Friday, December 9, 2016

எப்படி இருக்கிறது போயஸ் கார்டன்?  அதிரும் அடுத்தடுத்த காட்சிகள் 


பரபரப்புடன் காணப்படும் போயஸ் கார்டன் இப்போது கூடுதல் பரபரப்பாகி உள்ளது. இதுவரை நடந்திராத வகையில் போர்டிகோவில் சசிகலாவின் பென்ஸ் எம்.எல் என்ற வகை கார் புதியதாக இடம்பிடித்துள்ளது.

வி.வி.ஐ.பிக்கள் வாழும் பகுதி போயஸ் கார்டன். இதில் 81, வேதா நிலையத்தில் கெடுபிடிகளுக்கு பஞ்சமிருக்காது. அவ்வழியாக செல்பவர்களிடம் கூட பல கேள்விகளை கேட்டு துளைக்கும் காவல்துறை. அந்தளவுக்கு பல பாதுகாப்பு அடுக்குகளைக் கொண்டதுதான் வேதாநிலையம் என்றழைக்கப்படும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டபிறகே யாராக இருந்தாலும் அனுமதிக்கப்படுவர்.

ஜெயலலிதாவைப் பார்க்க கால்கடுக்க காத்திருக்கும் கூட்டம் கட்டுக்கடங்காது. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையாவது நம்மீது பட்டுவிடாதா என்ற தவிப்பில் காத்திருக்கும் தொண்டர்கள் கூட்டம். காரின் முன்பக்க சீட்டில் அமர்ந்திருந்து தொண்டர்களையும், மக்களையும் கைகளை கூப்பியபடி மெல்லிய புன்னகையோடு ஜெயலலிதாவைப் பார்த்து புரட்சித் தலைவி அம்மா வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளக்கும். ஆனால் அந்த கோஷங்கள் இப்போது போயஸ் கார்டனில் இல்லை.

கவலைதோய்ந்த முகத்துடன் கரைவேட்டிகளோடு காட்சியளிக்கும் தொண்டர்களின் கூட்டம் குறைந்துள்ளது. வேதா நிலையத்திலிருந்து என்ன தகவல் வரும், யாரெல்லாம் உள்ளே, வெளியே செல்கிறார்கள் என்ற கண்காணிப்போடு மீடியாக்களும் காத்திருக்கின்றனர்.

ஜெயலலிதாவின், போயஸ் கார்டன் வீடு இப்போது எப்படி இருக்கிறது என்று உள்விவரம் தெரிந்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அதே பாதுகாப்பு, கெடுபிடி இப்போதும் அங்கு இருக்கிறது. அங்கு இருப்பவர்கள் அம்மா இன்னும் அங்கேதான் இருக்கிறார் என்ற நினைவுகளை சுமந்தபடி இருக்கின்றனர். முதல்தளத்தில் ஜெயலலிதாவின் அறை. அதன் அருகில்தான் கட்சியினரை சந்திக்கும் அறை. இப்போது காலியாக காட்சியளிக்கின்றன. அந்த வீட்டில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், நந்தகுமாரை தற்போது பார்க்க முடியவில்லை. அடுத்து உதவியாளரான ஹரி மட்டும் கவலையுடன் இருக்கிறார். மேலும், ஜெயலலிதாவின் கார் மட்டுமே முன்பு போர்டிகோவில் நிறுத்தப்படும். தற்போது அந்த இடத்தில் டி.என். 1111 என்ற வாகன பதிவுடன் கூடிய சசிகலாவின் பென்ஸ் எம் எல் என்ற வகை கார் நிறுத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் அறைக்கு சசிகலா சென்று வருகிறார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அந்த அறை பூட்டியே இருந்துள்ளது. சசிகலாவும், இளவரசியும் தங்களது அறைகளை விட்டு அவ்வளவாக வெளியே வருவதில்லையாம். ஆக மொத்தத்தில் வேதா நிலையத்தில் முழுஅமைதி நிலவுகிறது" என்றார்

முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று காலை போயஸ் கார்டனுக்கு சென்றனர். அவர்களுடன் சசிகலா, ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். அந்த முடிவுகள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். அடுத்து யார் பொதுச் செயலாளர், கட்சியை எப்படி வழிநடத்த வேண்டும், ஜெயலலிதா இல்லாத இந்த சமயத்தில் எதிர்கொள்ளப் போகும் சவால்களை எப்படி சமாளிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் சொல்கின்றனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அ.தி.மு.க.வின் அதிகார மையம் சசிகலாவை நோக்கியே செல்லத் தொடங்கி உள்ளது.

