Friday, March 31, 2017

இனி இ-சேவை மையங்களில் தான் குடும்ப அட்டை திருத்தப் பணிகள்

By DIN  |   Published on : 31st March 2017 01:37 AM  |   

ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை இ-சேவை மையங்களில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது புழக்கத்தில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வடிவிலான குடும்ப அட்டைகள் சனிக்கிழமை (ஏப்ரல் 1) முதல் வழங்கப்பட உள்ளன. குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு, வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் குடிமைப் பொருள் வட்டாட்சியர் அலுவலகங்களில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகளை மேற்கொள்வதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.

புதிய விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் சமர்ப்பித்து இணையதளம் மூலமாக இப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கெனவே சாதிச் சான்று, இருப்பிடச் சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறையின் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பம் அளிப்பதைப் போல, குடும்ப அட்டை தொடர் சேவைகளும் இ.சேவை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான தனி மென்பொருள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறையினர் கூறியது:
குடும்ப அட்டை தொடர்பான சேவைகளை உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளம் மூலமாக பெறும் வசதி ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்தே இந்த சேவையைப் பெற முடியும். இதேபோல, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்ட பிறகு புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்கள், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகிய பணிகள் அனைத்தும் இ-சேவை மையங்கள் மூலமாகவே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் அரசு கேபிள் தொலைக்காட்சி இ-சேவை மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், புதுவாழ்வுத் திட்டம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் இ.சேவை மையங்களில் இந்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அல்லது குடிமைப்பொருள் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு இணைய வழியில் அனுப்பி வைக்கப்படும். ஆவணங்களின் அடிப்படையில் இணைய வழியிலேயே வழங்கல் துறையினர் ஒப்புதல் வழங்குவர். விண்ணப்பம் ஏற்கப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது தொடர்பான தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு, குடும்ப உறுப்பினர் சேர்க்கப்பட்ட, நீக்கப்பட்ட அல்லது திருத்தஹம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட் கார்டை சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தில் குறிப்பிட்ட கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம் என்றனர்.

ஸ்மார்ட் கார்டு விநியோகம்: செல்லிடப்பேசிக்கு தகவல் வரும்
ஸ்மார்ட் கார்டு விநியோகம் தொடர்பாக குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி:

குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் சனிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளன. அதுகுறித்த விவரம் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் உள்ள கடவுச் சொல், பழைய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, குறுஞ்செய்தி பெறப்பட்ட செல்லிடப்பேசி ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைக்குச் சென்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இதுவரை செல்லிடப்பேசி எண் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக தங்களது நியாய விலைக் கடையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட் கார்டு குறித்து குறுஞ்செய்தி வராதவர்கள் அச்சம் அடையத் தேவையில்லை. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றார்.

முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவுக்கு மீண்டும் பதவி

By DIN  |   Published on : 31st March 2017 05:23 AM  

ramamohan_rao
முன்னாள் தலைமைச் செயலாளர் பி.ராம மோகன ராவ், கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் இயக்குநராக வியாழக்கிழமை (மார்ச் 30) நியமிக்கப்பட்டுள்ளார்.
கடும் சோதனைகளுக்குப் பிறகு... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பி.ராம மோகன ராவ். அவருடைய அலுவலகத்திலும் (தலைமைச் செயலகம்), வீட்டிலும் கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.30 லட்சத்துக்கு புதிய நோட்டுகள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

 தலைமைச் செயலர் பதவியிலிருந்த பி.ராம மோகன ராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது மூன்று மாதங்களுக்குப் பிறகு பி.ராம மோகன ராவுக்கு கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் தமிழக அரசு மீண்டும் பணி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுவரை தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலர்-இயக்குநராக இருந்த கே.ராஜாராமன், நில நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலர்-ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Audit report slams Madras varsity
Blames it for financial crisis

If the University of Madras is facing a financial crisis, then it has only itself to blame.

The annual audit report for the year 2015-16 has raised as many as 200 objections, apart from 43 pertaining to the Institute of Distance Education. After some of them were converted into observations and notes, the number of objections was brought down to 142.

Interestingly, this year, the audit was done over a period of four days. An official said, “It is usually a half-day event. But this time, it took four days to complete the process.”

The audit report has made a scathing comment that the university has “not maintained financial discipline in its financial activities.” It has pointed out that the university incurred a huge loss of revenue by bank interest as it had transferred funds received as grants for various Plan accounts to the Non-Plan account.

The University has transferred Rs. 74.28 crore from various account heads such as non-Plan, Pension, IDE and Capital account to meet its day-to-day expenses. It has been able to re-transfer only Rs. 17.15 crore till the closure of the audit.

Had the funds been maintained in the Plan account, it would have fetched the university an interest of Rs. 3.28 crore, audit has pointed out.

The university received Rs. 70 crore of Rs. 100 crore grant from the MHRD for setting up a national centre for nanoscience and nano technology. The institution has paid Rs. 9 crore to a building contractor apart from the sanctioned grant, compounding financial loss.

