Wednesday, March 23, 2016

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?

வங்கிகளுக்கு எத்தனை நாள் விடுமுறை?
DINAMALAR

சென்னை;'வங்கிகள், நாளை முதல், மார்ச், 31 வரை இயங்காது' என, வெளியான தகவலுக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சீனிவாசன் கூறியதாவது:மார்ச், 24 - ஹோலி பண்டிகை; 25 - புனித வெள்ளி; 26 - நான்காவது சனிக்கிழமை; 27 - ஞாயிற்றுக்கிழமை. இதனால், நான்கு நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை. தமிழகத்தில், ஹோலி பண்டிகைக்கு விடுமுறை இல்லை என்பதால், 24ல், இங்கு வங்கிகள் இயங்கும்.

பொதுத்துறையைச் சேர்ந்த, ஐ.டி.பி.ஐ., வங்கியை, தனியார் மயமாக்கும் மத்திய அரசின் செயலை கண்டித்து, மார்ச், 28ல், ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தம், ஐ.டி.பி.ஐ., வங்கியில் மட்டும் நடக்கும் என்பதால், மற்ற வங்கிகள், 28ல் வழக்கம் போல இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

ரயிலில் 'சீட்' ஒதுக்கீடு பட்டியல் உண்டு: பின் வாங்கியது தெற்கு ரயில்வே

ரயிலில் 'சீட்' ஒதுக்கீடு பட்டியல் உண்டு: பின் வாங்கியது தெற்கு ரயில்வே


DINAMALAR


சென்னை: ரயில் பெட்டிகளில், 'சீட்' ஒதுக்கீடு விவர பட்டியலை, மீண்டும் ஒட்டுவது என, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்யும் பயணிகளின் மொபைல் போன் எண்ணுக்கு, சீட் ஒதுக்கீடு விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட உடன், தகவல் சென்று விடுகிறது. இதனால், ரயில் பெட்டிகளில் சீட் ஒதுக்கீடு விவர பட்டியல் ஒட்டும் பணியை, படிப்படியாக நிறுத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்தது. முதற்கட்டமாக, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் - டில்லி நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில், மார்ச் 20ம் தேதி முதல், ஒரு மாதத்திற்கு சோதனை அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தனர்.


இதனால், முன்பதிவு செய்த போது, மொபைல் போன் எண் தராதவர்களில் சிலர், கடைசி நேரத்தில் தவிப்பிற்கு ஆளாகினர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள், தங்களுக்கு டிக்கெட் உறுதியாகி விட்டதா என்பதை அறிவதிலும் சிக்கல் ஏற்பட்டது.இதனால், இந்த விஷயத்தில் தெற்கு ரயில்வே பின்வாங்கி உள்ளது. 'இந்த ரயில்களில் சீட் ஒதுக்கீடு விவர பட்டியல், மீண்டும் ஒட்டப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை

பள்ளிகளுக்கு ஏப்., 22 முதல் கோடை விடுமுறை
DINAMALAR

தமிழகத்தில், அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, ஏப்., 22ம் தேதி முதல் மற்றும் 5ம் வகுப்பு வரை உள்ள துவக்கப் பள்ளிகளுக்கு, மே 1ம் தேதி முதல், கோடை விடுமுறை துவங்குகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து வருகின்றன. பிளஸ் 2வுக்கு, ஏப்., 1ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 10ம் வகுப்புக்கு, ஏப்., 11; விருப்ப பாடம் எழுதுவோருக்கு, ஏப்., 13ம் தேதி தேர்வுகள் முடிகின்றன. 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு, ஏப்., 15ம் தேதிக்குள் தேர்வுகள் முடிகின்றன.

அதே போல், 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 21; மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில், ஏப்., 30ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
எனவே, ஏப்., 22ம் தேதி முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும்; மே 1ம் தேதி முதல், துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும், கோடை விடுமுறை துவங்குகிறது. ஜூன் 1ம் தேதி, அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனரகம், விரைவில் வெளியிடும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