ஜெ., மரணத்தில் ஏன் ரகசியம்? - கௌதமியின் கடிதம்

December 8, 2016

TRAGEDY AND UNANSWERED QUESTIONS

The Honourable Prime Minister of India,

Shri Narendra Modiji

Dear Sir,

I write this letter to you today as an ordinary citizen of India. I am a homemaker, a mother and a working woman. My concerns and priorities in my life are those that are shared by many of my fellow countrymen, primarily to build a safe and nurturing environment for my family that will allow them to live a safe and fulfilled life.

I am also one among the crores who are mourning the recent shocking demise of our late Chief Minister, Selvi Dr. J Jayalalithaa ji. She was a towering personality in Indian politics and was a great inspiration for women from all walks of life. Her leadership of Tamil Nadu, over several terms in office, has brought us to the forefront in many spheres of development. Selvi Dr. Jayalalithaa ji’s undeniable strength and determination to persevere against all odds are a lasting legacy that will continue to inspire individuals of every gender to persist in pursuit of their dreams in life.

Her demise is all the more tragic and unsettling because of the circumstances over the past few months and the sheer volume of unanswered questions about our late Chief Minister’s hospitalisation, treatment, reported recovery and very sudden passing. There has been a near total blanketing of information regarding these matters. Nobody had been allowed access to her and many dignitaries who visited her with deep concern were denied an opportunity to convey their wishes in person. Why this secrecy and isolation of a beloved public leader and the head of the Tamil Nadu government? What/whose authority restricted access to the late Chief Minister? Who were the concerned persons who were making the decisions about Selvi Dr. J Jayalalithaa ji’s treatment and care when her health was apparently in such a delicate state? And who is responsible for these answers to the people? These and many other burning questions are being asked by the people of Tamil Nadu and I echo their voice in bringing them to your ears, sir.

No doubt some might say that it is a moot point because it has happened as it has, but that, sir, is precisely my fear. I ask these questions now because it is a primary concern and right of every citizen of India to be aware of and informed about their democratically elected leaders. To be aware of their state of health and ability to perform their duties for the larger good of the people. To be concerned for the wellness and comfort of a beloved leader of the masses. And the fact that a tragedy of such tremendous scale should not go unquestioned and definitely, not unanswered, under any circumstances. If this be the case with a public figure of this magnitude, then what chance does the common citizen of India have when he fights for his personal rights? The confidence of every Indian in the democratic process that makes our nation so great is precious and must be protected against all odds.

I am writing to you now, sir, with the complete confidence that you share my anxiety and determination to uphold the rights of every Indian to be aware and informed of any factor that impacts our day to day life. You have proven yourself in many ways to be a leader who is unafraid to stand up for the rights of the common man and I am confident that you will heed the call of your fellow countrymen.

With my deepest respects and trust

Jai Hind!

Gautami Tadimalla

08.12.2016

4/472, Kapaleeswarar Nagar

Neelankarai, Chennai 600041

+917338713979

சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா...? : முழுப் பின்னணி

சசிகலா

vikatan.com

தமிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக் குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது?

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தபோது எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்குவார். ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் தொடர்பு மூலம் ரயில்வேயில் சிறுசிறு கான்ட்ராக்ட்களை எடுத்துச் செய்தார்.

அப்படித்தான் சேகர் ரெட்டி சென்னையில் கால்பதித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தன் நண்பர் பிரேம் என்பவருக்குச் சொந்தமான விடுதியில் தங்கி, கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்கள் தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து வந்தார்.

எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறையப் பணிகள் நடைபெறும். அது தொடர்பான கான்ட்ராக்ட்களைப் பெற, சட்டமன்ற விடுதியில் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துப் பேசுவார். டெண்டர் சிபாரிசுக்காக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்தபோது, ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டன. அதன்மூலம், 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

திருப்பதி செல்வாக்கு!

திருப்பதி கோயிலில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. திருப்பதி கோயில் உயர் அதிகாரிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது சேகர் ரெட்டிதான். திருப்பதி கோயில் பிரசாதம் மற்றும் லட்டுகளை வாராவாரம் வாங்கித் தந்து, பல வி.ஐ.பி-க்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். வேலூர் கலெக்டராக இருந்த ஒருவருக்கு, திருப்பதியில் வேண்டிய உதவிகளைச் செய்தார் சேகர் ரெட்டி. அதன்மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் நுழைந்தார்.

‘நம்பிக்கை’ என்றால் ரெட்டி!

அரசியல் வட்டாரத்தில் நெருங்கியபோதுதான் டாக்டர் விஜயபாஸ்கரின் நட்பு கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். தனியார் மருத்துவமனையில் விஜயபாஸ்கர் டாக்டராகப் பணியாற்றிய நேரத்தில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை சேகர் ரெட்டிக்கும் அறிமுகம் செய்துவைத்தார் விஜயபாஸ்கர். யாருடன் பழகினாலும் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடுவது சேகர் ரெட்டியின் ப்ளஸ். இது, எல்லோருக்கும் பிடித்துவிட வி.ஐ.பி-க்கள் வட்டாரத்தில் உலவ ஆரம்பித்தார்.

தி.மு.க ஆட்சியின்போதும் அதிகாரிகள் துணையுடன் சகல காரியங்களையும் செய்து வந்தார். அந்த ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை எடுத்து கைமாற்றிவிட்டு, பணம் சம்பாதித்து வந்தார். அ.தி.மு.க ஆட்சி வந்ததும், அவருக்கு மீண்டும் ராஜயோகம் அடித்தது.

அதிகாரி ஆசி!

கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவருடன் சேகர் ரெட்டிக்கு நெருக்கம் அதிகம் ஆனது. இருவரும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள். இப்போது, அந்த அதிகாரி... அதிகார மையத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அந்த அதிகாரியின் ஆசி இப்போதும் அவருக்கு உண்டு. அவருடைய மகள் திருமணம் நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேகர் ரெட்டிதான் பார்த்தார். அவரின் ஆதரவோடு அரசின் பெரிய கான்ட்ராக்ட்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன. அவருக்குப் போகத்தான், மற்றவர்களுக்கு கான்டராக்ட்கள் கிடைக்கும் என்கிற நிலை உருவானது. ஒரு கட்டத்தில், ஆறுமுகசாமியிடம் இருந்து மணல் கான்ட்ராக்ட் பறிபோனதற்கு... அந்த அதிகாரிகளும் சில அமைச்சர்கர்களும் சேர்ந்த கூட்டணிதான் காரணம்! புதுக்கோட்டை ராமச்சந்திரன், சேகர் ரெட்டி வசம் இன்று மணல் பிசினஸ் போய்விட்டது!

செல்வாக்கு!

ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. மொத்த கேபினெட்டும் அம்மாவுக்காக பூஜை புனஷ்காரங்களில் இருந்தபோது... இந்த ஃபைல் மட்டும் மூவ் ஆனது என்றால், சேகர் செல்வாக்கைக் கவனியுங்கள். திருப்பதியில் மொட்டை போட போனபோது, ஓ.பன்னீர்செல்வத்துடன் போகும் அளவுக்கு நெருக்கம். பன்னீர்செல்வத்தின் அந்தப் பயண ஏற்பாட்டைச் செய்தவர் அவர்தான்.

கார்டனில் ஒலிக்கும் பெயர்!

அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல வளையங்களைத் தாண்டி கார்டனுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் சேகர் ரெட்டி. காலப்போக்கில் டாக்டர் வெங்​கடேஷ் உள்ளிட்டோர் கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டபோதும் விசுவாசத்தின் விளைவாக கார்டனுக்குள் நிலைத்து நின்றார். கார்டனில் அதிகமாக ஒலிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது சேகர் ரெட்டியின் பெயர். கார்டனுக்குத் தேவையான எதையுமே இவர்தான் செய்து முடிக்கிறார். இப்போது, அ.தி.மு.க-வில் சேகர் ரெட்டி அசைக்க முடியாத ஆள். தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், கலியமூர்த்தி, ‘மிடாஸ்’ மோகன் போன்றவர்கள் கண் அசைவுக்கு அ.தி.மு.க-வினர் தவம் கிடந்ததுபோல, சேகர் ரெட்டியைப் பார்க்கக் காத்துக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். சேகர் ரெட்டி போன் என்றால், அமைச்சர்கள் பலர் எழுந்து நின்றுதான் பேசுவதாகக் கிண்டல் அடிக்கிறார்கள். இவ்வளவு அதிகாரத்தோடு வலம் வந்தாலும்... அவர், அ.தி.மு.க-வில் வெறும் உறுப்பினர் மட்டுமே!

வளைக்கும் பி.ஜே.பி.!

இன்று (8-12-16), சேகர் ரெட்டியின் தி.நகர், அண்ணா நகர் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது பி.ஜே.பி பிரமுகர் ஒருவர், பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பி.ஜே.பி அதற்கான முதல்கட்ட வேட்டையை தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு, பி.ஹெச்.பாண்டியனையோ அல்லது செங்கோட்டையனையோ நியமிக்க வேண்டும் என்றும், தம்பித்துரையை மத்திய அமைச்சர் ஆக்கும் யோசனையும் இருப்பதாக சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துமனையில், சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டனர். அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு, அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த பைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன், அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, விமானத்தைவிட்டு 20 நிமிடங்கள் கழித்தே வெளியே வந்தார். விமானத்தில்... அவர், ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தார். வரும் காலங்களில் யாரிடம் பேசுவது, என்ன செய்வது என்கிற உத்தரவுகளை பிரதமர், அவர்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார். அதன்படி, தமிழகத்தில் ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில்... தம்பித்துரை மட்டுமே தொடர்பாக இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அப்போது, இன்னும் பல விஷயங்கள் நடக்கும். அதற்குள், சசிகலா குடும்பத்தை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவரவே இன்று சேகர் ரெட்டி வீடுகளிலும், ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை இன்று நடத்தியுள்ளனர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

திடீர் தாக்குதல்!

இவ்வளவு அறிவுரைக்குப் பிறகும், சசிகலா சார்பில் வேறு சிலரிடம் உதவி கேட்கப்பட்டு இருக்கிறது. இதுவே இந்தத் திடீர் ரெய்டுக்கு காரணம். மேலும், நேற்று போயஸ் கார்டன் இல்லத்தில் நடராஜனும் சசிகலாவும் சந்தித்து பேசி உள்ளனர். இது, டெல்லிக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சேகர் ரெட்டியிடம், சசிகலா மற்றும் அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளின் பணம் இருப்பதால் அவரை வளைத்தால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு இருக்கும் என்பதால்... முதலில் அவரை, தேர்ந்து எடுத்துள்ளனர்.

ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலுக்கு வருவதற்கு முன், போயஸ் கார்டனில் என்ன நடந்தது? 

