Saturday, March 4, 2017


தினம் எவ்வளவு நேரம்... மாதம் எத்தனை ஜிபி... மொபைலும் நாமும்..! #Infographics #MobileMania




தினசரி காலை எழுந்ததும், மொபைல் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? உங்களைப்போலவே உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் 100ல் 50 பேர் காலை எழுந்ததும் ஸ்மார்ட் போனைத்தான் பார்க்கிறார்கள். இந்த எண்ணிக்கை, இணைய ஊடுறுவலைப் பொறுத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேல் 4ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2020ல் 2.6 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் தினசரி இணையம் பயன்படுத்துபவர்கள், 3 பில்லியனுக்கும் மேல் உள்ளனர். அதில், 80 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் மூலமாகத்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தனிமனிதனாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரின் தகவல்களைப் பார்த்தால், ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர், ஒரு நாளைக்கு 1.8 மணி நேரம் சராசரியாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார். அதில், ஆப்ஸ்களில் 89 சதவிகித நேரத்தையும், ப்ரெளசர்களில் 9 சதவிகித நேரத்தையும், மற்ற விஷயங்களில் 2 சதவிகித நேரத்தையும் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு சராசரியாக 46 முறை ஸ்மார்ட்போனை ஆன் செய்து செக் செய்கிறார். உலக அளவில் பார்த்தால், ஒரு நாளைக்கு 8 பில்லியன் முறை ஸ்மார்ட் போன்கள் ஆன் செய்து செக் செய்யப்படுகிறது. மேலும், சராசரியாக ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர், மாதத்துக்கு 2.9 ஜி.பி டேட்டாவைப் பயனபடுத்துகிறார். இது, தொழில்நுட்ப ரீதியாக 2ஜி, 3ஜி, 4ஜி என்ற அளவில் வேறுபட்டிருந்தாலும், இந்த அளவு பிரமிக்கவைப்பதாகவே உள்ளது. மேலும் 4ஜி இணைப்புகள் அதிகமாகும்போது இந்த எண்ணிக்கை கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று எல்லாவற்றுக்குமே செல்போன்கள் என்று ஆகிவிட்ட நிலையில், அலுவலக வேலைகள்கூட செல்போனுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. 2018-ம் ஆண்டில் அனுப்பப்படும் 10 இ-மெயில்களில் 8, மொபைல்மூலம் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஆப்ஸ்களும், இணைய சேவை வசதிகளும் எளிமையான முறையில் ஸ்மார்ட்போன்களில் புகுத்தப்பட்டதுதான். 2016-ம் ஆண்டு மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 90 பில்லியன் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்களும், ஆப்பிள் ஸ்டோரில் 13 பில்லியன் ஐஓஎஸ் ஆப்ஸ்களும் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டில் மட்டும் 900 பில்லியன் மணி நேரம் ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 37,500 கோடி மணி நேரம் அல்லது 10 கோடி வருடத்துக்கு இணையாக, உலகம் முழுவதும் ஆப்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

நாம், பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் மொபைல் துவங்கி, பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கும் மொபைல் வரை இந்தியாவில் வர்த்தகமாகும் இந்த ஸ்மார்ட்போன்களின் மார்க்கெட் என்பது, 20 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இது, இந்திய ஜிடிபி-யில் 0.9 சதவிகிதமாக உள்ளது. உலகம் முழுவது இந்த அளவு, 3.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது, உலக ஜிடிபி-யில் 4.2 சதவிகிதமாகும். ஸ்மார்ட்போன்களும், ஸ்மார்ட்போன் அக்ஸசரிஸ் மார்க்கெட் என்பது உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் காரணியாக உருவெடுத்துவருகிறது.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்


சென்னைவாசிகள் ஆக்சிஜனைக் கடன் வாங்குவது தெரியுமா? - மிரட்டும் நிஜம்!

கோடை தொடங்கிவிட்டது, கூடவே மின்வெட்டுப் பிரச்னையும், தண்ணீர்த் தட்டுப்பாடும்... ‘‘இந்த ஆண்டு மலைப் பிரதேசங்களில்கூட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்’’ என எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். அதேநேரத்தில் ‘‘கடந்த 116 வருடங்களில் இல்லாத அளவுக்கு சென்ற ஜனவரியில்தான் அதிகபட்ச வெப்பநிலை நிலவியது’’ என்றும் தெரிவித்துள்ளது. 2015 டிசம்பரில் சென்னையை வெள்ளத்தில் தவிக்கவிட்ட இயற்கை, கடந்த டிசம்பரில் புயல் காற்றால் துவம்சம் செய்து ஓய்ந்தது. சென்னையின் சுவாசமாக இருந்த ஆயிரம் ஆயிரம் மரங்கள் வேரோடு வீழ்ந்து குப்பையாகின. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இருட்டிலும், தாகத்திலும் தவித்துப் போனது சென்னை.



