Wednesday, March 23, 2016

OCI cards enough to visit India

OCI cards enough to visit India


THE HINDU

Overseas citizens of India and Indian Origin just need OCI document and will not require a visa, but passport will be mandatory

The Indian diaspora will no longer have to get a visa affixed on their passports every time they travel to India as the Union government has decided to do away with the process.

The government has decided that since the categories Overseas Citizen of India (OCI) and the Persons of Indian Origin (PIO) were merged last year, the OCI card will suffice to enter the country and hence would require no visa.

Carrying a passport will, however, be mandatory, an official said.

“Till now, every OCI card holder also had to get a visa affixed from the Indian High Commission whenever they planned a visit to India. Now, only the OCI card will be needed,” a senior government official said.

The government is also planning to make arrangements to print OCI cards at a few big missions like the U.K and the U.S., countries where many Indians reside.

The OCI card bears certain security features that cannot be tampered with and are made after several layers of checks.

Prime Minister Narendra Modi announced in 2014 that the PIO and OCI would be merged for the benefit of the diaspora.

Amendment

The government amended the Citizenship Act last year and a notification was issued to merge the two cards.

“Since the announcement, there was a lot of confusion among the diaspora regarding the two cards. The respective missions in foreign countries held workshops and tried to clear doubts. The earlier deadline to migrate from PIO to OCI was January 2016, but we have now extended the deadline to June 30,” the official said.

An official explained that the move would also help create a database of the Indian diaspora as a consolidated figure is not present with the government.

After the notification was issued last year, only one OCI card with enhanced benefits is in existence.

Ordinance

“Keeping in view the promise [made by PM Modi in the USA and Australia in 2014], an ordinance was promulgated on January 6, 2015 whereby the eligibility and additional benefits of the PIO card have been incorporated in the OCI card and certain other relaxation to OCI card holders have been given by amending the Citizenship Act, 1955. The PIO and the OCI cards used to exist simultaneously, leading to a lot of confusion among the PIOs residing abroad,” an official said.

Overseas Indians challenge govt order on surrogacy

Overseas Indians challenge govt order on surrogacy

HINDUSTAN TIMES
A group of people categorised as overseas citizens of India (OCIs) have challenged a Central notification disallowing them from commissioning surrogate children in the country. In a petition before the Supreme Court, the OCIs termed the move as discriminatory.

Taking up the petition on Thursday, a bench of justices Ranjan Gogoi and NV Ramana asked the government to explain the logic behind leaving the OCIs out in the notification, even as the proposed law does not envisage it.

The SC is hearing a PIL filed by an advocate Jayashree Wad who complained that India had become a major hub for commercial surrogacy in the world due to unregulated practice of the trade.

The Centre issued a notification in November to regulate commercial surrogacy in India, considered to be a $445 million annual business. As a part of stringent measures, the government banned import of human embryo except for research.

“Under what authority of law have you imposed this ban? Even the draft bill does not contemplate it,” the bench asked the government counsel who assured the court to be back with a response on April 13.

The judges also asked the government to spell out the fate of the bill that was to be tabled before the Parliament. They recalled that the solicitor general had on October 2015 said the bill was at a consultative stage and would be introduced in the Parliament soon.

“More than three months have passed what happened to the consultative process?” the bench asked the government advocate who said the bill was now pending before a parliamentary standing committee.

The orders issued on November 3 and 4 last year said stated that no Indian mission or foreign office shall issue visa to foreign nationals for this purpose. The detailed advisory by the MHA and health ministry go a step further to stop commercial surrogacy even as the government works on a legislation to bar foreigners from renting a womb in India.

During the hearing, the bench indicated staying the notification in favour of the OCIs. However, on the request of the government counsel it did not issue any order.

The counsel said the purpose behind the notification was to extend the benefit to the “infertile Indian parents.”

“What is the law or mechanism by which you are stopping them (OCIs)? What is the policy? This is contrary to your bill,” Justice Gogoi heading the bench observed.

The Overseas Citizenship of India (OCI) scheme launched in 2005 provides for registration as OCIs of all persons of Indian origin (PIOs) who were Indian citizens from January 26, 1950 or were eligible to become Indian citizens on that date and who are citizens of other countries, except Pakistan and Bangladesh.