#VikatanExclusive


"முதல்வர் ஜெயலலிதா இறந்த டிசம்பர் 5-ம் தேதி திங்கள்கிழமை. அவருடைய இறப்பு அறிவிப்பு வருவதற்கு முன் மாலை போயஸ் கார்டனில் இருந்த ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு அடுத்தடுத்து கார்கள் வந்தன. அந்த நேரத்தில் ஜெயலலிதா அப்போலோவில் சீரியஸாக இருந்தார் என்றுதான் எங்களுக்கு தகவல். காரை எட்டிப் பார்த்தோம். சசிகலாவின் உறவினர்கள், இளவரசியின் உறவினர்கள் என பலர் ஒன்றன்பின் ஒன்றாக வந்தனர். இவர்களை உள்ளே விடலாமா? என்கிற குழப்பம். அப்போலோ ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம் தொடர்புகொண்டு எங்கள் உயர் அதிகாரி பேசினார். ’அனுமதியுங்கள்’ என்று உத்தரவு வந்தது. அதன்பிறகுதான் உள்ளே நுழையவிட்டோம். கடந்த 10 ஆண்டுகளாக போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டவர்கள் பலரும் இருந்தனர். வீட்டுக்குள் நுழைந்தவர்கள் டூரிஸ்ட் ஸ்பாட் போல வீட்டை சுற்றிப் பார்த்தார்கள். மன்னார்குடியில் இருந்து வந்திருந்த பெண்கள் பட்டாளம், ' ஒ...இதுதான் பெரியம்மா அறையா? இதுதான் சின்னம்மா அறையா? இதுதான் பூஜை அறையா?' என்றெல்லாம் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர். தஞ்சாவூர் பக்கத்திலிருந்து ஒரு வயதான பெண்மணி வந்திருந்தார். அவர் நேராக மேக்கப் அறையில் போய் தன்னை அலங்கரிக்க ஆரம்பித்தார். அவர் சில வருடங்களுக்கு முன்பு, அம்மாவின் கோபத்துக்கு ஆளானவர். அவர்கள் அனைவருக்கும் உணவு தயாரானது. இஷ்டப்பட்ட உணவை சமைக்கச் சொல்லி சாப்பிட்டனர்.

போயஸ் கார்டனில் சமையல் செய்துவந்த 66 வயது பெண்மணி ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர். சிவகங்கையைச் சேர்ந்தவர். கடந்த பல வருடங்களாக, போயஸ் கார்டனில் தங்கி உணவு தயாரித்துக் கொடுத்து ஜெயலலிதாவை அசர வைத்தவர். ஜெயலலிதாவை உயிருக்கு உயிராக நேசித்தவர். சசிகலா உறவினர்கள் ஜெயலலிதாவின் உடல்நிலைப் பற்றி பேசிக்கொள்வதை சமையல்அறை ஒரத்தில் நின்று பதற்றத்துடன் கேட்டார். கண்ணீர் விட்டார். அவர் அன்று முழுக்க சாப்பிட வில்லை. ஆனால், சசிகலாவின் உறவினர்களுக்கு சமைத்துப்போட்டார். மாலை 7 மணி இருக்கும். அப்போலோவில் இருந்து போன் வந்தது. வீட்டில் இருந்த பணிப்பெண்களுடன் சசிகலா பேசினார்.

மடிசார் பட்டுப்புடவை, கைக்கடிகாரம், வைரம் பதித்த டாலர் செயின், மோதிரம்... இதையெல்லாம் எடுத்துக்கொண்டு உடனே ஆஸ்பத்திரிக்கு வரச் சொன்னார்கள். அப்போதே எங்களுக்குப் புரிந்துவிட்டது. ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாகிவிட்டது என்று! வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தோம். 'இது தெரியாதா?...பெரியம்மா உடல்நிலை ரொம்பவும் மோசமாகிவிட்டது. எந்த நேரமும் காலமானார் நியூஸ் வெளியாகலாம். அதுமாதிரி அறிவிக்கப்பட்டவுடன், அவரது உடலைப் போர்த்த அவர் விரும்பி அணியும் மடிசார் புடவையை கேட்டார்கள். அவரை அலங்கரித்துவிட்டு இங்கே கொண்டு வருவார்கள். சிறிதுநேரம் வைத்திருந்துவிட்டு ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டுபோக திட்டமிட்டிருக்கிறார்கள்' என்றார்கள். வாசலில் காவலுக்கு நின்ற எங்களின் கண்களில் நீர் பனித்தன. வெளியே காட்டிக்கொள்ளமுடியாத நிலைமை!


