Friday, March 10, 2017

பாவம் குழந்தைகள்...

By ஆசிரியர்  |   Published on : 09th March 2017 02:21 AM 
மாணவர்கள் எல்லோரும் மதிய உணவு சாப்பிடும்போது, ஒரு குழந்தைக்கு மட்டும் அது மறுக்கப்பட்டால் எப்படி இருக்கும்? அதிலும் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்குக் கிடைக்க இருக்கும் முழுமையான ஒருவேளை உணவு அது மட்டுமே எனும்போது, அந்தக் குழந்தையின் மனநிலையை சற்று யோசித்துப் பாருங்கள்.
ஆதார் எண் இல்லை என்பதனால் தனக்கு மதிய உணவு மறுக்கப்படுகிறது என்பதை அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமா? அந்தக் குழந்தையை விடுங்கள். பொது நன்மைக்காகத்தான் அரசு தங்கள் குழந்தையின் மதிய உணவைத் தடுத்திருக்கிறது என்று பெற்றோருக்காவது தெரியுமா, விளக்கமளித்தால் புரியுமா? அதெல்லாம் போகட்டும், மதிய உணவு வழங்கப்படாவிட்டால் பல குழந்தைகள் பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிடுவார்கள் என்பது அரசு அதிகாரிகளுக்குத் தெரியாதா?
ஆதார் அட்டையால் ஏற்படும் நன்மைகள் ஏராளம் என்பதும், விரயமாகிக் கொண்டிருந்த பல கோடி ரூபாய் அதனால் அரசுக்கு மிச்சமாகியிருக்கிறது என்பதும் உண்மைதான். செலாவணி செல்லாததாக்கப்பட்ட முடிவின்போது பொதுமக்களின் அடிப்படை சிரமங்களும், சிக்கல்களும் எப்படி அரசுக்குத் தெரியாமல் போனதோ அதேபோல, இப்போது மதிய உணவுக்கும் ஆதார் அட்டை எண்ணுக்கும் தொடர்பு ஏற்படுத்தி இருப்பது, நடைமுறைச் சிக்கல்களை ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் புரிந்து கொள்ளாமல் செயல்படுகின்றனர் என்பதை வெளிச்சம் போடுகிறது.
முந்தைய மன்மோகன் சிங் அரசு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அதை பாரதிய ஜனதா கட்சி எதிர்த்தது. ஆனால், நரேந்திர மோடி பிரதமரானபோது, அந்தத் திட்டத்தின் நோக்கம் சரியானது என்பதைப் புரிந்து கொண்டு, கெளரவம் பார்க்காமல் ஆதார் திட்டத்தைத் தொடர அனுமதித்தார். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கி அத்தனை பேரின் புகைப்படம், கைரேகை, முகவரி உள்ளிட்ட எல்லா விவரங்களையும் சேகரிப்பது என்பதில் மத்திய அரசு முனைப்புக் காட்டு
கிறது. இதன்மூலம் அரசின் மானியங்கள், உதவிகள் போன்றவை போலி பயனாளிகளுக்குப் போய்ச் சேர்வதைத் தடுப்பது என்பதுதான் நோக்கம்.
உணவுப் பொருள்கள், உரங்கள், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருள்களின் மானியங்கள் பயனாளிகளை மட்டுமே சென்றடையவும், போலி பயனாளிகள் பயனடைவதைத் தடுக்கவும் ஆதார் எண் பயன்படுகிறது. இதன் மூலம் 2.16 கோடி போலி குடும்ப அட்டைகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டிருக்கின்றன. இதனால் ஏறத்தாழ ரூ.13,000 கோடி அரசுக்கு மிச்சமாகி இருக்கிறது. அரசு பல்வேறு மானியங்களுக்காகச் செலவிடும் ரூ.2.11 லட்சம் கோடியில், போலி பயனாளிகளுக்கான கசிவுகள் தவிர்க்கப்பட்டால் ஏறத்தாழ ரூ.33,000 கோடி அரசுக்கு மிச்சமாகும்.
