Saturday, February 11, 2017

Sasikala vs Panneerselvam: We are enjoying, it is an opportunity to bond, say AIADMK legislators staying in resort

TOI 

CHENNAI: Eleven of the around 120 AIADMK legislators, who have been staying in a resort near Mahabalipuram since Wednesday night, said on Friday that they were enjoying as they got an opportunity to bond well. They were waiting for the invitation of acting Tamil Nadu Governor Ch Vidyasagar Rao to party general secretary V K Sasikala to form the government.

They reasoned that all the MLAs wanted to stay close to Chennai so that they could reach the state capital immediately as and when the Governor invites their leader to form the government.

The eleven legislators -- Kattumannarkoil MLA N Murugumaran, Krishnarayapuram MLA M Geetha, Gudiyattam MLA C Jayanthi Padmanabhan, Jayankondam MLA J K N Ramajeyalingam, Kunnam MLA R T Ramachandran, Sholingur MLA N G Parthiban, Perambalur MLA R Thamizhselvan, Cumbum MLA S T K Jakkaiyan, Tirupur South MLA S Gunasekaran, Tirupur North MLA K N Vijayakumar and Palladam MLA A Natarajan -- met mediapersons almost 2km away from Golden Bay Beach Resort, where they were staying, and claimed that they had not been kidnapped.

The MLAs, who came in batches, said they had voluntarily come forward to stay in a single place to extend their solidarity to Sasikala, who has staked claim to form the government in Tamil Nadu.

The MLAs said they were waiting for a direction from the party high command on the next course of action. "We are waiting for the Governor to invite Chinnamma to form the government. Once Governor makes the invitation we will prove our support either by appearing in person or by submitting declaration of support to Chinnamma," Ramachandran.





Golden Bay Beach Resort where AIADMK MLAs are staying (TOI pic by L R Shankar)

Tirupur South MLA S Gunasekaran denied that they were confined at the resort. He also rubbished claims that a legislator was injured when he fell into the swimming pool. "We are enjoying here. It is an opportunity for us to bond well," he said.

Murugumaran said, "After Chinnamma (Sasikala) took over as the general secretary, the party MLAs unanimously elected Chinnamma as the AIADMK legislature party leader on February 5 to pave way for her to become the chief minister. We felt the party's general secretary must be the chief minister," he said.

The MLAs said they had switched off their mobile phones as they had been receiving calls continuously from unknown people. Geetha said, "Initially callers were polite but as time passed by they started abusing. We have no other option than to switch off our mobile phones,"

The MLAs said people whom they did not know had filed habeas corpus petitions in the Madras high court stating they were missing. "It is plot hatched out by rival camp," said Jayanthi.

They also denied reports that a section of MLAs in the hotel had dissented and refused to have lunch. "(Caretaker chief minister) O Panneerselvam has colluded with the DMK and betrayed the party. We have resolved to stay united to realise the dreams of Puratchi Thalaivi (former chief minister J Jayalalithaa)," said Thamizhselvan.

Jayanthi said Chinnamma, who was with their beloved Amma for 30 years, would give good governance.

Meeting point

More than a dozen journalists have been waiting impatiently for the second consecutive day at a non-descript place, 2km away from a luxurious beach resort. Several SUVs carrying AIADMK party flags with fancy registration numbers were zipping in and out of the resort for the past two days.

Journalists, who were prevented from reaching the resort on Friday, were clueless about the condition of the MLAs staying in the resort.

Partymen owing allegiance to Sasikala ensured that the only road that leads to the resort have been blocked. "We are the members of the party and our MLAs have strictly instructed us not to let anybody to disturb them. We earlier made arrangements for a section of MLAs to meet the media and brief them about their status in the resort," said one of the men, who blocked journalists.

Around 11am on Friday, eight MLAs led by Kattumannarkoil MLA came out of the resort and addressed the media to clear the doubts that all the MLAs were kidnapped in an effort to prevent them from joining the Panneerselvam camp.

Sources said the party men permitted pro-Sasikala MLAs to address the media while the legislators, who were not happy with Sasikala's leadership, remained at the resort.

Sources said a temporary mobile jammer has been installed on the resort premises to prevent MLAs to establish contact with the outside world.

A section of villagers staying near the resort said they had seen a few men in white shirts and dhoties having animated discussions while hurrying in and out of the rooms. They also said the three luxury buses that transported them have been parked inside.

