Saturday, March 18, 2017

NEET age limit: Supreme Court panel says can't cap age or number of attempts

While there have been contrasting opinions on age limit and number of attempts for the National Eligibility-cum-Entrance Test​ (NEET), a Supreme Court appointed panel has turned down the Union government's move to put a cap on it.

According to a Hindustan Times report, former chief justice RM Lodha, who is heading the panel, said there is a "dearth of doctors in the country" as a result of which government's order for cap on age of students and the number of attempts should not be executed.

The provisions of government directive were made on the recommendations of Medical Council of India (MCI) and issued in January. As per the order, candidates have to be below the age of 25 and can appear for NEET only thrice.


Supreme Court will be taking up Lodha panel recommendations on March 20. In case the apex court accepts the suggestions, Central Board of Secondary Education (CBSE) will have to rework the applications process that closed on March 1.

Earlier in February, the Allahabad High Court had sought reply from the MCI, the Centre and the CBSE on the procedure adopted for setting of the upper age limit for NEET 2017. This order was passed by a division bench in Lucknow comprising justices Amreshwar Pratap Sahi and Sanjay Harkauli on two writ petitions filed by Navaneet Tripathi and 22 others.

The petitions raised a common question relating to the issue of upper age limit of 25 years prescribed for NEET, 2017, scheduled to be conducted on May 7. The contention on behalf of the petitioners was that the said upper age limit is not supported by any appropriate regulation or procedure prescribed by the regulations framed under the MCI Act.

It was also submitted that the introduction of this upper age limit, which was not there earlier, being not in conformity with law, deserves to be struck down. The counsels for the Centre and the MCI produced some documents related to prescribing upper age limit in NEET.

(With PTI inputs)

வாடிக்கையாளர்களை அதிரவைக்கும் பிஎஸ்என்எல்-ன் அதிரடிச் சலுகை!


ஜியோவை சமாளிக்க, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அதிரடி ஆஃபர்களை வழங்கிவருகின்றன. தற்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, 399 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்தால், தினமும் 2GB, 3G டேட்டா வழங்கப்படும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆஃபர் 90 நாள்களுக்குதான் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் கூறியுள்ளது.



அதேபோல இந்த ஆஃபரில், அன்லிமிட்டட் ஆன் நெட் கால்ஸ்களும் வழங்கப்படும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. ஸ்பெஷல் டேரிஃபின் கீழ் இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ், பிற நெட்வொர்க்களுக்கு இலவசமாக 25 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. 25 நிமிடத்துக்குப் பிறகு, ஒரு நிமிடத்துக்கு 25 பைசா பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இழப்பீடுக்குப் பதிலாக ரயிலை வைத்துக் கொள்ளுங்கள் : நீதிபதி!

சண்டிகரில் நிலத்தை கையகப்படுத்தியதற்கு இழப்பீடாக ரயிலை வைத்துக்கொள்ளுங்கள் என, விவசாயிக்கு சாதகமாக லூதியானா நீதியரசர் தீர்ப்பு வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜலந்தர் அருகிலுள்ள கனடா கிராமத்தில் ரயில் நிலையம் அமைக்க விவசாயி சம்பூரன் சிங் என்பவரது நிலத்தை ரயில்வே துறை கையகப்படுத்தியுள்ளது. அதனால் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயி லூதியானா நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த வழக்குக்கு நீதியரசர் விவசாயிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கொடுக்க வேண்டும் என இந்தியன் ரயில்வேக்கு உத்தரவிட்டது. பின்னர், ரூ.25 லட்சத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. ஆனால் சம்பூரன் சிங் தனக்கு ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவர் கேட்டபடியே நீதிபதியும் ரூ.1.47 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் ரயில்வே துறை விவசாயிக்கு வெறும் ரூ.42 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளது.