கடந்த டிசம்பர் 1-ம் தேதி தமிழகத்தை நோக்கிப் பாய்ந்து வந்த ‘நடா’ புயல், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் கடந்தது. ‘‘அப்பாடா’’ என்று நிம்மதி அடைந்த நிலையில், வங்கக்கடலில் இன்னுமொரு காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாகவும், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன். எதிர்பார்த்தபடியே வீரியம் பெற்றது புயல். 150 கி.மீக்கு அதிகமான வேகத்தில் சென்னையைச் சுற்றிச் சூழ்ந்து களமாடியது காற்று.



சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கிட்டத்தட்ட அதி தீவிர யுத்தம் நடந்த போர்க்களம் போலாகிவிட்டன. எங்கு பார்த்தாலும் பிணங்களைப்போல குவிந்து கிடந்தன மரங்கள்...வர்தா புயலை அடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சியும் இணைந்து மரங்கள் நடப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் நடப்பட்ட மரக்கன்றுகளை எங்கும் பார்க்க முடியவில்லை.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும் சுற்றுச்சூழல் சிக்கல் மிகுந்த இப்பகுதிகளை வாழும் பகுதிகளாக மாற்றுபவை, இங்கிருக்கும் மரங்களும் கடலும்தான். வர்தா புயலால் 10,682 மரங்கள் விழுந்ததாக மாநகராட்சி செய்திக் குறிப்பு கூறினாலும், விழுந்த மரங்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கு மேல் இருக்கும் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ‘இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்’ என்றும் அவர்கள் அச்சமூட்டுகிறார்கள். பெரும்பாலான மரங்கள் வீழ்ந்ததற்கு திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கிறார்கள்.

"பொதுவாக, பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கப்படும் மரங்களின் வேர் மடங்கிச் சுருங்கிவிடும். அதுமாதிரி செடிகளால் மண்ணைப் பிடித்து வலுவாக வளர முடியாது. சென்னை போன்ற நகரங்களில் நடப்பட்டிருக்கும் பெரும்பாலான மரங்கள், பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கப்பட்டவைதான். நகரங்களைப் பொறுத்தவரை மரங்கள் வெறும் நிழல் மட்டும் தருவதில்லை, 'மைக்ரோ கிளைமேட்' எனப்படும் நுண்கால நிலையையும் மரங்களே தீர்மானிக்கின்றன. நுண்கால நிலைதான் அந்தந்த இடத்தின் பருவநிலையை உருவாக்கும்.



‘மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியைவிட மரங்களும் பசுமையும் இல்லாத இடங்களில் ஏறத்தாழ 200 மடங்கு கிருமிகள் காற்றில் பரவி இருக்கின்றன' எனச் சொல்கிறது ஓர் ஆய்வு. சென்னை மாதிரியான நகரங்களில் இருக்கும் மரங்கள், வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடை உறிஞ்சிக் கொள்வதோடு, வாகனங்கள் எழுப்பக்கூடிய ஒலியையும் சத்தங்களையும் சமன்படுத்துகிறது. இது எல்லாமே சேர்ந்துதான் மைக்ரோ கிளைமேட்டைத் தீர்மானிக்கும். நெருக்கமான நகரங்களில் மரம் நடுவதைக் காட்டிலும் நேரடியாக விதைகளைப் பதித்து மரம் வளர்ப்பது சிறந்தது.

ஒரு ஏக்கரில் அடர்த்தியாக இருக்கும் மரங்கள் ஒரு வருடத்துக்கு 18 மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கிறது. சென்னையில் இருக்கும் மக்கள் தொகையையும், மரங்களின் எண்ணிக்கையையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் மரங்களின் தேவை என்ன என்பது புரியும். சென்னையில் இருக்கும் மக்கள் வேறொரு பகுதியிலிருந்துதான் ஆக்சிஜனைக் கடனாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..." என்று அழுத்தமாகச் சொல்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.



சென்னையின் மொத்தப் பரப்பளவு 424 சதுர கிலோ மீட்டர். இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 144 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பசுமைப் பரப்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சென்னையில் இருப்பதோ 9 சதுர கிலோமீட்டர் பசுமைப் பரப்பு மட்டும்தான். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 456 பூங்காக்கள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூங்காக்களைப் பராமரிப்பதற்கு இருக்கும் ஊழியர்களைத் தவிர, அவர்களை மேற்பார்வையிட வேளாண்மை படித்த அதிகாரிகள் யாரும் இல்லை. ஒரு கட்டடம் கட்ட சிஎம்டிஏ-வில் அனுமதி வாங்கும்பொழுது குறிப்பிட்ட அளவு நிலத்தை இதுபோன்று பசுமைச் சூழலை உருவாக்கக் கொடுக்க வேண்டும். அப்படி நிலம் கொடுக்காத பொழுது குறிப்பிட்ட தொகை கட்டப்பட வேண்டும். இப்படி சிஎம்டிஏ-வில் கட்டப்படும் பணம் பூங்காக்களைப் பராமரிப்பதற்கும், பசுமையான சூழலை உருவாக்கவும் மாநகராட்சிக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பணம் முழுவதும் பிற திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