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
DINAMALAR
23.3.2016

சென்னை;'வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

வயதான காலத்தில் பாதுகாப்பு

வயதான காலத்தில் பாதுகாப்பு

DAILY THALAYANGAM

மின்சார வயர்கள் செல்லும் சில இடங்களில் ‘‘இந்த இடத்தை தொட்டால் ஷாக் அடிக்கும்’’ என்று அபாய எச்சரிக்கை விடுக்கும் போர்டுகளை பார்க்க முடியும். அதுபோல தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை தொட்டால், அரசாங்கத்துக்கு நிச்சயமாக ‘ஷாக்’ அடிக்கத்தான் செய்கிறது. தனியார் நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களுக்கு மாத பென்ஷன் கிடையாது. அவர்களுடைய ஓய்வுகாலத்துக்கு சேமிப்பு என்றால், அது அந்த நிறுவனம் தரும் பணிக்கொடையும், மாதாமாதம் அவர்கள் சேமிப்பில் சேர்ந்துகொண்டிருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதியும் மட்டுமே ஆகும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி என்பது, ஒவ்வொரு மாத சம்பளத்திலும் தொழிலாளர்களின் பங்காக அதிகபட்சமாக 12 சதவீத தொகை எடுத்துக்கொள்ளப்படும். அவர்களை வேலைக்கு வைத்திருக்கும் நிறுவனமும் அதே 12 சதவீதத்தை தன்பங்காக தொழிலாளர்களுக்கு அளிக்கும் இந்த 24 சதவீத தொகையும் வருங்கால வைப்புநிதியத்தில் ‘டெபாசிட்’ செய்யப்பட்டு, அதற்கு தற்போது 8.8 சதவீத வட்டியும் கொடுக்கப்படுகிறது.

இதுவரையில் பதவியில் இருந்து ஓய்வுபெறும்போது இந்த தொகையை எடுத்தால் அதற்கு வட்டி கிடையாது என்று இருந்தது. இந்த ஆண்டு மத்திய அரசாங்க பட்ஜெட்டில் திடீரென்று இதில் கைவைக்கும் வகையில், பதவியிலிருந்து ஓய்வுபெறும்போது இந்த தொகையை எடுக்கும் நேரத்தில் 40 சதவீத தொகைக்கு மட்டுமே வரி கிடையாது, மீதமுள்ள 60 சதவீத தொகை வேறு ஏதாவது பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டால் மட்டுமே வரி கிடையாது. இல்லையென்றால், வரி கட்டவேண்டும் என்ற அறிவிப்பு வந்தவுடன் நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு அலைகள் வீசியது. இதனால் பிரதமரே தலையிட்டதன்பேரில், இந்த வரிவிதிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்பாடா! என்று ஒரு வழியாக தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டநேரத்தில், இப்போது திடீரென்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் வருங்கால வைப்புநிதியை எடுப்பதற்கான ஓய்வுகால வயது 55–லிருந்து 58 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதற்கு முன்பாக இந்த நிதியை எடுக்கும் தொழிலாளர்கள் முழுத்தொகையையும் எடுக்கமுடியாது. தாங்கள் கட்டிய தொகையை மட்டும் வட்டியோடு பெற்றுக்கொள்ளலாம். தொழில் நிறுவனங்கள் கட்டிய தொகை 58 வயதாகும் போதுதான் வட்டியோடு அவர்களுக்கு திரும்பத்தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கும் பலத்த எதிர்ப்புகள் வெளிவந்துள்ளன.

