Monday, June 29, 2015

Medical colleges in MP get nod to start PhD courses

INDORE: Medical colleges of state, including Mahatma Gandhi Memorial Medical College (MGM) will be able to start PhD course in clinical branches of medicine from this academic year.

Coordination committee of higher education departrment -- apex regulatory body -- has given nod to recommendations forwarded by Devi Ahilya Vishwavidyalaya (DAVV). Following the approval, rules will come into effect for all medical colleges of state.

Varsity executive council, standing committee, Bhopal, has also approved regulation of PhD course in different clinical faculties and it was decided to follow Medical Council of India (MCI) regulations clearingordinanceconstraints. So far, in MGM PhD in community medicine is being offered as it had only one PhD holder who met mandatory guidelines for the course as per University Grants Commission (UGC). DAVV had permitted the college to conduct PhD course three years ago as it fit the criteria.

"Changes were made in the ordinance, which were approved by coordination committee.

The changes will be applicable for all state universities, now. With this, medical colleges will be able to start PhD course in clinical branches. MCI regulations will come into effect instead of UGC. However, PhD candidates will have to undergo screening test and also do course work as per UGC guidelines," said an official.

Amendment will also pave way for state universities to hold entrance test for PhD aspirants in medical sciences. "We will hold two-hour entrance examination for entry to PhD aspirants. It will comprise 100 questions and 50% will be passing marks," said Prof Ganesh Kawadia, who was one of the members of the committee to decide on MGM application to run a PhD course. Earlier, DAVV had turned down request of MGM when it submitted a letter issued by MCI which permits it to run doctoral courses. Varsity had constituted a committee to inspect facilities and infrastructure to run PhD courses but it found that its ordinance does not allow the college to run PhD course.

Ruckus at NET exam as late candidates are kept out in Nagpur


NAGPUR: The National Eligibility Test (NET), a mandatory requirement for those seeking employment in colleges as lecturers, was held on Sunday. This important test is conducted by the Central Board of Secondary Education (CBSE) on behalf of University Grants Commission (UGC). Nagpur was one of the 89 cities across the country where NET was conducted.

Not all who registered for the exam in Nagpur were able to appear though, which caused some ruckus at a centre. A few candidates told TOI that they were not allowed inside the exam hall even though they were "just a bit late". One female candidate from Wardha said, "The exam was to start at 9.30am and I reached at 9.35am. The auto driver took a lot of time to reach the centre and also my train from Wardha was a bit late. They should have let us in rather than waste our entire year." As per the NET website and a notification issued just a week ago, students have to report well in advance for the exam.

There were three papers with different marks and time duration. The first exam was of 100 marks in which 60 questions (50 mandatory) were to be solved in 45 minutes. In the second session/exam there were 50 questions which were to be solved in the same time frame and carried 100 marks. The third paper was the longest and had 75 questions worth 150 marks to be solved in 2.5 hours.

NET is held to determine eligibility for college and university level lectureship and for award of Junior Research Fellowship (JRF) for Indian nationals in order to ensure minimum standards for entrants in the teaching profession and research. The candidates who qualify are eligible to pursue research in subject of their specialization in a related subject and are also eligible for post of assistant professor. The JRF awardees have the opportunity to pursue whole time research work in government universities, institutions, IITs and other national organizations.

நுழைவுத்தேர்வு ‘ஹால் டிக்கெட்’டில் குளறுபடி: மாணவர் படத்துக்கு பதிலாக ‘நாய்’ படம் இடம்பெற்றதால் பரபரப்பு


கொல்கத்தா

ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளில் இடம்பெறும் குளறுபடிகளுக்கு அளவே இல்லை. ஆணின் படத்தை போட்டு பெண்ணின் பெயர் இடம்பெறும். சில நேரங்களில் படமே மாறி விடும்.

ஆனால் இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், மாணவரின் படத்திற்கு பதிலாக ஒரு நாயின் படத்தை போட்டு நுழைவுச்சீட்டு வழங்கிய சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்து உள்ளது.

அங்குள்ள மிட்னாபூரைச் சேர்ந்தவர் சோமியாதிப் மகாதோ (வயது 18). பிளஸ்–2 படித்துள்ள இவர், ஐ.டி.ஐ. படிக்க விரும்பினார். மேற்குவங்காள மாநிலத்தில் ஐ.டி.ஐ. படிப்பில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு எழுதுவதற்காக சோமியாதிப் மகாதோ விண்ணப்பித்து இருந்தார்.

தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’டை இணையதளம் மூலமாக அவர் பதிவிறக்கம் செய்தார். அப்போது அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது படம் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு நாயின் படம் இருந்தது. ஆனால் சோமியாதிப் மகாதோவின் முகவரி மற்றும் மற்ற விவரங்கள் அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அவர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் செய்தார். இதனையடுத்து உடனடியாக நாயின் படம் அகற்றப்பட்டு, மாணவரின் படம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

குளறுபடிக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும் ஏ.சி. ரெயிலில் ஓசி பயணம் முடியாது



மெட்ரோ ரெயிலில் டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிக்க முடியும். இந்த ஏ.சி. ரெயிலில் ஓசி பயணம் முடியாது.

படியில் பயணம் இனி இல்லை

மின்சார ரெயில்களில் பயணம் செய்து பழக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு இன்று அறிமுகப்படுத்தப்படும் மெட்ரோ ரெயில் பயணம் புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறது. முதல் மெட்ரோ ரெயில் ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி தனது பயணத்தை இன்று தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில், ஈக்காட்டுதாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், கோயம்பேடு பஸ் நிலையம் (சி.எம்.பி.டி.) ஆகிய ரெயில் நிலையங்கள் வருகின்றன.