மாஜி கணவருக்கு கஷ்டம் கொடுக்காதீங்க!'பெண்ணுக்கு கோர்ட் அறிவுரை

மாஜி கணவருக்கு கஷ்டம் கொடுக்காதீங்க!'பெண்ணுக்கு கோர்ட் அறிவுரை

DINAMALAR

புதுடில்லி;'ஜீவனாம்சம் கேட்டு, முன்னாள் கணவருக்கு நிதிச்சுமை ஏற்றுவதற்கு பதில், வேலைக்குச் சென்று சம்பாதிக்கலாமே' என, முதுகலை பட்டதாரி பெண்ணுக்கு, டில்லி கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.டில்லியைச் சேர்ந்த அந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்றது. 'பெண்ணின் வாழ்க்கைக்காக, மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்' என, குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, கணவர், மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கை மாவட்ட நீதிபதி, ரேகா ராணி விசாரித்தார். விசாரணையின் போது, முன்னாள், கணவன் - மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜராகியிருந்தனர். அப்போது, கணவன், ''என்னை விட நன்றாக படித்திருக்கிறார். வேலைக்கு சென்றால், கை நிறைய சம்பாதிக்கும் திறமை அவருக்கு உள்ளது. ஆனால், அப்படிச் செய்யாமல், வீட்டிலேயே உட்கார்ந்திருக்கிறார்,'' என்றார்.

உடனே நீதிபதி, ''நீங்கள் தான், எம்.எஸ்சி., வரை படித்திருக்கிறீர்களே... முன்னாள் கணவருக்கு நிதிச் சுமை ஏற்றுவதற்கு பதில், வேலைக்கு செல்லலாமே,'' என அப்பெண்ணிடம் கேட்டார்.
அதற்கு அப்பெண், ''எனக்கு எந்த அனுபவமும் இல்லை; இதுவரைக்கும் நான் வேலை தேடிச் செல்லவும் இல்லை. தனியாக செல்ல பயமாக இருக்கிறது,'' என்றார்.
உடனே நீதிபதி, ''கணவனுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்காக கோர்ட் வரை தனியாக வந்த உங்களால், வேலை தேடுவதற்கு தனியாக செல்ல முடியாதா?'' எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட கணவர், ''அவர் வேலை தேடுவதற்காக, துணைக்கு செல்லவும், வேலை தேட உதவி செய்யவும் தயாராக இருக்கிறேன்.

அவர் வேலை தேடும் வரை, ஓராண்டுக்கு மட்டும், மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக வழங்கவும் தயாராக இருக்கிறேன்,'' என்றார்.இதை ஏற்ற நீதிபதி, ரேகா ராணி, ''ஓராண்டுக்குள் வேலை தேட வேண்டும். அதற்கு உதவி செய்வதாக கூறிய கணவனுக்கு, மொபைல் எண், இ-மெயில் முகவரியை மனைவி வழங்க வேண்டும். ஓராண்டுக்கு, மாதம், 12 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த உத்தரவு, ஓராண்டுக்கு மட்டுமே செல்லும்,'' என, உத்தரவிட்டார்.

344 மருந்துகளுக்கு விதித்த தடை தொடரும்:மத்திய அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் 'ஓகே'

344 மருந்துகளுக்கு விதித்த தடை தொடரும்:மத்திய அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் 'ஓகே'

DINAMALAR

சென்னை:'ஒன்றுக்கு மேற்பட்ட மருந்து கலவைகளை உடைய, 344 வகையான மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது' என, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.தென் இந்திய மருந்து உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் சேதுராமன், தாக்கல் செய்த மனு:பொதுநலன் கருதி
மத்திய சுகாதார துறை, 2016 மார்ச், 10ல் பிறப்பித்த உத்தரவில், 'பிக்சடு டோஸ் காம்பினேசன்' எனப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட மருந்து கலவைகளை உடைய, 344 வகையான மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது' என, தெரிவித்துள்ளது; பொதுநலன் கருதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த மருந்துகள், பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.ரகசியமாக... மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், இந்த குழு அமைக்கப்படவில்லை. அனைத்து நடவடிக்கைகளும், ரகசியமாக வைக்கப்பட்டன. மத்திய அரசு உத்தரவு பொதுநலனுக்கு எதிரானது. ஏனெனில், இந்த மருந்துகளைத் தான், பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மத்திய அரசின் உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, மத்திய அரசின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு
உள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், தமிழக அரசு சார்பில், அரசு பிளீடர் மூர்த்தி, 'நோட்டீஸ்' பெற்றனர்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசின் உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது; விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என, உத்தரவிட்டுள்ளதும், எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்தில், நாங்கள் உடன்படவில்லை; அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. பல ஆண்டுகளாக மருந்து விற்பனை நடந்து கொண்டிருப்பதால், அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என, கூற முடியாது. இந்தப் பிரச்னையை ஏற்கனவே, நிபுணர் குழு ஆராய்ந்துள்ளது. அனைத்து நடைமுறைகளும், சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டனவா என்பது, விசாரணையின் போது ஆராயப்படும். மத்திய அரசு உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட மருந்துகளை
விற்கக்கூடாது.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மருந்துகளை வைத்திருக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும், 'ஸ்டாக்கிஸ்ட்'கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

