Friday, March 10, 2017

சென்னை புறநகர் பகுதிகளில் நடந்த தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மார்ச் 10, 03:45 AM

செங்கல்பட்டு,

சென்னையை ஒட்டியுள்ள தாழம்பூர், தையூர், புதுப்பாக்கம், இள்ளலூர், திருப்போரூர், ஆலத்தூர், பையனூர் உள்ளிட்ட 10–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தண்ணீர் எடுத்துவருகின்றனர். அந்த தண்ணீரை பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வியாபார நிறுவனங்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர்.

குறைந்த விலைக்கு எடுத்து அதிக விலைக்கு விற்பதாகவும், அனுமதியின்றி தண்ணீர் எடுப்பதாகவும் வருவாய்த்துறைக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன் தலைமையில் திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து சில நாட்களுக்கு முன்பு 5–க்கும் மேற்பட்ட லாரிகளை கைப்பற்றினர்.பேச்சுவார்த்தை

அந்த லாரிகளை விடுவிக்கக்கோரி தென்சென்னை தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 5–ந் தேதி வருவாய்த்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் ஏற்படாததால் 6–ந் தேதி முதல் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. ஜெயசீலன், திருப்போரூர் தாசில்தார் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கைப்பற்றப்பட்ட லாரிகளை விடுவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விவசாய நிலத்தில் தண்ணீர் எடுக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.வேலை நிறுத்தம் வாபஸ்

இதை ஏற்று லாரிகள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் தண்ணீர் லாரிகள் ஓட தொடங்கின. இதனால் புறநகர் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Thursday, March 9, 2017


50 ரூ.மினிமம் பேலன்ஸ்! கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்... இதெல்லாம் எங்கே தெரியுமா? #GoodToKnow

உண்மை... உண்மை... `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பை அஞ்சல் அலுவலகம் ஒன்றும் அதிரடியாக அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை பல நாட்களாகவே நீடித்து வருகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் இதைப் பற்றிய தகவல் தெரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.



வாட்ஸ் அப் வைரல்!

`வங்கிகளின் சேவை வரிகளால் சோர்வடைந்துள்ளீர்களா? எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ எனக் குழப்பமடைகிறீர்களா? அஞ்சலகம் வாருங்கள்! கணக்கு துவக்குங்கள்! கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்... அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெற்று அனைத்து வங்கி ஏடிஎம்-களிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம். குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே. ஆவணங்கள் - 1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள். 2) ஆதார் அடையாள அட்டை நகல். அணுகவும்... அனைத்து அஞ்சலகங்கள்' என இரண்டு முக்கிய பிரச்னைகளால் இதுபோன்ற வாட்ஸ் அப் மெசெஜ்கள் வைரலாகி வருகின்றன.

பிரச்னை ஒன்று!

சமீபத்தில் ஒரே மாதத்தில் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி நடைமுறைப்படுத்தியுள்ளன. அதன்பின் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, பணத்தை டெபாசிட் செய்வது மற்றும் பணத்தை எடுப்பதற்கும் அடங்கும். ஒரு மாதத்தில் இந்த வங்கிக் கிளைகளில் நான்கு முறைக்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்தபட்சம் 150 ரூபாய் கட்டணம். இல்லையெனில் ஆயிரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரச்னை இரண்டு!

வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 5,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு வைத்திருக்கத் தவறினால் அபராதம் வசூலிக்கப்படும் என நம் நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அறிவித்துள்ளது. பெருநகரங்களில் இருப்பவர்கள் குறைந்தபட்சத் தொகையாக 5,000 ரூபாயும், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் 3,000 ரூபாயும், புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் 2,000 ரூபாயும், கிராமப்புறங்களில் இருப்பவர்கள் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்புத் தொகைக்கும் கீழ் வைத்திருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. குறைந்த பட்ச இருப்புத் தொகையைவிட எவ்வளவு தொகை குறைவாக உள்ளதோ, அதன் அடிப்படையில் அபராதத் தொகை வசூலிக்கப்படும். உதாரணமாக, 50 முதல் 75 சதவிகிதம் வரை குறைவாக இருந்தால் அவர்களிடம் 75 ரூபாய் மற்றும் அத்துடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால் 50 ரூபாயுடன் சேவை வரியும் சேர்த்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ன் அறிவிப்பால் மாணவர்கள், இளைஞர்கள், ஓய்வூதியதாரர்கள், மாதச்சம்பளதாரர்கள் என 31 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், `50 ரூபாதான் மினிமம் பேலன்ஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்' என்ற அறிவிப்பு உண்மையா என்பது குறித்து சென்னையைச் சேர்ந்த அஞ்சல் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.