Villagers protest

A police officer of DGP rank was prevented by villagers from entering the resort on Friday night. The local residents blocked his jeep and when reporters approached him he declined to comment and left hurriedly.

S Kaliamoorthy, who runs a poultry farm, said normal life of the more than 100 families living in and around the resort was thrown out of gear after MLAs came to the resort. "Since Wednesday we have been witnessing speeding cars and jeeps going into coming out of the resort. The resort is full of vehicles. We were told that AIADMK MLAs are staying in the hotel. There is no police protection. The streetlights and lights around the resort have been put off for the past two days," said Kalimoorthy.

A woman said the local people had been worst affected due to unauthorized security cordon by the resort management and partymen.

Citing procedures, universities don't use anti-plagiarism software

TOI

CHENNAI: In a state where there has been an exponential jump in the number of PhD applicants, most universities have not made it compulsory to run theses through an anti-plagiarism software.

This, many academicians in the state say, is one of the main reasons for the poor quality of research churned out. "The focus is more on quantity than quality. PhD has become just a pre-requisite for being eligible for the post of assistant professor," a senior IAS official said. Anna University, enquiries have revealed, is the only one to insist on a certificate saying plagiarism in the research thesis is less than 20%.

A University of Madras official said the varsity library had advanced anti-plagiarism software, but it was not compulsory as a policy decision had not been taken."The use of the software has to be approved by the Board of Research Studies (BoRS) and resolved in the syndicate. That has not yet been done," he said.

A Madurai Kamaraj University said the use of the software procured a year ago was yet to be approved by the research committee and the syndicate.

This is true of all universities, including Bharatiar, Periyar and Manonmaniam Sundaranar (MSU), said As sociation of University Teachers general secretary N Pasupathy. "There is also debate on the tolerance levels. Some feel 20% is too less, especially for data-based research in science and technology," he said.

MSU professor of sociology S Samuel Asirraj said many professors had copy-pasted material on their research thesis. "Why would they fight for the software to be implemented?" he said.

With increased access to higher education, people without the urge to do serious research were pursuing PhDs and many of them resorted to plagiarism, Samuel added."When I was at Jawaharlal Nehru University, there used to be heated debates over the topics. Research would be a journey which is why the quality was also higher then," he said.

It is a vicious circle of incompetence and corruption as vice-chancellors, who also head committees to select professors, don't insist on original research as money power tilts the scales, Samuel said.

The senior IAS official said more number of students resorting to plagiarised work could also be because even those who worked hard were not able to express themselves in the written word."This is also a fallout of the learn-by-rote teaching philosophy in schools," he said.

Academicians concerned about the quality of research shouldn't wait for policy decisions and implement the software at the department level, he said.

Pasupathy said that most non-teaching staff were not equipped to handle the software and must be provided training in operating it. "Government should also ensure that back-end infrastructure is built," he said.
முகப்பேர் பகுதிவாசிகள் ரசாயன காற்றால்...பீதி! கண்டு கொள்ளாத மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள்

மழைநீர் வடிகாலில் விடப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீரால், முகப்பேர்வாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். ரசாயனம் கலந்த கழிவுநீரை விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தயங்கி வருவது, அப்பகுதியினருக்கு, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்பத்துார் தொழிற்பேட்டையில் இருந்து, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை, 4 கி.மீ., துாரத்திற்கு, மழைநீர் வடிகால் அமைந்துள்ளது. இந்த வடிகால் முகப்பேர், 3 மற்றும் 6வது பிளாக் வழியாக செல்கிறது. அங்கு, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

கழிவுநீர்திறந்த நிலையில், உள்ள மழைநீர் வடிகாலில், பல இடங்களில் கழிவுநீர் கலக்கிறது. குறிப்பாக, அம்பத்துார் தொழிற்பேட்டை சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீர், மழைநீர் வடிகாலில் விடப்படுகிறது. 