இதனால் சம்பூரன் மறுபடியும் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனு நேற்று முன்தினம் நீதிபதி ஜஸ்பால் வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமிர்தசரசுக்கும், டெல்லிக்கும் இடையில் ஒடும் ஸ்வர்ணா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை சம்பூரனிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் லூதியானா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டராக நியமனம் செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

நீதியரசர் வழங்கிய உத்தரவுடன் வழக்கறிஞர் ராகேஷ் காந்தியும், சம்பூரன் சிங்கும் ரயில் நிலையத்துக்கு வந்தனர். உத்தரவை ரயில் டிரைவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து ரயில்வே மேலாளர் அனுஜ் பிரகாஷ் கூறுகையில், விவசாயிக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான பிரச்னையில் சிக்கல் இருந்தது. தற்போது அது தீர்க்கப்பட்டுவிட்டது. இதுபோன்ற உத்தரவுகளை வழக்கமாக சட்ட அமைச்சகம் ஆய்வு செய்யும். மனுதாரர் 300 மீட்டர் நீளமுள்ள ரயிலை வைத்து என்ன செய்யப் போகிறார்? ரயிலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியுமா என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதிகள் நுதன மற்றும் வினோத தீர்ப்பு வழங்குவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.sstaweb.in/2017/03/blog-post_251.html#more

ஜெயலலிதா மகன்' என வாலிபர் திடீர் வழக்கு:
ஆவணங்களை சரிபார்க்க ஐகோர்ட் உத்தரவு


சென்னை:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு பிறந்த என்னை தத்து கொடுத்து விட்டனர்; சசிகலாவின் ஆட்களால் ஆபத்து உள்ளது; எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ண மூர்த்தி என்ற வாலிபர், மனு தாக்கல் செய்தார்.



நீதிமன்றத்தில் ஆஜரான அவரிடம், ''ஆவணங் கள் எல்லாம் போலியாக தெரிகின்றன; இப்போதே சிறைக்கு அனுப்ப முடியும்; இருந்தாலும், இந்த ஆவணங்களை சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, போலீஸ் ஆணைய ருக்கு உத்தரவிடுகிறேன்,'' என, நீதிபதி மகாதேவன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, ஜெ.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகனாக, 1985 பிப்., 15ல் பிறந்தேன். நான் குழந்தையாக இருக்கும் போது, பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, வசந்தாமணி என்பவரிடம், என்னை ஒப்படைத்து விட்டனர்.

மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆர்., முன்னிலை யில், 1986ல், என்னை தத்து கொடுத்துவிட்டனர். ஈரோடு மாவட்டத்தில், வளர்ப்பு பெற்றோரிடம் வளர்ந்தேன். பலமுறை, என் தாயார் ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன். 2016 செப்டம்பரில் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

அப்போது, மார்ச், 14 முதல், 18க்குள், பொதுமக்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவ தாக, என் தாயார் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதெல்லாம், சசிகலாவுக்கு தெரியும். தாயாரின் முடிவுக்கு, சசிகலா எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தார்.

அதன்பின், செப்., 22ல், அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்; டிச., 5ல் இறந்தார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சசிகலாவும், அவரது உறவினர்களும், என்னை அனுமதிக்க வில்லை.

டி.டி.வி.தினகரனின் துாண்டுதலில், அடையாளம் தெரியாதவர்கள், என்னை கடத்தி சென்று, சிறுதாவூர் பங்களாவில்அடைத்தனர். அங்கு சித்ரவதை செய்தனர். வாட்ச்மேன் உதவியுடன், அங்கிருந்து நான் தப்பினேன்.சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமியை அணுகும்படி, என் நல விரும் பிகள் தெரிவித்தனர். மார்ச், 11ல், அவரது அலுவலகத்தில் சந்தித்து விபரங்களை கூறினேன். தாயாரின் சொத்துகளை சட்டப்படி பெற்று தர உதவும்படி கேட்டு கொண்டேன்.