‘‘சென்னையில் உள்ள மரங்கள் குறித்து அரசுத் தரப்பில் எந்தவித ஆய்வுகளும் நடக்கவில்லை. பிரிட்டிஷார் தங்கள் வசதிக்காக ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் யூகலிடப்ஸ் மரங்களை வளர்த்ததைப்போல சென்னையிலும் நம் மண்ணுக்குத் தொடர்பில்லாத அயல் நாட்டு மரங்கள் நடப்பட்டன. புயலில் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை, அதுமாதிரியான மரங்கள்தான். சூழலியல் கொள்கைகள், பேரிடர் மேலாண்மை கொள்கைகள் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.

அரசு மட்டும்தான் சென்னையின் பசுமைச் சூழலை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் அதற்கான செயல்பாடுகளில் இறங்க வேண்டும். சென்னை கடலோரத்தில் இருக்கிறது என்பதும், பசுமையான சூழல் நிறைந்திருக்கிறது என்பதும்தான் சென்னையின் பலம். ஆனால் தொடர்ச்சியாக பசுமைப் போர்வையை இழந்தால் சென்னை மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையைச் சந்திக்கும்..." என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.

வர்தா புயலில் வேரோடு சாய்ந்த மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு தூங்குமூஞ்சி, குல்மோகர் ரக மரங்கள்தான். இந்த வகை மரங்கள் எல்லாமே அழகுக்காகவும், விரைவாக வளர வேண்டும் என்பதற்காகவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் புதியவகை தாவரத்தைப் பார்த்தால் உடனே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலை இருக்கிறது.



‘‘ஒரு மரத்தில் 1600 வகையான வண்டு இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி இனங்களும், உயிர்களும் மரத்தைச் சார்ந்து இருக்கின்றன. இப்படி சார்ந்து வாழ்தல் என்பது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இருந்து வரும் நீட்சி. நம் ஊர் இலுப்பை மரத்திலும், வேம்பு மரத்திலும் இந்தப் பல்லுயிர் சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது. பசுமையான சூழலை உருவாக்க வேண்டும், காடுகளை உருவாக்க வேண்டும் எனச் சொல்லி பழமையான மரங்களை அழித்துவிட்டு வேகமாக வளரக்கூடிய அயல் மரங்களை வளர்த்து உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறோம். இதனால் பல்லுயிர் சூழலும் பாதிக்கப்படும். அத்தி, இச்சி, பனை, புரசு, மருதம், கடம்பம், தில்லை, இலவு, முள்ளிலவு, நாவல், தான்றி, குமிழ், சந்தனம், இலுப்பை, ஆலம், அரசு, வேம்பு, அகில், நெல்லி, அலிஞ்சில், வெள்வேலம், ஆசினி பலா, ஆத்தி, இலந்தை, புங்கம், உசில், ஒதியன், காஞ்சரை, கிளுவை, கொன்றை, கொன்னை, கோங்கம், செண்பகம், சரக்கொன்றை, தணக்கு, தேற்றா, மஞ்சநத்தி, மா, பன்னீர், வெப்பாலை, ஏழிலைப்பாலை, தோதகத்தி, புன்னை, பூவரசு, மகிழம், மந்தாரை, கருங்காலி, மூங்கில், வலம்புரி, வன்னி, வேங்கை. என நூற்றுக்கணக்கான நாட்டு மர வகைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நகர்ப்புறங்களில் வளர்க்கலாம்..." என்கிறார் ‘நாணல்’ சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன்.

மரம் என்பது மரம் மட்டுமல்ல... அது பலநூறு உயிர்களின் கூடு. ஒரு மரம் வீழ்வதால் பல நூறு உயிர்கள் வீடிழக்கின்றன. உணவிழக்கின்றன. பூமி உயிர்ச்சூழலை இழக்கிறது. நகரங்களைத் திட்டமிடும்போதே, அதன் பசுமைச்சூழலையும் திட்டமிட வேண்டும். ஆனால் தமிழகத்தின் எந்த மாநகர உருவாக்கத்திலும் இது கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

சென்னை உயிர்ப்பிக்கப்பட வேண்டிய தருணமிது..!