மின்சார ரெயில்களில் இஷ்டம்போல் ஏறி, இறங்கி படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது போல் மெட்ரோ ரெயில்களில் பயணிக்க முடியாது. மெட்ரோ ரெயில்களில் பயணிக்க வேண்டும் என்றால், 3 நிலைகளை கடந்து செல்ல வேண்டும்.

அதாவது, ரெயில் நிலைய தரைத்தளத்திற்கு யார் வேண்டுமானாலும் சாதாரணமாக செல்ல முடியும். அடுத்ததாக உள்ள முதல் தளத்தில் டிக்கெட் கவுண்டர் உள்ளது. அங்கு சென்று எந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பதை கூறி, அதற்கான தொகையை செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். விசிட்டிங் கார்டு அளவிலான அட்டையில் டிக்கெட் வழங்கப்படும்.

தானியங்கி கதவு

இந்த டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ரெயில் ஏறும் பிளாட்பாரத்திற்கு செல்ல வேண்டும். அங்கு வாயிலில் உள்ள எந்திரத்தின் முன்பு டிக்கெட்டை காண்பித்தால் தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகு பிளாட்பாரத்திற்கு செல்ல முடியும்.

ரெயில் வந்து நின்றதும் 4 பெட்டிகளில் உள்ள கதவுகள் ஒரே நேரத்தில் திறக்கும். அதன் பிறகுதான் பயணிகள் இறங்கவோ, ஏறவோ முடியும். ரெயில் புறப்படும் தறுவாயில் அதில் உள்ள கதவுகள் தானாக மூடிக்கொள்ளும். இதனால், ரெயிலில் தொங்கியபடி யாரும் பயணம் செய்ய முடியாது. கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் காத்திருந்து அடுத்த ரெயிலில் தான் செல்ல முடியும்.

ஓசி பயணம் முடியாது

ரெயில் பயணத்தின்போது டிக்கெட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், இறங்க வேண்டிய இடத்தில் ரெயிலை விட்டு இறங்கியதும், வெளியேறும் வாயில் அருகே உள்ள பெட்டியில் பயணம் செய்த டிக்கெட்டை போட்டால் தான் தானியங்கி கதவு திறக்கும். அதன் பிறகுதான் வெளியேற முடியும். அதனால், டிக்கெட் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் ஓசி பயணம் செய்ய முடியாது.

அதேபோல், டிக்கெட் எடுத்த இடத்தை தாண்டியும் பயணம் செய்ய முடியாது. அவ்வாறு பயணம் மேற்கொண்டால் இறங்கும் ரெயில் நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது மாட்டிக்கொள்வோம். அங்குள்ள ரெயில்வே அதிகாரியிடம் அபராதம் கட்டிய பிறகுதான் ரசீது வாங்கிக்கொண்டு வெளியே செல்ல முடியும்.

ரீ சார்ஜ் செய்யும் வசதி

மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய 3 விதமான டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அதாவது, தினசரி பயணம் செய்வதற்கு தனியாக டிக்கெட் வழங்கப்படும். இதேபோல், நிரந்தர டிக்கெட் அட்டை முறையும் உள்ளது. ரூ.50 முதல் ரூ.300 வரை பணம் செலுத்தி நிரந்தர டிக்கெட்டை பெற முடியும்.

ஒவ்வொரு முறையும் இந்த நிரந்தர டிக்கெட்டை நுழைவு வாயிலில் காண்பித்து ரெயிலில் பயணம் செய்ய முடியும். அதற்கான கட்டணம் கழிக்கப்படும். நிரந்தர டிக்கெட் அட்டையில் உள்ள பணம் தீர்ந்ததும், மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். அதற்கான ரீசார்ஜ் எந்திரங்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. பணம் அல்லது ஏ.டி.எம். கார்ட்டை பயன்படுத்தி ரீசார்ஜ் செய்ய முடியும்.

10 நிமிடத்திற்கு ஒன்று..

மேலும், சுற்றுலா குரூப் டிக்கெட் முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த டிக்கெட்டில் 20 பேர் வரை பயணம் செய்ய முடியும். ஏறும் இடத்தில் டிக்கெட்டை காட்டியவுடன் கதவுகள் திறக்கும். அங்குள்ள ரெயில்வே ஊழியர் டிக்கெட்டில் உள்ள எண்ணிக்கையின்படி பயணிகளை உள்ளே அனுமதிப்பார். இறங்கும் இடத்திலும் இதே முறை பின்பற்றப்படும்.

மெட்ரோ ரெயிலுக்கான பயண கட்டணம் விவரம் இன்று தான் அதிகாரபூர்வமாக தெரியவரும். தினமும் காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். முதலில், 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. பயணிகளின் வரவேற்பை பொறுத்து ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரெயில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Sunday, June 28, 2015

சொல்லத் தோணுது 40 - மாயமான்!.. தங்கர் பச்சான்



விளம்பரபற்ற மனிதர்களை கவனிக்க எப்படி ஆட்கள் இல்லையோ, அப்படித்தான் விளம்பரமற்றப் பொருட்களும். ஆனால், தகுதி இல்லாத ஒன்றை கூவிக் கூவி விளம்பரப்படுத்தினால், ஒன்றுக்கும் உதவாத உயிரைக் கொல்கிற பொருட்களையும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வைத்துவிட முடிவும். பணம் இருந்தால் யாரையும், எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். எந்தப் பொருளையும் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வாங்கும் அளவுக்கு பித்து பிடிக்க வைத்துவிடலாம். பணம் இருந்தால் எந்த விளையாட்டையும் விளம்பரப்படுத்தி அனைவரையும் ஈர்த்துவிடலாம் என்பதெல்லாம் நடைமுறையில் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகள்.