இந்த ரசாயனம் கலந்த கழிவு நீரிலிருந்து வெளியேறும் ரசாயன வாயு, காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால், 3 மற்றும் 6வது பிளாக்கில் அமைந்துள்ள வீடுகளில் உள்ள, குளிர்சாதன பெட்டி, 'டிவி' போன்ற மின்னணு பொருட்கள் அனைத்தும், அடிக்கடி பழுதடைகின்றன.அதேபோல், வெள்ளி, வெண்கலம், எவர்சில்வர் பாத்திரங்கள், சில நாட்களில் கருமை நிறத்தில் மாறி விடுகின்றன. மேலும், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத்திணறல், அலர்ஜி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து, நமது நாளிதழில், 2015 ஜனவரியில் செய்தி வெளியானது.
ரூ.40 கோடிஅதையடுத்து, குடிநீர் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அப்பகுதியை ஆய்வு செய்தனர். திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலில், சிமென்ட் குழாய் அமைக்க, மழைநீர் வடிகால் துறை சார்பில், 40 கோடி ரூபாய் செலவில், மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.

மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மழைநீர் வடிகாலில், ரசாயனம் கலந்த கழிவுநீரை விட்ட, 15 தொழிற்சாலைகளுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது. அதன்பின், எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.பலமுறை கோரிக்கை விடுத்தும், கழிவுநீர் பிரச்னை தீராததை அடுத்து, அப்பகுதிவாசிகள் சாலை மறியல் உள்ளிட்ட, பல போராட்டங்களில் ஈடுபட்டனர். 

மேலும், அரசு விழாவிற்கு வந்த, பால்வளத் துறை அமைச்சர், ரமணாவை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அரசு அதிகாரிகள், ஏனோ நடவடிக்கை எடுக்கவில்லை.தற்போது, வாடகை வீடுகளில் இருக்கும், பல குடும்பங்கள், வீட்டை காலி செய்து, வேறு இடங்களில் குடியேறி வருகின்றனர். இன்னும், அப்பகுதியில் ரசாயன காற்று பீதி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சந்தேகம்இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:வாடகைக்கு வசித்தோர், ரசாயன கழிவுநீர் பிரச்னையால், வீட்டை காலி செய்து சென்று விட்டனர். சொந்த வீடு கட்டியுள்ள எங்களை போன்றோர், வேறு இடத்திற்கு செல்ல இயலாமல், இங்கேயே இருக்கிறோம். கழிவுநீரில் இருந்து வரும் ரசாயன காற்றால், நாங்கள் பல்வேறு நோய்களுக்கு உட்படுகிறோம். 

இவ்விவகாரத்தில், குடிநீர் வாரியம், மாநகராட்சி மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மாறி மாறி, கையை காட்டி தப்பித்து கொள்கின்றனர். ரசாயனம் கலந்த கழிவுநீரை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மீது, நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தயங்கி வருவது, சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கூறுகையில், 'அப்போது இருந்த அதிகாரிகள், இட மாற்றம் பெற்று சென்று விட்டனர். இந்த பிரச்னைக்கு, அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என, ஆய்வு செய்கிறோம். மேலும், அந்த பகுதியை உடனடியாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

ஆய்வு செய்ய வேண்டும்அப்பகுதி வெளிமண்டலத்தில், துருப்பிடிக்க கூடிய, வாயுக்கள் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தான், வெங்கலம் மற்றும் வெள்ளி பொருட்கள், கருமை நிறத்தில் மாறி விடுகின்றன. இதன் தாக்கம், அப்பகுதிவாசிகளின் நுரையீரலையும் பாதிக்க வாய்ப்புள்ளது. ரசாயனம் கலந்த தண்ணீரை, முறையாக ஆய்வு செய்ய வேண்டும்.வேதியியல் துறை பேராசிரியர்


- நமது நிருபர் -
கிராமத்தினர் முற்றுகை: கூவத்தூரிலிருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை: கூவத்துாரில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விடுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத் கூவத்துாரில் உள்ள கோல்டன் பே என்னும் சொகுசு விடுதி ஒன்றில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ளனர். இந்த தகவல் ஊடகங்கள் மூலமாக பரவியது.

கிராமத்தினர் முற்றுகை

இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுதியை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ.,க்களை விடுதியிலிருந்து வெளியேற கூறி கோஷமிட்டனர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.