உறவைப் பிரிக்கும் குறட்டை... தவிர்க்க 7 வழிகள்! #HealthAlert

இறைவன் நமக்குக் கொடுத்த மிக உயர்ந்த பரிசு தூக்கம். தூக்கம் மட்டும் இல்லையென்றால், மனிதர்கள் மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள். எவ்வளவு பணத்தைக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். அதே நேரத்தில், அருகில் இருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுப்பது, ஒருவர் தூங்கும்போதுவிடும் குறட்டைதான். இதைச் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. 2013-ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் விவாகரத்துக் கேட்டு வரும் தம்பதிகள் சொல்லும் காரணங்களில் குறட்டைக்கும் இடம் உண்டு. ஆக, உறவைக்கூட பிரிக்கும் குறட்டை என்பது நிரூபணமான உண்மை. ஒருவர் விடும் குறட்டை, அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்; மற்றவர்களுக்கு அசூயையைக் கொடுக்கும். சிலருக்குக் கழிவிரக்கத்தை ஏற்படுத்தும்; சமயத்தில் தன்னம்பிக்கை குறைவதற்குக்கூடக் காரணமாகிவிடும்.



`உங்களுக்குக் குறட்டைவிடுற பழக்கம் இருக்கா?’ என்று கேட்டுப் பாருங்கள். `இல்லை’ என்றுதான் நிறையப் பேர் பதில் சொல்வார்கள். அதிலும் சிலர் `ரொம்ப டயர்டா இருந்தா வரும்’ என்றோ, `எப்போவாவது...’ என்றோ, `குறட்டையா... நானா? சான்ஸே இல்லை. நான் ரொம்ப டீசன்ட்’ என்றோ தங்களை விட்டுக்கொடுக்காமல்தான் பதிலளிப்பார்கள். உண்மையில், குறட்டை என்பது கௌரவ பிரச்னை அல்ல; அது உடல்ரீதியான பிரச்னை.

குறட்டை வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

* ஒருநாள் சீக்கிரமும், மறுநாள் நேரம் கழித்தும் தூங்குவது என தினமும் குறித்த நேரத்தில் தூங்காமல் இருப்பது; நீண்ட நேரம் தூங்காதது; உறங்கப் போகும் கடைசி நேரம் வரைக்கும் வேலை செய்துகொண்டு இருப்பது.

* சில நேரங்களில் ஆழ்ந்து தூங்கும்போது, தொண்டைக்குப் பின்னால் இருக்கும் சதை வழக்கத்துக்கு மாறாக தளர்வடையும்போது குறட்டைவிடுவதுபோலச் சத்தம் எழும். சைனஸ் தொந்தரவு இருந்தாலும் குறட்டை வரும்.



* மாலை 4 மணிக்கு மேல் டீ அல்லது காபி சாப்பிடும்போது அதிலுள்ள தற்காலிக சக்தியளிக்கும் கஃபைன் போன்றவை, நம் மூளையை சில மணி நேரம் வரைக்கும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனாலும் நம் தூக்கத்தை அது பாதிக்கும். இதனாலும் குறட்டை ஏற்படலாம்.

* தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும்போதோ, தூங்கும் அறை சுத்தமாக இல்லாவிட்டாலோ நம் தொண்டை சவ்வுகள் மற்றும் மேல்நாக்குக்குப் பின்னால் இருக்கும் திசுக்கள் பாதிப்படையும். அப்போது தொண்டை சவ்வுகள் வீக்கம் அடைவதோடு மட்டுமல்லாமல் சுவாசப்பாதையையும் ஒடுக்கிவிடும். இதனாலும் தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது குறட்டை உண்டாகும்.

* உடல்பருமனாக இருப்பதும் குறட்டைக்கு ஒரு காரணமே. தொடர்ந்து இவர்களுக்கு குறட்டை வந்தால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.



கீழே குறிப்பிட்டிருக்கும் `ஸ்லீப் ஆப்னியா’ அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

* சத்தமாகக் குறட்டைவிடுவது.

* தூங்கும்போது தொண்டையை அடைப்பதுபோன்ற உணர்வால் திடீரென்று கண்விழிப்பது.

* அமைதியற்ற தூக்கத்தால் எழுந்ததும் ஏற்படும் தலைவலி.

* நன்றாகத் தூங்கினாலும் ஏற்படும் தீவிரச் சோர்வு.

* மனநிலை மாற்றங்கள் மற்றும் ஆண்மைக் குறைவு ஏற்படுவது.

தூக்க மாத்திரையை சிறிது காலத்துக்கு மட்டும் எடுத்துக்கொண்டாலும் குறட்டை வரும். தூக்க மாத்திரை மட்டுமல்ல... மதுவும் நரம்பியல் மண்டலத்தில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவை உண்டாக்கும். இவை சுவாசப்பாதையில் சீரற்ற தன்மையை ஏற்படுத்துவதால் தூங்கும்போது குறட்டை ஏற்படுகிறது.

குறட்டையை தவிர்க்க வழிகள்...

* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் ஈரப்பதம் அடைந்து சுவாசிப்பதை எளிதாக்கும்.

* மது மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. புகைப்பதால் சுவாசப்பாதை அடைபட்டு, உறங்கும்போது குறட்டை ஏற்பட வாய்ப்பு உண்டு.

* உடல் எடையைக் குறைப்பதால் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

* தினமும் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலிலுள்ள தசைகள் தளர்வடையும்; தொண்டையும் தளர்வடையும். இதனால் உடல் எடை குறையும்; குறட்டையையும் தவிர்க்கலாம்.



* உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். இதனால் தூக்கம் பாதிக்கும். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே உங்கள் மொபைல்போனைத் தள்ளி வைத்துவிடுங்கள். டி.வி மற்றும் விளக்குகளை அணைத்துவிடுங்கள். இதனால் தூக்கம் நன்றாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.

* தூங்கும்போது ஒரு பக்கமாக படுத்துக்கொள்ளுங்கள் அல்லது உயர்ந்த தலையணையை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் சுவாசப்பாதையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும்; அதிகச் சத்தத்துடன் குறட்டை வராமலும் தடுக்கும்.

* தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வந்தாலும், குறட்டை வருவதைத் தடுக்கலாம்.

* தினமும் 30 முறை `ஆ... ஆ... ஆ...’, `ஈ... ஈ... ஈ...’, `ஐ... ஐ... ஐ...’, `ஓ... ஓ... ஓ...’ `ஊ... ஊ... ஊ...’ என்று சத்தம் போட்டுச் சொல்லுங்கள். இது உங்கள் தொண்டைப் பகுதியில் உள்ள தசைகளுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கும். குறட்டை குறையவும் வழிபிறக்கும்!

- கி.சிந்தூரி

சத்துக்கள் இருக்கட்டும்... சிக்கல்களே அதிகம்! பானி பூரி பற்றி சில உண்மைகள் #Panipuri
`மாப்ளை... வா ஒரு டீயைப் போடுவோம்’ என மாலை நேரத்தில் கூட்டமாக சேரும் நண்பர்கள், ஸ்நாக்ஸ் இல்லாமல் டீ குடிப்பது கிடையாது. ஒரு காலத்தில் வடை, பஜ்ஜி, போண்டா, காராசேவு, பக்கோடா... என இருந்த நொறுக்குத்தீனிப் பழக்கம், சமீப காலங்களில் வேறு தளத்துக்குப் போய்விட்டது. அதிலும் இன்று கொடிகட்டிக் கோலோச்சும் நொறுக்குத்தீனி என்பது, நகரம் தொடங்கி சிற்றூர் வரை தெருவுக்குத் தெரு களைகட்டும் பானி பூரி வியாபாரம்.



சொல்லப்போனால் இது ஒரு தெருவோரக் கடை உணவுதான். ஆனால், இன்றைக்கு நகரங்களின் அத்தனை டிபார்ட்மென்ட் ஸ்டோர் வாசல்களிலும் இந்தக் கடையைப் பார்க்கலாம். பெரிய ஹோட்டல்களில், சிறு வண்டிகளில், தெருவோரக் கடைகளில்... என எங்கும் நிறைந்திருக்கிறது பானி பூரி வியாபாரம். கையில் ஒரு சின்னத் தட்டு கொடுக்கப்படும். பூரியின் மேல் ஒரு ஓட்டையைப் போட்டு, அதற்குள் சிறிது மசாலாக் கலவையைத் திணித்து, அதற்கான ரசத்தில் (பானி) தோய்த்து வைக்க, நொறுங்கும் சப்தத்துடன், காரமும் லேசான புளிப்புச் சுவையுமாக நாக்கு ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டே இருக்கும். இன்றைக்கு குழந்தைகளையும் வெகுவாக ஈர்க்கும் முக்கிய நொறுக்குத்தீனியாகிப் போனது பானி பூரி. எலுமிச்சை, உப்பு, பச்சைமிளகாய் கலந்த எந்த உணவாக இருந்தாலும் அதன் சுவை நம்மை ஈர்த்துவிடும். அந்த வகையில் இன்றைக்குத் தமிழக நொறுக்குத்தீனிகளில் பானி பூரிக்கே முதல் இடம்.

`பானி பூரி தோன்றிய இடம் அன்றைய மகத ராஜ்யம்... இன்றைய தெற்கு பீஹார்’ என்கிறார்கள் உணவியல் ஆய்வாளர்கள். அந்தப் பகுதியில் இதற்கு `கோல் கப்பா’ (Gol Gappa) எனப் பெயர். ஆனால், இது வாரணாசியில் இருந்து வந்த உணவு வகை என்று சொல்பவர்களும் உண்டு. தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் நேபாளில் இதை 'பானி பூரி’ (Pani puri) என்கிறார்கள். கிழக்கு, மத்திய மற்றும் மேற்கு இந்தியாவில் இதற்கு வெவ்வேறு பெயர்கள்... 'புச்கா’ (Puchka), 'கோல் கப்பே’ (Gol Gappe) `பானி கி பத்தாஷே’ (Pani ke patashe), 'பகோடி’ (Pakodi), 'பத்தாஷி’ (Patashi), 'கப் சப்’ (Gup chup), 'புல்கி’ (Phulki) ... இப்படி நீள்கிறது பெயர்ப் பட்டியல். ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வோர் சுவை... ஆனால், அசத்தல் சுவை!