உணவும், நீரும் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறு முக்கியமானதுதான் விளையாட்டும். ஆனால், இளரும் தலைமுறைகள் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

கிரிக்கெட் எனும் மட்டைப் பந்து விளையாட்டு எனக்கு அறிமுகமானபோது என்னை அது ஈர்க்கவே இல்லை. அதற்கு தரப்படுகிற முக்கியத்துவத்துக்குரிய தகுதி அந்த விளையாட்டுக்கு இல்லை என்பதும், அதற்கான அதிரடி விளம்பரங்களும், பணத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை கண்ணி வைத்துப் பிடிக்கும் அதன் மாய வலையில் ஒளிந்திருக்கும் அரசியலைப் புரிந்து கொண்டதாலும், இன்று வரை அந்த மட்டையை நான் தொட்டதுகூட இல்லை. என் மகன்களுக்கும் இதில் ஈடுபாடு இல்லாமல் போனதும் எனக்கு வியப்புதான்.

இந்திய சாலைகளில் நீங்கள் எங்கு பயணம் செய்தாலும் எல்லா இடங்களிலும் காணக்கூடியது, திறந்த வெளிகளில் பலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பதையும், ரியல் எஸ்டேட் எனும் பெயரில் விளைநிலங்களை முடக்கி, நிலங்களில் வேலியமைத்து, பல வண்ணங்களைத் தீட்டி வைத்திருப்பதையும் காணலாம்.

ஆங்கில மொழியையும், அவனது கலாச்சாரத்தையும், அவனது விளையாட்டையும் நம்மேல் திணித்து, தலைமுறை தலைமுறையாக பல நூற்றாண்டுகளாக நம் தேசிய இனங்கள் பேசி வந்த மொழியையும், நமது உணவு மற்றும் கலாச்சாரத்தையும், நமது அடையாளத்தையும் இன்று மதிப்பிழக்கச் செய்துவருவது குறித்த சிந்தனையோ, கவலையோ எவருக்கும் இல்லை.

தொடக்கத்தில் வானொலி மூலமும், பின்னர் தொலைக்காட்சி மூலமாகவும் விளம்பரப்படுத்தப்பட்ட இந்தக் கிரிக்கெட், நான்காயிரம் ஆண்டுகளுகு முன்பிருந்தே விளையாடி வந்த நம் விளையாட்டுகளை நாற்பதே ஆண்டுகாலத்தில் நம்மிடம் இருந்து விரட்டியடித்துவிட்டது.

கிரிக்கெட் என்பது எல்லாவற்றையும் போல் அதுவும் ஒரு விளையாட்டு, அதனை விளையாடுபவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை மறக்கடித்து, 'அதுதான் சிறந்த விளையாட்டு' என்பதுபோலவும், அவர்கள்தான் சிறந்த விளையாட்டு வீரர்கள் எனவும், தெய்வங்களுக்கு இணையாக போற்றும்படியான மனநிலையை விதைத்துவிட்டனர். இந்த விளையாட்டின் மூலம் பணம் குவிக்கும் அந்த வீரர்களுக்கோ, அவர்களை இயக்கும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கோ மட்டுமில்லை; இந்த ஊடகங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

எல்லா நாடுகளிலும் ஏன் கிரிக்கெட் இல்லை? எல்லா நாடுகளிலும் ஏன் இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தவில்லை. ஏனெனில், சில பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் முதலாளிகளும், தரகர்களும் தங்களின் பொருட்களை மக்கள்தொகை அதிகம் உள்ள நாடுகளில்தான் விற்க முயற்சிப்பார்கள். அந்த வகையில் அனைத்து பன்னாட்டு முதலாளிகளின் பார்வையில் இந்தியா முதல் வரிசையில் நிற்கிறது. அவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு கிரிக்கெட் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்.

கிரிக்கெட் முதலில் அந்த வீரர்களுக்கு விளம்பரம் தேடித் தரும். அதன்பின், அவர்கள் பலபொருட்களுக்கு விளம்பரம் தேடித் தருவார்கள். இது இரண்டையும் இணைத்து முதலாளிகள் தங்களின் தொழிலுக்கு மூலதனமாக்கி நம்மை முட்டாளாக மாற்றுவார்கள்.

கிரிக்கெட் இந்திய மக்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விளையாட்டாகவே இன்று மாறிவிட்டது. இந்திய அணியின் தோல்வியினால் பாதிக்கப்படாதவன் நாட்டுப்பற்று இல்லாதவனாக கருதப்படுகிறான்.

கிரிக்கெட் வீரர்களாகும் கனவில் காட்டிலும் மேட்டிலும் சாலைகளிலும் விளையாடி வாய்ப்புக்காக காத்துக் கிடந்து, வஞ்சிக்கப்பட்டு, படிப்பு கெட்டு வாழ்க்கையை இழந்த லட்சக்கணக்கான இளைஞர்களின் நிலை இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. கிரிக்கெட் மாயை, மற்றவர்களை ஏமாற்ற நடத்தப்படும் கண்ணாமூச்சி என எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இது ஒரு நவீன சூதாட்டம். பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வியாபாரச் சந்தை. அவர்களுக்கு மட்டுமே பயன்படும் விளம்பரக் கொண்டாட்டம். ஆரவாரத்துடனேயே அதனைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் போடப்படும் விளம்பர விஷ ஊசி என்பதெல்லாம் இன்னும் புரியாமல் இருப்பதுதான் கொடுமை.