சசி பிடியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பட்டினியா?
அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

DINAMALAR
சென்னை:எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக கூறப்படுவது குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி., பதிலளிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





'எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தான், அவர்கள் உள்ளனர் என, அரசு வழக்கறிஞர் கூறியது சரி
யல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தகவல் சரியல்ல

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த மனு:குன்னம் தொகுதி, எம்.எல்.ஏ.,வான, ஆர்.டி. ராமச்சந்திரனை காணவில்லை; பிப்., 8ல், சென்னையில் நடந்த, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார்.அவர் உட்பட, 130 எம்.எல்.ஏ.,க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, சொகுசு பங்களாக்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதை, ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ.,க்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,வான ராமச்சந்திரன் உட்பட,   130 எம்.எல்.ஏ.,க்களையும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த, கூவத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதாவை ஆஜர்படுத்த கோரியும், மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை உடனே விசாரிக் கும் படி, நேற்று முன்தினம், உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் கே.பாலு முறையிட்டார். அப்போது, அரசு வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் உள்ளனர்; சட்ட விரோதமாக யாரும் பிடித்து வைக்கப்படவில்லை,'' என்றார்.

இதையடுத்து, நீதிபதிகள் சி.டி.செல்வம், மதிவாணன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக, நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு, வழக்கறிஞர் கே.பாலு, ''இரண்டு வாரங்கள் என்பது நீண்ட நாட்களாகி விடும். எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கியிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில், எம்.எல்.ஏ.,க் களை தங்க வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன,'' என்றார்.

அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், ''அரசு வழக்கறிஞர், நேற்று கூறிய தகவல் சரியல்ல; எம்.எல்.ஏ.,க்கள்விடுதியில் யாரும் இல்லை; அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது குறித்து எனக்கு தகவல் இல்லை. அதற்கு அவகாசம் வேண்டும்,'' என்றார்.

உடனே வழக்கறிஞர் கே.பாலு, ''பிடித்து வைக்கப் பட்டுள்ள, 20 எம்.எல்.ஏ.,க்கள், உணவு சாப்பிட, தண்ணீர் குடிக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள் ளது. எனவே, காஞ்சிபுரம் எஸ்.பி., நேரில் சென்று    விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும்,'' என்றார்.

தள்ளிவைப்பு

இதையடுத்து, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:'எம்.எல்.ஏ.,க்கள் சுதந்திரமாக உள்ள னர்; அவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்கி இருக்கின்றனர் என, நேற்று முன் தினம் அரசு வழக்கறிஞர் கூறியது சரியல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்; அதை பதிவு செய்கிறோம். சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளதால், 20 எம்.எல்.ஏ.,க்கள் உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக, வழக்கறிஞர் கே.பாலு கூறியுள் ளார். அது, உண்மை என்றால் மிகவும் கடுமை யான விஷயம். இருந்தாலும், வழக்கறிஞர் கூறியதை வைத்து, நீதிமன்றம் செயல்பட முடியாது.

எனவே, இந்த வழக்கின் தன்மையை பொறுத்து, அரசு தரப்பு பதிலளிக்க வாய்ப்பு அளிப்பது, உகந்ததாக இருக்கும் என கருதுகிறோம். விசாரணை, பிப்., 13க்கு தள்ளி வைக்கப் படுகி றது. இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தர விட்டுள்ளது.

ஆஸ்பத்திரியைவிடக் கொடுமையா இருக்கு!' - ரிசார்ட் உற்சாகத்தில் உதறும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் #VikatanExclusive





தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்டப் பதற்றத்தில் இருக்கிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப் பாய்ந்து கொண்டிருக்க, அரசியல் ஜல்லிக்கட்டை முடிவுக்குக் கொண்டு வராமல் தவித்துக்கொண்டிருக்கிறார் சசிகலா. 'பீச் ரிசாட்டில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு தனி வகுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. பல எம்.எல்.ஏக்கள் கதறியபடியே கடற்கரையில் காற்று வாங்கிக்கொண்டிருக்கின்றனர்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனி ஆவர்த்தனத்தைத் தொடங்கிய கணத்தில் இருந்து, அவருக்கான ஆதரவுக் கரங்கள் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. நேற்று மதியம் அவைத் தலைவர் மதுசூதனன் ஆதரவு கொடுத்ததைக் கார்டன் நிர்வாகிகளால் நம்ப முடியவில்லை. தமிழக அரசியல் சூழல் குறித்து, குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். கட்சி அதிகாரமும் கையை விட்டுப் போகும் பதற்றத்தில் இருக்கும் மன்னார்குடி உறவுகள், எம்.எல்.ஏக்களைக் குளிர்விக்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் இருக்கும் ‘கோல்டன் பே பீச் ரிசாட்டில்’ நடக்கும் காட்சிகளை கலவரத்தோடு கவனித்து வருகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். "கோல்டன் பே ரிசார்ட் அமைந்துள்ள கூவத்தூரைச் சுற்றிலும், வயல் வெளிகளுக்கு வேலைக்குப் போகும் மக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிக்குச் செல்லும் மக்களை மன்னார்குடி முகாம் நியமித்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கூவத்தூரைச் சுற்றியுள்ள 1 கிலோமீட்டர் தூரத்தை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டனர். இந்த 1 கிலோமீட்டர் எல்லைக்குள் அவர்கள் அனுமதியில்லாமல் யாரும் செல்ல முடியாது. கல்லூரி, பள்ளிக்குச் சென்று வரும் மாணவர்களையும் அச்சுறுத்துகின்றனர். 150 குண்டர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேன்ட், சட்டை அணிந்து நவநாகரிமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடுகளே அவர்கள் யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரிசாட்டில் தமிழ்நாட்டுப் பதிவுள்ள வண்டிகளைக் காண முடியவில்லை. ஆந்திரா, கர்நாடகா, கேரள பதிவெண் வண்டிகள்தான் அதிகளவில் சென்று வருகின்றன" என விவரித்த, கூவத்தூர் பகுதி அரசியல் பிரமுகர் ஒருவர்,