”உண்மை... உண்மை... இது எப்படி என்றால் வங்கிகளுக்கு மட்டுமே பணப்பரிவர்த்தனைக்கான புரோகிராமிங் போடப்பட்டுள்ளது. இந்த அபராதம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும். ஆகையால், வங்கியால் வழங்கப்படும் கார்டுகளை எந்த ஏடிஎம் சென்டர்களில் பயன்படுத்தினாலும் சர்வர் மூலமாகக் கண்காணிக்கப்பட்டு பின்னர் பணம் பிடித்தம் செய்யப்படும். வங்கியில் கணக்கு துவங்கப்பட்டு, அஞ்சல் அலுவலக ஏடிஎம் சென்டரில் பணம் எடுத்தாலும் பணம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் கார்டை, நீங்கள் எந்த வங்கி அல்லது ஏடிஎம் சென்டரில் பயன்படுத்தினாலும் அதற்கு அபராதம் இல்லை. எங்களுடைய அஞ்சல் அலுவலக சர்வர் மூலமாகவே பணம் வழங்குகிறோம். நாங்கள் வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையைக் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை, வாடிக்கையாளரிடம் பணம் பிடிப்பதும் இல்லை. ஆகையால், வங்கிகளைவிட அஞ்சல் அலுவலகங்களில் கணக்கு துவங்குவது மிகப் பயனுள்ளதாக இருக்கும். அஞ்சல் அலுவலகத்தில் எந்த சர்வீஸ் சார்ஜ்-ம் கிடையாது. ஒரே மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். சாதாரண கணக்கு துவங்க 50 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருந்தால் போதுமானது. இதற்கு ஏடிஎம் கார்டு வழங்கப்படும். காசோலைக் கணக்குக்கு 500 ரூபாய். அஞ்சல் அலுவலகத்தில் கணக்குத் துவங்க போட்டோ உடன் கூடிய அடையாளச் சான்று, முகவரிச் சான்று வழங்கினால் போதும்!” என்றார்.

அணுகவும்... அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம்!
ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்களும்... விசாரணை வளையத்தில் 9 மருத்துவ உதவியாளர்களும் !
vikatan.com



ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், அப்போலோவில் அவருடைய இறுதி நிமிடங்களின்போது நடந்த சிகிச்சைகள் குறித்த தகவல்களை மத்திய உளவுத்துறை சேகரித்து வருகிறது. அதில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் செய்திகள் கசிந்துவருகின்றன.

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு, ஜெயலலிதா மயக்க நிலையில் அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை, போயஸ் கார்டனிலிருந்து எப்படிக் கொண்டுவந்தார்கள், அப்போலோவின் இரண்டாவது தளத்துக்கு அவரை எப்படிக் கொண்டு சென்றார்கள் என்பது குறித்த பல்வேறு வினாக்கள் இப்போது கிளப்பப்பட்டு வருகின்றன. 'ஜெயலலிதாவுக்கு நீர்ச்சத்து குறைபாடும், காய்ச்சலும் உள்ளது' என்று முதலில் அப்போலோ அறிக்கை வெளியிட்டாலும், நாட்கள் செல்லச்செல்ல அவருக்கு இருக்கும் வேறு சில நோய்களையும் பட்டியலிட்டு... அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் வரிசையாக அறிக்கைகளை வெளியிட்டனர், அப்போலோ நிர்வாகத்தினர்.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட சில தினங்கள் கழித்து... அப்போலோ நி்ர்வாகம், ''அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது; சாப்பிடுகிறார்; பேசுகிறார்; வீடு திரும்புவதைப் பற்றி அவரே முடிவு செய்வார்” என்றெல்லாம் சொல்லிவந்தது. ஆனால், திடீரென டிசம்பர் 4-ம் தேதி மாலை அவருக்கு இதயஅடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்துவிட்டதாக அதே மருத்துவமனை மூலம் அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல், அவர் மரணம்வரை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது அனைத்து தரப்பு மக்களையும் கேள்விக்குள்ளாக்கியது. அ.தி.மு.க-வில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட முன்னணியினர்கூட, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி அதிர வைத்தனர். மத்திய அரசிடமும் சசிகலா புஷ்பா எம்.பி-யும்... ஒ.பி.எஸ் ஆதரவு எம்.பி-க்களும் மனு அளித்து மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர்.

பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர் என்பதால், ஜெயலலிதாவின் மரணம் குறித்த விவகாரம் அவரையும் யோசிக்கவைத்தது. ஜெயலலிதா எதற்காக மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார் என்ற கேள்வி, மத்திய அரசிடம் இன்னும் உள்ளது. ஓ.பி.எஸ் அணியினர், 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை வேண்டும்' என்று கோரிக்கைவைத்தபோதே இந்த விவகாரத்தில் நடந்தது குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அதிகாரபூர்மற்ற இந்த விசாரணையில் சில அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்களாம். இதற்குக் காரணம் மத்திய அரசு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என்று அறிவித்தால், அதற்கு முன்னேற்பாடாகத்தான் இந்த விசாரணையை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள். மத்திய அரசின் மனநிலையை அறிந்துதான் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.



ஜெயலலிதா மரணமடைந்த அப்போலோ மருத்துவமனையில் இருந்துதான் இவர்கள் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் விசாரணையில் இருந்து கிடைத்த தகவல்கள்தான் இப்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.மத்திய உளவுத்துறை அதி்காரி ஒருவரிடம் நாம் பேசியபோது “ஜெயலலிதாவுக்கு மருத்துவம் செய்த டாக்டர்கள் குழுவோடு ஒன்பது மருத்துவ உதவியாளர்கள் குழுவும் பணியில் இருந்துள்ளார்கள். ஒரு ஷிப்ஃட்டுக்கு 3 பேர் வீதம் ஒன்பது பேரும் மாறிமாறி 75 நாட்களும் பணியில் இருந்துள்ளார்கள். அதில் மூன்று மருத்துவ உதவியாளர்களிடம் ஜெயலலிதா குளோஸாகப் பேசி வந்துள்ளதாகத் தெரிகிறது. முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு ஜெயலலிதாவின் உடல்நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் இருந்துள்ளது. அவரைச் சாதாரண வார்டுக்கு மாற்றிய பிறகு, விரைவில் நலம் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில்தான் அனைவரும் இருந்துள்ளனர். ஜெயலலிதாவின் அறையில் சசிகலா மட்டுமே முழு நேரமும் இருந்துள்ளார். ஷிப்ஃடில் இருக்கும் மருத்துவ உதவியாளர்கள், தேவைப்பட்டால்... அறைக்குள் சென்று செக்கப் செய்துவிட்டு வெளியே வந்து உட்கார்ந்து கொண்டுள்ளனர்.

டிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா படுக்கையில் இருந்துள்ளார். இயல்பாக அவர் தூங்கிக்கொண்டிருந்ததால், அப்போது பணியில் இருந்த இரண்டு மருத்துவ உதவியாளர்கள் வெளியே இருந்துள்ளனர். திடீரென ஜெயலலிதா இருமல் சத்தம் தொடர்ந்து கேட்டதும், பதறியடித்து இரண்டு மருத்துவ உதவியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஜெயலலிதா பக்கத்தில் சசிகலா கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஜெயலலிதா இருமியதால், தீடிர் என வாந்தியும் எடுத்துள்ளார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள் பதட்டம் அடைந்துள்ளார்கள். அதன்பிறகுதான் சிறிது நேரத்தில் நெஞ்சு வலியும் மூச்சுத்திணறலும் வந்துள்ளது'' இதுவரை நாங்கள் விசாரித்துள்ளோம் என்கிறார். அடுத்த கட்டமாக “ஜெயலலிதாவிற்கு தீடிர் என இருமலும் அதை தொடர்ந்து வாந்தியும் வந்தது ஏன்?, அவருக்கு அந்த நேரத்தில் ஏதாவது திரவ உணவு கொடுக்கபட்டதா? என்பதையெல்லாம் உடன் இருந்த மருத்துவ உதவியாளர்கள் தான் விளக்க வேண்டும். அவர்களோடு அறையில் இருந்த சசிகலாவும் வாய் திறக்க வேண்டும். இதை தான் நாங்கள் அடுத்து விசாரிக்க உள்ளோம்” என்றும் அந்த உளவுத்துறை அதிகாரி கூறுகிறார்.