தொழிலாளர்களின் சேமிப்பை அவர்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக்கொள்வதற்கு உரிமை உண்டு. சிலர் அவசரத்தேவைக்காக இந்த பணத்தை எடுக்க நினைப்பார்கள். சிலர் வேலையிலிருந்து நிற்கும் நேரத்தில் ஏதாவது முதலீடு செய்வதற்கோ, அல்லது சுயதொழில் தொடங்குவதற்கோ இதை பயன்படுத்த நினைப்பார்கள். அவர்களுடைய உரிமையை இந்த அறிவிப்பு பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தொழிலாளர் வைப்புநிதிக்கான விதியில் 3 ஆண்டுகள் செயல்படாமல் இருந்தால், அதற்காக வட்டி வழங்கப்படமாட்டாது என்று இருக்கிறது. ஆக, 45 வயதில் ஒருவர் பணியிலிருந்து விலகி, தன் பங்குதொகையை மட்டும் பெற்றுக்கொண்டால், அடுத்த 13 ஆண்டுகள் தொழில் நிறுவனங்கள் கொடுத்த நிதி தூங்கிக்கொண்டிருக்குமே?, இதற்கு வட்டி உண்டா என்று அறிவிக்கப்படவில்லையே? என்று தொழிலாளர்கள் தரப்பு வினாக்களை எழுப்புகிறது. ஆனால், வயதான காலத்தில் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு அவர்கள் சேமிப்பின் ஒரு பகுதியாவது நிச்சயமாக கைகொடுக்கும் என்ற வகையில் இந்த புதிய அறிவிப்பை வரவேற்கும் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். வருங்கால வைப்புநிதி என்பது, வங்கிகளில் போடும் சேமிப்பு கணக்குபோல அல்ல, நினைத்த நேரத்தில் எடுத்துக்கொள்வதற்கு இது எதிர்கால வாழ்விற்கு உத்தரவாதம் அளிக்கும் தொகை ஆகும். இந்த தொகையையும் எடுத்து ஒருவேளை பணம் செலவழிந்துவிட்டால், வயதான காலத்தில் யார் கை கொடுப்பார்கள்?. எனவே, இந்த அறிவிப்பை ஓய்வுகால நலனுக்காக வரவேற்கத்தான் வேண்டும்.

சொல் வேந்தர் சுகி சிவம்

சொல் வேந்தர்
சுகி சிவம்

நம்பர் ஒன்னா? நம்பர் டூவா?

உலகத்திலேயே மிகமிக அதிர்ஷ்டசாலி யார்? எல்லா வசதி வாய்ப்புகளும் பெற்று எந்தவிதக் கவலையும் சிக்கலும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழக் கூடிய வாய்ப்பு ஒருவருக்கு உண்டா? உண்டு என்றால் அவர் யார்?

இந்தக் கேள்விக்குப் பதில் என்ன தெரியுமா? அமெரிக்காவின் துணை ஜனாதிபதி. அவர்தான் சகல வசதி வாய்ப்புகளுடன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழும் வாய்ப்பு உடையவர். அவரைப் பற்றி பிரசித்தி பெற்ற ஜோக் ஒன்று உண்டு.

காலைத் தூக்கம் கலைந்ததும் படுக்கையில் இருந்து எழாமலேயே, "ஜனாதிபதி நன்றாக இருக்கிறாரா?' என்று கேட்டு, "ஆம்' என்று பதில் வந்தால், மறுபடியும் போர்வையைப் போர்த்திக்கொண்டு தூங்கப் போய்விடலாம். அவருக்கு என்று அமெரிக்காவில் எந்தப் பொறுப்பும் எந்த வேலையும் கிடையாது. ஆனால் ஜனாதிபதிக்கு நிகரான வாழ்க்கை வசதிகள் உண்டு.

ஜனாதிபதி இறந்தால் மட்டுமே அவரது இயக்கம் ஆரம்பம் ஆகும்! சகல வசதி வாய்ப்புடன் எந்தவித வேலைப் பளுவும் இல்லாத இந்த உதவி - துணை என்கிற பதவிகளைச் சிலர் விரும்புவார்கள். காரணம், முதலாவதாக இருப்பதில் பெருமை இருக்கிற அளவு பொறுப்பும் பாரமும் துன்பமும் விமர்சனமும் உண்டு. ஆனால் நம்பர் 2 ஆக இருப்பதில் சுகமும் போகமும் மட்டுமே உண்டு.

ஆனால் இந்த நம்பர் 2-ல் திருப்தி அடைவது வாழ்க்கையே அல்ல. போராட்டங்கள் நிறைந்த நம்பர் ஒன்னாக இருக்கவே ஆசைப்படுங்கள்.

ஆனந்த் தியேட்டர் அதிபர் அமரர் உமாபதி அவர்களைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று உண்டு.