இதையெல்லாம் மறுக்கவில்லை. ஆதார் அட்டையின் நன்மைகளையும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அதை நடைமுறைப்படுத்தக் காட்டப்படும் முனைப்புதான் ஒப்புக் கொள்ளும்படியாக இல்லை. எல்லாவற்றிற்கும் ஆதார் எண் வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால், உண்மையிலேயே மானியம் தேவைப்படும் பலர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அரசு உணர மறுக்கிறது.
ரயில் பயண முன்பதிவுக்கு ஆதார் எண் குறிப்பிட வேண்டும் என்பது உலகில் எந்த நாட்டிலுமே கேள்விப்படாத நடைமுறை. வெளிநாட்டினர் ஒருவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும்போது என்ன செய்வார்? ஏறத்தாழ பத்து அரசு நலத் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அவை அனைத்துமே மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள், அடித்தட்டு வர்க்கத்தினர் தொடர்பானவை. அவர்களில் பலருக்கும் இன்னும்கூட ஆதார் அட்டை குறித்த விவரமே தெரியாது.
குழந்தைகளுடைய நிலைமைதான் மிகவும் மோசம். அவர்களில் பலரும் படிப்பறிவில்லாத பெற்றோரின் வழிகாட்டுதலில் வாழ்பவர்கள். அது மட்டுமல்ல, ஒவ்வொரு வயது அதிகரிக்கும்போதும் அவர்களது ஆதார் அட்டை புதுப்பிக்கப்படவும் வேண்டும். பெற்றோர் படிப்பறிவில்லாத ஏழைகளாகவும், எந்தவித முகவரி ஆதாரமுமில்லாத இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்களாகவும் இருந்தால், அந்தக் குழந்தைகளுக்கு ஆதார் எண் பெற முடியாது. அவர்கள் கல்வி கற்கவும் முடியாது, அரசின் உதவிகளைப் பெறவும் முடியாது.
ஆதார் அட்டை வழங்குவது என்பது குடும்ப அட்டை வழங்குவதுபோல, தங்குவதற்கு வீடோ, குறைந்தபட்சம் குடிசையோ இருந்தால்தான் தரப்படுகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பல லட்சம் பேர் தங்களது கிராமங்களில் விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களில் கூலி அல்லது கட்டடத் தொழிலாளிகளாகத் தெருவோர வாழ்க்கை வாழ்கிறார்கள். அவர்கள் உண்மையிலேயே மானியம் தேவைப்படுபவர்கள். ஆனால், அவர்களிடம் ஆதார் அட்டை இல்லாததால் அரசின் சலுகைகள் மறுக்கப்படுகின்றன.
இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்வரை, ஆதார் எண் எந்தவொரு திட்டத்திலும் கட்டாயப்படுத்தப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்கிறது. ஆதார் அட்டை வழங்குவதிலேயேகூட பல குளறுபடிகள் காணப்படுகின்றன. பத்திரப் பதிவில் ஆதார் எண் கட்டாயப்படுத்தப்படுவதிலேயேகூட போலி அட்டையின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
ஆதார் அட்டை திட்டமே வேண்டாம் என்பதல்ல. குழந்தைகள் மதிய உணவுக்கும், ரயில் பயண முன்பதிவுக்கும் கட்டாயப்படுத்தி ஆதார் அட்டைத் திட்டத்தை செயல்படுத்த முனைவது தவறானது. இதன்மூலம் நியாயமான பயனாளிகள் பாதிக்கப்படுவார்களே தவிர, அரசின் எண்ணம் நிறைவேறாது!