கிரிக்கெட் வீரர்கள் குடிக்கிற குளிர்பானத்தை எல்லாம் ரசிகர்களும் பொதுமக்களும் ஏன் விழுந்து விழுந்து குடிக்கிறார்கள். அதில் பூச்சிக் கொல்லி இருந்தால் என்ன? பாம்பு விஷம் இருந்தால் என்ன? அதனைக் குடிப்பதைப் பெருமையாக நினைப்பதையும், கிரிக்கெட்தான் உயர்ந்த விளையாட்டு என நினைப்பதையும் எப்போது மாற்றிக் கொள்வார்கள்?

'விளையாட்டு என்பது உடலுக்கு உறுதி; உள்ளத்துக்கு பலம்' என்பதை மாற்றி, விளையாட வேண்டியவர்களை எல்லாம் விளையாடுபவர்களைப் பார்த்தால் போதும் என்று மாற்றியிருக்கிறார்களே, இதுவொன்று போதாதா கிரிக்கெட்டின் தரத்தை உணர்ந்து கொள்ள.

வெற்றி, தோல்விகளை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு விளையாடும் விளையாட்டு இதைத் தவிர உலகத்தில் வேறெதுவும் இல்லை. 'நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்; நீ அழுகிற மாதிரி அழு' என்பது நாடகம், சினிமாக்களில் மட்டும்தான் நிகழும். அதை முதன்முறையாக விளையாட்டில் நுழைத்து, கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

ஐந்து நாட்கள் வீரர்கள் விளையாடுவதைப் பார்க்க ரசிகர்களுக்குப் பொறுமையில்லை. எப்போதாவது விழும் விக்கெட்டுகளையும்; ஒன்றிரண்டு முறை மட்டுமே விழும் சிக்ஸர்களையும் பார்த்து ரசிகர்கள் சோர்ந்து போனார்கள். இதன் காரணமாக - கிரிக்கெட்டின் புகழ் சரிவதை மீட்க, உடனே அதை ஒருநாள் போட்டியாக மாற்றி புத்துயிருட்டினார்கள். ஒவ்வொரு நாட்டு அணிக்கும் தனித் தனி வண்ண ஆடைகள், நிமிடந்தோறும் பரபரப்பு என திட்டமிட்டு புகுத்தப்பட்டது. அதனாலலேயே கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைக் கடந்து, ஒரு வியாபாரமாக பரிணாமம் அடைந்துள்ளது.

பணம் கொழிக்கும் எந்தத் துறையிலும் அரசியலும், ஊழலும், முறைகேடுகளும் நுழைவததைப் போல் கிரிக்கெட் வாரியமும் விளையாட்டுக்குத் தொடர்பே இல்லாத அரசியல்வாதிகளும் பெரு முதலாளிகளும் கூட்டணி அமைத்து வெற்றிகரமாக நடத்தப்படுகிறது.

ஒரு முக்கியப் போட்டியில் வெற்றிபெற்றுவிட்டால் போதும் நடுவண் அரசும், மாநில அரசுகளும் அந்த வீரர்களிடத்தில் பாசமழை பொழிந்து மக்களின் வரிப் பணித்தில் இருந்து லட்சக்கணக்கான பணத்தையும் சொகுசு பங்களாக்களையும், உயர்ந்த விருதுகளையும் பரிசளிக்கிறார்கள். இப்படியான புகழைக் கொண்டு கோடி கோடியாக பணத்தை அந்த வீரர்கள் சேர்த்துவிடுவதைக் காணும் ரசிகர்கள், தாங்களும் அவர்களைப் போல மாறும் கனவின் மாயவலையில் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

எப்போதுமே உடல் உழைப்பு செய்து வாசிக்கும் தவில், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை விட்டுவிட்டு வெறும் விரல்களால் இயக்கும் இசைக் கருவிகளை மட்டுமே இசைப்பவர்களும், ஒரு சில இசுலாமியர்களையும் தவிர்த்து வேறு எவரும் இந்த அணியில் எளிதில் இடம்பெற்றுவிட முடியாது. இது புரியாத இந்த இளைஞர் கூட்டம் இன்னும் ஏமாந்து கொண்டே இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஒருநாள் போட்டியும் சலித்துப் போய், இப்போது 20:20 எனப்படும் 20 ஓவர் போட்டிகளைக் கொண்டு வந்துள்ளனர். இந்த 20 ஓவர் போட்டிகள் இன்னும் மிகப்பெரிய சூதாட்டத்தின் ஆடுகளமாக உருவெடுத்துள்ளது. ஊழல் புரையோடிப் போன இந்த கிரிக்கெட்டுக்கு இந்த அரசாங்கங்கள் ஏன் இவ்வளவு முக்கியத்தும் கொடுக்கின்றன?

40 ஆண்டுகளுக்கு முன் நாம் விளையாடிக்கொண்டு இருந்த விளையாட்டுக்கள் எல்லாம் விளையாட்டுக்கள் இலையா? இப்படியேத்தான் அடுத்தடுத்து தலைமுறைகளும் இதனைத் தொடரப்போகிறதா?