The university had renovated its old guest house and built a new one on the Marina campus, but a delay in completion of the project resulted in a cost escalation of 265%, resulting in a loss of Rs. 1.57 crore. The Centre for Research on Dravidian Movement has remained un-utilised for 10 years, costing the university a loss of Rs. 3.96 crore.

There are several instances where the university has been transferring funds allocated for various projects and re-transferred the borrowed funds alone without taking into account the interest lost to the Plan account. This has resulted in a loss of over Rs. 1.25 crore as interest.

To this, the university has replied that the internal transfers could not be reversed as the State government had not sanctioned the ‘additionality grants’ for the years 2013-14 and 2014-15.
நீட்' தேர்வு எழுதுபவரா நீங்கள்? : 'தினமலர்' வழங்கும் மாதிரி வினா- - விடை 

'நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம் என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப் படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.

முக்கியத்துவம் : நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு, 'நீட் யு.ஜி.,' - 2017 நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது. தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், இடம் ஒதுக்கப்படுகிறது. மாநிலங்களில் இருந்து, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது.

வயது, கல்வி தகுதி : நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், 17 முதல், 25 வயதிற்குள் இருத்தல் வேண்டும். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களை முதன்மையாக கொண்டு, குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண்களுடன், தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான வேறு கல்வி தகுதி வேண்டும். மேலும், பிளஸ் 2 ஆங்கில பாடத்தில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்கள், 40 சதவீத மதிப்பெண்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள், 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை : நடப்பு, 2017ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 7ல் நாடு முழுவதும், ஒரே கட்டமாக நடக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவை பரிசோதிக்கும் வகையிலான, 180 கேள்விகள் இடம்பெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்து, தலா, 45 கேள்விகள் என மொத்தம், 180 கேள்விகள் இடம் பெறும். காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை தேர்வு நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும், நான்கு மதிப்பெண்கள் என, மொத்தம், 720 மதிப்பெண். தவறான ஒவ்வொரு விடைக்கும், தலா, ஒரு மதிப்பெண் வீதம் பிடித்தம் செய்யப்படும். இந்த ஆண்டு நீட் தேர்வு ஹிந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ், வங்காளம், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, ஒடிசா, கன்னடம் உட்பட, 10 மொழிகளில் நடக்கிறது. இந்த தேர்வுக்கான கேள்விகள், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பின் மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., - என்.சி.ஆர்.டி., - சி.ஓ.பி.எஸ்.இ., தரத்திலான பாடத் திட்டங்களில் இருந்து கேட்கப்படும். தேர்வுக்கு கூடுதல் பயிற்சி பெறுவது, வாய்ப்புகளை பிரகாசமாக்கும்.

சேர்க்கை விபரம் : தேர்வில், மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்ய வாய்ப்பு வழங்கப்படும். அதாவது, 'ரேங்க்' பட்டியலில், மாணவர்களின் முன்னிலையை பொறுத்தே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.

தேர்வு மையங்கள் : நடப்பு, 2017ம் ஆண்டிற்கான நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், 11 லட்சத்து, 35 ஆயிரத்து, 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது, 2016 உடன் ஒப்பிடும் போது, 41.2 சதவீதம் அதிகம். இந்தியா முழுவதும், 103 நகரங்களில் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, நாமக்கல், வேலுார் ஆகிய, எட்டு இடங்களில் தேர்வு நடக்கிறது. 'ஏப்., 15ல் ஹால் டிக்கெட் வெளியிடப்படும்; தேர்வு முடிவு ஜூன் 8ல் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த முழுமையான விபரங்களை தெரிந்து கொள்வதற்கு http://cbseneet.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மாணவர்கள் பயன்பெறும் வகையில், நீட் தேர்வுக்கு ஆலோசனை நிகழ்ச்சிகளை, 'தினமலர்' நாளிதழ் ஏற்கனவே நடத்தியது. நாளை முதல் மாதிரி வினா- விடை வெளியிடுகிறது.
 ரூ.300 கோடி ஊழல் : தொழில் அதிபர் சிக்கினார்

 கொச்சி: குவைத் மருத்துவமனைகளில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 300 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்தவரை கேரள போலீசார் கைது செய்தனர்.கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் நெருங்கிய நண்பரும், அவரது ஊரான புதுப்பள்ளியை சேர்ந்தவருமான, உதுப் எம்.வர்கீஸ், கொச்சியில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை வாங்கித் தரும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.