சுவை கிடக்கட்டும்..! கடைகளில் கிடைக்கும் பானிகளுக்கான பூரிகளை ஒவ்வொரு கடைக்காரரும் தனித்தனியே செய்வதில்லை. பானி பூரி கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து தொங்கவிடப்பட்டிருக்கும் சின்னஞ்சிறு பூரிகள் மொத்தமாக வாங்கப்படுபவை. அவை தயாரிக்கப்படும் இடம் வேறு. ஆக, பானி பூரி ஆரோக்கியமாகத்தான் தயாரிக்கப்படுகிறதா என்பது நம் முன்னே நிற்கும் மிகப் பெரிய கேள்வி.



சரி... பானி பூரி சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் ஏதாவது கிடைக்குமா? ஊட்டச்சத்து நிபுணர் அனிதா பாலமுரளியிடம் அந்தக் கேள்வியைக் கேட்டோம்.

``நன்கு பொரிக்கப்பட்ட சிறிய பூரிகள், விதவிதமான சுவைகளில் பானி, சட்னி, பச்சை மிளகாய், வெங்காயம், கெட்டித் தயிர், உருளைக்கிழங்கு, சாட் மசாலா... என நம் நாக்கில் ஒரு நிமிடம் எச்சில் சுரக்க வைக்கும் பானி பூரியின் சுவைக்கு ஈடு கிடையாது. பலவித சுவைகளை உள்ளடக்கியது. சுத்தமான எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரி உடலுக்கு உகந்தது. உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்து கிடைக்கும். இது, அதிக கலோரி கொண்டது. அதோடு உடனடி எனர்ஜி தரக்கூடிய புரதச்சத்து மிகுந்த உணவு. ஆனால், இதில் சேர்க்கப்படும் கெட்டித் தயிர் மற்றும் சோடியம் உப்பை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாது. தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்; அது, நோய்கள் பல வருவதற்கு வழிவகுக்கும்’’ என்கிறார் அனிதா பாலமுரளி.



சுத்தம் முக்கியம்!

பொதுநல மருத்துவர் சிவராமகண்ணனோ வேறுவிதமாகச் சொல்கிறார்...

``கடைக்காரர்கள், பூரியைப் பெரும்பாலும் தங்கள் விரல்களால் உடைக்கிறார்கள்; அதற்குள் மசாலாவை வைத்து, பானியில் முக்கித் தருகிறார்கள். அவர்களின் கை விரல்களின் நகத்தில் படிந்துள்ள அழுக்குகளும், கையில் உள்ள அழுக்கும் பானியிலும் ஒட்டிக்கொள்ளும். மேலும், கடைக்காரர்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. சுத்தம் இல்லாமல் பரிமாறப்படும் பானி பூரியைச் சாப்பிடுவது, வயிற்றில் புழுக்களை உற்பத்திசெய்ய வழிவகுக்கும். அவர்களின் கைகளில் பாக்டீரியாத் தொற்று இருந்தால் அவை நமக்கு வாந்தி, வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும் மேலும், ஹெபடைடிஸ் ஏ உண்டாவதற்கான அபாயமும் இருக்கிறது.
அதேபோல அந்தச் சின்னஞ்சிறு பூரியைத் தயாரிக்கும் எண்ணெய் எந்த அளவுக்குச் சுத்தமானது என்பது நமக்குத் தெரியாது. மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெயில் பொரிக்கப்பட்ட பூரியை எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேரும். இது புற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானது.

பானியில் உள்ள தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால், அதுவும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அதோடு, இந்த உணவை மாதம் இரு முறை எடுத்துக்கொள்வதே சிறந்தது. பானி பூரியை அளவாக வைத்துக்கொள்வது மிக நல்லது’’ என்கிறார் சிவராமகண்ணன்.
``அதிக அளவு சோடியம் நிறைந்த எந்த உணவையும் முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் தவிர்ப்பது நல்லது. பானி பூரியிலும் சோடியம் அதிகம் உண்டு’’ என்றும் எச்சரிக்கிறார் சிவராமகண்ணன்.

கடைகளில் கிடைக்கும் பானி பூரி நம்பத்தகுந்தவை அல்ல என நினைப்பவர்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் செய்யலாம்.



பானி பூரி!