இப்போது அதிகாரிகள் விசாரணை வட்டத்தில், ஜெயலலிதாவின் சிகிச்சையில் உடனிருந்த ஒன்பது மருத்துவ உதவியாளர்களும் உள்ளனர். மேலும், டாக்டர் பாலாஜியும் விசாரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசு முறையாக விசாரணைக்கு உத்தரவிட்டதும் முதலில் விசாரிக்கப்படும் நபர், சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவக்குமார்தான் என்கிறார்கள். அப்போலோவில் பணியாற்றும் சில நபர்களைவைத்து அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் கேமரா புட்டேஜ்களையும் கைப்பற்றியுள்ளனர்..

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்புவரை டாக்டர் சிவக்குமார்தான் ஜெயலலிதாவுக்கு மருத்துவம் அளித்துள்ளார். அதனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்ற விபரம் சிவக்குமாருக்கு மட்டுமே தெரியும் என்று உறுதியாக நம்புகிறது மத்திய அரசு. எனவே, அவர் மீதுதான் இப்போது கண்வைத்துள்ளனர். விரைவில் விசாரணைக்குழு அதிகாரபூர்வ விசாரணையில் இறங்கிவிடும் நிலை வந்துவிடும். மத்திய அரசும் அதற்குத் தயாராக உள்ளது என்பதே கடைசிகட்ட தகவலாகத் தெரிகிறது.

- அ.சையது அபுதாஹிர்
சமோசா... வேண்டவே வேண்டாம்!’ மருத்துவம் சொல்லும் காரணங்கள்
vikatan.com

எல்லா டீக்கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. `மூணு பத்து ரூபா’ என குட்டியூண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு. சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்து, டீ குடிக்காத தமிழ் ரசிகர்கள் வெகு குறைவு. மதுரைப் பக்கம் வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்துப் பரிமாறப்படும் `சமோசா’, அலாதிச் சுவைகொண்டது. சென்னை சௌகார்பேட்டை பகுதியில் மொறுமொறு சுவையுடன் பச்சைச் சட்னி, சாஸுடன் கிடைக்கும் வட இந்திய வகைக்கு, பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் பல இடங்களில் சமோசா-சுண்டல் காம்பினேஷனுக்கு மயங்கிக்கிடக்கிறவர்கள் உண்டு. `எல்லாம் சரி... இது, நம் உடலுக்கு நல்லதுதானா?’ என்கிற கேள்வியையும் கூடவே கேட்கவேண்டியிருக்கிறது.



‘சமோசாவும் நம் ஆரோக்கியமும்’ என்கிற பக்கத்துக்குப் போவதற்கு முன்னால், இதன் வரலாற்றை மேம்போக்காக ஒரு புரட்டுப் புரட்டிவிடலாம். `சமோசா’, மட்டுமல்ல... ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பகுதியிலும் அழைக்கப்படும் இதன் பெயர், மலைப்பைத் தருகிறது. சமஸ்கிருதத்தில், `கட்டக்கா’, பெங்காலியில் `ஷிங்காரா’, உஸ்பெஸ்கிஸ்தானில் `சொம்சா’, அரபியில் `சம்புசாக்’, பர்மிய மொழியில் `சமோஷா’!

சப்பாத்திக்கு இடுவது மாதிரி, கோதுமை மாவை (மைதாவும் இப்போது சேர்க்கப்படுகிறது) இட்டு, அதில் மசாலா வைத்து முக்கோணமாக மடித்துப் பொரித்து எடுத்தால், அது சமோசா. சைவம் எனில் மசாலாவில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பச்சைமிளகாய், வெங்காயம், இன்னும் சில வாசனைப் பொருள்கள் கலந்தும் மசாலா தயாரிக்கிறார்கள். அசைவம் எனில், இறைச்சியில் செய்யப்பட்ட மசாலா! இந்தியாவில் பெரும்பாலும் சைவ சமோசாதான் புழக்கத்தில் இருக்கிறது.



