Thursday, May 26, 2016

State governments can either conduct their own exams or opt for NEET

State governments can either conduct their own exams or opt for NEET


All private colleges will now come under the ambit of National Eligibility cum Entrance Test (NEET), the Centre said on Tuesday. However, in a major relief to parents and students, while considering the state governments' concerns over state-level examinations already conducted in regional languages and different syllabi from All India Pre-Medical Test, the Centre has given state governments the option to either conduct their own exams or opt for NEET to fill undergraduate seats.

For PG courses though, the exam will be held under NEET for 2017-18 session in December this year. The declaration came after President Pranab Mukherjee on Tuesday gave his assent to the ordinance on NEET.

"NEET is being implemented from the current year itself for UG admissions in all private institutions in respect of their seats. The first phase was conducted on May 1 and the second phase shall be held on July 24. Only state government seats in government medical colleges and state government seats in private institutions will have exemption if the concerned state government so chooses in the current year," said JP Nadda, Union health minister.

"The management quota seats shall be filled by the respective private colleges, associations of colleges and/or private universities, deemed universities through the NEET UG-2016 examination only, in all the states even for this year. From next year, starting with PG examination in December 2016, NEET will fully apply without any exemption," he added.

"The states that have deferred the exams are West Bengal, Chhattisgarh, Assam and Andhra Pradesh. PG exams in December 2016 will be a complete NEET," said Nadda.

"The states had not effectively put forth their views in the right perspective before the Supreme Court. In order to provide them relief, we brought this Ordinance," he said.

The medical fraternity has raised concerns over exorbitant fees expected to be charged by private colleges with the implementation of NEET. "As private colleges have hinted at an increase in fees, there has to be strict regulation in this regard on the state level and there should be a cap on fees in private colleges," said Dr AK Chandna, member, Dental Council of India (DCI).

நுழைவுத்தேர்வு அவசர சட்டத்திற்கு எதிராக மனு



DINAMALAR

புதுடில்லி : மருத்துவ பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆனந்த்ராய் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் விவகாரத்தை வெளிக் கொண்டு வந்தவர் இந்த ஆனந்த்ராய் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுவை விரைந்து விசாரிக்க கோரி இவர் நாளை சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரி செலுத்தாத கோடீஸ்வரர்கள் பெயர்கள் வெளியிடப்படும்: வருமான வரித் துறை தகவல்

ஒரு கோடிக்கு மேல் வரி நிலுவை களை செலுத்தாமல் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய விவரங் களை வெளியிட வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது. ஒரு கோடி மற்றும் அதற்கும் அதிகமாக வரு மான வரி செலுத்தாமல் உள்ளவர் கள் குறித்த விவரங்களை அறி விக்க நடப்பாண்டு தொடக்கத்தி லேயே வருமான வரித்துறை முடிவெடுத்துள்ளது.
வரி செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை தேசிய அளவில் நாளிதழ்களில் வெளியிடும் நடைமுறையை கடந்த ஆண்டிலிலேயே வருமான வரித்துறை தொடங்கிவிட்டது. கடந்த ஆண்டில் வரி நிலுவை வைத்திருந்த 67 நபர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் நிலுவை வைத்துள்ளவர்களின் முகவரி, பான் எண், நிறுவனங்கள் என்றால் பங்குதாரர்கள் விவரம் போன்ற விவரங்கள் வெளியிடப்படும்.
இதற்கு முன்னதாக வரி நிலுவை செலுத்த தவறியவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. ரூ.20 கோடி முதல் ரூ. 30 கோடி வரி நிலுவை வைத்துள்ளவர்கள் விவரம் மட்டுமே வெளிவரும். ஆனால் புதிய விதிமுறைகள்படி ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.1 கோடி நிலுவை வைத்துள்ள வர்களது பெயர்களும் வெளியிடப்பட உள்ளது.
இது `நேம் அண்ட் ஷேம்’ என்கிற திட்டத்தின் கீழ் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2016-17 நிதியாண்டின் மார்ச் 31 தேதி வரை 1 கோடிக்கும் அதிகமாக வரி நிலுவை செலுத்தத் தவறியவர்கள் பெயர் கள் வெளியிடப்படும். குறிப்பாக அடுத்த ஆண்டு ஜூலை 31க்கு முன்னதாக வெளியிடப்படும் என்று வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் முதலிடம் பிடித்த தையல் தொழிலாளியின் மகள் அரசியலில் ஈடுபட விருப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில், அரசுப் பள்ளியில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.ஜனனி, 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவரது மதிப்பெண்: தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்- 100, சமூக அறிவியல் 100. ஒட்டுமொத்தமாக மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
என்.ஜனனி கூறியதாவது: எனது சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர்கள், தலைமையாசிரியை என அனைவருக்கும் பங்கு உண்டு. என்னுடைய தந்தை நாரயண சாமி, தாய் சுமதி. தந்தை தையல் தொழில் செய்து வருகிறார்.
பள்ளியில் சிறப்பு வகுப்பு கற்பிக்கப்பட்டது. இதனால் மாநில அளவில் முதலிடம் பிடிக்க முடிந்தது. மேல்நிலை வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். ஐஏஎஸ் தேர்வு எழுதி ஆட்சியராக பணியாற்ற வேண்டும். மேலும் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறேன் என்றார்.
கிருஷ்ணகிரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஸ்வேதா, வேலூர் சோளிங்கர் திருமதி எத்திராஜம்மாள் முதலியாண்டார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நேகா கவுசர் ஆகியோர் 500-க்கு 496 மதிப்பெண் எடுத்து 2-ம் இடம் பெற்றனர்.
ஈரோடு சவக்காட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஹரிணி, புதுக்கோட்டை கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.பவ தாரணி, புதுக்கோட்டை ராணி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவி நிஷாத் ரஹீமாமா, கரூர் மலைக்கோவிலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.சந்திர சேகர், திருவண்ணாமலை பெருங் காட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.மேகலா, திருவண்ணாமலை இரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி என்.தீபா, சென்னை விருகம்பாக்கம் ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கேத்ரீன் அமலா ராக்கினி ஆகியோர் 500-க்கு 495 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்

முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்ல’ கிரகப்பிரவேச பத்திரிகை.

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவரது போயஸ் தோட்ட இல்லத்தின் கிரகப்பிரவேசம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15-ம் தேதி நடந்துள்ளது.

கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக் குமாறு உள்ள இந்த பத்திரிகையை, பம்பாய் வாகில் நிறுவனம் வடி வமைத்திருந்தது.

முகவரி விளக்கம்

கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை’ என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர்.

எம்ஜிஆர் 100 | 72 - உதவும் மனம்!


M.G.R. திரையுலகில் இருந்த காலத்தில் பிரபலமான நடிகர்களாக இருந்தும், சந்தர்ப்பங்கள் சரியாக அமையாததால் அவருடன் நடிக்க முடியாமல் போன நடிகர்கள் சிலர் உண்டு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் ஜெய்சங்கர்.

1965-ம் ஆண்டு வெளியான ‘இரவும் பகலும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, தனக்கென தனி பாணியில் நடித்து மக்கள் கலைஞர் என்று புகழ் பெற்றவர் ஜெய்சங்கர். இவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. எம்.ஜி.ஆரைப் போலவே பிறருக்கு உதவும் குணம் கொண்டவர். ராஜேந்திர குமார், தர்மேந்திரா நடித்து இந்தியில் வெளியான ‘ஆயி மிலன் கி பேலா’ என்ற படம்தான் தமிழில் ‘ஒரு தாய் மக்கள்’ ஆனது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நடிப்பதாக இருந்தது. 1966-ம் ஆண்டில் ‘பேசும் படம்’ பத்திரி கையில் விளம்பரமும் வெளியானது. ஜெய்சங்கர் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். அவருக்கு ‘வெள்ளிக் கிழமை ஹீரோ’ என்றே பெயர். அந்த அளவுக்கு பெரும்பாலும் வெள்ளிக் கிழமைதோறும் அவரது படங்கள் வெளியாகும். ஒரே ஆண்டில் 16 படங் களில் கதாநாயகனாக நடித்தவர்.

திரைத்துறையில் மட்டுமின்றி; அர சியல் துறையிலும் எம்.ஜி.ஆர். பிஸி யாக இருந்ததால் படப்பிடிப்புகளில் அவர் கலந்துகொள்வதில் தாமதம் ஏற்படும். இடையில், 1967-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு சம்பவம் வேறு. பல மாதங்கள் அவருக்கு படங்களில் நடிக்க முடியாத நிலை. ‘ஒரு தாய் மக்கள்’ படத் தயாரிப்பும் தாமதமாகி 1971-ம் ஆண்டுதான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து படம் வெளியானது.