தேவையானவை: மைதா - 1 கப், ரவை - 50 கிராம், தண்ணீர், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பானிக்கு: புதினா - 1/2 கட்டு, கொத்தமல்லித் தழை - 1/2 கட்டு, பச்சைமிளகாய் - 4, வெல்லம் - 50 கிராம், புளி - 50 கிராம், சீரகத் தூள் - 1/2 ஸ்பூன், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

பூரிக்குள் வைக்க: உருளைக்கிழங்கு - 2, சீரகத் தூள் - 1/2 ஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

மசாலா: உருளைக்கிழங்கை வேகவைத்து, நன்கு உதிர்த்துக்கொள்ளவும். அத்துடன் சீரகத்தூள், உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றைக் கலந்து மசாலா செய்து வைத்துக்கொள்ளவும்.
பூரி செய்வதற்கு: மைதா, ரவை, தண்ணீர், உப்பு போன்றவற்றைச் சேர்த்து, மாவைப் பிசைந்து, அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் ஊறவைக்கவும். சிறிது நேரம் கழித்து அந்த உருண்டைகளைத் தேய்த்து வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தேய்த்த உருண்டைகளை சிறு பூரிகளாகப் பொரிக்கவும். பூரி உள்ளங்கைக்குள் கொள்ளும் அளவுக்கு சிறியதாக இருக்க வேண்டும்.

பானிக்கு: புளியைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டவும். பிறகு வெல்லத்தை அதனுடன் சேர்த்து நன்கு கரைக்கவும். அதனுடன் புதினா, கொத்தமல்லித் தழையை அரைத்துச் சேர்க்கவும். பிறகு, பச்சைமிளகாய், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து புளித்தண்ணீருடன் சேர்த்துக் கலக்கவும்.

பூரியில் மசாலாவை வைத்து, பானியில் தோய்த்து எடுத்துப் பரிமாறவும்.

பானி பூரி... சுவை மிகுந்தது. அது சுகாதாரமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்காது. ஆனால், பானி பூரியையும் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியத்துக்கு நல்லது!

- ச.மோகனப்பிரியா

Friday, March 3, 2017

Government school team designs low cost urinal

A student team from a Government school in Kurumbapatti of Manapparai block in Tiruchi district has won a national design award with a cash prize of Rs. 50,000 for its environment-friendly and low cost urinal that uses 20-litre plastic ‘bubble-top’ water cans in an innovative manner.
Class 8 students – G.Subic Pandian, S.Santhosh, P.Dayanidhi, S.Rahul and R.Prabhakaran – led by their teacher D.Kesavan of Kurumbapatti Panchayat Union School were members of the only government school team which represented the State from among 39 competing educational institutions in Tamil Nadu in the ‘DFC I Can School Challenge 2016,’ competition held in Ahmedabad, Gujarat.
The contest, held as part of the Swachh Bharat Mission, attracted over 100 entries from 27 states. The school’s entry titled ‘Safe Mode Pissing System (SMPS)’ was one among four most innovative ideas named in the competition. “We were already considering reusing of ‘bubble-top’ water cans as flower pots and dustbins in our school campus, when children came up with this idea for a hygienic urinal,” Mr.Kesavan told The Hindu .
The most compelling reason for its creation was to stop male students from soiling their clothes after they used the school’s existing toilet facilities, which lacked a proper drainage system. The foul odour emanating from urine-soaked uniforms filled the air in the classrooms as well. After some online research, the team carved a urinal-shaped receptacle out of discarded water cans after placing them upside down, thus making the neck of the bottle an outlet point for fluid.
A channel was created on the floor of the previous toilet, where urine had been stagnating earlier, and fixed a pipe, that was connected to the plastic urinals. The waste water was piped out into a nearby garden patch.
Sprinkler pipes have also been attached to a tap at a higher level, for easy cleaning of the urinals. “We spent around Rs. 600 on our research, and we are very happy to see that our idea has made such an impact,” said Mr.Kesavan. “Most importantly, we have got rid of the bad odour from our classrooms.” Currently the school has four plastic urinals in use.
The victorious team was felicitated on Monday by Collector K.S.Palanisamy. “The prize money will be used to improve the current water management system in our school,” said D. Joselin Mary, Headmistress of Kurumbapatti Panchayat Union School. “We have been promised a borewell by the Rotary Club. We hope to construct a sump to store the water and use it for our campus,” she added.
The school has 98 students both boys and girls, and most of them commonly walk long distances to come to school everyday. “We also want to look into improving the sanitation facilities for our girl students,” the headmistress added.

