலுகையை ஊபர் கைக்கொள்கிறது. இதே போன்ற சலுகையை, ஓலாவும் என்.டி.எல் கால் டாக்ஸியும் அறிமுகப்படுத்தியுள்ளன.

இப்படிப் பல நிறுவனங்கள் பாதுகாப்பான சவாரி, நியாயமான கட்டணம் உள்ளிட்ட பல வசதிகளைத் தந்தபோதும் ஞாயிற்றுக்கிழமைகளிலோ, விடுமுறை நாள்களிலோ கால் டாக்ஸிகள் கிடைப்பது கடினம். ஊபரில் இத்தகைய தருணங்களில் கார் கிடைக்கிறது, ஆனால் அதற்கான கட்டணம் வழக்கமான நேரத்தைவிட மிக அதிகமாக உள்ளது என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

கார் என்பது சொகுசு, ஆடம்பரம் என்ற கருத்துகளை கால் டாக்ஸிகள் காற்றில் பரத்திவிட்டன. அவை அநேகருக்கு வேலை வாய்ப்பை வழங்குகின்றன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியதிருக்கிறது. நமக்கான தேவையைப் பொறுத்து எந்த கால் டாக்ஸியை வேண்டுமானாலும் புக் செய்துகொள்ள முடிகிறது. என்பது நிச்சயமாக வசதிதானே?

NEWS TODAY 06.12.2025