இந்த நிறுவனம் மூலம், குவைத்தில் உள்ள மருத்துவமனைகளில் நர்ஸ் பணியில் சேர்த்துவிடுவதாகக் கூறி, ஒவ்வொருவரிடமும், பல லட்சம் ரூபாய் வீதம், 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளார். பணம் கொடுத்தவர்களில் சிலர் குவைத் சென்றபோது, நர்ஸ் வேலைக்கு பதில், வேறு வேலையில் நியமிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர்.பணம் கொடுத்தவர்களுக்கு வேலை வாங்கித்தராமல் ஏமாற்றிய உதுப் மீது, பாதிக்கப்பட்டவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. கடந்த ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டியின் நண்பரான உதுப்பை போலீசார் கைது செய்யவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின், உதுப்பை சரணடையும்படி, ஐகோர்ட் உத்தரவிட்டதையடுத்து, வெளிநாட்டில் இருந்து, விமானத்தில், நெடும்பாசேரி விமான நிலையத்துக்கு, நேற்று அவர் வந்தார். அவரை அடையாளம் கண்ட, போலீசார், உடனடியாக கைது
செய்தனர்.
 பெருந்துறை மருத்துவ கல்லூரி அரசு ஏற்று நடத்த வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் செயல்படும் மருத்துவக் கல்லுாரியை, அரசு ஏற்று நடத்துவதற்கான கருத்துருவுக்கு, போக்குவரத்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், பெருந்துறையில் மருத்துவக் கல்லுாரி நடத்தப்படுகிறது.

இக்கல்லுாரிக்கு, போக்குவரத்துக் கழகம் மூலமே நிதி ஒதுக்கப்படுகிறது.போக்குவரத்துக் கழகம் நிதி நெருக்கடியில் தவிப்பதால், நிறுவனத்தை திறம்பட நடத்துவது, அடிப் படை வசதிகள், மேம்பாட்டு பணிகள், விரிவாக்கம், மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அதற்கான வசதிகளை உருவாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. கல்லுாரி துவங்கியபோது, 60 மாணவ, மாணவியர் படிக்க அனுமதி வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை, 60ல் இருந்து, 100 ஆக உயர்த்த வேண்டும் என்றும், முதுகலைக் கல்வி கொண்டு வரவேண்டும் எனவும் கோரப்பட்டது. ஆனால், கல்லுாரி துவங்கி, 24 ஆண்டுகள் ஆகியும் இதுவரை, 100 ஆக மாணவர் சேர்க்கை உயரவில்லை;

முதுகலை படிப்பும் துவங்கவில்லை.இக்கல்லுாரியில், போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, 30லிருந்து, 35 சதவீதம் வரை இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. கட்டணமும், அரசு மருத்துவக் கல்லுாரியை விட, சற்று கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. மற்ற மாணவர்களுக்கு, தனியார் கல்லுாரிகளில் வசூலிப்பது போலவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், 'கல்லுாரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்' என, பெருந்துறை மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் சார்பில், கலெக்டர் மூலம், அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டது.

ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் கூறு கையில், ''கல்லுாரி முதல்வரின் அறிக்கைப்படி, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. கல்லுாரியை அரசே ஏற்று நடத்தலாம் என, போக்குவரத்துக் கழக நிர்வாகமும் ஒப்புதல் வழங்கியுள்ளது. அடுத்த முடிவை அரசு அறிவிக்கும்,'' என்றார்.
 பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ரிசர்வ் வங்கியில் திரண்ட மக்கள்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு இன்றுடன் முடிவதால், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியை, நேற்று ஏராளமானோர் முற்றுகையிட்டனர்.

மத்திய அரசு, 2016 நவ., 8 நள்ளிரவில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக அறிவித்தது. பொதுமக்கள், டிச., 31 வரை, வங்கிகளிலும், மார்ச் 31 வரை, ரிசர்வ் வங்கியிலும் மாற்றிக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் உள்ள, பழைய ரூபாய் நோட்
டுகளை, வங்கிக் கணக்கில், 'டிபாசிட்' செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், டிச., 31க்குப் பின், வங்கிகளில் கெடு முடிந்ததால், பழைய நோட்டுகளை மாற்ற, மக்கள்ரிசர்வ் வங்கிக்கு சென்றனர். 'டிச., 31 வரை, வெளிநாடு சென்றிருந்தோர் மட்டுமே, பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்' என, விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும், மக்கள் தொடர்ந்து, ரிசர்வ் வங்கிக்கு சென்று திரும்பினர்.

இதற்கிடையில், வெளிநாடு சென்று திரும்பியோர், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளிடம், தங்களிடம் உள்ள தொகைக்கு உரிய அத்தாட்சியை பெற்று வந்தால் மட்டுமே, பழைய நோட்டுகள் மாற்றப்படும் என, ரிசர்வ் வங்கி தெரிவித்தது. 'விமான நிலையத்தில் அது பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை' என, பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், வெளிநாடு சென்று திரும்பியோர், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு, இன்றுடன் முடிகிறது. அதனால், சில நாட்களாக, சென்னை ரிசர்வ் வங்கிக் கிளையில், மிக அதிக அளவில் மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்றும், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும், மக்கள் அதிக அளவில் வந்திருந்தனர். வெளிநாட்டில் இருந்து திரும்பியதற்கான, உரிய ஆவணம் வைத்திருந்தோர் மட்டும் வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள், பழைய ரூபாய் நோட்டுகள், நாளை முதல் செல்லா காசாகிவிடும் என்பதால், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

- நமது நிருபர் -

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...