Yet another weekly train service connecting Salem and Tiruchi

The introduction of Sriganganagar (Rajasthan) – Tiruchi Humsafar Weekly Express has given yet another direct connectivity from Salem to Tiruchi much to the delight of the commuters of both the western and central districts.
At present, the Mayiladuthurai – Mysuru overnight express train is the only daily train connecting Salem and Tiruchi, the headquarters of two railway divisional headquarters.
Though the Nagercoil – Kacheguda, Madurai – Kacheguda, Nagercoil – Chennai Central and Velankanni – Vasco Da Gama trains do provide direct connectivity to these two junctions, all the four are weekly express services.
The irony is that there is no single passenger train service in the Salem – Tiruchi section during the whole day.
The travelling public of both the western districts and central districts have been repeatedly pleading with the Railways to introduce more direct trains in the Salem – Namakkal - Tiruchi section.
The new train will stop at Hanumangarh; Surathghar; Bikaner; Jodhpur; Marwar; Abu Road; Palanpur; Mahesana; Ahmedabad;
Nadiad; Anand; Vadodara; Bharuch; Surat; Vasai Road; Kalyan; Lonavala; Pune; Satara; Sangli;
Miraj; Belagavi; Dharwad; Hubbali; Harihar; Davangere; Birur; Arsikere; Tumakuru; Banaaswadi; Krishnarajapuram;
Bangarepet; Salem; Namakkal; and Karur.
Train No. 14715 Sriganganagar – Tiruchi Humsafar Express will depart from Sriganganagar at 12.25 a.m. on Tuesdays.
It will arrive at Salem Junction at 9.55 a.m. on Thursday.
It will depart from Salem at 10.05 a.m.; Namakkal at 10.55 a.m.; Karur 11.30 a.m. and will reach Tiruchi at 1.30 p.m. on Thursday.
Train No. 14716 will depart from Tiruchi at 11.30 p.m. on Thursday, Karur at 1.10 a.m. on Friday, Namakkal at 1.40 a.m., Salem at 2.50 a.m. and will reach Sriganganagar at 3.15 p.m. on Sunday.
One of the advantages of the new facility is that it will be operated via the short-cut route of Namakkal and Karur. The special features of the new train is the provision of GPS-based information system; coffee/tea/soup vending machine, hot and refrigerate pantry; fire prevention system, smoke detection and suppression system, mobile and laptop charging points; convenient berth identification; improved hygienic toilets and dustbins in each cabin; and attractive seats and berths with equally attractive curtains on windows and aisles, a press release of the Salem Railway Division said.
Welcoming the new facility, a cross-section of the commuters of Salem district said that the train will also give direct and additional connectivity to cities such as Krishnarajapuram (near Bengaluru), Kalyan (near Mumbai), Ahmedabad, Vadodara, Surat, Abu Road, Bikaner etc.
E. Lakshman of Salem city, a regular commuter in the Salem – Tiruchi section urged the Railways to advance the departure of the Tiruchi – Sriganganagar Express at Tiruchi by a few hours.
The present timing of departing from Tiruchi at 11.30 a.m. and arriving at Namakkal at 1.39 a.m. and Salem at 2.45 a.m. will not benefit the travelling public much.
The Railways should advance the departure time at Tiruchi junction to 6 p.m. or 7 p.m. so that the train reaches Salem at 10 p.m. This arrangement will immensely benefit the people in reaching Namakkal and Salem without any difficulty and will also pave way for good patronage, he added.
Government secretaries skip university syndicate meetings

Chennai:


State government secretaries who are part of syndicates of state-run universities rarely attend syndicate meetings. The syndicate is one of the three decisionmaking bodies of a university where crucial policy decisions are taken.

Academicians across the state say this is not a healthy sign as presence of secretaries in such meetings ensures convergence of policies of the government and the university .
“For instance, universities don't follow the government order that bars recruitment or promotion of employees who have only an open university degree. But University of Madras has promoted some of them in the past. This led to au dit objections which led to a cut in block grants,“ a senior official said. Secretaries of higher education, health and law are part of syndicates of University of Madras, Madurai Kamarajar University , Manormaniam Sundaranar University (Tirunelveli) and Bharthiar University (Coimbatore). Directors of technical and collegiate education are also part of the body .

A review of the minutes of l3 syndicate meetings of University of Madras from April 2015 to November 2016 shows that the health secretary and law secretary abstained from these meetings. The higher education secretary was absent in many meetings. Since January 2016, the higher education secretary has attended all meetings as heshe is the chairman of VC convenor committee. “The other secretaries come only during extraordinary situations,“ said an official. “The situation is similar in other universities. Syndicate is the place where secretaries can understand problems of staff and students, education policy changes and difficulties in implementing them,“ Association of University Teachers (AUT) general secretary N Pasupathy .

While University of Madras syndicate meetings happen on the university main campus, those of some other universities take place in one of the secretary's chamber even if the VC is present. A syndicate meeting of Madurai Kamarajar University was wrapped up in 10 minutes at the secretariat.“We are unable to raise issues at such meetings,“ said an MKU syndicate member.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...