கடந்த எட்டு நூற்றாண்டுகளாக தெற்காசிய சமையலில் சமோசா வெகு பிரபலம். என்றாலும், `இதன் பூர்வீகம் எது?’ என்றால், மத்தியக் கிழக்கு நாடுகளைத்தான் காட்டுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஈரானிய வரலாற்றியலாளர் அபுல்ஃபாஸல் பேஹாக் (Abulfazl Beyhaqi), `தாரிக்-ஏ பேஹாக்’ (Tariq-e Beyhaqi) என்ற வரலாற்று நூலில், 10-ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமோசா இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். 13, 14-ம் நூற்றாண்டில்தான் வியாபாரிகள் மூலமாக இந்தியாவுக்குள் மூக்கை நுழைத்திருக்கிறது சமோசா. அப்படி அல்ல... டெல்லி சுல்தான்களுக்காக சமைக்க வந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்கள்தான் இதை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள்.

டெல்லி சுல்தான்கள் சபையில் இருந்த அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ரோ (Amir Khusro), உலகைச் சுற்றிவந்த யாத்ரீகர் இபின் பதூதா (Ibn Battuta)... எனப் பலரும் சமோசா பற்றிய குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். முகமது பின் துக்ளக்கின் அரண்மனைச் சமையலில் சமோசாவுக்கும் இடம் இருந்ததாகச் சொல்கிறார் இபின் பதூதா.

ஆரம்பத்தில் படைவீரர்கள், வியாபாரிகள், ஊர் ஊராகப் பயணம் செய்கிறவர்கள் இரவில் தங்க நேரிடும்போது, சமோசாக்களை செய்து வைத்துக்கொள்வார்களாம். அடுத்த நாளில் பகல் உணவுக்கு உபயோகப்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அரசர்கள், சுல்தான்களுக்கு மட்டுமல்ல... சாமான்யர்களுக்கும் பிடித்த நொறுக்குத்தீனி சமோசா. இந்தியாவில் இது அறிமுகமானபோது, உத்தரப்பிரதேச மாநில மக்கள், அதை சைவ வடிவத்துக்கு மாற்றி ஏற்றுக்கொண்டார்கள். சில நூற்றாண்டுகளிலேயே சமோசா இந்தியாவில் பிரபலமாகிவிட்டது. வட இந்தியாவில் சமோசா மாவுக்குப் பெரும்பாலும் மைதாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.



வட இந்தியாவில் சில நகரங்களிலும் பாகிஸ்தானிலும் அசைவ சமோசா வெகு பிரபலம். ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை ஸ்டஃபிங்கில் சேர்க்கிறார்கள். பஞ்சாப்பில் சமோசாவுடன் சென்னா பரிமாறப்படுகிறது. மும்பையில், `சமோசா பாவ்’ பிரசித்திபெற்ற ஒன்று. பன்னில் வைத்துத் தரப்படும் இதை `இந்தியன் பர்கர்’ என்றுகூடச் சொல்லலாம். தீபாவளிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் சில இடங்களில் இனிப்பு சமோசா தயாரித்து, பரிமாறும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.

ஆப்பிரிக்கா, எத்தியோப்பியா, சோமாலியா உள்ளிட்ட நாடுகளில் சமோசா, பண்டிகைகால ஸ்பெஷல் ரெசிப்பி. பொரித்துச் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு என்பதற்காக சில மேற்கத்திய நாடுகளில் சமோசாவை மைக்ரோவேவ் அவனில் பேக் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்டஃபிங்குக்கு ஆரோக்கியமான காய்கறிகள்! உலகமெங்கும் பிரபலான உணவுப்பொருளாகிவிட்டது சமோசா... ஒவ்வோர் இடத்திலும் ஒரு சுவை. சுவைத்து மகிழலாம்தான். அதற்கு முன்னர், `சமோசா ஆரோக்கியமானதுதானா?’ என்ற கேள்விக்கு டயட்டீஷியன் சௌமியா சொல்லும் விளக்கத்தையும் பார்த்துவிடுவோம்...