பல படங்களில் நடித்து வந்த ஜெய் சங்கருக்கு எம்.ஜி.ஆருக்கு ஏற்றார் போல, கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. அவர் நடித்த மற்ற படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்ற சூழ்நிலையில், ‘ஒரு தாய் மக்கள்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டார். பின்னர், அந்தப் படத்தில் ஜெய்சங்கருக்குப் பதிலாக முத்துராமன் நடித்தார்.

ஜெய்சங்கர் எந்தக் கட்சியையும் சாராதவர். பிற்காலங்களில் திமுக தலை வர் கருணாநிதி வசனம் எழுதிய சில படங்களில் நடித்தார் என்ற வகையில் அவர் மீது திமுக முத்திரை குத்தப்பட்டது. ஆனால், கட்சி நிர்வாகிகளின் சொத்துக் கணக்கு கேட்டதற்காக திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட பின், 1974-ம் ஆண்டில் ஜெய்சங்கர் நடிப்பில், ‘உன்னைத்தான் தம்பி’ என்ற படம் வெளியானது. அதில் ஜெய்சங்கர் பேசும் வசனங்கள் எம்.ஜி.ஆருக்கு ஆதர வாக அவர் பேசுவது போல இருக்கும்.

1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப் பட்ட பின், தேர்தலை தமிழகம் எதிர் நோக்கியிருந்த நேரம். அப்போது வெளி யான ‘பணக்காரப் பெண்’ படத்தில், ‘ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா,  ராமச்சந்திரா, தர்மம் ஜெயிக்கும் என்று சொன்னவனே ராமச்சந்திரா,  ராமச் சந்திரா, நீ நாடாள வரவேண்டும் இந்த நாளிலே...’ என்ற டி.எம்.சவுந்தரராஜன் பாடிய பாடல் இடம்பெறும். இந்தப் பாடலை படத்தில் ஜெய்சங்கர் பாடி நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக கருதப்பட்ட இந்தப் பாடல் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால், ஜெய்சங்கர் அதிமுகவைச் சேர்ந்தவர் என்று அர்த்தமல்ல. ஒரு நடிகர் என்ற முறையில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஜெய்சங்கர் செய்தார். மற்றபடி, எல்லோரையும் நண்பர்களாகக் கருதி பழகியவர் அவர்.

சத்யா ஃபிலிம்ஸ் பேனரில் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்த ‘கன்னிப் பெண்’ படத்தில் ஜெய்சங்கர் நடித்தார். படப்பிடிப்பை கிளாப் அடித்து தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர்.தான்! அப்போது, எம்.ஜி.ஆருடன் ஜெய்சங்கர் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். உடலைக் கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதற்கான உடற்பயிற்சிகள் பற்றி அவருக்கு எம்.ஜி.ஆர். ஆலோசனைகள் கூறினார்.

அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரின் மெய்க் காப்பாளர்களில் ஒருவரும் ஸ்டன்ட் நடிகருமான கே.பி.ராமகிருஷ்ணனும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். எம்.ஜி.ஆர். சென்ற பிறகு, அவரைப் பற்றி தனது கருத்தை ராமகிருஷ்ணனிடம் ஜெய்சங்கர் பகிர்ந்துகொண்டார். ‘‘எம்.ஜி.ஆரிடம் எனக்குப் பிடித்தது மற்றவர்களுக்கு உதவும் அவரது தாராள குணம். திரையுலகிலும் அரசியலிலும் அவரவர்கள், தாங்கள் சார்ந்த கட்சியினரை திருப்திப்படுத்துவதற்காக வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிறருக்கு கொடுப்பதை விளம்பரத்துக்காகக் கொடுக்கிறார் என்று குறை கூறலாம். ஆனால், பிறருக்கு உதவும் அவரது உயர்ந்த குணத்தை என்னைப் போன்ற நடுநிலையாளர்கள் ரசிக்காமலும் பாராட்டாமலும் இருக்க முடியாது’’ என்று ஜெய்சங்கர் தன்னிடம் கூறி யதை நினைவுகூர்கிறார் கே.பி.ராம கிருஷ்ணன்.

‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக எம்.ஜி.ஆருக்கு இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருது வழங்கப்பட்டது. அது தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது. ‘‘எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது கொடுத்திருப்பது நியாயம் தானா?’’ என்று ஜெய்சங்கரிடம் நிருபர் கள் கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘இது ஜனநாயக நாடு. மக்கள் விரும்பினால் தவிர படம் ஓடாது. எம்.ஜி.ஆர். படங்கள் சில 25 வாரங்கள் தாண்டி ஓடுகின்றன. 35 வருடங்களாக சினிமாவில் நடித் துக் கொண்டிருக்கிறார். பல வருடங்க ளாக கதாநாயகனாக நடித்து வருகி றார். இன்னும் பல படங்களுக்கு கதா நாயகனாக ஒப்பந்தமாகிக் கொண்டு இருக்கிறார். ஆக, மக்கள் ஏற்றுக் கொண் டார்கள் எனும்போது தேர்வுக் குழுவினர் ஏற்றுக் கொண்டதை நாம் ஏன் மறுக்க வேண்டும்? ‘பாரத்’ விருது அவருக்கு வழங்கப்பட்டதை நான் வரவேற்கிறேன். மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று ஜெய்சங் கர் மனமார எம்.ஜி.ஆரை வாழ்த்தினார்.

‘பாரத்’ விருது பெற்றதற்காக பத்திரி கையாளர்கள் சங்கம் சார்பில் சென் னையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடத்தப் பட்டது. கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும் போது, ஜெய்சங்கரின் இந்தப் பேட்டி யைப் பற்றிக் குறிப்பிட்டார். ‘‘உண்மை எப்படி இருக்கிறது என்பதல்ல; அந்த உண்மையை வெளியில் சொல்ல துணிவு வேண்டும். அதற்காக ஜெய் சங்கருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆருக்கு தன்னைப் போலவே பிறருக்கு உதவும் ஜெய்சங்கரைப் பிடிக்கும். உண்மையையும் பிடிக்கும்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம்.


எம்.ஜி.ஆரோடு ஜெமினிகணேசன் நடித்த ஒரே படம் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான ‘முகராசி’. எம்.ஜி.ஆரின் அண்ணனாக ஜெமினி கணேசன் இந்தப் படத்தில் நடித்திருப்பார்.

Tuesday, May 24, 2016

ஜெ., பதவியேற்பு:'மாஜி'க்கள் ஏமாற்றம்

முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு கிடைக்காததால், தே.மு.தி.க., 'மாஜி'க்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்கள் சுந்தர்ராஜன், பாண்டியராஜன், நடிகர் அருண் பாண்டியன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சாந்தி, சுரேஷ்குமார், அருண் சுப்பிரமணியன். இவர்கள், கடந்த ஆட்சி காலத்தில், அ.தி.மு.க., ஆதரவாளராக செயல்பட்டனர். ஆட்சி காலத்தின் இறுதியில், அ.தி.மு.க.,வில் இணைந்தனர்;
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். இதில், பாண்டியராஜனுக்கு மட்டுமே, தேர்தலில்
போட்டியிட அ.தி.மு.க., தலைமை வாய்ப்பு வழங்கியது. அவர் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்கள், 'சீட்' கிடைக்காததாலும், அ.தி.மு.க.,வினர் தங்களை ஓரம் கட்டியதாலும், கடும் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு கிடைக்கும் என, இவர்கள் எதிர்பார்த்தனர். இதற்காக சிலர், இரண்டு நாட்களாக சென்னையில் முகாமிட்டு அழைப்பிதழை பெற, அ.தி.மு.க., தலைமை
அலுவலகத்தில் முயற்சித்தனர். ஆனால், கடைசி வரை அழைப்பு கடிதம் கிடைக்கவில்லை. இதனால், ஏழு பேரும் கடும் ஏமாற்றம் அடைந்தனர்;
விரக்தியுடன் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.- நமது நிருபர்- -

ரகசியம் காப்போம்!

ரகசியம் காப்போம்! ரகசியங்களை பொது வெளியில் அல்லது மறைமுகமாக பிறருடன் பகிர்ந்து கொள்வது புதிதல்ல, புதிரல்ல. தினமணி செய்திச் சேவை Updated on: ...