ஒரு குற்றத்தை தனியாகச் செய்தால் அது தவறு; அதையே கூட்டமாக முறைப்படுத்தி செய்தால் அது வியாபாரம். விளையாட்டு எனும் போர்வையில் வியாபாரம் நடத்தி, நம் மக்களையும் சோம்பேறிகளாக மாற்றும் இந்த 'சூதாட்ட' விளையாட்டு ஒரு 'மாயமான்' என்பதை எப்போது நாம் உணரப் போகிறோம்?

- சொல்லத் தோணுது...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

விளையாட்டாக ஆங்கிலம் கற்க உதவும் இணையதளம்!

ங்கள் ஆங்கில அறிவை கொஞ்சம் சோதித்துப்பார்த்துக்கொள்ள நினைத்தாலும் சரி, அல்லது ஆங்கில் அறிவை மேலும் பட்டைத்தீட்டிக்கொள்ள விரும்பினாலும் சரி, நோவேர்ட் (knoword ) இணையதளம் ஏற்றதாக இருக்கும். இந்த இரண்டையுமே விளையாட்டாக செய்ய வைக்கிறது இந்த தளம். 

உண்மையில் இந்த இணையதளமே ஒரு விளையாட்டுதான். பிரவுசரில் ஆடக்கூடிய ஆங்கிலச் சொல் விளையாட்டு! ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளுக்கான பொருளை, எந்த அளவுக்கு ஒருவர் அறிந்திருக் கிறார் என சோதிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டை கொஞ்சம் சுவாரஸ்யமாக வடிவமைத்திருக்கிறது நோவேர்ட் இணையதளம். முகப்பு பக்கத்தில் எப்படி விளையாட வேண்டும் எனும் வழிமுறை எளிதாக விளக்கப்பட்டுள்ளது. ஆட்டத்திற்கு தயார் என்றதும், ஒரு காலி கட்டம் திரையில் தோன்றும். 

அந்த கட்டத்தில் இடம்பெறும் வார்த்தைக்கான அகராதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அதைக் கொண்டு அந்த வார்த்தையை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கான சிறு குறிப்பாக வார்த்தையின் முதல் எழுத்தும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அகராதி பொருளை கொண்டு வார்த்தையை கட்டத்தில் சரியாக டைப் செய்தால் அடுத்த வார்த்தைக்கு முன்னேறலாம். தவறாக டைப் செய்தாலும் தொடர்ந்து ஆடலாம். என்ன சரியாக சொன்னால் 10 புள்ளிகள். தவறு எனில் 10 புள்ளிகள் மைனஸ். அகராதி விளக்கத்தை கொண்டு வார்த்தையை கணிப்பதே சுவாரஸ்யமானதுதான் என்றால், ஒரு நிமிட அவகாசத்திற்குள் இதை செய்ய வேண்டும் என்பது இன்னும் சுவாரஸ்யமானது. ஆரம்பத்தில் எளிய வார்த்தைகள் போல இருக்கும், ஆனால் போகப்போக வார்த்தைகள் கடினமாகி கொண்டே இருக்கும்.  முதலில் இதென்ன பெரிய விளையாட்டா என்று தோன்றினாலும், திரையில் தோன்றும் ஆங்கில வார்த்தைகளுக்கான விளக்கம், உங்களை அது என்ன சொல் என்று அல்லாட வைக்கும். 

ஆங்கில சொல் வங்கியை வளப்படுத்திக்கொள்வதற்காக அகராதியை வைத்துக்கொண்டு அர்த்தம் புரிந்து கொள்வதை விட, இப்படி சவாலான முறையில் வார்த்தைகளை கண்டுபிடிக்க முயல்வது ஆர்வத்தை அதிகமாக்கும். மாணவர்கள் முதல் அலுவலகம் செல்பவர்கள் வரை பலரும் முயன்று பார்க்கலாம். உங்கள் ஆங்கில திறமைக்கு ஏற்ப முதலிலேயே ஆட்டத்தின் கடினத்தன்மையை தேர்வு செய்து கொள்ளலாம்.

எம்.ஜி.ஆரை நெகிழ வைத்த சாண்டோ சின்னப்ப தேவர்! ( நூற்றாண்டு விழா சிறப்பு பதிவு)

டிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும், சட்டை போடாத வெற்று உடம்போடும் இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தார் என்பதும், பரபரப்பான அந்த கதாநாயகர்கள் அவருடைய படங்களில் நடிக்கும்போது பெட்டிப்பாம்பாய் நடந்து கொண்டார்கள் என்பதும் இப்போது வியப்புக்குரிய ஒன்றாக உள்ளது.  

அரைகுறை ஆங்கிலத்தோடும் அடித்துவீசும் வார்த்தைகளோடும் அத்தனை நடிகர்களையும் கையாண்ட அவர் -  சாண்டோ சின்னப்ப தேவர். 

கோவையை அடுத்த ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28 ஆம் தேதி அன்று அய்யாவுத்தேவர்- ராமாக்காள் தம்பதிக்கு பிறந்த சாண்டோ சின்னப்பா தேவருக்கு நூற்றாண்டு விழா துவக்கம் இன்று. மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்பதன் சுருக்கமே எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த அக்கால திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் சின்னப்பா தேவர். 

ஐந்தாவது வகுப்பு வரை மட்டுமே படித்த தேவர், வறுமையான குடும்ப சூழலால் கோவையில் தனியார் மில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். தொடர்ந்து "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளி மற்றும் பால் வியாபாரம், அரிசி வியாபாரம் என அடுத்தடுத்து பல வேலைகளில் ஈடுபட்டும், போதிய வருமானமில்லாத நிலையில் சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தினார். 