MCI for overhaul of medical curriculum


MCI for overhaul of medical curriculum

TIMES OF INDIA

Ahmedabad: In a rare instance, senior members of Medical Council of India (MCI) interacted directly with medical students. At NHL medical college's Adrenaline Medical Conference held within VS Hospital campus on Sunday, the president of MCI, Dr Jayshree Mehta, along with past MCI president and president-elect of World Medical Association, Dr Ketan Desai and chairman of academic council, MCI, Dr Vedprakash Mishra accepted questions from a jam-packed audience including faculty at the college. The conference was moderated by Adit Desai, chairman of the Adrenaline Conference.

Many students at this interactive session were eager to learn from MCI president Jayshree Mehta whether there was any scope for research in the present medical curriculum. She replied, "The MCI has just recently given directions to create a research centre in every medical college to promote research activities amongst undergraduate and postgraduate students."

Another hot issue was the status of the National Entrance Eligibility Test (NEET) in the coming years. The NEET entrance exam will eliminate separate common entrance tests conducted by colleges, and instead prescribe a common exam for all undergraduate, as well for postgraduate courses across medical colleges. Dr Desai said, "A review petition has been filed by the MCI as wells as the central government with the constitution bench of five judges. The matter will be taken up for final hearing by the Supreme Court." Desai added, "In the meantime MCI has already recommended to the central government to amend the MCI Act to empower the MCI to conduct the NEET examination."

Dr Mishra assured the audience, "The MCI has recommended complete revamp of the curriculum to make it a competency-based curriculum."

Many students were also concerned over the affordability of medical education. They had asked as to how the MCI plans to increase social equity in medical education. Other questions revolved around inclusion of credit based award system, possibility of integrated learning in medical education. Adit Desai said, "This happens to be rare occasion where MCI panel members engaged directly with students. This interaction was successful, and I feel more such events should be held."

OCI cards enough to visit India

OCI cards enough to visit India


THE HINDU

Overseas citizens of India and Indian Origin just need OCI document and will not require a visa, but passport will be mandatory

The Indian diaspora will no longer have to get a visa affixed on their passports every time they travel to India as the Union government has decided to do away with the process.

The government has decided that since the categories Overseas Citizen of India (OCI) and the Persons of Indian Origin (PIO) were merged last year, the OCI card will suffice to enter the country and hence would require no visa.

Carrying a passport will, however, be mandatory, an official said.

“Till now, every OCI card holder also had to get a visa affixed from the Indian High Commission whenever they planned a visit to India. Now, only the OCI card will be needed,” a senior government official said.

The government is also planning to make arrangements to print OCI cards at a few big missions like the U.K and the U.S., countries where many Indians reside.

The OCI card bears certain security features that cannot be tampered with and are made after several layers of checks.

Prime Minister Narendra Modi announced in 2014 that the PIO and OCI would be merged for the benefit of the diaspora.

Amendment

The government amended the Citizenship Act last year and a notification was issued to merge the two cards.

“Since the announcement, there was a lot of confusion among the diaspora regarding the two cards. The respective missions in foreign countries held workshops and tried to clear doubts. The earlier deadline to migrate from PIO to OCI was January 2016, but we have now extended the deadline to June 30,” the official said.

An official explained that the move would also help create a database of the Indian diaspora as a consolidated figure is not present with the government.

After the notification was issued last year, only one OCI card with enhanced benefits is in existence.

Ordinance

“Keeping in view the promise [made by PM Modi in the USA and Australia in 2014], an ordinance was promulgated on January 6, 2015 whereby the eligibility and additional benefits of the PIO card have been incorporated in the OCI card and certain other relaxation to OCI card holders have been given by amending the Citizenship Act, 1955. The PIO and the OCI cards used to exist simultaneously, leading to a lot of confusion among the PIOs residing abroad,” an official said.

NEWS TODAY 23.12.2025