தமிழரும் இந்தியர்தான்

By ம. பாவேந்தன் இளையபதி  |   Published on : 09th March 2017 02:24 AM  
இன்று நாம் உண்ணும் மீனுக்காக ஓர் இனம் கடந்த 30 ஆண்டுகளில் 730-க்கும் மேற்பட்டோரை இழந்திருப்பதும், பலர் முடமாக்கப்பட்டுள்ளதும், பல லட்சக்கணக்கான ரூபாய் பொருளாதார இழப்பைச் சந்தித்திருப்பதும் உலகில் வேறெங்கும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில்தான் நடந்தேறியுள்ளது.
தமிழகத்தின் பூர்வீகக் குடிகளான மீனவர்கள்தான் இத்தனை இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். இதில், இப்போது சேர்ந்திருப்பவர் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 22 வயதான பிரிட்ஜோ.
தமிழ்நாட்டின் சென்னை, பழவேற்காடு, மாமல்லபுரம், ராமேசுவரம், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, அண்டை மாநிலமான புதுச்சேரி ஆகிய இடங்களில் பல லட்சக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர்.
இதில், சென்னை - கோடியக்கரை, கோடியக்கரை - பாம்பன், பாம்பன் - கன்னியாகுமரி, கன்னியாகுமரி - கேரளத்தின் நீரோடி வரை சுமார் 1,076 கி.மீ. தூரம் தமிழக மீனவர்கள் நெடுங்காலமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், தமிழகத்தின் ராமேசுவரம், ஜெகதாபட்டினம், நாகை மீனவர்களும், இலங்கையின் உள்ள தமிழ் மீனவர்களும் வங்காள விரிகுடா பகுதியில் பன்னெடுங்காலமாகவே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் இன விடுதலைக்காக விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற போரை அடுத்து, இருநாட்டு மீனவர்களும் பாரம்பரியமாக மீன் பிடித்து வந்த வங்காள விரிகுடா பகுதியில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன.
சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகளுக்கு உதவுபவர்கள் எனக் கூறி இலங்கை ராணுவம் தாக்குதலை ஆரம்பித்தது. அதன் பின், கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தினரால் 730-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் முடமாக்கப்பட்டுள்ளனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவை இலங்கை ராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அந்நாட்டின் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
2009-இல் இலங்கையில் தமிழர்கள் மீது கொடும் போரை நடத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்தது இலங்கை அரசு. அத்துடன் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு கூறியது. ஆனால், அதற்குப் பின்னும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
தற்போது, சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி, இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வருவதால் தாக்குதல் நடத்தப்படுவதாக அந்நாட்டு ராணுவம் கூறுகிறது. ஆனால், ஒரு நாட்டு மீனவர் எல்லை தாண்டி மற்றொரு நாட்டின் கடல் எல்லைக்குள் வந்துவிட்டால், அவர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும், அவரைக் கைது செய்து இருநாட்டுப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிக்க வேண்டும் என்று சர்வதேச கடல் சட்டம் கூறுகிறது.
ஆனால், இலங்கை இந்த சட்டத்தை அரிதிலும் அரிதாகவே கடைப்பிடிக்கிறது. கடந்த ஓராண்டாக 90 தமிழ் மீனவர்கள் இலங்கைச் சிறையில் எவ்வித விசாரணையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்த 580 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் 100-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு, பேச்சுவார்த்தைக்குப் பின் அவை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன.
ஆனால், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை, இந்தியாவை இதற்கு முன் ஆண்ட காங்கிரஸ் அரசும், தற்போதைய பா.ஜ.க. அரசும் பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
குஜராத், மேற்கு வங்க மீனவர்கள் மீது பாகிஸ்தான், வங்கதேச ராணுவம் தாக்குதல் நடத்தினாலோ அல்லது அவர்களை சிறைப்பிடித்துச் சென்றாலோ அதை இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக கருதும் இந்திய அரசு, தமிழக மீனவர்கள் 730-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு, இதுவரை இலங்கைக்கு எதிராக கடுமையான கண்டன அறிக்கையைக் கூடவிடவில்லை.
அதேபோல், தி.மு.க.ம், அ.தி.மு.க.வும் மத்திய அரசுடன் கடிதப் போக்குவரத்தை மட்டுமே நடத்தி வருகின்றன. கேரள கடல் பகுதியில் அந்த மாநில மீனவர்கள் இருவரை, இத்தாலி ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றதற்கு அவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தது கேரள அரசு.
இதுபோன்ற நடவடிக்கையை இலங்கை ராணுவத்தின் மீது எடுக்க மத்திய அரசும், தமிழக அரசும் எடுக்கத் தயங்குவது ஏன்?
ஒரு பக்கம் மீன் பிடி பிரச்னை தொடர்பாக இருநாட்டுப் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இலங்கை கடற்படைக்கு இந்திய ராணுவம் பயிற்சி கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது.
உலகிலேயே தன் நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்த அண்டை நாட்டு ராணுவத்துக்குப் பயிற்சி கொடுக்கும் ஒரே நாடு இந்தியாவாகத்தான் இருக்கும்.
இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்ற பின், தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தாது என்று மாயை உருவாக்கப்பட்டது. ஆனால், இதையெல்லாம் இலங்கை அரசு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது, இலங்கை ராணுவம் தன் செயலை மீண்டும் தொடங்கியுள்ளது.
தமிழக மீனவர்கள் மீது உண்மையிலேயே மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அக்கறை இருக்குமேயானால் இலங்கையுடனான அனைத்து உறவுகளையும் மத்திய அரசு துண்டித்துக் கொள்வதுடன், இக்கொலையில் ஈடுபட்ட இலங்கை ராணுவ வீரர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அழுத்தம் தர வேண்டும்.