"எம்.எல்.ஏக்களின் சத்தமும் ஆட்டம் பாட்டமும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் நேற்று திரண்டு போய், மன்னார்குடி முகாம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். ' நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. அதைப் பத்தி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. உங்க கட்சி விவகாரம். எங்களை ஏன் டார்ச்சர் பண்றீங்க?' எனச் சத்தம் போட்டுள்ளனர். ' இன்னும் இரண்டு மணி நேரத்தில் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். அதன்பிறகு எம்.எல்.ஏக்கள் கிளம்பிவிடுவார்கள்' என சமாதானப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு ஆளுநரை சசிகலா சந்தித்த பிறகும், எம்.எல்.ஏக்கள் கிளம்பவில்லை. மூன்று நாட்களாக ரிசார்ட்டில் இருந்து கிடைக்கும் தகவல்களும் அதிர்ச்சியடைய வைத்துள்ளன. ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் 25 பேர் பன்னீர்செல்வத்தின் ஆதரவு மனநிலையில் உள்ளவர்களாம். தலைமைச் செயலகத்திலும் அவரோடு நெருக்கத்தைக் காட்டி வந்தவர்கள். இவர்களை மட்டும் தனியாகப் பிரித்து, பல மணி நேரம் வகுப்பு எடுத்துள்ளனர்.

'நீங்கள் என்ன மனநிலையில் இருந்தாலும், ஆட்சி கையைவிட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்றால், சின்னம்மாவைத்தான் நீங்கள் ஆதரிக்க வேண்டும். நீங்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். மறுபடியும் நீங்கள் போட்டியிட்டாலும், வெற்றி பெற வாய்ப்பில்லை. இப்படியொரு நிலைமைக்கு ஆளாக வேண்டாம். உங்களுக்கு வேண்டியதைத் தருகிறோம்' என அன்பான குரலில் அதட்டியுள்ளனர். இதை ஏற்காத சில எம்.எல்.ஏக்கள், 'எங்களை ஏன் அடைச்சு வச்சு அடிமை மாதிரி நடத்தறீங்க. ஆஸ்பத்திரியைவிட மோசமா இருக்கு. யார்கிட்டயும் பேச முடியல. வெளியில என்ன நடக்குதுன்னே தெரியலை' எனக் கதறியுள்ளனர். 'நிலைமை சுமூகமாகற வரைக்கும் நீங்க இங்கதான் இருக்கணும்' என மிரட்டியுள்ளனர் மன்னார்குடி கோஷ்டியினர். ரிசார்ட்டில் இருந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டவர்கள் அடிக்கடி வெளியில் போய் வருகின்றனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில்தான் அனைத்தும் நடக்கின்றன" என விவரித்து முடித்தார்.