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடைய சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். சின்னப்பா தேவர் வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது இந்த உடற்பயிற்சிக் கூடம்தான். அங்கு ஓய்வு நேரத்தில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் தேர்ந்தவரானார்.
நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்ற புராண இதிகாச படங்கள், திரைப்படங்களாகி மக்கள் வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தன. இதனால் திறமையான உடல்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். 

பிரபலமான ’’ஜுபிடர் பிக்சர்ஸ்’’ நிறுவனம் அப்போது வரிசையாக திரைப்படங்களைத் தயாரித்து வந்தன. பிரபலமான கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாத சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

ஜுபிடர் படங்களில் சிறுசிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் சின்னப்பா தேவருக்கு எம்.ஜி. ஆருடன் தொடர்பு ஏற்பட்டது. எம்.ஜி. ஆருக்கும் அவருக்கும் இருந்த நட்பு திரையுலகில் அலாதியானது. இயல்பிலேயே உடற்பயிற்சி மற்றும் வீர தீர சாகசங்களில் ஆர்வமுடைய எம்.ஜி.ஆருக்கு, அதில் தேர்ச்சி பெற்றவரான சின்னப்பா தேவரை பிடித்துப்போனதில் ஆச்சர்யம் இல்லை.
நடிப்புத்தொழில் கொஞ்சம் பிசிறடிக்கவும் நடிப்புத் தொழிலோடு,  சி.வி.ராமன் என்ற இயக்குநரிடம் தயாரிப்பு நிர்வாகியாகத் தேவர் குறைந்த காலம் பணியாற்றினார். அங்கு சினிமாத் தயாரிப்பு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். அப்போது நண்பர்கள் சிலருடன் இணைந்து படத்தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டார். 

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதுபோல, தம்பி திருமுகம் திரைப்படத்துறையில் எடிட்டராக பணியாற்றியது, தனது சினிமா தயாரிப்பு அனுபவம், மனதில் படுவதை செயல்படுத்திக்காட்டும் இயல்பான துணிச்சல் இவை திரைத்துறையை விட்டு விலகியிருந்தாலும், தேவரை கோவையில் சும்மா இருக்கவிட வில்லை. சொந்தமாகத் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. நண்பர் களின் உதவியுடன் சென்னைக்கு ரயில் ஏறினார். 

முன்பு தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்திருந்த நாகிரெட்டி, படத் தயாரிப்புக்கு தேவையான பணத்தைக் கொடுக்க முன்வந்தார். படத்தின் கதாநாயகனாக யாரை போடுவது என்ற குழப்பம் வந்தபோது, அவர் கண் முன் சட்டென வந்தது, அவரது பழைய நண்பர் ராம்சந்தர். ஆம் எம்.ஜி. ஆரின் அப்போதைய பெயர் அதுதான். 

திரைத்துறையில் ஓரளவு வளர்ந்திருந்த எம்.ஜி.ஆரை அணுகி, தன் விருப்பத்தை சொல்ல அவரும் சம்மதித் தார். "தேவர் பிலிம்ஸ்" படக் கம்பெனி உருவானது. 4-9-1956-ல் வெளிவந்த "தாய்க்குப்பின் தாரம்" பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 

மிகக் குறைந்த பட்ஜெட்டில், பெருவெற்றிபெற்ற அத்திரைப்படம், தேவருக்கு சினிமா மீது இருந்த ஆர்வத்தை துாண்டிவிட, படபடவென படங்களை தயாரித்தார். முதல்பட தயாரிப்பின்போது எம்.ஜி. ஆருக்கும், தேவருக்கும் இடையில் சிறு மனத்தாங் கல் ஏற்பட்டதால், எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடத்தில் அப்போது புகழ்பெற்றிருந்த ரஞ்சன், உதயகுமார், போன்றோரை வைத்து தன் அடுத்தடுத்த படங்களை தயாரித்தார் தேவர். 

தேவரின் வெற்றிகரமான தயாரிப்பு முறை எம்.ஜி. ஆருக்கு என்னவோ செய்திருக்கலாம். இருவருமே ஒரு சந்திப்பில் ஈகோவின்றி தங்கள் பிரச்னைகளை பேசித் தீர்த்துக்கொண்டனர். விளைவு, பெரிய இடைவெளிக் குப்பின் 'தாய் சொல்லை தட்டாதே' படம் வெளியாகி வெற்றிப்படமானது. இந்த திரைப்படம் ஒரே மாதத்தில் தயாரானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுதான் தேவர்! 

தொடர்ந்து எம்.ஜி.ஆரை வைத்து குறுகிய காலத்தில் 16 வெற்றிப் படங்களை எடுத்தார். எம்.ஜி. ஆர் கால்ஷீட்டுகளில் சொதப்புவார் என்ற சினிமா உலக கற்பிதத்தை, தேவர் படங்கள் உடைத்தெறிந்தன. தேவர் தயாரிப்பில் எம்.ஜி. ஆர் நடித்த தேர்த்திருவிழா 16 நாட்களில் எடுக்கப்பட்ட தகவல் திரையுலகை ஆச்சர் யத்தின் உச்சிக்கே அழைத்துச்சென்றது. அதனால்தான் அவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவரானார். எம்.ஜி. ஆரை தேவர், 'ஆண்டவனே..!' என்றும், எம்.ஜி. ஆர் தேவரை,  'முதலாளி...!' என்றும் அழைத்துக்கொள்வர். 