வங்கிகள் யாருக்காக?

By ஆர். வேல்முருகன்  |   Published on : 10th March 2017 02:00 AM 
நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களை மிரட்டும் வகையில் புதிய சேவைக் கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலாகும் என அறிவித்துள்ளது.
பொதுவாக வங்கி என்பது தங்கள் பணத்தைச் சேமித்து தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் இடமாகவும்தான் கருதப்பட்டது. ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காகத்தான் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் மூலம் பணக்காரர்களுக்காக மட்டுமே என்றிருந்த வங்கிகளின் சேவை ஏழைகளுக்கு எட்டும் நிலை உருவாகியது.
நாட்டில் தனியார் வங்கிகள் தொடங்கியபோது கண்டிப்பாக அவர்கள் லாப நோக்கோடுதான் செயல்படுவார்கள் என்பது தெரியும். ஆனாலும் அவர்களை அனுமதித்ததால்தான் ஆரோக்கியமான போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஒரு காலத்தில் வங்கியில் கணக்குத் தொடங்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட கிளையின் மேலாளரின் தயவு இருந்தால் மட்டும்தான் தொடங்க முடியும். ஆனால் தனியார் வங்கிகளின் வருகைக்குப் பிறகு ஆன்லைனில் விண்ணப்பித்தால் போதும்.
இந்த நிலைக்குக் காரணம் தனியார் வங்கிகள்தான். இப்போது தேசியமாக்கப்பட்ட வங்கிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆனால் அதே சமயம் தனியார் வங்கிகளில் கணக்குத் தொடங்கினால் பல்வேறு சேவைகளும் உடனடியாகக் கிடைக்கின்றன. கணக்குத் தொடங்கினாலே காசோலை, ஏ.டி.எம். கார்டு, நெட் பேங்கிங் ஆகிய அனைத்து சேவைகளும் தரப்படுகின்றன.
ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒவ்வொரு சேவைக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலைகள் திரும்பினால் தனியார் வங்கிகள் அதிக அபராதம் விதிக்கின்றன. ஆனால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இதற்கான கட்டணங்கள் குறைவு.
ஏ.டி.எம். மையங்கள் அதிகஅளவில் திறக்கப்பட்டபோது மக்கள் வங்கிக்கு வருவதைக் குறைப்பதற்கான முயற்சி இது எனக் கருதப்பட்டது. அதன்பின் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை வரி விதிக்கப்படும் என்றன வங்கிகள்.
இப்போது ஒரு மாதத்துக்கு நான்கு முறைக்கு மேல் வங்கிக் கணக்கில் பணம் கட்டினால் இவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என தனியார் வங்கிகள் முதலில் அறிவித்தன. அதையடுத்து நாட்டின் மிகப்பெரிய அரசுடைமையாக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டது.
இது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அனைத்துத் தரப்பினரும் இதற்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். மத்திய அரசே இந்த அறிவிப்பை வாபஸ் வாங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் இவ்வளவு அபராதம் என்று இப்போது அறிவித்துள்ள பாரத ஸ்டேட் வங்கிதான், குறைந்தபட்ச இருப்பே தேவையில்û என்று முதலில் அறிவித்தது.
ஒரு சில தனியார் வங்கிகள் கணக்குத் தொடங்கும்போது குறிப்பிட்ட தொகை இருந்தால் போதும் அதன்பின் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பற்றிக் கவலையில்லை என்று வாடிக்கையாளர்களுக்கு தூண்டில் போடுகின்றன.
நாட்டின் மிகப் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி தனியார் வங்கிகள் தடம் பதிக்க முடியாத இடங்களிலும் உள்ள ஒரே வங்கி.
இப்போதும் கிராமப்புறங்களில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாத விவசாயிகள் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளர்கள்தான் டெபாசிட் செய்வது குறித்து முடிவு செய்கிறார்கள்.
அந்த விவசாயிகளுக்கு எத்தனை முறை தங்கள் கணக்கில் பணம் போடுகிறோம் அல்லது எடுக்கிறோம் என்பது குறித்து எதுவும் தெரியாது. ஆனால் தங்கள் கணக்கில் பணம் குறைந்தால் கேள்வி கேட்
பார்கள்.
பாரதப் பிரதமரின் யோசனைப்படி ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. செலாவணி செல்லாததாக்கப்பட்ட பின் அந்தக் கணக்குகளில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது.
இந்தக் கணக்குகள் குறைந்தபட்ச இருப்பைக் கொண்டவை அல்ல. இந்தக் கணக்குகளை பாரத ஸ்டேட் வங்கி என்ன செய்யப்போகிறது?
வங்கிகளின் வாராக் கடன்கள் உயர்ந்ததால்தான் கட்டணங்களைக் கூட்டு
கிறோம் என்றால் சாதாரண மக்களுக்
காக இந்த வங்கிகள் என்ன சேவை செய்துள்ளன?
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பார்கள். வங்கி ஊழியர்களின் சங்கம் மிகவும் பலமானது என்பதால் அவர்களின் ஒவ்வொரு கோரிக்கைக்கும் தலைசாய்த்தால் அரசால் எதுவும் செய்ய முடியாமல் போகும்.
இந்த உலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பார்கள். அந்த வகையில் மக்களுக்குச் சேவை செய்ய அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் அந்தக் கொள்கையில் இருந்து மாறாமல் சேவை செய்தால் மக்களால் வரவேற்கப்படும்.
இல்லாவிட்டால் மக்கள் அதைப் புறக்கணிப்பார்கள். காலம் என்ற சுழலில் சிக்கி அவை காணாமல் போகும். இதைப் புரிந்துகொண்டு செயல்பட்டால் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
இதேநிலை நீடித்தால் வங்கிகள் பணக்காரர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகும்.