"நேற்று எம்.எல்.ஏக்களில் சிலர் அதீத உற்சாகத்தில் ஆட்டம் போட்டுள்ளனர். ரிசார்ட்டில் நீச்சல் குளத்தில் குதித்து ஆட்டம் போட்டதில், இரண்டு எம்.எல்.ஏக்கள் தவறி விழுந்துவிட்டனர். அவர்களின் நிலையைப் பார்த்துப் பதறிப் போய், நடிகர் கருணாஸ் தண்ணீரில் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளார். அவரோடு சில எம்.எல்.ஏக்களும் குதித்து அவர்களைக் காப்பாற்றியுள்ளனர். அளவுக்கு அதிகமாக நீச்சல் குளத்துத் தண்ணீரை அவர்கள் குடித்துவிட்டனர். விடிந்தும் பல எம்.எல்.ஏக்களுக்கு உற்சாகம் குறையவில்லை. நேற்று இரவே ஊருக்குக் கிளம்பும் மனநிலையில் பல எம்.எல்.ஏக்கள் இருந்துள்ளனர். ஆனால், சுமூக சூழ்நிலை திரும்ப இன்னும் ஒரு வாரம் ஆகும் என்ற தகவல் கிடைத்துள்ளதால், அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று இரவு நண்பர் ஒருவருக்குப் போன் செய்த எம்.எல்.ஏ, 'மிக சந்தோஷமாக இருக்கிறோம்' எனப் பேசிக் கொண்டிருந்தபோதே கதறி அழுதிருக்கிறார். மன்னார்குடி டீம் இங்கிருந்து செல்லும் வரையில் கூவத்தூர் மக்களுக்கும் விடுதலை இல்லை" என ஆதங்கத்தோடு பேசினார் ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர்.

- ஆ.விஜயானந்த்

Friday, February 10, 2017

தனிமை விரும்பியா நீங்கள்? #FridayFeeling


தனிமைவாதிகள்! அவர்களை நீங்கள் பார்த்ததுண்டா? ரொம்பவே வித்தியாசமாய் இருப்பார்கள் அவர்கள். ரொம்ப சென்சிட்டிவாக இருப்பார்கள். வெளியில் இருந்து நாம் பார்க்கும்போது, ஏன் இவன்/இவள் இத்தனை தனிமையில் இருக்கிறார் எனத்தோன்றும். யார் இவர்கள்? இவர்களது மனநிலை எப்படி இருக்கும்? என்ன வாழ்க்கை முறை இவர்களுடையது? கொஞ்சம் அலசி ஆரோய்ந்தோம். அதன் பதில்கள் ஆச்சர்யம் தரும்படி இருக்கிறது… அப்படி என்னதான் அவர்கள் வாழ்வியல் முறையில் உள்ளதென்று நீங்களும் பாருங்களேன்!

"தனிமை எதிர்மறை வாழ்க்கையை ஏற்படுத்திவிடுமோ?!"

தனிமையில் இருக்கும் ஒருவர், நிறைய யோசிப்பார். அந்த யோசனைகள் யாவும், தனிமை என்ற உணர்வைத் தாண்டி, பல விதமான கோணங்களில் இருக்கும். பொதுவாகவே, தனிமையானது மனதிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்து எண்ணங்களையும் வெளியில் கொண்டுவரும் வல்லமை கொண்டது. பெரும்பாலான நேரங்களில் தனிமையின் போது மனதில் கோபம், வெறுப்பு, துக்கம் போன்ற உணர்வுகள் மிகுதியாய் இருக்கப்பெறுவர்…. அதுசரி, அதைதானே நாம் அதிகமாய் வெளிகாட்டாமல் இருப்போம்! எனில், தனிமை ஒருவரை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும் அபாயம் நிறையவே இருக்கிறது. தனிமை அவர்களின் கோபத்தை தூண்டி, வருத்தத்தை அதிகரித்து எதிர்மறை எண்ணங்களை தந்துவிடும் வல்லமை உடையதுதான் என்பதிலும் மாற்று கருத்து இல்லை.

இந்தத் தனிமை பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்ட கார்டெக்ஸ் இதழின் முடிவு, மேலே கேட்ட கேள்விக்கு ஒரு சபாஷ் பதிலை தந்துள்ளது. என்ன பதில் தெரியுமா அது? நண்பர் படைசூழ இருக்கும் ஒருவருக்கு, ஒரு பொது இடத்தில் ஏதோவொரு அநாகரீகமோ, அநீதியோ இழைக்கப்பட்டால், அதிலிருந்து தன்னைத்தானே பாதுகாத்து கொள்ளும் சமயோகித அறிவு பெரிதளவில் இருக்காதாம். இந்த ஆராய்ச்சியானது, நியூயார்க்கில் யுனிவர்சிட்டி ஆஃப் மெட்ராஸில் மனநலம் மற்றும் மூளை-தொடர்பியல் ஆய்வாளர்களால் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது ஆராய்ச்சியினை ஒரு தம்பதியையும், தனி நபர் ஒருவரையும் வைத்து மேற்கொண்டுள்ளனர். தனிமை என்பது ஒருவரது பொது வாழ்வில் எப்படிபட்ட மாற்றங்களை தருகிறது என்பதுதான் இதில் மிகமுக்கியமாக கருதப்படுகிறது.