``மாலை 4 மணி. டீ குடிக்கப் போகிற இடத்தில் தட்டில் சுடச்சுட கொட்டிவைக்கப்பட்டிருக்கிறது சமோசா. ஒன்றை எடுத்துக் கடித்துச் சுவைக்க வேட்கை எழும்தான். ஆனால், அதனால் ஏற்படும் சில பக்கவிளைவுகளைத் தெரிந்துகொண்டால், அதன் பக்கம் போக மாட்டீர்கள்.

ஒரு சின்ன சமோசாவில் 240 கலோரிகள் இருக்கின்றன. நம் உள்ளூர் கடைகளில் விற்கப்படும் சமோசாக்களில் ஊட்டச்சத்தைத் தரக்கூடிய பொருட்கள் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். சர்க்கரைநோயாளிகளுக்குச் சேராத உருளைக்கிழங்கு இருக்கிறது; அதற்கான மாவில் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மைதா கலக்கப்படுகிறது. மைதாவில் இருக்கும் அதிக அளவிலான கிளைசெமிக் இண்டெக்ஸ் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கூட்டும். கொழுப்பை அதிகரிக்கச் செய்யும். இதுகூடப் பரவாயில்லை. சமோசாவைப் பொரிக்கப் பயன்படுத்தப்படும் எண்ணெய்... அதுதான் ஆபத்தானது.



தெருவோரக் கடைகளில் சமோசா பொரிக்க எந்த வகை எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அதேபோல ஒரே எண்ணெயில் திரும்பத் திரும்ப பொரிப்பார்கள். அது ட்ரான்ஸ் ஃபேட்டுக்கு (Trans fat) வழிவகுக்கும். இதை `ஹைட்ரோஜனேஷன்’ (Hydrogenation) என்பார்கள். அதாவது ஒரு உணவைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தும்போதோ, ஒரே எண்ணெயை மேலும் மேலும் பயன்படுத்தும்போதோ ஹைட்ரஜன் உணவோடு சேரும். இது ட்ரான்ஸ்ஃபேட்டுக்கு வழிவகுக்கும். சர்க்கரைநோயாளிகளும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் இதைச் சாப்பிட்டால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் பிரச்னை தீவிரமாகும்.

மற்ற ஸ்நாக்ஸைவிட சமோசா கொஞ்சம் டேஞ்சர்தான். அதீத கொலஸ்ட்ரால், செரிமானக் கோளாறுகள், ட்ரான்ஸ் ஃபேட் (கெட்ட கொழுப்பு), சுகாதாரமற்ற மைதா மற்றும் எண்ணெய்... இவை போதுமானவை சமோசாவை வேண்டாம் என்று சொல்ல!

தொடர்ந்து சமோசா சாப்பிடுவது, வயிற்றில் தொப்பையை உருவாக்கும். அதோடு சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கெல்லாம் பாதை வகுக்கும். சமோசா சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் வீட்டிலேயே செய்யலாம். நல்ல எண்ணெயில், ஆரோக்கியமான ஸ்டஃபிங்கோடு மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு, அரிசி மாவு சேர்த்து சாப்பிட்டால் தவறில்லை. மற்றபடி, சமோசாவுக்கு `நோ’ சொல்வதே புத்திசாலித்தனம்.’’

ஆக, வீட்டு சமோசாவுக்கு வெல்கம் (எப்போதாவது) சொல்வோம்! கடை சமோசா..? வேண்டவே வேண்டாம்!

- பாலு சத்யா

கேள்வி மூலை 21: வாசித்தல் ஏன் தூக்கத்தை வரவழைக்கிறது?

ஆதி
  

பலரும் அவ்வளவு நேரம் சுறுசுறுப்பாக இயங்கிக் இருப்பார்கள். புத்தகத்தை கையில் எடுத்த கொஞ்ச நேரத்தில் தூக்கம் கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்துவிடும். ஏன் இப்படி நடக்கிறது? வாசித்தல், ஏன் நமக்குத் தூக்கத்தை வரவழைக்கிறது?