மாவிலை, சந்தனக்கட்டைகள்... இப்படி ஒவ்வொன்றாக வீட்டுக்கு வந்தன. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் வருவதற்கு முன்பே, அவருக்கான இறுதிச் சடங்குப் பொருட்கள் போயஸ் கார்டனை வந்தடைந்தன. இரவு 11.30 மணி இருக்கும். எங்கள் வயர்லெஸ் அலறியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டதாக அப்போலோ நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தகவல் வந்தது. அதிர்ந்துபோனோம். போயஸ் கார்டனில் இருந்த பணிப்பெண்கள், சமையல்காரர், வீட்டு வேலை செய்கிறவர்கள் என அனைவரும் கதறி அழுதனர். டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை ஜெயலலிதாவின் உடலுடன் ஆம்புலன்ஸ் வந்தது. ஜெயலலிதாவின் உடலை இறக்கி நடு ஹாலில் டைனிங் டேபிள் இருந்த இடத்தில் வைத்தார்கள். எங்கிருந்தோ ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை அழைத்துவந்தார்கள். பிறந்த வீட்டு கோடி என்கிற முறையில் புதிய புடவை ஒன்றை ஜெயலலிதாவின் உடல் மீது சசிகலா போர்த்தினார். உடன் தீபக்கும் நின்றார். 'இவர்தானே...ரத்த உறவு. சசிகலா போடுகிறாரே?' என்று நாங்கள் நினைத்துக்கொண்டோம்.




அந்த நேரத்தில், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், வீட்டு வேலை செய்கிறவர்கள், செக்யூரிட்டிகள்..என்று அந்த தெருவில் இருந்தவர்கள் திரண்டு வந்தனர். துக்கம் அனுஷ்டிப்பதற்காக அவர்களை உள்ளே அனுமதித்தோம். அப்போது மடிசார் புடவை, நகைகள் அணிவிக்கப்பட்டு தூங்குவது போல காட்சியளித்தார் ஜெயலலிதா. இறுதிச் சடங்குகளை சசிகலா செய்தார். அவர் அருகில் தீபக் நின்றிருந்தார். சசிகலா குடும்பத்தினர் வந்து முன்னால் நின்றனர். அர்ச்சகர் முதலில் மாவிளையில் தண்ணீர் தெளித்தார். மஞ்சள் சந்தனத்தை ஜெயலலிதாவின் கைகளில் பூசினார் சசிகலா. அதன் பின் சில சம்பிரதாயங்களை திவாகரனில் ஆரம்பித்து ஆண், பெண்... என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து வீட்டில் இருந்த எங்களைப்போன்ற பணியாளர்களும் ஜெயலலிதாவின் உடலை வணங்கினோம். எல்லாம் முடிய காலை 5.30 மணி ஆகிவிட்டது. பிறகு, ஜெயலலிதாவின் உடலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு சென்றனர். வேதா இல்லத்தில் சிங்கம் போல வளைய வந்த ஜெயலலிதாவை அந்த நிலைமையில் பார்த்த எவருக்கும் கண்கள் குளமாகி இருக்கும்!” என்று கலக்கமான குரலில் சொல்லி முடித்தார்.

- ஆர்.பி.

என்னிடம் உத்தரவை எதிர்பார்க்க வேண்டாம்!’  -அமைச்சர்களுக்கு கட்டளையிட்ட சசிகலா

vikatan.com

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையடுத்து, இன்று காலையில் போயஸ் கார்டனில் சசிகலாவை சந்தித்துப் பேசியுள்ளனர் அமைச்சர்கள். ‘ அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யுங்கள். என்னுடைய உத்தரவுக்காகக் காத்திருக்க வேண்டாம்’ எனத் தெரிவித்ததாகச் சொல்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

ஆளுநர் மாளிகையில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் சசிகலாவை சந்திக்க விரும்பினர். நேற்று காலை முதலே, ‘அவரிடம் இருந்து அழைப்பு வரும்’ எனக் காத்திருந்தனர். எந்த உத்தரவும் கார்டனில் இருந்து வரவில்லை. “ நேற்று மதியம் பத்திரிகையாளர் சோ மறைவுக்கு அஞ்சலி செலுத்தக் கிளம்பினார் சசிகலா. ‘ அம்மா மறைந்து மறுநாளே செல்ல வேண்டுமா?’ என உறவினர்கள் கேட்கவும், ‘ அவர் இருந்திருந்தால் அடுத்த நிமிடமே சென்றிருப்பார். எனவே, நான் செல்கிறேன்’ எனப் பதில் கொடுத்தார். இன்று காலை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி, தங்கமணி, வேலுமணி உள்பட சில அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக அவரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களிடம், கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டுவது உள்பட சில விஷயங்களை விவாதித்தார்” என விவரித்த கார்டன் ஊழியர் ஒருவர்,