எந்த விழாவுக்குப் போனாலும் முதல் வரிசையில் இடம் இருந்தால்தான் அமருவார். இரண்டாவது வரிசையில் இருக்க அவருக்குப் பிடிக்காது என்று சிலம்பொலி செல்லப்பன் ஒருமுறை சொன்னார்கள். எனக்கும் இந்த இயல்பு உண்டு.

எல்லோருக்கும் முதல் வரிசையில் இடம் கிடைக்குமா? எல்லோரும் நம்பர் ஒன் ஆக முடியுமா என்று தத்துவ வினாக்கள் எழுப்ப வேண்டாம்! அந்த விவாத நேரத்தைக்கூட வீணாக்காமல் நம்பர் ஒன் ஆவதற்கு முயலுங்கள்.

பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் சீனியாரிட்டிபடிப் பார்த்தால் கலைஞர் தி.மு.க.வின் தலைவராகவும் முதல்வராகவும் ஆகியிருக்க முடியாது. அமரர் எம்.ஜி.ஆர். கூடக் கலைஞரை முதல் இடத்தில் ஒப்புக்கொண்டார்.

அமரர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் இன்றைய தமிழக முதல்வரும் சீனியாரிட்டிகளைப் புறக்கணித்து நம்பர் ஒன் என்று தன்னை நிரூபித்தார். அவர் நம்பர் 2 ஆக இருக்க விரும்பியதே இல்லை!

நம்பர் டூ பாதுகாப்பானது... ஆனால் விரும்பத்தக்கது அல்ல.

ஆபத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனிதர்களே எப்போதும் நம்பர் ஒன் என்ற முதலிடம் பெறுகிறார்கள்.

கஷ்ட காலத்தில் ஒரு குழுவைக் கட்டுக்குலையாமல் கொண்டு செலுத்தும் துணிவுடையவர்கள் பிறவித் தலைவர்கள். அவர்களிடம் இருந்து அந்தப் பண்பை நாம் படித்தாக வேண்டும்.

சைவ சமயத்தில் இறைவனைக் குறித்துப் பாடிய நாயன்மார்கள் பாடலை நம்பியாண்டார் நம்பி என்பவர் வரிசைப்படுத்தி முறைப்படுத்தினார். காலத்தால் பிந்திய- வயதில் சின்னவரான ஞானசம்பந்தர் பாடல்களைத்தான் முதல் திருமுறை என்று அறிவித்தார். சைவ சமயத் தலைவர்களை வரிசைப்படுத்தும்போது முதலில் ஞானசம்பந்தர் என்றே வரிசைப்படுத்துவார்கள்.

ஏன்?

சைவ சமயத்துக்குப் பிற சமயங்களால் துன்பம் நேர்ந்தபோது அஞ்சாமல் தலைமை ஏற்று நின்ற தமிழ் முதல்வர் சம்பந்தர். அது மட்டுமா? பாண்டிய நாட்டில் திருநீறு வைத்தாலே தீட்டு என்று அரசருக்கு அஞ்சி மக்கள் திருநீறு வைக்காதபோது நெற்றி நிறைய நீறு பூசி, திருநீற்றுப் பதிகம் பாடி, மன்னருக்கே திருநீறு கொடுத்த தமிழ்த் தலைவன் ஞானசம்பந்தன்.

எனவே நம்பர் ஒன் என்பது அவரைத் தேடி வந்தது. அவரைக் கொல்லப் பல முயற்சிகள் நடந்தன. பல ஆபத்துகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது என்றாலும் அவர் எதிர்கொண்டார்.

நம்பர் 2-ல் செüகரியங்கள் அதிகம். நம்பர் ஒன்னில் சங்கடங்கள் அதிகம். என்றாலும் நம்பர் 1 தான் உங்கள் லட்சியமாக இருக்க வேண்டும்.

நம்பர் ஒன் ஆக வேண்டும் என்றால் தகுதி, உழைப்பு, தியாகம், தலைமைப் பண்புடன் ஆக வேண்டுமே ஒழிய தவறான பாதைக்குத் தாவக் கூடாது.

ஒரு சில சைவ மடங்களில்கூட அசைவ வேலைகள் செய்து தலைமையைப் பெற ஆசைப்படுகிறார்கள். அதுவல்ல சரியான வழி...


