Saturday, February 11, 2017

கிராமத்தினர் முற்றுகை: கூவத்தூரிலிருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை: கூவத்துாரில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விடுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத் கூவத்துாரில் உள்ள கோல்டன் பே என்னும் சொகுசு விடுதி ஒன்றில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ளனர். இந்த தகவல் ஊடகங்கள் மூலமாக பரவியது.

கிராமத்தினர் முற்றுகை

இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுதியை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ.,க்களை விடுதியிலிருந்து வெளியேற கூறி கோஷமிட்டனர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 15.08.2026