எனக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன். என் உயிருக்கு, சசிகலா உறவினர்களால் ஆபத்து உள்ளது. எனக்கு தேவையான பாதுகாப்பு வழங்கும் படி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பது குறித்து முடிவு செய்ய, நீதிபதி மகாதேவன் முன் பட்டியலிடப்பட்டது. மனுதாரரான கிருஷ்ண மூர்த்தி, நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன், 'டிராபிக்' ராமசாமியும் இருந்தார். அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார். மனுவையும், தத்து கொடுத்ததற்கான ஆவணங் களையும் பார்த்த, நீதிபதி மகாதேவன் கூறியதாவது:

இந்த ஆவணங்களை எல்லாம், எல்.கே.ஜி., மாணவனிடம் கொடுத்தால் கூட, அவை போலியா னவை என, கூறிவிடுவான்; வெளிப்படையாக கிடைக்கக்கூடிய, ஜெயலலிதாவின் புகைப்படத்தை இணைத்துள்ளீர்கள். யார் வேண்டுமானாலும் நீதி மன்றத்துக்கு வந்து,பொதுநல வழக்கு தொடுக்க லாம் என, நினைக்கிறீர்களா?

போலி ஆவணங்களை தாக்கல் செய்திருப்பது தெரிகிறது;நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். நேரடியாகவே, உங்களை சிறைக்கு அனுப்ப முடியும். முதலில், போலீஸ் ஆணையர் முன், நாளை ஆஜராகி, அசல் ஆவணங்களை, அவரிடம் ஒப்படையுங்கள்.

எம்.ஜி.ஆர்., உடல்நலம் சரியில்லாமல், கையை கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தார். அந்த நேரத்தில் தான், இந்த ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன; அதில், எம்.ஜி.ஆர்., கையெழுத்திட்டிருப்பதாக காட்டுகிறது; இதை, நம்ப முடியவில்லை.இவ்வாறு நீதிபதி கூறினார்.
பின், அரசு பிளீடர் எம்.கே. சுப்ரமணி யனை பார்த்து, ''ஆவணங்கள் சரியானது தானா என்பதை, போலீஸ் ஆணையர் சரிபார்க்கட்டும்; திங்கள் அன்று அறிக்கை தாக்கல் செய்யுங்கள்,'' என, நீதிபதி கூறினார்.விசாரணையை, 20க்கு, நீதிபதி மகாதேவன் தள்ளிவைத்தார்.

ராமசாமிக்கு கேள்வி

இந்த வழக்கில், டிராபிக் ராமசாமிக்கு என்ன தொடர்பு என, நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார்.

மனுதாரரான கிருஷ்ணமூர்த்தியுடன், டிராபிக் ராமசாமியும், நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவரிடம், ''ஆவணங்களை பார்த்தீர்களா; நீங்கள், பல பொதுநல வழக்குகளை தொடுத்து, உன்னதமான பணிகளை செய்துள்ளீர்கள்; உங்களுக்கு, இதில் என்ன தொடர்பு,'' என, நீதிபதி கேட்டார்.

அதற்கு, டிராபிக் ராமசாமி, ''உதவி செய்யும்படி கேட்டார்; நீதிமன்றம் விசாரித்து, முடிவு செய்யட்டும்; உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்,'' என்றார்.
நீட்' தேர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை

மதுரை, : உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, மருத்துவ மாணவர்களுக்கான 'நீட்' தேர்வை, தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடந்து வந்த நிலையில், நாடு முழுவதும் 'நீட்' நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்துமாறு, கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.பின்னர், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால், தமிழகத்தில் கடந்த ஆண்டு இந்த தேர்வு முறை பின் பற்றப்படவில்லை. ஆனால் இந்தாண்டு முதல், 'நீட்' தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்.

இருப்பினும் தமிழக அரசு, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. ஆனால் இதற்கு ஒப்புதல் கிடைக்காது என்றே மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி
வருகின்றனர்.

மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு, அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் டில்லி சென்று மத்திய அர டம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, 'நீட்' தேர்வு முறையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என அரசு டாக்டர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்க தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: எம்.பி.பி.எஸ்., ஐ.ஐ.டி., பொறியியல் படிப்பு போன்றவற்றுக்கான தகுதித் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி., போன்ற கல்வி திட்டங்களுக்கு இணையாக, சமச்சீர் கல்வி திட்டத்தின் பாடத் திட்டங்கள் இல்லை என்பதே இதற்கான காரணம்.அக்கல்வி திட்டங்களை, பத்து ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் கொண்டு வந்திருந்தால், தற்போது இந்திய அளவில் நடக்கும் நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

குழப்பும் மசோதா'நீட்' தேர்வு கிராமப்புற மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பெரிதும் பாதிக்கும் என்பது உண்மையல்ல. மொத்த எம்.பி.பி.எஸ்., இடங்களான 5500ல், அரசு பள்ளியில் படித்து சேர்ந்த மாணவர்கள் 250 பேர் மட்டுமே. இவர்களும் தங்கள் திறமையினால் தேர்வானார்களே தவிர சமச்சீர் கல்வியினால் அல்ல.

தமிழக அரசின் எதிர்ப்பு மசோதா பெற்றோர், மாணவர்களை குழப்பும் வகையில் உள்ளது. எந்த கல்வி திட்டத்தில் மாணவர்கள் பயில வேண்டும் என்ற தெளிவு இல்லை.எனவே அரசு 'நீட்' தேர்வை முற்றிலும் புறக்
கணிக்க நடவடிக்கை எடுக்காமல், ஓரிரு ஆண்டுகள் மட்டும் விலக்கு கேட்க வேண்டும். மருத்துவ பட்ட மேற்படிப்பு தேர்வுக்கு 'நீட்'டை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தை, தமிழ் வழியில் முதற்கட்டமாக 10 சதவீத அரசு மேல்நிலைப் பள்ளிகளில் துவக்க வேண்டும், என்றார்.-------------
லத்தி வாங்கக்கூட பட்ஜெட் நிதி பத்தாது போலீசார் புலம்பல்

காவல் துறைக்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, 'லத்தி வாங்கக்கூட பத்தாது' என, போலீசார் புலம்புகின்றனர்.காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்குதல், காவல் துறையை நவீனமாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக, தமிழக பட்ஜெட்டில், 6,963 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

'வாக்கி டாக்கி'கள்
காவல் துறையில் உள்ள பிரச்னைக்குத் தீர்வுகாண, இந்தத் தொகை பத்தாது என, போலீசார் புலம்புகின்றனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
காவல் துறையில் உள்ள, 'வாக்கி டாக்கி'கள் எல்லாம் பழுதான நிலையில் உள்ளன. நாங்கள், 'ஓவர்' என, வாக்கி டாக்கியில் தெரிவித்தால், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்போர், 'ஒன்றுமே கேட்கவில்லை ஓவர்' என, பதில் அளிக்கின்றனர். அந்தளவுக்கு வாக்கி டாக்கிகளின் தரம் உள்ளது.
காவல் துறை வாகனங்களும், மிக மோசமான நிலையில் உள்ளன.

ஓய்வூதியத் திட்டம்
பல காவல் நிலைய கட்டடங்கள், எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளன. உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அலுவலகம் கிடையாது. கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

'எட்டு மணி நேர பணியுடன், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

'காவல் துறையில் காலியாக உள்ள, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்; புதிய பணி இடங்களை உருவாக்க வேண்டும்' என, அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
வாரம் ஒரு நாள் கட்டாய ஓய்வுதர இயலாத சூழ்நிலை உருவானால், ஓய்வு நாளில் பணிபுரிவோருக்கு ஒரு நாள் ஊதியம். 

அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்தால், அந்த நாட்களுக்கு, ஒரு நாள் ஊதியம் தர வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்; அதற்கும் பட்ஜெட்டில் பதில் இல்லை.

பதவி உயர்வு
அதுபோல, போலீசாருக்கான பதவி உயர்வில், பல குளறுபடிகள் உள்ளன. இடர்படி இரு மடங்காக உயர்த்தித் தரப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்; அதுவும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.
காவல் துறைக்கு, தற்போது ஒதுக்கப்பட்ட நிதி, லத்தி வாங்கக்கூட பத்தாது என்பதே எதார்த்தம்.இவ்வாறு போலீசார் கூறினர்.
- நமது நிருபர் -

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...