ஞானசம்பந்தர் மாதிரி அஞ்சாமை, பொறுப்புணர்வு, தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் நம்பர் ஒன் ஆக வேண்டும்.

மகாபாரதத்தில் வியாசர் ஓர் அருமையான விளக்கம் சொல்லுகிறார்...

""எவன் பெரியவன் என்ற கேள்விக்கு அவர் சொல்லும் பதில் ஆச்சரியமானது. நான்கு வர்ணங்களில், அந்தணரில் அறிவு அதிகம் உடையவனே பெரியவன். அரசரில் பலம் அதிகம் உடையவனே பெரியவன். வணிகரில் பணம் அதிகம் வைத்திருப்பவனே பெரியவன். நாலாம் வர்ணத்தில் மட்டுமே வயது மூத்தவன் பெரியவன்.

காலம் மாறிவிட்டது. வர்ணாச்ரமம் வடிவம் மாறிவிட்டது... என்றாலும் வியாசரின் அணுகுமுறை ஆழ்ந்த அறிவு, மாற முடியாது.

உங்கள் ஆசிரியரைவிட நீங்கள் அதிகம் படித்தால் நீங்கள் நம்பர் ஒன். உங்கள் மேல் அதிகாரியைவிட உங்கள் பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன். உங்களைச் சுற்றி இருப்பவரைவிட உங்கள் பண பலம் பெருகிவிட்டால் நீங்கள் நம்பர் ஒன்.

வயது மூத்தவர்களை மரியாதையுடன் நடத்தினால் அப்போதும் நீங்கள் நம்பர் ஒன்.

சௌரியம் கருதி நம்பர் டூ ஆகவேண்டாம். சங்கடம் என்றாலும் நம்பர் ஒன்தான் நமது லட்சியம்.

இந்த லட்சியம் இருந்தால் வெற்றி நிச்சயம்!

Monday, March 21, 2016

தோற்றவர் வென்றார்!

சொல் வேந்தர்
சுகி சிவம்

தோற்றவர் வென்றார்!

வெற்றி - தோல்விகளைப் பற்றி உலகம் வைத்திருக்கிற அபிப்ராயங்கள், அளவுகோல்கள் எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. உலகின் நடைமுறைகள், தோல்வியுற்றதாக அறிவித்தவர் வெற்றி பெற்ற வரலாறுகள் உண்டு. சில சமயம் சிலரது வெற்றிகளைப் புரிந்து கொள்ளும் சக்தியே உலகத்துக்கு இல்லாமல் போவதும் உண்டு. எனவே உலகம் அறிவிக்கின்ற வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலையே இல்லாமல் உழைப்பதும் வெற்றி பெறுவதும் மிக மிக முக்கியம்.

மராட்டிய மாநிலத்தில் தேர்வில் தேர்ச்சி பெறாதவனாக அறிவிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மறுகூட்டல் கேட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது. அவன்தான் மாநிலத்திலேயே முதலாவதாக மதிப்பெண் பெற்றவன். சில நாள்களில் வெற்றி, தோல்வி தலைகீழாகிவிட்டது. பிறரது அளவுகோல்களால் நிர்ணயிக்கப்படுகிற வெற்றி - தோல்விகளால் தயவுசெய்து பாதிக்கப்படாதீர்கள்.

சென்னை விவேகானந்தா கல்லூரியில் நான் பி.ஏ. பொருளாதாரம் படித்தபோது நடந்த நிகழ்ச்சி. மாணவர் தலைவர் தேர்தல். போட்டியிட்டு 32 ஓட்டுகள் குறைவாகப் பெற்று நான் தோல்வி அடைந்தேன். நான் அறிவும் விழிப்பும் பெற்றதற்கு மூல காரணம் அந்தத் தோல்வி. எத்தனையோ வகையில் அந்தப் பதவிக்குத் தகுதி எனக்கிருந்தும் நான் மாணவர்களால் நிராகரிக்கப்பட்டேன். பிறரது அங்கீகாரம் அல்லது அனுமதி பெறுகிற வெற்றி ஒரு வெற்றியே அல்ல என்று அப்போதுதான் நான் முடிவெடுத்தேன். என் வாழ்க்கை மாற்றம் அதனால் நிகழ்ந்தது. நமக்குள்ள தகுதியைப் புரிந்து கொள்கிற தகுதி பிறருக்கு இல்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்?