தளர்ந்த உடல்

முதலாவதாக, மிகவும் சௌகரியமான நிலையில் உடலை வைத்துக்கொண்டுதான் பொதுவாக நாம் வாசிக்க ஆரம்பிக்கிறோம். அதாவது உடலை நன்றாகத் தளர்த்தும் வகையில் உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ. அது மட்டுமல்லாமல் சத்தம் ஏதுமில்லாத ஓர் இடத்தில், ஒரு நாளின் கடைசி வேலையாக அல்லது உடல் ஆற்றலை பெரிதாகச் செலவழித்த பின்னர்தான் பெரும்பாலும் வாசிக்க உட்காருகிறோம். இதன் காரணமாக வாசிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் உடல் ஓய்வு நிலைக்குச் சென்றுவிடுகிறது அல்லது தூக்கத்தை நோக்கி இழுக்கப்படுகிறது.

கவனம் திசைதிரும்புதல்

மற்றொருபுறம் நம்மைக் கவர்ந்து இழுக்கும் ஒரு புத்தகமோ அல்லது கதையோ நடப்பு உலகத்திலிருந்து, நடப்புக் கவலைகளிலிருந்து வேறொரு உலகத்துக்கு நம்முடைய கவனத்தை இட்டுச் செல்கிறது. நாளைக்கு உங்களை மிரட்டப்போகும் பரீட்சை அல்லது வேலைக்கான காலக்கெடு அல்லது நீண்ட தூரப் பயணத்துக்கான திட்டத்தை வாசிப்பு மறக்க வைத்திருக்கும்.

நம்முடைய மனம் பெரும்பாலான நேரம் நடப்புக் கவலைகளை எப்படித் தீர்ப்பது என்பது குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறது. வாசிக்கும்போது அதிலிருந்து விலகி, நம்முடைய மனமும் தளர் வான நிலைக்குச் சென்றிருக்கும்.

பிடிக்காமல் போனால்

நேர்மாறாக, நீங்கள் வாசிப்பது கவனத்தைக் கவராமல் சலிப்படையச் செய்யும் வகையில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? தொடர்ந்து வாசிப்பதற்கு எடுக்கும் முயற்சி, மூளையை சோர்வுறச் செய்யும். (எடுத்துக்காட்டாக, ஆர்வமற்று பாடப் புத்தகத்தை வாசிப்பது). இந்த நிலையில் உங்கள் மனதின் கவனம் சிதறி அரைத்தூக்க நிலைக்குச் சென்றிருக்கும். இதுவும்கூட விரைவிலேயே தூக்கத்தை வரவழைத்து விடுகிறது.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(குறள்: 636)

குறள் இனிது: அறிதல்..புரிதல்...செய்தல்...!

சோம.வீரப்பன்

2012-ல் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா கோபிநாத்தின் ‘உன்னால் முடியும்' நிகழ்ச்சி. தொழிலில் வெற்றி பெற்றவர்கள் அதன் ரகசியங்களை மேலாண்மை பயிலும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் களம் அது. ஆச்சி மசாலாவின் ஐசக்கின் நேர்காணலில் அவரது வெற்றிக்கான காரணங்களை அவரே கூறக் கேளுங்கள். BBA படித்துவிட்டு, MBA படிக்க முடியாததால் கோத்ரெஜ் நிறுவனத்தில் ஹேர்டை போன்ற பொருட்களை விற்கும் விற்பனை யாளராகச் சேர்ந்தவராம் அவர்!
10 பேர் இருக்கும் குழுவில் பலரும் விற்பனை இலக்குகளை எப்படி அடையலாம் , எதை விற்கலாம் என்றே யோசித்துக் கொண்டிருப்பார்களாம். ஆனால் இவரோ விற்பனையாகாத பொருட்களைப் பற்றியும் அவற்றை என்ன செய்தால் விற்கலாம் என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டேயிருப்பாராம்! ஐயா, படிப்போ, பயிற்சியோ ஒன்றாக இருந்தாலும் அதன் பாதிப்பும் பலனும் ஆளுக்கு ஆள் வேறுபடுமில்லையா?