“ நேற்று முழுக்கவே எந்த அமைச்சருக்கும் போயஸ் கார்டனில் இருந்து போன் செல்லவில்லை. மருத்துவமனையில் நீண்ட நாட்கள் இருந்ததால், சற்று ஓய்வெடுக்கவே விரும்புகிறார். முதல்வராக ஓ.பி.எஸ் நியமிக்கப்படும் முடிவை எடுத்தபோதும், உறவுகள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதற்குப் பதில் கொடுத்தவர், ‘ அம்மா இருந்திருந்தால், அவருடைய சாய்ஸாக அவர்தான் இருந்திருப்பார். அவரே முதலமைச்சர் பதவியில் தொடரட்டும்’ என்றார். இன்று அவரிடம் ஆலோசிப்பதற்காக கார்டன் வந்தார் பன்னீர்செல்வம். அவரிடம் பேசியவர், ‘ நான் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன். விவாதிக்கும் அளவுக்கு எனக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. என்னிடம் இருந்து உத்தரவு வரட்டும் என நீங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அம்மா இருந்திருந்தால் என்ன சொல்வாரோ, அதன்படியே நினைத்துச் செயல்படுங்கள். கட்சியின் பொதுக் குழுவுக்குப் பிறகு அனைத்தையும் முடிவு செய்வோம். அதுவரையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள்’ என்றார். இந்த நிமிடம் வரையில், பன்னீர்செல்வத்தின் பணிகளில் எந்தக் குறுக்கீடும் இல்லை. இப்படியே தொடருமா அல்லது பொதுக் குழுவுக்குப் பிறகு நிலைமை மாறுமா என்ற கேள்விதான் தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது” என்றார் விரிவாக.


“ ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில், அனைத்து விஷயங்களையும் கவனித்து வருகிறார். சோ மறைவுக்கு வந்தபோது, அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் மேனரிசத்தை ஒட்டியே இருந்தன. தொண்டர்கள் மத்தியில் தீவிரமாக வலம் வரத் திட்டமிட்டிருக்கிறார். ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளர்களையும் அவர் பக்கம் தக்க வைப்பதற்கான பணிகள் துரித வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஏழு நாள் துக்கம் முடிந்த பிறகு, பொதுக் குழு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. கட்சியின் முழு அதிகாரம் நிரம்பிய பொதுச் செயலாளர் பதவி தேர்வுக்குப் பிறகே, ஆட்சியின் லகானை தன் பிடிக்குள் கொண்டு வருவார் சசிகலா” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.

UGC say in principal fresh term

Now access academic certificates online


Pune: In a move to go digital, the University Grants Commission (UGC) published a notification on the formation of a National Academic Depository (NAD), which will serve as an online storehouse of academic awards such as degrees, diplomas, certificates and mark sheets issued by the academic institution, boards and eligibility assessment bodies in a digital format.

NAD will be available online 24x7 and will help in validating the document’s authenticity, their safe storage and easy retrieval.

Speaking about the initiative, Dhanashree Kumbhar, a first-year postgraduate student from the city, said that it will ease the burden of keeping the physical copy of the certificate safe.

“This will help us access all our certificates from anywhere in the world. It will also help the institutes to send the certificates as soon as they are ready. Till now, we had to stand in queue and fill numerous forms to get our degrees. It will also be easier to retrieve any document if misplaced,” said Kumbhar.

Echoing similar sentiments, MD Lawrence, Principal of Marathwada Mitra Mandal College of Commerce (MMCC), said the approach is holistic for every stakeholder. “This depository will help the employers, students and institutes in accessing the necessary and relevant documents,” he said.

NEWS TODAY 14.06.2026