அந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றிருந்தால் அரசியலுக்குப் போய் நிறைய ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருப்பேன். ஆனால் எழுத்தும் பேச்சும் சமூக விழிப்பும் என் வாழ்வாகித் தோல்வியே அற்ற வெற்றிகளை நான் இன்று சந்திக்கிறேன். தேர்தலில் என்னைத் தோல்வியுறச் செய்த என் நண்பர் அரசியல் கட்சிகளில் சிக்குண்டு அவதிப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் நான் அவரைச் சந்தித்தபோது கண்ணீருடன் என் கைகளைப் பிடித்துக் கொண்டு, ""தேர்தலில் நான் வெற்றி பெற்றேன். ஆனால் நீ வாழ்க்கையில் வெற்றி பெற்றாய்'' என்றார். எனவே வெளியில் நிர்ணயமாகும் வெற்றி - தோல்விகள் ஒரு பெரிய விஷயம் அல்ல என்று நான் புரிந்துகொண்டேன். நீங்கள்..?

பெருந்தலைவர் காமராஜர் இந்தியாவில் ஒரு தமிழனும் அடைய முடியாத பெரும் புகழ் அடைந்த தமிழன். இமயம் முதல் குமரி வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்த பல முதலமைச்சர்களையும் பிரதம மந்திரிகளையும் தன் உத்தரவுக்குக் கட்டுப்பட வைத்த வலிமையான காங்கிரஸ் தலைவர் அவர். அவர் மட்டுமே. அவருக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு மக்கள் தலைவரைத் தமிழ் மண் கண்டதில்லை. பின்னும் இதுவரை ஒரு தலைவனைத் தமிழ் மண் தரவேயில்லை. ஆனால் அவரை அவரது விருதுநகர் மண்ணிலேயே ஒரு கல்லூரி மாணவர் தோற்கடித்தார். எப்படி முடிந்தது?

உணர்ச்சி வசப்படுகிற மக்கள் தீர்மானிக்கிற வெற்றி - தோல்விகள் பெரிய விஷயமே அல்ல. அதை விளக்கியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு விழாவில் பேசிய ஒருவர், ""பெருந் தலைவர் காமராஜரைத் தோற்கடித்த திரு. சீனிவாசன்'' என்று பேசிய போது பேரறிஞர் அண்ணா குறுக்கிட்டு, ""தேர்தலில் வெற்றி பெற்ற சீனிவாசன் என்று சொல்லுங்கள். "பெருந்தலைவர் காமராஜரைத் தோற்கடித்த' என்று சொல்லாதீர்கள். அவரை ஒரு போதும் யாராலும் தோற்கடிக்க முடியாது. அவர் வெற்றியை வரலாறு சொல்லும்'' என்று கூறினார். வாழ்வின் வெற்றி - தோல்விகள் ஒரு சில சம்பவங்களின் வெற்றி - தோல்விகளையே அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்பதைத் தயவு செய்து விளங்கிக் கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தோற்கவில்லை என்பதை இந்திய வரலாறு சொல்கிறது. நண்பர் ஒருவர் சொன்ன இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நண்பர் திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் தனியார் விரைவுப் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். அவருக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த பெரியவர் ஒருவர் கை கால் வலியால் அவதிப்படுகிறவர். பேருந்து எங்காவது நிற்காதா... கொஞ்சம் கையைக் காலை நீட்டிச் சோம்பல் தீர நடக்க மாட்டோமா என்று ஏங்கிப் புலம்பியிருக்கிறார். தனியார் பேருந்து... எனவே எங்கும் நிற்காமல் பேருந்து பறந்து போய்க் கொண்டே இருந்தது. முடிவில் ஓர் இடத்தில் இரவுக் கடை முன் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வண்டி நின்றது. ""ஐயா... ரொம்ப நேரமா இறங்கணும்னு சிரமப்பட்டீங்களே... இங்க இறங்கி நிக்கலாம் வாங்க...'' என்று பெரியவரை அழைத்திருக்கிறார். ""இது எந்த ஊருப்பா...'' என்றபடியே வெளியே எட்டிப் பார்த்த பெரியவர் ""சே... இங்க மனுஷன் இறங்குவானா?'' என்று மறுத்துவிட்டார். நண்பர் "ஏன்' என்று திகைத்தவுடன் பெரியவர், ""இது விருதுநகர். பெருந்தலைவரைத் தோற்கடிச்ச ஊருப்பா... இதுல கால் பட்டாக்கூடப் பாவம்'' என்றாராம்.