1967 ல் எம்.ஜி.ஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அவரது எதிர்காலம் குறித்து திரையுலகில் வெவ்வேறு விதமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் தேவர் செய்த ஒரு செயல் எம்.ஜி.ஆர் உட்பட திரையுலகில்  அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
மருத்துவமனையில் எம்.ஜி. ஆரை சந்தித்த தேவர், மருதமலை முருகன் கோவிலில் பூஜை செய்த பிரசாதத்தை தந்து, அவரது நெற்றியில் விபூதி இட்டதோடு, கணிசமான ஒரு தொகையை எம்.ஜி.ஆர் கைகளில் கொடுத்தார். “இது என் அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் முருகா... சும்மா படுத்துக்கிடக்காம சீக்கிரம் வந்து நடிச்சிக்கொடுங்க!” என்றபோது எம்.ஜி.ஆர் கண்களில் கண்ணீர் வழிந்தது. 

காரணம் அந்த வார்த்தைகள், அவரது மனநிலையில் ஏற்படுத்திய நம்பிக்கை. மீண்டு(ம்) வருவாரா, வந்தா லும் முன்போல இயங்க முடியுமா, வருவார் என்றால் அது எப்போது? என திரையுலகம் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த சூழலில் தேவரின் செயல் எம்.ஜி. ஆரை நெகிழ வைத்தது. 

அவரது இறுதிக்காலம் வரை எம்.ஜி.ஆர், அவர் மீது அளவற்ற அன்பு கொள்ள இதுவே காரணமானது. எம்.ஜி. ஆர் - ஜானகி திருமணத்தில் சாட்சி கையெழுத்திட்ட ஒரே நபர், சாண்டோ சின்னப்பா தேவர் என்பதிலிருந்தே இருவருக்குமான நட்பை புரிந்துகொள்ளலாம்.
“சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் உழைப்பால் உயர்ந்து பிறர் வாழ உழைத்து, அந்த கடுமையான உழைப்பினாலேயே நம்மை விட்டு மறைந்து இருக்கிறார். எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்த ஒரு நல்லவர். நம்பிக்கைக்கு உரியவர்; நாணயமானவர்; அவருடைய வார்த்தையில் சொல்லப்போனால், அவர் நம்பிய முருகனோடு இரண்டறக் கலந்துவிட்டு இருக்கிறார் என்றே சொல்லலாம். எப்படி இருப்பினும் திரைப்படத்துறையில் ஒரு ஈடு செய்யமுடியாத, இனி எதிர்பார்க்க முடியாத உழைப்பிற்கு சொந்தக்காரரை, தனது உழைப்பால் உயர்ந்தவரை, சின்னப்பா தேவரைப் போல் ஒருவரை இனி காணப்போவதில்லை - கிடைக்கப்போவதும் இல்லை”-சின்னப்பா தேவர் மறைவின்போது எம்.ஜி. ஆர் பதிவு செய்தவை இவை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள், படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாளில் முடியும் என்ற அறிவிப்போடு துவங்கும். இது அன்றைய திரையுலகில் ஆச்சரியமான விஷயம். 

காரணம், திரைத்துறை நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு துறை. ஆரவாரமாக துவங்கப்படும் எந்தப் படமும் வழக்கமான பல பிரச்னைகளை தாண்டி வெளியாகுமா? என்பதே நிச்சயமில்லாத விஷயம். அதில் விநியோகஸ்தர்களுக்கு முன்கூட்டி வெளியீடு தேதி அறிவிப்பது என்பது, பெரிய நிறுவனங்களே சொல்லத் தயங்கு கிற விஷயம். தேவர் இந்த விஷயத்தில் பெரிய முதலாளிகளை ஆச்சரியத்தில் வாய்பிளக்க வைத்தார். அறிவித்த தேதியில் படம் நிச்சயம் வெளியாகும்.

குறைந்த பட்ஜெட், குறுகிய கால தயாரிப்பு என்பதையும் தாண்டி தேவரிடம் திரையுலகம் வியந்த விஷயம் அவர் கலைஞர்களை மதித்த குணம். நடிகர்- நடிகைகளுக்கு பேசிய பணத்தை, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒரே தவணையில் மொத்தமாக கொடுத்துவிடுவார்.  மற்ற கலைஞர்கள், ஊழியர்களுக்கும் குறிப்பிட்ட தேதியில் ஊதியம் கிடைத்தது.  படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் அன்றே, அது வெளியாகும் தேதியையும் தேவர் அறிவிக்க இதுவும் ஒரு காரணம். 

திரையுலகில் சிரமப்படும் கலைஞர்களுக்கு உதவி செய்தால், அவர்களிடம் அதை திரும்ப பெறமாட்டார். தன் கதையில் அவருக்கு ஒரு வேடம் அளித்து அதை சரிப்படுத்திக்கொள்வார். கடனை அடைத்தது போலவும் ஆகிவிட்டது, அவர்களுக்கு வேலை கொடுத்ததுபோலவும் ஆகிவிட்டது என திருப்தியடைவார். இப்படி ஒரு மனிதாபிமானியாகவும் விளங்கினார். 

எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டபின் 'தண்டாயுதபாணி பிலிம்ஸ்' என்ற படநிறுவனத்தைத் துவங்கி படங்கள் தயாரித்தார் தேவர். முருக பக்தரான தேவர், பக்தி கலந்த சமூகப்படங்களை தயாரித்து அவற்றை வெற்றிப்படமாக்கினார். திரைப்படங்களில் நடித்திராத கிருபானந்த வாரியாருக்கு மேக் அப் போட்டவர் தேவர். மொழி தெரியாத போதும் இந்தித் திரையுலகில் நடிகர் ராஜேஷ் கன்னாவை வைத்து ’ஹாத்தி மேரே சாத்தி’’ என்ற படத்தை எடுத்து இந்தி திரையுலகிலும் தேவர் பிரபலமானார். 

முருக பக்தரான தேவர், தன் படங்களில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை முருகன் கோவில் திருப்பணி களுக்கு வழங்கினார். காலையில் அலுவலகம் வந்ததும் முருகனை வணங்கி விட்டுத்தான் வேலையை துவக்குவார். உதவி கேட்டு வருகிறவர்களுக்கு 'இல்லை' என்று கூறாமல் உதவி செய்வார். திறமையானவர் களை எப்படியாவது தம் படங்களில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார். 

கலைஞர்களுக்கு ஈடாக, தம் பெரும்பாலான படங்களில் முழுக்கதையிலும் வரும் வகையில் விலங்கு களை நடிக்க வைத்த முதல் தயாரிப்பாளர் இவர்தான். படப்பிடிப்புகளில் அவற்றை வெறும் விலங்குகள் போல அலட்சியமாக நடத்தாமல் உணவு, ஓய்வு என்று சக மனிதர்களுக்குண்டான மதிப்புடன் அவற்றை நடத்துவார். படம் முடியும் தருவாயில் அந்த விலங்குகள் தேவருக்கு நெருங்கிய நண்பனாக மாறிவிட்டிருக் கும். 
'ஆட்டுக்கார அலமேலு' படத்திற்கான வெற்றிவிழாவில், மற்ற கலைஞர்களுக்கு  ஈடாக அதில் நடித்த ஆட்டுக்கும் வெற்றிமாலையை சூட்டி அசத்தினார். விலங்குகள் மீது அவருக்கு அப்படி ஒரு அலாதியான பிரியம். தம் வீட்டில் சில விலங்குகளையும் வளர்த்து வந்தார் அவர்.

நாள் முழுவதும் அவர் நாவில் 'முருகா..!' என்ற வார்த்தை எத்தனை ஆயிரம் முறை வந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பணியாளர்களையும், தெரிந்தவர்களையும் 'முருகா' என்றே அழைப்பார். வார்த்தைக்கு வார்த்தை 'முருகா... முருகா!' என உருகிப்போகும் பக்தனான அவர், அதே முருகனை வசைபாடும்போது அந்த வார்த்தைகளை காதுகொடுத்து கேட்க முடியாது. 

புகழ்பெற்ற முருகன் கோவில்களில், சிறப்பு நாட்களில் முருகனுக்கு கட்டும் கோவணம், பூஜை முடிந்ததும் தேவரை தேடி வரும். லட்ச லட்சமாய் சம்பாதித்தாலும் தேவர் வீட்டு பீரோவை அலங்கரித்தவை அவர் சேமித்த இந்த கோவணங்கள்தான். நாத்திக கொள்கை கொண்ட திமுகவில் இருந்த எம்.ஜி.ஆரை மருதமலைக்கு, தான் அமைத்திருந்த எலக்ட்ரிக் விளக்கு துவக்க விழாவிற்கு வரழைத்ததும் அவரது சாதனைதான்.


ரஜினிகாந்த் நடித்து வெளியான 'தாய் மீது சத்தியம்' படம்தான் தேவர் நேரடி தயாரிப்பில் வெளியான கடைசிப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது மேற்பார்வையிட சென்ற தேவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும், ஊட்டி குளிர் காரணமாக சிகிச்சைக்காக கோவை அழைத்துச் செல்லப்பட்டார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த போதே மறுநாள் 7 -9-1978 அன்று மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். 

தேவரின் உடல் வைக்கப்பட்ட கோவை ராமநாதபுரத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே திரண்டு வந்து கண்ணீர் விட்டது. தேவருக்கு மனைவி மாரிமுத்தம்மாள். இவர்களுக்கு தண்டாயுதபாணி, சுப்புலட்சுமி, ஜெகதீசுவரி என்று 3 பிள்ளைகள். தேவருக்குப்பின் தண்டாயுதபாணி படத்தயாரிப்பினை தொடர்ந்தார். கமல், ரஜினி நடித்து பல வெற்றிப்படங்களை தயாரித்தார் அவர். 

சின்னப்பா தேவர் காலத்திற்குப்பின் சில ஆண்டுகள் வரை படங்கள் தயாரித்த தேவர் பிலிம்ஸ் நிறுவனம்,  கால மாற்றத்தினால் திரையுலகில் தொடர்ந்து செயல்படுவதில் சுணங்கியது. தொடர் தோல்விகளால் சின்னப்பா தேவர் என்ற தனி மனிதரால் உருவான அந்நிறுவனம், படத்தொழிலிலிருந்து முற்றாக விலகி தம் திரைப்படங்களை மட்டும் ஆவணங்களாக்கி ஒதுங்கிக்கொண்டது. 

விடா முயற்சி, கடும் உழைப்பு, மற்றவர்களுக்கு உதவும் குணம் என்ற குணங்களோடு சாதனை மனிதராக திரையுலகில் உலாவந்த சின்னப்பா தேவர் என்ற மனிதரின் புகழ், திரையுலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்!   

- எஸ்.கிருபாகரன்

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...