"தைரியமூட்டும் தனிமை"



கை-வின்ச் என்ற நியூயார்க்கை சேர்ந்த மனநல மருத்துவர் ஒருவர், ‘எமோஷனல் ஃபர்ஸ்ட் எய்ட்’ என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் தனிமை விரும்பிகள் பற்றி கூறும்போது, “நண்பர் படைசூழ இருப்பவர்களின் மூளையானது பொதுவாகவே எப்போதும் அதீத-பாதுகாப்பாக உணரும். அதனால் கூட்டத்தில் இருந்து விடப்படும் போது, ஒரு பிரச்சனையை தனியே நின்று எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் திணறுவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. ஆனால், தனிமையை அதிகமாய் உணர்ந்தவர் ஒருவர், எப்போதும் தன்னை மற்றவர்களிடம் இருந்து விலக்கி கொள்வார். இதன் பாதிப்பாக, அவர்கள் எப்பொழுதும் பிரச்சனைகளை சந்திக்கும் மனநிலையில் தான் இருப்பர். அந்த மனநிலை, பிரச்சனை வந்தால் பார்த்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையை தந்து அவர்களுக்கு தைரியமூட்டும்” என்கிறார்.

38 தனிமை படுத்தவர்களும், 32 தனிமைக்கு அப்பாற்பட்டவர்களும் கலந்து கொண்டு நடத்தப்பட்டுள்ளது இந்த ஆய்வு. தனிமைப்பட்டவர்கள் என்பது, நண்பர்கள், உறவினர்கள் என பலர் இருந்த நேரத்திலும் கூட எனக்கு யாரும் வேண்டாம் எனக்கூறுபவர்கள் என்ற அடிப்படையிலேயே கூறப்படுகிறது.

"ஆய்வு முறையும், ஆச்சர்ய முடிவும்"

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களின் தலைகளில் இ.இ.ஜி. பொருத்தப்பட்டு, சில தேர்வுகள் நடத்தப்பட்டது! உதாரணமாக, ஸ்ட்ரூப் டெஸ்ட் முதலியவையும் செய்யப்படும். (ஸ்ட்ரூப் டெஸ்ட் என்பது, வார்த்தைகளின் மீது இருக்கும் வண்ணங்களை கண்டறிவது.) ஆராய்ச்சிக்கு உட்பட்டவர்கள் தங்களது செய்யும் வேலையில் எந்த அளவிற்கு கவனத்தோடு இருக்கின்றனர் என்பதை கண்டறிவதற்காகவே இது போன்ற டெஸ்ட் வைக்கப்படுகிறது. ஆண்டி-சோஷியல் வார்த்தைகள், சோஷியல் வார்த்தைகள் முதலியவற்றை கூறி, அவற்றின் போது மூளையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது போன்றவை முடிவுசெய்யப்படும்.

ஆராய்ச்சிகளின் முடிவில், மற்றவர்களை காட்டிலும் தனிமை விரும்பிகள், சஞ்சலங்கள் ஏதுமில்லாதவராய் இருப்பதாக கூறுகின்றனர். எனிலும் அவர்கள் இதுகுறித்து எதுவும் அறியாது, இயல்பாகவே இவ்வாறு இருக்கின்றனர். தனிமையில் இருப்பவர்கள் அதிகம் சிரிக்கமாடார்கள் என்ற கருத்து பரவலாய் இருந்தாலும், தனிமையில் ஒருவர் எடுக்கும் முடிவு தான் அவரது வாழ்க்கையை தீர்மானிக்கும் என்பதும் மறுப்பதற்கு இல்லை. தனிமையில் இருப்பவர்கள் சோகமாக இருக்க வேண்டியதில்லை. அதுவும் ஒரு வாழ்விய்ல முறைதான் என்கிறார்கள் அறிஞர்கள்!

- ஜெ.நிவேதா, (மாணவப் பத்திரிகையாளர்)

NEWS TODAY 15.08.2026