காதல் திருமணம் புரிந்தவருக்கு ரூ.17 லட்சம் அபராதம்!

By DIN  |   Published on : 09th March 2017 11:57 PM  
காதல் திருமணம் புரிந்த இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் ரூ.17 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ள பஜர் அபாத் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்பு வேறு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் திருமணத்தால் தங்களுக்கு சமுதாயத்தில் அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாக மணப்பெண்ணின் வீட்டார் பழங்குடியின நீதிமன்றம் என்று கூறப்படும் "ஜிர்கா'வில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜிர்கா பழங்குடியின நீதிமன்றம், கட்டுப்பாடுகளை மீறி திருமணம் செய்து கொண்ட இளைஞர் குற்றவாளி என தீர்ப்பளித்து. அவரின் செயலால் மணப்பெண் வீட்டார் அவமானத்தை சந்திக்க நேர்ந்ததாகவும், அதற்கு அவர்களுக்கு நஷ்ட ஈடாக ரூ.17 லட்சத்தை மணமகன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், காதல் திருமணம் செய்து கொண்ட அந்த ஜோடியை மூன்று மாதங்களுக்கு கிராமத்தைவிட்டு விலக்கி வைக்குமாறும் தீர்ப்பளித்த்தது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியின நீதிமன்றங்களுக்கு சட்ட அதிகாரம் அளிக்கும் வகையிலான மசோதாவுக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், சிறிய அளவிலான குடும்பப் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வை காணும் வகையிலும் பாகிஸ்தான் அரசு இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Mar 10 2017 : The Times of India (Chennai)
Pondicherry univ to undergo quality check by UGC

New Delhi:


The government suspects some of the country's most prestigious universities of underperformance and has asked the University Grants Commission (UGC) to audit them for academic and research quality .Eleven central universities, including Aligarh Muslim University , Allahabad University , Pondicherry University and Central University of Jammu, are to undergo an academic and research audit because the Union human resource development ministry suspects they are “nonperforming“ institutions.
According to a senior HRD official, the ministry has identified a number of “non-performing“ centrally-funded institutions; of these, 11 will undergo the audit.
“The list has been forwarded and UGC has been asked to conduct the audit as soon as possible. No specific time frame has been set. The UGC will first set the criteria for the audit and then the process will commence. The broad mandate of the audit is to assess academic quality , research activities and research output,“ said the official.
Apart from AMU, Pondicherry University , CUJ and Allahabad University , the other seven varsities are Hemwati Nandan Bahuguna Garhwal University , Central University of Jharkhand, Babasaheb Bhimrao Ambedkar University at Lucknow, Cen tral University of Rajasthan, Dr Hari Singh Gour University at Sagar, Tripura University and Mahatma Gandhi Antarashtriya Hindi Vishwavidyalaya.
A three-member team has been constituted to monitor the audit. According to UGC sources, the audit will include research output, quality of research, students' results, and even placement records wherever applicable. The team is also working on other criteria and is likely to intimate the ministry about them.
“There is an urgent need to look at the universities and their performance. Academic and research quality at the universities reflect the quality of education in the country .There will be various other factors, such as frequency of review of courses, new courses, and how relevant current campus research is, which will be taken into account,“ said a senior UGC official.“The idea is to find out if the return on investment is being justified and whether students are getting the kind of education for which they come to these universities,“ the official added.
HRD ministry sources said there are more “non-performing universities“ and that this audit could be extended once they were identified. “The audit is likely to start by the end of March, or in April 2017. and will depend on how much time will be needed once the process starts,“ said the UGC official.