டெல்லியின் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் பயின்றவர்கள் அனைவருமா ஓம்புரி போல நடிக்கிறார்கள்? புணே பிலிம் இன்ஸ்டி டியூட்டில் பலர் பயின்றாலும் யாரோ ஒருவர் தான் ஸ்மிதா பாட்டீல் ஆகிறார்! கேட்பதும், பார்ப்பதும் ஒன்றே தான் என்றாலும் அதன் புரிதல் வெவ்வேறு கோணங்களில், அளவுகளில் அமைந்து விடுகிறதில்லையா? இதை ஆங்கிலத்தில் 3-i என்கிறார்கள்.அதாவது information, interpretation and implementation!
வகுப்பறையில், வாழ்க்கையில் நமக்குப் பல தகவல்கள் கிடைக்கின்றன. நாம் அவற்றை எப்படி கிரகித்துக் கொள்கிறோம், அவற்றை எப்படி செயல்படுத்துகிறோம் என்பது முக்கியமில்லையா ? இந்த இரண்டாவது மூன்றாவது செயல் i-க்கள் தானே ஏட்டுச் சுரைக்காயா இல்லையா எனத் தீர்மானிப்பவை? புத்திசாலித்தனம் என்பது எதிலும் இழையோடும் அடிப்படை முறைகளை (patterns) விரைவாகப் புரிந்து கொள்வது என்பார்கள்.அது தானேங்க சுயபுத்தி என்பது?

‘படித்தவன் பாடம் நடத்துகிறான், படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்' என்பது வெறும் திரைப்பட வசனமில்லை! அது வாழ்க்கையின் யதார்த்தம் நமக்குச் சொல்லும் பாடம்! இன்னுமொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி.தொழிலில் வெற்றி பெற படிப்பு அவசியமா என்னும் விவாதம். இறுதியில் சிறப்பு விருந்தினராக வந்தவரிடம் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. அவர் அதிகம் 
படிக்காதவர்.ஆனால் அபார சாதனையாளர்.

‘உங்கள் வெற்றி எதைக் காட்டுகிறது? MBA படித்தவர்கள் செய்யாததை நீங்கள் சாதித்து விட்டீர்களே' என்பதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘முன்னேற்றமடைய கெட்டிக்காரத்தனம் தேவை. வாய்ப்புகளை இனம் காணவும், உபயோகப்படுத்திக் கொள்ளவும் தெரிந்த திறமை அது. வெறும் படிப்பினால் வருவதில்லை' என்று அவர் சொல்வதை மறுக்க முடியுமா?

படிப்பு முன்னேற்றத்திற்கு உதவியே தவிர உத்திரவாதம் இல்லையே! இதில் வேடிக்கை என்னவென்றால் அவரிடம் IIMல் படித்தவர்கள் சிலர் பணிபுரிவதாகவும், அவர்கள் பரவாயில்லை,கொடுத்த பணியைச் செய்து விடுவார்கள் என்றும் சொன்னார்! இயற்கையான அறிவுடன் கல்வியையும் பெற்றவரால் தீர்க்க முடியாத பிரச்சினை உண்டா என்கிறார் வள்ளுவர்!
- somaiah.veerappan@gmail.com

மார்ச் 16-ல் தமிழக பட்ஜெட் தாக்கல்: அரசு ஊழியர்கள் ஓய்வு வயது வரம்பு உயர்த்தப்பட வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவை அடுத்த கூட்டத்தொடர் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே, 2017- 2018 நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை 16.3.2017-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் கூட்டியுள்ளார். மேலும், அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், கடந்த ஜனவரி 23-ம் தேதி தொடங்கியது. அன்று பேரவை யில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரை யாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி வரை கூட்டத் தொடர் நடந்தது. அப்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தார்.
அதன்பிறகு அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசிய லில் பரபரப்பும் குழப்பமும் நிலவி யது. பின்னர் புதிய முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அப்போது, முதல்வரிடமே நிதித் துறை இருந்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஜெயக்குமாரிடம் நிதித் துறை ஒப்படைக்கப்பட்ட பிறகு பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில், வரும் 16.03.2017 அன்று காலை 10.30 மணிக்கு 2017-2018-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு வயது உயர்த்தப்படுமா?

இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தும் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
இது தொடர்பாக, அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியுள்ளது. தற்போது அரசு ஊழியர்கள் 7-வது ஊதியக்குழு பரிந்துரை ஊதியத்தை நம்பியுள்ளனர். இதை நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரையை ஏற்று செயல்படுத்தினாலும், அடுத்த 4 மாதங்களில் ரூ.15 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு நிதி தேவைப்படும்.
ஏற்கெனவே தமிழக அரசுத் துறைகளில் 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவை நிரப்பப்படாத சூழலில், தமிழக அரசின் இந்த முடிவு பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும் என அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...