இப்போது புரிகிறதா? ஊரும் உலகமும் நிர்ணயித்த வெற்றி - தோல்விகளுக்கு அப்பாலும் சில வெற்றிகள் இருக்கின்றன. இன்னொன்று சொல்கிறேன். தத்ரூபமாகச் சிலை வடிக்கும் போட்டி ஒன்று நடந்தது. இரு சிற்பிகள் ஒரே மாதிரி இரு சிலைகளைச் செய்திருந்தனர். அவர்களுக்குள் கடும் போட்டி நிலவியது. நடுவர் குழு ஒருவரை வெற்றி பெற்றதாக அறிவித்தது. காரணமும் சொன்னது. ஒரு இளம்பெண் தலையில் திராட்சைப் பழக் கொத்துகளைச் சுமந்து செல்வது போல் சிலைகள் இருந்தன. ஒருவர் சிலையில் இருந்த திராட்சைக் கொத்துகளை நிஜம் என நம்பிக் காக்கைகள் கொத்த வந்தன. அதனால் அவர் வெற்றி பெற்றார் என்றனர் நீதிபதிகள்.

ஆனால் மற்றவர் செய்த சிலையில் இருந்த பெண்ணையும் அவர் கையில் இருந்த குச்சியையும் நிஜம் என்று பயந்த காக்கைகள் அந்தச் சிலை மீதிருந்த திராட்சைகளைக் கொத்தாமல் விட்டன. இது நீதிபதிகளுக்குப் புரியாமல் போய்விட்டது. அந்த நீதிபதியைப் பார்த்துக் காக்கைகள் தமக்குள் கேலியாகச் சிரித்தன. யாருடைய வெற்றி உண்மையான வெற்றி?

வெற்றி - தோல்விகள் வாழ்வின் ஓரிரு சம்பவங்களை மட்டுமே சார்ந்தவை அல்ல. அவை முழு வாழ்வையும் சார்ந்தவை. இதைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

last updated: Mar 21, 2016, 1:07 AM (IST) SHIFTING OF 141 MBBS STUDENTS MCI fined Rs1 lakh for delay in taking decision


Tribune News Service

Faridkot, March 20The Punjab and Haryana High Court has slapped a fine of Rs 1 lakh on the Medical Council of India (MCI) for inordinate delay in taking a decision regarding the shifting of 141 MBBS students of Chintpurni Medical College and Hospital (CMCH), Pathankot, to eight other medical colleges in the state.

Though the decision to shift the students was to impact the lives and careers of 141 medical students, the MCI failed to respond to the communication of the Punjab Government in the past six months.

The MCI cannot be permitted to take such matters so lightly, ruled the high court while imposing the fine.

After the state Medical Education Department had decided to shift the final year students from CMCH on August 31, 2015, the state government submitted a list of eight medical colleges to the MCI for its decision. But the MCI failed to respond despite the high court giving it six opportunities.

The state government had agreed to shift the students of the 2011 batch from CMCH as the college had failed to get approval to admit students in 2012, 2013 and 2015 due to various shortcomings.

Fearing that their MBBS degree might not be recognised by the MCI, the first batch of students who had joined the college in 2011 have been demanding that the state government should shift them to other medical colleges.

After some students filed a writ petition in the high court, the court had asked the Punjab Government to raise the matter with Centre and MCI to work out the possibility of shifting these students.

The Baba Farid University of Health Sciences (BFUHS) had also recommended to the state government to shift these students to other colleges after adopting the due procedure.

This shifting of the students is subject to the permission by the MCI, said Hussan Lal, secretary, medical education and research, Punjab.

NEWS TODAY 06.07.2026