Mar 10 2017 : The Times of India (Chennai)

Students submit originals, get back fake docus from colleg
e

Binay Kumar Jha

Darbhanga:

TNN

Almost a dozen students who had submitted original marksheets and certificates to the Darbhanga College of Engineering (DCE) at the time of their admission were returned forged documents by the institute on Wednesday .

After they received “fake certificates“, the students locked college principal A K Thakur and teachers in their chambers, and lodged a complaint with Darbhanga DM Dr Chandrashekhar Singh. The DM has ordered an investigation into the matter by a twomember committee.

The students, of 2014 batch, had submitted their matric, intermediate and migration certificates to college authorities for registration with the Aryabhatta Knowledge University (AKU). The college was to return the original stamped documents but it misplaced them and gave students forged certificates. Thakur admitted that original certificates of some students got lost and the staff returned them forged documents. “When forged marksheets were issued to about 10 students, they started an agitation and locked the principal and other teachers in their chambers,“ said an official, adding that the students relented only after the DM intervened.


The DM said the administration should have lodged an FIR and tried to procure duplicate of the documents from the respective examination boards. “Instead of following the rules, they issued forged documents. It is unbecoming of a prestigious institute like DCE. I will take action, that may include lodging an FIR against the college administration, if the students' allegations are found true,“ Singh said.

HC confirms sentence for teacher in rape caseTNN | Updated: Mar 10, 2017, 05.58 AM IST



CHENNAI: In one of the quickest ever disposals of a criminal appeal, the Madras high court has confirmed a special court order convicting a teacher of luring and repeatedly raping a Class IX girl, but has reduced the sentence from 20 years to 14 years.

The bench of Justice S Nagamuthu and Justice N Authinathan, confirmed Madavan's conviction, and refused to show much mercy though his counsel pleaded that he was married man with two children, who are "completely helpless."

"In our considered view, it may not be a mitigating circumstance. However, taking into account the age of the accused, his socio-economic background, the fact that he is a first time offender and that he does not have any other bad antecedent, we are of the view that reducing the substantive sentence of imprisonment to 14 years with fine would meet ends of justice," the bench said.

A fast track mahila court in Ariyalur had sentenced Madavan to 20 years rigorous imprisonment on September 15, 2016.

According to the Ariyalur police, the social science teacher at a government school in the district, told the Class IX girl that he loved her and promised to marry her. He took her to places like Trichy and Puducherry. Between September 4 and 9, 2015, he lodged her at a house in Jayamkondam, after introducing her to the landord as his wife.

In its present order, the HC bench brushed aside technical objections raised by the defence, and held that the trial court was not wrong in taking cognizance of the case without any formal written order.

As for proceedings under the Pocso Act, the bench said it was unfortunate that mandatory procedures prescribed in the Act had not been followed and the victim had not been examined in camera. Slamming the prosecution as well as the trial court, the judge said they even thought of remanding the matter back to the trial court for re-trial. They, however, decided against the idea since it would mean further embarrassment to the child.

They also made light of the child's unclear deposition and denial of rape saying it may be due to her examination in open court.

More importantly, The judges referred to clinching medical evidence which showed the girl had been subjected to frequent sexual intercourse. They also pointed out that Madavan had introduced her to several people including the house owner in Jayamkondam as his wife and that he lived with her for four days. Holding Madavan guilty of aggravated penetrative sexual assault, the judges said the trial court order need not be interfered with. Citing former President APJ Abdul Kalam's words that teaching is a noble profession that shapes character, caliber and future of individuals, the bench said, "alas, shockingly, in this case, a shameless teacher is alleged to have sexually exploited a female child of 14 years of age, who was his student. He is but an evil being."

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...